குழந்தையின்மை: தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு நினைப்பது, எழுதுவது தவறு, காலம் தாழ்ந்து குழந்தை பிறப்பதும் நிதர்சனமாகத் தான் உள்ளது. இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். தத்து எடுப்பு என்ற சாதாரணமான முறையும் இருந்தது. முன்பெல்லாம் குடும்பத்தில், உறவினர்களில் அப்பழக்கம் இருந்தது. பிறகு மற்றவர்களிடமிருந்து தத்து எடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. உண்மை பெற்றோர் வந்து சொந்தம் கொண்டாடுவது பணம் கேட்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அனாதை இல்லங்கள்போன்றவை,, இதனை ஒரு வியாபாரமாக்கியது. அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. அதனால், படிப்படியாக தத்து எடுக்கும் முறை குறைந்த்து. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.
விஞ்ஞான முறையில் கருத்தரித்தல், குழந்தை பெற்றல்: குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை. ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.
வாடகைத்தாய்: இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.
இரண்டாவதுடிரெடிஷனல்வாடகைத்தாய்: இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம். வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.
இந்தியாவில்வாடகைத்தாய்தொழில்நடைபெறுகிறது: பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவியன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தியாவில்வாடகைத்தாய்மூலம்குழந்தைபெறுவதுமலிவானது: இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம். குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
வாடகைத்தாய்உருவாகும்புதியபிரச்சினைகள்: வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது. வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.
வாடகைத்தாய்சட்டச்சிக்கல்கள்: தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.
தாய்மைநீர்த்து, ஆபாசமானநிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.
கவர்ச்சிஅரசியல், வாடகைத்தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில்வியாழக்கிழமை (22-04-2022)சமூகநலத்துறைமானியக்கோரிக்கைமீதானவிவாதத்துக்குப்பதில்அளித்துஅமைச்சா்கீதாஜீவன்வெளியிட்டஅறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.
தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.
பாலியல்குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
குழந்தைபெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].
தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.
[1] தினமணி, வாடகைத்தாய்மூலம்குழந்தைபெறும்அரசுபெண்ஊழியா்களுக்கு 270 நாள்கள்விடுப்பு: அமைச்சா்கீதாஜீவன், By DIN | Published On : 22nd April 2022 02:22 AM | Last Updated : 22nd April 2022 02:22 AM
மார்ச் 2021ல்இந்தியன்எக்ஸ்பிரசும்விவரமாகசெய்திவெளியிட்டிருந்தது[3]: குற்றஞ்சாட்டப் பட்ட நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படவில்லை, அச்சட்டப் பிரிவுகளின் படி கைதும் செய்யப் படவில்லை. விசாரனைக் குழு கூட்டத்திற்கு அந்த பெண்ணோ, பெற்றோரோ ஆஜராகவில்லை என்றுதான், அரசு அதிகாரிகளின் தரப்பில் சொன்னதாக செய்தியில் உள்ளது. எஸ்.கே. பொன்னுத்தாய், விசாரணை மட்டும் போதாது, போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[4]. வழக்கறிஞர் ஷாஜி செல்லன் என்பவரும், இது போன்ற புகார் வரும் பொழுது, பள்ளி நேரிடையாக போலீஸிடம் புகார் கொடுக்க வேண்டும். விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். எது எப்படியாகிலும், இப்பொழுது, மறுபடியும் இப்பிரச்சினை எழுந்துள்ளது.
விஜயபிரபாகரன்மீதுபோக்சோசட்டத்தில்வழக்குபதிவுசெய்யப்பட்டது (மே 2021): மார்ச் மாதத்தில் நக்கீரன் செய்தியை வெளியிட்டப் பிறகு, மற்ற ஊடகங்கள் வெளியிட்டனவா என்று தெரியவில்லை. ஆனால், மே 2021ல் திடீரென்று அதைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை, “பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்” என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள். மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்[5]. ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன் 2020 ஜூலையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தந்தை மாநகராட்சி, மாவட்டகல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. மேலகோபுரத்தெரு கோதண்டம் ‘போக்சோ’ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்[6].
