குடும்பங்கள்கட்டுப்பாடுகளைமீறுவதுஏன்?: சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியவர் சொன்னதை கேட்காமல் இருப்பது போன்ற நிலைகளில் குடும்பங்கள் சிதறுகின்றன. குடும்பத் தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் குடும்ப அங்கத்தினர் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிறார். இதனால், ஆண்கள் உறவுகளை மீறினால், பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம், அனால், பெண்கள் முயலும் போது, தீராத பழி, பெற்றோர், உற்றோர், மற்றோர் அதிகமாக பாதிக்கும் நிலை உண்டாகிறது. பெண்களை கவனிக்காமல் வளர்க்கும் அல்லது வளர்க்கப் படும் பெண்களும் தங்கள் இச்சைக்கு ஏற்றப் படி செயல்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது பணம் தான் பிராதானம் என்ற நிலை உருவானப் பிறகு, பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போன்ற வெறி வரும் பொழுது, நியாயம், தர்மம் போன்றவையும் மறக்கப் படுகின்றன. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கவனித்து வந்தால் எவ்வாறு தனிதனிபர் ஒழுக்கம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நெறிமுறை முதலியவை பின்பற்றாமல் சீரழிகின்றன என்பதையும் கவனிக்கலாம்.
பாலியல்குற்றங்கள்அதிகமாவது: நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சினிமாவின் சீரழிக்கும் போக்கைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு, சினிமா தொழில் தான் விபசாரத்தை அதிக அளவில் ஊக்குவிக்கிறது, உருவாக்கி வருகிறது எனலாம். இதைப் பற்றி சமூக ஆராய்ச்சியாளர்கள் சரிவர கண்டுகொள்வதில்லை. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதிலும் கிருத்துவ-இஸ்லாமிய குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இதுவும் செக்யூலரிஸ ரீதியில் தான் நடந்து வருகின்றன. செய்திகள் வெளி வந்தாலும், பிறகு என்னவாயிற்று என்று சொல்லப் படுவதில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
குடும்பவிபசாரம்என்றுபுதியபிபசாரம்: சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது[1]. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் என்று தினத்தந்தி[2] விளக்கமும் கொடுக்கிறது. சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது[3]. அப்படியென்றால், இது ஏதோ ஏற்கெனவே இருந்தது போலவும், இப்பொழுது, திடீரென்று நடப்பது போலவும் தெரிகிறது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள், என்று ஒரு வரியில் முடிக்கிறது. பிறகு, இதற்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத் தானே செய்வர். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்[4]. குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்[5]. இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்[6]. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது, இதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது.
தொடர்ந்துதொடர்ச்சியாகசெய்துவரும்முறை: போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். இதில் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, நீதிமன்றத்திற்குச் சென்று, ஏதாவது தண்டனை என்று கொடுக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்யப் படுகிறதா அல்லது போலீசாறே நேராக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். இதிலும் புதிர்கள் பலவுள்ளன. அப்பெண்களுக்கு வாதிடும் வக்கீல்கள் யார், எவ்வாறு அவர்கள் விடுதலை பெறுகின்றனர் என்பதும் புரியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். பிறகு செய்த குற்றத்தையே திரும்ப செய்வது போலாகிறது. சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
புரோக்கர்கள்எல்லாம்இருப்பது, இதுஒருதிட்டமிட்டுசெய்யப்படும்வேலைஎன்றாகிறது: அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான ஆமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54), பிரசாந்த் (30) ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. இவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதும் தெரிகிறது[8]. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொழில்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்துநடக்கும்சமூகசீரழிவைத்தடுத்தாகவேண்டும்: அப்படி எல்லாமே சொல்லி வைத்தது போல சக்கரம் சுழல்வது போல, இந்நிகழ்வுகள் திரும்ப-திரும்ப நடப்பது அசாதாரணமாக உள்ளது. மற்ற தொழில்கள் போல இதுவும் திட்டப்படி, முறையாக, செயல்பட்டு வருகிறது என்றாகிறது. இதில் வக்கீல்கள், புரோக்கர்கள், வீட்டு சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு விடுபவர், போலீஸார், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், இது நடப்பது தெரிந்துள்ளது. செய்வது, கைதாவது, பிறகு சட்டப் படி அல்லது ஏதோ ஒரு நுணுக்கத்தில் வெளியே வருவது எல்லாம் யாரும் ஓசியில் செய்ய் மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கும் உரிய காசு கிடைக்கிறது. இத்தகைய விபசாரிகளுக்கு ஆஜராகும் வாதிடும் வக்கீல்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிரது. ஆமாம், அதுவும் அவர்கள் தொழில் தான்! யாராக இருந்தாலும், வாங்கிய காசுக்காக அவர்கள் ஆஜராக வேண்டியது தான்! பிறகு, இதில் எதுவோ இடிக்கிறதே? அப்பெண்களின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லையே. நுகர்வோர் பண்டங்கள் போல அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். சமூகம் அவர்களை விபசாரிகள் என்றாலும், வேறு வழியில் ஆதரிக்கின்றது.
குடும்ப விபசாரம் என்று செய்தி வருகிறது, அந்த அபசாரத்திற்கு ஒரு வரையறை, விளக்கமும், வியாக்யானமும் கொடுக்கப் படுகிறது.
ரூ.5000 கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களுக்கு உல்லாசம் கிடைக்கும்!
இவ்வாறு வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் – தினத்தந்தி.
குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.
கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்
போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.. இப்படியாக இவ்வேலை சுழற்சியாக நடைபெற்று வருகிறது!
இதில் பல புதிர்களும், கேள்விகளும் எழுகின்றன. எப்படி, ஏன், எவ்வாறு இதில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்?
ஒற்றுமையாக சொல்லி வைத்தால் போல சம்பந்தப் பட்டவர்கள் இச்சுழற்சியை வெட்டெறியாமல் தொடர்ந்து நடத்த விடுகின்றனர்?
[3] தமிழ்.ஹிந்துஸ்தான்டைம்ஸ், Chennai: 5000 ரூபாய்கொடுத்தால்போதும்;காலைடிபன்; மதியம்பிரியாணி; நாள்முழுக்கபெண்உல்லாசம்; சென்னையில் 5 பேர்கைது!, Kalyani Pandiyan S, Jun 23, 2023, 09:47 AM IST
மார்ச் 2021ல்இந்தியன்எக்ஸ்பிரசும்விவரமாகசெய்திவெளியிட்டிருந்தது[3]: குற்றஞ்சாட்டப் பட்ட நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படவில்லை, அச்சட்டப் பிரிவுகளின் படி கைதும் செய்யப் படவில்லை. விசாரனைக் குழு கூட்டத்திற்கு அந்த பெண்ணோ, பெற்றோரோ ஆஜராகவில்லை என்றுதான், அரசு அதிகாரிகளின் தரப்பில் சொன்னதாக செய்தியில் உள்ளது. எஸ்.கே. பொன்னுத்தாய், விசாரணை மட்டும் போதாது, போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[4]. வழக்கறிஞர் ஷாஜி செல்லன் என்பவரும், இது போன்ற புகார் வரும் பொழுது, பள்ளி நேரிடையாக போலீஸிடம் புகார் கொடுக்க வேண்டும். விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். எது எப்படியாகிலும், இப்பொழுது, மறுபடியும் இப்பிரச்சினை எழுந்துள்ளது.
