பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்!


பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14111

Important incidents and happenings in and around the worldதிருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்: “சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன். திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார்.

பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை: இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை. இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“,  இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

———————————————————————————

தொடர்ந்து எப்படி இவ்வளவு பாதிரியார்கள் அதேமாதிரியான குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு, கிறிஸ்தவ பாதிரியார் கைது

மீஞ்சூர், செப்.6- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

அனாதை காப்பகம்: மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கற்பழிப்பு: இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைது: திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, எந்த பாதிரியும் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை!

அனைவரையும் ஆண்டவந்தான் காப்பாற்றவேண்டும்!

இளம்பெண்ணை கடத்திய பாதிரியார் பொள்ளாச்சியில் குடும்பத்துடன் கைது
ஜூலை 16,2008,00:00  IST

Important incidents and happenings in and around the world

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இளம்பெண்ணை கடத்திய பாதிரியார், அவரது மனைவி உள்பட நான்கு பேரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ஆனந்தி என்கிற ஆராதனாவை கடத்தியதாக, திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் உட்பட நான்கு பேர் மீது அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த அன்புநாதன்,குடும்பத்துடன் ஊஞ்சவேலாம்பட்டி பஸ் ஸ்டாபில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் சென்று அவர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாதிரியார் அன்புநாதன் (33), அவரது மனைவி மாலதி (29), அக்கா தெய்வானை (40), அக்கா மகன் வீரமுத்து (28) ஆகியோரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி ஜே.எம்., எண் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.போலீசார் கூறுகையில், “பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகனின் மகள் ஆனந்தி என் கிற ஆராதனாவை திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டது.

அன்புநாதனின் மனைவி மாலதி, முருகன் வீட்டுக்குச் சென்று ஆனந்தியை கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அடுத்த நாளில் இருந்து ஆனந்தியை காணவில்லை.அன்புநாதனின் அக்கா தெய்வானை, அவரது மகன் வீரமுத்து என்கிற அகஸ்டின் ஆகியோர் ஆனந்தியை வீட்டில் இருந்து அழைத்து சென்றதாக புகார் செய்துள்ளனர்’ என்றனர்.போலீஸ் விசாரணையில், “ஆனந்தியை நாங்கள் கடத்திச் செல்லவில்லை, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று அன்பு நாதன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகளிர் போலீசாருக்கு கடந்த வாரம் வந்த கடிதத்தில், “என்னை யாரும் கடத்தவில்லை, என்னை கடத்தியதாக அன்புநாதன் மீது பழி போடுவது தவறானது’ என்று ஆனந்தி பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை யார் அனுப்பியது, காணாமல் போன ஆனந்தி எங்கிருக்கிறார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

பாதிரியார் மீது கற்பழிப்பு புகார் : திருமணத்திற்கு போலீஸ் தடை
மே 27,2008,00:00  IST

Front page news and headlines today

சீர்காழி: சீர்காழி அருகே இளம் பெண்ணை கற்பழித்து, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சித்த பாதிரியாரின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சீர்காழி அடுத்த சாயாவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் பிஷால்லா எஸ்கோல்(32). இவர் மணிக்கிராமம் என்ற இடத்தில் “பெஸ்தில் பெந்தேகொஸ்தே’ என்ற பெயரில் சபை நடத்தி வருகிறார். இவரது சபைக்கு வரும் பெண்களிடம் ஊழியம் என்ற பெயரில் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வந்தனர்.

தகாத உறவு: வடமணி கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரது மகள் மரியசெல்வி (21). என்பவரை படிக்க வைப்பதாக கூறி சில ஆண்டுகளாக சபையில் தங்க வைத்து அருகில் திருவெண்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 வரை படிக்க வைத்தார். அவரையே திருமணம் செய்து கொள்ள கடவுள் உத்தரவிட்டுள்ளதாக கூறி மரியசெல்வியிடம் நீண்ட நாட்களாக தகாத உறவு கொண்டுள்ளார்.சில நாட்களுக்கு முன் பிஷால்லா திருமணத்திற்கு பெண் பார்ப்பது தெரிய வந்ததும் மரியசெல்வி பிஷால்லாவிடம் கேட்டுள்ளார். “வாழ்ந்தால் உன்னோடு தான்’ என்று பிஷால்லா தான் தயாராக வைத்திருந்த விஷப்பாட்டிலை மரியசெல்வியிடம் காண்பித்து சந்தேகப்பட்டால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறியுள்ளார்

இதனை நம்பிய மரியசெல்வி கடந்த ஏப்ரல் 13ம்தேதி விஷத்தை அருந்தியுள்ளார். சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மரியசெல்வி தமது குடும்பத்தினரோடு தங்கியுள்ளார். இந்நிலையில் பாதிரியாருக்கும்,கீழமாத்தூரைச் சேர்ந்த தமிழ்மணி(எ) பிளாஸ்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடக்க இருந்தது.

உணர்ச்சியை தூண்டி : அதிர்ச்சியடைந்த மரியசெல்வி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே செக்ஸ் சில்மிஷங்களை செய்வார். வீடியோவில் பலான படத்தை ஓடவிட்டு உணர்ச்சியை தூண்டி கற்பழித்ததாக மரியசெல்வி புகாரில் தெரிவித்துள்ளார். இரு தரப்பையும் அழைத்து விசாரித்த போலீசார் நேற்று நடக்க இருந்த திருமணத்திற்கு தடை விதித்தனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்!”

  1. M. Nachiappan Says:

    ஏற்கெனவே ஒரு “கன்னியாஸ்திரி” எனப்படுகின்ற கிருத்துவமத பெண் ஊழியர் எப்படி பாதிரிமார்கள், கிருத்துவ குருக்கள் முதலிய ஆண் வர்க்கத்தினர் தம்மை தங்களது காம இச்சைகளுக்கு உபயோகப்படுத்திக் கொண்டு வெளியில் வேறு மாதிரி வேடம் போடுகிறார்கள் என்பதை தோலிரித்திக் காட்டியுள்ளார்.

    “பிரம்மச்சரியம்” என்ற ஐம்புலன்களை அடக்கி ஆண்டவன் பெயரால் மக்களுக்கு சேவை செய்யவேண்டித்தான் அத்தகைய முறை கடைபிடிக்கப்பட்டது.

    ஆனால் இந்த நவீன உலகத்ததில் வசதியில் வாழ்ந்து, சுகபோபங்களை அனுபவிக்கும் ஆண் பெண்கள், ந்றிகெட்டு, த்றி கெட்டு, மனம்போனபடி வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும், அதற்கேற்றல் போல உலகத்தை மாற்றவேண்டும், தமதிச்சைக்கேற்றவாச்று பொருட்கள், சேவைகள் கிடைக்கவேண்டும் எனும்பொழுதில் அவ்வாறே மேனட்டவர்கள் சமுகத்தை மாற்றினார்கள். அதாவது சீர் குலைத்தார்கள்.

    அதன்வி:ஐவுதான் இந்த சீரழிவுகள்.

    இந்தியர்கள் கண்மூடித்தனமாக மேனாட்டு கலச்சாரத்தை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள்தாம் இவை.

    இந்தியாவில் எல்லாமெ மலிவாகக் கிடைக்கிறது என்பது இவர்களது உறுதியான எண்ணம். ஆகையால்தான் பணத்தால் எதஒயும் சாத்திக்கலாம் என்று இங்கு தைரியமாக வந்து நமது சமூகத்தைக் கெடுக்கிறார்கள்.

    அகவே இந்த்கிய கிருத்துவர்க்லள் தங்களது நன்மைக்காகவும், இந்தியாவின் நன்மைக்காகவ்சும் அத்தகைய பயங்கரமான, சமூகத்தைக் கெடுக்கும் கிருத்துவத்தை விடுத்து நாட்டுக்கு பாடுபட முன்வரவேண்டும்.

  2. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] [9] https://womanissues.wordpress.com/2009/11/18/complaint-against-christian-priest-for-rape/ […]

பின்னூட்டமொன்றை இடுக