சஸ்பென்ட்செய்யப்பட்டவிஜயபிரபாகரன்: நீதிமன்ற உத்தரவின்படி விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,க்கள்) சேர்க்கப்பட்டு நகர் தெற்கு அனைத்துமகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விஜயபிரபாகரனை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா ‘சஸ்பெண்ட்’ செய்தார். அவர் கூறுகையில் “புகார்அளித்தவுடன்பெண்கள்பள்ளியில்இருந்துஆண்கள்பள்ளிக்குஅவர்மாற்றப்பட்டார். மாநகராட்சிகமிஷனர்உத்தரவின்படிசஸ்பெண்ட்செய்துள்ளோம். வழக்கில்கல்விஅதிகாரிகளைசேர்த்துள்ளதகவல்எனக்குதெரியாது,” என்றார். மே 25 2021லிருந்து, சிறியதாக, இச்செய்தி வெளியிடப் பட்டு வருகிறது.
யூ–டியூப்மோகம்கொக்கோகத்தைநெருங்கியவிதம்: இணையதளங்களில் புற்றீசல்கள் போல இப்போது யூடியூப் சேனல்கள் பெருகிவிட்டன. இந்த சேனல்களில் பொதுமக்களுக்கு பயன்படும் நல்ல விசயங்களும் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகிறது[1]. அதிகமான பேர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை நடத்துவோருக்கு அதிக அளவில் பணம் கொட்டும்[2]. இதனால்தான் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள். “மக்களிடம் கருத்து கேட்கிறோம்,” என்ற பெயரில் ஆபாச அத்துமீறலில் ஈடுபடும் சில யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது `சென்னை டாக்ஸ்’ யூ-டியூப் சேனல் விவகாரம்[3]. தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்ததாக ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது[4].
ஆபாசபேச்சுவீடியோ: அரசியல் போக்குகள், சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் என பொதுவெளியில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், எளிதில் அதிக வியூஸ் பெறவேண்டும் என்ற வெறியில் சில யூடியூப் சேனல்கள் வக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காமத்தையும், அந்தரங்க விஷயங்களையும் மையப்படுத்தி தவறான உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டு, அதற்கு மக்கள் சொல்லும் கருத்துகளில் எந்த இடத்தில் ஆபாசமான சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்கின்றனவோ அந்த இடத்தை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிடுகின்றன. அதன் அடுத்தகட்டமாக பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கும் கொடுமையும் நடக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இத்தகைய பேச்சுகளை ஆதரிக்கும் விதத்தில் தான், இன்றும் ஊடகங்களில் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பெண் பேசிய விதம் தவறுதான், ஆனால், ஆண்கள் எப்படி தனக்கு மூன்று-நான்கு மனைவியர் உள்ளனர், பலருடன் உடலுறவு வைத்துக் கொண்டேன் என்றேல்லாம் பேசுகிறானோ, அதேபோல, பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. இப்படியும், ஒரு ஆங்கில செனலில் பேட்டி ஒளிபரப்பப் பட்டது.
“2020 எப்படிபோனது?” போர்வையில்ஆபாசகேள்வி–பதில்நிகழ்ச்சி: சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் “2020 எப்படி போனது?” என்ற டாபிக்கில் கருத்து கேட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தனர் `சென்னை டாக்ஸ்’ குழுவினர்[5]. அந்த வீடியோவில் ஒரு பெண் மிகவும் ஆபாசமாகப் பேசியிருந்ததால் பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை ஏகத்துக்கும் தாக்கி கமென்ட் செய்தனர்[6]. கேட்ட கேள்விகள், கொடுத்த பதில்கள், வார்த்தை விபச்சாரம் போலிருந்தது. அம்மண், இம்மண் என்றெல்லாம் அரற்றினாலும், பெண்மை போகும் பாதையை மாற்ற முடியவில்லை, வார்த்தை விபச்சாரமும் பெருகுகிறது! கவர்ச்சி அரசியலில் மூழ்கி இந்துத்துவம் மயங்கும் போது, வார்த்தையில் நீலப்படம் எடுக்கும் தருணமும் வந்து சேர்கிறது பெண்மை மறக்கிறது! வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள், உலா வரும் வேளையில் எல்லாமே பறக்கின்றன. நிலைமை மோசமாகி விட்டது என்றறிந்த, அப்பெண் உஷாராகி, புகார் கொடுத்தாள்.
