Archive for the ‘கவர்ச்சி’ Category

“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்!

ஜூன்8, 2016

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்!

Srimanthudu-Lungi-Effect on USA Ladies

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்: ஜூன் 5, 2016 அன்றிலிருந்து இணைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் “கேரளா லுங்கி கார்ல்ஸ்” படம் பொய் தெரிய வந்துள்ளது[1]. கடந்த 2015-ல் வெளிவந்த மகேஷ் பாபு படம் ஒன்றில் லுங்கி அணிந்து அவர் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும், இதைக்கொண்டாடும் வகையில் மகேஷ் பாபுவின் அமெரிக்க ரசிகைகள் லுங்கி அணிந்து கொண்டாடியதாக அப்போது வெளிவந்த புகைப்படம் காட்டப்படுகிறது[2] என்றும் எடுத்துக் காட்டியது. இவ்விசயம் ஆந்திராவில் தெரிந்ததாகவே இருக்கிறது[3]. வெப்துனியா, “ஜீன்ஸ் தற்போது பெண்கள், அதிலும் கல்லூரி மாணவிகளுக்கு தவிற்க முடியாத ஒரு ஆடையாக மாறிவிட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் மாணவிகள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்”, என்று செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4]. “தாங்கள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை மாணவர்களும் அதிகமாக பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று சரக்கை சேர்த்துள்ளது[5]. ஆனால், இது உண்மையான செய்தியாக இருக்க முடியாது, ஏனெனில், அவர்கள் ஒரு நடனத்திற்கு பயிற்சி மேற்கொண்டிருக்கலாம்என்று “சக்ஷி போஸ்ட்” எடுத்துக் காட்டுகிறது[6].

St Theresa 1

புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது: இதையெடுத்து, தினமலரும் இப்படி சொல்கிறது[7] – இப்படி ஆரம்பித்து, “அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை என்று ஒருவர் பதிவு செய்தார். லுங்கியுடன் மாணவியர் இருக்கும் படம் உண்மை தான். ஆனால் செய்தி தான் தவறு. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு என்ற படத்தில் லுங்கியுடன் நடித்தார். அதைப்பார்த்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவரைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவியரும், லுங்கி அணிந்தபடி வெளியிட்டது தான் இந்த படம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.ஆனால், அதுவும் உண்மையில்லை என்று”, இப்படி முடித்துள்ளது[8]! புதிய தலைமுறை[9], “ஜீன்ஸ் தடைக்கு எதிராக கேரள கல்லூரி மாணவிகள் போராடுவதாக வெளிவந்துள்ள புகைப்படமாக, அந்தப் புகைப்படமே காட்டப்படுகிறது. மேலும், கேரள மாநிலம் தழுவிய அளவில் கல்லூரிகளில் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது என்றே கூறப்படுகிறது,” இவ்வாறு உண்மை நிலையினை எடுத்துக் காட்டியது[10].

St Theresa 2

ஶ்ரீமந்துடுவை தொடர்ந்த பிரேமம்: நிவின் பாலி [Nivin Pauly] என்பவர் எடுத்த “பிரேமம்” என்ற படத்தில் வந்த “நவீன் பாலி” போன்று லுங்கி கட்டிக் கொண்டு, போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவது கேரளாவில் வாடிக்கையாக உள்ளது. அதாவது, வேட்டி-லுங்கி கட்டுவது கூட நடிகர்கள் கட்டுவதால் பிரபலமடைகிறது போலும். இதனால், சென்ற வருடம், செயின்ட் தெரசா கல்லூரி மாணவிகள் ஓணம் விழாவின் போது லுங்கி கட்டிக் கொண்டு கல்லூரி விழாவில் பங்கு கொள்ள சென்றனர்[11]. இதனை “பிரேமம்-மேனியா” என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பினர். ஆக இந்த வருடமும், அத்தகைய ஒரு போட்டோவைப் போட்டு, பேஸ்புக்கில் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.  ஷாருக் கானின் லுங்லி டேன்ஸையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பர். இதெல்லாம் லுங்கிகள் விற்பனைக்கு மறைமுக ஆதரவு மற்றும் விளம்பரமா என்று கூட யோசிக்க வேண்டியுள்ளது.

Nivin Pauly Facebook

வைரல், வைரலாக்கும் முறை என்றால் என்ன?: வைரஸ் என்பது ஒரு கிருமி, அதில் கெட்டது அதிகம், நல்லது குறைவு. பொதுவாக கிருகிகளால் வியாதி வருகிறது. அதுமட்டுமல்லாது, கிருமிகள் வேகமாக பரவு தன்மையினைக் கொண்டுள்ளன. அதனால், வைரஸ் போன்று மிகவேகமாக பரவுகிறது என்பதை “வைரல்” என்ற ஆங்கில பிரயோகத்தில் எழுத்தாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதுவும் ஒரு கெட்டது, பொயானது, மக்களின் கவனத்தை தவறான திசைக்குத் திருப்புவது என்பதனால் ஒருவேளை, ஊடகக்காரர்களே “இந்த புகைப்படத்தை பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று குறிப்பிட்டார்கள் போலும். நல்லதை விட, கெட்டது சுலபமாக மக்களைப் பிடித்துக் கொண்டு விடும் என்பதனையும் இது மெய்ப்பித்து விட்டது.