விஜயபிரபாகரன்மீதுபோக்சோசட்டத்தில்வழக்குபதிவுசெய்யப்பட்டது (மே 2021): மார்ச் மாதத்தில் நக்கீரன் செய்தியை வெளியிட்டப் பிறகு, மற்ற ஊடகங்கள் வெளியிட்டனவா என்று தெரியவில்லை. ஆனால், மே 2021ல் திடீரென்று அதைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை, “பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்” என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள். மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்[5]. ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன் 2020 ஜூலையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தந்தை மாநகராட்சி, மாவட்டகல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. மேலகோபுரத்தெரு கோதண்டம் ‘போக்சோ’ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்[6].
சஸ்பென்ட்செய்யப்பட்டவிஜயபிரபாகரன்: நீதிமன்ற உத்தரவின்படி விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,க்கள்) சேர்க்கப்பட்டு நகர் தெற்கு அனைத்துமகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விஜயபிரபாகரனை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா ‘சஸ்பெண்ட்’ செய்தார். அவர் கூறுகையில் “புகார்அளித்தவுடன்பெண்கள்பள்ளியில்இருந்துஆண்கள்பள்ளிக்குஅவர்மாற்றப்பட்டார். மாநகராட்சிகமிஷனர்உத்தரவின்படிசஸ்பெண்ட்செய்துள்ளோம். வழக்கில்கல்விஅதிகாரிகளைசேர்த்துள்ளதகவல்எனக்குதெரியாது,” என்றார். மே 25 2021லிருந்து, சிறியதாக, இச்செய்தி வெளியிடப் பட்டு வருகிறது.
கொரோனா–கோவிட்-19 ஊரடங்குநேரத்தில்பாலியல்தொழிலாளர்களின்நிலைமை, அவர்கள்படும்பாடு! தீர்வு என்ன? [2]
பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனாவைரஸ்தாக்கினால்என்னஆகும்: இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சிறப்பு பேராசிரியருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது[1]: “பாலியல்தொழிலாளர்களைப்பொறுத்தமட்டில்அவர்களுக்குஏற்கனவேநோய்கள்இருந்தால், கொரோனாவைரஸ்தொற்றுநோயும்தாக்குகிறபோதுநிலைமைமோசமாகிவிடும். கொரோனாவைரஸ்தாக்குகிறபோது 80 சதவீதம்பேருக்குலேசானஅறிகுறிகள்தோன்றும். அவர்கள்உடலில்உள்ளஆன்டிபாடி (நோய்எதிர்ப்புபொருள்), நோயைஎதிர்க்கத்தொடங்கிவிடும்.அதேநேரத்தில்ஏற்கனவேபால்வினைநோய்களோ, எய்ட்ஸ்நோயோ, காசநோயோஇருந்திருந்தால், அவர்களைகொரோனாவைரஸ்தாக்குகிறபோதுஅதுஆபத்தானது. கடுமையானஅறிகுறிகள்தோன்றும். மரணமும்நிகழும்.கொரோனாவைரஸ்ஏற்கனவேமேற்குவங்காளத்தில்கொல்கத்தாசோனாகச்சிபகுதிஉள்ளிட்டபல்வேறுஇடங்களில்உள்ள 5 லட்சம்பாலியல்தொழிலாளர்களின்வாழ்வாதாரத்தைபாதித்துள்ளது. மேற்குவங்காளத்தில்கொரோனாவைரஸ்பரவத்தொடங்கியதுமேபெண்பாலியல்தொழிலாளர்களைத்தேடிவாடிக்கையாளர்கள்வருவதுநின்றுபோய்விட்டது.
பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனாவைரஸ்தாக்கினால்– பாதுகாப்பு இல்லை: டாக்டர் நரேஷ் புரோகித் தொடர்ந்து கூறியதாவது, “தங்களதுஅன்றாடவாழ்க்கையைநடத்துவதற்கேஅவர்கள்சிரமப்படுகிறநிலைவந்துள்ளது.சோனாகச்சிபகுதியில்மட்டுமேதினமும் 15 ஆயிரம்முதல் 20 ஆயிரம்வாடிக்கையாளர்கள்வருவார்கள். அதுஇப்போதுநின்றுபோய்இருக்கிறது.மகாராஷ்டிராமாநிலத்தில்உள்ளபாலியல்தொழிலாளர்களில்பாதிபேர்விபசாரதொழிலையேநம்பிஉள்ளனர். காப்பீடுகூடசெய்துகொள்வதில்லை. தமிழ்நாட்டில் 5-ல் 2 பேரும், கர்நாடகத்தில் 5-ல்ஒருவரும்இந்தநிலையில்தான்உள்ளனர்.தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகமாநிலங்களில் 31 சதவீதபாலியல்தொழிலாளர்கள்நிதிபாதுகாப்பற்றநிலையில்இருக்கிறார்கள். அவர்கள்வறுமையில்உள்ளனர். நோயுற்றால்சிகிச்சைகூடபெறுவதில்லை.ஊரடங்கைஇப்போதுஅரசுமுடிவுக்குகொண்டுவந்தாலும், பாலியல்தொழிலாளர்கள்தங்கள்தொழிலைஉடனேதொடங்கிவிடமுடியாது. குறைந்தபட்சம் 1 மாதம்காத்திருக்கவேண்டியதுவரும். கொரோனாபரவுவதுநின்றுவிட்டதுஎன்றநிலைவரவேண்டும். அவர்கள்வாழ்வாதாரத்துக்குஅரசுநிதிஉதவிவழங்கவேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[2].
பாலியல்தொழில்விடுதிகளைமூடுவதால், கொரோனாதொற்றால்எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீதஇறப்புகளின்எண்ணிக்கைகுறையகூடும்: அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்[3]. ஊரடங்கிற்கு பின் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை விடுதிகள் மூடப்பட்டிருந்தால், இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்[4]. மேலும் ஆய்வு முடிவுகளை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்[5]. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாலியல் தொழில் விடுதிகளை தொடர்ந்து மூடியிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்[6]. இதனால் 45 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் 72 சதவீதம் குறையும் மற்றும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைய 17 நாட்கள் வரை தாமதம் ஆகும். இந்த தாமதம் அரசுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை காக்க கூடுதல் அவகாசம் அளிக்குமெனவும் கூறியுள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல் 60 நாட்களில் விடுதிகள் மூடப்பட்டிருந்தால், கொரோனா உயிரிழப்பு 63 சதவீதம் அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகிலஇதியபாலியல்தொழிலாளர்கூட்டமைப்பு[7]: அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 16 மாநிலங்களில் உள்ளனர். தலைமை செயலகம் தில்ல்யில் உள்ளது[8]. AINSW பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், HIV தடுப்பு, சமூக பாதுகாப்பு, குடும்ப மேன்பாடு, குழந்தைகள் படிப்பு என்று பலவிதங்களில் உதவி வருகின்றது. தங்களது தொழிலில் அவர்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், சமூக மறுப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மீண்டு, அவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டும் போன்றவற்றிற்கு பயிற்சி, மனநல ஆலோசனை, மருத்துவ வசதிகள் முதலியனக் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவில் அதர்மவழி பெண்களை ஈடுபடுத்துதல் தடுப்புச் சட்டம் [The Immoral Traffic (Prevention) Act, 1956 -“ITPA”] இவர்களின் தொழிலைக் கட்டுப் படுத்தி வருகின்றது. வேறு வழி ./ வேலை இல்லை என்ற பட்சத்தில் தான் சூழ்நிலை காரணங்களுக்காக, அவர்கள் இத்தொழிலில் தள்ளப் பட்டுள்ளார்கள்.அப்படி பார்த்தால், இந்திய சமூகமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டலாம். அவர்கள் இந்துக்கள் எனும் போது, மற்ற இந்துக்களும் பொறுப்பாகிறார்கள். அந்நிலையில் அவர்களும் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு, இந்துமதத்தை வைத்து பல கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் அரசியல், வியாபாரம் செய்து வருகின்றன. ஆக, அவவை இதை எதிர்கொள்ளாமல் தத்துவம் பேசினால், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை.
