கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!


கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!

ஒரு ஜெஸுவைட் சாமி வெளியே, மற்றொன்று உள்ளே: திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதைத் தொடர்ந்து, அக்கல்லூரி முதல்வராக (பொறுப்பு) செபஸ்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வராக ராஜரத்தினம் பணிபுரிந்து வந்தார். அவர் மீது, அரியலூர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். இப்புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜரத்தினத்திற்கு பதிலாக செபஸ்டியனை முதல்வராக கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது[1]. தமிழக ஜெஸ்யூட் கல்லூரிகளின் தலைவர் தேவதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போலீஸ் வழக்கு விசாரணையை தொடர்ந்து, தன்னை ஒரு மாதம் முதல்வர் பணியிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, ராஜரத்தினத்திற்கு பதிலாக நேற்று முதல் செபஸ்டியன், தூய வளனார் கல்லூரியின் முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது[2].

கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை[3]: கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரிக்கு, அரசு மருத்துவமனையில் நேற்று, மருத்துவப் பரிசோதனை நடந்தது. கல்லூரி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, ப்ளாரன்ஸ் மேரி (28) என்ற கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மற்றும் அவருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்த தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகிய மூன்று பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியை, நேற்று முன்தினம் மாலை திருச்சி ஜே. எம்., 1 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். கன்னியாஸ்திரிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு ப்ளாரன்ஸ் மேரி, அவரது அக்கா மேரி, கோட்டை பெண் போலீசார் இருவர், கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி வந்தனர்[4]. அங்கு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது. “மருத்துவப் பரிசோதனையின் முடிவு, இன்று மாலை போலீசாரிடம் வழங்கப்படும்’ என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது: இப்படி மருத்துவர் சொல்வதும் ஆச்சரிமாக உள்ளது. முதலில் ராஜரத்தினத்தை பரிசோதித்து, அவரது அணுக்கள் / டி.என்.ஏ மூலம், உடலுறவு கொண்டதை நிரூபிக்கலாம். கருக்கலைப்பு செய்தாரா இல்லையா என்பதை பிறகு பார்த்து கொள்ளலாம். ஆனால், இதுவரை ராஜரத்தினம் பரிசோதனைக்குட்படாதது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. அவர் காணாமல் மறைந்திருக்கிறார் என்று வேறு சொல்லப்படுகிறது[5]. மேலும், “தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்” என்று ப்ளாரன்ஸ் மேரியே குறியுள்ளபோது, அங்கு சென்று விசாரணை செய்து உண்மையை அறியலாம்[6]. இதையெல்லாம், நாம் ஒன்றும் போலீஸுக்குச் சொல்லித் தரவேண்டிய அவசியம் இல்லை. ஹைதராபாத் பிரின்ச்பால், ஊட்டி பிரின்ஸ்பால் / தாளாளர் என்று எல்லோருமே இதே வழியைத்தான் பின்பற்றியுள்ளனர்.

ப்ளாரன்ஸ் மேரி, மற்றும் அவரது அக்கா நிருபர்களுடன் பேசுவதை ஏன் போலீஸார் தடுக்கின்றனர்? ப்ளாரன்ஸ் மேரியின் அக்கா, வளாகத்தின் உள்ளே நிருபர்களிடம் எப்படி நடந்தது என்பது குறித்து, கண்ணீருடன் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த, பாதுகாப்புக்கு வந்திருந்த கோட்டை மகளிர் போலீசார், அவரை மிரட்டி நிருபர்களிடம் பேச விடாமல் தடுத்ததோடு, ப்ளாரன்ஸ் மேரியும் நிருபர்களிடம் பேச முடியாதவாறு அழைத்துச் சென்றனர்[7]. முன்பு ஒரிஸா கன்னியாஸ்திரி விஷயத்தில், அந்த கன்னியை பேச வைத்து உலகமெல்லாம் டிவிக்களில் ஒலிபரப்பு செய்தனர். இப்பொழுது, இந்த கன்னியாஸ்திரியைத் தடுக்கும் மர்மம் என்ன? ஒருவேளை பிஜேபி ஆதரவு கட்சி இங்கு ஆளவில்லை என்பதாலா? இல்லை, கருணாநிதி ஆட்சியில், அத்தகைய பிரச்சினை வந்து விட்டது என்பதாலா, அல்லது வீரமணிக்கு வேண்டிய கிருத்துவ சாமியார் மாட்டிக் கொண்டதாலா?

ப்ளாரன்ஸ் மேரியும் இசைக் கல்லூரியிலிருந்து நீக்கம்[8]: இந்நிலையில், திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கற்பழிப்பு புகார் கூறிய ப்ளாரன்ஸ் மேரி, இசைக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வெளியானது. இச்சூழ்நிலையில், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தைக் கண்டித்தும், உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ம.க.இ.க., அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 11 பேர், கல்லூரி முக்கிய வாசலில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர். திருச்சியில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.

மருத்துவ பரிசோதனையில் டாக்டர் புதிய தகவல்: “திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கருக்கலைப்பு செய்தாரா என்பதை கண்டறிய முடியவில்லை’ என, டாக்டர் அறிக்கை அளித்துள்ளார்[9]. புகார் அளித்த ப்ளாரன்ஸ் மேரிக்கு, மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டர் பாக்யவதி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று மாலையே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், “ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது‘ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கை விரைவில் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[10]. பாதிரியார் ராஜரத்தினம் தன்னை கற்பழித்து, கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பதே கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியின் புகார். ஆனால், நேற்று அவருக்கு நடந்த பரிசோதனையில் கருக்கலைப்பு பற்றி தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பது, வழக்கின் நம்பத்தன்மையை சந்தேகப்படும் சூழலை உருவாகியுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீரமணிக்கு வேண்டிய கலைக்காவேரி, பாதிரி முதலிய சமாச்சாரங்கள்[11]: கலைக்காவேரி கிருத்துவ சாமியார் திராவிட கழக வீரமணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். சுக-துக்கம், பிறப்பு-இறப்பு என்று எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர். அவரது மனைவி மோஹனாவும் மிகவும் வேண்டப்பட்டவர். வீரமணி நொந்து போய்  எழுதியது[12], “திருச்சியில் கலைக் காவேரி என்ற அருமையான ஒரு நுண்கலைக் கல்லூரி யின் நிறுவனரும், தலை சிறந்த மனிதநேயரும், பண் பாட்டின், பாசத்தின் ஊற்று மான அருள்திரு ஜார்ஜ் அடி களார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக என்னையும், எங்கள் குடும் பத்தினரையும், இயக்கத் தினரையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனத்தவர்களையும் தாக்கியது. திடீரென வந்த அந்தச் செய்தியிலிருந்துஇப்பெரும் இழப்பிலிருந்து எப்படி மீளுவதோ அறியோம்.” இந்த கல்லுரியில் படிக்கும் / படித்த மாணவிதான் ப்ளாரன்ஸ் மேரி!

பெண் இயக்க அமைப்புகள் வழக்கம் போல மௌனம் காக்கின்றன: வழக்கம் போல பெண்கள் இயக்கங்கள், பெண்கள் உரிமை இயக்கங்கள், பெண்கள் மனித உரிமை இயக்கங்கள், ……………..என்றெல்லாம் வாய் கிழிய பேசும் கத்தும், சுவரொட்டிகள் ஒட்டும் கூட்டங்கள் அமைதியாக இருக்கின்றன. சன் டிவி, தினகரன், நக்கீரன்……………..எல்லாம் இருக்கின்ற இடமே தெரியவில்லை! இதெல்லாம் ஆச்சரியமாக, மர்மமாகவே உள்ளன. இதே நித்யானந்தா என்றால் வரிந்து கொண்டு வந்திருப்பர். ஒரு நாளைக்கு 50 / 100 தடவை திரும்ப-திரும்ப காட்டியிருப்பர். ஏன் ராஜரத்தினம் இடத்தில் கேட்டு அந்த வீடியோவை சன் செனல்களில் “நவராத்திரிக்கு” விஷேழமாகக் காட்டிக் கொண்டிருக்கலாமே? லெனின் குருப்பிடம் சொன்னால், உடனே சிடிக்கள் போட்டு எடுத்துக் கொண்டு வந்திருப்பாரே?