Lungi Keralas traditional dress

பொய் சொல்லி பேஸ் புக்கில் பிரபலம் அடைய தேவையில்லை: சமூக வலைதளங்களில் இப்படி தமாஷாகவும், விமத்தனமாவும், பல பொய்களை உண்மைகளைப் போன்று பரப்பி வருகின்றனர். ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து விட்டால் போதும், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் யோசிப்பதேயில்லை, உடனே ஷேர் செய்து பாப்பி விடுகிறார்கள். ஒரே ஆள் நிறைய ஐடிக்கள வைத்துக் கொண்டும் இந்த பரப்பு-பிரச்சார வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கலவரம் ஏற்படக் கூடிய வகையில், படங்கள், வீடியோக்கள் பரப்பியதையும் நினைவில் கொள்ளலாம். பொதுவாக, சித்தாந்த ரீதியில் செயல்படுபவர்கள், இதைப் போன்று செய்து வருகிறார்கள். “போட்டோ-ஷாப்” என்றதை உபயோகப்படுத்தி, புகைப்படங்களை மாற்றி, உலவ விடுகின்றனர். அவை பார்ப்பதற்கு தத்ரூபமாக, உண்மை படம் போன்றே இருக்கும், ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே, அவ்வாறு இருக்க முடியாது என்று எவரும் தீர்மானித்துக் கொள்ளலாம்.

Deepika and Sunny in lungi dress

உடைக் கட்டுப்பாடும், சமூகமும், தெய்வீகமும்: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் தான், பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கண்டபடி ஆடைகள் உடுத்திக் கொண்டு வெளியில், பொது இடங்களில் வலம் வரக்கூடாது என்று வலியுருத்தப்பட்டது. ஆண்-பெண் கவர்ச்சி, ஈர்ப்பு மற்றும் இணைப்பு முதலியவை இயற்கையானவை என்றாலும், சமூகத்தில் அவற்றை கட்டுப் படுத்தி சடங்குகள் போன்றவற்றை வைத்து அங்கீகாரம் கொடுதுள்ளனர். அவற்றை எந்த சமூகமும், மதமும், சித்தாந்தமும் எதிர்ப்புத் தெர்விப்பதில்லை. ஆனால், அந்த கருத்தைக் கூட நவீன பெண்ணியத்துவ வீராங்கனைகள் உரிமை என்ற பெயரில் கடுமையாக சாடி எதிர்த்தனர். அக்கருத்தை வெளியிட்டவர்கள் இடைக்காலத்தவர், பிற்போக்குவாதிகள், பெண்களை அடிமைப்படுத்துகிறவர்கள், மனுவாதிகள் என்றெல்லாம் திட்டித் தீர்த்தனர். வரிந்து கொண்டு பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. ஆனால், கற்பு, கற்பின் தன்மை, கற்பழிப்பக்கப்பட்ட பெண்கள், கற்பழித்த கொடூரர்கள் இவர்களைப் பற்றி குறைவாகவே பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. இவர்களது ஆணவ, ஆக்ரோஷ, தீவிரவாத கருத்துரிமைகள், அவர்களது கருத்துரிமைகள் அடக்கப்பட்டு விட்டன.

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] http://www.ibtimes.co.in/reports-claiming-kerala-college-girls-wore-lungi-protest-against-jeans-ban-are-fake-681724

[2] http://www.telugupeople.com/news/article_00098921_Pic_TalkUSA_girls_Lungi_tribute_to_Srimanthudu.asp

[3] http://www.chitramala.in/maheshs-lungi-effect-on-usa-ladies-196731.html

[4] வெப்துனியா, லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்: ஜீன்ஸ்க்கு தடை விதித்ததால் நூதன எதிர்ப்பு!, செவ்வாய், 7 ஜூன் 2016 (14:45 IST)

[5] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-college-in-kerala-recently-banned-jeans-so-girls-wearing-lungi-116060700032_1.html

[6] Sakshipost, Picture of Kerala college girls clad in ‘lungi’ goes viral, Tuesday, 07 JUNE 2016 09:50.

[7] தினமலர்,  கேரள லுங்கி கேர்ள்ஸ்பாடாய்படுத்தும் சமூகதளம், பதிவு செய்த நாள் : ஜூன் 07,2016,22:20 IST.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1537727

[9] புதியதலைமுறை, ஜீன்ஸ் தடைக்கு எதிராக லுங்கி அணிந்து போராட்டம்: இணையத்தைக் கலக்கும் மாணவிகள் புகைப்படம், பதிவு செய்த நாள் : June 07, 2016 – 10:08 AM, மாற்றம் செய்த நாள் : June 07, 2016 – 10:12 AM

[10] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/29764/girls-from-kerala-college-protesting-against-a-ban-on-jeans-is-fake

[11] But, questions are also being raised over whether the news was true. It could be that the girls were preparing for a dance performance or could be aping Mahesh Babu’s Srimanthudu act. It may be recalled that, during the last year’s Onam festivities, girls from St Teresa’s College, Ernakulam went to campus clad in ‘lungis’. The girls were dressed like ‘Premam’ Nivin Pauly.

http://www.sakshipost.com/index.php/news/national/82599-picture-of-kerala-college-girls-clad-in-lungi-goes-viral.html

இளம்பெண்கள் / பெண்கள் கற்பழிப்புகளுக்கு, பெண்களும் காரணம் என்று கருத்துத் தெர்விப்பவர்களையும் தண்டிக்கவேண்டும் – கருத்து சொன்ன சமூகசேவகியின் மீது ஊடகங்கள் பாய்ச்சல்!

ஜனவரி30, 2014

இளம்பெண்கள் / பெண்கள் கற்பழிப்புகளுக்கு, பெண்களும் காரணம் என்று கருத்துத் தெர்விப்பவர்களையும் தண்டிக்கவேண்டும் – கருத்து சொன்ன சமூகசேவகியின் மீது ஊடகங்கள் பாய்ச்சல்!