முடிவுரை: இப்பிரச்சினையை முறையாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
ஒவ்வொரு இந்துவும் வெட்கப் படவேண்டிய விசயம் என்னவென்றால், இந்தியாவில் 50,00,000 முதல் ஒரு கோடி பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
இவர்கள் எல்லோருமே அகில இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு என்றதில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்!
இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு – All India Network of Sex Workers (AINSW) இருப்பது நிதர்சனம்!
இப்பொழுதைய கொரோனா நோய், தொற்று, மற்றும் ஊரடங்கு விவகாரங்களால், அவர்களது தொழில் பாதித்துள்ளது.
சம்பளம் இல்லாததால், சாப்பாடிற்கே வழியில்லாத நிலையில், வாடும் இவர்களில் 60% தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
குழந்தைகளுடன் இருக்கும் இவர்களில், சிலர் இரண்டு மாதமாக, சரியான உணவு உண்ணாமல் தவிக்கின்றனர்.
ஆக, பெண்மை, பெண்ணியம், பெண்ணியத் தூய்மை, கற்பு…இவற்றைப் பற்றியெல்லாம் இந்துத்துவ வாதிகள் ஏன் அலசுவதில்லை?
பூர்ணகும்பம், பிரசாதம் போன்றவற்றிற்கு அளந்து தள்ளுகிறார்களே, அரை கோடி பாரதிய நாரிமணிகளின் நிலை தெரியவில்லையா?
“பாரத் மாதா கி ஜே” கோஷம் போடுபவர்கள், இத்தகைய நிதர்சனங்களுக்கு, உண்மைகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
கோடிகணக்கில் நிவாரணம், உதவி பற்றி பிரமாதமாக வாத-விவாதம் புரிபவர்கள், இவர்களின் குழந்தைகள் கதி பற்றி யோசித்தது உண்டா?
இளம்பெண்டாக்டரைகாதலித்துஆசைதீரஉல்லாசம்… ஆபாசவீடியோக்களைவெளியிட்டுபுண்ணியம்தேடியகாசி..! 70 முதல் 100 பெண்கள்சீரழிந்தனர்!
வயதுவந்தசிறுமியர், இளம்பெண்கள்காமுகர்களிடம்சிக்கிக்கொள்வதுஎப்படி?: சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றியுள்ளான், பாலியல் ரீதியில் சீரழித்துள்ளான், அவர்களை வைத்து ஆபாசப் படங்கள்-வீடியோ எடுத்துள்ளான், பணம் கேட்டு மிரட்டியுள்ளான் என்றெல்லாம் இந்த “கொரோனா” காலத்திலும் செய்திகளாக வருவது திகைப்பாக, வருத்தமாக, பிரமிப்பாக இருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இத்தகைய செய்திகள் நிறைய வந்து விட்டன. இருப்பினும், வயது வந்த சிறுமியர், மாணவியர், இளம்பெண்கள் முதலியோர் எப்படி, இத்தகைய காமக் கொடூரர்களிடம் எளிதாகச் சிக்குகின்றனர் என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. பெற்றோர் கவனிப்பு இல்லை என்பது அன்றாகத் தெரிகிறது. மொபைல் வைத்திருக்கும் பெண்கள், தேவையில்லாமல், அடையாளம் தெரியாத, சம்பந்தம் இல்லாத, வெளியாட்களுடம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. விளையாட்டிற்கு செய்கிறார்களா, மற்றவர்கள் போன்று, சமூக ஊடகங்களில் பிரபல ஆகவேடும் என்ற போலித்தனத்துடன் செயல்படுகின்றனரா, வேறு பிரச்சினைகளை மறக்க இங்கு வந்து மாட்டிக் கொள்கிறார்களா என்று பலகோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.
இறைச்சி கடை அஹிம்சை, பாசம் போன்ற நல்ல குணங்களை வளர்க்காது: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல இறைச்சிக்கடை / கோழி வியாபாரி- தங்கப்பாண்டியனின் மகன் காசி (வயது 26), இவன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளான. ஆக, இத்தகையோருக்கு இரக்கம் போன்ற மனித குணங்கள் குறைவாகவே இருக்கும். கொடுமை, குரூரம் போன்றவற்றைப் பற்றி கவலைப் பட முடியாது. ஏனெனில், பிறகு அந்த தொழிலே செய்ய முடியாது. சிக்ஸ் பேக் உடம்பு.. கூலிங்கிளாஸ், பைக் என மாஸ் காட்டி வந்தான். இவனுக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறான்.. சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவானாம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் காசி, டெமோ, சுஜி, டெமோ லுக் போன்ற பல்வேறு பெயர்களில் பல கணக்குகளைத் தொடங்கியுள்ளான். உள்ளூர் காவல்நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவரின் மகளையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பதறிய ஆய்வாளர் கமுக்கமாக பணியிட மாற்றம் வாங்கிச் சென்று விட்டார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, புஜபல பராக்கிரமத்தை திறந்த மேனி மூலம் வெளிப்படுத்துவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்த வீடியோக்களைப் பார்க்கும் பள்ளிச் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை உணர்ச்சிவசப்பட்டு இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே கியூட்டாக உள்ளாரே என, லைக், கமென்ட், ஷேர் செய்யத் தொடங்குவார்கள்.
பணம், வசதிமுதலியவைவைத்துபெண்களைகுறிவைத்துள்ளது: ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டுள்ளான் என்கிறார்கள். அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வானாம். இந்த கருத்துக்களை பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.. லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர்.. அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையிம் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்துள்ளான். காசியின் செல்போன் உட்பட அவனது பல ஹார்ட்-டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்… அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்[1]. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன[2]. அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். ஸ்கூல் மாணவிகளை கூட காசி விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.. கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
சென்னயில்பெண்டாக்டரைகாதலித்துஏமாற்றியது: இவன் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது[3]. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது. அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளான்[4]. அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டான். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினான். இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளான். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளான். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளான். இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினான். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசியை சட்டரீதியாக விசாரித்தால் அவருடன் நட்பில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் மகன்களின் லீலைகளும் அம்பலத்தில் ஏறும் என்கின்றனர் போலீசார்.