யார்அந்தபெண்? வீடியூவில்பேசியபெண்: புகார் அளித்த ஜோதி கிரிதர்சிங் என்கிற அந்த பெண், 21 மணி நேரம் 2900 நபர்களுக்கு மேல் மெஹந்தி போட்டு கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்[7]. சிறந்த தொழில் முனைவோராக பெயர் எடுத்தவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் பெஸ்ட் டிரெய்னர் என கட்டுரை வெளியாகியிருக்கிறது[8]. வடைபோச்சு போன்ற ஷோக்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பு செய்திருக்கிறார். நடிப்புத் துறையிலும் இருந்து வந்துள்ளார். அப்பெண் கூறியதன்படி, “அந்த பேட்டி வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக பேசிய, 1500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ. அந்த சேனல்காரர்கள் 2020 உங்களை என்னவெல்லாம் செஞ்சது? 2021 எப்படி போகப் போகிறது என்பதை பற்றி கேட்பதாக முதலில் கூறினார்கள். சென்னை டாக்ஸ் சேனலில் மட்டும் தான் போடுவோம் என்று கூறினார்கள். இதற்கு முன்பாக பல பெண்களை இப்படி பணம் கொடுத்து பேச வைத்ததாகவும் கூறி அவர்களின் பட்டியலை கொடுத்தார்கள். அந்த பெண்களும் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டதாக தங்கள் மனக்குமுறலை என்னிடம் பகிர்ந்தார்கள். இதை வெளிக்கொண்டு வரவே, நான் இதை செய்தேன். அந்த பணமும் அவர்களாக கொடுத்ததுதான். ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசலாம் என்கிற பேச்சு சுதந்திரத்தை தான் வெளிப்படுத்தினேன். இந்த சேனலை பார்த்துவிட்டு, இதில் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என கூறியும் அவர்கள் பகிர்ந்துவிட்டார்கள்.” என தெரிவித்துள்ளார்.
தானேபுகார்கொடுத்ததுஏன்?: இந்த புகாரையும் அப்பெண்ணே கொடுத்துள்ளார். அதற்கு காரணமாக அவரே கூறியதாவது:- “முதலில்அந்தசேனல்தரப்பில்கமெண்ட்செக்ஷனைஆஃப்செய்துவைத்திருப்பதாகதான்உறுதிஅளித்தார்கள். ஆனால்அவர்கள்அவ்வாறுசெய்யவில்லை. இந்தவீடியோவைரலான 15 நிமிடங்களில்கமெண்ட்செக்ஷனில்மோசமானகமெண்டுகள்குவிந்தன. என்னால்தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவர்களிடம்கேட்டபோதுசேனலின்தலைமைஅதைகேட்டுக்கொள்ளவில்லைஎனகூறினார்கள். இதனால்என்பெயரைமீட்டெடுக்கஅந்தசேனலைச்சேர்ந்தவரிடம்கேட்டேன். அப்போதுஎன்பெயருடன்சேர்த்துஇந்தவீடியோவைவைரல்செய்தார்கள்.ஆனால்அதுதான்இன்னும்மனஉளைச்சலாக்கியது. உண்மையில்என்னடாஇப்படிலாம்பேசவைக்குறீங்கஎன்றுதான்அந்தவீடியோவில்நான்பேசியிருக்கிறேன். இவைநடந்தஅடுத்தஒருமணிநேரத்திலேயேஇந்தவிவகாரம்பற்றிநான்போலீஸ்ஸ்டேஷனில்தெரிவித்தேன். இந்தபுகாரைநானாகவேகொடுத்தேன். காவல்துறைஇந்தவீடியோவைநீக்குவதாகதெரிவித்துள்ளார்கள். இப்படிஎதிர்மறையாகபேசிநான்பிரபலமாகிவிட்டேன். இதைவைத்துஇதுபோன்றவிஷயங்களுக்குமுற்றுப்புள்ளிவைக்கஎன்பங்களிப்பைதரநினைக்கிறேன்.” என கூறியுள்ளார். இறுதியாக, “நான் யாருக்கும் இதை சொல்லி புரியவைக்க முடியாது. என் பதில்களில் யாரும் திருப்தி அடையவும் வாய்ப்பில்லை. நான் யாருக்கும் தெரியாத எந்த விஷயமும் பேசவில்லை. அத்துடன் இந்த பேட்டியில் நான் பேசியவற்றை இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்.” என அந்த பேட்டியில் ஜோதி தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகளும், சமுக சீர்பழிப்பாளர்களும் ஒன்றே: “நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்,” என்ற நிலையில் அந்த பெண்மணி இருக்கும் போது, ரூ.1,500/- அத்தகைய கொக்கோக பதில்களைச் சொல்லி, பெண்ணுரிமை பேசி, பிறகு ஜகா வாகியிருப்பது, தமாஷாக இருக்கிறது. ஊழல் அரசியல்வாத்களுக்கும், இத்தகைய, கொக்கோக பெண்ணியப் போராளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காசுக்கு இவர்களிடம் பஞ்சமில்லை என்றால், அதையும் மீறி ஆட்டிப் படைக்கும் காரணிதான், இவர்களை சீரழிக்கும் வேலைகளில் ஈடுபட செய்கின்றன. சமூக பிரக்னை இல்லாமல், யாரும், சமூக பிரச்சினைகள் அணுக முடியாது. ஆனால், போலித் தனமாக, ஆசியல்வாதிகள் செய்வார்கள். இதுப்போலத்தான் இக்கூட்டமும்.
70-100 பெண்களை சீரழித்த காசிப் பிரச்சினை அரசியலாக்கப் படுகிறதா, கொரோனாவில் அமுக்கப் படுகிறதா? [2]
இளம்பெண்டாக்டரைகாதலித்துஆசைதீரஉல்லாசம்… ஆபாசவீடியோக்களைவெளியிட்டுபுண்ணியம்தேடியகாசி..! 70 முதல் 100 பெண்கள்சீரழிந்தனர்![1]: இதன் முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்[2]. காசியில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக, ஒரு பெண் டாக்டர் பிப்ரவர் 24, 2019 அன்று புகார் கொடுத்தார் என்றுள்ளது[3]. மாட்டிக் கொண்ட காசியின் சகோதரனை, அதிமுக பிரமுகர் ஒருவர் அடித்ததால், இப்பிரச்சினை அரசியலாக்கப் பட்டது. இதற்குள், அவர் கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். ஆனால், பல பெண்கள் பாலியல் ரீதியில் சதாய்க்கப் பட்டுள்ளதால், பலர் சம்பந்தப் பட்டிருக்கக் கூடும் என்று எண்னப்படுகிறது[4]. மொபைல், லேப்டாப், ஹார்ட்-டிஸ்க், சிடிக்கள் என்று எல்லாமே பறிமுதல் செய்யப் பட்டு, ஆராயப் பட்டு வருகிறது[5]. இதில் மற்ற பெண்கள் இருப்பது தெரிந்தாலும், அவர்கள் தங்களது வாழ்க்கை நினைத்து புகார் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன[6]. கடந்த பிப்ரவரியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்ற வழக்குப் போன்றே இருப்பதாக, கருதப் படுகிறது[7]. எது எப்படியாகிலும், தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற நிலையில் இருப்பதால், மற்றவர்கக்கு சமூக பிரஞை இல்லாமல், ஏதோ, செய்திகள் படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம் என்ற நிலையில் இருந்து மறந்து விடுகிறார்கள்.
காசியின்நண்பர்கள், தேடுதல், அவர்களிடம்விசாரணை: மின்னணு கருவிகளிடமிருந்து பெற்ற விவரங்களை வைத்து, இவையெல்லாம், இவன் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்றறிந்து, அவற்றிற்கு துணை போன, மற்றவர்களை போலீஸார் தேடினர், கண்டு பிடித்தனர்.. வழக்கில் கைதான, நாகா்கோவில் காசியுடன் தொடா்பில் இருந்த நண்பா்கள், அரசியல் பிரமுகா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்[8]. காவல் கண்காணிப்பாளரிடம் காசி மீது அந்த மருத்துவா் புகார் அளித்தார். இதைத்தொடா்ந்து, காசி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனா்[9]. ஏற்கெனவே, இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றிருக்கும் பொழுது, இவ்வழக்கு எதற்கு என்று தெரியவில்லை. அவ்வழக்குகளை தீவிரமாகத் தொடர்ந்து நடத்தினால், பலர் மாட்டிக் கொள்ள வாய்புள்ளது. மேலும் பெண்களின் பெற்றோர், உறவினர், மற்றவர், இவ்வழக்கை முடித்துக் கொள்ளத்தான் விரும்புவர்.