To deter rape punish those blame women for rape.

To deter rape punish those blame women for rape.

பாலியல்  பலாத்காரம்  நடைபெறுவதற்கு  பெண்களின்  ஆடைகளும்,   அவர்களின்  நடவடிக்கைகளும்  ஒரு  காரணம்: பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு பெண்களின் ஆடைகளும், அவர்களின் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஆஷா மிர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்[1]. உடனே ஆங்கில ஊடகங்கள் இதனை பெரிது படுத்தி செய்திகளை வெளியிட்டன. தேசிய மகளிர் ஆணையமும் சளைக்காமல், அவரது பேச்சிற்கான காரணம் கேட்டுள்ளது[2]. இதற்கு முன்னர் கூட பலர் இவ்வாறு தமது கருத்தைக் கூறியுள்ளனர். ஆனால், நவீனகால ரீதியில், அவ்வாறு கருத்துத் தெரிவிப்பதே தவறு என்ற ரீதியில் அவர்கள் மீது, குறிப்பாக, ஊடகங்கள் பாய்ந்து வருகின்றன. இதனால், நமக்கேன் வம்பு என்று அவர்கள், தாங்கள் அவ்வாறு சொல்லவில்லை, ஊடகங்கள் மாற்றி எழுதி விட்டன, நாங்கள் என்றுமே பெண்களின் சுதந்திரத்திற்காகவே பேசி வருகிறோம், ஒரு வேளை நாங்கள் சொன்னது யாரையாவது பாதித்திருந்தால், பேசினதை வாபஸ் பெருகிறோம், ஏன் மன்னிப்பு கூட கேட்கிறோம், இதோடு ஆளைவிடுங்கள் என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

To deter rape punish those blame women for rape

To deter rape punish those blame women for rape

மருத்துவர் ஆஷாமிர்ஜியின் அலசல்: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடனான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. இன்று நாக்பூரில் கட்சியின் மகளிர் அணி தொண்டர்களிடையே பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆஷா மிர்ஜி, நாட்டில் நடைபெறும் பாலியல் பாலத்காரங்கள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தார். ஆனால், அவர் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார் என்று ஊடகங்கள் ஊதித்தள்ளின. அப்போது பேசிய அவர், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும், கடந்த ஆண்டு மும்பையில் சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Women commssion holds dress responsible for sex crimes

Women commssion holds dress responsible for sex crimes

நடைபெறுவதற்குபெண்கள்அணியும்ஆடைகளும், அவர்களின்நடவடிக்கைகளும், தேவையற்றஇடங்களுக்குசெல்வதும்ஒருகாரணம்[3]: டில்லி நிர்பயா வழக்கில், இரவு 11 மணிக்கு தனது நண்பருடன் அப்பெண் சினிமாவிற்கு போக வேண்டிய அவசியமா? 6 ஆண்கள் இருந்த பஸ்சில் தனியாக இந்த பெண் எதற்காக ஏற வேண்டும்? சக்தி மில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கை எடுத்துக் கொண்டால், அந்த பெண் பத்திரிக்கையாளர். எதற்காக மாலை 6 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான அந்த இடத்திற்கு செல்ல வேண்டும்?; என்று ஆஷா மிர்ஜி கேள்வி எழுப்பினார்[4]. மேலும், பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுவதற்கு பெண்கள் அணியும் ஆடைகளும், அவர்களின் நடவடிக்கைகளும், தேவையற்ற இடங்களுக்கு செல்வதும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆஷா மிர்ஜி, மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு பெண் மற்றும் குழந்தைநல மருத்துவர், இருபது வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர்[5]. அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கேட்ட பிறகும் தொடரும் பிரச்சார ரீதியிலான எதிர்ப்பு: பெண்களின் பாதுகாப்பும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாடு முழுவதும் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஷா இந்த கருத்தை கூறி உள்ளார். டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும், பெண்களின் பாதுகாப்பிற்கு சட்டத் திருத்தமும் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டங்களும் அதிகம் வெளி வர துவங்கி உள்ள நிலையில், இவரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது[6].  இதைத் தொடர்ந்து இந்த பேச்சுக்கு எழுந்த கண்டனங்களை கண்ட பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் சில ஆங்கில ஊடகங்கள் விடாப்பிடியாக, அவரது கருத்து பேரதிர்ச்சியாக உள்ளது என்று தொடர்ந்து விவாதம், செய்தி முதலியவற்றை போட்டு வருகிறது[7]. குறிப்பாக “என்டிடிவி” இது ஜனவரியின் மிகப்பெரிய செய்தி என்று குறிப்பிட்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றது[8]. கற்பழிப்பிற்கு பெண்களை, பெண்களே காரணம் என்று குறிப்பிடுவது ஏன் என்று வாதத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது[9].

சுப்ரியாசுலே தனது கருத்தை சொன்னது: சுப்ரியா சுலே, ஆஷா பேசும் போது, பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்ததால், இது குறித்து சுப்ரியா சுலேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: “ஒருவர் பேசிக்கொண்டு இருக்கும்போது தடை செய்வது எனக்கு பழக்கமில்லை. சிறுவயதில் இருந்தே பெற்றோர் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயம் யாரையும் குறுக்கிட்டு தடை செய்யக்கூடாது என்பதுதான். ஆஷா எனது தாயாரின் வயதுக்கு ஒப்பானவர். தனக்கு சரியென்று மனதில் பட்டதை அவர் பேசியிருக்கிறார். அவர் பேசி முடித்த பின்னர் நான் இது குறித்து பேசினேன். இது அங்கிருந்த அனைத்து செய்தியாளர்களுக்கும் தெரியும். தேசியவாத காங்கிரஸ் கட்சி இருபாலரையும் சமமாக பார்க்கும் கட்சி. ஆணோ பெண்ணோ, சுதந்திரமாக எங்கு சென்றாலும், எந்த நேரத்துக்கு சென்றாலும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும். அதை உறுதியும் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். மிர்ஜே இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டுள்ளதால் இப்பிரச்னையை இதோடு விட்டுவிடுங்கள்”, இவ்வாறு அவர் கூறினார்[10].

