Posts Tagged ‘உடலின்பம்’

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் படவேண்டும்.

ஜூன்23, 2023

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் பட வேண்டும்.

குடும்பங்கள் கட்டுப்பாடுகளை மீறுவது ஏன்?: சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியவர் சொன்னதை கேட்காமல் இருப்பது போன்ற நிலைகளில் குடும்பங்கள் சிதறுகின்றன. குடும்பத் தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் குடும்ப அங்கத்தினர் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிறார். இதனால், ஆண்கள் உறவுகளை மீறினால், பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம், அனால், பெண்கள் முயலும் போது, தீராத பழி, பெற்றோர், உற்றோர், மற்றோர் அதிகமாக பாதிக்கும் நிலை உண்டாகிறது. பெண்களை கவனிக்காமல் வளர்க்கும் அல்லது வளர்க்கப் படும் பெண்களும் தங்கள் இச்சைக்கு ஏற்றப் படி செயல்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது பணம் தான் பிராதானம் என்ற நிலை உருவானப் பிறகு, பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போன்ற வெறி வரும் பொழுது, நியாயம், தர்மம் போன்றவையும் மறக்கப் படுகின்றன. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கவனித்து வந்தால் எவ்வாறு தனிதனிபர் ஒழுக்கம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நெறிமுறை முதலியவை பின்பற்றாமல் சீரழிகின்றன என்பதையும் கவனிக்கலாம்.

பாலியல் குற்றங்கள் அதிகமாவது: நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சினிமாவின் சீரழிக்கும் போக்கைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு, சினிமா தொழில் தான் விபசாரத்தை அதிக அளவில் ஊக்குவிக்கிறது, உருவாக்கி வருகிறது எனலாம். இதைப் பற்றி சமூக ஆராய்ச்சியாளர்கள் சரிவர கண்டுகொள்வதில்லை. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதிலும் கிருத்துவ-இஸ்லாமிய குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இதுவும் செக்யூலரிஸ ரீதியில் தான் நடந்து வருகின்றன. செய்திகள் வெளி வந்தாலும், பிறகு என்னவாயிற்று என்று சொல்லப் படுவதில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குடும்ப விபசாரம் என்று புதிய பிபசாரம்: சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது[1]. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் என்று தினத்தந்தி[2] விளக்கமும் கொடுக்கிறது. சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது[3]. அப்படியென்றால், இது ஏதோ ஏற்கெனவே இருந்தது போலவும், இப்பொழுது, திடீரென்று நடப்பது போலவும் தெரிகிறது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள், என்று ஒரு வரியில் முடிக்கிறது. பிறகு, இதற்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத் தானே செய்வர். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்[4]. குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்[5]. இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்[6]. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது, இதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது.

தொடர்ந்து தொடர்ச்சியாக செய்து வரும் முறை: போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். இதில் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, நீதிமன்றத்திற்குச் சென்று, ஏதாவது தண்டனை என்று கொடுக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்யப் படுகிறதா அல்லது போலீசாறே நேராக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். இதிலும் புதிர்கள் பலவுள்ளன. அப்பெண்களுக்கு வாதிடும் வக்கீல்கள் யார், எவ்வாறு அவர்கள் விடுதலை பெறுகின்றனர் என்பதும் புரியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். பிறகு செய்த குற்றத்தையே திரும்ப செய்வது போலாகிறது. சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

புரோக்கர்கள் எல்லாம் இருப்பது, இது ஒரு திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது: அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான  ஆமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54), பிரசாந்த் (30) ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. இவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதும் தெரிகிறது[8]. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொழில்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து நடக்கும் சமூக சீரழிவைத் தடுத்தாக வேண்டும்: அப்படி எல்லாமே சொல்லி வைத்தது போல சக்கரம் சுழல்வது போல, இந்நிகழ்வுகள் திரும்ப-திரும்ப நடப்பது அசாதாரணமாக உள்ளது. மற்ற தொழில்கள் போல இதுவும் திட்டப்படி, முறையாக, செயல்பட்டு வருகிறது என்றாகிறது. இதில் வக்கீல்கள், புரோக்கர்கள், வீட்டு சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு விடுபவர், போலீஸார், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், இது நடப்பது தெரிந்துள்ளது. செய்வது, கைதாவது, பிறகு சட்டப் படி அல்லது ஏதோ ஒரு நுணுக்கத்தில் வெளியே வருவது எல்லாம் யாரும் ஓசியில் செய்ய் மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கும் உரிய காசு கிடைக்கிறது. இத்தகைய விபசாரிகளுக்கு ஆஜராகும் வாதிடும் வக்கீல்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிரது. ஆமாம், அதுவும் அவர்கள் தொழில் தான்! யாராக இருந்தாலும், வாங்கிய காசுக்காக அவர்கள் ஆஜராக வேண்டியது தான்! பிறகு, இதில் எதுவோ இடிக்கிறதே? அப்பெண்களின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லையே. நுகர்வோர் பண்டங்கள் போல அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். சமூகம் அவர்களை விபசாரிகள் என்றாலும், வேறு வழியில் ஆதரிக்கின்றது.

