பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு (முழுவிவரங்களுடன்)


பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!

தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்[1]: திருச்சியில், புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி (St.Joseph’s College[2]) முதல்வர் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், மிகவும் பழமையான, புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக ராஜரத்தினம் உள்ளார். இவர் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார். ப்ளாரன்ஸ் மேரி (28), நேற்று முன்தினம் இரவு, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் அளித்தார்[3].

 

ப்ளாரன்ஸ் மேரி புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ஆர். ராஜரத்தினம் எஸ்.ஜே, (Rev.Dr.R.Rajarathinam SJ) அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்[4]. அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்[5].

 

கருகலைத்த ராஜரத்தினம், ஆபாச படம் எடுத்து மிரட்டுதல்: இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்[6]. திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, “இனிமேல் என்னை பார்க்கக் கூடாது; இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது’ என மிரட்டினார். அவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர். இதுகுறித்து பாதிரியார் சார்ந்த சபையில் புகார் தெரிவித்தும், நியாயம் கிடைக்கவில்லை. மேலும் , “என் வாழ்க்கையையும், கண்ணியத்தையும், கற்பையும் இழக்க செய்து என்னை நடு ரோட்டில் நிறுத்திய பாதிரியார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும் பாதுகப்பு கொடுக்க வேண்டுகிறேன்”, இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[7]. இதையடுத்து கோட்டை மகளிர் போலீசார், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் மிரட்டல் ஆகிய இருபிரிவுகளிலும், அவருக்கு துணையாக இருந்த மூன்று பாதிரியார்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர். இதையெடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்[8]. பிளாரன்ஸ் மேரியை நேற்று போலீஸ் பாதுபாப்போடு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். திருச்சி எ-1 ஜுடிஸியல் மேஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவரை ஆஜர் செய்தனர். அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடத்த மாஜிஸ்டிரேட் ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார். இன்று புதன்கிழமை சோதனை நடக்கிறது[9].

 

ராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்[10]: இந்நிலையில், “கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ள தூய வளனார் கல்லூரி முதல்வர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு, அவர் சார்ந்த சபையில் முக்கிய பதவி உயர்வு, விரைவில் வரவுள்ளது. அப்பதவிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வரக்கூடாது என்பதற்காக, கல்லூரியிலேயே மெஜாரிட்டியாக இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து செய்யும் சதி’ என, முதல்வர் ராஜரத்தினம் தரப்பினர் கூறி வருகின்றனர். பல முக்கிய பிரபலங்கள் படித்த கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு புகார் எழுந்து, போலீசார் வழக்கு பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்[11]. ராஜரத்தினமே தன்னை ஒருமாதம் அதாவது போலீஸ் விசாரணை முடியும் வரை அவ்வாறு பணிவிடுதலை கொடுக்கக்கூறி மனுகொடுட்த்துள்ளார் என்று சர்ச் / சொஸைடி ஆஃப் ஜீஸஸ் அறிக்கை கூறுகிறது[12]. ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது[13]. கல்லூரியில் உள்ளவர்கள் அடுத்த வருடம் ஜூலையில் ஓய்வு பெறவுள்ளதால், மீண்டும் பதவிக்கு வருவது முடியாது என்கின்றனர்[14].

ராஜரத்தினத்தை கைது செய்ய கோரி ஆர்பாட்டம்[15]: இதற்கிடையில் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினத்தை கைது செய்யக் கோரி, மக்கள் கலை இயக்கிய கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்துக்குக் காவல்துறை அனுமதி தரவில்லை என்று தெரிவித்துள்ள ராஜா, “தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று பாமக சார்பிலும் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை கைது செய்யக் கோரி,  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருச்சி மாநகர பாமக மாவட்டச் செயலாளர் திலீப் குமார் அறிவித்துள்ளார்.

காணாத ஆளுக்கு ஜாமீன் கேட்டு மனு[16]: காணமல் மறைந்துள்ள கற்பழிப்பு வன்புணர்ச்சி பாதிரியார் தன்னை போலீஸார் கைது செய்யாமல் இருக்க முஞாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளாராம்! நீதிபதி வி. பெரிய கருப்பையா விசாரித்த போது, அரசு தரப்பு வக்கீல் ஆர். எம், அன்புநிதி, “கற்பழிப்பு புகார் கூறியுள்ள பிளாரன்ஸ் மேரியை மருத்துவ பரிசோதனைக்கூபடுத்தி உள்ளோம். இந்நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் கொடுத்தால், சாட்சிகளை கலைக்கக்கூடும்”, என்று வாதிட்டார். பிளாரன்ஸ் மேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களை எழுத்துமூலம் தாக்கல் செய்யும்படி உத்தரவு இட்டு வழக்கு விசாரணையை 18ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

பிளாரன்ஸ் மேரிக்கு மருத்துவ பரிசோதனை: “கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ஆர். ராஜரத்தினம் எஸ்.ஜே, (Rev.Dr.R.Rajarathinam SJ) அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்[17]. அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்[18]. இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்[19]. திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர்”, என்றெல்லாம் புகார் கொடுத்ததால், அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடத்த மாஜிஸ்டிரேட் ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.  புதன்கிழமை திருச்சி அரசு மருத்துவ மனையில் சோதனை நடந்தது[20]. மகப்பேறு பிரிவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலவித பரிசோதனைகள் நடத்தப் பட்டன. டாக்டரின் மருத்துவ அறிக்கையை போலீஸார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்[21].

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்[22]: தான் இரண்டுமுறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்விக்கப்பட்டார் என்று கூறுகிறார்[23]. அப்படியென்ன பாதிரியார்கள் கன்னியாஸ்திரீக்களுக்கு ஊற்றிக் கொடுக்கிறார்கள்? இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செமினரிகளில் கற்றுக் கொடுக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது. அப்படியிருந்தால், கன்னியாஸ்திரீக்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.

அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டினார்: அதாவது வன்புணர்ச்சியை, தான் உடலுறவு கொண்டதையே படமெடுத்தாரா எனும் போது நினைக்கவே திகைப்பாக இருக்கிறது. எப்படி ஒரு கத்தோலிக்க எஸ்.ஜே பாதிரிக்கு அத்தகைய குரூரக்காமக்கலவி எண்ணம் வரும்? செமினரிகளில் அதையும் கற்றுக் கொடுத்தால் இனி, கன்னியாஸ்திரீக்கள் கதி அதோகதிதான்!

பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார்:அதெப்படி பல ஊர்களுக்கு, அந்த பாதிரியார் அப்படி அந்த கன்னியாஸ்திரீயைக் கூட்டிக் கொண்டு செல்ல முடியும்? இளமையான அழகான கன்னியை அப்படி “ஃபாதர்” / பாதிரி தள்ளிக் கொண்டு போகிறாரே என்று யாரும் தடுக்க மாட்டார்களா? இப்படி நெருப்பையும், பஞ்சையும் பக்கத்தில்-பக்கத்தில் வைத்து விளையாடுவதுதான் பாதிரி-கன்னிமார் தேவ விளையாட்டுகளா?

இதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்: ஆமாம், இதில் என்ன ஆச்சரியப்படுவதற்கு உள்ளது. பாதிரி நல்ல மேய்ப்பர், மேயக்கூடியவர், வேலைக்காரர் என்று தெரிகிறது. கன்னியாஸ்திரீயும் ஒத்துழைத்தாரா வலுக்கட்டாயமாக அப்படி புனைந்தாரா என்பதெல்லாம் அந்த பாதிரி, கன்னி மற்றும் கர்த்தருக்குத்தான் தெரியும்!

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார்[24]. இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார். ஆக, இப்படியெல்லாம் பயிற்சி கொடுத்துள்ளபோது, இவர்கள் எல்லோருமே விவரமாகத்தான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது!

திருமணம் என்றதும் மிரட்டிய பாதிரி கலங்கிய கன்னி: அந்த கன்னியாஸ்திரீ சொல்கிறார், “விஷயம் தெரிந்து விட்டதால் திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார்”, அதாவது கல்யாணம் இல்லை, ஆனால், அப்படியே இருந்தால் இருந்து கொள்ளலாம் என்பது போல! அதாவது ஜாலியாக இருக்கலாம் என்று தீர்மானித்தார் போலும்!

இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர்: இங்குதான் விவகாரமே உள்ளது போல இருக்கிறது. ஒரு பொறுப்புள்ள பாதிரி, அதுவும் புகழ்மிக்க கல்லூரியின் முதல்வர் இப்படி காமுகனாக செயல்பட்டிருக்கும் போது, சொஸைடி ஆஃப் ஜீஸஸ் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறது என்றால், அதன் ஒத்துழைப்பு எநன்றாகவே தெரிகிறது. அதாவது, அவர்களது பயிற்சி புத்தகத்தில் கொடுத்திருப்பது உண்மைதான் என்றாகிறது. அதாவது, சொஸைடி ஆஃப் ஜீஸஸ் என்பவர்கள் தாங்கள் என்ன செய்யவேண்டும், என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான கையேடு ஒன்று இருக்கிறது. சிலர் அதை போலி ஆவணம் என்று மறுப்பாரும் உண்டு. ஆனால், உலகமெல்லாம் உள்ள எஸ்.ஜேக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படித்தான் செய்து வருகிறார்கள். இங்கு கூட சட்டத்திற்கு புறம்பாக இப்படி கூத்தடித்து விட்டு, மிரட்டுவது அல்லது உள்ளேயே பஞ்சாயத்து செய்து கொள்ளும் விதத்தில் ஈடுபடுவது முதலியன அவர்களது ஜனநாயக விரோத, தேசவிரோத நிலையினையே காட்டுகிறது. ஆனால், இவர்கள் எல்லாம் தான் சட்டம், ஜனநாயகம், மனித உரிமைகள், பெண் உரிமைகள் என்றெல்லாம் பேசுவார்கள், கருத்தரங்கங்கள் நடத்துவார்கள், புத்தகங்கள் எழுதுவார்கள் / போடுவார்கள்!


[1] தினமலர், தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார், அக்டோபர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227

[2] St.Joseph’s College is an affiliated First Grade College of the Bharathidasan University. It was established in 1844 by the Fathers of Society of Jesus (The Jesuits). http://www.sjctni.edu/

[8] “A case under IPC Sections 376 (rape) and 506 (1) (criminal intimidation) has been registered. Only after thorough investigation will we proceed further,” assistant commissioner R Srinivasan had told TOI on Tuesday.
Read more: Tiruchi principal accused of rape loses – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Tiruchi-principal-accused-of-rape-loses/articleshow/6744431.cms#ixzz12I6pHrh9

[10] தினமலர், திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட், அக்டோபர் 13, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105786

[12] The statement added that Rajarathinam had requested to be relieved for a month from the post pending completion of the police investigation.

http://www.deccanchronicle.com/chennai/college-sacks-principal-accused-raping-nun-432

[13] An order issued by Fr M Devadoss, chairman of the governing bodies of Jesuits’ colleges in Tamil Nadu, “The College Management has relieved Father R Rajarathinam from the post with immediate effect,” officials said, adding a new person would take over as principal-in-charge.

http://ibnlive.in.com/generalnewsfeed/news/college-principal-removed-from-post/409300.html

Read more: Tiruchi principal accused of rape loses – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Tiruchi-principal-accused-of-rape-loses/articleshow/6744431.cms#ixzz12I6NWfD0

[14] College sources said that it was unlikely that Rajarathinam would resume duty as principal even after the investigation though his tenure ends only in June next year. Fr A Sebastian, an associate professor who has been appointed as the acting principal, would continue in the post, they said.

Read more: Tiruchi principal accused of rape loses – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Tiruchi-principal-accused-of-rape-loses/articleshow/6744431.cms#ixzz12I74feVi

[22] The woman said Rajarathinam, who used to visit the college where she was pursuing her MA, once invited her to his college where he drugged and raped her.

[23] She said she was forced to approach the police as she wanted to put an end to the abuse. She also claimed that she conceived twice and was forced to have abortions.

http://www.deccanchronicle.com/chennai/college-sacks-principal-accused-raping-nun-432

[24] She claimed that she was raped several times over a period of two years since 2006 and when she was pregnant in 2008, she had to undergo abortion at a private hospital.

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

6 பதில்கள் to “பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு (முழுவிவரங்களுடன்)”

  1. vedaprakash Says:

    கன்னியாஸ்திரி கற்பழிப்பு பாதிரியாருக்கு ஆண்மை சோதனை
    Tiruchirappalli வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 10:34 PM IST மாலைச்சுடர்

    கன்னியாஸ்திரி கற்பழிப்பு பாதிரியாருக்கு ஆண்மை சோதனை

    திருச்சி, அக். 15, 2010-

    திருச்சி இந்தியன் பாங்க் காலனியில் உள்ள புனித அன்னாள் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பிளாரன்ஸ் மேரி. இவர் இசைக் கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்தார்.

    அப்போது அவருக்கும் திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்துக் கும் பழக்கம் ஏற்பட்டது. பாதிரியார் ராஜரத்தினம் இசை ஆல்பம் தயாரித்து வந்தார். அதில் பிளாரன்ஸ் மேரியின் பாடலும் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நன்னடத்தை மீறியதாக பிளாரன்ஸ் மேரி கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து பாதிரியார் ராஜரத்தினம் மீது அவர் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதில் பாதிரியார் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாகவும், இதனால் கர்ப்பம் அடைந்ததால் கருகலைப்பு செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். பிளாரன்ஸ் மேரிக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப் பட்டது. அதில் அவர் கன்னித்தன்மையை இழந்தது உறுதியாக தெரிந்தது.

    இது தொடர்பாக மருத்துவ அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    கற்பழிப்பு புகார் விவகாரம் விசுவரூபம் எடுத்ததை தொடர்நது கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து பாதிரியார் ராஜ ரத்தினம் நீக்கப்பட்டார்.
    தன் மீது வழக்கு பதிவு செய்ததும் அவர் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    மதுரை ஐகோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்காவிட்டால் 18-ந் தேதிக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது.

    இதற்கிடையில் பாதிரி யாருக்கு ஆண்மை பரி சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டு அனுமதி பெற திங்கட் கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

  2. P. Ganesa Gurunathan Says:

    Instead of declaring Parangimalai as national pilgrimage centre, Rajaratnam, and other rapist Bishops, pastors, SJs etc, can be conferred with “national rapist heroes” of 2010, 1009, 1008 etc!

  3. கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கு: மறைக்கப்படும் விவரங்கள், தொடரும் ரகசியங்கள், Says:

    […] https://womanissues.wordpress.com/2010/10/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E… […]

  4. கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கு: மறைக்கப்படும் விவரங்கள், தொடரும் ரகசியங்கள், Says:

    […] https://womanissues.wordpress.com/2010/10/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E… […]

  5. maria Says:

    muthalil neengal sariyaanavargala entu sinthiungal…next see other’s matter…ok….without knowing truth pls dont balme anybody pls……dont blame anybody…

    • vedaprakash Says:

      It is the question of morality that is claimed by the Christians as the sole custodians.

      With which they have tried to hoodwink others in the world.

      But, now they have degraded to that level……….therefore they should assess about their standards before criticising Indians and Hindus in particular.

      Read what the Christians have written about India, then you can understand them.

      Perhaps, you renounce Christianity and come back to your religion of forefathers knowing the truth.

பின்னூட்டமொன்றை இடுக