முசபர்நகர் கற்பழிப்பை மறைத்த ஊடகங்கள்: பெண்கள் கற்பழிப்பிற்கு பெண்களே காரணம் என்று சொல்பவர்களை முதலில் தண்டியுங்கள் என்று சிலர் கிளம்பியுள்ளார்கள்[11]. உடையைக் கண்டிக்காதே, கற்பழிப்பவர்களைக் கண்டி, என்றெல்லாம் பேச ஆரம்பித்தி விட்டார்கள். தில்லி கற்பழிப்பிற்கு பிறகு தெருக்களில் ஆர்பாட்டம் நடந்தது. அதற்குப் பிறகு ஏகப்பட்ட கற்பழிப்புகள் நடந்தன, நடக்கின்றன, ஆனால், ஆர்பாட்டங்கள் அடங்கிவிட்டன. முசாபர்நகர் கலவரத்திற்கு காரணமே, கற்பழிப்பு என்றாலும், ஓட்டுவங்கி அரசியல் காரணத்திற்காக “மத கலவரம்” என்ற போர்வையில், அதனை திசைத் திருப்பியது. இப்பொழுதும்கூட, இதே “என்டிடிவி” முஸ்லிம்கள் கூடாரங்களில் தவிக்கிறார்கள் என்று பேட்டி காணுவதை திரும்ப-திரும்பக் காட்டிக் கொண்டு, கற்பழிப்பு உண்மையை மறைத்து வருகின்றது. ஆனால், அதே “என்டிடிவி” இப்பொழுது வீருகொண்டு எழுந்து பிரச்சினையை கிளப்பிவிட பார்க்கிறது.

வேதபிரகாஷ்

© 30-01-2014


[1] தினமலர், பலாத்காரம்நடப்பதற்குபெண்களும்ஒருகாரணம்: என்.சி.பி., பெண்தலைவர்கருத்து, ஜனவரி 30, 2014.

[10] தினகரன், மகளிர்கமிஷன்உறுப்பினர்பேச்சால்சர்ச்சை, பாலியல்பலாத்காரத்துக்குபெண்களேகாரணம், ஜனவரி 30, 2014.

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)

ஜனவரி18, 2014

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)

 

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சுனந்தா புஷ்கரின் முதல் திருமணம்  1988-89: ஜனவரி 1 1962 ம் தேதி பொமை என்ற இடத்தில் காஷ்மீரில் பிறந்த சுனந்தா புஷ்கர், ராணுவம் மற்றும் நிலசுவாந்தார்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். லெப்டினென்ட் கர்னல் புஷ்கர் நாத தாஸ் என்பவரின் மகள். 1983ல் அவர் ஓய்வு பெற்றார். இவரது இரண்டு சகோதர்களில் ஒருவர் வங்கியிலும், மற்றொருவர் ராணுவத்திலும் வேலைசெய்கிறார்கள். 1986-88 ஆண்டுகளில் ஶ்ரீநகரில் உள்ள அரசு கல்லுரியில் படித்தார். அப்பொழுது சஞ்சய் ரைனா என்பரை மணந்து கொண்டார். இருப்பினும் 1989ல் விவாகரத்தில் அவர்களது உறவு முடிந்தது.

 

Sasi, Sunanda and sons through Tilothama

Sasi, Sunanda and sons through Tilothama

சுஜித் மேனனுடன்  1991ல் நடந்த இரண்டாவது திருமணம்: சுனந்தாவிற்கு ஏற்கெனவே சுஜித் மேனன் என்பவருடன் நட்பிருந்தது. வியாபாரத்தில் நாட்டக் கொண்ட சுனந்தாவை துபாய்க்கு அழைத்துச் சென்றது சஞ்சய் ரைனா இல்லை, சுஜித் மேனன் தான். முதலில் நண்பராகவே மதித்து வந்த சுனந்தா, காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். ஆனால், சுஜித் மேனனோ அவரிடத்தில் இருக்கும் பணம் தனது வியாபார ஆசைகளுக்கு உதவும் என்ற கனவுடன் இருந்தார். துபாய்க்குச் சென்ற அவர், அங்கு சுஜித் மேனன் என்பவரை 1991ல் மணந்து கொண்டார்.

Sunanda Sasi

பொமை, காஷ்மீரத்தில் நடந்த தீவிரவாதத்தில் அவரது வீட்டிற்கு தீவைத்தது,  குடும்பம் வெளியேறியது: 1990ல் பொமையில் நடந்த கலவரத்தில், அங்கிருந்து இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். பரமுல்லா மாவட்டத்தில் பிப்ரவரி 21 2009ல் நடந்த ராஷ்ட்ரீய ரைபில்ஸ் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்[1]. ராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. பொமை-சோப்புர் வீதிகளில் ஆர்பாட்டக்காரர்கள் தெருக்களில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ரகளை செய்தனர்[2]. இதை சாக்காக வைத்துக் கொண்டு, இந்துக்களில் வீடுகள் தாக்கப்பட்டன. ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது[3]. ஆனால், இந்துக்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. வீடுகளுக்கும் நெருப்பு வைக்கப் பட்டது. இதனால் இந்துக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. இதெல்லாம் 2009ல் நடந்தாலும், 1990லும் அவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால், சுனந்தா குடும்பத்தினர் பொமையை விட்டு வெளியேறினர்.