முன்பகுதியில்நாலடிஆக்கிரமித்துகட்டியபங்களா: இந்நிலையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அவரது அடுக்குமாடி பங்களாவை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே காசியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க இளம் பெண்களிடம் மிரட்டி பறித்த பணத்தில் தனது வீட்டை நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி மாளிகையாக மாற்றி இருக்கிறார் காசி. இதைத்தொடர்ந்து காசியின் வீட்டை மாநகராட்சியினர் அளவீடு செய்தனர்[10]. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்பகுதியில் நாலடி ஆக்கிரமித்து கட்டி அந்த வீட்டில் தரைத்தளம், முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அனுமதியின்றி இரண்டாவது மற்றும் மூன்றாவது நான்காவது தளங்கள் என சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது[11]. பின்னர் காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு, வீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சீல் வைப்பதற்கான நோட்டீஸ் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது[12]. இதனைத் தொடர்ந்து விதி மீறிய கட்டடங்களை இடிக்க முடிவு செய்துள்ள நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நோட்டீஸ் அறிவிப்பு ஒன்றை அவரது வீட்டில் ஒட்டி உள்ளது[13].
காசிகைதுஎன்றுபலதடவைசெய்திவருவதுஏன்?: ஏற்கெனவே, சென்ற வாரம், காசி கைது செய்யப் பட்டான் என்று செய்தி வந்தது. எப்படி அதிவேகமாக பெண்களை ஏமாற்றி சொத்துக்களை குவித்து அதிவேகத்தில் காசி முன்னேறினானோ அதே வேகத்தில் காசி காவல்துறையிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காசியின் பிளாக்மெயில் வேலைகளுக்கு உடந்தையாக இருந்த அனைத்து நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த குற்றங்கள் வெளியே வந்துள்ள நிலையில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. இந்த நிலையில் நெல்லை நாங்குநேரி சிறையில் உள்ள காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[15]. இதனால் காசியால் பெயிலில் வர முடியாது குமரி காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் கூறுகிறார்கள்.
கொரோனாபிரச்சினையில்அமுக்கப்படுமா, இரண்டாவதுகரோனாவாகமாறுமா?” தமிழகத்தில் கற்பழிப்பு, நாகரிக உடலுறவு, பாலியல் வன்புணர்ச்சி என்பதெல்லாம், இரண்டாவது கொரோனா போன்று வேலை செய்து கொண்டிருக்கிறது! கண்ணகி, கற்பு என்றெல்லாம் பேசுவர், மேடைகளில் முழங்குவர், சிலைகள் வைப்பர், ஆனால், இது போன்று நடக்கும் போது கண்டு கொள்ளாமல் இருப்பர். எந்த கழகத் தோழரும், இனமான வீரரும் வாளோடு போராட வரவில்லை. கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் கூட, கோடிக் கணக்கில் வருகின்ற நிதியைத் திருப்பி, கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடும் நிலையில், இதெல்லாம், பெரிய விசயமாகவே தெரியவில்லை.
[3] Not giving into the blackmail attempt, the victim, who managed to free herself, lodged a complaint with police on February 24, 2019.
AsiaNetNews, From Pollachi to Nagercoil another case of sexual crime emerges in Tamil Nadu, By Team Newsable, Chennai, First Published 30, Apr 2020, 4:19 PM..
[4] The case assumed political overtones since a local functionary of the ruling AIADMK allegedly attacked the victim’s brother. The attack by the functionary, who was later expelled from the AIADMK, coupled with reports in a section of media opened a can of worms, leading the police to believe that over 50 women may have been victims of sexual assault by a network of men.
[5] The police recovered mobile phones, laptop, hard discs, CDs from him in which it was found he had stored intimate photographs and videos of several women.
UNI ,Goondas act slapped on youth after arrested for sexual harassment and extortion, UNI GSM CS 1745, Posted at: Apr 30 2020 5:45PM
[6] He was booked under various sections of the Indian Penal Code, Information Technology Act, 2000, and the Tamil Nadu Prohibition of Women’s Harassment Act.
[7] The case is similar to that of the Pollachi sexual assault case. A gang of men on February 12 allegedly tried to strip a woman inside a car near Pollachi, 500 km from Chennai. They shot a video of the act and tried to blackmail her using the visuals.
[8] தினமணி, தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை, By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]
[10] தமிழ்.இந்து, பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இளைஞரின் வீட்டை சீல் வைக்க நடவடிக்கை: நாகர்கோவில் மாநகராட்சி நோட்டீஸ், Published : 29 Apr 2020 05:34 PM; Last Updated : 29 Apr 2020 05:34 PM,
[11] ஏசியா.நெட்.நியூஸ், டாக்டர், எஞ்ஜினியர், நடிகர் மகள், மாணவிகளை மயக்கி பணம் பறிக்க உல்லாசம்… 4 மாடி வீடு கட்டிய பொலிகாளை காசி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 29, Apr 2020, 1:43 PM
[14] தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]
2017 குற்றவாளிபற்றி 2018ல்புராணம்பாடுவது: அறிவழகனின் குரூரத் தன்மை பற்றிய விவரங்கள் சென்ற ஆண்டிலேயே செய்திகள் வெளிவந்தன. அதைப் பற்றி அலசி முன்னமே பதிவு செய்தேன்[1]. ஆனால், இப்பொழுது, மறுபடியும் அவன் கதையை இவ்வாறு விவரிப்பது, திகைப்பாக இருக்கிறது, “திருமணமாகாதஇந்தஇளைஞர்பெங்களூரில்ஒருமென்பொருள்நிறுவனத்தில்பணியாற்றியுள்ளார். அங்கேதனியாகஇருக்கும்வீடுகளில்பெண்களைமிரட்டி, மயக்கமடையவைத்துபாலியல்வல்லுறவில்ஈடுபட்டதாககுற்றம்சாட்டப்படும்இந்தஇளைஞர்காவல்துறைதன்னைதேடுவதைஅறிந்துசென்னைக்குவந்திருக்கிறார்[2]. இரட்டைகதவுகளைகொண்டவீடுகளில்திருப்புளிமூலம்எளிதில்பூட்டுகளைதிறந்துவிடும்வல்லமைபொருந்தியஇந்நபர்காலைநேரத்தில்வீடுகளைதேர்வுசெய்துஇரவில்நுழைந்துபெண்களைமிரட்டிவல்லுறவுசெய்துநகைகளையம்பணத்தையும்கொள்ளைஅடித்துவிட்டுசென்றுள்ளார்”[3]. ஒரு படு கேவலமான குற்றவாளியை, சமூக விரோதியை இவ்வாறு மரியாதையாக நிருபர்கள் செய்தி வெளியிடுவதே அதை விட கேவலமாக இருக்கிறது. பெண்மை பற்றி எல்லாம் மேடை பேச்சுகளில் வீரம் காட்டும், இத்தகையோர், உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை[4].
15-12-2018 அன்றுசனிக்கிழமைஇரவுகைது: சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ. ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது[5]. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் 15-12-2018 அன்று சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்[6]. அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
பணத்தைகட்டிலில்கொட்டிபெண்களுடன்ஜாலியாகஇருப்பதுதனிசுகம்: இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்[7]. கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்[8]. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் நவம்பர் 2018, ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
கேமராபதிவுவைத்துசோதனை: இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது.
எம்பிஏபடித்துகாமக்கொடூரனானமிருகம்: இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன்[9]. இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான்[10]. பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.
சோரம்போனபெண்கள்வெளியில்விசயத்தைசொல்லாதது: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
திராவிடதமிழச்சிமற்றும்தமிழச்சன்களின்காதல், காமம், கொக்கோகஓடல், கூடல்விளையாட்டுகள்! அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]
சகஜமாகஇருக்கும்அபிராமி[1]: இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்[2].
சமூக உளவியர், மனோதத்துவ நிபுணர் போன்ற போர்வையில், நிலையில் சிலர் கருத்துக் கூறுவது படு வேடிக்கையாக இருக்கிறது[3]. ஏனெனில், உண்மையிலேயே அத்தகைய விவகாரங்களில் ஆழ்ந்து ஆராயும் விற்பன்னர்களாக இருந்தால், அத்தகைய உணர்வுகள் எப்பட், ஏன், எவ்வாறு வருகின்றன என்று மூலங்களை அலசி வெளிப்படுத்து இருக்க வேண்டும். ஏதோ பொதுப்படையாக சொல்வது எல்லாம், “எக்ஸ்பர்ட் ஒபினியன்” என்று சொல்ல முடியாது. “ஃபுல் மேக்-அப்- டப்ஸ்மேஷில் கலக்கிய குன்றத்தூர்அபிராமி– வீடியோ” என்று செய்திகளை வெளியிடும்[4] ஊடகங்களின் வக்கிரத்தையும், அத்தகைய ஷோக்களை வெளிப்பரப்பும் சன் போன்ற டிவி செனல்களும் காரணமாவதை எடுத்துக் காட்ட வேண்டும்.. மியூசிக்கலி மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களினால் தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்[5]. ஆக, அபிராமி பற்ற்றிய ஆராய்ச்சி அதிகமாகவே இருக்கிறது. நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் இதை விட்டு விடுமா என்ன? இதோ அவர்களும் கிளம்பி விட்டார்கள்.
நக்கீரனின் அபிராமி பற்றிய ஆராய்ச்சி[6]: நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம். குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் “ஹோப் இண்டியா” அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம்[7], “திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.
கள்ளக்காதலால் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றன – அதிசய கண்டுபிடிப்பு[8]: கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை. அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள்[9].
குழந்தைகள் இடையூறு என்று கொலைசெய்யப் படுகிறார்களாம்![10]: அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்”’’என்கிறார் அவர்[11].
குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின்தேவநேயன் விடும் கதை[12]: குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்” என்கிறார் அழுத்தமாக. குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. “”அம்மா… நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்[13].
திருமணம்ஆகி, இருகுழந்தைகள்உள்ளவன், மாணவியுடன்வைத்தஉறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.
தனதுவகுப்பில்படிக்கும்ம்மாணவியுடன்காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.
மனைவிகண்ணீர்விட்டுமன்றாடியும்காதலில்உடும்புபிடியாகநிற்கும்மாணவியும், பேராசிரியரும்![3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா? இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].
பிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’ என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான். அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.
16-வயதுமாணவன், டீச்சருக்குகாதல்செய்திஅனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
[1] நக்கீரன், மனைவிகண்ணீர்விட்டுமன்றாடியும்காதலில்உடும்புபிடியாகநிற்கும்மாணவியும், பேராசிரியரும்!, செல்வகுமார், Published on 16/10/2018 (18:57) | Edited on 16/10/2018 (19:11)
[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால்அது “சிம்பு“வுடன்தான்.. இருகுழந்தைகளின்தந்தையானவிரிவுரையாளரைபிரியமறுக்கும்மாணவி!, By Vishnupriya R Published: Wednesday, October 17, 2018, 6:30 [IST]
[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரைநிர்வாணமாகவீடியோஎடுத்துடீச்சருக்கேவாட்ஸ்ஆப்பில்அனுப்பியமாணவன்… நாளுக்குநாள்நச்சரிக்கும்செக்ஸ்டார்ச்சர்!, By Sathish KFirst Published 9, Sep 2018, 6:11 PM IST
[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.
கற்பழிப்பு, ஒழுக்கம்குடும்பம், சினிமாமுதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கற்பழிப்பு, கொக்கோகவிவரிப்புமுதலியவற்றைசெய்யும்பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர்? மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.
பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்பமேன்மயை, கணவன்–மனைவிஉறவுமுறைகளைபோற்றாமல்இருப்பதுசமுதாயத்திற்குநல்லதா?: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்? பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா? அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா?
தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.
பேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
கதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.
கேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.
அனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.
அடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.
வேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதற்குமுன்…என்றுஅகரம்நாராயணனின்கதையைசொல்லும்ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரியானாகற்பழிப்பைபின்பற்றினேன்என்றுசொன்னதானசெய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா? என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
37 ஆண்டுகளுக்குப்பிறகு…(விகடனின்செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.
பாதிக்கப்படும் பெண்கள்
வாக்குமூலம்உண்மையென்றால், பெண்களின்நிலைஎத்தகையஆபத்தில்உள்ளதுஎன்பதனைஅறிந்துகொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.
3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.
6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.
7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.
8. சிலகுடும்பபெண்களையும்சீரழித்துஉள்ளேன். சிலவீடுகளின்மாடியில்ஏறிகுதித்து, பின்பக்கவாசல்வழியாகசென்றும், கற்பைசூறையாடிஉள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5].
9. இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.
இவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.