ஊடகங்களின் வழக்கமான வர்ணனைகள்: கல்லூரி படிப்பு முடிந்ததும், வேலைக்குச் செல்லாமல், இருந்துள்ளான்[5]. நண்பர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி, அதில் தன்னை ஒரு சமூக ஆர்வலர், தொழில் அதிபர் போன்றுக் காட்டிக் கொண்டு, பல பெண்களிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்[6]. பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான்[7]. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளான்[8].. சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான்[9]. அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி[10]. பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார் கொடுத்தார். அவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது[11]. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[12].
காதலித்துஆசைதீரஉல்லாசம்…பாலியல்உறவு……உடல்ரீதியிலானதொடர்பு…உடல்ரீதியிலானநெருக்கம்என்றால்என்ன?: தமிழ் மற்றும் ஆங்கில் ஊடகங்கள், ஊடக விற்ப்பனர்கள், நிருபர்கள், “கற்பழிப்பு” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், கீழ்கண்ட சொற்றொடர் பிரயோகங்கள் உள்ளன:
காதலித்து ஆசை தீர உல்லாசம்…
பாலியல் உறவு……
உடல் ரீதியிலான தொடர்பு
உடல் ரீதியிலான நெருக்கம் [physical intimacy]
அதாவது, ஒருவேளை, சமீபத்தைய உச்சநீதி மன்ற தீர்ப்பின் விளக்கம் படி, அவர்கள், விருப்பத்துடன் உடல் உறவு கொண்டதால், நாஜுக்காக அவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். அதாவது அவ்வாறு செய்தால், சட்டப் படி “கற்ப்பழிப்பு” ஆகாது. 60 வருடங்களுக்கு முன்னால், “சோரம் போனாள்” என்பார்கள், அதாவது, கற்பை இழந்தால் என்ற அர்தத்தில் குறிப்பிடுவர். விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், திருமணத்திற்கு முன்பாக விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், ஆகவே, இதெல்லாம் சகஜம் என்று கொள்ள முடியுமா? எதிர்காலம் நினைத்து, பெண்கள் புகார் கொடுக்காமல் இருக்கலாம். இப்பொழுது விசாரணையில் வெளிவரும் போதும், பெற்றோர் எதிர்காலம் நினைத்து, மறைக்கத்தான் செய்வர். இவர்கள் பிறகு கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று வாழும் போது என்னாகும்? எதிர்காலம் தான் பதில் சொல்லும்.
[1] தமிழ்.நியூஸ்.18, பள்ளிச்சிறுமிகள்முதல்பிரபலநடிகர்மகள்வரை…! 70 பெண்களின்அந்தரங்கவீடியோக்களைவைத்துமிரட்டியகிரிமினல்கைது, LAST UPDATED: APRIL 25, 2020, 3:27 PM IST.
[3] தினத்தந்தி, பெண்டாக்டர்ஆபாசபடங்களைசமூகவலைத்தளத்தில்பரப்பியகோழிக்கடைக்காரர்நாகர்கோவிலில்பரபரப்பு, பதிவு: ஏப்ரல் 25, 2020 06:19 AM மாற்றம்: ஏப்ரல் 25, 2020 06:39 AM
பனிமலர்விவகாரங்கள், விவாதங்கள்மற்றும்விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்! [3]
கேமராமேன் மெஸேஜ் அனுப்பியது, இத்யாதி[1]: அப்பெண் தோடர்ந்து சொன்னது[2], “சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார். அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்புவார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார் என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து மெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள்.
முன்பு வேலை செய்த கம்பெனிக்கே போய் சேர்ந்தது[3]: தொடர்ந்து கொடுத்த விளக்கம்[4], “அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன். அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன்”.
பெரியார்இப்பொழுதுஉயிரோடுஇருந்தால், திருமணம்செய்துகொள்வேன்[5]: பனிமலர் இரு கூட்டத்தில் பேசியது, “பெண்ணியம் பற்றி பேசப் போறீங்க…20 வச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டார்…அதுவே ஒரு பேக்..நிறிய தடவ இந்த கேள்வி கெட்டு போரடிக்குது.70-20 எல்லாம் கிடையாது. மணியம்மைக்கு கல்யாணம் ஆன போது வயசு 30. இன்னொரு கேள்வி, அப்படியே இருந்தா கூட பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தா இங்கிருக்கிற எத்தன பொண்ணுங்க பெரியார கல்யாணம் பண்ண மாட்டீங்க? ……நா பண்ணிப்பே….எல்லோரும் பண்ணிப்போம்.
பெரியாரைப் போன்ற ஆம்பளய, ஹீரோவ யார் கல்யாணம் பன்ன மாட்டா..ஒரு பொறாம அவ்வளவே. பாரு இந்த ஆளு இந்த வயசில கெத்தா கல்யணம் பண்ணியிருக்காரு என்று வயத்தெரிச்சல்லே பொளம்புரே..அது தவிர வேறென்ன விசயம்? ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே? …அதுலே நாம கருத்து சொல்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது…”
பாவம், அண்ணா ஈவேராவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார், எழுதினார் என்று இந்த புரட்சி பெண்ணிற்கு தெரியவில்லை போலும்!, இதிலிரூந்தே, அரைவேக்காட்டுத் தனம் வெளிப்படுகிறது. ஏதோ பெண் என்ற கவர்ச்சியில், முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.
பாவம், அண்ணா உயிரோடு இருந்திருந்தால், பனிமலர் கதி, அதோகதி போல!
பெரியாரின் பெண்டாட்டியே, என்ன கெத்துடி, அடி சிறுக்கி, கழட்டடி என்றெல்லாம் பேசியிருப்பார், போலும்!
இதிலிருந்தும், மேலே இரண்டு காதல் தோல்வி, தாம்பத்தியம், முதலியவற்றைப் பற்றி பேசியது, உதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வது என்றெல்லாம் கூட பெண் உரிமை என்ற நிலையில் தான் இவர் நம்புவது, பரிந்துரைப்பது …………..என்பதெல்லாம் தெரிகிறது. அதில் உண்மையான காதலும் இல்லை, தமிழச்சிகளின் தாம்பத்தியமும் இல்லை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் இல்லை…..என்று தெரிகிறது
சிவனை, ஜக்கியைவிமர்சித்தது[6]: இரண்டு நாட்கள் முன் 04-03-2019 அன்று இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது[7]. பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர். கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி பாதிக்கப் பட்ட பெண்களைப் பற்றி பேசியது[8]: பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை, எல்லாமே உரிமை என்ற நிலையில் தான், பொள்ளாச்சி செக்ஸ் குற்றம் பற்றி, குறிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறி, வீடியோ பரப்ப ஆரம்பித்துள்ளார், “உடல்…கற்பு……புனிதம் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம்..கற்பு புனிதம் போய் விட்டது என்று வருத்தப் பட அவசியம் இல்லை….இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்… இந்த செய்தி பாதிக்கப் பட்ட எண்களுக்கு போய் சேர வேண்டும். கவுன்சிலிங் தேவை என்றால், நாங்கள் உதவ தயாராக உள்ளோம்………….,” என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பெண் தனது அனுபவம் மீது வைத்தே, இத்தகைய அறிவுரை வந்துள்ளது என்றாகிறது. நேர்மறையாக, நன்றாக இருக்க வேண்டும், வாழ்க்கைசிறக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், வேறுவிதமாக சொல்வதிலிருந்து சந்தேகம் எழுகின்றது. கவுன்சிலிங் என்பது கிருத்துவ முறைப் போன்றது. விசயங்கள் தெருயும் போது, அந்த கவுன்சிலிங்-காரனே நளைக்கு, பிளாக்-மெயில் செய்வது, மிரட்டுவது என்று ஆரம்பிக்கலாம். இதிலிருந்து, சம்பந்தப் பட்ட கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்கின்றனவா அல்லது, தொடர்பு இருக்கின்றதா, இல்லை இதையே ஒரு பெரிய தொழிலாக செய்யப் போகின்றனரா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுதே, அரசியல் ரீதியாக, ஒருவரை ஒருவர் பழி சொல்லி, தாக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, இந்திய சமுதாயம், இளைஞர்கள், பெற்றோர் முதலியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
[1] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின்லீலை..! பேஸ்புக்கில்கிழிகிழியெனகிழித்தபெண்நிருபர்…! ஆதாரம்உள்ளே ..!, By Vinoth KumarFirst Published 11, Oct 2018, 8:02 PM IST.