shashi_tharoortwitter0220141501(1)

துபாயில் தனது திறமையால் வளர்ச்சியடைந்த வியாபாரம்: இதற்குள், நவம்பர் 1991ல் சுஜித் மேனன் – சுனந்தா புஷ்கர் தம்பதிகளுக்கு சிவ் என்ற மகன் பிறந்தான். “எக்ஸ்பிரஷன்ஸ்’ ஏன்ற கம்பெனியைத் துவக்கி துபாயில் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு மற்றும் பேஷன் ஷோக்கள் நடத்தியதில் பணம் சம்பாதித்தார். பொருட்கள் அறிமுகம், பலவித நிகழ்ச்சிகள் ஏற்பாடு, பேஷன் ஷோக்கள் முதலியவற்றை ஹேமந்த திரிவேதி, ரேஹா பிள்ளை, விக்ரம் பட்னிஸ், ஐஸ்வர்யா ராய் போன்றோருடன் நடத்தினார். மம்மூட்டியை வைத்து நடத்திய ஷோவில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால், சுஜித் மேனனுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டது. போதாகுறைக்கு 1997ல் தில்லியில் நடந்த ஒரு விபத்தில் சுஜித் மேனன் இறந்தார். இதனால், இவருக்கு மிரட்டல் தொலைபேசிகள் வர ஆரம்பித்தனர். தனது கணவனின் கடனை இவர் தீர்க்க வேண்டியதாயிற்று. அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் உதவி செய்தனர்.

 

Tilothama - first wife of Sasi

Tilothama – first wife of Sasi

சசிதரூரின் முதல் மனைவி திலோத்தமா முகர்ஜி: சசி முதலில் இவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கனிஷ்க் மற்றும் இஷான் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 2007ல் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திலோத்தமா ஒரு பேராசியராக வேலை செய்து வந்தார். இதனால் கொல்கொத்தா மற்றும் நியூயார்க் நகரங்களில் பிரபலமாக இருந்தார். இதனால், சசிக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இதைப் பற்றி ஒரு பேட்டியிலும் வெளிப்படையாக தெரிவித்தார். இதனால், இவர்கள் உறவு விவாகரத்தில் முடிந்தது.

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

சசிதரூரின் இரண்டாவது மனைவி கிரிஸ்டா கையில்ஸ் 2007[4]: கிரிஸ்டா கைல்ஸ் என்ற இரண்டாவது மனைவியுடன் துபாய்க்கு வந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது, இவருக்கும் கிரிஸ்டா கைல்ஸ் தொடர்பு ஏற்பட்டது. பிறகு 2007ல் திருமணம் செய்து கொண்டனர்[5]. ஏற்கெனவே திலோத்தமா முகர்ஜியை [Tilottama Mukherjee] திருமணம் செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப் பட்டது. கிரிஸ்டாவுடன் தாம்பத்யம் இருக்கும் போதே, சசி சுனந்தாவுடன் நெருக்கமாக இருந்த செய்திகள் வெளியாகினனுதய்பூரில் இருவரும் தங்கியிருந்தபோது, கிரிஸ்டா கைல்ஸ்-சசிதரூர் பிளவு நிரந்தரமானது. தில்லி மற்றும் துபாயில், சுனந்தா சசி தரூரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து வந்தார். இதனால், தரூருக்கு பாதிப்பு ஏற்பட்டது[6].

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

மூன்றவது மனைவியாக சுனந்தா புஷ்கர்  2010: இருப்பினும் 2010ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் சசி தரூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். அப்பொழுது தான், சுனந்தா ரூ 70 கோடிகளை ஐபிஎல் வியாபாரத்தில் முதலீடு செய்தார். ஆனால், ரூ 70 கோடிகளுக்கான பங்குகளை ரூ 1530 கோடிகளுக்கு விற்றுவிட்டார். இதனால், சசி தரூர் தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற பேச்சு எழுந்தது, இதனால் பதவியும் பறிபோனது. இருப்பினும் மனிதவள மேம்பாட்டுத் துறை பிறகு அளிக்கப்பட்டது.

 

Tarar-sasi-sunanda twitting break of love

Tarar-sasi-sunanda twitting break of love

சுனந்தாவின் வியாபாரத் திறமை: பணக்கார குடும்பத்தில் பிறந்து, வியாபார நுணுக்கங்களை அறிந்திருந்ததால், பெண்ணாக இருந்தாலும், வெற்றிகரமாக வியாபாரத்தை செய்து வந்தார். ஆனால், ஆண்கள் அவரை ஏமாற்றி வந்துள்ளனர் என்று தெரிகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, காதலித்து திருமணம் செய்து கொண்ட முதல் கணவருடன் வேறுபாடு ஏற்பட்டதால் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு இரண்டாவது கணவரோ, ஏகப்பட்ட கடனை வைத்து விட்டு விபத்தில் இறந்து போனார், அதிலிருந்து மீளவும் இவர் படாத பாடு பட்டார். அப்பொழுது சிவ் குழந்தையாக, சிறுவனாக இருந்தான். அந்த சோதனையிலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. திருமணம் ஆகியும், சசிதரூர் மூலம் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தன. கேப்ரியிலா டெமிட்ரியாடிஸ் [Gabriella Demetriades] விசயத்தில் லலித் மோடி விசா கொடுக்க வேண்டாம் என்று வலியிருத்தியும் சசிதரூர் அந்த அழகிக்கு விசா கொடுத்தார்[7]. சுனந்தாவின் விவகாரத்தையும் லலித் மோடிதான் வெளிப்படுத்தினார்[8].

