கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

ஜூலை20, 2023

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

தமிழக நடிகைய பல கணவன்மார், பல தார மண, விவாகரத்து என்றெல்லாம் இருக்கும் பொழுது பெண்ணியம் எங்கிருந்து வருகிறது: கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வ்துமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்[1], கணவனுக்கு பாதபூஜை செய்து, பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை பிரணிதா[2]. இதெற்கெல்லாம் உதாரணம் சொல்ல தமிழகத்திலேயே பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, ஒன்றிற்கு மேலாக ஐந்து கணவர் வரை மணம் செய்து விவாகரத்து செய்த நவீன பெண்ணுத்துவ வீராங்கனைகளும் இருக்கிறார்கள். பிறக்கும் குழந்தைகள் அப்பா யார் என்றால் என்ன பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் தான் கவலைப் படவேண்டும். ஆனால், கண்ணகி பிற்ந்த மண், நாங்கள் தான் கண்ணகிக்கே சிலை வைத்தே என்றும் தப்பட்டம் அடிப்பார்கள். மனைவி-துணைவி என்று புது தாம்பத்தைய விளக்கத்தையும் உண்டாக்குவார்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள், பகுத்தறிவு, பெண்ணியம் என்றெல்லாமும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சினிமா-அரசியல் போர்வையில், எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கைகளும் சீரழிந்துள்ளன, தற்கொலைகளும் நடந்துள்ளன. பிறகு, இவர்கள் எப்படி விமர்சிக்க முடியும்?

17-07-2023 ஆடி அமாவாசை முன்னிட்டு கணவனுக்கு பாத பூஜை செய்தது: இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் நடிகை பிரணிதா அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார் என்று ஒரு ஊடகம் ஆரமொஇக்கிறது. அப்படியென்றால், சினிமாவில் செக்யூலரிஸம் இல்லையா, எப்பொழுது இவ்வாறு, மதம் பார்த்து விமர்சிக்கும் போக்கு வந்தது? இது செக்யூலரிஸமா, பெரியாரிஸமா, பகுத்தறிவா, எது? . தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ்[3]. இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்[4]. இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்[5]. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் 17-07-2023 தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்[6].

பிரணிதா நடிகை புகைப் படத்தை வெளியிட்டது: அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2022லும் இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர்[7]. அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்[8]. கடந்த ஆண்டு தனது கணவருக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்ட நிலையில், ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா[9]. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள நிலையில், அவருக்குள்ள உரிமையை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அதே நிலையில், அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். தவிர, இது இரண்டாம் ஆண்டாக செய்துள்ளார். எனவே, இதை ஏதோ புதியது மாதிரி விமர்சனம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சமூக வளைதளத்தில் ட்ரோல் செய்தது, திர்மறையாக விமர்சித்தது: அதாவது இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்[10]. பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ள நிலையில், சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்[11]. இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து, நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்[12]. நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர்[13]. நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்[14].

தமிழகத்தில் பெண்ணியத்தின் நிலை: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய முரண்பாட்டை பலவிசயங்களில் கவனிக்கலாம். பெரும்பாலும், நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்று பேசும், எழுதும், தம்பட்டம் அடிக்கும் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் அதிகமாகவே காணலாம். ஏனெனில் அவர்களது தலைவர்களே அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். இரண்டு தாரம், மூன்று தாரம் என்பது சகஜமான விசயம். பல கணவர் அதாவது விவாக ரத்து செய்து மறுபடியும் கணவர் கொள்ளும் முறையும் இயல்பாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதற்கும் அவர்கள் புது விளக்கம் அளிக்கக் கூடும். அந்நிலையில், தமிழ் பெண்களின் ஐந்து குணங்களை (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு) இங்கு தேடிப் பாத்தாலும் கிடைக்காது. அவற்றை சொன்னால், என்னது என்று கேட்கும் நிலையில் “நவீன கண்ணகிகள்” உள்ளார்கள். பிறகு, எந்த பெண்ணாவது, பதிவிரதை, பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் பேசினால் ஏளனம் தான் செய்வார்கள்.

உரிமை எல்லோருக்கும் தானே இருக்க வேண்டும்? சினிமா நடிகைகளில் எதிர்பார்ப்பது என்பது நடக்குமா என்று தெரியவில்லை. அந்நிலையில், ஒரு நடிகை தனது கணவனுக்கு பாத பூஜை செய்கிறாள் எனும்பொழுது, இவர்களுக்கு பிரச்சினையாகிறது. என்னது, “திராவிட மாடலுக்கு” ஒவ்வாததாக இருக்கிறதே, இதற்கு நல்ல விளம்பரமு கிடைக்கிறதே என்ற கொதிப்பும் ஏற்படுகிறது. ஏலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் செய்யு பொழுது, படம் போடும் பொழுது, கொதிப்பு கொஞ்சம் அதிகமாகிறது. இத்தகைய கேள்விகளை தங்களது “ரோல் மாடல்களாக,” தலைவர்களாக இருப்பவரைப் பார்த்து கேட்பார்களா அல்லது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் சென்று ட்ரால் செய்வார்களா? என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறீரே, உமது மனைவி கோவில்-கோவிலாக சுற்றுகிறாரே என்று கேட்க முடியுமா. கேட்டால் அது அவரது உரிமை, நான் அதில் தலையிட மாட்டேன் என்பாரோ? பிறகு, யாருடைய உரிமையில், யார் நுழைவது, கேள்வி கேட்பது?

© வேதபிரகாஷ்

20-07-2023


[1] தினமலர், கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா, ஜூலை 18, 2023. 12:47.IST.

[2] https://cinema.dinamalar.com/tamil-news/114841/cinema/Kollywood/Pranitha-performed-foot-pooja-for-her-husband.htm

[3] தமிழ்.இந்து,  கணவருக்கு பாத பூஜை: சர்ச்சையில் பிரணிதா, செய்திப்பிரிவு, Published : 19 Jul 2023 05:23 AM; Last Updated : 19 Jul 2023 05:23 AM.

[4] https://www.hindutamil.in/news/cinema/south-cinema/1057900-pranitha-subhash-touches-husband-feet-on-bheemana-amavasya.html

[5] தினத்தந்தி, கணவருக்கு பாத பூஜை செய்துசர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா, ஜூலை 19, 1:12 pm.

[6] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actress-pranita-who-got-involved-in-controversy-after-doing-foot-puja-for-her-husband-1011216

[7] தமிழ்.பிஹைன்ட்.டாக்கீஸ், போன வருஷம் மாதிரி Troll செய்தால்கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை விளாசல்., By Arun Kumar, ஜூலை 18, 2023.

[8] https://tamil.behindtalkies.com/pranitha-subhash-touches-husbands-feet-on-bheemana-amavasya/

[9] சினி.உலகம், கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை, Pranitha Subhash, By Parthiban.A, 18-07-2023.

[10] https://cineulagam.com/article/pranitha-pooja-to-husband-foot-1689607191

[11] அப்டேட்.நியூஸ்.360, இப்படியும் ஒரு நடிகையா…? கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதாகிண்டலுக்கு பளார் பதில்!, Author: Shree, 17 July 2023, 11:19 pm

[12]  https://www.updatenews360.com/cinema-tv/pranitha-performed-foot-puja-for-her-husband/

[13]  தமிழ்.பிளிம்.பீட்ஸ், கணவர் பாதங்களுக்கு பூஜை பண்ண பிரபல நடிகை.. நீங்க என்ன வேணா ட்ரோல் பண்ணுங்க என கேப்ஷன் வேற!, By Mari S| Updated: Monday, July 17, 2023, 18:20 [IST]

[14] https://tamil.filmibeat.com/news/actress-pranitha-done-patha-pooja-for-her-husband-on-bheemana-amavasya-110861.html

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் படவேண்டும்.

ஜூன்23, 2023

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் பட வேண்டும்.

குடும்பங்கள் கட்டுப்பாடுகளை மீறுவது ஏன்?: சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியவர் சொன்னதை கேட்காமல் இருப்பது போன்ற நிலைகளில் குடும்பங்கள் சிதறுகின்றன. குடும்பத் தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் குடும்ப அங்கத்தினர் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிறார். இதனால், ஆண்கள் உறவுகளை மீறினால், பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம், அனால், பெண்கள் முயலும் போது, தீராத பழி, பெற்றோர், உற்றோர், மற்றோர் அதிகமாக பாதிக்கும் நிலை உண்டாகிறது. பெண்களை கவனிக்காமல் வளர்க்கும் அல்லது வளர்க்கப் படும் பெண்களும் தங்கள் இச்சைக்கு ஏற்றப் படி செயல்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது பணம் தான் பிராதானம் என்ற நிலை உருவானப் பிறகு, பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போன்ற வெறி வரும் பொழுது, நியாயம், தர்மம் போன்றவையும் மறக்கப் படுகின்றன. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கவனித்து வந்தால் எவ்வாறு தனிதனிபர் ஒழுக்கம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நெறிமுறை முதலியவை பின்பற்றாமல் சீரழிகின்றன என்பதையும் கவனிக்கலாம்.

பாலியல் குற்றங்கள் அதிகமாவது: நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சினிமாவின் சீரழிக்கும் போக்கைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு, சினிமா தொழில் தான் விபசாரத்தை அதிக அளவில் ஊக்குவிக்கிறது, உருவாக்கி வருகிறது எனலாம். இதைப் பற்றி சமூக ஆராய்ச்சியாளர்கள் சரிவர கண்டுகொள்வதில்லை. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதிலும் கிருத்துவ-இஸ்லாமிய குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இதுவும் செக்யூலரிஸ ரீதியில் தான் நடந்து வருகின்றன. செய்திகள் வெளி வந்தாலும், பிறகு என்னவாயிற்று என்று சொல்லப் படுவதில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குடும்ப விபசாரம் என்று புதிய பிபசாரம்: சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது[1]. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் என்று தினத்தந்தி[2] விளக்கமும் கொடுக்கிறது. சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது[3]. அப்படியென்றால், இது ஏதோ ஏற்கெனவே இருந்தது போலவும், இப்பொழுது, திடீரென்று நடப்பது போலவும் தெரிகிறது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள், என்று ஒரு வரியில் முடிக்கிறது. பிறகு, இதற்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத் தானே செய்வர். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்[4]. குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்[5]. இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்[6]. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது, இதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது.

தொடர்ந்து தொடர்ச்சியாக செய்து வரும் முறை: போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். இதில் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, நீதிமன்றத்திற்குச் சென்று, ஏதாவது தண்டனை என்று கொடுக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்யப் படுகிறதா அல்லது போலீசாறே நேராக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். இதிலும் புதிர்கள் பலவுள்ளன. அப்பெண்களுக்கு வாதிடும் வக்கீல்கள் யார், எவ்வாறு அவர்கள் விடுதலை பெறுகின்றனர் என்பதும் புரியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். பிறகு செய்த குற்றத்தையே திரும்ப செய்வது போலாகிறது. சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

புரோக்கர்கள் எல்லாம் இருப்பது, இது ஒரு திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது: அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான  ஆமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54), பிரசாந்த் (30) ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. இவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதும் தெரிகிறது[8]. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொழில்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து நடக்கும் சமூக சீரழிவைத் தடுத்தாக வேண்டும்: அப்படி எல்லாமே சொல்லி வைத்தது போல சக்கரம் சுழல்வது போல, இந்நிகழ்வுகள் திரும்ப-திரும்ப நடப்பது அசாதாரணமாக உள்ளது. மற்ற தொழில்கள் போல இதுவும் திட்டப்படி, முறையாக, செயல்பட்டு வருகிறது என்றாகிறது. இதில் வக்கீல்கள், புரோக்கர்கள், வீட்டு சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு விடுபவர், போலீஸார், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், இது நடப்பது தெரிந்துள்ளது. செய்வது, கைதாவது, பிறகு சட்டப் படி அல்லது ஏதோ ஒரு நுணுக்கத்தில் வெளியே வருவது எல்லாம் யாரும் ஓசியில் செய்ய் மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கும் உரிய காசு கிடைக்கிறது. இத்தகைய விபசாரிகளுக்கு ஆஜராகும் வாதிடும் வக்கீல்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிரது. ஆமாம், அதுவும் அவர்கள் தொழில் தான்! யாராக இருந்தாலும், வாங்கிய காசுக்காக அவர்கள் ஆஜராக வேண்டியது தான்! பிறகு, இதில் எதுவோ இடிக்கிறதே? அப்பெண்களின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லையே. நுகர்வோர் பண்டங்கள் போல அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். சமூகம் அவர்களை விபசாரிகள் என்றாலும், வேறு வழியில் ஆதரிக்கின்றது.

  1. குடும்ப விபசாரம் என்று செய்தி வருகிறது, அந்த அபசாரத்திற்கு ஒரு வரையறை, விளக்கமும், வியாக்யானமும் கொடுக்கப் படுகிறது.
  2. ரூ.5000 கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களுக்கு உல்லாசம் கிடைக்கும்!
  3. இவ்வாறு வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் – தினத்தந்தி.
  4. குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.
  5. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்
  6. போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
  7. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.. இப்படியாக இவ்வேலை சுழற்சியாக நடைபெற்று வருகிறது!
  8. இதில் பல புதிர்களும், கேள்விகளும் எழுகின்றன. எப்படி, ஏன், எவ்வாறு இதில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்?
  9. ஒற்றுமையாக சொல்லி வைத்தால் போல சம்பந்தப் பட்டவர்கள் இச்சுழற்சியை வெட்டெறியாமல் தொடர்ந்து நடத்த விடுகின்றனர்?
  10. தாய்மை, பெண்மை, குடும்பம், ஒழுக்கம், கற்பு,..…முதலியவற்றைப் போற்றுவோர் ஏன் அமைதியாக இருக்கின்றனர்? இச்சமூக ஊனத்தை என்னென்பது?

© வேதபிரகாஷ்

23-06-2023


[1] தினத்தந்தி, ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும்குடும்ப விபசாரம், தினத்தந்தி Jun 23, 3:49 pm

[2] https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5000-you-will-be-treated-with-a-party-and-family-prostitution-again-in-chennai-992672

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்டைம்ஸ், Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!, Kalyani Pandiyan S, Jun 23, 2023, 09:47 AM IST

[4] https://tamil.hindustantimes.com/amp/entertainment/3-women-involved-in-domestic-prostitution-business-in-chennai-have-been-arrested-131687492971595.html

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள், First Published Jun 23, 2023, 11:55 AM IST

[6] https://tamil.asianetnews.com/gallery/crime/prostitution-that-took-place-in-chennai-women-caught-half-dressed-rwp0ic

[7] தினமலர், பாலியல் தொழில் புரோக்கர் இருவர் கைது, பதிவு செய்த நாள்: ஜூன் 23,2023 00:29.; https://m.dinamalar.com/detail.php?id=3355385

[8] https://m.dinamalar.com/detail.php?id=3355385

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மே14, 2023

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மேல்மலையனூரில் பரபரப்பு: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்: ஆண்களாவது, பெண்களாவது, ஏதாவது ஒரு வெறி, பித்து, பைத்தியம் என்று விடித்து விட்டால், பணம் சம்பாதிப்பது, ஜாலியாக வாழ்வது, எந்த கொள்கைஉம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எல்லாவிதமான குற்றங்களிலும் பெண்கள் சமமாக மட்டுமல்லாது, ஆண்களையும் மிஞ்சுயுள்ளார்கள், கொலை-கொள்ளைகளில் நம்பவே முடியாத நிலையில் உச்சத்தைத் தொடுள்ளார்கள். இனி ஆண்களுக்கே சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. எனவே, இந்நிலையில், மேல்மலையனூரில் 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்[1] என்ற செய்தி ஒன்றும் யாரையும் ஆச்சரியப் படுத்தி விடவில்லை. அவர் 6-வதாக ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[2] என்று தினத்தந்தி கூறினாலும், அதற்கே இது அலுத்துப் போன விசயம் தான். ஏனெனில், 70 ஆண்டுகளாக இது இத்தகைய சேய்திகளை வெளியிடுவதில் வல்லது.

டிசம்பர் 2022ல் திருமணம்: விழுப்புரம் மேல்மலையனூர், இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[3]:- முகநூல் மூலம் அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான்[4]. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்[5]. ஆக, முகநூல் இங்கும் விலையாடியிருப்பது தெரிகிறது. போன், இணைதளம் இன்றைக்கு பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. கோடிக் கணக்கான மக்களை ஏதோ ஒரு வழியில் கட்டுக்குள் வைத்திருக்கிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேச தொடங்கினர்[6].  அப்போது, மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார்[7].  காதலாக மலர்ந்தது கூடவே இவர்களது நட்பு மேலும் இணக்கமாக தொடர தொடங்கியது[8]. இவ்வாறாக நேரில் முகம்பாராமல் முகநூல் மூலமாக பேசிய இவர்களுக்குள் காதலும் மலர்ந்தது. இதையடுத்து காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மணிகண்டன் முடிவு செய்தார்[9]. அவர், மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவை தெரிவித்தார்[10]. இதற்கு காதலியும் பச்சைக்கொடி காட்டினார். அப்போது, திருமணத்தின் போது தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை, தான் மட்டும் தனது வீட்டை விட்டு வருவதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்[11]. கோவிலில் வைத்து திருமணம் இதையடுத்து, கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் 18-ந்தேதி, இவர்களது திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது[12]. ஆனால், பத்திரிக்கை அடிக்காமல் இருந்திருப்பார்களா, போட்டோ, வீடியோ எடுக்காமலா இருந்திருப்பார்கள்?

பிள்ளை வீட்டார் மட்டும் கலந்து கொண்ட கல்யாணம்: இதில் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மகாலட்சுமி தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. அப்பொழுது எப்படி, ஏன், எதற்காக விசாரிக்காமல் கல்யாணத்திர்கு ஒப்புக் கொண்டார்கள் என்பதும் வியக்காக இருக்கிறது. திருமணத்தின் போது, மணிகண்டன் வீட்டில் இருந்து மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டுள்ளனர். இதுவே “ரிவர்சில்” இருக்கிறது எனலாம். சொத்து பிரச்சினை மனதுக்கு பிடித்த காதலியை கரம்பற்றிவிட்டோம் என்கிற மனமகிழ்வில் மணிகண்டன், தனது ஆசை காதல் மனைவியுடன் இல்லற வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தார். அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளதாக எனக்கு போன் வந்தது. எனவே நான் ஊருக்கு சென்று அந்த பிரச்சினையை தீர்வு கண்டுவிட்டு, வந்துவிடுகிறேன் என்று மணிகண்டனிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய அவரும், ஊருக்கு சென்றுவிட்டு விரைவில் திரும்பி வந்துவிடு என்று வழியும் அனுப்பி வைத்தார்.

வீட்டில் இருந்த ஒரு லட்சம் பணம் மாயம்: அதன்படி திருமணமான 26-வது நாள், அதாவது, கடந்த ஆண்டு 2022 டிசம்பர் மாதம் 14-ந்தேதி மகாலட்சுமி, மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறி சென்றார். சொந்த ஊருக்கு சென்ற காதல் மனைவி எப்போது திரும்பி வருவார் என்கிற ஏக்கங்களுடன் மணிகண்டனும் இங்கு காத்திருந்தார். மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதன் பின்னர் தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது. ரூ.1 லட்சத்தை திருடிக்கொண்டு, திருமணத்தின் போது அணிவித்த 8 பவுன் நகையுடன் மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாரா? என்று மணிகண்டனுக்கு சந்தேகம் வந்தது. காதல் மனைவியின் மிரட்டல் இதையடுத்து, அவருக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசிய மகாலட்சுமி, சரியான பதிலை அளிக்கவில்லை. நகை, பணம் குறித்து கேட்ட போது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று போனில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

மிரட்டிய மனைவியின் மீது கணவன் புகார் கொடுத்தது: காதலித்து திருமணம் செய்த மனைவியின் இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய்விட்டார். போலீசில் புகார் பின்னர், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மகாலட்சுமியின் புகைப்படம், முகநூல் பக்க பதிவுகள், அவரது செல்போன் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர். அதில், அவர் சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று, மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

6ம் கணவருடன் வாழ்ந்து வருவது: விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- 5-வதாக சிக்கிய மணிகண்டன் மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர் தான் மணிகண்டன். ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். அபகரித்து செல்லும் நகை, பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, மனதுக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார். கையில் உள்ள பணம் செலவானவுடன், மீண்டு்ம் தனது கல்யாண லீலைகளை அரகேற்றி வந்துள்ளார். 3 குழந்தைகளின் தாய் மணிகண்டனை தனது வலையில் சிக்க வைத்து, நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.

மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும். வயதை மறைத்து, தன்னை விட 2 வயது சிறியவரான மணிகண்டனை அவர் திருமணம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர், யாருடைய பராமரிப்பில் உள்ளார்கள் என்பது குறித்து மகாலட்சுமி போலீசில் தெளிவாக தெரிவிக்கவில்லை. கல்யாண ராணி கைது தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று வழக்கம் போல ஊடகம் ஊளையிட்டுள்ளது. ஆனால், எந்ஹ தமிழச்சியும், தமிழச்சியின் கற்பு, மானம், முதலியவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. டிவி-பட்டிமன்ற விவதங்களும் நடத்தப் படுவதில்லை.

© வேதபிரகாஷ்

14-05-2023


[1] தினத்தந்தி, மேல்மலையனூரில் பரபரப்பு:5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார், தினத்தந்தி மே 14, 12:15 am (Updated: மே 14, 12:16 am).

[2] https://www.dailythanthi.com/News/State/kalyana-rani-who-cheated-and-married-5-men-963809

[3] மாலைமலர், 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி , By மாலை மலர், 14 மே 2023 7:29 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/kalyana-rani-cheated-and-married-6-men-608748

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கைது.. போலீஸாரே அதிர்ந்த பகீர் பின்னணி!, By Vishnupriya R Updated: Sunday, May 14, 2023, 10:06 [IST].

[6] https://tamil.oneindia.com/news/villupuram/coimbatore-mahalakshmi-arrested-by-cheating-6-men-511735.html

[7] தினகரன், சமூக வலைதளம் மூலம் அனாதை என கூறி 5 திருமணம் செய்து பணம், நகை கொள்ளையடித்த கல்யாண ராணி: சேலம் அருகே 6வது கணவனுடன் வசித்தபோது சிக்கினார், May 14, 2023, 12:16 am

[8] https://www.dinakaran.com/married_5_people_robbed_money_jewels_husband_salem/

[9] லோகல்.செய்தி, 5 ஆண்களுடன் திருமணம்சிக்கிய கல்யாண ராணி, By Mohan Ramachandran, May 14, 2023, 09:05 IST.

[10] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/marriage-with-5-men-trapped-wedding-queen-10167086

[11] தமிழ்.ஸ்பார்க், மீண்டும் ஒரு திருமண மோசடி..!! 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி..!!, Sat, 13 May 2023 18:43:11 IST Author by Priya

[12] https://www.tamilspark.com/tamilnadu/the-police-have-arrested-a-young-woman-who-was-involved

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)

பிப்ரவரி 2023ல் வழக்கு விசாரணைக்கு வருவது: மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ராதிகா, 45. இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் ‘வீடியோ’ வெளியானது[1]. இது அவருடன் தகாத நட்பை தொடர்ந்த வீரமணி, 39, என்பவரால் எடுக்கப்பட்டது[2]. அந்த படங்கள், ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்தனர். வீரமணி, ராதிகா 2022 ஏப்., 1ல் [01-04-2922] கைது செய்யப்பட்டனர். ராதிகாவிடம் இருந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், ‘குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “வீரமணியை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும்; குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். கைது உத்தரவில் எவ்வித தவறையும் நாங்கள் காணவில்லை. ராதிகா மனு தகுதி அடிப்படையில் ஏற்புடையதல்ல. இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” இவ்வாறு உத்தரவிட்டனர். ஆக, நீதிபதி உறுதியாகத்தான் தீர்ப்பு அளித்துள்ளார். இருப்பினும், நிர்மலா, காசி, பொள்ளாச்சி முதலிய வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கம் கிருத்துவப் பள்ளி வழக்கும் அமுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, இத்தகைய சீரியசான விசயங்களில் கூட, சட்டம், நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் அதிகாரிகள், சம்பந்தப் பட்டவர்கள், ஏதோ காரணங்களுக்காக பாரபட்சமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. இதனால், சமூகம் மேன்மேலும் சீர்கெட்டுத்தான் போகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவ்வாறு இருப்பதே திகைப்பாக, அதிர்ச்சியாக, கவலையாக இருக்கிறது.

செல்போன் கலாச்சாரத்தில் கற்பு பறிபோகும் நிலையும், வியாபாரமும்: இப்பொழுதெல்லாம் செல்போன் எல்லோரிடத்திலும் உள்ளது எனலாம். சினிமாவை அடுத்து, செல்போன் அனைவரது வாழ்க்கையிலும்  புகுந்து விட்டது. எனெனில், அதில் சினிமாவே வந்து விட்டது. டிவிசெனல்கள், டெலிசீரியல்களும் சேர்ந்து விட்டது. ஆக, இனி ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட டிவி என்ற நிலை தாண்டி, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் செல்போனை வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள். இதனால், செல்போன், இன்டர்நெட் வியாபாரிகளுக்குத் தான் வியாபாரம் பெருகி வருகிறதே தவிர, உபயோகிப்பவர்களுக்கு தீமை தான் வந்து சேர்கிறது. புதிய மீடியா தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் காதல், செக்ஸ் மற்றும் காதல் ஆகியவை எப்போதும் முக்கியமானவை என்று அவை வியாபாரமயமாக்கப் படுகின்றன..

ஆபாசம், சமூக வலைப்பின்னல் மற்றும் டேட்டிங் தளங்கள் உலகம் முழுவதும் பிரபலமான இணைய தளங்கள் ஆகி, சமூக ஊடகங்கள் மூலம் பெருகி வருகின்றன. காதல், காமம், கொக்கோகம் என்று மேற்கு நாடுகளில் புதிய பொருளாதாரங்களை உருவாக்குகிறது – நாம் டிண்டர், கிரைண்டர், கீல், ஹிட்ச் மற்றும் ஓக்குப்பிட் யுகத்தில் இருந்து, மேற்கத்தைய கலாச்சாரம் இளைஞர்களைக் கெடுத்து வருகின்றது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் ஃபேஸ்புக்கின் இலவச அடிப்படை முயற்சியுடன், அது ஒருங்கிணைக்கப்பட்டது. காதல் உட்பட சமூக நடவடிக்கைகளுக்கான ஒரே இடத்தில் அதன் நிலை. உதாரணமாக, மியான்மரில், குடிமக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் எதிர்மறையாகப் புகாரளித்தனர், ஆனால் அவர்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டபோது, பதில் மிகப்பெரியதாக இருந்தது. அதாவது, ராணுவ ஆட்சி நடந்தாலும், பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், இத்தகைய தொழில்கள் நடந்து வருகின்றன. செக்ஸ், போதை மருந்து, ஆயுதங்கள், கள்ளக் கடத்தல், தீவிரவாதம் என்பவை சேர்ந்து தான் செயல்பட்டு வருகின்றன.

இன்டர்நெட் மூலம் சீரழியும் பெண்கள்: மத பாரம்பரியங்களில் ஈடுபாடு கொண்டுள்ள நாடுகளான, ஜோர்டானில் இருந்து இந்தியா வரை உள்ள ஏழை சமூகங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே ஒரு பெண்ணிடம் பேசவே இல்லை, என்பதில்லை. ஏனெனில், இப்பொழுது செல்போன் எல்லோருடைய கைகளிலும் உள்ளது. எதிர் பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ஆன்லைன் அரட்டை தான். அதன் மூலம், இவர்கள் எளிதில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆணாதிக்க சமூகங்களில் உள்ள பெண்கள், அநாமதேயம், அணுவாக்கம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றைத் தேடுவதால், திறந்த சமூகங்களை ஆன்லைனில் எதிர்க்கிறார்கள், இல்லையெனில் இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சமூகங்களில் வருவது கடினம்.

பலதார உறவு முதலியன பெண்மை, குடும்பங்களைக் கெடுக்கின்றன: இப்பொழுது, இந்தியாவில் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் கூட, தாம்பத்தியத்தைத் தாண்டிய உடலுறவு, சேர்ந்து வாழும் முறை, விருப்பத்துடன் செக்ஸ் போன்றவற்றிற்கு சட்டப்படி அனுமதி கொடுத்துள்ள நிலைப்பாடுள்ளதால், பெண்கள் அத்தகைய உடலுறவுகளை வைத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள். அந்நிலையில், விபச்சாரம் என்பதற்கும் எந்த வரையறையும் கொடுக்க முடியாது. பெண்களையும் அவ்வாறு கணிக்க முடியாது. திருமணம், திருமண முறிவு என்று பலமுறை நடக்கும் பொழுதும், பெண்கள் கற்பு பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு ஆணுக்கு மேல் உடலுறவு கொண்ட பிறகு, அது மறக்கப் படுகிறது என்றாகிறது. ஏனெனில், பெண்களும் அவ்விசயத்தில் விருப்பத்துடன் ஈடுபடுகிறார்கள் என்றே ஆகிறது. “கல்யாண மன்னன்” என்பது போல, “கல்யாண ராணி” என்றெல்லாம் கூட ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பணம், சுகமான அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற காரணங்களுக்கு பெண்களே அவ்வாறு தயாராகி விடுகிறார்கள்.

கேட்பாரற்ற நிலையும், புலம்பல்களும்: அந்நியர்களுடன் நட்பு கொள்வது, போலி அன்பு, ஏமாற்றத்தைக் கண்டறிதல் என்பதெல்லாம் சாதாரணமாகி விட்டது. பணம் சம்பாதிக்க செக்ஸ், செக்ஸ் மூலம் வியாபாரம், வியாபாரத்திற்கு ஆள் சேர்ப்பு, அத்தகைய நிறுவனமாக்கப் பட்ட தொழில்கள், அத்தொழில்களில் ஈடுபடும் ரௌடிகள், குற்றவாளிகள், கிரிமினல்கள், அரசியல் சார்பு கொண்டவர்கள், வேலியை மேய்க்கும் பயிர்கள் முதலியவை அதிகமாகியுள்ள நிலையில், அவையெல்லாமே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊழல் என்பது, இதிலும் புரையோடி விட்டதால், கேட்பாரற்ற நிலையும் உருவாகி விட்டது. ஆக  ஒழுக்கம், நேர்மை, நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு புலம்புகிறவர்கள் புலம்பிக் கொண்டே இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] Thinamalar, ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated : பிப் 02, 2023  07:31 |  Added : பிப் 02, 2023  07:26.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3232195

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

கொக்கோகத்தில் சீரழிந்த ஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].

குடும்பத்தைக் கெடுத்த பாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.

மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலியல் கொக்கோகத்தின் விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.

வீரமணிராதிகா ஆபாச வீடியோ எடுப்பதில் ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11].  இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].

வீடியோக்களை போலீஸார் ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20].  அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] நக்கீரன், மாணவர்களை மிரட்டி ஆபாச வீடியோ; ஆசிரியை ஃபோனால் அதிர்ந்த காவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/female-teacher-arrested-madurai

[3] ஜீடிவி.செய்தி, மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்கசிந்த வீடியோ..!, Written by – Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-seduce-students-and-make-fun-of-them-leaked-video-387734

[5] காமதேனு, பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது,  Updated on : 2 Apr, 2022, 8:08 pm, 2 min read

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/lady-teacher-arrested-pocso-act-in-madurai

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST

[8] https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-school-teacher-in-madurai-r9pi3f

[9] மாலை மலர், மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த ஆசிரியைவீடியோவை பரவவிட்ட கள்ளக்காதலன் கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).

[10] https://www.maalaimalar.com/news/state/2022/04/02114939/3638297/Tamil-News-School-teacher-arrested-near-Madurai.vpf

[11] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

[12] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[15] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[16] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[17] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[18] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[21] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[22] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

சோதனைக் குழாய்க் குழந்தை முதல் “வாடகைத் தாய்” வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு – சட்டங்களை மீறும் நிலைகள் – பெண்ணியவாதிகள் மற்றும் சித்தாந்தவாதிகளின் மௌனம்! (3)

திசெம்பர்17, 2022

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவுசட்டங்களை மீறும் நிலைகள் – பெண்ணியவாதிகள் மற்றும் சித்தாந்தவாதிகளின் மௌனம்! (3)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, கருமுட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெறவேண்டும்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, கருமுட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெறவேண்டும். ஆனால் இதற்கான கருமுட்டை வங்கிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. 23 வயது முதல் 35 வயது வரையிலான பெண்களிடம் அவர்களின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருமுட்டைகளை எடுக்க வேண்டும். குழந்தையில்லாத தம்பதியருக்கு ஒருமுறைக்கு மேல் கருமுட்டைகளையோ அல்லது விந்தணுக்களையோ தானமாக வழங்கக்கூடாது என்று அந்த சட்டத்தில் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்தது[1].  இதில் உள்ள சட்டப்பிரிவுகளை எதிர்த்து காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த, கருமுட்டைகளை தானமாக பெற விரும்பும் 143 பெண்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[2]. இதிலிருந்து, இதையே ஒரு தொழிலாக செய்ய பெண்கள் தயாராகி விட்டனர் என்று தெரிகிறது.

செயற்கை கருத்தரித்தல் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்கும் செயல் என்பதால் இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்: குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் இது மருத்துவரீதியாக நடைமுறை சாத்தியமற்றது. ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது[3]. இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தையில்லாத தம்பதியினர், செயற்கை கருத்தரித்தல் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்கும் செயல் என்பதால் இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்[4], என்றளவுக்கு, மனுவில் கோரியுள்ளனர். அதாவது, அந்த அளவுக்கு சட்ட நுணுக்கள் அவர்களுகேத் தெரியுமா அல்லது அவர்களுக்கு அவ்வாறு ஆலோசனைக் கூறப்பட்டதா அல்லது, பின்னணியில் வியாபார ரீதியில் தொடர்ந்து செய்ய, சம்பந்தப் பட்டவர்கள் சட்ட ரீதியில் இருக்கும் தடுப்புகளை உடைக்க முயல்கின்றனரா என்று கவனிக்க வேண்டும்.

ஆய்வு அறிக்கை: மேலும், கருமுட்டை வங்கிகள் அமைக்கும்வரை கருமுட்டைகளை தானமாக பெற்று செயற்கை கருத்தரித்தல் நடைமுறையை தொடர அனுமதிக்க வேண்டும்[5]. அத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி 6 முறை கருமுட்டைகளை தானமாக பெற அனுமதிக்க வேண்டும்[6]. இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது[7]. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், ஒரு பெண் தனது வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை உள்ளதா என கேள்வி எழுப்பினர்[8]. அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்[9]. இதையடுத்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர்[10].

அமெரிக்கஐரோப்பிய சோதனைகளும், இந்திய பெண்மையின் சோதனையும்: ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது என்றால், இந்தியாவில் அத்தகைய ஆய்வுகளை நடத்தியுள்லனரா, யார் நடத்தியது என்று தெரியவில்லை. இனிமேல் ஒரு வேளை ஆராய்ச்சி செய்து அறிக்கை தயார் செய்வார்கள் போலிருக்கிறது. இனப்பெருக்க மருத்துவத்திற்கான அமெரிக்கன் சொசைட்டி (The American Society for Reproductive Medicine, ஏஎஸ்ஆர்எம்) ஒரு முட்டை நன்கொடையாளருக்கு அவரது வாழ்நாளில் ஆறு சுழற்சிகள் என்று தொழில்துறை வரம்பை அமைத்துள்ளது, அதற்கு உதவும் கிளினிக்கிற்கு அல்ல. அவள் ஆறு சுழற்சிகளை முடித்தவுடன், அவள் வேறொரு வசதியிலோ அல்லது மற்றொரு பெறுநருக்கோ நன்கொடை அளிக்க தகுதியுடையவள் ஆகமாட்டாள். முட்டை தானம் செய்பவர்களுக்கு இந்த வரம்புக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, நன்கொடையாளருக்கு ஏற்படும் உடல்நல அபாயம் மற்றொன்று கவனக்குறைவாக உள்ள உறவின்மை ஏற்படுதல். முக்கியமாக கருமுட்டை உருவாவதற்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகளால் கருப்பை வீக்கமடையும். இதை கருப்பை உயர் ரத்த வெளிப்பாடு என்று கூறுவார்கள். இந்த முறையினால் நன்கொடையாளர்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக மரணம் நேரும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கருப்பையில் இருந்து முட்டை எடுக்கும் போது கவனமாக செயல்படவில்லை என்றால் கருப்பை கிழிந்து ரத்தப்போக்கு ஏற்படும்[11]. இவற்றையெல்லாம் தானம் செய்யும் பெண்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆகவே, ஒன்றுக்கு மீறி செய்யும் தானம், உயிருக்கு ஆபத்தும் உண்டாக்கும்[12].

பெண்ணியவாதிகள் மற்றும் சித்தாந்தவாதிகளின் மௌனம்: கருமுட்டை தானம் என்பது ரத்த தானம் போன்றது அல்ல; உறுப்பு தானம் ரத்த தானத்தை விட மாறுபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம், ஆனால், அதையும் ரத்த தானம் போன்றவற்றுடன் ஒப்பிட முடியாது; அந்நிலையில் கருமுட்டை தானம் என்பது, பெண்மையினை, பெண்ணின் தாய்மையை, பெண்ணின் உடல் நலத்தை பாதிக்கக் கூடிய விவகாரம் ஆகும். இது பற்றி மேலே விவரிக்கப் பட்டது. ஈரோடு விவகாரத்தில் ஈடுபட்டுள்ள பெயர்கள் மறைக்கப் பட்டாலும், முஸ்லிம்கள் என்று தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட மதம் என்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், இணைப்பு (nexus), சம்பந்தம், அத்தகைய வேலையை வியாபாரமாக  செய்யும் முறை, மற்ற மாநிலங்களிலும் இருக்கும் தொடர்புகள் அதையும் கவனிக்கத் தூண்டுகிறது. இருப்பினும், வாடகை தாய் போல, இதற்கும் சட்டரீதியில் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், அதை பின்பற்றாமல், பெண்களை கருமுட்டை உருவாக்கும் எந்திரம் போல பாவிக்கப் பட்டு, சதாய்க்கப் படுகின்றனர். இதுவரை, பெண் உரிமை, பெண்ணியம் என்றெல்லாம் பேசும், கூவும், கூச்சலிடும் நாரிமணிகள், பெண்மணிகள் யாரும் இது பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை தான் தெரிகிறது. இந்துத்துவம், திராவிடத்துவம், பெரியாரிஸம் என்றெல்லாம் பேசுபவர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

17-12-2022


[1] இ.டிவி.பாரத், ஒரு பெண் வாழ்நாளில் எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யலாம்? உயர்நீதிமன்றம் கேள்வி, டிசம்பர் 17, 4:35 am.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/oocyte-donors-file-restrain-petition-of-central-new-enactment-of-donation/tamil-nadu20221216193951262262039

[3] தினத்தந்தி, 6 முறை கருமுட்டை தானமாக வழங்கலாம் என்ற ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், டிசம்பர் 17, 4:35 am.

[4] https://www.dailythanthi.com/News/State/have-to-submit-a-study-report-for-6-times-egg-donation-859479

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பெண்ணிடம் ஒரு முறைக்கு மேல் கருமுட்டைகளை எடுக்கலாமா? “ஆதாரத்தை காட்டுங்கள்சென்னை ஹைகோர்ட் உத்தரவு, By Jackson Singh, Updated: Friday, December 16, 2022, 19:38 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/show-the-proof-will-retrieve-eggs-of-a-woman-be-taken-more-than-once-madras-hc-order-489903.html

[7] தமிழ்.இந்து, பெண்களின் வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகள் எடுக்கலாமா? – அறிவியல்பூர்வ ஆதாரம் கேட்ட சென்னை ஐகோர்ட், ஆர்.பாலசரவணக்குமார், Published : 16 Dec 2022 07:39 PM, Last Updated : 16 Dec 2022 07:39 PM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/915304-what-is-the-scientific-evidence-that-women-can-ovulate-6-times-in-their-lifetime-high-court.html

[9] காமதேனு, ஆறு முறை கருமுட்டைகளை எடுக்க அனுமதி கோரும் மனு: ஆய்வறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு, Updated on :  16 Dec, 2022, 9:45 pm

[10] https://kamadenu.hindutamil.in/national/hc-orders-scientific-report-on-womans-ability-to-retrieve-eggs-more-than-once-in-her-lifetime

[11] தினகரன், விழிப்புணர்வு இல்லாததால் விபரீதங்கள் தொடரும் அவலம்; அப்பாவி ஏழை பெண்களின் உயிருக்கு உலை வைக்கும் கருமுட்டை தானம்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை, 2022-06-17@ 14:55:41.

[12]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=774773

சோதனைக் குழாய்க் குழந்தை முதல் “வாடகைத் தாய்” வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மைசீரழிவு – சட்டங்களை மீறும் நிலைகள்! (2)

திசெம்பர்17, 2022

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவுசட்டங்களை மீறும் நிலைகள்! (2)

ஜூன் 2022 – ஈரோட்டில் ஆரம்பித்த விவகாரம்: சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா, அவர் கருமுட்டைகளை விற்பதற்கு துணை செய்ததாக கூறப்படும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தோழி மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 16வயது மகளை வளர்த்து வந்த தாய், கணவனை பிரிந்தார். அதே பகுதியில் வேலை செய்த பெயின்டருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்தார். பெயின்டரும், அப்பெண்ணும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். மகளை பெயின்டர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, 8 முறை கருமுட்டை விற்பனை செய்துள்ளார்[1]. இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்[2]. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரித்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஈரோடு பாரதிபுரம் ஜான் ஆகியோரை போக்சோ, ஆதார் அட்டையை திருத்தம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நீதிமன்றங்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படுகிறது: சென்னை, தேனாம்பேட்டையில் பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது[3]: சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது.அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலியாக உள்ளது.போலியான ஆதார் அட்டை என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது கருமுட்டை தானம் குறித்த சாதக, பாதகங்கள் சிறுமியிடம் முறையாக விளக்கப்படவில்லை.விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை. கருமுட்டை விவகாரத்தில், ஆறு மருத்துவமனைகள் ஐசிஎம்ஆர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து 2 தனியார் மருத்துவமனைகள் நீக்கம். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நீதிமன்றங்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்[4].

சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவா்: இந்த விவகாரம் தொடா்பாக சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் துணை இயக்குநா் குருநாதன், இணை இயக்குநா் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்கிய 6 போ் குழுவினா், ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தொடரும் நிலையில், சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவா் என்பதும், அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் தனது மகளையும் கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. சேலம் மற்றும் ஒசூா் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

14 வயது முதல் 16 வயது வரை இரண்டு ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்றுள்ளனா்: ஈரோடு, பெருந்துறையில் ஆய்வு செய்தோம். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை பதிவேடுகளை சரிபார்த்து வருகிறோம். இதில் தவறு நடந்திருந்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னா், கேரளம் மற்றும் ஆந்திரம் மாநில அரசுகள் உதவியுடன் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றார். 21 வயதுக்கு மேல் உள்ளவா்களிடம் மட்டும்தான் கருமுட்டையை அவா்களது அனுமதியோடு பெற வேண்டும். ஆனால், இந்த சிறுமியிடம் 14 வயது முதல் 16 வயது வரை இரண்டு ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்றுள்ளனா். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மருத்துவச் சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு குழு அமைத்தது; இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக, மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

  1. சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான இந்தக் குழுவிற்கு குடும்பநலத் துறை இயக்குநர் துணை தலைவராகவும், மாதர் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
  2. இந்தச் சட்டத்தின் படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்களிடம் இருந்து மட்டும்தான் கருமுட்டைகள் வாங்க வேண்டும்,
  3. வாழ்நாளில் ஏழு கருமுட்டைகள் வரை மட்டுமே கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டது[5].
  4. சம்பந்தப்பட்ட மருத்துவர், கருமுட்டை அளிக்கும் பெண்ணை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது,
  5. எந்த மோசடியிலும் ஈடுபடக் கூடாது.
  6. மீறி ஈடுபட்டால், முதல் முறை குறைந்தபட்சம் ரூ.5 லட்சம், அதிகபட்சம் ரூ.10 லட்சம், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[6].

சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு நடைமுறையில் உள்ள இனப்பெருக்க தொழில்நுட்பம், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்கும் விதமாகவும், தமிழக சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியார் மருத்துவமனைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்பது தொடர்பாகவும் இனிவரும் நாள்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

© வேதபிரகாஷ்

17-12-2022


[1] தினமலர், சிறுமியின் கருமுட்டை விற்பனை; 2 மருத்துவமனைகளுக்குசம்மன், Updated : ஜூன் 05, 2022  05:32 |  Added : ஜூன் 05, 2022  04:01

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3046035

[3] தினத்தந்தி, சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளை மூட நடவடிக்கை : மா.சுப்பிரமணியன் தகவல்,  ஜூலை 14, 11:05 am (Updated: ஜூலை 14, 11:10 am).

[4] https://www.dailythanthi.com/News/State/girls-ovum-sale-issue-action-to-close-the-concerned-hospitals-masubramanians-information-745137

[5] தினமணி, கருமுட்டை விவகாரம்: ஒழுங்குறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்தது தமிழக அரசு, By DIN  |   Published On : 11th June 2022 10:56 AM  |   Last Updated : 11th June 2022 06:47 PM

[6]  https://www.dinamani.com/tamilnadu/2022/jun/11/selling-of-minor-girls-embryo-3860161.html

சோதனைக் குழாய்க் குழந்தை முதல் “வாடகைத் தாய்” வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு (1)

திசெம்பர்17, 2022

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு (1)

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: செயற்கை முறையில் கருதரித்தல் முறை அறிமுகமானதிலிருந்து, சில தம்பதியர் அதனை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். குழந்தை இல்லாதோர், முதலில் தயக்கத்தைக் காட்டி வந்தாலும், பிறகு, அதனை பயன்படுத்தி வந்தனர். அந்நிலையில், “வாடகைத் தாய்” பொன்ற முறையும் ஆரம்பிக்கப் பட்டது. இதில் அயல்நாட்டு தம்பத்தியர் இருப்பதால், நிறைய பணம் கிடைக்கும் என்ற நிலையில், சில பெண்களதற்கு உட்பட்டு, “வாடகைத் தாயாக” மாறினர். இவ்வாறு, எந்த நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்கிற கவர்ச்சி வாசகங்களோடு, கருத்தரித்தல் மையங்களின் விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன[1]. குழந்தையின்மை பிரச்னை இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஓர் உளவியல் பிரச்னையாக மாறியிருக்கும் நிலையில், சில தனியார் கருத்தரித்தல் மையங்களின் வியாபார நோக்கத்தால், கருமுட்டைக்கான சந்தை பூதாகரமாகியிருக்கிறது[2]. அதையொட்டி, சட்டவிரோதச் செயல்களும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. 

செயற்கை முறையில் கருதரித்தல் முறைகள்: செயற்கை கருவூட்டல் (Artificial insemination) என்பது உடலுறவு தவிர வேறு வழிகளில் vivo  கருத்தரித்தல் மூலம் கர்ப்பத்தை அடைவதற்காக ஒரு பெண்ணின் கருப்பை வாய் அல்லது கருப்பை குழிக்குள் விந்தணுவை வேண்டுமென்றே அறிமுகப்படுத்துவதாகும். இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) / சோதனைக் குழாய்க் குழந்தை, என்பது கருத்தரித்தல் செயல்முறையாகும், அங்கு ஒரு முட்டையானது விட்ரோவில் உள்ள விந்துடன் (“கண்ணாடியில்”) இணைக்கப்படுகிறது. ஒரு நபரின் அண்டவிடுப்பின் செயல்முறையை கண்காணித்தல் மற்றும் தூண்டுதல், அவர்களின் கருப்பையில் இருந்து கருமுட்டை அல்லது கருமுட்டை (முட்டை அல்லது முட்டை) அகற்றுதல் மற்றும் ஆய்வகத்தில் ஒரு கலாச்சார ஊடகத்தில் விந்தணுக்களை கருவுற அனுமதிப்பது ஆகியவை இந்த செயல்முறையை உள்ளடக்கியது. கருவுற்ற முட்டை (ஜைகோட்) 2-6 நாட்களுக்கு கரு வளர்ப்பிற்கு உட்பட்ட பிறகு, அது வெற்றிகரமான கர்ப்பத்தை நிறுவும் நோக்கத்துடன் கருப்பையில் வடிகுழாய் மூலம் மாற்றப்படுகிறது.

பெண்களிடமிருந்து கருமுட்டைகள் உருவாக்கி எடுத்து விற்றல்: இத்தகைய செயற்கை முறையில் கருதரித்தல் முறைகளுக்கு, கருமுட்டைகள் தேவைப் படுவதால், அவற்றை தானமாகக் கொடுக்கும் செயல்பாடு, விற்கும் முறையாகி, வியாபாரமாகி விட்டது. பெண்களுக்கு 10 நாட்களுக்கு உயர்திறன் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு முட்டை உற்பத்தி செயற்கையாக அதிகரிக்கப்படும். பிறகு மூன்று நாட்கள்கழித்து, மயக்க மருந்து தரப்பட்டு, உடலுக்குள் ஊசி செலுத்தப்பட்டு அந்த ஊசி மூலமாகவே அந்த முட்டைகள் வெளியே எடுக்கப்படும். ஒரு பெண் எத்தனை முட்டைகள் உருவாக்க முடியும் என்பது பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. கூடுதல் கருமுட்டைகள் எடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் பின்விளைவுகளை உருவாக்கும். அந்தப் பெண்களுக்கு தலைவலி, உடல் பருமன், அசதி முதல், கைகால் செயல் இழத்தல், சிறுநீரகக் கோளாறு, மரணம் என பலவிதமான பாதிப்புகள் ஏற்படும்.

குழந்தையின்மை, கருமுட்டை தானம்: விதிமுறைகளை பின்பற்றாமல் கருமுட்டை தானம் பெறும் கருத்தரிப்பு மையங்கள், அப்பாவி  பெண்களின் உயிருக்கு உலைவைக்கும் நிலையை உருவாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2.75 கோடி பேர் குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நகர்ப்புறங்களில் 6 தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்னை உள்ளது. இந்தியாவில் திருமணமானவர்களில் 46 சதவீதம் பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. 31-40வயதுக்கு உட்பட்ட 63 சதவீதம் தம்பதிகளுக்கும், 21-30வயதுக்கு உட்பட்ட 34 சதவீதம் தம்பதிகளுக்கும் இந்த பிரச்னை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நம்நாட்டில் பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியா, குழந்தையின்மை பிரச்னை: மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியா, குழந்தையின்மை பிரச்னையில் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, ஹார்மோன் குறைபாடுகளால் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றெடுக்க முடியாத பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் அவர்களுக்கு கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை கருவாக மாறாத நிலையில் வெளியேறுகின்றன. இதனால் உயிரோட்டமுள்ள கருமுட்டைகளை பிற பெண்களிடம் தானமாக பெற்று கணவரின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருவை உருவாக்குகின்றனர். இதனை மனைவியின் கர்ப்பப்பையில் வைத்து சிசுவை வளர்க்கின்றனர்.

கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது: இந்தவகையில் நவீன மருத்துவத்தின் உச்சமாக விளங்கும் கருமுட்டை தானம் என்பது குழந்தையில்லாத பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பெரும்பாலும் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை விட, ஏதோ ஒருவகையில் தன்னுடைய ரத்தம் என்று சொல்லிக் கொள்வதையே பெற்றோர் விரும்புகிறார்கள். இதற்கு அடித்தளமாய் இருப்பது தான் கருமுட்டை தானம். குடும்பத்தில் ஒருவரோ, நெருங்கிய தோழியோ தனக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தால் அவர்களிடம் கருமுட்டை தானம் கேட்டு குழந்தை பெற்றுக்கொள்வதை பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாக கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள், புரோக்கர்கள், வியாபாரம்: இந்த கருமுட்டை தானத்திற்கு சொந்தங்களும், தோழிகளும் உதவ முன்வராத நிலையில் நேரடியாக செயற்கை கருத்தரிப்பு மையங்களை அணுகுகின்றனர். அவர்களும் இதற்கான புரோக்கர்களை வைத்து காரியம் சாதித்து வருகின்றனர். இந்த புரோக்கர்கள் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் குடும்பங்களை குறி வைத்து பணத்தாசை காட்டி பெண்களுக்கு  வலை விரிக்கின்றனர். முதலில் தானம் கொடுக்கும் பெண்களை கடவுளை போல் இவர்கள் அணுகுகின்றனர். அவர்கள் ஒப்புக் கொண்டவுடன் தானம் பெற்றுவிட்டு கருவேப்பிலையை போல் வீசிச் செல்கின்றனர் என்பதும் கொடுமை. அதேபோல் அபாயம் உணராமல் பல பெண்கள் புரோக்கர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். கருமுட்டை ஒரு பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இருக்கும். அதனை மைனஸ் 194 சென்டி கிரேடுக்கு மாற்றி லிக்விட் நைட்ரஜனில் உறைய வைக்கின்றனர். இதனை க்ரையோலாஜிக் என்று அழைக்கின்றனர். இதனை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பாதுகாக்கலாம். இந்தவகையில் பல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தானம் கொடுக்க வரும் பெண்களிடம் இருந்து எடுக்கப்படும் அளவுக்கதிகமான கருமுட்டைகளை சேமித்து வைத்து, கொள்ளை லாபம் பார்த்து வருவதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

2021ல் அறிமுகப் படுத்தப் பட்ட மத்திய அரசு சட்டமும், உடனடியாக நடைமுறைக்கு எடுத்து வராத தமிழக மாநிலாரசும்: நாட்டில் செயற்கை கருத்தரித்தலை முறைப்படுத்தும் வகையில், இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்தது[3].  இதில் உள்ள சட்டப்பிரிவுகளை எதிர்த்து காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த, கருமுட்டைகளை தானமாக பெற விரும்பும் 143 பெண்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[4]. ஆனால், தமிழ்நாடு உள்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக சிறுமியின் தாய் உள்பட நான்கு போ் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

© வேதபிரகாஷ்

17-12-2022


[1] விகடன், அச்சுறுத்தும் கருமுட்டைச் சந்தை! – அலட்சியம் காட்டும் அரசு!, துரைராஜ் குணசேகரன், Published:10 Aug 2022 5 AMUpdated:10 Aug 2022 5 AM

[2] https://www.vikatan.com/news/general-news/special-story-about-ovum-market

[3] இ.டிவி.பாரத், ஒரு பெண் வாழ்நாளில் எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யலாம்? உயர்நீதிமன்றம் கேள்வி, டிசம்பர் 17, 4:35 am.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/oocyte-donors-file-restrain-petition-of-central-new-enactment-of-donation/tamil-nadu20221216193951262262039

தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

செப்ரெம்பர்29, 2022

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

ஒரு ஆண் பல திருமணங்கள் செய்தது: சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[1]. பெண் கொடுத்த புகாரில், திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக, திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போவதாகவும் அதற்காக பண உதவி வேண்டும் எனக் கேட்டு சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தனர்[3]. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை போலீசார் தேடி வந்தநிலையில், லால்குடியில் வைத்து கைது செய்தனர்[4]. தமிழகம் முழுவதும் 9-க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையதளம் மூலமாக ஏமாற்றி சுமார் 9 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும்  திருமணமாகாத மருத்துவம், பொறியியல் பட்டதாரி பெண்களையும் பணக்கார விதவை பெண்களையும் குறிவைத்து பண மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை ஏமாற்றிய நபர் கைது: கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார்[5]. இவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்[6]. திருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார்.  கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார். இதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமாகி சில மாதங்களில், தொழிலில் நஷ்டம் என்று கூறி 3 கோடி ருபாயை மாமனார் வீட்டிலிருந்து பெற்ற புருஷோத்தமன் பிறகு தலைமறைவாகிவிட்டாராம்.

ஓரு பெண் பல திருமணங்கள் செய்தது  கோர்ட்டுக்குச் சென்ற மோசடி திருமண வழக்கு: ஹைகோர்ட்டை நாடிய பெண் பாதிக்கப்பட்ட அந்த பெண், புருஷோத்தமன் மீதும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிக்கினர் புருஷோத்தமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண தகவல் மையம் மீது கூட்டுசதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஆறு திருமணங்கள் செய்து வைத்த திருமண புரோகர்[7]: ஏற்கெனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்கிற சபரி, மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, நான்காவதாக ஓர் ஆட்டோ டிரைவரைத் திருமணம் செய்ய முயன்றபோது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்தப் பரபர சம்பவத்தின் சூடு தணிவதற்குள், அதே பாணியில் பலரைத் திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பறித்த சந்தியா என்ற பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்[8]. சந்தியா தனபாலை கல்யாணம் செய்து கொண்டார்[9]. திருமணத்தை முடித்துவிட்டு சந்தியாவுடன் வந்தவர்கள், பெண் புரோக்கர் பாலமுருகன் ஆகியோர் திருமண கமிஷன் தொகையாக ரூ.1,50,000-ஐ வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்[10].  ஆனால், முதல் இரவிலேயே அப்பெண் மாயமாகி விட்டாள். இன்னொரு திருமணத்திற்கு தயாரானாள், விசயம் அறிந்த, அந்த நபர் மூலமாக திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க வைத்து, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி, மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்திருக்கின்றனர்[11]. அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது எனப் பேசி, போன் மூலமே முடிவு செய்திருக்கிறார் அந்தப் பெண் புரோக்கர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்துவைத்திருக்கின்றனர்[12].

போலி கல்யாணமா, புதுவித விபச்சாரமா, செக்ஸ் ரீதியிலான கொள்ளையா?: கைதான சந்தியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது[13]:- எனக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன்தான் என்னை அடித்து மிரட்டி திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார்[14]. 6-க்கும் மேற்பட்ட திருமணம் செய்துள்ளேன். திருமணம் முடிந்ததும் என்னை அங்கிருந்து தப்பித்து வருமாறு கூறி காரில் அழைத்து வந்துவிடுவார்[15]. பின்னர் கொண்டு வந்த பொருட்களை பிடுங்கி கொண்டு சிறிய‌ தொகையை மட்டும் தருவார். பின்னர் அதையும் மிரட்டி வாங்கி கொள்வார்[16]. அவரது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்[17]. அதனால்தான் நான் இந்த மோசடி திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, மேலும் 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். மோசடி திருமணத்தில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்து கொள்வார்கள். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.

ஏமாற்ற, கொள்ளையடிக்க பின்பற்றப் பட்டு வரும் செயல்முறை: மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள். என்னுடைய அக்காள், மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள். ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பே அக்காள், மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பெண் பார்க்க திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும். அப்படி பேசும்போது செல்போன், பட்டுசேலை, பணம், நகை என ஆசையாக கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும். திருமணம் முடிந்ததும், இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும். முதல் இரவு முடிந்ததுமே தப்பி செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளையை அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும். இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார் அவமானங்களுக்கு பயந்து பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை. இதை புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் நாங்கள் திருமண மோசடிகளை செய்துள்ளோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைகளில், விவகாரங்களில், வழக்குகளில் எழும் விசயங்கள்:

  1. தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது.
  • திராவிடத்துவ அரசு இந்து திருமண சட்டம் இருந்தாலும், இந்த சட்டம் உருவாக்கப் பட்டு, தமிழக இந்துக்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
  • சார்பதிவாளர்களை திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டு, திமணம் ஆன தம்பதியர் அங்கு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆனால், இந்துத்துவவாதிகள் வழக்கம் போல, ஈவேரா, பெரியார், அண்ணா, தம்பி என்று அவர்களது தாம்பத்தியத்தைப் பற்றி ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளனர்!
  • திராவிடத்துவத்தில், சுயமரியாதை திருமணத்தில் அதெல்லாம் சகஜமாக இருந்தது. பிறகு, அது சட்டப் படி செல்லாது என்றாகியது!
  • அப்பொழுது தான், இந்து திருமண சட்டததில் அந்த சுயமரியாதை திருமண ஐக்கியம் ஆகி, சட்டப் படி மரியாதைப் பெற்றது.
  • அதுவரை, ஈவேரா பாடை, பெரியாரிச பாசை, ராசாவின் பாஷையாகத் தான் இருந்தது. எந்த மனுவும், சோழனும் கண்டுகொள்ளவில்லை.
  • இப்பொழுது, தாலுகா ஆபிசுக்குச் சென்றவுடன், ஆன்-லைன் பதிவு இருந்தாலும், ஆப்-லைனில் தரகர்களின் கொண்டாட்டம் உள்ளது!
  • வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
  1. தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது.

 © வேதபிரகாஷ்

29-09-2022


[1] NEWS18, திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது!, LAST UPDATED : JUNE 22, 2019, 10:45 IST

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/man-arrested-for-defrauding-women-through-marriage-information-website-in-chennai-vaij-171055.html

[3] தமிழ்.இந்து, பெண் மருத்துவரிடம் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது, செய்திப்பிரிவு, Published : 22 Jun 2019 07:52 AM; Last Updated : 22 Jun 2019 07:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/172084-7.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது!, By Veera Kumar Updated: Monday, January 8, 2018, 14:22 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/man-arrested-coimbatore-cheating-9-women-getting-money-from/articlecontent-pf287243-307803.html

[7] பாலிமர் செய்தி, 7வதாக திருமணம் செய்யவிருந்த மோசடி, பெண், தரகர் உள்ளிட்ட 4 பேருடன் கைது, செப்டம்பர் 23, 2022, 01:57:33 PM.

