Archive for the ‘சிற்றின்பம்’ Category

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் படவேண்டும்.

ஜூன்23, 2023

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் பட வேண்டும்.

குடும்பங்கள் கட்டுப்பாடுகளை மீறுவது ஏன்?: சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியவர் சொன்னதை கேட்காமல் இருப்பது போன்ற நிலைகளில் குடும்பங்கள் சிதறுகின்றன. குடும்பத் தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் குடும்ப அங்கத்தினர் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிறார். இதனால், ஆண்கள் உறவுகளை மீறினால், பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம், அனால், பெண்கள் முயலும் போது, தீராத பழி, பெற்றோர், உற்றோர், மற்றோர் அதிகமாக பாதிக்கும் நிலை உண்டாகிறது. பெண்களை கவனிக்காமல் வளர்க்கும் அல்லது வளர்க்கப் படும் பெண்களும் தங்கள் இச்சைக்கு ஏற்றப் படி செயல்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது பணம் தான் பிராதானம் என்ற நிலை உருவானப் பிறகு, பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போன்ற வெறி வரும் பொழுது, நியாயம், தர்மம் போன்றவையும் மறக்கப் படுகின்றன. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கவனித்து வந்தால் எவ்வாறு தனிதனிபர் ஒழுக்கம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நெறிமுறை முதலியவை பின்பற்றாமல் சீரழிகின்றன என்பதையும் கவனிக்கலாம்.

பாலியல் குற்றங்கள் அதிகமாவது: நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சினிமாவின் சீரழிக்கும் போக்கைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு, சினிமா தொழில் தான் விபசாரத்தை அதிக அளவில் ஊக்குவிக்கிறது, உருவாக்கி வருகிறது எனலாம். இதைப் பற்றி சமூக ஆராய்ச்சியாளர்கள் சரிவர கண்டுகொள்வதில்லை. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதிலும் கிருத்துவ-இஸ்லாமிய குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இதுவும் செக்யூலரிஸ ரீதியில் தான் நடந்து வருகின்றன. செய்திகள் வெளி வந்தாலும், பிறகு என்னவாயிற்று என்று சொல்லப் படுவதில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குடும்ப விபசாரம் என்று புதிய பிபசாரம்: சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது[1]. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் என்று தினத்தந்தி[2] விளக்கமும் கொடுக்கிறது. சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது[3]. அப்படியென்றால், இது ஏதோ ஏற்கெனவே இருந்தது போலவும், இப்பொழுது, திடீரென்று நடப்பது போலவும் தெரிகிறது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள், என்று ஒரு வரியில் முடிக்கிறது. பிறகு, இதற்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத் தானே செய்வர். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்[4]. குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்[5]. இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்[6]. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது, இதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது.

தொடர்ந்து தொடர்ச்சியாக செய்து வரும் முறை: போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். இதில் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, நீதிமன்றத்திற்குச் சென்று, ஏதாவது தண்டனை என்று கொடுக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்யப் படுகிறதா அல்லது போலீசாறே நேராக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். இதிலும் புதிர்கள் பலவுள்ளன. அப்பெண்களுக்கு வாதிடும் வக்கீல்கள் யார், எவ்வாறு அவர்கள் விடுதலை பெறுகின்றனர் என்பதும் புரியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். பிறகு செய்த குற்றத்தையே திரும்ப செய்வது போலாகிறது. சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

புரோக்கர்கள் எல்லாம் இருப்பது, இது ஒரு திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது: அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான  ஆமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54), பிரசாந்த் (30) ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. இவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதும் தெரிகிறது[8]. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொழில்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து நடக்கும் சமூக சீரழிவைத் தடுத்தாக வேண்டும்: அப்படி எல்லாமே சொல்லி வைத்தது போல சக்கரம் சுழல்வது போல, இந்நிகழ்வுகள் திரும்ப-திரும்ப நடப்பது அசாதாரணமாக உள்ளது. மற்ற தொழில்கள் போல இதுவும் திட்டப்படி, முறையாக, செயல்பட்டு வருகிறது என்றாகிறது. இதில் வக்கீல்கள், புரோக்கர்கள், வீட்டு சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு விடுபவர், போலீஸார், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், இது நடப்பது தெரிந்துள்ளது. செய்வது, கைதாவது, பிறகு சட்டப் படி அல்லது ஏதோ ஒரு நுணுக்கத்தில் வெளியே வருவது எல்லாம் யாரும் ஓசியில் செய்ய் மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கும் உரிய காசு கிடைக்கிறது. இத்தகைய விபசாரிகளுக்கு ஆஜராகும் வாதிடும் வக்கீல்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிரது. ஆமாம், அதுவும் அவர்கள் தொழில் தான்! யாராக இருந்தாலும், வாங்கிய காசுக்காக அவர்கள் ஆஜராக வேண்டியது தான்! பிறகு, இதில் எதுவோ இடிக்கிறதே? அப்பெண்களின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லையே. நுகர்வோர் பண்டங்கள் போல அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். சமூகம் அவர்களை விபசாரிகள் என்றாலும், வேறு வழியில் ஆதரிக்கின்றது.

  1. குடும்ப விபசாரம் என்று செய்தி வருகிறது, அந்த அபசாரத்திற்கு ஒரு வரையறை, விளக்கமும், வியாக்யானமும் கொடுக்கப் படுகிறது.
  2. ரூ.5000 கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களுக்கு உல்லாசம் கிடைக்கும்!
  3. இவ்வாறு வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் – தினத்தந்தி.
  4. குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.
  5. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்
  6. போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
  7. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.. இப்படியாக இவ்வேலை சுழற்சியாக நடைபெற்று வருகிறது!
  8. இதில் பல புதிர்களும், கேள்விகளும் எழுகின்றன. எப்படி, ஏன், எவ்வாறு இதில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்?
  9. ஒற்றுமையாக சொல்லி வைத்தால் போல சம்பந்தப் பட்டவர்கள் இச்சுழற்சியை வெட்டெறியாமல் தொடர்ந்து நடத்த விடுகின்றனர்?
  10. தாய்மை, பெண்மை, குடும்பம், ஒழுக்கம், கற்பு,..…முதலியவற்றைப் போற்றுவோர் ஏன் அமைதியாக இருக்கின்றனர்? இச்சமூக ஊனத்தை என்னென்பது?

© வேதபிரகாஷ்

23-06-2023


[1] தினத்தந்தி, ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும்குடும்ப விபசாரம், தினத்தந்தி Jun 23, 3:49 pm

[2] https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5000-you-will-be-treated-with-a-party-and-family-prostitution-again-in-chennai-992672

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்டைம்ஸ், Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!, Kalyani Pandiyan S, Jun 23, 2023, 09:47 AM IST

[4] https://tamil.hindustantimes.com/amp/entertainment/3-women-involved-in-domestic-prostitution-business-in-chennai-have-been-arrested-131687492971595.html

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள், First Published Jun 23, 2023, 11:55 AM IST

[6] https://tamil.asianetnews.com/gallery/crime/prostitution-that-took-place-in-chennai-women-caught-half-dressed-rwp0ic

[7] தினமலர், பாலியல் தொழில் புரோக்கர் இருவர் கைது, பதிவு செய்த நாள்: ஜூன் 23,2023 00:29.; https://m.dinamalar.com/detail.php?id=3355385

[8] https://m.dinamalar.com/detail.php?id=3355385

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மே14, 2023

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மேல்மலையனூரில் பரபரப்பு: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்: ஆண்களாவது, பெண்களாவது, ஏதாவது ஒரு வெறி, பித்து, பைத்தியம் என்று விடித்து விட்டால், பணம் சம்பாதிப்பது, ஜாலியாக வாழ்வது, எந்த கொள்கைஉம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எல்லாவிதமான குற்றங்களிலும் பெண்கள் சமமாக மட்டுமல்லாது, ஆண்களையும் மிஞ்சுயுள்ளார்கள், கொலை-கொள்ளைகளில் நம்பவே முடியாத நிலையில் உச்சத்தைத் தொடுள்ளார்கள். இனி ஆண்களுக்கே சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. எனவே, இந்நிலையில், மேல்மலையனூரில் 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்[1] என்ற செய்தி ஒன்றும் யாரையும் ஆச்சரியப் படுத்தி விடவில்லை. அவர் 6-வதாக ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[2] என்று தினத்தந்தி கூறினாலும், அதற்கே இது அலுத்துப் போன விசயம் தான். ஏனெனில், 70 ஆண்டுகளாக இது இத்தகைய சேய்திகளை வெளியிடுவதில் வல்லது.

டிசம்பர் 2022ல் திருமணம்: விழுப்புரம் மேல்மலையனூர், இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[3]:- முகநூல் மூலம் அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான்[4]. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்[5]. ஆக, முகநூல் இங்கும் விலையாடியிருப்பது தெரிகிறது. போன், இணைதளம் இன்றைக்கு பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. கோடிக் கணக்கான மக்களை ஏதோ ஒரு வழியில் கட்டுக்குள் வைத்திருக்கிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேச தொடங்கினர்[6].  அப்போது, மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார்[7].  காதலாக மலர்ந்தது கூடவே இவர்களது நட்பு மேலும் இணக்கமாக தொடர தொடங்கியது[8]. இவ்வாறாக நேரில் முகம்பாராமல் முகநூல் மூலமாக பேசிய இவர்களுக்குள் காதலும் மலர்ந்தது. இதையடுத்து காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மணிகண்டன் முடிவு செய்தார்[9]. அவர், மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவை தெரிவித்தார்[10]. இதற்கு காதலியும் பச்சைக்கொடி காட்டினார். அப்போது, திருமணத்தின் போது தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை, தான் மட்டும் தனது வீட்டை விட்டு வருவதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்[11]. கோவிலில் வைத்து திருமணம் இதையடுத்து, கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் 18-ந்தேதி, இவர்களது திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது[12]. ஆனால், பத்திரிக்கை அடிக்காமல் இருந்திருப்பார்களா, போட்டோ, வீடியோ எடுக்காமலா இருந்திருப்பார்கள்?

பிள்ளை வீட்டார் மட்டும் கலந்து கொண்ட கல்யாணம்: இதில் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மகாலட்சுமி தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. அப்பொழுது எப்படி, ஏன், எதற்காக விசாரிக்காமல் கல்யாணத்திர்கு ஒப்புக் கொண்டார்கள் என்பதும் வியக்காக இருக்கிறது. திருமணத்தின் போது, மணிகண்டன் வீட்டில் இருந்து மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டுள்ளனர். இதுவே “ரிவர்சில்” இருக்கிறது எனலாம். சொத்து பிரச்சினை மனதுக்கு பிடித்த காதலியை கரம்பற்றிவிட்டோம் என்கிற மனமகிழ்வில் மணிகண்டன், தனது ஆசை காதல் மனைவியுடன் இல்லற வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தார். அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளதாக எனக்கு போன் வந்தது. எனவே நான் ஊருக்கு சென்று அந்த பிரச்சினையை தீர்வு கண்டுவிட்டு, வந்துவிடுகிறேன் என்று மணிகண்டனிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய அவரும், ஊருக்கு சென்றுவிட்டு விரைவில் திரும்பி வந்துவிடு என்று வழியும் அனுப்பி வைத்தார்.

வீட்டில் இருந்த ஒரு லட்சம் பணம் மாயம்: அதன்படி திருமணமான 26-வது நாள், அதாவது, கடந்த ஆண்டு 2022 டிசம்பர் மாதம் 14-ந்தேதி மகாலட்சுமி, மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறி சென்றார். சொந்த ஊருக்கு சென்ற காதல் மனைவி எப்போது திரும்பி வருவார் என்கிற ஏக்கங்களுடன் மணிகண்டனும் இங்கு காத்திருந்தார். மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதன் பின்னர் தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது. ரூ.1 லட்சத்தை திருடிக்கொண்டு, திருமணத்தின் போது அணிவித்த 8 பவுன் நகையுடன் மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாரா? என்று மணிகண்டனுக்கு சந்தேகம் வந்தது. காதல் மனைவியின் மிரட்டல் இதையடுத்து, அவருக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசிய மகாலட்சுமி, சரியான பதிலை அளிக்கவில்லை. நகை, பணம் குறித்து கேட்ட போது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று போனில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

மிரட்டிய மனைவியின் மீது கணவன் புகார் கொடுத்தது: காதலித்து திருமணம் செய்த மனைவியின் இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய்விட்டார். போலீசில் புகார் பின்னர், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மகாலட்சுமியின் புகைப்படம், முகநூல் பக்க பதிவுகள், அவரது செல்போன் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர். அதில், அவர் சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று, மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

6ம் கணவருடன் வாழ்ந்து வருவது: விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- 5-வதாக சிக்கிய மணிகண்டன் மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர் தான் மணிகண்டன். ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். அபகரித்து செல்லும் நகை, பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, மனதுக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார். கையில் உள்ள பணம் செலவானவுடன், மீண்டு்ம் தனது கல்யாண லீலைகளை அரகேற்றி வந்துள்ளார். 3 குழந்தைகளின் தாய் மணிகண்டனை தனது வலையில் சிக்க வைத்து, நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.

மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும். வயதை மறைத்து, தன்னை விட 2 வயது சிறியவரான மணிகண்டனை அவர் திருமணம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர், யாருடைய பராமரிப்பில் உள்ளார்கள் என்பது குறித்து மகாலட்சுமி போலீசில் தெளிவாக தெரிவிக்கவில்லை. கல்யாண ராணி கைது தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று வழக்கம் போல ஊடகம் ஊளையிட்டுள்ளது. ஆனால், எந்ஹ தமிழச்சியும், தமிழச்சியின் கற்பு, மானம், முதலியவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. டிவி-பட்டிமன்ற விவதங்களும் நடத்தப் படுவதில்லை.

© வேதபிரகாஷ்

14-05-2023


[1] தினத்தந்தி, மேல்மலையனூரில் பரபரப்பு:5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார், தினத்தந்தி மே 14, 12:15 am (Updated: மே 14, 12:16 am).

[2] https://www.dailythanthi.com/News/State/kalyana-rani-who-cheated-and-married-5-men-963809

[3] மாலைமலர், 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி , By மாலை மலர், 14 மே 2023 7:29 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/kalyana-rani-cheated-and-married-6-men-608748

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கைது.. போலீஸாரே அதிர்ந்த பகீர் பின்னணி!, By Vishnupriya R Updated: Sunday, May 14, 2023, 10:06 [IST].

[6] https://tamil.oneindia.com/news/villupuram/coimbatore-mahalakshmi-arrested-by-cheating-6-men-511735.html

[7] தினகரன், சமூக வலைதளம் மூலம் அனாதை என கூறி 5 திருமணம் செய்து பணம், நகை கொள்ளையடித்த கல்யாண ராணி: சேலம் அருகே 6வது கணவனுடன் வசித்தபோது சிக்கினார், May 14, 2023, 12:16 am

[8] https://www.dinakaran.com/married_5_people_robbed_money_jewels_husband_salem/

[9] லோகல்.செய்தி, 5 ஆண்களுடன் திருமணம்சிக்கிய கல்யாண ராணி, By Mohan Ramachandran, May 14, 2023, 09:05 IST.

[10] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/marriage-with-5-men-trapped-wedding-queen-10167086

[11] தமிழ்.ஸ்பார்க், மீண்டும் ஒரு திருமண மோசடி..!! 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி..!!, Sat, 13 May 2023 18:43:11 IST Author by Priya

[12] https://www.tamilspark.com/tamilnadu/the-police-have-arrested-a-young-woman-who-was-involved

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

வாடகைத் தாய்தாய் அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.

வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

வாடகைத் தாயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].

ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:

  1. குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
  2. முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
  3. வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
  4. மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
  5. ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல்  முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
  6. மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
  7. குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
  8. எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] விகாஷ் பிடியா, வாடகைத் தாய், ஆதாரம் : டாக்டர். மனோகரன்.

[2] https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bbeb9fb95bc8ba4bcd-ba4bbebafbcd

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

தாய்மை நீர்த்து, ஆபாசமான நிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.

கவர்ச்சி அரசியல், வாடகைத் தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (22-04-2022) சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.

பாலியல் குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குழந்தை பெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].

தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]  தினமணி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அமைச்சா் கீதா ஜீவன், By DIN  |   Published On : 22nd April 2022 02:22 AM  |   Last Updated : 22nd April 2022 02:22 AM

[2]https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3831404.html

[3] நியூஸ்.18.தமிழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு, By WebDesk WebDesk Fri, 22 Apr 2022.

[4] https://newstm.in/amp/tamilnadu/Child-by-surrogate-mother-270-days-leave-for-female-employe/cid7217147.htm

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)

ஜனவரி16, 2021

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)

ரூ 1500/- வாங்கிக் கொண்டு கொக்கோக பேச்சுப் பேசிய பெண் கொடுத்த புகார்: இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் ஒரு பகீர் புகாரினைக் கொடுத்தார். 1500 ரூபாய் கொடுத்து தன்னை அப்படி பேசச் சொன்னதாகவும்… கமென்ட் செக்‌ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் பேசியதாகவும் கூறியிருந்த அந்தப் பெண்…, “என்னிடம் சொன்னபடி அவர்கள் கமென்ட் செக்ஷனை ஆஃப் செய்யவில்லை. ஆகையால், நான் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளேன். நான் பேசிய பல விஷயங்களை கட் செய்துவிட்டு ஆபாசமான வார்த்தைகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர். என்னைப் போல நிறைய பெண்களிடம் இப்படிச் செய்துள்ளனர்,” எனப் புகார் தெரிவித்தார். ஆனால், பேசும் போது, அவற்றிற்கு எல்லாம், அர்த்தம் தெரியாமல் பேசினால் என்று சொல்ல முடியாது. அழுத்தம் கொடுத்துப் பேசுதல், நக்கலாக சிரித்துக் கொண்டே பதில் அளிப்பது, முகத்தை ஏதோ வெட்கம் வந்து திருப்பிக் கொள்வது போல நடிப்பது முதலியன, அப்பட்டமாக செய்தவை என்று உறுதியாகின்றன. கற்பழிப்பு காட்சியில், உண்மையாக கற்பழித்தால், பெண் என்ன செய்வாள் போன்றது தான், இத்தகைய முறையற்ற வீடியோக்கள். அப்பெண் பேசியதாக, ஒரு வீடியோவில், அப்பெண் தான் செய்ததை நியாயப் படுத்தும் வகையில் தான் பேசியிருப்பது திகைப்பாக இருக்கிறது. புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெண் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்தது: போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, அத்தனை பேர், இத்தகைய கேவலமான வீடியோவைப் பார்க்கின்றனர் என்றால், அவர்களது, வக்கிர மனநிலையினையும் எடுத்துக் காட்டுகிறது, இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பலவேசம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 மூன்று பேர் கைது, சிறையில் அடைப்பு: `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய மூவர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் [ Sections 354(b), 294(b), 509, 506(ii) of IPC and Section 4 of Tamil Nadu Prohibition of Women Harassment Act] வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இத்துடன் செய்திகள் நின்று விடும். பிறகு, என்னவாயிற்று என்று ஊடங்கங்கள் விவரங்களைக் கொடுப்பதில்லை. வாசகர்கர்களும், ஏதோ டிவி-சீரியல், சினிமா, பட்டி மன்றம் பார்த்தது போன்று, மறந்து விடுவார்கள். இதே போன்று, இன்னொரு செய்து வந்தால், ரசித்து அதனை பார்ப்பார்கள். 

போலீஸாரின் நடவடிக்கை, யூடியூப் முடக்கப் பட்டது: அவர்களிடமிருந்து எல்லா உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது[1]. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது[2]. இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்[3]. இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்[4]. இதையடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று சென்னை நகர துணை ஆணையர் யுடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார்[5]. அதைவைத்து இப்போது சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளதாக யுடியுப் நிர்வாகம் அறிவித்துள்ளது[6].

கமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது: “மன்மதன் அம்பு,னென்ற படதத்தில், இதைவிட கேவலமாக, கொக்கோமாக, ஒரு பாடல் எழுதி, சேர்த்திருப்பதை நினைவு கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் அப்பாட்டில் வெளிப்பட்டன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது. இப்படி பதினொன்று ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன்[7]. இப்பொழுது, 2021 தேர்தலுக்காக, ஏதோ ஒழுக்கமான ஆள் போன்று பிரச்சாரம் செய்து வருவது தமாஷாக இருக்கிறது.

மின்னணு சாதனங்களின் வளர்ச்சி, இத்தகைய சீரழுகளை அதிகமாக்குகிறது: இன்றைக்கு காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்ட மனிதர்களைத் தான், பலரை, பல நேரங்களில், தொழில்களில், வேலைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க் நேரிடுகிறது. பல சமயங்களில், “துஷ்டரைக் கண்டால் தூர விலகு,” போன்ற கொள்கையில், பலர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். 1960-70களில் எப்படி “சரோஜா தேவி“ புத்தகங்கள் எப்படி காம வக்கிர மனங்களுக்குத் தீனி போட்டதோ, அது போல, 2000களில் “புளு பிலிம்” போன்றவை அத்தகைய கள்ளத்தனங்களுக்கு உதவின. வீடியோ கேசட், சிடி-டிவிடி-பென் டிரைவ் என்று வந்து விட்டப் பிறகு, அவற்றின் மூலம் விற்றல்-வாங்கல் பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. டெஸ்க்-டாப் என்று ஆரம்பித்து, லாப்-டாப் என்று மாறிய போதும், அவ்வாறே, மனங்களை உடல்களை பாதித்தன. இப்பொழுது, செல்போன், கைபேசி, என்று பலவித வசதிகளுடன் வரும் நிலையில், இவையெல்லாம், யார் வேண்டுமானாலும், பார்க்கலாம், சுவைக்கலாம் என்ற நிலை வந்து விட்டது.

இன்டெர்நெட் மாயவலை கோடிகள் புரளும் வியாமாரமாகிய நிலை: இன்டர்நெட், வலைதளம், சர்வர், மாயவலை, மின்னாக்கம் செய்யப் பட்ட விவரங்கள்-தகவல்கள் சேமிப்பு, பரப்பு என்றெல்லாம் வியாபாரம் தொழிற்நுட்ப ரீதிகளில் விரிந்த போது, சம்பந்தப் பட்டவர்களுக்கு கோடிகளில் வருவாய் வர ஆரம்பித்தது. அவை, தொடர்ந்து நுகரும் நிலைகளில், நிரந்த வருமானமாகி, பெருக ஆரம்பித்தது.  இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் போல, இன்டெர்நெட்-மாயவலை இடம் விற்பனை, டொமைன் பெயருக்கு காசு என்றெல்லாம் தொழில்கள் விஸ்தாரமாகியது. செல்போன் மூலம், தனிநபர், தனியாக, தன்னிச்சைக்கேற்றவாறு, நல்லதோ-கெட்டதோ, எந்த விசயங்களையும் தேடலாம், அணுகலாம், பெறலாம் என்ற போது, அத்தகைய மனிதர்களும் அதிகமாக ஆரம்பித்தனர்.

© வேதபிரகாஷ்

15-01-2021


[1] நியூஸ்.18.தமிழ், கைதான யூடியூப் சேனல் நபர்களின் செல்பேசியில், வெளியிடப்படாத ஏராளமான பெண்களின் வீடியோக்கள் கண்டுபிடிப்பு, NEWS18 TAMIL, LAST UPDATED: JANUARY 12, 2021, 1:21 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/youtube-channel-caught-more-women-videos-in-mobile-vjr-393051.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,பெண்ணிடம் ஆபாச பேட்டி.. யூடியூப் சேனலுக்கு சென்னை மாநகர போலீஸ் ஆப்பு.., Ezhilarasan Babu, Chennai, First Published Jan 15, 2021, 10:57 AM IST

[4] https://tamil.asianetnews.com/politics/porn-interview-with-a-girl-chennai-metropolitan-police-wedge-for-youtube-channel–qmyn5b

[5] தமிழ்.வெப்துனியா, சென்னை டாக்ஸ் சேனல் முடக்கம்! யுடியூப் அறிவிப்பு!, Last Updated: வெள்ளி, 15 ஜனவரி 2021 (11:24 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-talks-youtube-channel-blocked-121011500023_1.html

[7]  வேதபிரகாஷ், வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!, நவம்பர் 19, 2010.

வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!

கொரோனா-கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]  

மே19, 2020

கொரோனாகோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]

Sex workers,and corona control-4

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும்: இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சிறப்பு பேராசிரியருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது[1]: “பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஏற்கனவே நோய்கள் இருந்தால், கொரோனா வைரஸ் தொற்றுநோயும் தாக்குகிறபோது நிலைமை மோசமாகி விடும். கொரோனா வைரஸ் தாக்குகிறபோது 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் தோன்றும். அவர்கள் உடலில் உள்ள ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு பொருள்), நோயை எதிர்க்கத் தொடங்கி விடும். அதே நேரத்தில் ஏற்கனவே பால்வினை நோய்களோ, எய்ட்ஸ் நோயோ, காசநோயோ இருந்திருந்தால், அவர்களை கொரோனா வைரஸ் தாக்குகிறபோது அது ஆபத்தானது. கடுமையான அறிகுறிகள் தோன்றும். மரணமும் நிகழும். கொரோனா வைரஸ் ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா சோனாகச்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 5 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதுமே பெண் பாலியல் தொழிலாளர்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவது நின்று போய்விட்டது.