With Lalit Modi

கடைசியாக மெஹர் தரார்Mehr Tarar)[9]: தரூரின் பெண் பித்தம் இப்பொழுது மெஹர் தராரின் பின்னால் சென்றதால், அதன் விளைவு சுனந்தாவின் மர்மமான இறப்பில் முடிந்துள்ளது. சுனந்தா புஷ்கர் தனது கணவர் சசி தரூரை பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரான மெர் தரார் பின் தொடர்வதாக தனது டுவிட்டர் வலை தளத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அவர், மெர் என்ற பெண், தரூர் மற்றும் எனது கம்ப்யூட்டரில் ஊடுருவி (ஹேக்கிங் செய்து) உள்ளார்.  “மெர் தொடர்ந்து எனது கணவரை பின் தொடர்கிறார்அந்த பெண் ஒரு .எஸ்.. உளவாளிஎங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லைபாகிஸ்தான் .எஸ்.. உளவாளியான ஹேக்கர் எங்களை தொடர்கிறார்”, என குறிப்பிட்டு இருந்தார். அவர் மெர் தரார் பெயரிட்டு எழுதியுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், “ஒரு பெண் துணிச்சலுடன் இந்தியர் ஒருவர் மீது காதலுடன் இருக்கிறார்தயவு செய்து சசி, என்னை விலகி போக செய்து விடாதீர்நான் கெஞ்சி கேட்கிறேன்சசி உங்களை நான் காதலிக்கிறேன்”, என தெரிவித்து உள்ளார். அதன் பின் மற்றொரு டுவிட்டர் செய்தியில், டுவிட்டரில் பின் தொடர்பவர்களை கவருவதற்காக அவர் (தரார்) செய்வதென்றால் இது மிக கேவலமான ஒன்று.  அவரை குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறேன்.

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

ஒரு நாளைக்கு 20 முறை கால் செய்வது என்பது அவரை (தரூர்) பின் தொடர்வது தானே”, என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இன்னொரு டுவிட்டர் செய்தியில், “சசி தரூரும், நானும் மிக மகிழ்ச்சியாக உள்ளோம்இது அவரது (தரார்) தகவலுக்காகஇதனை அறிந்து அவர் (தரார்) வருத்தப்படுவார்தற்போது நான் நோய்வாய்ப்பட்டு உள்ளேன் என கருதுகிறேன்எனவே அதற்கு சிகிச்சை பெற செல்ல இருக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

 

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

 

டுவிட்டரில் மெர்தரார்[10]: சுனந்தாவின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து தரார் எழுதியுள்ள டுவிட்டர் செய்தியில், “என்னால் நம்ப முடியவில்லைஒரு பெண்ணின் துணிச்சல்ஒரு பெண் தனது கணவரை மற்றொரு பெண்ணுடன் தொடர்புபடுத்துவது என்பது எப்பொழுதும் மிக மோசமான நோயாகும்அவர் செய்த திருமணத்திற்கு உரிய மரியாதை இது இல்லை”, என தெரிவித்துள்ளார். தரார் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில், “அந்த பெண்ணின் அறிவு அவரது ஆங்கில அறிவு மற்றும் ஸ்பெல்லிங்கை (எழுத்து) காட்டிலும் மிக பலவீனமாக உள்ளதுஉங்களது அறிவை மேம்படுத்தி கொள்ளுங்கள்”, என கூறியுள்ளார். மற்றொரு டுவிட்டர் செய்தியில் தரார், “நான் செய்த ஒரே காரியம் அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்தது தான்ஆனால், அதன் பின், ஒரு பெண் (சுனந்தா) என்னை .எஸ்.. உளவாளி என தேசிய சேனல் ஒன்றில் கூறுவதை நான் கேட்டேன்”, என குறிப்பிட்டு உள்ளார். எது எப்படியாகிலும், சுனந்தா இறப்பின் பின்னால் எது என்பது விளக்கப்பட வேண்டியுள்ளது.

 

unandas tweet to Omar Abdullah

unandas tweet to Omar Abdullah

 

வேதபிரகாஷ்

© 16-01-2014


[2] However, sources said thousands of people took to streets at Bomie-Sopore and staged a massive demonstration on Sunday morning demanding punishment for security personnel, who allegedly fired at the youths on Saturday evening killing two of them. The protesters carrying the body of one of the deceased also demanded withdrawal of troops from the area. http://articles.timesofindia.indiatimes.com/2009-02-22/india/28001056_1_sopore-town-mohammad-amin-tantray-enquiry

[5] At the UN, which is a formal, hierarchy-driven set-up, Tharoor had not kicked off so many controversies. But even there his personal life came in for some tongue-wagging, as he got into a relationship with Christa Giles, a Canadian citizen working at the UN, and later married her. When appointed head of the public affairs division in the UN headquarters in New York, he moved his girlfriend to the office next to him. But as a rule he has been above board.

http://www.dnaindia.com/sport/report-shashi-tharoor-a-man-in-love-with-himself-1372620

[6] It was a whirlwind affair and to Tharoor’s credit, he outed Sunanda almost immediately, especially in Delhi, as the official consort of the MoS, external affairs. Their eagerness to be accepted in the power capital was evident with their presence at every social do and event. Sure, it’s hard to make friends when you are living between two cities, but as a hostess sniffs, “Sunanda invites people she meets on a plane for an intimate dinner with the minister. It may be first class but this is not Dubai, this is Delhi, where pedigree counts, not wannabe.” http://www.outlookindia.com/article.aspx?265098