  1. குடும்ப விபசாரம் என்று செய்தி வருகிறது, அந்த அபசாரத்திற்கு ஒரு வரையறை, விளக்கமும், வியாக்யானமும் கொடுக்கப் படுகிறது.
  2. ரூ.5000 கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களுக்கு உல்லாசம் கிடைக்கும்!
  3. இவ்வாறு வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் – தினத்தந்தி.
  4. குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.
  5. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்
  6. போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
  7. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.. இப்படியாக இவ்வேலை சுழற்சியாக நடைபெற்று வருகிறது!
  8. இதில் பல புதிர்களும், கேள்விகளும் எழுகின்றன. எப்படி, ஏன், எவ்வாறு இதில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்?
  9. ஒற்றுமையாக சொல்லி வைத்தால் போல சம்பந்தப் பட்டவர்கள் இச்சுழற்சியை வெட்டெறியாமல் தொடர்ந்து நடத்த விடுகின்றனர்?
  10. தாய்மை, பெண்மை, குடும்பம், ஒழுக்கம், கற்பு,..…முதலியவற்றைப் போற்றுவோர் ஏன் அமைதியாக இருக்கின்றனர்? இச்சமூக ஊனத்தை என்னென்பது?

© வேதபிரகாஷ்

23-06-2023


[1] தினத்தந்தி, ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும்குடும்ப விபசாரம், தினத்தந்தி Jun 23, 3:49 pm

[2] https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5000-you-will-be-treated-with-a-party-and-family-prostitution-again-in-chennai-992672

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்டைம்ஸ், Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!, Kalyani Pandiyan S, Jun 23, 2023, 09:47 AM IST

[4] https://tamil.hindustantimes.com/amp/entertainment/3-women-involved-in-domestic-prostitution-business-in-chennai-have-been-arrested-131687492971595.html

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள், First Published Jun 23, 2023, 11:55 AM IST

[6] https://tamil.asianetnews.com/gallery/crime/prostitution-that-took-place-in-chennai-women-caught-half-dressed-rwp0ic

[7] தினமலர், பாலியல் தொழில் புரோக்கர் இருவர் கைது, பதிவு செய்த நாள்: ஜூன் 23,2023 00:29.; https://m.dinamalar.com/detail.php?id=3355385

[8] https://m.dinamalar.com/detail.php?id=3355385

காசியின் காவியும், மனத்தில் கருமையும், உடலில் விஷமும்: பெண்களைச் சீரழித்த காமக் கொடூரன்! துரித தண்டனையே தீர்வு! [3]

மே14, 2020

காசியின் காவியும், மனத்தில் கருமையும், உடலில் விஷமும்: பெண்களைச் சீரழித்த காமக் கொடூரன்! துரித தண்டனையே தீர்வு! [3]

Kasi - has gang behind, 14-05-2020

பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் பாதிக்கப் பட்ட பெண் குற்றசாட்டு: கொரோனா படுத்தும் பாடு எல்லோரையும் கவலையில், பீதியில், பொருளாதார பிரச்சினைகளில் மூழ்கியிருக்கும் நேரத்தில், இந்த காமுகன் காசியின் செய்தி இடை-இடையே வந்து திகைக்க வைக்கிறது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட இருவர் அளித்த புகாரின் பெயரில் மூன்று வழக்குகள் பதிவு செய்த போலீசார், காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று ஆரம்பித்த விவகாரம் பெரிதாகி வருகிறது. அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் தாக்கல் செய்த மனு, நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், காசியைமூன்று  நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனிடையே, மோசடி இளைஞர் காசி மீது, மேலும் ஒரு பெண் சமூக வலைதளத்தில் புகார் கூறியுள்ளார். காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுள் தானும் ஒருத்தி எனவும், காசி தனி ஆளில்லை, அவன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்[1]. காசிக்கு உறுதுணையாக இருந்த அந்த கும்பலையும் காவல்துறை விட்டுவிடக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்[2].

Kasi with political connectio, Tamil Hindu, 28-04-2020

பல புகார்கள் வந்தும் 10 ஆண்டுகளாக சிக்காத காசி தற்போது சிக்கியது எப்படி…?[3]: விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உதவியிருக்கிறது. 50, 100 இப்பொழுது 200 ஆகி விட்டது போலும். சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை. அதாவது 2010லேயே வேலையை ஆரம்பித்து விட்டான்! பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த காசி, மறுபக்கம் அரசியல் அதிகாரத்தின் போதையில் மூழ்கியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் புகாரளித்தபோது, உடனே காசியை போலீசார் கைது செய்யவில்லை. சென்னையில் கொடுக்கப்பட்ட புகார், கன்னியகுமரிக்கு மாற்றி அவரை கைது செய்ய கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆனது அதிலும், சென்னை பெண் மருத்துவர் கடைசி நேரத்தில் புகாரை வாபஸ் பெறச்சொல்லி பல தரப்புகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அவரும் புகாரை வாபஸ் பெறலாம் என நினைத்தபோது, காசியால் ஏமாற்றப்பட்ட பெங்களூரு பெண் மருத்துவரிடம் பேசி மனஉறுதி அளித்தாகவும் கூறப்படுகிறது[4]. சின்மயியின் புகாரும் கவனிக்கத் தக்கது. காசியுடன் தொடர்பில் இருந்த 20 பேரின் பட்டியலையும் போலீசார் தயாரித்துள்ளனர்.

