குடும்பங்கள்கட்டுப்பாடுகளைமீறுவதுஏன்?: சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியவர் சொன்னதை கேட்காமல் இருப்பது போன்ற நிலைகளில் குடும்பங்கள் சிதறுகின்றன. குடும்பத் தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் குடும்ப அங்கத்தினர் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிறார். இதனால், ஆண்கள் உறவுகளை மீறினால், பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம், அனால், பெண்கள் முயலும் போது, தீராத பழி, பெற்றோர், உற்றோர், மற்றோர் அதிகமாக பாதிக்கும் நிலை உண்டாகிறது. பெண்களை கவனிக்காமல் வளர்க்கும் அல்லது வளர்க்கப் படும் பெண்களும் தங்கள் இச்சைக்கு ஏற்றப் படி செயல்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது பணம் தான் பிராதானம் என்ற நிலை உருவானப் பிறகு, பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போன்ற வெறி வரும் பொழுது, நியாயம், தர்மம் போன்றவையும் மறக்கப் படுகின்றன. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கவனித்து வந்தால் எவ்வாறு தனிதனிபர் ஒழுக்கம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நெறிமுறை முதலியவை பின்பற்றாமல் சீரழிகின்றன என்பதையும் கவனிக்கலாம்.
பாலியல்குற்றங்கள்அதிகமாவது: நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சினிமாவின் சீரழிக்கும் போக்கைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு, சினிமா தொழில் தான் விபசாரத்தை அதிக அளவில் ஊக்குவிக்கிறது, உருவாக்கி வருகிறது எனலாம். இதைப் பற்றி சமூக ஆராய்ச்சியாளர்கள் சரிவர கண்டுகொள்வதில்லை. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதிலும் கிருத்துவ-இஸ்லாமிய குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இதுவும் செக்யூலரிஸ ரீதியில் தான் நடந்து வருகின்றன. செய்திகள் வெளி வந்தாலும், பிறகு என்னவாயிற்று என்று சொல்லப் படுவதில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
குடும்பவிபசாரம்என்றுபுதியபிபசாரம்: சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது[1]. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் என்று தினத்தந்தி[2] விளக்கமும் கொடுக்கிறது. சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது[3]. அப்படியென்றால், இது ஏதோ ஏற்கெனவே இருந்தது போலவும், இப்பொழுது, திடீரென்று நடப்பது போலவும் தெரிகிறது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள், என்று ஒரு வரியில் முடிக்கிறது. பிறகு, இதற்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத் தானே செய்வர். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்[4]. குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்[5]. இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்[6]. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது, இதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது.
தொடர்ந்துதொடர்ச்சியாகசெய்துவரும்முறை: போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். இதில் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, நீதிமன்றத்திற்குச் சென்று, ஏதாவது தண்டனை என்று கொடுக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்யப் படுகிறதா அல்லது போலீசாறே நேராக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். இதிலும் புதிர்கள் பலவுள்ளன. அப்பெண்களுக்கு வாதிடும் வக்கீல்கள் யார், எவ்வாறு அவர்கள் விடுதலை பெறுகின்றனர் என்பதும் புரியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். பிறகு செய்த குற்றத்தையே திரும்ப செய்வது போலாகிறது. சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
புரோக்கர்கள்எல்லாம்இருப்பது, இதுஒருதிட்டமிட்டுசெய்யப்படும்வேலைஎன்றாகிறது: அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான ஆமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54), பிரசாந்த் (30) ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. இவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதும் தெரிகிறது[8]. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொழில்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்துநடக்கும்சமூகசீரழிவைத்தடுத்தாகவேண்டும்: அப்படி எல்லாமே சொல்லி வைத்தது போல சக்கரம் சுழல்வது போல, இந்நிகழ்வுகள் திரும்ப-திரும்ப நடப்பது அசாதாரணமாக உள்ளது. மற்ற தொழில்கள் போல இதுவும் திட்டப்படி, முறையாக, செயல்பட்டு வருகிறது என்றாகிறது. இதில் வக்கீல்கள், புரோக்கர்கள், வீட்டு சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு விடுபவர், போலீஸார், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், இது நடப்பது தெரிந்துள்ளது. செய்வது, கைதாவது, பிறகு சட்டப் படி அல்லது ஏதோ ஒரு நுணுக்கத்தில் வெளியே வருவது எல்லாம் யாரும் ஓசியில் செய்ய் மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கும் உரிய காசு கிடைக்கிறது. இத்தகைய விபசாரிகளுக்கு ஆஜராகும் வாதிடும் வக்கீல்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிரது. ஆமாம், அதுவும் அவர்கள் தொழில் தான்! யாராக இருந்தாலும், வாங்கிய காசுக்காக அவர்கள் ஆஜராக வேண்டியது தான்! பிறகு, இதில் எதுவோ இடிக்கிறதே? அப்பெண்களின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லையே. நுகர்வோர் பண்டங்கள் போல அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். சமூகம் அவர்களை விபசாரிகள் என்றாலும், வேறு வழியில் ஆதரிக்கின்றது.
குடும்ப விபசாரம் என்று செய்தி வருகிறது, அந்த அபசாரத்திற்கு ஒரு வரையறை, விளக்கமும், வியாக்யானமும் கொடுக்கப் படுகிறது.
ரூ.5000 கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களுக்கு உல்லாசம் கிடைக்கும்!
இவ்வாறு வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் – தினத்தந்தி.
குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.
கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்
போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.. இப்படியாக இவ்வேலை சுழற்சியாக நடைபெற்று வருகிறது!
இதில் பல புதிர்களும், கேள்விகளும் எழுகின்றன. எப்படி, ஏன், எவ்வாறு இதில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்?
ஒற்றுமையாக சொல்லி வைத்தால் போல சம்பந்தப் பட்டவர்கள் இச்சுழற்சியை வெட்டெறியாமல் தொடர்ந்து நடத்த விடுகின்றனர்?
[3] தமிழ்.ஹிந்துஸ்தான்டைம்ஸ், Chennai: 5000 ரூபாய்கொடுத்தால்போதும்;காலைடிபன்; மதியம்பிரியாணி; நாள்முழுக்கபெண்உல்லாசம்; சென்னையில் 5 பேர்கைது!, Kalyani Pandiyan S, Jun 23, 2023, 09:47 AM IST
பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களைஏமாற்றிதிருமணம்செய்தகல்யாணராணி 6-வதாகஒருவருடன்வாழ்ந்தபோதுசிக்கினார்!
மேல்மலையனூரில்பரபரப்பு: 5 ஆண்களைஏமாற்றிதிருமணம்செய்தகல்யாணராணி6-வதாகஒருவருடன்வாழ்ந்தபோதுசிக்கினார்: ஆண்களாவது, பெண்களாவது, ஏதாவது ஒரு வெறி, பித்து, பைத்தியம் என்று விடித்து விட்டால், பணம் சம்பாதிப்பது, ஜாலியாக வாழ்வது, எந்த கொள்கைஉம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எல்லாவிதமான குற்றங்களிலும் பெண்கள் சமமாக மட்டுமல்லாது, ஆண்களையும் மிஞ்சுயுள்ளார்கள், கொலை-கொள்ளைகளில் நம்பவே முடியாத நிலையில் உச்சத்தைத் தொடுள்ளார்கள். இனி ஆண்களுக்கே சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. எனவே, இந்நிலையில், மேல்மலையனூரில் 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்[1] என்ற செய்தி ஒன்றும் யாரையும் ஆச்சரியப் படுத்தி விடவில்லை. அவர் 6-வதாக ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[2] என்று தினத்தந்தி கூறினாலும், அதற்கே இது அலுத்துப் போன விசயம் தான். ஏனெனில், 70 ஆண்டுகளாக இது இத்தகைய சேய்திகளை வெளியிடுவதில் வல்லது.
டிசம்பர் 2022ல் திருமணம்: விழுப்புரம் மேல்மலையனூர், இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[3]:- முகநூல் மூலம் அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான்[4]. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்[5]. ஆக, முகநூல் இங்கும் விலையாடியிருப்பது தெரிகிறது. போன், இணைதளம் இன்றைக்கு பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. கோடிக் கணக்கான மக்களை ஏதோ ஒரு வழியில் கட்டுக்குள் வைத்திருக்கிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேச தொடங்கினர்[6]. அப்போது, மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார்[7]. காதலாக மலர்ந்தது கூடவே இவர்களது நட்பு மேலும் இணக்கமாக தொடர தொடங்கியது[8]. இவ்வாறாக நேரில் முகம்பாராமல் முகநூல் மூலமாக பேசிய இவர்களுக்குள் காதலும் மலர்ந்தது. இதையடுத்து காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மணிகண்டன் முடிவு செய்தார்[9]. அவர், மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவை தெரிவித்தார்[10]. இதற்கு காதலியும் பச்சைக்கொடி காட்டினார். அப்போது, திருமணத்தின் போது தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை, தான் மட்டும் தனது வீட்டை விட்டு வருவதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்[11]. கோவிலில் வைத்து திருமணம் இதையடுத்து, கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் 18-ந்தேதி, இவர்களது திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது[12]. ஆனால், பத்திரிக்கை அடிக்காமல் இருந்திருப்பார்களா, போட்டோ, வீடியோ எடுக்காமலா இருந்திருப்பார்கள்?
