அமெரிக்காவை மிஞ்சும் தமிழர்கள் / இந்தியர்கள்!


அமெரிக்காவை மிஞ்சும் தமிழர்கள் / இந்தியர்கள்!

 

நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை: கணவனுக்கு வலை வீச்சு[1]: இத்தகைய வன்முறைக் குற்றங்கள் தமிழகத்தில், இந்தியாவில் நடப்பது நிறுத்தப்படவேண்டும். சமூகத்தில் கணவன்-மனைவி உறவுமுறைகளில் ஏன் விரிசல்கள் வருகின்றன என்பதை ஆய்ந்து முதலில் தீர்வு காணவேண்டும். சென்னையை அடுத்த மணப்பாக்கம் பெரிய காலனியை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 40). மணல் விற்பனை செய்யும் ஏஜெண்ட். இவருடைய மனைவி ஜெயா (35). இவர்களுக்கு லோகேஸ்வரி (15), இலக்கியா (13) ஆகிய மகள்களும் உள்ளனர். ஜெயா பூ வியாபாரம் செய்து வந்தார். ஜெயாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு

அமரிக்காவைப் போன்ற குற்றங்கள் இந்தியாவில் பெருகி வருவது, அபாயகரமானது. பொதுவாக தமிஅழ் திரைப்படங்களில், டிவி-சீரியல்களில்  கணவன்-மனைவி உறவுமுறை மிகவும் கொச்சைப் படுத்தப் படுகிறது. ஒரு பெண் பலருடன் தொடர்பு, ஒரு ஆணுக்கு பல மனைவிகள் என்று தான் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் அவ்வாறு சமூகத்தை, பெண்மையைக் அசிங்க / கொச்சைப் படுத்துவோர்களுக்கு தேசிய / மாநில விருதுகள் எல்லாம் கொடுக்கப் படுகின்றன.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். ஜெயாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி அன்று ஜெயாவுக்கும், சேதுராமனுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டதற்கு, ஜெயா ஊருக்கு சென்றிருப்பதாக கூறி சேதுராமன் மழுப்பியுள்ளார். அதன்பிறகு ஜெயாவைக் காணவில்லை. சொந்த ஊருக்கு சென்று இருப்பதாக ஜெயராமன் கூறினார்[2]. இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள பொது கிணற்றில் கடந்த 2 தினங்களாக சேதுராமன் மண்எண்ணெய், பெனாயில் ஆகியவற்றை ஊற்றியதை பொதுமக்கள் பார்த்தனர். எதற்காக இதை கிணற்றில் கொட்டுகின்றாய்?” என்று அந்த பகுதி மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், கிணற்றில் கழிவுகளைப் போட்டேன். துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊற்றினேன்” என்றார். இதற்கிடையே அங்கு துர்நாற்றம் அதிகமாக வீசுவதைக் கண்ட பொதுமக்கள் கிணற்றின் மேல் இருந்த மூடியை அகற்றி பார்த்தனர். அப்போது 4 பாலிதீன் பைகள் கிணற்றில் கிடந்தது தெரிய வந்தது[3].


மனைவி உடலைத் துண்டு-துண்டாக்கி கிணற்றில் போட்ட கணவன்[4]: உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் அளித்தனர். பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர்கள் முருகேசன், விஜயகுமார், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றில் மிதந்த 4 பைகளை வெளியே எடுத்து பார்த்தபோது ஒரு பெண்ணின் கால்கள், உடல் பாகங்கள், கைகள் இருந்தன. தனது மனைவி ஜெயாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பையில் போட்டு கிணற்றில் சேதுராமன் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.

சாவைப் பற்றி அருமையாகப் பேசப் பட்டு வருகின்றன, மனித உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றெல்லாம் வியாக்யானம் / விளக்கல் கொடுக்கப் படுகின்றன. பயங்கரமான கொலையாளிகளுக்கு கூட தூக்குத் தண்டனை கூடாது என்று பேசப்படுகின்றன. நாளைக்கு இந்த கொலையாளிக்கும் திருந்தலாம் என்று குறைந்த தண்டனைக் கொடுக்கலாம். சிறையிலிருந்த் வெளியே வந்ததும், இன்னொரு திருமணத்தையும் செய்து கொள்ள பரிந்துறைக்கலாம்.

