தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)


தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

ஒரு ஆண் பல திருமணங்கள் செய்தது: சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[1]. பெண் கொடுத்த புகாரில், திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக, திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போவதாகவும் அதற்காக பண உதவி வேண்டும் எனக் கேட்டு சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தனர்[3]. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை போலீசார் தேடி வந்தநிலையில், லால்குடியில் வைத்து கைது செய்தனர்[4]. தமிழகம் முழுவதும் 9-க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையதளம் மூலமாக ஏமாற்றி சுமார் 9 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும்  திருமணமாகாத மருத்துவம், பொறியியல் பட்டதாரி பெண்களையும் பணக்கார விதவை பெண்களையும் குறிவைத்து பண மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை ஏமாற்றிய நபர் கைது: கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார்[5]. இவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்[6]. திருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார்.  கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார். இதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமாகி சில மாதங்களில், தொழிலில் நஷ்டம் என்று கூறி 3 கோடி ருபாயை மாமனார் வீட்டிலிருந்து பெற்ற புருஷோத்தமன் பிறகு தலைமறைவாகிவிட்டாராம்.

ஓரு பெண் பல திருமணங்கள் செய்தது  கோர்ட்டுக்குச் சென்ற மோசடி திருமண வழக்கு: ஹைகோர்ட்டை நாடிய பெண் பாதிக்கப்பட்ட அந்த பெண், புருஷோத்தமன் மீதும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிக்கினர் புருஷோத்தமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண தகவல் மையம் மீது கூட்டுசதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஆறு திருமணங்கள் செய்து வைத்த திருமண புரோகர்[7]: ஏற்கெனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்கிற சபரி, மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, நான்காவதாக ஓர் ஆட்டோ டிரைவரைத் திருமணம் செய்ய முயன்றபோது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்தப் பரபர சம்பவத்தின் சூடு தணிவதற்குள், அதே பாணியில் பலரைத் திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பறித்த சந்தியா என்ற பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்[8]. சந்தியா தனபாலை கல்யாணம் செய்து கொண்டார்[9]. திருமணத்தை முடித்துவிட்டு சந்தியாவுடன் வந்தவர்கள், பெண் புரோக்கர் பாலமுருகன் ஆகியோர் திருமண கமிஷன் தொகையாக ரூ.1,50,000-ஐ வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்[10].  ஆனால், முதல் இரவிலேயே அப்பெண் மாயமாகி விட்டாள். இன்னொரு திருமணத்திற்கு தயாரானாள், விசயம் அறிந்த, அந்த நபர் மூலமாக திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க வைத்து, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி, மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்திருக்கின்றனர்[11]. அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது எனப் பேசி, போன் மூலமே முடிவு செய்திருக்கிறார் அந்தப் பெண் புரோக்கர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்துவைத்திருக்கின்றனர்[12].

போலி கல்யாணமா, புதுவித விபச்சாரமா, செக்ஸ் ரீதியிலான கொள்ளையா?: கைதான சந்தியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது[13]:- எனக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன்தான் என்னை அடித்து மிரட்டி திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார்[14]. 6-க்கும் மேற்பட்ட திருமணம் செய்துள்ளேன். திருமணம் முடிந்ததும் என்னை அங்கிருந்து தப்பித்து வருமாறு கூறி காரில் அழைத்து வந்துவிடுவார்[15]. பின்னர் கொண்டு வந்த பொருட்களை பிடுங்கி கொண்டு சிறிய‌ தொகையை மட்டும் தருவார். பின்னர் அதையும் மிரட்டி வாங்கி கொள்வார்[16]. அவரது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்[17]. அதனால்தான் நான் இந்த மோசடி திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, மேலும் 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். மோசடி திருமணத்தில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்து கொள்வார்கள். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.

ஏமாற்ற, கொள்ளையடிக்க பின்பற்றப் பட்டு வரும் செயல்முறை: மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள். என்னுடைய அக்காள், மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள். ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பே அக்காள், மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பெண் பார்க்க திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும். அப்படி பேசும்போது செல்போன், பட்டுசேலை, பணம், நகை என ஆசையாக கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும். திருமணம் முடிந்ததும், இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும். முதல் இரவு முடிந்ததுமே தப்பி செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளையை அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும். இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார் அவமானங்களுக்கு பயந்து பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை. இதை புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் நாங்கள் திருமண மோசடிகளை செய்துள்ளோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைகளில், விவகாரங்களில், வழக்குகளில் எழும் விசயங்கள்:

  1. தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது.
  • திராவிடத்துவ அரசு இந்து திருமண சட்டம் இருந்தாலும், இந்த சட்டம் உருவாக்கப் பட்டு, தமிழக இந்துக்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
  • சார்பதிவாளர்களை திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டு, திமணம் ஆன தம்பதியர் அங்கு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆனால், இந்துத்துவவாதிகள் வழக்கம் போல, ஈவேரா, பெரியார், அண்ணா, தம்பி என்று அவர்களது தாம்பத்தியத்தைப் பற்றி ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளனர்!
  • திராவிடத்துவத்தில், சுயமரியாதை திருமணத்தில் அதெல்லாம் சகஜமாக இருந்தது. பிறகு, அது சட்டப் படி செல்லாது என்றாகியது!
  • அப்பொழுது தான், இந்து திருமண சட்டததில் அந்த சுயமரியாதை திருமண ஐக்கியம் ஆகி, சட்டப் படி மரியாதைப் பெற்றது.
  • அதுவரை, ஈவேரா பாடை, பெரியாரிச பாசை, ராசாவின் பாஷையாகத் தான் இருந்தது. எந்த மனுவும், சோழனும் கண்டுகொள்ளவில்லை.
  • இப்பொழுது, தாலுகா ஆபிசுக்குச் சென்றவுடன், ஆன்-லைன் பதிவு இருந்தாலும், ஆப்-லைனில் தரகர்களின் கொண்டாட்டம் உள்ளது!
  • வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
  1. தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது.

 © வேதபிரகாஷ்

29-09-2022


[1] NEWS18, திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது!, LAST UPDATED : JUNE 22, 2019, 10:45 IST

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/man-arrested-for-defrauding-women-through-marriage-information-website-in-chennai-vaij-171055.html

[3] தமிழ்.இந்து, பெண் மருத்துவரிடம் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது, செய்திப்பிரிவு, Published : 22 Jun 2019 07:52 AM; Last Updated : 22 Jun 2019 07:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/172084-7.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது!, By Veera Kumar Updated: Monday, January 8, 2018, 14:22 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/man-arrested-coimbatore-cheating-9-women-getting-money-from/articlecontent-pf287243-307803.html

[7] பாலிமர் செய்தி, 7வதாக திருமணம் செய்யவிருந்த மோசடி, பெண், தரகர் உள்ளிட்ட 4 பேருடன் கைது, செப்டம்பர் 23, 2022, 01:57:33 PM.

[8] https://www.polimernews.com/dnews/188110

[9] விகடன், 6-வது திருமணம் ஓவர்… 7-வது திருமணத்துக்கு ரெடி!- சந்தியா போலீஸில் சிக்கியது எப்படி?, துரை.வேம்பையன், Published:24 Sep 2022 10 AM; Updated: 24 Sep 2022 10 AM

[10] https://www.vikatan.com/news/tamilnadu/police-arrested-a-woman-who-defrauded-6-men-in-the-name-of-marriage-and-getting-ready-for-7th-marriage

[11] தினத்தந்தி, திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி, உறவினர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு, ஏப்ரல் 21, 2:25 am (Updated: ஏப்ரல் 21, 2:25 am).

[12] https://www.dailythanthi.com/News/Districts/2021/04/21022506/panam.vpf

[13] தினத்தந்தி, மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினர் கைதானகல்யாண ராணிபரபரப்பு வாக்குமூலம், Sep 27, 12:15 am (Updated: Sep 27, 12:16 am)

[14] https://www.dailythanthi.com/News/State/raani-801720

[15] தினமலர், 8வது திருமணத்துக்கு தயாரானகல்யாண அழகிசந்தியா, Added : செப் 25, 2022  04:05

https://www.dinamalar.com/news_detail.asp?id=3130710

[16] காமதேனு, 6 பேருடன் கல்யாணம்; இரவோடு இரவாக நகையுடன் எஸ்கேப்: 7-வது நபரை திருமணம் செய்ய முயன்ற மனைவியை பிடித்த கணவர், Updated on : 23 Sep, 2022, 10:19 am

[17] https://kamadenu.hindutamil.in/national/the-young-woman-who-cheated-and-married-six-men-and-her-immediate-family-were-arrested

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக