பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்! [3]
கேமராமேன் மெஸேஜ் அனுப்பியது, இத்யாதி[1]: அப்பெண் தோடர்ந்து சொன்னது[2], “சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார். அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்புவார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார் என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து மெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள்.
முன்பு வேலை செய்த கம்பெனிக்கே போய் சேர்ந்தது[3]: தொடர்ந்து கொடுத்த விளக்கம்[4], “அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன். அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன்”.
பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தால், திருமணம் செய்து கொள்வேன்[5]: பனிமலர் இரு கூட்டத்தில் பேசியது, “பெண்ணியம் பற்றி பேசப் போறீங்க…20 வச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டார்…அதுவே ஒரு பேக்..நிறிய தடவ இந்த கேள்வி கெட்டு போரடிக்குது.70-20 எல்லாம் கிடையாது. மணியம்மைக்கு கல்யாணம் ஆன போது வயசு 30. இன்னொரு கேள்வி, அப்படியே இருந்தா கூட பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தா இங்கிருக்கிற எத்தன பொண்ணுங்க பெரியார கல்யாணம் பண்ண மாட்டீங்க? ……நா பண்ணிப்பே….எல்லோரும் பண்ணிப்போம்.
பெரியாரைப் போன்ற ஆம்பளய, ஹீரோவ யார் கல்யாணம் பன்ன மாட்டா..ஒரு பொறாம அவ்வளவே. பாரு இந்த ஆளு இந்த வயசில கெத்தா கல்யணம் பண்ணியிருக்காரு என்று வயத்தெரிச்சல்லே பொளம்புரே..அது தவிர வேறென்ன விசயம்? ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே? …அதுலே நாம கருத்து சொல்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது…” |
பாவம், அண்ணா ஈவேராவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார், எழுதினார் என்று இந்த புரட்சி பெண்ணிற்கு தெரியவில்லை போலும்!, இதிலிரூந்தே, அரைவேக்காட்டுத் தனம் வெளிப்படுகிறது. ஏதோ பெண் என்ற கவர்ச்சியில், முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகும் என்று கவனிக்க வேண்டும். |
அம்மணிக்கு திகவினர் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை போலும்!
பாவம், அண்ணா உயிரோடு இருந்திருந்தால், பனிமலர் கதி, அதோகதி போல!
பெரியாரின் பெண்டாட்டியே, என்ன கெத்துடி, அடி சிறுக்கி, கழட்டடி என்றெல்லாம் பேசியிருப்பார், போலும்!
இதிலிருந்தும், மேலே இரண்டு காதல் தோல்வி, தாம்பத்தியம், முதலியவற்றைப் பற்றி பேசியது, உதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வது என்றெல்லாம் கூட பெண் உரிமை என்ற நிலையில் தான் இவர் நம்புவது, பரிந்துரைப்பது …………..என்பதெல்லாம் தெரிகிறது. அதில் உண்மையான காதலும் இல்லை, தமிழச்சிகளின் தாம்பத்தியமும் இல்லை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் இல்லை…..என்று தெரிகிறது
சிவனை, ஜக்கியை விமர்சித்தது[6]: இரண்டு நாட்கள் முன் 04-03-2019 அன்று இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது[7]. பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர். கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி பாதிக்கப் பட்ட பெண்களைப் பற்றி பேசியது[8]: பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை, எல்லாமே உரிமை என்ற நிலையில் தான், பொள்ளாச்சி செக்ஸ் குற்றம் பற்றி, குறிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறி, வீடியோ பரப்ப ஆரம்பித்துள்ளார், “உடல்…கற்பு……புனிதம் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம்..கற்பு புனிதம் போய் விட்டது என்று வருத்தப் பட அவசியம் இல்லை….இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்… இந்த செய்தி பாதிக்கப் பட்ட எண்களுக்கு போய் சேர வேண்டும். கவுன்சிலிங் தேவை என்றால், நாங்கள் உதவ தயாராக உள்ளோம்………….,” என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பெண் தனது அனுபவம் மீது வைத்தே, இத்தகைய அறிவுரை வந்துள்ளது என்றாகிறது. நேர்மறையாக, நன்றாக இருக்க வேண்டும், வாழ்க்கைசிறக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், வேறுவிதமாக சொல்வதிலிருந்து சந்தேகம் எழுகின்றது. கவுன்சிலிங் என்பது கிருத்துவ முறைப் போன்றது. விசயங்கள் தெருயும் போது, அந்த கவுன்சிலிங்-காரனே நளைக்கு, பிளாக்-மெயில் செய்வது, மிரட்டுவது என்று ஆரம்பிக்கலாம். இதிலிருந்து, சம்பந்தப் பட்ட கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்கின்றனவா அல்லது, தொடர்பு இருக்கின்றதா, இல்லை இதையே ஒரு பெரிய தொழிலாக செய்யப் போகின்றனரா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுதே, அரசியல் ரீதியாக, ஒருவரை ஒருவர் பழி சொல்லி, தாக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, இந்திய சமுதாயம், இளைஞர்கள், பெற்றோர் முதலியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
© வேதபிரகாஷ்
13-03-2019
[1] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை..! பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்…! ஆதாரம் உள்ளே ..!, By Vinoth KumarFirst Published 11, Oct 2018, 8:02 PM IST.
[2] https://tamil.asianetnews.com/crime/pollachi-issue-harassment-case-po7bcx
[3] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை..! பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்…! ஆதாரம் உள்ளே ..!, By Vinoth KumarFirst Published 11, Oct 2018, 8:02 PM IST.
[4] https://tamil.asianetnews.com/crime/pollachi-issue-harassment-case-po7bcx
[5] Channel Truth, பெரியாரை திருமணம் செய்ய ஆசை ! Panimalar Panneerselvam, Published on Dec 26, 2017;https://www.youtube.com/watch?v=5GVJtDQpCxI
[6] நம்டீவிநியூஸ், சிலையை தவறாக சித்தரித்த செய்தி தொகுப்பாளினி மீது வழக்கு, மார்ச்.7, 2019.
[7]http://namtvnews.com/2019/03/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B/
[8] About Pollachi sex / gang rape etc: https://www.youtube.com/watch?v=cgFwcOau6H4
குறிச்சொற்கள்: இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, சோரம், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பெண்ணின்பம், பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணியம், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், மணியம்மை
பின்னூட்டமொன்றை இடுக