[8]E-mails between Modi and the Minister’s office in January show that the model’s visa was due to expire in February 2010 and Modi wanted Tharoor’s office to ensure that her request for the visa’s renewal be turned down. The Ministry didn’t oblige — and Demetriades did get a visa. When asked why he wanted her visa blocked, Modi declined to comment.

http://archive.indianexpress.com/news/modi-told-tharoors-office-to-deny-visa-to-this-model/606183/

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

ஓகஸ்ட்21, 2013

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

Polygamy-chennai-fiest-wifw-complaint-2013சமயபேதம் இல்லாத  –  ஒழுக்கமில்லாத சமுதாய சீரழிவுகள்: கோயம்புத்தூரில் பிலிப் ஜோசப் என்றால், சென்னையில் ஒரு ஜெயசங்கர் அதேபோல, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. இவ்வாறு “நான்கு திருமணம்” செய்திகள் வருவது அதிகமாகி வருகிறது. பொதுவாக முஸ்லிம்கள் “நான்கு திருமணம்” செய்து கொள்கிறார்கள், “நான்கு மனைவிகள்” வைத்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு, பேசுவது உண்டு. ஆனால், இப்பொழுது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அம்முறையைப் பின்பற்றும் போது, மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு தார்மீக உணர்வு கிடையாதே? முதலில் அடுத்தவர் மீது குறை சொல்பவர்கள் தாங்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமே?

Jeyasankar and Kalaimagal - the first wife who lodged complaint22  வயதோன மகனுடன்  43  வயதான பெண் வந்து கணவன் மீது புகார்: சேப்பாக்கம் சி.என்.கே சாலையை சேர்ந்தவர் கலைமகள் (43), எம்.ஏ படித்தப் பெண். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்[1]. அந்த பெண் தனது 22 வயது மகனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். புகார் கொடுத்தப் பின்னர், பின்னர், வெளியே வந்த கலைமகள் கூறியதாவது[2]:

1990ல் கலைமளை திருமணம் செய்து கொண்டது: “நான் பெரம்பூரை சேர்ந்தவர். தந்தை போலீசாக பணியாற்றியவர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஜெயசங்கர் (48). 1990 செப்டம்பர் 9ல் திருமணம் நடந்தது. என்ஜினீயரிங் படித்துள்ள ஒரு மகனும்,  9–வது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.

 Jeyasankar married thrice and going for fourth

1996ல் ரமணவல்லியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது: 1996ல் அவருக்கும் சேத்துப்பட்டை சேர்ந்த ரமண வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பெரியமேடு சார்பதிவாள்ளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவரது பெயரில் ரேஷன் அட்டையும் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 மேகலா தேவியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டது: தொடர்ந்து காரணீஸ்வரர் பகோடா தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மேகலா தேவி என்பவருடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இங்குதான் நிரந்தரமாகத் தங்கியுள்ளார்..

 ஒரே கணவன் மூன்று மனைவிகளோடு மூன்று குடும்ப ரேஷன் கார்டுகளைப் பெற்றது: என்னோடு சேர்த்து, 3 மனைவிகளுக்கும் தனித்தனி ரேஷன் கார்டும் உள்ளது. இதுபற்றி எனது கணவரிடம் கேட்டபோது, உனக்கு நான் எந்த குறையும் வைக்கவில்லை. நான் எத்தனை மனைவிகளுடனும் வாழ்வேன், நீ அதுபற்றி எதுவும் கேட்க கூடாது என்கிறார். அடித்துத் துன்புறுத்தியுள்ளார்[3].

 நான்காவதாக ஒரு மைனர் பெண்ணை கல்யாணம் செய்யப் போவது: மேலும், 17 வயது பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கணவர் கூறி வருகிறார்இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[4]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்”, என்று மிரட்டுகிறார். இதுகுறித்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை நான் காப்பாற்றுவேன். போலீஸ்காரர் மகளின் புகாருக்கே நடவடிக்கை இல்லை. இதனால் அவமானப்படுகிறேன்”, இவ்வாறு கலைமகள் வேதனையுடன் கூறினார்[5].

கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால்,  மிரட்டல்: ஜெயசங்கர் (43) பி.ஏ பட்டதாரி, இளைஞர்களுக்கு “பிட்னஸ் சர்டிபிடிகேட்” வாங்கித் தந்து, கமிஷன் பெற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். நிறைய கமிஷன் வந்ததால், பெண் பித்து பிடித்து, கல்யாணம் செய்து கொண்டே போகும் கணவன் புதிய சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறான் போலும். ஒரு நாளிதழ்,இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[6]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்என்று ஜெயசங்கர் மிரட்டினார் என்றுள்ளது. தினகரன் 2000 என்கிறது, தினத்தந்தி 1000 என்கிறது. தினமலர் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு படு குஷி போலிருக்கிறது.

Three ration cards issued to him with three wivesமூன்று குடும்ப அட்டைகள் எப்படி”  என்பது சரி,  இரண்டாவதாக,  மூன்றவதாகப் பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?: “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்று தினமலர் கேள்வி கேட்டு கட்டம் போட்டு காட்டியுள்ளது. “திருமணம் முடிந்து புதிய அட்டை கேட்டால், பல் ஆவணங்களை கேட்டு, இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட துறை, ஜெயசங்கருக்கு அட்டை கொடுத்தது எப்படி”, என்று கேட்டுள்ளது. “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாக பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?

  • ஒன்று முதல் மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எதேபோல, மூன்றாம் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்று முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் மறுபடியும் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எல்லாமே – இரண்டு-மூன்று பதிவு திருமணம் என்றால், அத்தகைய பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்றும் கேள்வி கேட வேண்டுமே?