[3] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின்லீலை..! பேஸ்புக்கில்கிழிகிழியெனகிழித்தபெண்நிருபர்…! ஆதாரம்உள்ளே ..!, By Vinoth KumarFirst Published 11, Oct 2018, 8:02 PM IST.
ஏப்ரல்.14 2017 – எம்.எஸ்.சிபடிக்கும்மாணவிதற்கொலைஏன்?: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார். கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது[1]. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்[2]. மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்[3]. அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்[4]. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது முற்றிலும் மர்மமாக இருக்கிறது.
தற்கொலைக்குக்காரணங்கள்என்ன?: சமீபகாலத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் அதிகமாக தற்கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது. அவற்றில் காணப்படும் காரணங்கள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன:
1. எழ்மை, மற்றவர்கள் போல ஆடை அணிய முடியவில்லை, தாழ்ந்த மனப்பான்மை.
2. சில பாடங்கள் புரியவில்லை, ஆங்கிலம் வரவில்லை.
3. அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறோம், உடலில் ஏதோ குறை / ஊனம் உள்ளது.
4. பரீட்சையில் அதிக மார்க்குகள் கிடைக்கவில்லை, பெயில் ஆகிவிட்டோம்.
9. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல்].
10. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல், கர்ப்பம் கலைத்தல், அத்துடன் விட்டுவிடுவது].
11. உடலுறவு கொண்டு, அனுபவித்து விட்டுவிடுவது என்ற நிலை.
12. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல், தொடர்ந்து கற்பழித்தல்.
13. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல்ல் அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்தல்.
மற்ற பல காரணங்களும் இருக்கின்றன. மனோதத்துவ ரீதியில் அவை ன்னும், பலவிதங்களில் வேலை செய்து, விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், பொதுவாக அவற்றை பட்டியலிட முடியாது, அலச முடியாது.
பாலியல்கொடுமைகள்எவ்வாறுஆரம்பிக்கின்றன, நடக்கின்றன: அதே போல, இவற்றையும் கீழ்கண்டவாறு தொகுக்கலாம்:
ஆண்களின்வக்கிரம், தீயமனப்பாங்கு: தாய்க்குப் பிறந்த ஆண்மகண் தறிகெட்டது:
ஆண்களுக்கு பெண், பெண்ணியத்தின் மீதான மதிப்பு குறைந்தது,
சகோதரி மற்ற பெண்-உறவுகள் இருந்தும், பெண்மையினை மதிக்காமல் இருக்கும் நிலை.
செக்ஸுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேவலமான மனப்பாங்கு,
தனது அந்தஸ்த்தைக் காட்டி மிரட்டுவது,
இளம் வயது கோளாறை பயன்படுத்திக் கொள்வது,
பெண்களின்பலவீனம்: இன்றைய சினிமா, ஊடகங்களின் பாதிப்பினால், இளம் பெண்கள், சீக்கிரம் செக்ஸ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். சக-தோழிகளின் சகவாசம் அத்தைய போக்கினால், மற்ற பெண்ளும் பாதிக்கப்படுகிறார்கள்.
பெற்றோரின்கவனக்குறைவு, பொறுப்பில்லாமை, முதலின: பெற்றோர் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், மகள் என்ன செய்கிறாள் என்று அறியாமல் இருக்க நிலை ஏற்படும். இது அவள் காதல் போன்ற விவகாரங்களில் னாட்டிக் கொள்ள ஏதுவாகும்.
பொருளாதாரநிலை, ஏழ்மைமுதலியன: நல்ல பண வசதி கொண்டவர்கள் மற்றும் ஏழ்மை என்ற இருநிலைகளில் உள்ளவர்களும், இத்தகைய பாலியல் இவ்வகாரங்களில் மாட்டிக் கொள்கின்றனர்.
உடலுறவுகொள்வது, அனுபவித்தல்என்றமாயையில்சிக்குவது: வயது கோளாறு மற்றும் சினிமா மாயைகளில் சிக்கிய சில தலைதறுகள் “வாழ்க்கை அனுபவப்பதற்கே” என்ற ரீதியில் செய்ல்படுவது:
சினிமா போன்று “பாய் பெரின்டுகளை” வைத்துக் கொள்வது.
சினிமாவுக்கு செல்வது.
அங்கு தொட அனுமதிப்பது, காமத்தில் வீழ்வது.
மானம்மோனது, கற்பிழந்தது, குடும்பகௌரவம்முதலியவை: பொதுவாக பெண்ணின் விவகாரம் தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கும் என்ற நிலையிலேயே, பெரும்பாலான இத்தகைய விசயங்கள், வெளிவராமல் மறைக்கவே சம்பந்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு உதவுவதாக இருக்கின்றது. சில நேரங்களில் எல்லைகளை மீறும்போது, கசிந்து வெளியே தெரியும் போது, துணிந்து புகார் கொடுக்கும் போது, விசயங்கள் தெரியவருகின்றன.
பாலியல்தொந்தரவுகள், சதாய்ப்புகள், தடுப்பதுஎவ்வாறு?: இங்கு சில யுக்திகள் உதாரணத்திற்காக எடுத்துக் காட்டப் படுகிறது:
பெண்கள் தாம் எல்லா நிலைகளிலும் நேரங்களிலும், சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் எச்சரிக்கையாக, விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.
பெற்றொர், நிச்சயமாக, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், மகளுக்கு உரியவற்றை வெட்கப்படாமல், மழுப்பாமல் விவரங்களை தற்காப்பு நிலைகளை அறிவுருத்த வேண்டும், முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வீடு-பள்ளி-கல்லூரி-வேலை செய்யும் இடம்………என்று எங்கும் பையன்களை, ஆண்களை குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும்.
உறவுகார-நண்பர்-புதியவர் என்ற எந்த பையன்களை, ஆண்களையும் தனியாக பேசுவது, சந்திப்பது, இருப்பது, கூட செல்வது, அருகில் உட்கார்ந்து கொள்வது போன்ற நிலைகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியவர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யக் கூடாது.
