விபசாரம் பற்றி நடிகையர்-நடிகர்கள் ஏன் கோபமடைகின்றனர்?
நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் பல தடவைகள் கவனமாகக் கேட்டேன்:
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19677.html
http://indiainteracts.in/movies/tamil/gallery_new/events/1/nadigar_sangam_dinamalar.html
அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.
ரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய எனது மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.
சூர்யா: ……………………..பின்னால் ஓடுதல்……………ஈனப்பிறவி…………
விவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..
ஸ்ரீபிரியா: பாஸ்டர்ட்
சத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….
ஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா?.
கற்பு பற்றி நினைப்பவர்கள், இவ்வாறு இருப்பார்களா, நடிப்பார்களா? நடிகைகளுக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது என்றால், அவர்களுக்கும் குடும்பம் – தாய், சகோதரி, மகள் என்று எல்லோரும் உண்டு என்றால், இவ்விதமாக நடிப்பது ஏன் என்று விளக்கத்தான் வேண்டும். அதை விட்டு-விட்டு, மற்றவர்களை, அதாவது, எடுத்துக் காட்டுகிறவ்ர்களை “பாஸ்டர்ட்” என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், கமலஹாஸன், அதிசய ராகத்தில் சொன்னமாதிரி தமிழிலே சொன்னாலும் ஒன்றுதானே? பொருள் மாறிவிடப் போகிறதா? நிலை உயந்துவிடப் போகிறதா? |
இந்த அளவிற்கு மற்ற ஆடவர்களை கை வைக்க கேமராவின் முன்னாலேயே அனுமதிப்பார்களா? தமிழ் நடிகைகள் இப்பொழுது நடிக்கும் நிலை 90% நிர்வாணம் தான். நிச்சயமாக மனத்தில் அத்தகைய உறுதியை அந்த நடிகைகள் கொல்லவேண்டும். பிறகு, உடலை காட்டி-காட்டி, பழக்கமாகி இருக்கவெஏண்டும். இல்லையென்றால், அந்த மன-உடல் தைரியம் வராது. |
சத்யராஜ் சொல்கிறார், ஒரு நடிகர் ஒரு பத்திரிக்கையாளர் தன்னைப் பற்றி அவதூறாக எழுதியதற்கு, ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, நன்றாக அடித்து அனுப்பினார் என்று. இதென்ன பெருமையா? தவறு செய்யவில்லை என்று தைரியமாக சொல்வத்ற்கு துணிவில்லை. உங்களுக்குத்தெரியும், உங்கள் மகன்-மகள், கணவன் மற்றவர்களுக்குத் தெரியும்……………ஆண்டவனுக்குத் தெரியும்…………….எதற்கு இந்த “டயலாக்”? சினிமா, சினிமாத் துறை இனிமேல் விபசாரிகளை உண்டாக்காது, விபசாரத்திற்குத் துணை போகாது, நடிகைகளை கற்புள்ள கண்ணகிகளாக வைத்திருக்கும் என்று பறைச்சாற்றூவதை விட்டு-விட்டு, ஏன் ஆபாசமாக, கேவலமாக கத்துகிறார்கள்? திட்டுகிறார்கள்? மிரட்டுகிறார்கள்?. |
![]() |
குறிச்சொற்கள்: தமிழச்சிகளின் கற்பு, தமிழ்பெண்களின் கலாச்சாரம், நடிகைகளின் கற்பு, நடிகைகளும் கற்பும்

8:02 மு.பகல் இல் அக்டோபர்22, 2009 |
நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை கோரி கோவையிலும் வழக்கு
அக்டோபர் 22,2009,00:00 IST
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4243
கோவை:”பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி, கோவை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கோவை சித்தாபுதூரைச் சேர்ந்தவர் ஏ.கே.பிரபாகரன்(36); பத்திரிகையாளர்; தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலராகவும் உள்ளார்.
இவர் சார்பில், சீனியர் கிரிமினல் வக்கீல் ஏ.பி.ஜெயச்சந்திரன், வக்கீல் ராமச்சந்திரபிரபு ஆகியோர், கோவை ஜே.எம். 3 கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள தாவது:விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகையைப் பற்றி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதற்கு மறுநாளே அந்த செய்தி தொடர்பான, விளக்கமும் வந்தது. அதை ஏற்காமல், தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நடிகர், நடிகையர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறினர்.
அதைத் தொடர்ந்து, தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டம், கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டது. அதில், நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், சேரன், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் மிக ஆபாசமாகப் பேசியுள்ளனர்.
நடிகை ஸ்ரீபிரியா, ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’ என்று கூறியுள்ளார். நடிகர் விஜயகுமார், “தினமலர் அலுவலகத்துக்குள் புகுந்து நாலு பேரையாவது வெட்ட முடிவு செய்தேன்’ என்று பேசியுள்ளார்.நடிகர் சத்யராஜ், “ஸ்ரீபிரியா ஆங்கிலத்தில் சொன்ன கெட்ட வார்த்தையை எல்லோரும் வழிமொழிய வேண்டும்; உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா பேசும்போது, பத்திரிகையாளர்களை “ஈனப்பசங்க’ என்று பேசியுள்ளார்.நடிகர் அருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார். நடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.
நடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார். இவர்கள் பேசியது, பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. இணையதள ஊடகங்களிலும் ஒளி பரப்பாகியுள்ளது.இவர்களது பேச்சு அனைத்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு பேசிய நடிகர், நடிகையர் அனைவரும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், போலீசார் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இல்லை.
எனவே, இந்த நடிகர், நடிகையர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஜே.எம். 3 மாஜிஸ்திரேட் பரமேஸ்வரி, வழக்கு விசாரணையை நவ.3க்கு ஒத்திவைத்துள்ளார்.
பத்திரிகையாளர்களை நடிகர், நடிகையர் மிக மோசமாகப் பேசியது தொடர்பாக சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் முதன் முறையாக நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
11:15 மு.பகல் இல் நவம்பர்26, 2011 |
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு:ஊட்டியில் டிச.,19ல் ஆஜராக நடிகர்களுக்கு சம்மன்
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,00:22 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354198
ஊட்டி:பத்திரிகையாளர்களை, அவதூறாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா இயக்குனர் சேரன் ஆகியோர், ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில், டிச., 12ம் தேதி, நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும், பத்திரிகை ஆர்வலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், “இவ்வழக்கின் எதிரிகள் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா, இயக்குனர் சேரன் ஆகியோர், டிச., 19ம் தேதி, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என சம்மன் அனுப்ப, குற்றவியல் நடுவர் சுப்ரமணியம் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் ரொசாரியோ தரப்பில் வழக்கறிஞர்கள் விஜயன் மற்றும் செந்தில்குமார் ஆஜராகினர்.
2:02 பிற்பகல் இல் ஜனவரி9, 2012 |
[...] [9] http://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E… [...]
2:02 பிற்பகல் இல் ஜனவரி9, 2012 |
[...] [9] http://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E… [...]
2:07 பிற்பகல் இல் ஜனவரி9, 2012 |
[...] [9] http://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E… [...]
2:07 பிற்பகல் இல் ஜனவரி9, 2012 |
[...] [9] http://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E… [...]
2:09 பிற்பகல் இல் ஜனவரி9, 2012 |
[...] [9] http://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E… [...]