கமலஹாசன் காட்டிய முறையை தமிழர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் போலும். தமிழச்சிகளும் ராதிகாவின் திருமுண முறையை, குஷ்புவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

21-08–2013


[1] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும் ,பதிவு செய்த நேரம்: 2013-08-20 10:33:52,

[2] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும், http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=59563

[3] தினமலர், செவ்வாய், 20-08-2013, பக்கம்.6, சென்னைப் பதிப்பு.

[4] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner

[6] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

ஜூலை28, 2013

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

Rahul Gandhi meets potential Youth Congress candidates

सौ टका टंच माल – சௌ டகா டஞ்ச் மால்[1]: மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்கார் பாராளுமன்ற தொகுதியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், அந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனாட்சி நடராஜன் கடந்த தேர்தலில் பிஜேபியை வென்று எம்.பி ஆனார். ராகுலின் முக்கியமான குழுக்களில் உறுப்பினர்.Meenakshi Natarajan with Rahul.2 ராகுலுக்கு வேண்டியவர்[2]. விழாவில் பேசிய திக் விஜய்சிங் தனது பேச்சின் இடையே திடீர் என்று பெண் எம்.பி.யை வர்ணித்தார். முதலில் அவர் பேசுகையில், “இந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் கடினமான உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர், தொகுதி மக்களுக்காக இங்கும் அங்கும் ஓடி உழைப்பவர். ஆனால் நான் சமயத்துக்கு தக்க படி நடந்து கொள்ளும் அரசியல் வாதி”, எனக் கூறினார். இறுதியில் திடீர் என்று ‘‘அவர் அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண்’’ [सौ टका टंच माल[3] = sau taka tunch maal] என்று வர்ணித்தார்[4]. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது[5]. ஊடகங்கள் இதனை பெரிது படுத்தியது எனலாம்.

Meenakshi Natarajan with Rahul.3

சலசலத்த செய்தி அடங்கிவிட்டது: திக்விஜய்சிங் எப்பொழுதுமே அடாவடித் தனமான பேசக்கூடியவர் தாம். பொதுவாக பிஜேபி, சங்கப் பரிவார் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்பார். இது போல் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கண்டு கொள்ளாது. தற்போது அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திக்விஜய்சிங்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. திக்விஜய்சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். ரேணுகா சௌத்ரி என்ற, சோனியாவுடன் நடனம் ஆடிய அம்மையாரும், இதைப் பற்றியெல்லாம் ஒன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.

Meenakshi Natarajan.3

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு: ஹிந்தியில் வார்த்தைகளை பலவிதமாக உபயோகப் படுத்தலாம், புரிந்து கொள்ளலாம். நடைமுறையில், சினிமா தாக்கத்தால், பல வார்த்தைகள் இரண்டு பொருள்களுடன் பிரோகிக்கப்படும் நிலை வந்து விட்டது. சில நல்ல வார்த்தைகள் கூட உபயோகிக்க பயமாக இருக்கிறது. ஏனெனில், சாதாரணமான வார்த்தைகளுக்கு அசிங்கமான, ஆபாசமான அர்த்தத்தை ஏற்றிச் சொல்லப்பட்டு, பிரயோகப்படுத்தப் பட்டு வருவதால், அவ்வார்த்தையை உபயோகப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. இல்லை, பொது இடங்களில் வார்த்தையை உபயோகித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற நிலையும் வந்து விட்டது. இருப்பினும், வள்ளுவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது:

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு”

Meenakshi Natarajan with Rahul.4

திக்விஜய் சிங் கொடுத்த விளக்கம்: இங்கு திக்விஜய் சிங் சொல்லியிருப்பதால் தான் விஷயம் விவகாரமாகி இருக்கிறது. கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று, யாதாவது சொல்லிவிடுவாரோ என்று ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன போலும். . இதற்கிடையே திக்விஜய் சிங் பெண் எம்.பி.யை அப்படி வர்ணிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் எம்.பி.யை ‘‘சுத்த தங்கம்’’ என்று தான் சொன்னேன். ஆனால் டெலிவிஷன் செய்தியில் தவறான அர்த்தத்தில் சொல்லி விட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Meenakshi Natarajan with Digvijay Singh

மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை: திக்விஜய்சிங் பேச்சுக்கு மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அவர் கூறும் போது, ‘‘திக்விஜய் சிங்கின் பேச்சை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர் எனது பணியை வரவேற்று பாராட்டினார். ஆனால் கொடூர புத்தி கொண்டவர்கள் தான் அவரது பேச்சை திரித்து கூறுகிறார்கள். அந்த விழாவில் 15 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அவர்கள் சரியான கண்ணோட்டத்தில் தான் பேச்சை கேட்டார்கள்’’ என்றார்[6].

Print

வேதபிரகாஷ்

© 28-07-2013


[1] மெட்ராஸ் பாசை அல்லது சினிமா பாசையில் “பிகரு”, “பார்ட்டி” என்பது போன்ற வார்த்தை.

[2] போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவருடைய பின்னணியில் பலத்துடன் இருப்பவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

[6] Natarajan said she wasn’t offended. “His statement has to be looked at in complete perspective. He has appreciated my work.” She told TOI the comments were being misinterpreted by mischievous elements. “It’s the work of an evil mind. There were about 15,000 people at the meeting who took it in the right spirit.”

http://timesofindia.indiatimes.com/india/Digvijaya-calls-Meenakshi-Natarajan-sau-tunch-maal-rapped-for-sexist-remark/articleshow/21380305.cms?