இன்னும் பலவுள்ளன, ஆனால், எல்லாவற்றையும் இங்கு விளக்கமுடியாது.
ஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின்செக்ஸ்டார்ச்சர்தாங்காமல்மாணவிதற்கொலைமுயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவைஇல்லாமல்இருக்கும்போது, எதைப்பற்றியும்கவலைப்படாமல், இரையைத்தேடும்விலங்குகளாகமாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள். ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மார்ச்.31 2017 – பள்ளிதாளாளர்ஆபாசபடம்எடுத்துமிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].
மயக்கமருந்துகொடுத்து, கெடுத்துபள்ளிதாளாளர்ஆபாசபடம்எடுத்ததுமற்றும்மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.
பாதிக்கப்படும் பெண்கள்
வீடியோவைக்காட்டி–மிரட்டி, மறுபடி–மறுபடிசெக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].
கெட்டவர்களைதடுக்கவேண்டும், வேலைக்குவருபவர்கள்கண்காணிக்கப்படவேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித உரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.
ஜூலை.7 2017 –17 வயதுமாணவிதற்கொலை – கடவுள்அழைத்தாராம்!: வேலூருக்கு அருகில் காகிதபேட்டரை என்ற ஊரில் உள்ள ஒரு மகளிர் ஹாஸ்டலில் தங்கி, தேவநாதன் என்பவரின் மகளான நளினி (வயது 17) நர்ஸிங் டிப்ளோமா படித்து வந்தார். குறிப்பிட்ட நளன்று, எல்லோருக்கும் கல்லூரிக்குப் புறப்பட்டனர். அப்பொழுது, நளினி தான் வர நேரம் ஆகும், தாமதமாக வருகிறேன் என்றாளாம். ஆனால், 10.30 அளவில், ஹாஸ்டல் வார்டன் நாதியா, அவள் தூக்கில் தொங்கியதைக் கண்டு, போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் வந்து, உடலை சோதனைக்கு அனுப்பி வைத்தது. அவள் அறையில், “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்ற கடிதம் இருந்ததை பார்த்தனர்[1]. அதனை தற்கொலை கடிதம் என்று சொல்லப்பட்டது[2].
“கடவுள்என்னைஅழைக்கிறார், நான்அவரிடம்செல்கிறேன்”, என்றுபெரியார்மண்ணில்தற்கொலைகடிதம்எழுதிவைத்துசாவார்களா?: வேடிக்கை என்னவென்றால், இதைத் தவிர வேறு காரணம் எதுவும் கூறப்படவில்லை, பிரேத பரிசோதனை மற்றும் இதர விவரங்களும் தெரியவில்லை. தமிழ் ஊடகங்கள் இதை வெளியிடவே இல்லை. பொதுவாக, கிருத்துவ கல்வி நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிகள் என்றால், விசயங்கள் மறாஇக்கப் படுகின்றன. ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் கிருத்துவர் மற்றும் கிருத்துவ சார்பு கொண்டவர்களாக இருப்பதால், அத்தகைய இருட்டடிப்பு செய்யப் படுகிறது. “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்று பெரியார் மண்ணில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாவார்களா என்று எந்த பகுத்தறிவுவாதி, பெரியார்-தொண்டன் மற்ற எவனும் கேட்கவில்லை, ஏன் கண்டுகொள்ளவில்லை. ஊடக மற்றும் நாத்திக தர்மங்கள் தமிழகத்தில் இவ்வாறுதான் வேலை செய்து கொண்டிருக்கின்றன.
ஜூன்.13 2017 – செக்ஸ்டார்ச்சர்கொடுத்துஆசிரியைதற்கொலைசெய்துகொண்டவழக்கில்ஆசிரியருக்குதண்டனை: புதுக்கோட்டை கவிநாடு மேற்கு சண்முகா நகரை சேர்ந்தவர் மதிவாணன் (45). ஆலங்குடி அருகே தெற்கு ராயப்பட்டி ஆரம்ப தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், புதுக்கோட்டை ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். இவருடன் அதே பகுதி காமராஜபுரம் 25ம் வீதியை சேர்ந்த வீராச்சாமி மனைவி புவனேஸ்வரி (35) ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தார். புவனேஸ்வரிக்கு, மதிவாணன் பள்ளியிலும் தொலைபேசி மூலமாகவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆசிரியராக இருப்பவர், ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற நிலை மறந்த போதே, இவன் மிருகமாகி விட்டான். அந்நிலையிலேயே, இவன் கட்டுப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். கடந்த 7.5.2015ம் தேதியன்று புவனேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். அப்போது மீண்டும் தொலைபேசி மூலம் பேசி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்ததால் புவனேஸ்வரி மனமுடைந்தார். இதையடுத்து விரக்தியில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் புவனேஸ்வரி கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்[3].
பாலியல்குற்றத்திற்குதண்டனைகொடுத்தால், இறந்தவர்நிலைஎன்ன?: இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர். பின்னர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மதிவாணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையம் அனுபவிக்க வேண்டும். இது தவிர பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்[4]. சிறைதண்டனை அனுபவிப்பதால் அப்பெண்ணின் உயிர் திரும்ப வந்து விடுமா? “தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக” என்றால், “உயிர் போனதற்கு” எந்த தண்டனையும் இல்லையா? அதற்கு இழப்பீடு எப்படி கிடைக்கும்?
மே.20 2017 – வாய்பேசாதஇளம்பெண்ணைகர்ப்பமாக்கியகாப்பகதாளாளருக்குதண்டனை: கோவை சோமனூர் அடுத்த கோதபாளையம் மற்றும் முருகன்பாளையத்தில் ‘திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளின், தாளாளர் முருகசாமி(57). கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 82 மாணவர்கள், 102 மாணவிகள் என மொத்தம் 184 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், படித்து முடித்தவர்கள் இதே பள்ளியில் பணியாற்றி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கோதபாளையம் பள்ளியின் முன்னாள் மாணவியும், தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவருமான வாய்பேச இயலாத இளம்பெண் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் தன் கணவருடன் வந்து ஒரு புகார் அளித்தார். அதில், 2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார் என கூறி இருந்தார்[5]. இந்த புகார் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் குற்றம், பள்ளி மாணவிகளை ஏமாற்றுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்[6]. மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி (40), பயிற்றுனர்கள் பிரமிளா (28), ரேவதி (30), பாபு (35) ஆகியோரையும் கைது செய்தனர்[7]. இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்[8].
ஏப்ரல்.20 2017 – பாலியல்தொல்லைக்குட்பட்டமாணவிதற்கொலைமுயற்சி: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி ஊராட்சி செங்கான்வட்டம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் துட்டம் பட்டி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினரான கோவிந்தராஜ் என்ற வாலிபர் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தார்[9]. இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து பெற்றோர் தாரமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாணவி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்[10]. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் 11-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்
மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்: சிஎஸ்ஐ சர்ச் போதகர் சார்லஸ் சாம்ராஜ் சன்-டிவியில் கூறும்போது, நாங்கள் சொல்வதைவிட, கோர்ட் விசாரணைக்குப் பிறகு, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும், எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். பாதிக்கப் பட்ட அந்த மாணவியும், எப்படி தன்னை பிரைட் தனது அறைக்குள் அழைத்தார், உடலைத் தொட்டு, பிறகு, அங்கங்களையெல்லாம் தொட்டார்…………………என்பதையெல்லாம் சொன்னார். சமையல்காரி மற்றும் ஐந்து மாணவிகளிடம் விசாரணை நடந்துள்ளது. அவர்கள் நடந்தது பற்றி விளக்கியுள்ளர்கள். செய்தித்தாள்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப் படுகிறது. குறிப்பிட்ட மற்ற கட்டுரைகளையும் சேர்த்து வாசிக்கலாம்[1].
