முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!
அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அப்பொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தார், ஆனால்……………
. அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அசாமில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அசாமில் மகளிர் அமைப்பினரிடையே உரையாற்ற வந்த ராகுலை, போன்டி என்ற காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்பு அளித்தார்.
ராகுலுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றதை விரும்பாத அவரது கணவர் இவரின் செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். இதை அடுத்து இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மனைவியை தீவைத்து எரித்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது போன்டிக்கு தீவைத்த அவரது கணவர் தானும் தீவைத்துக்கொண்டாரா என்பது குறித்து குழப்பாமான நிலை நிலவுவதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகியுள்ளன!
முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!
குறிச்சொற்கள்: கணவன், காங்கிரஸ், சீரழிவு, பெண்மை, மனைவி, முத்தம், ராகுல்
மறுமொழியொன்றை இடுங்கள்