Sex workers - demanding their rights

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால்பாதுகாப்பு இல்லை: டாக்டர் நரேஷ் புரோகித் தொடர்ந்து கூறியதாவது, “தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அவர்கள் சிரமப்படுகிற நிலை வந்துள்ளது. சோனாகச்சி பகுதியில் மட்டுமே தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அது இப்போது நின்று போய் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் பாதிபேர் விபசார தொழிலையே நம்பி உள்ளனர். காப்பீடு கூட செய்து கொள்வதில்லை. தமிழ்நாட்டில் 5-ல் 2 பேரும், கர்நாடகத்தில் 5-ல் ஒருவரும் இந்த நிலையில்தான் உள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் 31 சதவீத பாலியல் தொழிலாளர்கள் நிதி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் உள்ளனர். நோயுற்றால் சிகிச்சை கூட பெறுவதில்லை. ஊரடங்கை இப்போது அரசு முடிவுக்கு கொண்டுவந்தாலும், பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை உடனே தொடங்கி விட முடியாது. குறைந்தபட்சம் 1 மாதம் காத்திருக்க வேண்டியது வரும். கொரோனா பரவுவது நின்று விட்டது என்ற நிலை வர வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[2].

Sex workers - HIV awareness campaign

பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்: அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்[3]. ஊரடங்கிற்கு பின் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை விடுதிகள் மூடப்பட்டிருந்தால், இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்[4]. மேலும் ஆய்வு முடிவுகளை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்[5]. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாலியல் தொழில் விடுதிகளை தொடர்ந்து மூடியிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்[6]. இதனால் 45 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் 72 சதவீதம் குறையும் மற்றும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைய 17 நாட்கள் வரை தாமதம் ஆகும். இந்த தாமதம் அரசுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை காக்க கூடுதல் அவகாசம் அளிக்குமெனவும் கூறியுள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல் 60 நாட்களில் விடுதிகள் மூடப்பட்டிருந்தால், கொரோனா உயிரிழப்பு 63 சதவீதம் அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sex workers - training, meeting

அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு[7]: அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 16 மாநிலங்களில் உள்ளனர். தலைமை செயலகம் தில்ல்யில் உள்ளது[8].  AINSW பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், HIV தடுப்பு, சமூக பாதுகாப்பு, குடும்ப மேன்பாடு, குழந்தைகள் படிப்பு என்று பலவிதங்களில் உதவி வருகின்றது. தங்களது தொழிலில் அவர்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், சமூக மறுப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மீண்டு, அவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டும் போன்றவற்றிற்கு பயிற்சி, மனநல ஆலோசனை, மருத்துவ வசதிகள் முதலியனக் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவில் அதர்மவழி பெண்களை ஈடுபடுத்துதல் தடுப்புச் சட்டம் [The Immoral Traffic (Prevention) Act, 1956 -“ITPA”] இவர்களின் தொழிலைக் கட்டுப் படுத்தி வருகின்றது. வேறு வழி ./ வேலை இல்லை என்ற பட்சத்தில் தான் சூழ்நிலை காரணங்களுக்காக, அவர்கள் இத்தொழிலில் தள்ளப் பட்டுள்ளார்கள்.அப்படி பார்த்தால், இந்திய சமூகமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டலாம். அவர்கள் இந்துக்கள் எனும் போது, மற்ற இந்துக்களும் பொறுப்பாகிறார்கள். அந்நிலையில் அவர்களும் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு, இந்துமதத்தை வைத்து பல கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் அரசியல், வியாபாரம் செய்து வருகின்றன. ஆக, அவவை இதை எதிர்கொள்ளாமல் தத்துவம் பேசினால், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை.

Sex workers - training

முடிவுரை: இப்பிரச்சினையை முறையாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

  1. ஒவ்வொரு இந்துவும் வெட்கப் படவேண்டிய விசயம் என்னவென்றால், இந்தியாவில் 50,00,000 முதல் ஒரு கோடி பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
  2. இவர்கள் எல்லோருமே அகில இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு என்றதில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்!
  3. இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு – All India Network of Sex Workers (AINSW) இருப்பது நிதர்சனம்!
  4. இப்பொழுதைய கொரோனா நோய், தொற்று, மற்றும் ஊரடங்கு விவகாரங்களால், அவர்களது தொழில் பாதித்துள்ளது.
  5. சம்பளம் இல்லாததால், சாப்பாடிற்கே வழியில்லாத நிலையில், வாடும் இவர்களில் 60% தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
  6. குழந்தைகளுடன் இருக்கும் இவர்களில், சிலர் இரண்டு மாதமாக, சரியான உணவு உண்ணாமல் தவிக்கின்றனர்.
  7. ஆக, பெண்மை, பெண்ணியம், பெண்ணியத் தூய்மை, கற்பு…இவற்றைப் பற்றியெல்லாம் இந்துத்துவ வாதிகள் ஏன் அலசுவதில்லை?
  8. பூர்ணகும்பம், பிரசாதம் போன்றவற்றிற்கு அளந்து தள்ளுகிறார்களே, அரை கோடி பாரதிய நாரிமணிகளின் நிலை தெரியவில்லையா?
  9. “பாரத் மாதா கி ஜே” கோஷம் போடுபவர்கள், இத்தகைய நிதர்சனங்களுக்கு, உண்மைகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
  10. கோடிகணக்கில் நிவாரணம், உதவி பற்றி பிரமாதமாக வாத-விவாதம் புரிபவர்கள், இவர்களின் குழந்தைகள் கதி பற்றி யோசித்தது உண்டா?

© வேதபிரகாஷ்

18-05-2020

Hindutva, sex and adventure-novel

[1] மாலைமலர், பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா தாக்கினால் ஆபத்துமருத்துவ நிபுணர் எச்சரிக்கை, பதிவு: ஏப்ரல் 20, 2020 11:38 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/04/20113817/1436390/COVID-19-Medical-expert-Warns-Risk-if-corona-attacks.vpf

[3] தினமலர், பாலியல் விடுதிகளை மூடுவதால் 72 % கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம், Updated : மே 17, 2020 14:27 | Added : மே 17, 2020 14:25.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2541050

[5] தினமலர், சிவப்பு விளக்கு பகுதிகளால் வைரஸ் பரவல் அதிகரிக்கும், Added : மே 16, 2020 23:43.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2540619

[7] https://www.nswp.org/featured/all-india-network-sex-workers-ainsw

[8] NSWP, The Matrix,62 Newhaven Road, Edinburgh, EH6 5QB, Scotland UK;  For more information contact:+44 (0)131 553 2555; secretariat@nswp.org

இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்… ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..! 70 முதல் 100 பெண்கள் சீரழிந்தனர்!

ஏப்ரல்26, 2020

 

இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..! 70 முதல் 100 பெண்கள் சீரழிந்தனர்!

Kasi, the sexploiting criminal, raped many

வயது வந்த சிறுமியர், இளம்பெண்கள் காமுகர்களிடம் சிக்கிக் கொள்வது எப்படி?: சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றியுள்ளான், பாலியல் ரீதியில் சீரழித்துள்ளான், அவர்களை வைத்து ஆபாசப் படங்கள்-வீடியோ எடுத்துள்ளான், பணம் கேட்டு மிரட்டியுள்ளான் என்றெல்லாம் இந்த “கொரோனா” காலத்திலும் செய்திகளாக வருவது திகைப்பாக, வருத்தமாக, பிரமிப்பாக இருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இத்தகைய செய்திகள் நிறைய வந்து விட்டன. இருப்பினும், வயது வந்த சிறுமியர், மாணவியர், இளம்பெண்கள் முதலியோர் எப்படி, இத்தகைய காமக் கொடூரர்களிடம் எளிதாகச் சிக்குகின்றனர் என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. பெற்றோர் கவனிப்பு இல்லை என்பது அன்றாகத் தெரிகிறது. மொபைல் வைத்திருக்கும் பெண்கள், தேவையில்லாமல், அடையாளம் தெரியாத, சம்பந்தம் இல்லாத, வெளியாட்களுடம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. விளையாட்டிற்கு செய்கிறார்களா, மற்றவர்கள் போன்று, சமூக ஊடகங்களில் பிரபல ஆகவேடும் என்ற போலித்தனத்துடன் செயல்படுகின்றனரா, வேறு பிரச்சினைகளை மறக்க இங்கு வந்து மாட்டிக் கொள்கிறார்களா என்று பலகோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.

Kasi, the sexploiting criminal, raped many-Dinakaran 26-04-2020

இறைச்சி கடை அஹிம்சை, பாசம் போன்ற நல்ல குணங்களை வளர்க்காது: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல இறைச்சிக்கடை / கோழி வியாபாரி- தங்கப்பாண்டியனின் மகன் காசி (வயது 26), இவன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளான. ஆக, இத்தகையோருக்கு இரக்கம் போன்ற மனித குணங்கள் குறைவாகவே இருக்கும். கொடுமை, குரூரம் போன்றவற்றைப் பற்றி கவலைப் பட முடியாது. ஏனெனில், பிறகு அந்த தொழிலே செய்ய முடியாது. சிக்ஸ் பேக் உடம்பு.. கூலிங்கிளாஸ், பைக் என மாஸ் காட்டி வந்தான். இவனுக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறான்.. சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவானாம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் காசி, டெமோ, சுஜி, டெமோ லுக் போன்ற பல்வேறு பெயர்களில் பல கணக்குகளைத் தொடங்கியுள்ளான். உள்ளூர் காவல்நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவரின் மகளையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பதறிய ஆய்வாளர் கமுக்கமாக பணியிட மாற்றம் வாங்கிச் சென்று விட்டார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, புஜபல பராக்கிரமத்தை திறந்த மேனி மூலம் வெளிப்படுத்துவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்த வீடியோக்களைப் பார்க்கும் பள்ளிச் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை உணர்ச்சிவசப்பட்டு இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே கியூட்டாக உள்ளாரே என, லைக், கமென்ட், ஷேர் செய்யத் தொடங்குவார்கள்.

Kasi, the sex criminal, raped many

பணம், வசதி முதலியவை வைத்து பெண்களை குறிவைத்துள்ளது: ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டுள்ளான் என்கிறார்கள். அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வானாம். இந்த கருத்துக்களை பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.. லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர்.. அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையிம் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்துள்ளான். காசியின் செல்போன் உட்பட அவனது பல ஹார்ட்-டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்… அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்[1]. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன[2]. அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். ஸ்கூல் மாணவிகளை கூட காசி விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.. கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Kasi, the sex criminal, raped many.using social media

சென்னயில் பெண் டாக்டரை காதலித்து ஏமாற்றியது: இவன் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது[3]. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது. அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளான்[4]. அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டான். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினான். இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளான். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளான். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளான். இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினான். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசியை சட்டரீதியாக விசாரித்தால் அவருடன் நட்பில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் மகன்களின் லீலைகளும் அம்பலத்தில் ஏறும் என்கின்றனர் போலீசார்.

Kasi arrested by Kottar police, The Hindu, 26-04-2020

ஊடகங்களின் வழக்கமான வர்ணனைகள்: கல்லூரி படிப்பு முடிந்ததும், வேலைக்குச் செல்லாமல், இருந்துள்ளான்[5]. நண்பர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி, அதில் தன்னை ஒரு சமூக ஆர்வலர், தொழில் அதிபர் போன்றுக் காட்டிக் கொண்டு, பல பெண்களிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்[6]. பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான்[7]. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளான்[8].. சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான்[9]. அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம்,  ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி[10].  பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார்  கொடுத்தார். அவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது[11]. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[12].

Kasi, the sexploiting criminal, raped many-The Hindu graphics mixed

காதலித்து ஆசை தீர உல்லாசம்பாலியல் உறவு……உடல் ரீதியிலான தொடர்பு…உடல் ரீதியிலான நெருக்கம் என்றால் என்ன?: தமிழ் மற்றும் ஆங்கில் ஊடகங்கள், ஊடக விற்ப்பனர்கள், நிருபர்கள், “கற்பழிப்பு” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், கீழ்கண்ட சொற்றொடர் பிரயோகங்கள் உள்ளன:

  1. காதலித்து ஆசை தீர உல்லாசம்…
  2. பாலியல் உறவு……
  3. உடல் ரீதியிலான தொடர்பு
  4. உடல் ரீதியிலான நெருக்கம் [physical intimacy]

அதாவது, ஒருவேளை, சமீபத்தைய உச்சநீதி மன்ற தீர்ப்பின் விளக்கம் படி, அவர்கள், விருப்பத்துடன் உடல் உறவு கொண்டதால், நாஜுக்காக அவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். அதாவது அவ்வாறு செய்தால், சட்டப் படி “கற்ப்பழிப்பு” ஆகாது. 60 வருடங்களுக்கு முன்னால், “சோரம் போனாள்” என்பார்கள், அதாவது, கற்பை இழந்தால் என்ற அர்தத்தில் குறிப்பிடுவர். விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், திருமணத்திற்கு முன்பாக விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், ஆகவே, இதெல்லாம் சகஜம் என்று கொள்ள முடியுமா? எதிர்காலம் நினைத்து, பெண்கள் புகார் கொடுக்காமல் இருக்கலாம். இப்பொழுது விசாரணையில் வெளிவரும் போதும், பெற்றோர் எதிர்காலம் நினைத்து, மறைக்கத்தான் செய்வர். இவர்கள் பிறகு கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று வாழும் போது என்னாகும்? எதிர்காலம் தான் பதில் சொல்லும்.

©  வேதபிரகாஷ்

26-04-2020

Youth cheated 100s of girls Tamil Murasu 25-04-2020

[1] தமிழ்.நியூஸ்.18, பள்ளிச் சிறுமிகள் முதல் பிரபல நடிகர் மகள் வரை…! 70 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய கிரிமினல் கைது, LAST UPDATED: APRIL 25, 2020, 3:27 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/sexual-harrassement-case-nagarkovil-youth-arrest-msb-283021.html

[3] தினத்தந்தி, பெண் டாக்டர் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கோழிக்கடைக்காரர் நாகர்கோவிலில் பரபரப்பு, பதிவு: ஏப்ரல் 25, 2020 06:19 AM மாற்றம்: ஏப்ரல் 25, 2020 06:39 AM

[4] https://www.dailythanthi.com/News/Districts/2020/04/25061919/Female-doctor-porn-picturesSpreading-on-social-websiteThe.vpf

[5] புதியதலைமுறை, பெண் மருத்துவரின் வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டல்.. காதலிப்பதாக ஏமாற்றியவர் கைது, Web Team, Published :25,Apr 2020 10:03 AM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/69121/boy-friend-arrested-for-threatened-his-lover-with-her-blue-film

[7] தமிழ்.ஒன்.இந்தியா, 100 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. ஸ்கூல் பிள்ளைகள் முதல் பெண் டாக்டர் வரை.. சீரழித்த நாகர்கோவில் காசி, By Hemavandhana | Updated: Saturday, April 25, 2020, 16:58 [IST]

[8] https://tamil.oneindia.com/news/nagercoil/nagercoil-youth-arrested-for-uploads-obscene-picturers-of-female-doctor-383637.html

[9] தினத்தந்தி, பாலியல் உறவு : படம் எடுத்து மிரட்டல்ஏமாந்த பெண் மருத்துவர் போலீஸில் புகார், பதிவு : ஏப்ரல் 24, 2020, 05:44 PM.

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/24174438/1285943/kanyakumari-men-arrested-sexual-harassment.vpf.vpf

[11] ஏசியாநெட்.நியூஸ், இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..!,By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Apr 2020, 1:56 PM, Last Updated 25, Apr 2020, 1:56 PM.

[12] https://tamil.asianetnews.com/crime/kasi-searches-for-love-for-a-young-doctor-and-publishes-videos-q9c4sp

சாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது! பலே பலே திராவிட சாமியார்!

மே29, 2019

சாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது! பலே பலே திராவிட சாமியார்!

Ongur fake wizard and sami-1

பெரியார் மண்ணில் பில்லிசூனயம் எடுக்கும் சாமியார்: வழக்கம்போல மறுபடியும் சாமியார் என்ற போர்வையில் ஒரு ஏமாற்று பேர்வழி பல பெண்களை ஏமாற்றியுள்ளது திகைப்பாக உள்ளது. இது பெரியார் மண், கடவுள் இல்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, கோவில்களில் உள்ள சிலைகளை திருடி அது போன்ற காரியங்கள் எய்து வந்தாலும், இது போலமக்கள் ஏமாந்து போன கதையை மறுபடியும் படிக்கும்போது புதிராகத்தான் உள்ளது. திராவிட திருநாட்டில் ஒரு பக்கம் நாத்திகம் பேசி கொண்டும், “பெரியார் மண்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டும், பகுத்தறிவு ரீதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தாலும், மறுபக்கம் திராவிட மணி போன்றவர்கள், மக்களை ஏமாற்றி வந்தது கவனிக்கத் தக்கது. பகுத்தறிவு வேலை செய்யவில்லையா, பில்லி-சூனியம் வேலை செய்ததா, மக்கள் அதனை நம்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடவேண்டும் என்ற போக்கு காணப்படுகிறது. லஞ்சம் கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கு என்ற தத்துவத்தை உருவாக்கி வைத்திருப்பது போல, இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒரு புதிய தத்துவத்தை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது.

Ongur fake wizard and sami-7

பில்லிசூன்னியம் நீக்குவேன் என்று பெண்களை வசப்படுத்தினானாம்!: காஞ்சிபுரம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்கிற செல்வமணி / பெருமாள் மணி [35 வயது], விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் மாந்​திரீகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாரன் என்று கதையினை ஊடகங்கள் ஆரம்பிக்கின்றன. மனைவியை பிரிந்த செல்வமணி, தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்[1]. இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார். இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர்[2]. அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்[3].

Ongur fake wizard and sami-5

பல பெண்களை தன்னோடு தங்க வைத்துள்ளான்: பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் பகுதிகளில் பில்லி, சூனியம் செய்து, நல்ல வருமானம் ஈட்டியுள்ளார்[4]. தம்மிடம் மாந்திரீகம் செய்ய வரும் இளம் பெண்களையும் குடும்ப பெண்களையும் தம்மோடு மாதக் கணக்கில் தங்க வைத்துள்ளார்[5]. தனது விருப்பத்துக்கு இணங்க வைத்த மணி, எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  அம்பலமாகியுள்ளது[6]. மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களை வாழ்வை சூறையாடும் செல்வமணியின் வாழ்க்கை தொடர்​ந்து கொண்டிருந்தது. என்பதெல்லாம், எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பெண்கள் என்ன அந்த அளவிற்கு முட்டாள்களா, ஒருவன் கூட படுத்து, இவ்வாறு சோரம் போவதற்கு என்பது புதிராக உள்ளது. இல்லை, அவர்களும், இவனோடு சேர்ந்து, விபச்சாரம் செய்தார்களா என்று தெரியவில்லை. இதைப் போன்ற செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன. கைதுகள் நடக்கின்றன. ஆனால், மறுபடியும் அதே குற்றங்கள் தொடர்கின்றன.

Ongur fake wizard and sami-3

மகளை தனியாக அனுப்பி மாந்திரீகம் செய்ய ஒப்புக் கொண்ட தந்தை: காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க மாந்திரீகம் செய்யுமாறு செல்வமணியை நாடியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணை தம்மோடு தங்க வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டி இருப்பதாக செல்வமணி கூறியுள்ளார். மகளை செல்வமணியுடன் அனுப்பி ஓராண்டாகியும் திரும்ப அனுப்பாததால் திரும்ப அனுப்புமாறு, அந்த பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாந்திரீக செல்வமணி, அந்த பெண்ணை தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பெண்ணின் தந்தையை மிரட்டியுள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணை மாந்திரீக செல்வமணி, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை, போலீஸில் புகாரளித்தார். உடனடியாக களமிறங்கிய போலீசார் மாந்திரீக செல்வமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர். மாந்திரீகம் செய்வதாக, பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் அறிந்து அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Ongur fake wizard and sami-4

போலி சாமியார், பல வேடங்களில் பலரை ஏமாற்றி வந்திருக்கிறானாம்: பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது[7]. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளாரன்[8]. சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது[9]. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஒரு ஊரில் ஏமாற்றியதும், ‘கெட் அப்’பையும் மாற்றிக் கொள்வான். பொதுமக்களிடம் பல இடங்களில் அடி, உதை வாங்கியும் தப்பி வந்துள்ளான். போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட்டுகளில் காசு கொடுக்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது[10].  இவன் மூன்று முறைகல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். இரண்டுகுழந்தைகளும் இருக்கின்றன[11]. சில வருடங்களுக்கு முன்னர், அவர்கள் பிரிந்து சென்று விட்டனர். மற்ற பெண்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரம் இல்லை என்று போலீஸார் சொல்கின்றனர்[12]. அதாவது, பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்றால், ஆதாரங்கள் இல்லை என்று தான் ஆகும்.

© வேதபிரகாஷ்

27-05-2019

Ongur fake wizard and sami-6

[1] மாலைமலர், திண்டிவனம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் கைது, பதிவு: மே 28, 2019 04:53

[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/28045348/1243648/young-girl-molestation-Fake-priest-arrested-in-tindivanam.vpf

[3] தினத்தந்தி, இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக போலி சாமியார் கைது..., பதிவு : மே 28, 2019, 12:37 PM

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/28123757/1036832/Fake-Manthrikan-Selvamani-heldSexual-Harassment.vpf

[5] தினமணி, பாலியல் வன்கொடுமை: போலி சாமியார் கைது, By DIN | Published on : 28th May 2019 08:55 AM.

[6] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/may/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3159989.html

[7] தினமலர், பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய போலி சாமியார் கைது, Added : மே 28, 2019 03:36.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2285470

[9] தமிழ்.ஏசியா.நெட், நியூஸ், பில்லிசூனியம் எடுப்பதாக கூறி இந்த சாமியார் செஞ்ச வேலையப் பாருங்க !!, Published 28, May 2019, 7:33 AM IST.

[10] https://tamil.asianetnews.com/crime/pillisoonoyam-goddman-rape-a-girl-and-arrest-ps6z1x

[11] Indian Express, Villupuram: Man sexually abuses girl on pretext of black magic, Allegedly kept her in his custody for over six months, arrested, Published: 29th May 2019 03:40 AM | Last Updated: 29th May 2019 03:40 AM

[12] “Villagers allege that Selvamani had been targeting women from helpless families and blackmailed them saying that they must have sexual relations with him to make the rituals work,” the police said. The accused had been married and has two children. His wife and children left him a few years ago. However, the police said there were no evidence for his affair with other women.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/29/villupuram-man-sexually-abuses-girl-on-pretext-of-black-magic-1983025.html

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! [1]

ஒக்ரோபர்19, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!  [1]

Married Prof eloped with girl-student

திருமணம் ஆகி, இரு குழந்தைகள் உள்ளவன், மாணவியுடன் வைத்த உறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Position of chastity on Tamilnadu-1

தனது வகுப்பில் படிக்கும்ம் மாணவியுடன் காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.

Position of chastity on Tamilnadu

மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்![3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா? இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].

Eloped teacher with 16-year boy caught in Mysore

பிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’  என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.  அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.

16 loves 26

16-வயது மாணவன், டீச்சருக்கு காதல் செய்தி அனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.  இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

19-10-2018

16 loves 26.cellphone

[1] நக்கீரன், மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்!, செல்வகுமார், Published on 16/10/2018 (18:57) | Edited on 16/10/2018 (19:11)

[2] https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/wife-and-tears-love-and-pupil-and-professor?fbclid=IwAR1UMWNVgNW8ygZqVJw-Olv0gNx979LqM6mZ8qT4jitDTBfKVvldWlzOn1I

[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால் அதுசிம்புவுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி!, By Vishnupriya R Published: Wednesday, October 17, 2018, 6:30 [IST]

[4] https://tamil.oneindia.com/news/nagapattinam/lecturer-fall-love-with-student-near-vedaranyam/articlecontent-pf331673-332162.html

 

[5] தமிழ்.இணைதளம், 2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியருடன் காதல் வயப்பட் மாணவி!, அக்டோபர் 18, 2018.

[6]  https://www.60secondsnow.com/ta/tamil-nadu/college-lecturer-fall-love-with-student-1170936.html

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்!, By Sathish KFirst Published 9, Sep 2018, 6:11 PM IST

[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.

[9] https://tamil.asianetnews.com/crime/student-who-sent-a-video-to-the-teacher-pesglg

[10] அக்கா ஐ லவ் யூ என்று எப்படி ன்சொல்வான் என்று தெரியவில்லை.

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

Indian films depicting rape-1

கற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

Indian films depicting rape-2

கற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர்? மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.

Indian films depicting rape-3-Raima Sen injured in Rape Scene

பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா?: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்? பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா? அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா?

rape case- Cinema-bollywood style-illustration

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:

  1. தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.
  2. பேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
  3. கதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.
  4. கேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  5. அதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  6. தெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.
  7. அனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.
  8. அடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.
  9. வேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  10. தேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-11-2017

Arivazagan rape case- Cinema-Kichaka-illustration

[1] News18, 10 Ultra-Regressive Scenes From Bollywood Movies That Encourage Creep Behaviour, Pathikrit Sanyal, Updated:June 23, 2016, 2:10 PM IST.

[2] http://www.news18.com/news/buzz/10-ultra-regressive-scenes-from-bollywood-movies-that-encourages-you-to-be-a-creep-1027367.html