காவலில்வைத்துவிசாரிக்கமாஜிஸ்திரேட்உத்தரவு (ஜூலை 7, 2010): பாலியல் தொந்தரவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பள்ளித் தாளாளரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது[2]. கொடைக்கானல் தனியார் பள்ளியில் பல மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதன் தாளாளர் பிரைட் (76). இந்த நிலையில் பூடானைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி, பள்ளித் தாளாளர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த ஜூன் 18-ம் தேதி 2010 கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரைட் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீஸார் பிரைட்டை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ஜெயராஜிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் மதுரையிலிருந்து பிரைட் அழைத்து வரப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை கொடைக்கானல் போலீஸார் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் ஜெயராஜ் உத்தரவிட்டார்.
பள்ளிஹாஸ்டலில்தங்கவைக்காமல்பள்ளிவளாகத்திலுள்ளதனதுபங்களாவில்தங்கவைத்துள்ளார்: வடமேற்கு மாநிலங்களில் இருந்து பல மாணவியர் வந்து தங்கிப் படிப்பது வழக்கம். ஆனால், சில மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தானே படிக்க முன்வந்ததாக தெரிகிறது. இவர் அவ்வகையில், இந்தப் பள்ளியில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவிகளை தமது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். பிரைட் இவர்களை பள்ளி ஹாஸ்டலில் தங்க வைக்காமல் பள்ளி வளாகத்திலுள்ள தனது பங்களாவில் தங்க வைத்துள்ளார். இங்குதான் இவரது “மோடிவ் / தவறன எண்ணம்” வெளிப்படுகிறது. முதலில், ஒரு பெரியவர் என்ற ரீதியில், “அப்பா” போல நடந்து கொள்வது, முதுகில் தட்டிக் கொடுப்பது, அன்பாக-பாசத்துடன் கட்டிப் பிடிப்பது, என ஆரம்பித்து, மெதுவாக காமலீலைகளை ஆரம்பித்துள்ளார். இவ்வகையில்தான், சில மாணவிகளை அவர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
கொடைக்கானல்பள்ளிதாளாளர்பங்களாவில்போலீசார்சோதனை[3] (08-07-2010): பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கிய கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட்டிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட் (70) பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான தாளாளர் ஸ்ரீவில்லி., கோர்ட்டில் சரண் அடைந்தார்.பள்ளி முதல்வர் ஷிபா பாலும்(36) கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் கொடைக்கானல் போலீசார் ஒரே நாளில் விசாரணையை முடித்து நிலக்கோட்டை ஜெயிலுக்கு அனுப்பினர். நிலக்கோட்டை கோர்ட்டில் பப்ளிக் பள்ளி மாணவிகள் 5 பேர், சமையலர் ரத்தினம் என்ற ராஜரத்தினம்[4] ஆகியோர் மாஜிஸ்திரேட் அனுராதா முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தனர். இந் நிலையில் பிரைட்டின் பங்களாவில் தங்கி படித்த 17 மாணவிகளில் 5 மாணவிகளும், சமையல்காரப் பெண்ணும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்ட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட் அனுராதாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்[5].
நைட்டியுடன் வரச்சொன்ன தாளாளர்[6]: பூடான் மாணவி தன்னை எப்படி படீபடியாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார், என்று விவரித்தார். அம்மாணவி கூறுகையில், “இரவு நேரங்களில் என்னை நைட்டி உடையில் வரச்சொல்வார். ஆங்கில அறிவை மேம்படுத்துவதாகக் கூறி, ஆங்கில படங்களை டிவியில் காண்பிப்பார். அவரது தவறான எண்ணத்திற்கு ஒத்துழைக்காததால், என்னையும், சக பள்ளி தோழிகளையும் திட்டினார். ஒரு மாணவியை தாக்கினார். கடந்த 3ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் உடல்நலம் சரியில்லாமல் படுத்திருந்தேன். அப்பொழுது என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”. ஆக, இவரது காம-மனப்பாங்கு, வக்கிரபுத்தி, முதலியவை நன்றாகவே வெளிப்படுகிறது.
பிரைட்டின் பங்களாவில் சோதனை: இந்நிலையில் நேற்று கொடைக்கானல் போலீசார் பள்ளி தாளாளர் பிரைட்டை விசாரணைக்காக மதுரை ஜெயிலில் இருந்து கொடைக்கானலுக்கு அழைத்து சென்றனர். இன்று கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில் போலீசார் ஸ்டேஷன், பங்களாவில் விசாரணை நடத்தினர். பிரைட் தங்கியிருந்த அறை திறக்கப்பட்டு அவரது முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாணவிகள் சொன்னபடி, அங்கிருந்த பொருட்கள் – டிவி, சோபா, படுக்கை – முதலியவை சோதனையிடப் பட்டன. எப்படி மாணவிகளை அங்கு அழைப்பார், படங்களைப் போட்டுக் காண்பிப்பார் முதலியன சோதிக்கப் பட்டன. நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
பாலியல்தொந்தரவுக்குஆளானமாணவிகள்கல்விக்குஏற்பாடு: பிரைட்டின் மீது புகார் சொன்னதால், அந்த மாணவிகள் பாதுகாப்பு குறித்து வெளியே வந்துவிட்டனர். மேலும் அவர்கள் தொடர்ந்து அந்த பள்ளியில் படிப்பு தொடரமுடியாத நிலை ஏற்பட்ட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் 16 மாணவிகள், தொடர்ந்து பாதுகாப்பு, கல்வி பெற முடியாமல் இருந்தனர். இவர்களுக்கு தொடர்ந்து கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்[7].
ஷிபாபால்என்றபெண்மணியேஇதற்குஒத்துழைத்ததுஅதிர்ச்சியாகஉள்ளது[8]: இந்நிலையில், நேற்று அதிகாலை பள்ளி முதல்வர் ஷிபாபாலை(36) தாளாளருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். முன்பு ஊடகக்காரர்கல் சென்று, இவரிடம் கேட்டதற்கு திமிராக பதில் சொன்னதை ஞாபகத்தில் கொள்ளவும்[9]. கோர்ட் உத்தரவுப்படி, அவர் நிலக்கோட்டை கிளைச் சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டார். கைதான ஷிபாபால் திருநெல்வேலியை சேர்ந்தவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த பள்ளி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
ஷிபாபால்–பிரைகூட்டு: இது அபயா கொலை விஷயத்தில் எப்படி, இரு பாதிரி-ஒரு கன்னியாஸ்திரீ காமக்களியாட்டங்களில் ஈடுபட்டார்களோ, அதே மாதிரி இருக்கிறது. கிருத்துவர்கள் தங்களது பலவித பலங்களால், இவை எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள். எந்த ச-டிவியிலும் இவர்களின் சரச லீலைகள் காட்டப்படமாட்டாது; நக்கிரனும் லெனினை அனுப்பி வீடியோ எல்லாம் எடுக்க மாட்டார்கள். ஷிபா பாலின் ஒத்துழைப்பு, பிரைட்டின் இரவு நேர உல்லாசங்கள் முதலியவை அதிர்ச்சிற்குள்ள விஷயங்கள். எப்படி, இவர்கள் பெண்களை, வயது வந்த சிறுமியர்களை – மாணவிகளை இவ்வாறு செக்ஸ் வேலைகளில் ஈடுபடுத்துவார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது[10].