பிள்ளை வீட்டார் மட்டும் கலந்து கொண்ட கல்யாணம்: இதில் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மகாலட்சுமி தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. அப்பொழுது எப்படி, ஏன், எதற்காக விசாரிக்காமல் கல்யாணத்திர்கு ஒப்புக் கொண்டார்கள் என்பதும் வியக்காக இருக்கிறது. திருமணத்தின் போது, மணிகண்டன் வீட்டில் இருந்து மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டுள்ளனர். இதுவே “ரிவர்சில்” இருக்கிறது எனலாம். சொத்து பிரச்சினை மனதுக்கு பிடித்த காதலியை கரம்பற்றிவிட்டோம் என்கிற மனமகிழ்வில் மணிகண்டன், தனது ஆசை காதல் மனைவியுடன் இல்லற வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தார். அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளதாக எனக்கு போன் வந்தது. எனவே நான் ஊருக்கு சென்று அந்த பிரச்சினையை தீர்வு கண்டுவிட்டு, வந்துவிடுகிறேன் என்று மணிகண்டனிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய அவரும், ஊருக்கு சென்றுவிட்டு விரைவில் திரும்பி வந்துவிடு என்று வழியும் அனுப்பி வைத்தார்.
வீட்டில்இருந்தஒரு லட்சம் பணம்மாயம்: அதன்படி திருமணமான 26-வது நாள், அதாவது, கடந்த ஆண்டு 2022 டிசம்பர் மாதம் 14-ந்தேதி மகாலட்சுமி, மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறி சென்றார். சொந்த ஊருக்கு சென்ற காதல் மனைவி எப்போது திரும்பி வருவார் என்கிற ஏக்கங்களுடன் மணிகண்டனும் இங்கு காத்திருந்தார். மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதன் பின்னர் தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது. ரூ.1 லட்சத்தை திருடிக்கொண்டு, திருமணத்தின் போது அணிவித்த 8 பவுன் நகையுடன் மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாரா? என்று மணிகண்டனுக்கு சந்தேகம் வந்தது. காதல் மனைவியின் மிரட்டல் இதையடுத்து, அவருக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசிய மகாலட்சுமி, சரியான பதிலை அளிக்கவில்லை. நகை, பணம் குறித்து கேட்ட போது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று போனில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
மிரட்டிய மனைவியின் மீது கணவன் புகார் கொடுத்தது: காதலித்து திருமணம் செய்த மனைவியின் இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய்விட்டார். போலீசில் புகார் பின்னர், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மகாலட்சுமியின் புகைப்படம், முகநூல் பக்க பதிவுகள், அவரது செல்போன் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர். அதில், அவர் சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று, மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
6ம் கணவருடன் வாழ்ந்து வருவது: விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- 5-வதாக சிக்கிய மணிகண்டன் மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர் தான் மணிகண்டன். ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். அபகரித்து செல்லும் நகை, பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, மனதுக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார். கையில் உள்ள பணம் செலவானவுடன், மீண்டு்ம் தனது கல்யாண லீலைகளை அரகேற்றி வந்துள்ளார். 3 குழந்தைகளின் தாய் மணிகண்டனை தனது வலையில் சிக்க வைத்து, நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.
மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில்ஒருமகளும்உள்ளனர். 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும். வயதை மறைத்து, தன்னை விட 2 வயது சிறியவரான மணிகண்டனை அவர் திருமணம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர், யாருடைய பராமரிப்பில் உள்ளார்கள் என்பது குறித்து மகாலட்சுமி போலீசில் தெளிவாக தெரிவிக்கவில்லை. கல்யாண ராணி கைது தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று வழக்கம் போல ஊடகம் ஊளையிட்டுள்ளது. ஆனால், எந்ஹ தமிழச்சியும், தமிழச்சியின் கற்பு, மானம், முதலியவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. டிவி-பட்டிமன்ற விவதங்களும் நடத்தப் படுவதில்லை.
[1] தினத்தந்தி, மேல்மலையனூரில்பரபரப்பு:5 ஆண்களைஏமாற்றிதிருமணம்செய்தகல்யாணராணி6-வதாகஒருவருடன்வாழ்ந்தபோதுசிக்கினார், தினத்தந்தி மே 14, 12:15 am (Updated: மே 14, 12:16 am).
[5] தமிழ்.ஒன்.இந்தியா, 6 ஆண்களைதிருமணம்செய்துஏமாற்றியகல்யாணராணிகைது.. போலீஸாரேஅதிர்ந்தபகீர்பின்னணி!, By Vishnupriya R Updated: Sunday, May 14, 2023, 10:06 [IST].
ஆபாசவீடியோஆசிரியை 2022 வழக்கு 2023ல்விசாரணைக்குவருவது, நீதிபதிமுறையாகதீர்ப்பளித்துள்ளது (1)
கொக்கோகத்தில்சீரழிந்தஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].
குடும்பத்தைக்கெடுத்தபாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.
மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பாலியல்கொக்கோகத்தின்விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.
வீரமணி–ராதிகாஆபாசவீடியோஎடுப்பதில்ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11]. இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].
வீடியோக்களைபோலீஸார்ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20]. அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.
[1] நக்கீரன், மாணவர்களைமிரட்டிஆபாசவீடியோ; ஆசிரியைஃபோனால்அதிர்ந்தகாவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும்ஆபாசபடம்.. டியூசன்வந்தபள்ளிமாணவர்களைகரெக்ட்செய்துஆசிரியைஉல்லாசம்.. வெளியானவீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST
[9] மாலை மலர், மாணவர்களைமயக்கிஉல்லாசம்அனுபவித்தஆசிரியை– வீடியோவைபரவவிட்டகள்ளக்காதலன்கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).
[11] தினத்தந்தி, டியூசனுக்குவந்தமாணவர்களுடன்உல்லாசமாகஇருந்துவீடியோஎடுத்துரசித்தஅரசுஆசிரியை; கள்ளக்காதலன்கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).
[17] தினத்தந்தி, டியூசனுக்குவந்தமாணவர்களுடன்உல்லாசமாகஇருந்துவீடியோஎடுத்துரசித்தஅரசுஆசிரியை; கள்ளக்காதலன்கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).
ஆபாசவீடியோவா, கொக்கோககாணொலியா, வார்த்தையில்நீலப்படம்எடுக்கத்தயாராகும்பெண்ணியப்புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)
ரூ 1500/- வாங்கிக்கொண்டுகொக்கோகபேச்சுப்பேசியபெண்கொடுத்தபுகார்: இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் ஒரு பகீர் புகாரினைக் கொடுத்தார். 1500 ரூபாய் கொடுத்து தன்னை அப்படி பேசச் சொன்னதாகவும்… கமென்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் பேசியதாகவும் கூறியிருந்த அந்தப் பெண்…, “என்னிடம்சொன்னபடிஅவர்கள்கமென்ட்செக்ஷனைஆஃப்செய்யவில்லை. ஆகையால், நான்கடுமையானவிமர்சனத்துக்குஆளாகியுள்ளேன். நான்பேசியபலவிஷயங்களைகட்செய்துவிட்டுஆபாசமானவார்த்தைகளைமட்டுமேவெளியிட்டுள்ளனர். என்னைப்போலநிறையபெண்களிடம்இப்படிச்செய்துள்ளனர்,” எனப் புகார் தெரிவித்தார். ஆனால், பேசும் போது, அவற்றிற்கு எல்லாம், அர்த்தம் தெரியாமல் பேசினால் என்று சொல்ல முடியாது. அழுத்தம் கொடுத்துப் பேசுதல், நக்கலாக சிரித்துக் கொண்டே பதில் அளிப்பது, முகத்தை ஏதோ வெட்கம் வந்து திருப்பிக் கொள்வது போல நடிப்பது முதலியன, அப்பட்டமாக செய்தவை என்று உறுதியாகின்றன. கற்பழிப்பு காட்சியில், உண்மையாக கற்பழித்தால், பெண் என்ன செய்வாள் போன்றது தான், இத்தகைய முறையற்ற வீடியோக்கள். அப்பெண் பேசியதாக, ஒரு வீடியோவில், அப்பெண் தான் செய்ததை நியாயப் படுத்தும் வகையில் தான் பேசியிருப்பது திகைப்பாக இருக்கிறது. புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெண்கொடுத்தபுகார்மீதுநடவடிக்கைஎடுத்தது: போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, அத்தனை பேர், இத்தகைய கேவலமான வீடியோவைப் பார்க்கின்றனர் என்றால், அவர்களது, வக்கிர மனநிலையினையும் எடுத்துக் காட்டுகிறது, இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பலவேசம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மூன்றுபேர்கைது, சிறையில்அடைப்பு: `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய மூவர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் [ Sections 354(b), 294(b), 509, 506(ii) of IPC and Section 4 of Tamil Nadu Prohibition of Women Harassment Act] வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இத்துடன் செய்திகள் நின்று விடும். பிறகு, என்னவாயிற்று என்று ஊடங்கங்கள் விவரங்களைக் கொடுப்பதில்லை. வாசகர்கர்களும், ஏதோ டிவி-சீரியல், சினிமா, பட்டி மன்றம் பார்த்தது போன்று, மறந்து விடுவார்கள். இதே போன்று, இன்னொரு செய்து வந்தால், ரசித்து அதனை பார்ப்பார்கள்.
போலீஸாரின்நடவடிக்கை, யூ–டியூப்முடக்கப்பட்டது: அவர்களிடமிருந்து எல்லா உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது[1]. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது[2]. இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்[3]. இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்[4]. இதையடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று சென்னை நகர துணை ஆணையர் யுடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார்[5]. அதைவைத்து இப்போது சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளதாக யுடியுப் நிர்வாகம் அறிவித்துள்ளது[6].
கமலஹாசன்யோசித்துப்பார்க்கவேண்டியது: “மன்மதன் அம்பு,னென்ற படதத்தில், இதைவிட கேவலமாக, கொக்கோமாக, ஒரு பாடல் எழுதி, சேர்த்திருப்பதை நினைவு கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் அப்பாட்டில் வெளிப்பட்டன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது. இப்படி பதினொன்று ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன்[7]. இப்பொழுது, 2021 தேர்தலுக்காக, ஏதோ ஒழுக்கமான ஆள் போன்று பிரச்சாரம் செய்து வருவது தமாஷாக இருக்கிறது.
மின்னணுசாதனங்களின்வளர்ச்சி, இத்தகையசீரழுகளைஅதிகமாக்குகிறது: இன்றைக்கு காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்ட மனிதர்களைத் தான், பலரை, பல நேரங்களில், தொழில்களில், வேலைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க் நேரிடுகிறது. பல சமயங்களில், “துஷ்டரைக் கண்டால் தூர விலகு,” போன்ற கொள்கையில், பலர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். 1960-70களில் எப்படி “சரோஜா தேவி“ புத்தகங்கள் எப்படி காம வக்கிர மனங்களுக்குத் தீனி போட்டதோ, அது போல, 2000களில் “புளு பிலிம்” போன்றவை அத்தகைய கள்ளத்தனங்களுக்கு உதவின. வீடியோ கேசட், சிடி-டிவிடி-பென் டிரைவ் என்று வந்து விட்டப் பிறகு, அவற்றின் மூலம் விற்றல்-வாங்கல் பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. டெஸ்க்-டாப் என்று ஆரம்பித்து, லாப்-டாப் என்று மாறிய போதும், அவ்வாறே, மனங்களை உடல்களை பாதித்தன. இப்பொழுது, செல்போன், கைபேசி, என்று பலவித வசதிகளுடன் வரும் நிலையில், இவையெல்லாம், யார் வேண்டுமானாலும், பார்க்கலாம், சுவைக்கலாம் என்ற நிலை வந்து விட்டது.
இன்டெர்நெட்மாயவலைகோடிகள்புரளும்வியாமாரமாகியநிலை: இன்டர்நெட், வலைதளம், சர்வர், மாயவலை, மின்னாக்கம் செய்யப் பட்ட விவரங்கள்-தகவல்கள் சேமிப்பு, பரப்பு என்றெல்லாம் வியாபாரம் தொழிற்நுட்ப ரீதிகளில் விரிந்த போது, சம்பந்தப் பட்டவர்களுக்கு கோடிகளில் வருவாய் வர ஆரம்பித்தது. அவை, தொடர்ந்து நுகரும் நிலைகளில், நிரந்த வருமானமாகி, பெருக ஆரம்பித்தது. இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் போல, இன்டெர்நெட்-மாயவலை இடம் விற்பனை, டொமைன் பெயருக்கு காசு என்றெல்லாம் தொழில்கள் விஸ்தாரமாகியது. செல்போன் மூலம், தனிநபர், தனியாக, தன்னிச்சைக்கேற்றவாறு, நல்லதோ-கெட்டதோ, எந்த விசயங்களையும் தேடலாம், அணுகலாம், பெறலாம் என்ற போது, அத்தகைய மனிதர்களும் அதிகமாக ஆரம்பித்தனர்.
[1] நியூஸ்.18.தமிழ், கைதானயூடியூப்சேனல்நபர்களின்செல்பேசியில், வெளியிடப்படாதஏராளமானபெண்களின்வீடியோக்கள்கண்டுபிடிப்பு, NEWS18 TAMIL, LAST UPDATED: JANUARY 12, 2021, 1:21 PM IST.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,பெண்ணிடம்ஆபாசபேட்டி.. யூடியூப்சேனலுக்குசென்னைமாநகரபோலீஸ்ஆப்பு.., Ezhilarasan Babu, Chennai, First Published Jan 15, 2021, 10:57 AM IST
யூ–டியூப்மோகம்கொக்கோகத்தைநெருங்கியவிதம்: இணையதளங்களில் புற்றீசல்கள் போல இப்போது யூடியூப் சேனல்கள் பெருகிவிட்டன. இந்த சேனல்களில் பொதுமக்களுக்கு பயன்படும் நல்ல விசயங்களும் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகிறது[1]. அதிகமான பேர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை நடத்துவோருக்கு அதிக அளவில் பணம் கொட்டும்[2]. இதனால்தான் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள். “மக்களிடம் கருத்து கேட்கிறோம்,” என்ற பெயரில் ஆபாச அத்துமீறலில் ஈடுபடும் சில யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது `சென்னை டாக்ஸ்’ யூ-டியூப் சேனல் விவகாரம்[3]. தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்ததாக ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது[4].
ஆபாசபேச்சுவீடியோ: அரசியல் போக்குகள், சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் என பொதுவெளியில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், எளிதில் அதிக வியூஸ் பெறவேண்டும் என்ற வெறியில் சில யூடியூப் சேனல்கள் வக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காமத்தையும், அந்தரங்க விஷயங்களையும் மையப்படுத்தி தவறான உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டு, அதற்கு மக்கள் சொல்லும் கருத்துகளில் எந்த இடத்தில் ஆபாசமான சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்கின்றனவோ அந்த இடத்தை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிடுகின்றன. அதன் அடுத்தகட்டமாக பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கும் கொடுமையும் நடக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இத்தகைய பேச்சுகளை ஆதரிக்கும் விதத்தில் தான், இன்றும் ஊடகங்களில் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பெண் பேசிய விதம் தவறுதான், ஆனால், ஆண்கள் எப்படி தனக்கு மூன்று-நான்கு மனைவியர் உள்ளனர், பலருடன் உடலுறவு வைத்துக் கொண்டேன் என்றேல்லாம் பேசுகிறானோ, அதேபோல, பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. இப்படியும், ஒரு ஆங்கில செனலில் பேட்டி ஒளிபரப்பப் பட்டது.
“2020 எப்படிபோனது?” போர்வையில்ஆபாசகேள்வி–பதில்நிகழ்ச்சி: சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் “2020 எப்படி போனது?” என்ற டாபிக்கில் கருத்து கேட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தனர் `சென்னை டாக்ஸ்’ குழுவினர்[5]. அந்த வீடியோவில் ஒரு பெண் மிகவும் ஆபாசமாகப் பேசியிருந்ததால் பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை ஏகத்துக்கும் தாக்கி கமென்ட் செய்தனர்[6]. கேட்ட கேள்விகள், கொடுத்த பதில்கள், வார்த்தை விபச்சாரம் போலிருந்தது. அம்மண், இம்மண் என்றெல்லாம் அரற்றினாலும், பெண்மை போகும் பாதையை மாற்ற முடியவில்லை, வார்த்தை விபச்சாரமும் பெருகுகிறது! கவர்ச்சி அரசியலில் மூழ்கி இந்துத்துவம் மயங்கும் போது, வார்த்தையில் நீலப்படம் எடுக்கும் தருணமும் வந்து சேர்கிறது பெண்மை மறக்கிறது! வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள், உலா வரும் வேளையில் எல்லாமே பறக்கின்றன. நிலைமை மோசமாகி விட்டது என்றறிந்த, அப்பெண் உஷாராகி, புகார் கொடுத்தாள்.
யார்அந்தபெண்? வீடியூவில்பேசியபெண்: புகார் அளித்த ஜோதி கிரிதர்சிங் என்கிற அந்த பெண், 21 மணி நேரம் 2900 நபர்களுக்கு மேல் மெஹந்தி போட்டு கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்[7]. சிறந்த தொழில் முனைவோராக பெயர் எடுத்தவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் பெஸ்ட் டிரெய்னர் என கட்டுரை வெளியாகியிருக்கிறது[8]. வடைபோச்சு போன்ற ஷோக்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பு செய்திருக்கிறார். நடிப்புத் துறையிலும் இருந்து வந்துள்ளார். அப்பெண் கூறியதன்படி, “அந்த பேட்டி வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக பேசிய, 1500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ. அந்த சேனல்காரர்கள் 2020 உங்களை என்னவெல்லாம் செஞ்சது? 2021 எப்படி போகப் போகிறது என்பதை பற்றி கேட்பதாக முதலில் கூறினார்கள். சென்னை டாக்ஸ் சேனலில் மட்டும் தான் போடுவோம் என்று கூறினார்கள். இதற்கு முன்பாக பல பெண்களை இப்படி பணம் கொடுத்து பேச வைத்ததாகவும் கூறி அவர்களின் பட்டியலை கொடுத்தார்கள். அந்த பெண்களும் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டதாக தங்கள் மனக்குமுறலை என்னிடம் பகிர்ந்தார்கள். இதை வெளிக்கொண்டு வரவே, நான் இதை செய்தேன். அந்த பணமும் அவர்களாக கொடுத்ததுதான். ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசலாம் என்கிற பேச்சு சுதந்திரத்தை தான் வெளிப்படுத்தினேன். இந்த சேனலை பார்த்துவிட்டு, இதில் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என கூறியும் அவர்கள் பகிர்ந்துவிட்டார்கள்.” என தெரிவித்துள்ளார்.
தானேபுகார்கொடுத்ததுஏன்?: இந்த புகாரையும் அப்பெண்ணே கொடுத்துள்ளார். அதற்கு காரணமாக அவரே கூறியதாவது:- “முதலில்அந்தசேனல்தரப்பில்கமெண்ட்செக்ஷனைஆஃப்செய்துவைத்திருப்பதாகதான்உறுதிஅளித்தார்கள். ஆனால்அவர்கள்அவ்வாறுசெய்யவில்லை. இந்தவீடியோவைரலான 15 நிமிடங்களில்கமெண்ட்செக்ஷனில்மோசமானகமெண்டுகள்குவிந்தன. என்னால்தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவர்களிடம்கேட்டபோதுசேனலின்தலைமைஅதைகேட்டுக்கொள்ளவில்லைஎனகூறினார்கள். இதனால்என்பெயரைமீட்டெடுக்கஅந்தசேனலைச்சேர்ந்தவரிடம்கேட்டேன். அப்போதுஎன்பெயருடன்சேர்த்துஇந்தவீடியோவைவைரல்செய்தார்கள்.ஆனால்அதுதான்இன்னும்மனஉளைச்சலாக்கியது. உண்மையில்என்னடாஇப்படிலாம்பேசவைக்குறீங்கஎன்றுதான்அந்தவீடியோவில்நான்பேசியிருக்கிறேன். இவைநடந்தஅடுத்தஒருமணிநேரத்திலேயேஇந்தவிவகாரம்பற்றிநான்போலீஸ்ஸ்டேஷனில்தெரிவித்தேன். இந்தபுகாரைநானாகவேகொடுத்தேன். காவல்துறைஇந்தவீடியோவைநீக்குவதாகதெரிவித்துள்ளார்கள். இப்படிஎதிர்மறையாகபேசிநான்பிரபலமாகிவிட்டேன். இதைவைத்துஇதுபோன்றவிஷயங்களுக்குமுற்றுப்புள்ளிவைக்கஎன்பங்களிப்பைதரநினைக்கிறேன்.” என கூறியுள்ளார். இறுதியாக, “நான் யாருக்கும் இதை சொல்லி புரியவைக்க முடியாது. என் பதில்களில் யாரும் திருப்தி அடையவும் வாய்ப்பில்லை. நான் யாருக்கும் தெரியாத எந்த விஷயமும் பேசவில்லை. அத்துடன் இந்த பேட்டியில் நான் பேசியவற்றை இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்.” என அந்த பேட்டியில் ஜோதி தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகளும், சமுக சீர்பழிப்பாளர்களும் ஒன்றே: “நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்,” என்ற நிலையில் அந்த பெண்மணி இருக்கும் போது, ரூ.1,500/- அத்தகைய கொக்கோக பதில்களைச் சொல்லி, பெண்ணுரிமை பேசி, பிறகு ஜகா வாகியிருப்பது, தமாஷாக இருக்கிறது. ஊழல் அரசியல்வாத்களுக்கும், இத்தகைய, கொக்கோக பெண்ணியப் போராளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காசுக்கு இவர்களிடம் பஞ்சமில்லை என்றால், அதையும் மீறி ஆட்டிப் படைக்கும் காரணிதான், இவர்களை சீரழிக்கும் வேலைகளில் ஈடுபட செய்கின்றன. சமூக பிரக்னை இல்லாமல், யாரும், சமூக பிரச்சினைகள் அணுக முடியாது. ஆனால், போலித் தனமாக, ஆசியல்வாதிகள் செய்வார்கள். இதுப்போலத்தான் இக்கூட்டமும்.
சின்மயியைதரக்குறைவாகவிமர்சிக்கும்போக்கு, பின்னணிமற்றும்மனப்பாங்குஎன்ன?: பாரத ஊடகங்களில் குறிப்பிட்ட சின்னம், அடையாளம், தனிநபர், மதம், மொழி, என்று தேர்ந்தெடுத்து, குறிவைத்து, திட்டத்துடன் தாக்கும் போக்கு வெளிப்படையாகிறது. அதிலும், இந்து மதம், இந்து நம்பிக்கைகள், பிராமணர், பிராமண ஜாதி என்று வரும் போது, அத்தகைய தாகுதல்கள் பன்முனை தாக்குதல்களாகவே இருக்கின்றன. பிரதான ஊடகங்கள் கண்டு கொண்டது போல தெரியாவிட்டாலும், இணைதள ஊடகங்கள், ஒரே செய்தியை அப்படியே, வேறு-வேறு தளங்களில் வெளியிட்டுள்ளதை காணல்லம். தலைப்புகள் இவ்வாறு உள்ளன:
சினிமா.பேட்டை.காம், என்னைஎப்போதுமேவிப***ரின்னுதான்சொல்றாங்க.. வருத்தத்தில்சின்மயி, By சௌந்தர், Published on June 1, 202
தமிழ்.பிளிமி.பீட், என்னைவிபச்சாரிஎன்றுஅழைக்கிறார்கள்.. போட்டோவைபோட்டுடாக்டரின்முகத்திரையைகிழித்தபிரபலபாடகி!, By Bahanya| Updated: Monday, June 1, 2020, 11:57 [IST].
தமிழ்.வெப்.துனியா, இந்த 4 பேருஎன்னைவி**** சொல்றாங்க…. சந்திசிரிக்கும்சின்மயிவிவகாரம்!, Papiksha Joseph| Last Updated: திங்கள், 1 ஜூன் 2020 (18:04 IST).
சினி.போர்டர்ஸ், எனக்குவிபச்சாரிபட்டம்கட்டுறாங்க… வேதனையில்சின்மயி, By Cinereporters, CTN Mon, 1 Jun 2020..
இந்த தலைப்புகளிலிருந்தே, அவை, சின்மயியை ஆதரிக்கின்றவா அல்லது எதிர்க்கின்றனவா என்று தெரிஎது கொள்ளலாம்.
வைரமுத்துமீதுபாலியல்புகார், சின்மயிமீதுதாக்குதல்அதிகரிப்பு: நடிகை சின்மயி இணையதளங்களில் எப்போதுமே சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் அவரை எப்போதுமே வம்புக்கிழுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி சின்மயியை திட்டுவதை பொழுதுபோக்காக நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை அவ்வப்போது பொது மக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறார். இருந்தாலும் சின்மயி என்ன சொன்னாலும் அதை மக்கள் கண்டு கொள்வதாக இல்லை. அதற்கு காரணம் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் கூறியது தான். வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கடந்த 2018 ஆண்டு மீடூவில் புகார் கூறினார். சின்மயின் புகார் தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை கிளப்பியது. சின்மயின் இந்த புகாருக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர எழுந்தது. தொடர்ந்து தனது சமூக வலைதளபக்கத்தில் வைரமுத்துவை விளாசி வருகிறார் சின்மயி. வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வைரமுத்துவை அழைத்ததை கூட கடுமையாக விமர்சித்தார். ஆனால் டிவிட்டரில் சின்மயிக்கு ஆதரவாக சிலர் பேசினாலும் பெரும்பாலனோர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.
சின்மயி தமிழ் மட்டுமின்றி மற்ற இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாத்துறையில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருபவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால் சின்மயியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. சமூக வலைதளங்களில் குறிப்பாக அவரது சாதியை வைத்தும் இழிவான சொற்களாலும் அவரை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த பிரச்சனையிலிருந்து எந்த ஒரு பாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வரவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிரடி கருத்துக்களை கொடுத்து வருகிறார்.
சின்மயியை, விபச்சாரிஎன்றுவிமர்சிக்கும்படித்தவாலிபர்கள்: இந்நிலையில் சின்மயியை செல்ல பேர் வைத்து கூப்பிடுவதை போல ரசிகர்கள் அவரை விபச்சாரி என்று அழைக்கிறார்களாம்[1]. அப்படி யார் யார் தன்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள் என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்[2]. வழக்கம்போல உனக்கு வேற வேலையே இல்லையா என்பதை போல ரசிகர்கள் கண்டும் காணாததுமாக இருக்கின்றனர். இதனால் பெரிதும் வருத்தத்தில் உள்ளாராம் சின்மயி. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கருத்து வேறுபாட்டின் ஒரு வடிவமாக துஷ்பிரயோகம் செய்வது என்பது ‘படிக்காதவர்கள்’ செய்யும் ஒன்று என்று பலர் நம்புகிறார்கள்; இந்த ‘படிக்காத’ கருத்து நம்மில் பலரிடமிருந்து வந்திருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் நாம் சலுகை பெற்றவர்கள்; கல்வி ஒருவரின் நடத்தையை முற்றிலும் மாற்றுவது போல என பதிவிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு டிவிட்டில், நான் ஒரு விபச்சாரி என்று அழைக்கப்படுவது பழக்கமாகிவிட்டது; சமூக ஊடக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை ஒரு சேரி என்று அழைத்தவர்கள் ஆண்கள். பல இழிவான கருத்துகளும் ஆண்களிடமிருந்து வந்தவை[3].
மெத்தப்படித்தஇளைஞர்கள்அவ்வாறானகேவலமானபதிவுகள்செய்திருப்பதுதிகைக்கவைக்கிறது: ‘எல்லா ஆண்களும் குப்பை’ அல்லது ‘ஆண்கள் குப்பை’ என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ” என பதிவிட்டுள்ளார்[4]. மேலும் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சின்மயி[5]. தெலுங்கு படிக்க தெரிந்தால் உங்களுக்கு புரியும் என்று குறிப்பிட்டு தன்னை திட்டியவர்களின் போட்டோக்களோடு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளார்[6]. அவர்களில் ஒருவர் விஸ்வபாரதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்[7]; மற்ற அனைவரும் பட்டதாரிகள் அல்லது பட்டதாரி மாணவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்[8]. மேலும் அவர்கள் அனைவரும் நான் துஷ்பிரயோகம் செய்ய தகுதியானவர் என்று நம்புகிறார்கள்[9], அவர்கள் சொல்வது சரிதான் என்றும் பதிவிட்டுள்ளார்[10]. ஆக இவ்வாறு மெத்தப் படித்த இளைஞர்கள் அவ்வாறான கேவலமான பதிவுகள் செய்திருப்பது திகைக்க வைக்கிறது.
ஆங்கிலநாளிதழில்வந்ததைமொழிபெயர்த்து, ஒரேசெய்தியைதமிழ்ஊடகங்கள்செய்திபோட்டுள்ளன: ஆங்கில நாளிதழில் வந்ததை மொழிபெயர்த்து, ஒரே செய்தியை, ஏதோ PTI செய்தி போல, பல இணைதளங்கள் தலைப்பிட்டு செய்தியாக வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். “டைம்ஸ் ஆப் இந்தியா”வில் இந்த விவரம் வந்துள்ளது, இதை வைத்துக் கொண்டு, மொழிபெயர்த்து, தமிழ் ஊடகங்கள் செய்தி போட்டுள்ளன.
Singer Chinmayi who often calls out misogynistic, regressive and abusive posts from various Twitter accounts, is at it again. She openly put out some of the abusive comments she received from different people on her social media accounts. One among such comments was made by a doctor and others were graduate students[11]. She opined that the reality is different from the general assumption that it is always the uneducated who indulge in abusive behaviour[12]. She tweeted, “Many believe that abuse as a form of disagreement is something only the ‘uneducated’ do; I wonder if this ‘uneducated’ comment comes from many of us because we are privileged; as if education completely changes one’s behaviour.” Chinmayi added, “I am used to being called a prostitute; based on social media interactions and the abuse that I personally get, those that have called me a slut have been men. Casteist slut shaming comments have also been from men. I have also never said ‘All Men are trash’ or ‘Men are Trash’.”
தாக்கப்படுவதுஎன்ன – பெண்மையா, தனிப்பட்டநடிகையா, அல்லதுநடிகையின்ஜாதியா, மதமாஎது?: உண்மையிலேயே பெண்மையை, பெண்களை மதிக்கும் இளைஞர்கள், நிருபர்கள், ஊடகங்கள் என்றால், தலைப்புகள் அவ்வாறு இருக்காது. இப்பொழுது, தேவையில்லாத விவகாரங்கள் உச்சநீதி மன்ற அளவில் அலசப் படுகின்றன. சினிமாக் காரர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும், சமீபத்தில் அரசியலை விபாரமாகக் கொண்டு, தங்கள் தொழிலுக்கு விளம்பரம் மற்றும் வியாபார விருத்தி செய்யும் யுக்திகள் அதிகமாகவே உள்ளன. ஏனெனில், அவர்களுக்கு ஆள்பலம், பணபலம் முதலியவை உள்ளன. அரசியல், மேலும் அவர்களது சட்டமீறல்களிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும். இங்கு, ஜாதிய கோணத்தில் தாக்குதல் இருக்கக் கூடுமா என்று அலசினால், அத்த்கைய பதிவுகள் காணப்படுகின்றன. முன்பு, காயத்ரி தாக்கப் பட்டதும் கவனிக்கலாம். எஸ்.வி.சேகர் தாக்கப் பட்டாலும், சமாளித்துக் கொள்வார், ஏனெனில், அவருக்கு அரசியல் பின்புலம் உள்ளது. ஆக திறமை மட்டும் இருந்தால், பாதுகாப்பும் கிடைக்காது, கெட்ட பெயர் உண்டாக்க தயாராக இருக்கும் கூட்டத்தினர், எல்லோரும் சேர்ந்து தான் தாக்குவர். யாரும் துணைக்கு வர மாட்டார்கள். ஆகவே, பிராமண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பில் தோன்றி, ஜாதி துவேசத்தில் வளர்ந்து, ஆண்-பெண் பார்க்காமல், தூஷணங்கள் வளர்கின்றன.
பின்னணியில்மிகப்பெரியகும்பல்செயல்படுவதாகவும்பாதிக்கப்பட்டபெண்குற்றசாட்டு: கொரோனா படுத்தும் பாடு எல்லோரையும் கவலையில், பீதியில், பொருளாதார பிரச்சினைகளில் மூழ்கியிருக்கும் நேரத்தில், இந்த காமுகன் காசியின் செய்தி இடை-இடையே வந்து திகைக்க வைக்கிறது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட இருவர் அளித்த புகாரின் பெயரில் மூன்று வழக்குகள் பதிவு செய்த போலீசார், காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று ஆரம்பித்த விவகாரம் பெரிதாகி வருகிறது. அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் தாக்கல் செய்த மனு, நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், காசியைமூன்று நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனிடையே, மோசடி இளைஞர் காசி மீது, மேலும் ஒரு பெண் சமூக வலைதளத்தில் புகார் கூறியுள்ளார். காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுள் தானும் ஒருத்தி எனவும், காசி தனி ஆளில்லை, அவன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்[1]. காசிக்கு உறுதுணையாக இருந்த அந்த கும்பலையும் காவல்துறை விட்டுவிடக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்[2].
பலபுகார்கள்வந்தும் 10 ஆண்டுகளாகசிக்காதகாசிதற்போதுசிக்கியதுஎப்படி…?[3]: விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உதவியிருக்கிறது. 50, 100 இப்பொழுது 200 ஆகி விட்டது போலும். சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை. அதாவது 2010லேயே வேலையை ஆரம்பித்து விட்டான்! பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த காசி, மறுபக்கம் அரசியல் அதிகாரத்தின் போதையில் மூழ்கியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் புகாரளித்தபோது, உடனே காசியை போலீசார் கைது செய்யவில்லை. சென்னையில் கொடுக்கப்பட்ட புகார், கன்னியகுமரிக்கு மாற்றி அவரை கைது செய்ய கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆனது அதிலும், சென்னை பெண் மருத்துவர் கடைசி நேரத்தில் புகாரை வாபஸ் பெறச்சொல்லி பல தரப்புகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அவரும் புகாரை வாபஸ் பெறலாம் என நினைத்தபோது, காசியால் ஏமாற்றப்பட்ட பெங்களூரு பெண் மருத்துவரிடம் பேசி மனஉறுதி அளித்தாகவும் கூறப்படுகிறது[4]. சின்மயியின் புகாரும் கவனிக்கத் தக்கது. காசியுடன் தொடர்பில் இருந்த 20 பேரின் பட்டியலையும் போலீசார் தயாரித்துள்ளனர்.
காமுகன்காசிகாவிவேட்டியுடன்அலைவதேன்?: காசி நீதிமன்றத்துக்கு வந்த போது காவி வேட்டி மற்று நீல நிற சட்டை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தான். அவனை புகைப்படம் எடுத்த போது எந்த பதட்டமும் இன்றி போட்டோகிராபரை பார்த்து காதல் சின்னத்தை காசி காட்டியுள்ளான். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பெரும் குற்றத்தை செய்துவிட்டு முகத்தை கூட மூடாமல் பயமின்றி காதல் சின்னத்தை சிரித்தபடி போஸ் கொடுத்த காசியை இணையதள பயன்பாட்டார்கள் திட்டி வருகின்றனர். முன்னர் கோயம்புத்தூர் தீவிரவாதிகள் பல உயிர்களைக் கொன்று, நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, அதே தோரணையில் இருந்தத்தை கவனிக்கலாம், அதாவது, மாமெரும் குற்றம் செய்த பிறகும், இவர்கள் ஏதோ சாதித்து விட்டதைப் போல, “சிரிப்பது-கையை ஆட்டுவது” – இவ்வாறு நடந்து கொள்வதை கவனிக்கலாம், திட்டமிட்டே அவர்கள் மானுடத்தை சீரழித்து வருகின்றனர், மனிதர்களைக் கொல்கின்றனர். முன்னர் கிருத்துவர், ஏன் துலுக்கர் கூட காவி உடை அணிந்டு இந்தியர்களை ஏமாற்றினர், இப்பொழுதும் ஏமாற்றி வருகின்றனர். இந்த குரூரக் குற்றவாளிகளும் அதையே செய்கிறார்கள்.
14-05-2020 – நாகர்கோவில்வழக்கறிஞர்சங்கம்இந்தகாமுகனுக்குஆஜராகமாட்டார்கள்– தீர்மானம்: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ்[5], ”நாகர்கோவிலைச்சேர்ந்தகாசிஎன்பவர்மீதுபெண்களைஏமாற்றுதல், ஆபாசபடம்எடுத்துஇணையத்தில்வெளியிடுதல், பெண்களைமிரட்டிபணம்பறித்தல்போன்றபல்வேறுகுற்றச்சாட்டுக்களுக்காககாவல்துறைவழக்குப்பதிவுசெய்துமேற்படிவழக்குகள்நாகர்கோவில்நீதிமன்றத்தில்நடந்துவருகிறது. காசியின்செயல்கள்மனிதகுலத்திற்கேஎதிராகஇருப்பதால்அவர்மீதுபதியப்பட்டுள்ளவழக்குகளில்நாகர்கோவில்வழக்கறிஞர்கள்சங்கஉறுப்பினர்கள்யாரும்ஆஜராகமாட்டார்கள்எனஎங்களதுசங்கத்தின்செயற்குழுகூட்டத்தில்முடிவுஎடுத்துள்ளோம். இதன்அடிப்படையில்கன்னியாகுமரிமாவட்டத்தில்உள்ளஎந்தஒருவழக்கறிஞரும்காசிக்குஆஜராகமாட்டர்கள்எனதெரிவித்துக்கொள்கிறேன்,” என கூறியுள்ளார்[6]. இது வரை, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது[7]. அப்படியென்றால், அவர் தொடர்ந்து வாதாடுவாரா அல்லது பாதியில் விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.
விஐபிக்கள், அரசியல்வாதிகள்இவனிடம் பலன் பெற்றனர் என்றால் நிலைமை என்ன?: இதனிடையே, விஐபிக்கள், சிலரிடம் காசி நெருங்கி பழகி உள்ளார்.. அதில் சில கட்சி பிரமுகர்களும் அடக்கம் என்கிறார்கள்.. சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த விஐபிகளுக்கு ஹோட்டல்கள், ரிசார்ட்களும் உள்ளனவாம்.. நாகர்கோயிலில் இருந்து காரில் பெண்களை காசி இங்குதான் அழைத்து வருவாராம்[8].. இந்த ரிசார்ட், ஹோட்டல்களில் தங்க வைத்து மிரட்டிதான் ஆபாச படங்களையும் எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்[9]. ஒரு திரைப்பட நடிகரின் மகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் முதலியோரும், காசியால் சீரழிக்கப் பட்டப் பெண்களில் அடங்குவர் என்று தெரிகிறது[10]. பாண்டிச்சேரியில் ஒரு ரிசார்ட்டிலும் காசி தனது வேலைகளை செய்துள்ளான் என்றும், அங்கு விஐபிக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மகிழ்விக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும், போலீஸார் கண்டுபிடித்துள்ளது தெரிகிறது[11].
செய்ய வேண்டியது என்ன?: கிருத்துவ பிஷப், பாஸ்டர், பாதிரி செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், முகமதியரின் அமுக்கி வாசிக்கும் அதைவிட மோசமான பயங்கரமான செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், …..நிர்மலா தேவி, பொள்ளாச்சி என்று விரிந்து, இப்பொழுது சுஜியில் வந்துள்ளது. இவையெல்லாமே, சமூகத்தை சீரழித்த மோசமான கயவர் கூட்டம் தான். இவர்களைத்தான் முன்னர் அரச்சர், ராக்ஷதர் என்றனர். அவர்களைக் கொல்ல, எப்படி கடவுள் அவதாரம் எடுத்தாரோ, அதேபோல, ஒரு அவதாரம் வந்து கொல்ல வேண்டும். இல்லையென்றால், சட்டங்களில் ஓட்டைகளை வைத்துத் தப்பித்துக் கொள்வர். ஆனால் பாதிக்கப் பட்ட பெண்களின் கதி அதோகதிதான். அவர்களின் கற்பை மீட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே, உடனடியாக, நடவடிக்கை எடுத்து, மரண தண்டனை கொடுத்தால் தான், எச்சரிக்கையாக இருக்கும், இனி, இது மாதிரியான குற்றங்கள் நடக்காமல் இருக்கும். கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்ற நிலையில், இவ்வழக்கை சீக்கிரம் நடத்தில், மரண தண்டனை கொடுத்தாலும், மக்கள் மகிழ்சி அடைவர்.
[10] It is said that the womaniser used to fell girls right from his school days and that the daughter of a film actor and police inspector’s daughter are also his victims.
India Glitz, Shocking! Actor’s daughter affected by serial rapist Nagercoil Kasi, Tuesday, May 5, 2020.
[11] The cops have also said to have unearthed Kasi’s resort in Pondicherry where he is suspected to have entertained VIPS and politicians as well. Sources add that many more shocking skeletons will be out in this serial rapist case.
70-100 பெண்களை சீரழித்த காசிப் பிரச்சினை அரசியலாக்கப் படுகிறதா, கொரோனாவில் அமுக்கப் படுகிறதா? [2]
இளம்பெண்டாக்டரைகாதலித்துஆசைதீரஉல்லாசம்… ஆபாசவீடியோக்களைவெளியிட்டுபுண்ணியம்தேடியகாசி..! 70 முதல் 100 பெண்கள்சீரழிந்தனர்![1]: இதன் முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்[2]. காசியில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக, ஒரு பெண் டாக்டர் பிப்ரவர் 24, 2019 அன்று புகார் கொடுத்தார் என்றுள்ளது[3]. மாட்டிக் கொண்ட காசியின் சகோதரனை, அதிமுக பிரமுகர் ஒருவர் அடித்ததால், இப்பிரச்சினை அரசியலாக்கப் பட்டது. இதற்குள், அவர் கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். ஆனால், பல பெண்கள் பாலியல் ரீதியில் சதாய்க்கப் பட்டுள்ளதால், பலர் சம்பந்தப் பட்டிருக்கக் கூடும் என்று எண்னப்படுகிறது[4]. மொபைல், லேப்டாப், ஹார்ட்-டிஸ்க், சிடிக்கள் என்று எல்லாமே பறிமுதல் செய்யப் பட்டு, ஆராயப் பட்டு வருகிறது[5]. இதில் மற்ற பெண்கள் இருப்பது தெரிந்தாலும், அவர்கள் தங்களது வாழ்க்கை நினைத்து புகார் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன[6]. கடந்த பிப்ரவரியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்ற வழக்குப் போன்றே இருப்பதாக, கருதப் படுகிறது[7]. எது எப்படியாகிலும், தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற நிலையில் இருப்பதால், மற்றவர்கக்கு சமூக பிரஞை இல்லாமல், ஏதோ, செய்திகள் படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம் என்ற நிலையில் இருந்து மறந்து விடுகிறார்கள்.
காசியின்நண்பர்கள், தேடுதல், அவர்களிடம்விசாரணை: மின்னணு கருவிகளிடமிருந்து பெற்ற விவரங்களை வைத்து, இவையெல்லாம், இவன் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்றறிந்து, அவற்றிற்கு துணை போன, மற்றவர்களை போலீஸார் தேடினர், கண்டு பிடித்தனர்.. வழக்கில் கைதான, நாகா்கோவில் காசியுடன் தொடா்பில் இருந்த நண்பா்கள், அரசியல் பிரமுகா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்[8]. காவல் கண்காணிப்பாளரிடம் காசி மீது அந்த மருத்துவா் புகார் அளித்தார். இதைத்தொடா்ந்து, காசி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனா்[9]. ஏற்கெனவே, இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றிருக்கும் பொழுது, இவ்வழக்கு எதற்கு என்று தெரியவில்லை. அவ்வழக்குகளை தீவிரமாகத் தொடர்ந்து நடத்தினால், பலர் மாட்டிக் கொள்ள வாய்புள்ளது. மேலும் பெண்களின் பெற்றோர், உறவினர், மற்றவர், இவ்வழக்கை முடித்துக் கொள்ளத்தான் விரும்புவர்.
முன்பகுதியில்நாலடிஆக்கிரமித்துகட்டியபங்களா: இந்நிலையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அவரது அடுக்குமாடி பங்களாவை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே காசியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க இளம் பெண்களிடம் மிரட்டி பறித்த பணத்தில் தனது வீட்டை நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி மாளிகையாக மாற்றி இருக்கிறார் காசி. இதைத்தொடர்ந்து காசியின் வீட்டை மாநகராட்சியினர் அளவீடு செய்தனர்[10]. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்பகுதியில் நாலடி ஆக்கிரமித்து கட்டி அந்த வீட்டில் தரைத்தளம், முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அனுமதியின்றி இரண்டாவது மற்றும் மூன்றாவது நான்காவது தளங்கள் என சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது[11]. பின்னர் காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு, வீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சீல் வைப்பதற்கான நோட்டீஸ் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது[12]. இதனைத் தொடர்ந்து விதி மீறிய கட்டடங்களை இடிக்க முடிவு செய்துள்ள நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நோட்டீஸ் அறிவிப்பு ஒன்றை அவரது வீட்டில் ஒட்டி உள்ளது[13].
காசிகைதுஎன்றுபலதடவைசெய்திவருவதுஏன்?: ஏற்கெனவே, சென்ற வாரம், காசி கைது செய்யப் பட்டான் என்று செய்தி வந்தது. எப்படி அதிவேகமாக பெண்களை ஏமாற்றி சொத்துக்களை குவித்து அதிவேகத்தில் காசி முன்னேறினானோ அதே வேகத்தில் காசி காவல்துறையிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காசியின் பிளாக்மெயில் வேலைகளுக்கு உடந்தையாக இருந்த அனைத்து நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த குற்றங்கள் வெளியே வந்துள்ள நிலையில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. இந்த நிலையில் நெல்லை நாங்குநேரி சிறையில் உள்ள காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[15]. இதனால் காசியால் பெயிலில் வர முடியாது குமரி காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் கூறுகிறார்கள்.
கொரோனாபிரச்சினையில்அமுக்கப்படுமா, இரண்டாவதுகரோனாவாகமாறுமா?” தமிழகத்தில் கற்பழிப்பு, நாகரிக உடலுறவு, பாலியல் வன்புணர்ச்சி என்பதெல்லாம், இரண்டாவது கொரோனா போன்று வேலை செய்து கொண்டிருக்கிறது! கண்ணகி, கற்பு என்றெல்லாம் பேசுவர், மேடைகளில் முழங்குவர், சிலைகள் வைப்பர், ஆனால், இது போன்று நடக்கும் போது கண்டு கொள்ளாமல் இருப்பர். எந்த கழகத் தோழரும், இனமான வீரரும் வாளோடு போராட வரவில்லை. கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் கூட, கோடிக் கணக்கில் வருகின்ற நிதியைத் திருப்பி, கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடும் நிலையில், இதெல்லாம், பெரிய விசயமாகவே தெரியவில்லை.
[3] Not giving into the blackmail attempt, the victim, who managed to free herself, lodged a complaint with police on February 24, 2019.
AsiaNetNews, From Pollachi to Nagercoil another case of sexual crime emerges in Tamil Nadu, By Team Newsable, Chennai, First Published 30, Apr 2020, 4:19 PM..
[4] The case assumed political overtones since a local functionary of the ruling AIADMK allegedly attacked the victim’s brother. The attack by the functionary, who was later expelled from the AIADMK, coupled with reports in a section of media opened a can of worms, leading the police to believe that over 50 women may have been victims of sexual assault by a network of men.
[5] The police recovered mobile phones, laptop, hard discs, CDs from him in which it was found he had stored intimate photographs and videos of several women.
UNI ,Goondas act slapped on youth after arrested for sexual harassment and extortion, UNI GSM CS 1745, Posted at: Apr 30 2020 5:45PM
[6] He was booked under various sections of the Indian Penal Code, Information Technology Act, 2000, and the Tamil Nadu Prohibition of Women’s Harassment Act.
[7] The case is similar to that of the Pollachi sexual assault case. A gang of men on February 12 allegedly tried to strip a woman inside a car near Pollachi, 500 km from Chennai. They shot a video of the act and tried to blackmail her using the visuals.
[8] தினமணி, தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை, By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]
[10] தமிழ்.இந்து, பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இளைஞரின் வீட்டை சீல் வைக்க நடவடிக்கை: நாகர்கோவில் மாநகராட்சி நோட்டீஸ், Published : 29 Apr 2020 05:34 PM; Last Updated : 29 Apr 2020 05:34 PM,
[11] ஏசியா.நெட்.நியூஸ், டாக்டர், எஞ்ஜினியர், நடிகர் மகள், மாணவிகளை மயக்கி பணம் பறிக்க உல்லாசம்… 4 மாடி வீடு கட்டிய பொலிகாளை காசி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 29, Apr 2020, 1:43 PM
[14] தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]
இளம்பெண்டாக்டரைகாதலித்துஆசைதீரஉல்லாசம்… ஆபாசவீடியோக்களைவெளியிட்டுபுண்ணியம்தேடியகாசி..! 70 முதல் 100 பெண்கள்சீரழிந்தனர்!
வயதுவந்தசிறுமியர், இளம்பெண்கள்காமுகர்களிடம்சிக்கிக்கொள்வதுஎப்படி?: சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றியுள்ளான், பாலியல் ரீதியில் சீரழித்துள்ளான், அவர்களை வைத்து ஆபாசப் படங்கள்-வீடியோ எடுத்துள்ளான், பணம் கேட்டு மிரட்டியுள்ளான் என்றெல்லாம் இந்த “கொரோனா” காலத்திலும் செய்திகளாக வருவது திகைப்பாக, வருத்தமாக, பிரமிப்பாக இருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இத்தகைய செய்திகள் நிறைய வந்து விட்டன. இருப்பினும், வயது வந்த சிறுமியர், மாணவியர், இளம்பெண்கள் முதலியோர் எப்படி, இத்தகைய காமக் கொடூரர்களிடம் எளிதாகச் சிக்குகின்றனர் என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. பெற்றோர் கவனிப்பு இல்லை என்பது அன்றாகத் தெரிகிறது. மொபைல் வைத்திருக்கும் பெண்கள், தேவையில்லாமல், அடையாளம் தெரியாத, சம்பந்தம் இல்லாத, வெளியாட்களுடம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. விளையாட்டிற்கு செய்கிறார்களா, மற்றவர்கள் போன்று, சமூக ஊடகங்களில் பிரபல ஆகவேடும் என்ற போலித்தனத்துடன் செயல்படுகின்றனரா, வேறு பிரச்சினைகளை மறக்க இங்கு வந்து மாட்டிக் கொள்கிறார்களா என்று பலகோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.
இறைச்சி கடை அஹிம்சை, பாசம் போன்ற நல்ல குணங்களை வளர்க்காது: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல இறைச்சிக்கடை / கோழி வியாபாரி- தங்கப்பாண்டியனின் மகன் காசி (வயது 26), இவன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளான. ஆக, இத்தகையோருக்கு இரக்கம் போன்ற மனித குணங்கள் குறைவாகவே இருக்கும். கொடுமை, குரூரம் போன்றவற்றைப் பற்றி கவலைப் பட முடியாது. ஏனெனில், பிறகு அந்த தொழிலே செய்ய முடியாது. சிக்ஸ் பேக் உடம்பு.. கூலிங்கிளாஸ், பைக் என மாஸ் காட்டி வந்தான். இவனுக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறான்.. சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவானாம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் காசி, டெமோ, சுஜி, டெமோ லுக் போன்ற பல்வேறு பெயர்களில் பல கணக்குகளைத் தொடங்கியுள்ளான். உள்ளூர் காவல்நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவரின் மகளையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பதறிய ஆய்வாளர் கமுக்கமாக பணியிட மாற்றம் வாங்கிச் சென்று விட்டார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, புஜபல பராக்கிரமத்தை திறந்த மேனி மூலம் வெளிப்படுத்துவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்த வீடியோக்களைப் பார்க்கும் பள்ளிச் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை உணர்ச்சிவசப்பட்டு இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே கியூட்டாக உள்ளாரே என, லைக், கமென்ட், ஷேர் செய்யத் தொடங்குவார்கள்.
பணம், வசதிமுதலியவைவைத்துபெண்களைகுறிவைத்துள்ளது: ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டுள்ளான் என்கிறார்கள். அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வானாம். இந்த கருத்துக்களை பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.. லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர்.. அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையிம் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்துள்ளான். காசியின் செல்போன் உட்பட அவனது பல ஹார்ட்-டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்… அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்[1]. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன[2]. அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். ஸ்கூல் மாணவிகளை கூட காசி விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.. கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
சென்னயில்பெண்டாக்டரைகாதலித்துஏமாற்றியது: இவன் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது[3]. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது. அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளான்[4]. அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டான். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினான். இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளான். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளான். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளான். இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினான். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசியை சட்டரீதியாக விசாரித்தால் அவருடன் நட்பில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் மகன்களின் லீலைகளும் அம்பலத்தில் ஏறும் என்கின்றனர் போலீசார்.
ஊடகங்களின் வழக்கமான வர்ணனைகள்: கல்லூரி படிப்பு முடிந்ததும், வேலைக்குச் செல்லாமல், இருந்துள்ளான்[5]. நண்பர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி, அதில் தன்னை ஒரு சமூக ஆர்வலர், தொழில் அதிபர் போன்றுக் காட்டிக் கொண்டு, பல பெண்களிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்[6]. பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான்[7]. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளான்[8].. சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான்[9]. அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி[10]. பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார் கொடுத்தார். அவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது[11]. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[12].