சேதுராமனை தேடி சென்றபோது வீட்டை பூட்டிக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
மகள்களை தவிக்க வைத்த தகப்பன்: அவருடைய மகள் லோகேஸ்வரி பரங்கிமலையில் உள்ள பள்ளியில் 10 ம் வகுப்பும், இன்னொரு மகள் இலக்கியா 8 ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சேதுராமனின் மகள்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்,   எங்களுடைய தந்தை பகலில் பள்ளிக்கூடத்திற்கு வந்து,  நான் ஊருக்கு செல்கிறேன். 2 நாளில் வந்து விடுவேன்’ என்று கூறி சென்றார்” என்று தெரிவித்தனர். மேலும், ஜெயாவின் தலை கிடைக்கவில்லை. பொதுக்கிணறு கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாததால் மூடி போடப்பட்டு உள்ளது.


தலைமறைவான கணவன், தேடிவரும் தனிப்படை: மனைவி நடத்தையால் சந்தேகப்பட்டு அவளை சேதுராமன் கொடூரமாக கொலை செய்து பாலிதீன் பைகளில் உடல் உறுப்புகளைப் போட்டு கற்களை கட்டி கிணற்றில் போட்டு இருக்கிறார்[5].

இப்பொழுதெல்லாம் பொலீஸ் தனிப்படை அமைப்பது என்ற செய்தி அடிக்க்கடி வருகின்றது. அப்படி போலீஸார் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஜெயாவை கொலை செய்து விட்டு கடந்த 27 ந் தேதி முதல் எதுவும் நடக்காததுபோல அந்த பகுதியில் சேதுராமன் நடமாடி இருக்கிறார். மேலும் கிணற்றில் கிடக்கும் தலையை எடுக்க தண்ணீரை அகற்ற வேண்டும் என்று தீயணைப்பு துறையினருக்கு போலீசார் அழைப்பு விடுத்தனர். அவர்கள் வராததால் போலீசார் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை வெளியேற்றி தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தப்பி ஓடிய சேதுராமனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

துரோகம்இழைத்தமனைவியைகண்டம்துண்டமாகவெட்டிகொலைசெய்தேன்: கணவன்வாக்குமூலம்[6]: மனைவியின் உடலை, கண்டம் துண்டமாக வெட்டி, கிணற்றில் வீசிய கொடூரக் கணவனை, போலீஸார் கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின்படி, பாறாங்கற்களைக் கட்டி வீசிய தலை, கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது[7]. திருச்செந்தூர் அடுத்த, பிச்சவிளையைச் சேர்ந்தவர் சேதுராமன் (40). இவர், சிறுவயதில், குடும்பத் தகராறில் சென்னைக்கு ஓடி வந்து, மளிகைக் கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளில் வியாபாரம் செய்தார். நண்பர்களுடன், திண்டிவனத்தில் விபச்சார விடுதிக்கு, சேதுராமன் சென்ற போது, அங்கு, கடலூரைச் சேர்ந்த ஜெயா (16), என்ற பெண்ணுடன் ஜாலியாக இருந்தார். ஜெயாவின் அழகில் மயங்கி, அவரை சென்னைக்கு அழைத்து வந்த சேதுராமன், பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டார்[8].
சென்னை, கிண்டி மடுவங்கரையில், ஜெயாவும், சேதுராமனும் வாடகை வீட்டில் வசித்தனர். அச்சகம், கம்ப்யூட்டர் மையத்தை நடத்திய சேதுராமனுக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், கொளத்தூரில் தியேட்டரை லீசுக்கு எடுத்து, சினிமா படங்களைத் திரையிட்டார். மணப்பாக்கம் பெரிய காலனியில் இடம் வாங்கி, வீடு கட்டி குடும்பத்தோடு சேதுராமன் குடியேறினார். சினிமா தொழிலை விட்டுவிட்டு, மணல் வியாபாரத்தை, சேதுராமன் செய்து வந்தார். இந்நிலையில், சேதுராமன் விருப்பத்துடன், ஜெயா, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களை வாங்கி, வியாபாரம் செய்து வந்தார். அப்போது, ஜெயாவுக்கும், கோயம்பேடு வியாபாரி ஜான் பீட்டருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சேதுராமன், பழைய நிலையைச் சுட்டிக்காட்டி,

விபச்சாரிகளுக்கு அத்தகைய எண்னம் இருக்குமா, இல்லை சோரம் போனதால் போகட்டும் என்ற நிலை வளருமா, “மரத்து விட்டது / பழகி விட்டது” என்ற மனப்போக்கா, முதலியவற்ரைப் பற்றி மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

ஜெயாவை கண்டித்தார். ஆயினும், ஜான் பீட்டருடனான தொடர்பை, ஜெயா விடவில்லை. தன் 13, 12 வயது பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, ஜெயாவின் சொந்த ஊரான கடலூருக்கு, குழந்தைகளுடன் ஜெயாவை சேதுராமன் அனுப்பி வைத்தார். ஓராண்டுக்குப் பின், “இனிமேல் எங்கும் போகமாட்டேன்’ எனக் கூறி, சென்னையில் சேதுராமனுடன் சேர்ந்து, ஜெயா குடும்பம் நடத்தி வந்தார். சிறிது நாட்களுக்குப் பின், அடிக்கடி ஜெயா வெளியே சென்று வந்தார். இதனால், ஜெயா மீது சேதுராமனுக்கு மீண்டும் சுந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள், காஞ்சிபுரத்தில், ஜான் பீட்டருடன் ஜெயா இருந்ததை, நேரில் பார்த்த சேதுராமான், அவரை அடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில், தீபாவளிக்கு சில நாட்கள் முன், வெளியூர் போவதாகக் கூறி சேதுராமன் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பியபோது, 25 வயது வாலிபர் ஒருவருடன், ஜெயா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோபத்தில், ஜெயாவின் தலையை சுவரில் மோதினார். இதில், படுகாயமடைந்த ஜெயா, மூர்ச்øசுயாகிவிட்டார். உட்கார்ந்த நிலையிலேயே ஜெயா இறந்துகிடந்தார். ஜெயாவின் உடலை கண்டம் துண்டமாக வெட்டி, கழுவி, பிளாஸ்டிக் பையில் போட்டார். தலையை மட்டும், வேறொரு பிளாஸ்டிக் பையில் போட்டு, உடன் பெரிய பாறாங்கற்களை இணைத்து, பொதுக் கிணற்றில் போட்டுவிட்டார். தினமும்

விபச்சாரர விடுதியில் இருந்த ஜெயாவை மீட்டு, வாழ்க்கை கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்ததால், கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டதால், இதையும் நியாயப்படுத்த முடியுமா என்று அறிவுஜீவவிகள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கிணற்றில் வீசிய உடல் உறுப்புகள், வெளியே வருகிறதா என, பல நாட்கள் கண்காணித்தார். துர்நாற்றம் வீசியதை அறிந்த பொது மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மழை பெய்ததால், கிணற்றில் மிதந்த உறுப்புகளை, போலீஸார் கண்டெடுத்தனர். தலை மட்டும் கிடைக்காததால், மாநகராட்சி ஊழியர்கள் கிணற்றில் தீவிரமாகத் தேடினர். கொலை செய்த சேதுராமனின் வீடு பூட்டிக் கிடந்தது. அவனது மொபைல்போன் டவர், கே.கே.நகர் பகுதியில் காட்டியது. இதையடுத்து, சேதுராமனை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான சேதுராமன் கொடுத்த தகவலின்படி, கிணற்றில் கற்களைக் கட்டி, தூக்கி வீசிய தலையையும் போலீஸார் கண்டுபிடித்தனர். “விபச்சாரர விடுதியில் இருந்த ஜெயாவை மீட்டு, வாழ்க்கை கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்ததால், கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்’ என, சேதுராமன், போலீஸ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் கொலை செய்தேன் மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம்[9]: திருச்செங்கோட்டை அடுத்து உள்ள நாராயணம் பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டையன் (வயது 37) என்பவரின் மனைவி வளர்மதி (27) இவர் களுக்கு தினேஷ், தீபா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 03.11.2011 அன்று வளர்மதி அவரது வீட்டில் கழுத்தில் துண்டால் நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  இது குறித்து தகவல் அறிந்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு

நக்கீரனில் வெளிவந்துள்ள இச்செய்தி அதே மாதிரி இருந்தாலும், பெயர்கள், இடம் முதலியவை மாறியிருப்பதால், வேறாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் வன்முறை எண்ணங்கள் வளர்வது, அத்தகைய கொடிய-குரூருரமான குற்றங்களையும் செய்யத்துண்டுவது, அத்தகைய மனப்பாங்கை ஏற்படுத்தி கொள்வது முதலியன சமூக-ஆய்விற்குரியது. கடந்த அக்டோபர் 2ம் தேதி, இதேப்போல சுரேஷ் என்பவன் குமரி என்ற தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்துள்ளான்[10].

விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து பிண த்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக வளர்மதியின் கணவர் செங்கோட்டையனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 04.11.2011 அன்று காலை திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தல் என்னும் இடத்தில் செங்கோட்டையனை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து செங்கோட்டையன் தனது மனைவியை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசில் கொடுத்து உள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:  எனது மனைவி வளர்மதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இது பற்றி நான் அவரிடம் கேட்ட போதெல்லாம் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. நான் அவளிடம் எதுவும் கேட்டால் என்னிடம் கோபித்து கொண்டு அடிக்கடி அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவாள். என்னை தவிக்க விட்டு விட்டு அவள் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததால் இது குறித்து அவளிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டதில் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு அவளின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாள். எனவே நான் சம்பவத்தன்று அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்றேன். அங்கு வளர்மதி மட்டும் தனியாக இருந்தாள் அவளிடம் வா நாம் குடும்பம் நடத்தலாம் என அழைத்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்து நான் அவளை அங்கு கிடந்த துண்டை எடுத்து அவளது கழுத்தை நெரித்து கொன்றேன். இவ்வாறு செங்கோட்டையன் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.


[6] தினமலர், துரோகம்இழைத்தமனைவியைகண்டம்துண்டமாகவெட்டிகொலைசெய்தேன்: கணவன்வாக்குமூலம், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=344208

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “அமெரிக்காவை மிஞ்சும் தமிழர்கள் / இந்தியர்கள்!”

  1. S. Ezhilan Says:

    டெலி-சீரியல் / சினிமா எடுப்பவர்களின் மனைவிமார், சகோதரிகள், மற்ற குடும்பப் பெண்களிடம், தங்களது ஆண்மக்களை ஒழுங்காக இருக்கவும், பெண்களை மதித்து வசனங்கள், கதைகள், பாட்டுகள், காட்சிகள் முதலியவை இருக்குமாறு பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும். இல்லையென்றால், ஒன்று அவர்களது குடும்பப் பெண்களையே நடிக்க வைத்து காசு பண்ண அறிவுரைக் கூறலாம், அல்லது மற்றவர்கள் அவ்வாறு செய்யலாம். அப்பொழுதுவாது திருந்துவார்களா என்று பார்ப்போம்.

    • vedaprakash Says:

      மக்கள் “தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பாடம் புகட்டவேண்டும். இன்றைய உலகத்தில் நுகர்வோர் நிலையில் தமக்கு வேண்டாதவற்றை அவர்கள் திணிக்க முற்படும் போது, அவற்றை நிராகரிக்க வேண்டும் என்ற உரிமை இருக்க வேண்டும்.

  2. M. Kalaichelvi Says:

    இது நிச்சயமாக நமது கலாச்சாரம், பண்பாடு மறந்த நிலைதான். பெண்ணை மீட்டு வந்தவனுக்கே டுரோகம் செய்ய அப்பெண் துணிந்தால் என்பது வியப்பாக இருக்கிறது. அப்படி வக்கிரபுத்தி பெண்ணாக இருந்தால், ஆரம்பத்திலேயே இல்வாழ்க்கை வேண்டாம் என்று துறந்து பழைய வாழ்க்கையையே நடத்தியிருக்கலாம், குழந்தகளைப் பெற்றெடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களது எதிர்காலத்தை பாத்தித்திருக்க வேண்டியதில்லை. கணவனையும் கொலைகாரனாக்கி இருக்கவேண்டிய அவசியம் இருக்காது.

  3. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2011/11/06/tamils-indians-excelling-americans-in-crimes/ […]

  4. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2011/11/06/tamils-indians-excelling-americans-in-crimes/ […]

  5. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2011/11/06/tamils-indians-excelling-americans-in-crimes/ […]

  6. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2011/11/06/tamils-indians-excelling-americans-in-crimes/ […]

M. Kalaichelvi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி