டிக்டாக் காதலி, மின்னணு காதலன், மோசடியில் முடிந்த சமூக வலைதளக் காதல், தப்பித்த ஆண், மாட்டிக் கொண்ட பெண்!


டிக்டாக் காதலி, மின்னணு காதலன், மோசடியில் முடிந்த சமூக வலைதளக் காதல், தப்பித்த ஆண், மாட்டிக் கொண்ட பெண்!

கொரோனா காலத்தில் சமூக ஊடக குற்றங்கள்: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் டிக்டாக் ஏமாற்று அலைகள் இன்னும் ஓயாமல் அடித்து வருகின்றன. கொரோனவை விட டிக்டாக் நோய் மிக கொடுமையானது என்பதற்கு தமிழகத்தில் நடந்துள்ள பல்வேறு குற்ற சம்பவங்கள் சாட்சி, இப்படி பீடிகை போட்ட ஊடகங்கள் அந்த காசியை மறந்து விட்டனர் போலும். நல்லது நடப்பதெல்லாம் இத ஊடகக் காரர்களுக்குத் தெரியாது போலும். லட்சக் கணக்கில் உணவு இல்லாதோருக்கு, உணவு சமைத்து விநியோகித்திருக்கிறர்கள். ஐடி மட்டுமல்ல மற்ற துறை இளைஞர்கள் பலர் அத்தகைய உணவு விநியோகம் செய்துள்ளனர். அதில் சிறப்பு என்னவென்றால், கஷ்டப்படுபவர்களை கண்டு கொடுத்து வருகிறார்கள். எனவே, வேலை-வெட்டி இல்லாமல் சும்மா இருப்பதை விட அல்லது நன்றாக சம்பாதித்து பொழுது போகவில்லை என்றால், நற்பணி செய்யாமல், இப்படி பெண்ணை நோக்கிச் செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது, படித்த இளைஞர்களுக்கு அழகல்லவே!

டிக்டாக் போதையில் ஐடி எஞ்சினியர், காதலித்த மின்னணு அறிவிஜீவி: மதுரை மாவட்டம் எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கல்லூரியில் எஞ்சினியரிங் படிப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு டிக்டாக்கில் அம்முக்குட்டி என்கிற சுசி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. அந்த பெண் ராமச்சந்திரனுக்கு தனது செல்போன் என்னை பகிர்ந்து கொண்டதையடுத்து இருவரும் போனில் பேச ஆரம்பித்துள்ளனர்[2]. புகைப்படத்தில் சீரியல் நடிகையை போல இருக்கும் அவர், கல்லூரி மாணவி என்று கூறி ராமச்சந்திரனுடன் பழகியிருக்கிறார். பெண் அழகாக இருந்தால் போதும், டிக்டக் அடிமைகள் அவர்கள் என்ன செய்தாலும் லைக்குகள் அள்ளி வீசுவார்கள், அதோடு பைசாக்களையும் வீசி வீதிக்கு வந்து புகார் கொடுப்பார்கள்[3], இப்படி “பாலிமர் செய்தி” வர்ணிக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாகி, சுசியிடம் செல்போனிலும், கனவிலும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் ராமச்சந்திரன். இந்நிலையில் தனக்கு எப்போது எல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் கூகுள்பிளே மூலம் 95 ஆயிரம் ருபாய் வரை ராமச்சந்திரனிடம் பெற்றுள்ளார் சுசி[4]. பார்க்காமலேயே காதல், பிறகு பணம் கொடுத்தார் என்றால், அது சரியில்லை. இவருக்கும் ஏதோ உள்நோக்கம் இருந்திருக்கிறது, மாட்டிக் கொண்டார், என்றாகிறது.

டிக்டாக் காதலி வராதலால் சந்தேகம்: இந்நிலையில் டிக்டாக்-வாசிகளுக்கென்று திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க சென்ற ராமச்சந்திரன், தனது காதலியையும் அங்கு அழைத்துள்ளார்[5].  ஆனால் சுசி அதற்கு மறுத்ததால், ராமச்சந்திரனுக்கு சந்தேகம் ஏறட்டுள்ளது. தான் காதலிப்பது உண்மையில் பெண்தானா? அந்த புகைப்படம் உண்மைதானா என்ற அதிர்ச்சி தொற்றிக்கொண்டதால், மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் கொடுத்துள்ளார்[6]. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் வசித்து வந்த / திருப்பூர் ஆலங்காடு , வீரபாண்டி பிரிவு அருகில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த[7] அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்[8]. முகம் வேறு புகைப்படம் வேறாக இருந்த அவரிடம் விசாரித்தபோது, டிக்டாக் மட்டுமில்லாமல் முகநூலிலும் போலி கணக்குகளை தொடங்கி, அதில் வேறு பெண்ணின் புகைப்படங்களை பதிவிட்டு, லைக்ஸ் கொடுக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணம் சம்பாதித்து வருவது தெரிய வந்தது[9]. மேலும் அவர் இதுபோல பல பேரை ஏமாற்றியுள்ளதை கண்டறிந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இதேபோன்று மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த வாரம் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமாகி முதியவரிடம் ரூ. 2.70 லட்சம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது[11]. ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற ஆசையில், இத்தகைய மோசடி வேலையில், இப்பெண் இறங்கியுள்ளாள்[12].

பெண்களும் மோசடிகளில் ஈடுபடுவது: இப்பெண் ஏமாற்றி பணம் பறிப்பதோடு நிறுத்தியுள்ளாள். மற்றவர்களைப் போல, திருமணம் செய்து கொண்டு குடும்பங்களைக் கெடுக்கவில்லை. அதுமட்டுமல்லாது, கொள்ளை, கொலை என்ற ரீதியில் எல்லாம் குற்றங்கள் நீண்டுள்ளன. காசியைப் போன்று, நூற்றுக் கணக்கான பெண்களை கற்பழிக்கவில்லை [இங்கு பெண் சம்பந்தப் பட்டுள்ளாள்]. இப்பொழுதுள்ள போலியான சமுதாய ஆடம்பர வாழ்க்கை எப்படி பெண்களை பாதிக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இயற்கையில், பெண்களுக்கு நகை, புடவை, ஆடைகள். ஆடம்பர வாழ்க்கை முதலியவற்றில் ஆசை உண்டு. வசதி இல்லாதவர்கள், நிலைமை அறிந்து அமைதியாக இருப்பர். சிலர் புழுங்கிக் கொண்டிருப்பர். சிலர் இத்தகைய மோசடிகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது. இவர்களைமுறைப்படி ஏதாவது வேலை கொடுத்தால், இத்தகைய மோசைகளில் ஈடுபட மாட்டார்கள். மேலும், இளைஞர்களும், சமூக ஊடகங்களில், இளம்பெண்களை கவர வேண்டும், பேச வேண்டும், காதலிக்க வேண்டும் போன்ற எண்ணங்களுடன் செயல்பட கூடாது. இருக்கின்ற சமூகப் பிரச்சினைகளில், இவற்றை கொண்டுவராமல் இருந்தால் சரி.

© வேதபிரகாஷ்

11-06-2020


[1] Samayam Tamil, டிக்டாக் அம்முக்குட்டியால் வீதிக்கு வந்த மதுரை வாலிபர்… ‘மேகலை அம்மா மேகலை‘…, Divakar M ; Updated: 09 Jun 2020, 05:59:00 PM

[2] https://tamil.samayam.com/latest-news/crime/tirupur-girl-cheated-a-techie-by-showing-fake-photos-in-tiktok-in-madurai/articleshow/76284079.cms

[3] பாலிமர் செய்தி, காதல் அடிமைகளின் பாக்கெட்டை பதம் பார்த்த டிக்டாக் அழகி! திருப்பூரில் கைது, ஜூன்.9, 2020. 02.47.00

[4]https://www.polimernews.com/dnews/111754/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-..!%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] நியூஸ்.டிஎம், டிக்டாக் மூலம் இளைஞரிடம் மோசடி.. போலி ஐடியில் வலம்வந்த இளம்பெண்.. !, By Muthu NewsTM | Wed, 10 Jun 2020.

[6] https://newstm.in/tamilnadu/techtalk-fraud-on-young-man-with-fake-id/c77058-w2931-cid693882-s11189.htm

[7] தினமலர், மதுரை இளைஞர் உட்பட பல்வேறு நபர்களிடம்டிக்டாக்மூலம் பணம் மோசடி செய்தபெண்கைது.!!!, பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2020 17:03

[8] http://www.dinamalarnellai.com/web/districtnews/30143

[9] தமிழ்.இந்து, இளைஞர்களிடம் பண மோசடி: திருப்பூர் டிக்டாக் பெண் மதுரையில் கைது, என்.சன்னாசி, Published : 09 Jun 2020 15:28 pm; Updated : 09 Jun 2020 15:28 pm.

[10] https://www.hindutamil.in/news/crime/558602-tirupur-tiktok-lady-arrested.html

[11] மாலைமலர், டிக்டாக்கில் பழகி ரூ.1 லட்சத்தை இழந்த வாலிபர்: திருப்பூர் பெண் கைது, பதிவு: ஜூன் 09, 2020 13:59 IST

[12] https://www.maalaimalar.com/news/district/2020/06/09135929/1596693/Tirupur-Woman-Arrested-Rs-1-lakh-loss-for-TikTok-Cheating.vpf

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக