இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்… ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..! 70 முதல் 100 பெண்கள் சீரழிந்தனர்!
வயது வந்த சிறுமியர், இளம்பெண்கள் காமுகர்களிடம் சிக்கிக் கொள்வது எப்படி?: சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றியுள்ளான், பாலியல் ரீதியில் சீரழித்துள்ளான், அவர்களை வைத்து ஆபாசப் படங்கள்-வீடியோ எடுத்துள்ளான், பணம் கேட்டு மிரட்டியுள்ளான் என்றெல்லாம் இந்த “கொரோனா” காலத்திலும் செய்திகளாக வருவது திகைப்பாக, வருத்தமாக, பிரமிப்பாக இருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இத்தகைய செய்திகள் நிறைய வந்து விட்டன. இருப்பினும், வயது வந்த சிறுமியர், மாணவியர், இளம்பெண்கள் முதலியோர் எப்படி, இத்தகைய காமக் கொடூரர்களிடம் எளிதாகச் சிக்குகின்றனர் என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. பெற்றோர் கவனிப்பு இல்லை என்பது அன்றாகத் தெரிகிறது. மொபைல் வைத்திருக்கும் பெண்கள், தேவையில்லாமல், அடையாளம் தெரியாத, சம்பந்தம் இல்லாத, வெளியாட்களுடம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. விளையாட்டிற்கு செய்கிறார்களா, மற்றவர்கள் போன்று, சமூக ஊடகங்களில் பிரபல ஆகவேடும் என்ற போலித்தனத்துடன் செயல்படுகின்றனரா, வேறு பிரச்சினைகளை மறக்க இங்கு வந்து மாட்டிக் கொள்கிறார்களா என்று பலகோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.
இறைச்சி கடை அஹிம்சை, பாசம் போன்ற நல்ல குணங்களை வளர்க்காது: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல இறைச்சிக்கடை / கோழி வியாபாரி- தங்கப்பாண்டியனின் மகன் காசி (வயது 26), இவன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளான. ஆக, இத்தகையோருக்கு இரக்கம் போன்ற மனித குணங்கள் குறைவாகவே இருக்கும். கொடுமை, குரூரம் போன்றவற்றைப் பற்றி கவலைப் பட முடியாது. ஏனெனில், பிறகு அந்த தொழிலே செய்ய முடியாது. சிக்ஸ் பேக் உடம்பு.. கூலிங்கிளாஸ், பைக் என மாஸ் காட்டி வந்தான். இவனுக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறான்.. சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவானாம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் காசி, டெமோ, சுஜி, டெமோ லுக் போன்ற பல்வேறு பெயர்களில் பல கணக்குகளைத் தொடங்கியுள்ளான். உள்ளூர் காவல்நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவரின் மகளையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பதறிய ஆய்வாளர் கமுக்கமாக பணியிட மாற்றம் வாங்கிச் சென்று விட்டார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, புஜபல பராக்கிரமத்தை திறந்த மேனி மூலம் வெளிப்படுத்துவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்த வீடியோக்களைப் பார்க்கும் பள்ளிச் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை உணர்ச்சிவசப்பட்டு இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே கியூட்டாக உள்ளாரே என, லைக், கமென்ட், ஷேர் செய்யத் தொடங்குவார்கள்.
பணம், வசதி முதலியவை வைத்து பெண்களை குறிவைத்துள்ளது: ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டுள்ளான் என்கிறார்கள். அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வானாம். இந்த கருத்துக்களை பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.. லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர்.. அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையிம் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்துள்ளான். காசியின் செல்போன் உட்பட அவனது பல ஹார்ட்-டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்… அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்[1]. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன[2]. அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். ஸ்கூல் மாணவிகளை கூட காசி விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.. கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
சென்னயில் பெண் டாக்டரை காதலித்து ஏமாற்றியது: இவன் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது[3]. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது. அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளான்[4]. அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டான். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினான். இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளான். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளான். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளான். இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினான். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசியை சட்டரீதியாக விசாரித்தால் அவருடன் நட்பில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் மகன்களின் லீலைகளும் அம்பலத்தில் ஏறும் என்கின்றனர் போலீசார்.
ஊடகங்களின் வழக்கமான வர்ணனைகள்: கல்லூரி படிப்பு முடிந்ததும், வேலைக்குச் செல்லாமல், இருந்துள்ளான்[5]. நண்பர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி, அதில் தன்னை ஒரு சமூக ஆர்வலர், தொழில் அதிபர் போன்றுக் காட்டிக் கொண்டு, பல பெண்களிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்[6]. பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான்[7]. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளான்[8].. சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான்[9]. அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி[10]. பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார் கொடுத்தார். அவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது[11]. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[12].
காதலித்து ஆசை தீர உல்லாசம்…பாலியல் உறவு……உடல் ரீதியிலான தொடர்பு…உடல் ரீதியிலான நெருக்கம் என்றால் என்ன?: தமிழ் மற்றும் ஆங்கில் ஊடகங்கள், ஊடக விற்ப்பனர்கள், நிருபர்கள், “கற்பழிப்பு” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், கீழ்கண்ட சொற்றொடர் பிரயோகங்கள் உள்ளன:
- காதலித்து ஆசை தீர உல்லாசம்…
- பாலியல் உறவு……
- உடல் ரீதியிலான தொடர்பு
- உடல் ரீதியிலான நெருக்கம் [physical intimacy]
அதாவது, ஒருவேளை, சமீபத்தைய உச்சநீதி மன்ற தீர்ப்பின் விளக்கம் படி, அவர்கள், விருப்பத்துடன் உடல் உறவு கொண்டதால், நாஜுக்காக அவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். அதாவது அவ்வாறு செய்தால், சட்டப் படி “கற்ப்பழிப்பு” ஆகாது. 60 வருடங்களுக்கு முன்னால், “சோரம் போனாள்” என்பார்கள், அதாவது, கற்பை இழந்தால் என்ற அர்தத்தில் குறிப்பிடுவர். விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், திருமணத்திற்கு முன்பாக விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், ஆகவே, இதெல்லாம் சகஜம் என்று கொள்ள முடியுமா? எதிர்காலம் நினைத்து, பெண்கள் புகார் கொடுக்காமல் இருக்கலாம். இப்பொழுது விசாரணையில் வெளிவரும் போதும், பெற்றோர் எதிர்காலம் நினைத்து, மறைக்கத்தான் செய்வர். இவர்கள் பிறகு கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று வாழும் போது என்னாகும்? எதிர்காலம் தான் பதில் சொல்லும்.
© வேதபிரகாஷ்
26-04-2020
[1] தமிழ்.நியூஸ்.18, பள்ளிச் சிறுமிகள் முதல் பிரபல நடிகர் மகள் வரை…! 70 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய கிரிமினல் கைது, LAST UPDATED: APRIL 25, 2020, 3:27 PM IST.
[2] https://tamil.news18.com/news/tamil-nadu/sexual-harrassement-case-nagarkovil-youth-arrest-msb-283021.html
[3] தினத்தந்தி, பெண் டாக்டர் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கோழிக்கடைக்காரர் நாகர்கோவிலில் பரபரப்பு, பதிவு: ஏப்ரல் 25, 2020 06:19 AM மாற்றம்: ஏப்ரல் 25, 2020 06:39 AM
[4] https://www.dailythanthi.com/News/Districts/2020/04/25061919/Female-doctor-porn-picturesSpreading-on-social-websiteThe.vpf
[5] புதியதலைமுறை, பெண் மருத்துவரின் வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டல்.. காதலிப்பதாக ஏமாற்றியவர் கைது, Web Team, Published :25,Apr 2020 10:03 AM.
[6] http://www.puthiyathalaimurai.com/newsview/69121/boy-friend-arrested-for-threatened-his-lover-with-her-blue-film
[7] தமிழ்.ஒன்.இந்தியா, 100 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. ஸ்கூல் பிள்ளைகள் முதல் பெண் டாக்டர் வரை.. சீரழித்த நாகர்கோவில் காசி, By Hemavandhana | Updated: Saturday, April 25, 2020, 16:58 [IST]
[8] https://tamil.oneindia.com/news/nagercoil/nagercoil-youth-arrested-for-uploads-obscene-picturers-of-female-doctor-383637.html
[9] தினத்தந்தி, பாலியல் உறவு : படம் எடுத்து மிரட்டல் – ஏமாந்த பெண் மருத்துவர் போலீஸில் புகார், பதிவு : ஏப்ரல் 24, 2020, 05:44 PM.
[10] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/24174438/1285943/kanyakumari-men-arrested-sexual-harassment.vpf.vpf
[11] ஏசியாநெட்.நியூஸ், இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்… ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..!,By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Apr 2020, 1:56 PM, Last Updated 25, Apr 2020, 1:56 PM.
[12] https://tamil.asianetnews.com/crime/kasi-searches-for-love-for-a-young-doctor-and-publishes-videos-q9c4sp
குறிச்சொற்கள்: ஆடையை களைந்து வீடியோ, ஆபாச சிடி, ஆபாச வீடியோ, இளம்பெண், காதல் வீடியோ, சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி, செக்ஸ் மோசடி, செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் விளையாட்டு, பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, பாலியல் வீடியோ, பேஸ் புக் செக்ஸ், வாட்ஸ்-அப் செக்ஸ்
6:11 முப இல் மே3, 2020 |
[…] […]