Kasi donning ochre, 14-05-2020

காமுகன் காசி காவி வேட்டியுடன் அலைவதேன்?: காசி நீதிமன்றத்துக்கு வந்த போது காவி வேட்டி மற்று நீல நிற சட்டை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தான். அவனை புகைப்படம் எடுத்த போது எந்த பதட்டமும் இன்றி போட்டோகிராபரை பார்த்து காதல் சின்னத்தை காசி காட்டியுள்ளான். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பெரும் குற்றத்தை செய்துவிட்டு முகத்தை கூட மூடாமல் பயமின்றி காதல் சின்னத்தை சிரித்தபடி போஸ் கொடுத்த காசியை இணையதள பயன்பாட்டார்கள் திட்டி வருகின்றனர். முன்னர் கோயம்புத்தூர் தீவிரவாதிகள் பல உயிர்களைக் கொன்று, நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, அதே தோரணையில் இருந்தத்தை கவனிக்கலாம், அதாவது, மாமெரும் குற்றம் செய்த பிறகும், இவர்கள் ஏதோ சாதித்து விட்டதைப் போல, “சிரிப்பது-கையை ஆட்டுவது” – இவ்வாறு நடந்து கொள்வதை கவனிக்கலாம், திட்டமிட்டே அவர்கள் மானுடத்தை சீரழித்து வருகின்றனர், மனிதர்களைக் கொல்கின்றனர். முன்னர் கிருத்துவர், ஏன் துலுக்கர் கூட காவி உடை அணிந்டு இந்தியர்களை ஏமாற்றினர், இப்பொழுதும் ஏமாற்றி வருகின்றனர். இந்த குரூரக் குற்றவாளிகளும் அதையே செய்கிறார்கள்.

Kasi - Nagerkoil advocates do not appear, 14-05-2020

14-05-2020 – நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் இந்த காமுகனுக்கு ஆஜராக மாட்டார்கள்தீர்மானம்: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ்[5], ”நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் மீது பெண்களை ஏமாற்றுதல், ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுதல், பெண்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் காசிக்கு ஆஜராக மாட்டர்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்,” என கூறியுள்ளார்[6]. இது வரை, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது[7]. அப்படியென்றால், அவர் தொடர்ந்து வாதாடுவாரா அல்லது பாதியில் விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.

Kasi fed politicians, 14-05-2020

விஐபிக்கள், அரசியல்வாதிகள் இவனிடம் பலன் பெற்றனர் என்றால் நிலைமை என்ன?: இதனிடையே, விஐபிக்கள், சிலரிடம் காசி நெருங்கி பழகி உள்ளார்.. அதில் சில கட்சி பிரமுகர்களும் அடக்கம் என்கிறார்கள்.. சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த விஐபிகளுக்கு ஹோட்டல்கள், ரிசார்ட்களும் உள்ளனவாம்.. நாகர்கோயிலில் இருந்து காரில் பெண்களை காசி இங்குதான் அழைத்து வருவாராம்[8].. இந்த ரிசார்ட், ஹோட்டல்களில் தங்க வைத்து மிரட்டிதான் ஆபாச படங்களையும் எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்[9]. ஒரு திரைப்பட நடிகரின் மகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் முதலியோரும், காசியால் சீரழிக்கப் பட்டப் பெண்களில் அடங்குவர் என்று தெரிகிறது[10]. பாண்டிச்சேரியில் ஒரு ரிசார்ட்டிலும் காசி தனது வேலைகளை செய்துள்ளான் என்றும், அங்கு விஐபிக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மகிழ்விக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும், போலீஸார் கண்டுபிடித்துள்ளது தெரிகிறது[11].

Kasi - case argued by advocate, 14-05-2020

செய்ய வேண்டியது என்ன?: கிருத்துவ பிஷப், பாஸ்டர், பாதிரி செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், முகமதியரின் அமுக்கி வாசிக்கும் அதைவிட மோசமான பயங்கரமான செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், …..நிர்மலா தேவி, பொள்ளாச்சி என்று விரிந்து, இப்பொழுது சுஜியில் வந்துள்ளது. இவையெல்லாமே, சமூகத்தை சீரழித்த மோசமான கயவர் கூட்டம் தான். இவர்களைத்தான் முன்னர் அரச்சர், ராக்ஷதர் என்றனர். அவர்களைக் கொல்ல, எப்படி கடவுள் அவதாரம் எடுத்தாரோ, அதேபோல, ஒரு அவதாரம் வந்து கொல்ல வேண்டும். இல்லையென்றால், சட்டங்களில் ஓட்டைகளை வைத்துத் தப்பித்துக் கொள்வர். ஆனால் பாதிக்கப் பட்ட பெண்களின் கதி அதோகதிதான். அவர்களின் கற்பை மீட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே, உடனடியாக, நடவடிக்கை எடுத்து, மரண தண்டனை கொடுத்தால் தான், எச்சரிக்கையாக இருக்கும், இனி, இது மாதிரியான குற்றங்கள் நடக்காமல் இருக்கும். கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்ற நிலையில், இவ்வழக்கை சீக்கிரம் நடத்தில், மரண தண்டனை கொடுத்தாலும், மக்கள் மகிழ்சி அடைவர்.

© வேதபிரகாஷ்

14-05-2020

Chinmayi accuses Kasi , Dinakaran, 01-05-2020

[1] தினத்தந்தி, காசி தனி ஆளில்லைபின்னணியில் கும்பல்” – சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பெண், பதிவு : மே 04, 2020, 05:02 PM

[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/04170212/1316830/Nagercoil-Sexual-Harassment-Case.vpf.vpf

[3] NEWS18, பல புகார்கள் வந்தும் 10 ஆண்டுகளாக சிக்காத காசி தற்போது சிக்கியது எப்படி…?, LAST UPDATED: MAY 4, 2020, 12:41 PM IST

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/nagarkovil-kasi-case-how-he-caught-to-police-san-286045.html

[5] நக்கீரன், காசிக்கு ஆஜராக மாட்டோம் என தீர்மானம்! நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி!, Published on 14/05/2020 (11:36) | Edited on 14/05/2020 (12:43)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/nagercoil-kasi-issue-nagercoil-advocate-association-decision

[7] தினத்தந்தி, காசி தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டோம்” – கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு, பதிவு : மே 14, 2020, 01:20 PM

https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/14132006/1347681/kasi-sexual-abuse-case-nagarcoil-lawers.vpf.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, யார் அந்த நடிகர் மகள்.. ஆபாச காசியின் வலையில் சீக்கி சீரழிந்தார்.. விஐபிகளுக்கும் தொடர்பா?, By Hemavandhana | Updated: Friday, May 1, 2020, 11:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/nagercoil/kanniyakumari-kasi-cheating-case-police-investigation/articlecontent-pf453653-384181.html

[10] It is said that the womaniser used to fell girls right from his school days and that the daughter of a film actor and police inspector’s daughter are also his victims.

India Glitz, Shocking! Actor’s daughter affected by serial rapist Nagercoil Kasi, Tuesday, May 5, 2020.

[11] The cops have also said to have unearthed Kasi’s resort in Pondicherry where he is suspected to have entertained VIPS and politicians as well. Sources add that many more shocking skeletons will be out in this serial rapist case.

https://www.indiaglitz.com/shocking-actors-daughter-affected-by-serial-rapist-nagercoil-kasi-tamil-news-259670

பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]

மார்ச்13, 2019

பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள்காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]

Panimalar, tweet - instagram

பனிமலர் என்ற பெண்ணியம், பெரியாரிஸ கற்ப்பியம், காதல் தோல்வி சித்தாந்தம் முதலியன: பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம் என்ற பெண், டிவி செனல்களின் மூலம் பிரபலமாகி இருப்பது தெரிகிறது. திக-திமுக ஆதரவுகளால், அப்பிரபலம் சித்தாந்தத்துடன் சேர்ந்து சார்புடையாதாகி உள்ளது. சன் டிவி, பாலிமர் டிவி, புதிய தலைமுறை முதலிய டிவி செனல்களில் வேலை செய்ததாக உள்ளது. செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு முதலியவற்றால் பிரபலம். போதாகுறைக்கு, ஊடகத்தினரும் பரஸ்பர விலம்பரங்கள் கொடுத்துள்ளனர். இளம்பெண் என்பதனால், அந்த கவர்ச்சி உந்துதல் விளம்பரம் அதிகமாகவே உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்…………………..இப்படி சொல்லவே வேண்டாம், அதிகமாகவே உள்ளது[1]. இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்த விவகாரங்கள் வேறு, இதோ விகடன் விவரங்களைக் கொடுக்கிறது.

                       Panimalar, vikatan

என் காதல் சொல்ல வந்தேன்பனிமலர் சொல்லும் காதல் கதை[2]: பனிமலர் சொல்வது[3], ‘‘உலகில், யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; எல்லோருமே தனித்துவம் மிக்கவர்கள்தாம். நிறைவேறாத பத்து காதல்களுக்குப் பிறகு, மற்று மொரு காதல் வந்தாலும்கூட அதுவும் புதிதாகவே இருக்கும்!’’ – வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் . ‘‘பள்ளிப் பருவத்தில், எல்லோருக்குமே எதிர் பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனாலும், அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்த ஈர்ப்பின் வீரியம் குறைந்து மறைந்தேபோகும். 13 வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், 15 அல்லது 16 வயதாகும்போது பிடிக்காமல்கூட போகலாம்… மாற்றத்துக்கு உட்பட்ட உளவியல் உண்மை இது. உடல்ரீதியாக வளரிளம் பருவத்து மாற்றங்களைக் குழந்தைகளிடம் விளக்கிக் கூறுகிற நாம், அதே பொறுப்பு உணர்வுடன் மனரீதியிலான இந்த மாற்றங்களையும் எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும்”.

Panimalar, supporting Vairamuthu
`இனக்கவர்ச்சிஎனும் மாயக் காதல்முதல் காதல் தோல்வி: வளரிளம் பருவத்தில் வரக்கூடிய `இனக்கவர்ச்சி’ எனும் மாயக் காதல் எனக்கும் வந்ததுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தாலும் எனக்கே சிரிப்பை வரவழைக்கும் நிகழ்ச்சி அது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உணர்வு மறைந்துபோனது ஆச்சர்யம். அதன்பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல்களுமே மிக நீளமானவை. பணி நிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தபிறகு, நீண்ட நாள்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளலாம் என எண்ணினேன். ஆனால், அந்த உறவு ஒருநாள் முறிந்துபோனது. மனது உடைந்து, அழுது புலம்பி, அந்த மன அழுத்தத்தில் வாழ்க்கையின் அடுத்தடுத்த முடிவுகளைத் தப்புத்தப்பாக எடுத்து அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனாலும்கூட, ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதும் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். `காதலரோடுதான் பிரச்னையே தவிர, காதலில் ஒருபோதும் பிரச்னை இல்லை’ என்ற தெளிவுதான் அது. எனவே தான், முதல் காதல் தோல்வி. ஏற்படுத்தியிருந்த வலியிலிருந்து என்னை மறுபடியும் மீட்டெடுத்து வர உதவியதும் காதலாகவே அமைந்தது.

Panimalar, T shirt
உலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே?[4]: பனிமலர் சொல்லும் காதல்-தாம்பத்தியம் லாஜிக்[5], `காதல் ஒருமுறைதான் மலரும். உதிர்ந்துவிட்டால் மீண்டும் மலராது’ என்றெல்லாம் இட்டுக்கட்டி, காதலைப் புனிதப்படுத்தும் முயற்சி இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்ல… `பார்க்காமலே காதல், பேசாமலே காதல்’ என்றெல்லாம் காதலை உயர்த்திப்பிடித்து தெய்விகக் காதல் வரிசையில் பட்டியலிடுவதன் பின்னணியில், `எங்கள் காதலில் செக்ஸ் இல்லை… இது புனிதமானது’ என்று கட்டமைக்கப் பார்க்கிறார்கள்.

உலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே? அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல்? ஆக, காதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இது, காதலில் இயல்பானது என்பதை உணரும்போதுதான், `என்னை ஏமாற்றிவிட்டார், அதற்காக பழி வாங்குகிறேன் ‘ என்று கிளம்ப மாட்டார்கள்”.

இங்கு நேரிடையாக, தனது முதல் காதலுடன் தாம்பத்தியம் வைத்துக் கொண்டது, மறைமுகமாக சொல்கிறார். அதனை நியாயப் படுத்த, பொதுவாக ஒரு வாதத்தை கேள்வியாகக் கேட்டுள்ளார். ஒருசெல் மற்றும் மிருகங்களின் தாம்பத்தியமும், மனித தாம்பத்தியமும் ஒன்றா என்பதை யோசித்டுப் பார்க்க வேண்டும். அமீபா ஒரு தன்-புணர்ச்சி ஜீவனாகும்.

Panimalar, Tutocorin issue
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது காதல்[6]: பனிமலர், இரண்டாவது காதலை விவரித்தது[7], “இரண்டாவது முறை என்னை ஆட்கொண்ட காதலுக்கு ஆயுள் ஐந்து வருடங்கள். `எல்லாம் சரியாக நடக்கிறது’ என்ற மகிழ்ச்சியோடு திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரவிருந்தபோது, அந்த இரண்டாவது காதலும் கைநழுவிப் போனது.

இம்முறை இன்னும் அதிகமாக காயப்பட்டேன். அதன் வடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வெறுமையும் தனிமையும் ஒருசேர அழுத்தும் அந்தத் தருணத்தில், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால்கூட பிரிவு பற்றிய எண்ணங்கள்தாம் ஞாபகத்துக்குள் வந்து அழுகையை வரவழைக்கும். செல்போனை எடுத்துப் பேசிவிடலாமா அல்லது ஒரு மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் மனதைச் சிதறடிக்கும்.

இரண்டாவது காதல் திருமணம் வரைச்சென்று நின்று விட்டது என்றால், காரணம் என்ன என்று வெளியிடப் படவில்லை. பிரபலங்களில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இங்கு மனநிலை பாதித்துள்ளதால், அதனை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது நவநாகரிகமான காதலாக உள்ளது. செல்போன், மெஸேஜ் என்றரீதியில் உள்ளது. ஆகவே, டேடிங், மேடிங் இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. முந்தைய வாதத்தை எடுத்துக் கொண்டால் இருக்கிறது எனலாம்!?

Panimalar, rain issue

கவுன்சிலிங் பெற்று புது மனிஷியாகியது[8]: இரண்டு காதலன்களை விடுத்து, இரண்டு காலல்களை முறித்த பனிமலர், கவுன்சிலிங்கிற்கு சென்று விளக்கியது[9], “வெறுத்துப்போய் வேலைக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்து முடங்கிக்கிடந்தேன்.

தினம் ஒருவேளைதான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் தொலைந்தேபோனது. ஒருகட்டத்தில், என்னுடைய மன அழுத்தத்தைக் கண்டு எனக்கே பயம் வந்துவிட்டது. தயங்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். என் எதிர்மறைச் சூழலை மாற்றிக்கொள்ள, ரொம்பவே முயற்சி செய்தேன்.

இரண்டு ஆண்களுடன் பழக்கம், இரண்டு காதல்கள், இரண்டு காதல் ணை அதிகமாக பாதித்ததில்தோல்விகள்,….என்பன, இப்பெண் இயற்கையாகவே உள்ளது. ஆனால், இத்தகைய நவநாகரிகமான, பொதுவான ஆண்-பெண் உறவு முறைகளை மீறி விளக்கம் கொடுக்கும் பெண்ணால் தாங்க முடியவில்லை என்றால், அவ்வெல்லைகளை மீறியப் பிரச்சினையாகிறது.

ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். புதுப்புது பயணங்களை மேற்கொண்டேன். வலியில் அழுந்திக்கிடந்த மனதுக்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்த இந்த மாற்றங்கள்தாம் என்னை மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறப்பெடுக்க வைத்திருக்கின்றன.

© வேதபிரகாஷ்

13-03-2019

Panimalar, different faces

[1] இது கூட யார் பதிவிட்டது என்று தெரியவில்லை – http://panimalarpanneerselvam.blogspot.com/

[2] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)

[3] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[4] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).

[5]  https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[6] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).

[7] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[8] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)

[9] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)

ஓகஸ்ட்3, 2017

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளிகல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)

College girl committed suicide - MSc- 14-04-2017 - Shiny Sharanpriya

ஏப்ரல்.14 2017 – எம்.எஸ்.சி படிக்கும் மாணவி தற்கொலை ஏன்?: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார். கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது[1]. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்[2]. மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்[3]. அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்[4]. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது முற்றிலும் மர்மமாக இருக்கிறது.

Reasons for committing suicide - Vedaprakash- 03-08-2017

தற்கொலைக்குக் காரணங்கள் என்ன?: சமீபகாலத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் அதிகமாக தற்கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது.  அவற்றில் காணப்படும் காரணங்கள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன:

1.       எழ்மை, மற்றவர்கள் போல ஆடை அணிய முடியவில்லை, தாழ்ந்த மனப்பான்மை.

2.       சில பாடங்கள் புரியவில்லை, ஆங்கிலம் வரவில்லை.

3.       அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறோம், உடலில் ஏதோ குறை / ஊனம் உள்ளது.

4.       பரீட்சையில் அதிக மார்க்குகள் கிடைக்கவில்லை, பெயில் ஆகிவிட்டோம்.

5.       ரேகிங் / சக மாணவிகள் கேலி / தொந்தரவு செய்தல்.

< style=”text-align: justify;”>6.       வயது கோளாறு, மாணவர்களுடன் பேசுவது, நண்பர்களாக்கிக் கொள்வது, இனிமாவுக்கு போதல் போன்றவை.</>

7.       காதல் தோல்வி,

8.      காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொள்ளாத நிலை].

9.       காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல்].

10.   காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல், கர்ப்பம் கலைத்தல், அத்துடன் விட்டுவிடுவது].

11.    உடலுறவு கொண்டு, அனுபவித்து விட்டுவிடுவது என்ற நிலை.

12.    உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல், தொடர்ந்து கற்பழித்தல்.

13.    உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல்ல் அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்தல்.

மற்ற பல காரணங்களும் இருக்கின்றன. மனோதத்துவ ரீதியில் அவை ன்னும், பலவிதங்களில் வேலை செய்து, விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், பொதுவாக அவற்றை பட்டியலிட முடியாது, அலச முடியாது.

Reasons for falling prey to sexual exploitation - Vedaprakash- 03-08-2017

பாலியல் கொடுமைகள் எவ்வாறு ஆரம்பிக்கின்றன, நடக்கின்றன: அதே போல, இவற்றையும் கீழ்கண்டவாறு தொகுக்கலாம்:

  1. ஆண்களின் வக்கிரம், தீய மனப்பாங்கு: தாய்க்குப் பிறந்த ஆண்மகண் தறிகெட்டது:
    1. ஆண்களுக்கு பெண், பெண்ணியத்தின் மீதான மதிப்பு குறைந்தது,
    2. சகோதரி மற்ற பெண்-உறவுகள் இருந்தும், பெண்மையினை மதிக்காமல் இருக்கும் நிலை.
    3. செக்ஸுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேவலமான மனப்பாங்கு,
    4. தனது அந்தஸ்த்தைக் காட்டி மிரட்டுவது,
    5. இளம் வயது கோளாறை பயன்படுத்திக் கொள்வது,
  2. பெண்களின் பலவீனம்: இன்றைய சினிமா, ஊடகங்களின் பாதிப்பினால், இளம் பெண்கள், சீக்கிரம் செக்ஸ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். சக-தோழிகளின் சகவாசம் அத்தைய போக்கினால், மற்ற பெண்ளும் பாதிக்கப்படுகிறார்கள்.
  3. பெற்றோரின் கவனக்குறைவு, பொறுப்பில்லாமை, முதலின: பெற்றோர் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், மகள் என்ன செய்கிறாள் என்று அறியாமல் இருக்க நிலை ஏற்படும். இது அவள் காதல் போன்ற விவகாரங்களில் னாட்டிக் கொள்ள ஏதுவாகும்.
  4. பொருளாதார நிலை, ஏழ்மை முதலியன: நல்ல பண வசதி கொண்டவர்கள் மற்றும் ஏழ்மை என்ற இருநிலைகளில் உள்ளவர்களும், இத்தகைய பாலியல் இவ்வகாரங்களில் மாட்டிக் கொள்கின்றனர்.
  5. உடலுறவு கொள்வது, அனுபவித்தல் என்ற மாயையில் சிக்குவது: வயது கோளாறு மற்றும் சினிமா மாயைகளில் சிக்கிய சில தலைதறுகள் “வாழ்க்கை அனுபவப்பதற்கே” என்ற ரீதியில் செய்ல்படுவது:
    1. சினிமா போன்று “பாய் பெரின்டுகளை” வைத்துக் கொள்வது.
    2. சினிமாவுக்கு செல்வது.
    3. அங்கு தொட அனுமதிப்பது, காமத்தில் வீழ்வது.
  6. மானம் மோனது, கற்பிழந்தது, குடும்ப கௌரவம் முதலியவை: பொதுவாக பெண்ணின் விவகாரம் தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கும் என்ற நிலையிலேயே, பெரும்பாலான இத்தகைய விசயங்கள், வெளிவராமல் மறைக்கவே சம்பந்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு உதவுவதாக இருக்கின்றது. சில நேரங்களில் எல்லைகளை மீறும்போது, கசிந்து வெளியே தெரியும் போது, துணிந்து புகார் கொடுக்கும் போது, விசயங்கள் தெரியவருகின்றன.