[8] https://www.polimernews.com/dnews/188110

[9] விகடன், 6-வது திருமணம் ஓவர்… 7-வது திருமணத்துக்கு ரெடி!- சந்தியா போலீஸில் சிக்கியது எப்படி?, துரை.வேம்பையன், Published:24 Sep 2022 10 AM; Updated: 24 Sep 2022 10 AM

[10] https://www.vikatan.com/news/tamilnadu/police-arrested-a-woman-who-defrauded-6-men-in-the-name-of-marriage-and-getting-ready-for-7th-marriage

[11] தினத்தந்தி, திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி, உறவினர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு, ஏப்ரல் 21, 2:25 am (Updated: ஏப்ரல் 21, 2:25 am).

[12] https://www.dailythanthi.com/News/Districts/2021/04/21022506/panam.vpf

[13] தினத்தந்தி, மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினர் கைதானகல்யாண ராணிபரபரப்பு வாக்குமூலம், Sep 27, 12:15 am (Updated: Sep 27, 12:16 am)

[14] https://www.dailythanthi.com/News/State/raani-801720

[15] தினமலர், 8வது திருமணத்துக்கு தயாரானகல்யாண அழகிசந்தியா, Added : செப் 25, 2022  04:05

https://www.dinamalar.com/news_detail.asp?id=3130710

[16] காமதேனு, 6 பேருடன் கல்யாணம்; இரவோடு இரவாக நகையுடன் எஸ்கேப்: 7-வது நபரை திருமணம் செய்ய முயன்ற மனைவியை பிடித்த கணவர், Updated on : 23 Sep, 2022, 10:19 am

[17] https://kamadenu.hindutamil.in/national/the-young-woman-who-cheated-and-married-six-men-and-her-immediate-family-were-arrested

தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப் பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? (1)

செப்ரெம்பர்29, 2022

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? (1)

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது: 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.

திருமணம் ஆன 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும்: “தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. 90 நாள்களுக்குள் பதிவு செய்தால் 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும். 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும். திருமணத்தைப் பதிவு செய்து தருவதாக உங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள். ஆயிரக்கணக்கான ரூபாய்களை பறித்துவிடுவார்கள். இப்படி குறிப்பிட்டாலும் தரகர்களின் ராஜ்ஜியம் தான் வழக்கம் போல கொடிக் கட்டிப் பறக்கிறது.

சார்பதிவாளர்கள் திருமண பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது: இச்சட்டத்தின்படி,

  1. பதிவுத் துறைத் தலைவர்,
  2. மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மற்றும்
  3. சார் பதிவாளர்கள் அனைவரும்

திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் ‘ஒ’ மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும். கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் http://www.tnreginet.net வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/-) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும். மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும். இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.

உண்மையான மணமக்கள் தொல்லைக்குள்ளாகிறார்கள்: உண்மையாக திருமணம் செய்து கொண்டு, பதிவு செய்ய வருபவர்களிடம் ஆதார் கார்டு, வீட்டு முகவரிக்காக ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் என்று பலவித ஆவணங்கள் கேட்கிறார்கள். இவை மணப்பெண், மாப்பிள்ளை, மற்றும் இவர்களின் பெற்றோர் என்று அனைவரின் ஆவணங்களையும் கேட்டுப் பெற்று, சரிபார்க்கிறார்கள். நேரில் வரசொல்கிறார்கள். மணமகன், மணமகள், அவர்களின் பெற்றோர்கள் சகிதம் தாலுகா ஆபிசில் ஆஜராகி, மணிக்கணக்கில் உட்கார வேண்டும். கூப்பிடும் போது, இரண்டு-மூன்று முறை உள்ளே செல்ல வேண்டும், கேட்ட கேள்விகலுக்கு பதில் சொல்லி கையெழுத்துப் போட வேண்டும். அத்தகைய செயல்களில் கமா, புள்ளி, பெயர்கள் இடைவெளி இருந்தால் கூட தப்பு கண்டு பிடிப்பார்கள், கேள்வி கேட்பார்கள். ஆனால், கடைசியில், எல்லாம் சரியாக இருந்தால் கூட காசு வாங்காமல் வேலை செய்வதில்லை. தரகர் மூலமாக கவனிக்கப் படுகிறது. பீஸ் என்று தாகர் பல-ஆயிரங்களை வாங்கிக் கொள்வது தான் நிதர்சனம். பிறகு இவையெல்லாம் மற்றவர்களுக்கும் அமூல் படுத்த வேண்டும் இல்லையா?

வழக்கறிஞர்கள் மற்றும் தரகர்களின் வேலை என்ன?: வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது. சாதி, மதம் மறுப்பு திருமணம் என்று கூட்டங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. தாலிக்குத் தங்கம், உதவித் தொகை, என திட்டங்கள்…..எஸ்.சி சான்றிதழ் வைத்துக் கொண்டு சலுகை, சர்ச்சில் திருமணம்….., ஜாதி மறுப்பு எனல், அதற்கும் சலுகை-பணம் பெறல்…..இப்படி அரசியல், அரசாங்கம் என்றால், கல்யாண மன்னன்கள், ராணிகள் தனிப்பட்ட முறையில் கொள்ளையடிக்க கிளம்பி விட்டார்கள்[1]. பலதார திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதும் திகைப்பாக இருக்கிறது. இத்தகைய பாலியல் சட்டமீறல்கள், உண்மையில், குற்றங்கள் என்றே கொள்ளலாம். ஏனெனில், இவற்றில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு  பெண் தானாகவே செய்கிறாள் அல்லது, யாறரோ வற்புருத்தி செய்ய வைக்கிறார்கள், கும்பலாக சேர்ந்து அத்தகைய மோசடிகளை செய்கிறார்கள் என்று கொண்டால், அத்தகைய கும்பல்கள் ஊக்குவிக்கப் படக் கூடாது.

விபச்சாரம் போல நடப்பதை தடுக்கவேண்டும்: ஒருவிதத்தில் விபச்சாரம் என்றாலும், அதனை திருமணம் செய்து கொண்டு செய்கிறார்கள்[2]. விபச்சாரம் என்று செய்தால் அது சட்டவிரோதம்[3]. இப்படி செய்தால், அதுவும் கிடைக்கும், இதுவும் கிடைக்கும்[4]. திருமண சான்றிதழ் வேறு! இதனால் தான், வகை-வகையாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன[5]. அவற்றில் உண்மை எது, பொய் செய்து, திட்டம் போட்டு செய்தது எது என்றெல்லாம் ஆராய்ச்சியும் செய்ய முடியாது. ஆக, திருமண தரகர்கள், கல்யாண புரோகர்கள், தாம்பத்திய இடைதரகர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வழக்கறிஞர்கள் மற்றும் இவர்களுக்கு தொடர்புகள் இருக்குமோ என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. உண்மையான பதிவுக்குச் செல்லும் போது, ஆதார் கார்டு, வீட்டு முகவரிக்காக ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் என்று பலவித ஆவணங்கள் கேட்கிறார்கள். சரிபார்க்கிறார்கள். கமா, புள்ளி, பெயர்கள் இடைவெளி இருந்தால் கூட தப்பு கண்டு பிடிக்கிறார்கள். பிறகு, இப்படி ஒரே ஆணுக்கு, அல்லது பெண்ணுக்கு எப்படி பலமுறை திருமணம் செய்ய முடியும், சான்றிதழ் கொடுக்க முடியும்?

© வேதபிரகாஷ்

29-09-2022


[1] இ.டிவி.பாரத், பண மோசடியில் ஈடுபட்ட மனைவி: நடவடிக்கை எடுக்க கோரி கணவர் புகார், Published on April 22, 2021, 1;55 AM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/erode/erode-sp-office-wage-worker-complains-seeking-action-against-to-wife/tamil-nadu20210422015545648

[3] செய்திபுனல், திருமண புரோக்கரில் இருந்து, அந்த புரோக்கராக மாறி கொள்ளை சம்பாத்தியம் பார்க்கும் கும்பல்……திருமணம் ஆகாதவர்கள் உஷார்…!, Sriramkannan.P, 21-04-2021 02;22;43 AM.

[4] https://www.seithipunal.com/tamilnadu/erode-marriage-brokers-promote-prostitution-brokers-tra

[5] தினமலர், திருமண ஆசைகாட்டி பணம் பறிப்பு; எஸ்.பி.,யிடம் வாலிபர் புகார் , பதிவு செய்த நாள்: ஏப் 21,2021 13:46; https://m.dinamalar.com/district_detail.php?id=2754059