[1] தினமலர், கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி : கல்லூரி முதல்வராக செபஸ்டியன் நியமனம், அக்டோபர் 14, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105920

[2] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, https://womanissues.wordpress.com/2010/10/14/பாதிரியார்-மயக்க-மருந்து/

[3] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, http://christianityindia.wordpress.com/2010/10/13/பாதிரியார்-மயக்க-மருந்து/

[4]தினமலர், கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை,  அக்டோபர் 13,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105413

[5] ஆனால் கோர்ட்டில் மட்டும், பிணை விடுதலைக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்பொழுது, ஏன் போலீஸார் சென்று பிடிக்கக் கூடாது? எல்லாம் ரூபியா சையதுக்கு பிரியாணி கொடுத்த கதைதான்!

[6] ஒருவேளை அந்த மருத்துவமனையும் கிருத்துவர்களது என்று அத்தாட்சிக்களை மறைத்து விட்டால், கர்த்தரே வந்தாலும் ஒன்று செய்ய முடியாது.

[7] போலீஸாரின் அடக்குமுறை இதில் உள்ளதா, அப்படி இருந்தால் யார் அவ்வாறு ஆட்டிப் படைப்பது என்பதனையும் நோக்கவேண்டும். கருணாநிதியே அதற்கு பொறுப்பாக இருப்பதால், அரசியல் தலையீடு இருப்பதைத்தான் காட்டுகிறது. முன்புகூட ஒரு திமுக கவுன்சிலர் நிர்வாண படமெடுப்பு, கற்பழிப்பு வழக்குகளில், அவரது ஆணையைப் பெற்றப் பிறகுதான் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

[8] இதுவும் ராஜரத்தினத்திற்கு உதவுவதாகவே உள்ளது. ஒன்று ப்ளாரன்ஸ் மேரியின் சம்பந்தப்படுள்ள ஆவணங்கள் / அத்தாட்சிகள் அழிக்கப்படும், இரண்டு, அவளை மறைமுகமாக மிரட்டவும் உபயோகப்படும்.

[9] இவ்வாறு கூறுவதே, பரிசோதனை முழுமையாக செய்யப்படவில்லை மற்று மருத்துவர்கள் பாரபட்சமாக செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.

[10] அலஹாபாத் தீர்ப்பு விஷயத்தில் அகழ்வாய்வு அறிக்கை வெளிப்படையாக மக்களுக்கு தெரியும் வகையில் வெளியிடப்படவேண்டும் என்று மெத்தப் படித்தவர்கள் எல்லாம் கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால்,, இதைப் பற்றி அந்த நியாவான்களுக்கு ஒன்றும் புரியவில்லையா?

[11] வேதபிரகாஷ், பெரியாருடைய ஆவி, தினகரன் ஆவி, ஜார்ஜின் ஆவி……….., http://dravidianatheism2.wordpress.com/2010/01/01/பெரியாருடைய-ஆவி-தினகரன்/

[12] விடுதலை தேதி, 20-102008: அருள்திரு ஜார்ஜ் அடிகளாருக்கு எமது வீர வணக்கம்: வீரமணி சொன்னது!; http://files.periyar.org.in/viduthalai/20081021/news03.html

http://files.periyar.org.in/viduthalai/20081021/thalai.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!”

  1. saintthomasfables Says:

    கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி- பாதிரியார் ராஜரத்தினம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து… கற்பழித்து…

  2. K. Venkatraman Says:

    Rajarathinam would be after another nun stealthily just like the Ooty bishop who raped in USA and has taken shelter in OOty doling another important work!

    Even americans were surprised as to how the phedophile, sexist and rapist could get such posting?

  3. கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கு: மறைக்கப்படும் விவரங்கள், தொடரும் ரகசியங்கள், Says:

    […] [12] https://womanissues.wordpress.com/2010/10/15/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E… […]

  4. கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கற்பழிப்பு வழக்கு: மறைக்கப்படும் விவரங்கள், தொடரும் ரகசியங்கள், Says:

    […] [12] https://womanissues.wordpress.com/2010/10/15/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E… […]

பின்னூட்டமொன்றை இடுக