How to prevent sexual exploitation - Vedaprakash- 03-08-2017

பாலியல் தொந்தரவுகள், சதாய்ப்புகள், தடுப்பது எவ்வாறு?: இங்கு சில யுக்திகள் உதாரணத்திற்காக எடுத்துக் காட்டப் படுகிறது:

  1. பெண்கள் தாம் எல்லா நிலைகளிலும் நேரங்களிலும், சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் எச்சரிக்கையாக, விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.
  2. பெற்றொர், நிச்சயமாக, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், மகளுக்கு உரியவற்றை வெட்கப்படாமல், மழுப்பாமல் விவரங்களை தற்காப்பு நிலைகளை அறிவுருத்த வேண்டும், முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  3. வீடு-பள்ளி-கல்லூரி-வேலை செய்யும் இடம்………என்று எங்கும் பையன்களை, ஆண்களை குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும்.
  4. உறவுகார-நண்பர்-புதியவர் என்ற எந்த பையன்களை, ஆண்களையும் தனியாக பேசுவது, சந்திப்பது, இருப்பது, கூட செல்வது, அருகில் உட்கார்ந்து கொள்வது போன்ற நிலைகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
  5. பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியவர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யக் கூடாது.

இன்னும் பலவுள்ளன, ஆனால், எல்லாவற்றையும் இங்கு விளக்கமுடியாது.

© வேதபிரகாஷ்

03-08-2017

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலைமரணத்திற்கு காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை, Posted By: Amudhavalli, Published: Friday, April 14, 2017, 9:50 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/college-student-commits-suicide-hanging-279760.html

[3] தினகரன், கல்லூரி மாணவி தற்கொலை, 2017-04-14@ 00:17:48

[4] http://www.dinakaran.com/latest_Detail.asp?Nid=294739

தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

நவம்பர்6, 2016

தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

lakhsmi-sudha-advocate-murder-02-11-2016

மகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார்.  கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.  வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.

lakhsmi-sudha-advocate-murder-news7tamil-02-11-2016

தங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

 lakhsmi-sudha-advocate-murder-house-02-11-2016

மற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார்.  தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].

lakhsmi-sudha-murder-02-11-2016

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.
mambalam-woman-advocate-murder-05_11_2016_016_009
31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே  சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12].  லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

 

© வேதபிரகாஷ்

06-11-2016

mambalam-woman-advocate-murder-05_11_2016_016_009-2

[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08

[2] Indian Express, Home-alone lawyer found dead at Mambalam, By Express News Service  |   Published: 03rd November 2016 04:23 AM  | Last Updated: 03rd November 2016 04:23 AM .

[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST

[4] http://www.newindianexpress.com/cities/chennai/2016/nov/03/home-alone-lawyer-found-dead-at-mambalam-1534451.html

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article9298878.ece

[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது!, November 04, 2016.

[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=256100

[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]

[9] http://ns7.tv/ta/lover-arrested-female-advocate-murder-case.html

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/lawyor-murdered-chennai-266244.html

[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.

[12] http://www.dailythanthi.com/News/State/2016/11/04151002/58year-old-women-Lawyer-murder–Arrested-35year-old.vpf

ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது!

ஜூலை16, 2013

ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது!

Photos appearing in the media in the context

மும்பையில் விபச்சாரம்: மும்பையில் விபச்சாரம் என்பது ஒரு சமூகப் பிரச்சினை அதே நேரத்தில் தொழிலாகவும் இருந்து வருகிறது[1]. இந்தியாவிலேயே வெளிப்படையாக “ரெட்-லைட் ஏரியா” என்று குறிப்பிடப் பட்டு விபச்சாரம் தொழிலாக நடத்தப் பட்டு வருகிறது. ஆனால், அதனால், பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகின்றது. ஜான் கெர்ரி என்ற அமெரிக்க செயலாளரால் வெளியிடப் பட்டுள்ள “Trafikking in persons Report – 2013” அறிக்கையில் இதைப் பற்றி அலசப்பட்டுள்ளது[2]. இது குறிப்பிற்காக இது கவனத்திற்கு கொண்டு வந்தாலும், இன்றைய நிலையில் அமெரிக்காவின் தாக்கத்தால் தான் இந்திய சமூகம் அதிகமாகவே கெட்டு வருகிறது[3]. கம்பெனிகள், அவர்கள் கொடுக்கும் விளம்பரங்கள், அவற்றின் பொருட்கள், சேவைகள் எல்லாமே ஒரே கோணத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அதில் பெண்மையைப் போற்றுவதாக ஒன்றும் இல்லை. ஆபாசமாக, நிர்வாணமாகக் காட்ட வேண்டும் என்றுதான் அவை உள்ளன. பிறகு அவர்கள் எப்படி இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