இறையியல் காமத்தைத் தூண்டி, கலவிக் குற்றங்களை நியாயப்படுத்துகின்றன என்றால், கிருத்துவர்கள் அதனை பரிசீலிக்க வேண்டும்: கிருத்துவத்தில், கன்னியாஸ்திரீக்கு ஏசுதான் உனது காதலன், கணவன்…………அவனுடந்தான் நீ உறவாடமுடியும் என்றெல்லாம் போதனை சொல்லி மனத்தைக் கட்டுப்படுத்தி வைக்க பயிற்சிகள் கொடுத்தாலும், இந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோர் அந்த காமம் பெருகும் வேளையிலே, “நாங்கள்தான்ஏசுகிருஸ்து, அதனால், என்னுடன்கூட, புனைவதால்எந்தபாவமும்இல்லை, மாறாகஉனக்குசொர்க்கம்கிடைக்கும், பரிசுத்தஆவிஎப்படிமேரியைபுனிதப்படுத்தியதோ, அதேமாதிரிநீயும்புனிதப்படுத்தப்படுவாய்“, என்றெல்லாம் மனத்தை களைத்து, ஆடைகளை களைத்து, உடலுறவு கொள்கின்றனர். ஒருமுறை ருசி கண்ட பிறகு, எந்த போப்புகள், கார்டினல்கள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்…………….முதலியோரும், கன்னியஸ்தீரிக்கலும் அதனை மறுபடியும் ருசிக்கத் தயங்குவதில்லை. ஆகையால் தான், இம்மாதிரியான செக்ஸ் விவகாரங்கள் நிறைய வெளிவருகின்றன.
இடைக்காலத்திலிருந்து, இக்காலம் வரை, கிருத்துவ மதகுருமார்களின் செக்ஸ் விவகாரங்கள் அதிகமாகவே வெளிவந்துள்ளன. இப்பொழுது இந்தியாவில், கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ச் போன்ற தலைமை இயக்கங்களே, இதைப் பற்றி வெளிப்படையக பேசி, விவாதித்து, சர்ச்சை புரிந்து வருகின்றன. அவர்களுடைய ஒழுக்கம், கட்டுப்பாடு, முதலியவைப் பற்றி வழிமுறைகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை ஏற்படுத்தியுள்ளன. அந்நிலையில், இறையியல் காமத்தைத் தூண்டி, கலவிக் குற்றங்களை நியாயப்படுத்துகின்றன என்றால், கிருத்துவர்கள் அதனை பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், சமூக ரீதியில், இந்தியாவில், ஏன் உலகம் முழுவதும், இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் பெருகுவதை தடுக்கவேண்டிய நிர்பந்தம், தண்டனைக் கொடுப்பது முதலியன பொதுப்பிரச்சினையாகி உள்ளன.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பார்த்து விட்டோம்.
படங்களுடன் செய்திகள் கூட வந்துவிட்டன.
ஆசிரியர் மாணவியைக் கட்டிப் பிடித்தது, முத்தமிட்டது, ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ஜாலியாக இருந்தது, ……………………….என அசிங்கங்கள், ……….ஆபாசங்களும் நிறையெவே வந்துள்ளன.
அதுமட்டுமா, இந்திய – தமிழக பாதிரிகள், பிஷப்புகள்……..அமெரிக்கா, இத்தாலி…..என்று சென்று பல பெண்களை, சிறுமிகளை கர்பழித்து விட்டு, மற்ற பாலியல் குற்றவாளிகளைப் போல தமிழகத்தில் வந்து ஒளிந்து கொண்டு விட்டார்கள். கிருத்துவ சபைகள், பிஷப்புகள், மற்ற கிருத்துவர்கல் தாம் அவர்களுக்கு இடம் கொடுத்தது. கன்னியாகுமரியில் ஒருத்தன், ஊட்டியில் ஒருத்தன்……….என்ரு ஒளிந்துள்ளார்கள்.
தமிழ் ஊடகங்கள்,
செம்மொழி செய்தியாளர்கள்,
கன்னித்தமிழ் காவலர்கள்,
கற்ப்புக்கரசி கண்ணகி வழி வந்தவர்கள்,
இனமான போராளிகள்,
மொழிப்போர் மறவர்கள்
இணைத்தள சூரப்புலிகள்
கணினி தமிழ் கணக்காளர்கள்……….
இவற்றைப் பற்றியெல்லாம் மூச்சுக்குட விடுவதில்லை, சொல்வது-எழுதுவது கிடையாது!
ஏன்?
ஆனால், அந்த கொடிய-குரூர-காமுகர்கள் என்னவானார்கள்?
சொல்லமுடியுமா?
அவர்களுக்கு இத்தகைய தண்டனைக் கொடுத்தார்களா?
கேரளாவிற்கு ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா?
கோழிக்கோடு : மார்ச் 2007ல், ஏ. கே. ஹரிதாஸ் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நான்காம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், புலியாவு என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த நான்காம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ஆசிரியர் ஏ. கே. ஹரிதாஸ் என்பவர் மீது ஆறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: “ஆசிரியர் சமுதாயத்தில் வகித்த நிலையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் ஏற்பட்ட மனஉளைச்சலையும் கருத்தில் கொண்டு, அவருக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அதன்படி, முதல் வழக்கில் ஆறு ஆண்டுகள், இரண்டு மற்றும் மூன்றாம் வழக்குகளில் தலா ஐந்து ஆண்டுகள், நான்காம் மற்றும் ஐந்தாம் வழக்குகளில் தலா ஆறு ஆண்டுகள், ஆறாவது வழக்கில் இரண்டு ஆண்டுகள் என்று அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.முதல் மூன்று வழக்குகளுக்கான தண்டனையை தொடர்ந்து அனுபவித்த பின், அடுத்த மூன்று வழக்குகளுக்கான தண்டனையைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளுக்கு, தலா நான்காயிரம் ரூபாய் வழங்கும்படியும்“, கோர்ட் உத்தரவிட்டது.
அந்தாசிரியர் இந்திய குற்றாவியல் சட்டப் பிரிவுகள் –
IPC sections 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty = பெண்ணின் கற்ப்பைச் சூரையாட பலாத்காரம் செய்யும் வகையில் தாக்குவது அல்லது அத்தகைய பலாத்காரம் செய்வது),
377 (unnatural offences = இயற்கைக்கு மாறான குற்றங்கள்), and
506 (1) (Punishment for criminal intimidation = குற்ற உணர்வோடு தாக்கும் மனப்பாங்கு மற்றும் முறை).