Actresses, pimps and prostitution

மாடல் புரோக்கர் விபச்சாரம் நடத்தியது: மும்பை அந்தேரியில் சொகுசு பலமாடி அடுக்குக்கட்டிடங்கள் கொண்ட பகுதி – ஒஸிவாரா, லோகன்ட்வாலா. அங்கு வாழ்பவர்கள் எல்லோருமே IAS மறும்  IPS அதிகாரிகள் தாம். ஒரு சொஸைடி அமைக்கப் பட்டு அவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.  ஒரு  IAS அதிகாரியின் பிளாட்டை [flat B 1402,  Meera Towers, Oshiwara area, Lokhandwala] இம்தியாஸ் கான் என்ற மாடல்களை வைத்து விழாக்கள் நடத்துபவன் வாடகைக்கு எடுத்திருக்கிறான். ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கிறானாம். மாடல்களை உருவாக்குகின்றவன், அறிமுகப்படுத்துப்பவன், புகைப்படங்கள் எடுப்பவன், சாதாரணமாக அவ்வாறு மாடலுக்கு வரும் பெண்களுடன் உறவாடாமல் இருக்கமாட்டான் ஏன்ன்பது தெரிந்த விஷயமே. அத்தொழிலுக்கு வரும் பெண்களும் பெண்மைக்குரியவற்றை விட்டுவிட்டுதான் வேலைக்கு வரவேண்டியுள்ளது. கேமராவின் முன்பு, உடலைக் காட்டி-காட்டி பழக்கமாகி விடுவதால் ஒரு நிலையில் விபச்ச்சாரத்திற்கும் ஒப்புக் கொள்கிறார்கள் போலும். அதனால், இம்தியாஸ் கான் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்து வருகிறான்.

pimps arrested in a high-profile sex racket case being taken into custody on Friday

போலீஸாருக்கு தகவல் கிடைத்தது, கைது செய்தது: இதைப் பற்றி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், விபச்சாரிகளை தேடி வருவது போல வந்து பேரம் பேசியுள்ளனர். புரோக்கர் குறைந்த நேரத்திற்கு என்றால் நடிகைகூட கிடைப்பாள் என்று ரூ. ஒரு லட்சம் கேட்டான். பிறகு பேரம் பேசியதில் ரூ.25,000/-ற்கு ஒப்புக் கொண்டான். ஒரு நடிகையுடன், வெளியே வந்தப்போது, போலீஸார் பிடித்துக் கொண்டனர். இந்நிலையில் குறிப்பிட்ட பிளாட்டை போலீஸார் ரெயிட் செய்தலில் ஐந்து நடிகைகள், மூன்று புரோக்கர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நடிகைகள்[4] டெலிவிஷன் நிகழ்சிகள், தினசரி தொடர்கள், போஜ்பூரி மற்றும் இந்தி திரைப்படங்கள் முதலியவற்றில் நடித்துள்ளனர்[5]. அதில் ஒருவர் பிரபலமான இந்தி நடிகை திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதால், பெயர் வெளியிடப்படவில்லை[6]. பிடிபட்ட புரோக்கர்கள் – இம்தியாஸ் செயிக், இஸ்ரர் ஆலம் மற்றும் கரன் முண்டே [Imtiyaz Shaikh, Israr Alam and Karan Munde] என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்[7].

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

நாகரிகத்தின் சீரழிவு: சூரியநெல்லி பெண் வழக்கு பெரிய-பெரிய அரசியல்வாதிகளால் காலம் நீட்டிக்கப்பட்டது. வழக்கின் நிலையும் நீர்க்கப்பட்டது. இன்று கற்பழிப்பு வழக்கு விபச்சார வழக்கு போல மாற்ற முயற்சி செய்யப்படுகிறது[8]. மேனாட்டு நாகரிகம் படித்தவர்களையும் எப்படி பாதிக்கும் என்பது சமீபத்தைய வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன[9]. பெண்களே மறைமுக விபச்சாரத்திற்கு ஒப்புக் கொள்ளும் நிலையிம் தெரிகிறது[10]. தில்லி கற்பழிப்பு வழக்கு தேவையில்லாத அளவிற்கு, அநாவசியமான விஷயங்கள் விவாதிக்கப் பட்டு, அந்தரங்கள் ஊடகங்களில் வெளியாகின. உடலுறவுக்கு ஏற்ற வயது எது என்றெல்லாம் அமைச்சர்கள் விவாதித்தனர்[11]. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை[12] என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்! பள்ளிமாணவிகள் காதலர்களுடன் சுற்றுலா என்று சென்றது[13], ஆசிரியர்கள் மாணவிகளை செக்ஸ் தொல்லை செய்தது[14], முதலியன சமூக பிறழ்சி என்பதை விட, அமெரிக்காவின் தாக்கம் இந்திய சிறுவர்களை, மாணவர்களை அதிக அளவில் கெடுக்கிறது என்றுதான் தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 16-07-2013


[4] During the interrogation, the police officers discovered that all the five girls are known actresses; some of them have played character roles in Saas Bahu daily soaps. Others have also acted in Bhojpuri and C grade films.