காதலித்துஆசைதீரஉல்லாசம்…பாலியல்உறவு……உடல்ரீதியிலானதொடர்பு…உடல்ரீதியிலானநெருக்கம்என்றால்என்ன?: தமிழ் மற்றும் ஆங்கில் ஊடகங்கள், ஊடக விற்ப்பனர்கள், நிருபர்கள், “கற்பழிப்பு” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், கீழ்கண்ட சொற்றொடர் பிரயோகங்கள் உள்ளன:
காதலித்து ஆசை தீர உல்லாசம்…
பாலியல் உறவு……
உடல் ரீதியிலான தொடர்பு
உடல் ரீதியிலான நெருக்கம் [physical intimacy]
அதாவது, ஒருவேளை, சமீபத்தைய உச்சநீதி மன்ற தீர்ப்பின் விளக்கம் படி, அவர்கள், விருப்பத்துடன் உடல் உறவு கொண்டதால், நாஜுக்காக அவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். அதாவது அவ்வாறு செய்தால், சட்டப் படி “கற்ப்பழிப்பு” ஆகாது. 60 வருடங்களுக்கு முன்னால், “சோரம் போனாள்” என்பார்கள், அதாவது, கற்பை இழந்தால் என்ற அர்தத்தில் குறிப்பிடுவர். விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், திருமணத்திற்கு முன்பாக விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், ஆகவே, இதெல்லாம் சகஜம் என்று கொள்ள முடியுமா? எதிர்காலம் நினைத்து, பெண்கள் புகார் கொடுக்காமல் இருக்கலாம். இப்பொழுது விசாரணையில் வெளிவரும் போதும், பெற்றோர் எதிர்காலம் நினைத்து, மறைக்கத்தான் செய்வர். இவர்கள் பிறகு கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று வாழும் போது என்னாகும்? எதிர்காலம் தான் பதில் சொல்லும்.
[1] தமிழ்.நியூஸ்.18, பள்ளிச்சிறுமிகள்முதல்பிரபலநடிகர்மகள்வரை…! 70 பெண்களின்அந்தரங்கவீடியோக்களைவைத்துமிரட்டியகிரிமினல்கைது, LAST UPDATED: APRIL 25, 2020, 3:27 PM IST.
[3] தினத்தந்தி, பெண்டாக்டர்ஆபாசபடங்களைசமூகவலைத்தளத்தில்பரப்பியகோழிக்கடைக்காரர்நாகர்கோவிலில்பரபரப்பு, பதிவு: ஏப்ரல் 25, 2020 06:19 AM மாற்றம்: ஏப்ரல் 25, 2020 06:39 AM
ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்!
ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்!: குழந்தை கற்பழிப்பு என்பது கடந்த ஆண்டுகளில், அந்நிய சுற்றுலா பிரயாணிகள், குற்றவாளிகள், கிருத்துவ மிஷினர்கள் என்று பல வழக்குகள், விவகாரங்கள் என்று பார்த்து வருகின்ற நிலையில், ஈடுபட்டவர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்பொழுது, ஒரு பெண் ஈடுபட்டுள்ளது, அதிலும் தமிழகத்தில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இன்றைக்கு உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பாலியல் வரைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக உள்ளன. பலர் அவற்றாஇப் பற்றி குறை கூறி வருகின்றனர். ஏனெனில், அத்தகைய விபரீதமான தனிச்சை வக்கிரங்களை, உரிமை என்ற பெயரில் அனுமதிக்கப் பட்டால், கணவன் – மனைவி, தாம்பத்தியம், குடும்பம் போன்ற உறவுகளை எதிர்பார்க்க முடியாது. சமூகமும் பெரிதளவில் பாதிக்கப் படும். அந்நிலையில், ஒரு இளம் பெண், திருமணம் ஆனவள், இரண்டு குழந்தைகள்க்கு தாய் என்ற நிலையில், குழந்தை கற்பழிப்பாளியாக மாறியுள்ளது திகைப்பாக இருக்கிறது.
மாணவர்களுடன்தகாதஉறவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது என்கிறது மாலைமலர். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. என்கிறது தினத்தந்தி[1]. இது தொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்[2]. மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாம்பத்தியகுறைவா, பிறழ்சியா, முறையற்றமிருகத்தனமா?: தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் எனும்பொழுது அவர்களிடம் ஒழுக்கம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் பாடம் போதிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக, குறிப்பிட்ட நடத்தை இருக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் உள்ள இந்திய இது குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் பொறுப்புள்ள ஆசிரியருக்கு என்ற நிலையிலும் இவ்வாறான தகாத உறவில் ஈடுபட்டது திகைப்பாக இருக்கிறது. பெண்ணும் புருஷனிடம் செக்ஸ் கிடைப்பதை எதிர்பார்க்கிறாள். குழந்தைகள் உள்ளது அவர்களின் தாம்பத்தியத்தின் முழுமையினைஎடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், அப்பெண் எல்லைகளைத் தாண்டியுள்ளது, துரதிருஷ்டமாக, பாலியல் வக்கிரத்தையே காட்டுகிறது. ஆனால், அது இளம் மாணவர்களை பாதித்துள்ளது. சுவை கண்ட அப்பூனைகள் அப்படியே இருக்குமா அல்லது வேறேங்கேயாவது பால் கிடைத்தால் போய்விடுமா, போகுமா என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. விலங்களிடம் கூட ஒழுக்கம் இருக்கும் நிலையில் படித்த பெண்ணின் நிலை இவ்வாறிருப்பது அலங்கோலமே.
நித்தியாவின்கொக்கோகபலியல்உல்லாசம்: ஊடகங்கள் அவருடைய செக்ஸ் நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வாறான தகவல்களைக் கொடுக்கின்றன. மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார்[3]. இரண்டு மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்[4]. இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது[5]. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்[6]. அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் இரண்டு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது[7]. இவையெல்லாம் நிச்சயமாக அப்பெண்ணின் செக்ஸ்-வக்கிரத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்[8]. இது நித்யாவின் நிலைக்கு சதகமாயிற்று எனலாம்.
போலீஸாரிடம்புகார், விசாரணை, செக்ஸ்குற்றாம்உறுதியானது: இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.
போக்சோசட்டத்தில்கைது: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது[9]. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்[10]. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இத்தகைய தகாத உறவுகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?: முன்னர் ஒரு கணித ஆசிரியை தன் வகுப்பில் படிக்கும், தன்னை விட பத்து வயது சிறியனவனான, மாணவனிடம் மோகம் கொண்டு தகாத உறவில் ஈடுபட்டு, போட்டி ஒன்று தனியாக தங்கி வாழ்ந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் இங்கோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தகாத உறவு கொண்டு இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தாம்பத்தியத்தில் குறை என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்லாது அவற்றை படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு பார்த்து ரசிக்கும் ஒரு அசிங்கமான பாலியல் மனப்பாங்கும் இதில் வெளிப்படுகிறது. கணவன் எச்சரித்தும், அவள் அத்தகைய உறவைத் தொடர்ந்திருக்கிறாள். இது அவளின் கொக்கோக வக்கிரத்தை னெடுத்துக் காட்டுகிறது. ஆண்களில் சிலர் அவ்வாறு இருப்பது போல, பெண்களிலும் சிலர் இருப்பது தெரிய வருகிறது. இதனை, மனோதத்துவ முறையில் தடுக்கவேண்டும். ஆனால், உறவினர்களால் செய்ய வேண்டும். குறிப்பாக பேற்றோர், சகோதரிகள் போன்றவர் செய்ய வேண்டும்.
இணைதள விசயங்களைத் தேடும் போது, சுயக் கட்டுப் பாடு தேவை: நிச்சயமாக இக்காலத்தில் இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் ஆண் பெண் உடலுறவு கொள்ளும், வீடியோக்கள், திரைப்படங்கள் முதலியவற்றை காண்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுகின்றது. சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ சில இணையதளங்களில் மற்றவர்களை தேடும் பொழுது இடையில் இத்தகைய படங்களை வைத்து கவனத்தை ஈர்க்கின்றனர் மற்றும் திசை திருப்புகின்றனர். ஒருவேளை தேடுகின்றவர், இவற்றைக் கண்டுகொள்வது இல்லை, என்றாலும், பாலியல் ரீதியாக ஆண் பெண் எவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் பொழுது சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க கூடிய நிலையும் ஏற்படுகிறது. பார்த்துவிட்டு மறுபடியும் சாதாரணமாக தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தால் பிரச்சினையில்லை ஆனால். அது மனதில் ஒரு துண்டுதலை உண்டாக்கி, மறுபடியும் மறுபடியும் அதை பார்த்து ரசிக்க வேண்டும், பிறகு இதனை உண்மையாகவே அனுபவித்து ரசித்தால் எப்படி இருக்கும், என்ற ஒரு மனப்பாங்கு ஏற்படும்பொழுது, எல்லைகளைக் கடந்து சமூகக் கட்டுப்பாடுகளை மீறி இத்தகைய தகாத உடலுறவு கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
வேதபிரகாஷ்
24-03-2019
[1] தினத்தந்தி, பள்ளிமாணவர்களுடன்தகாதஉறவு: ‘போக்சோ’ சட்டத்தில்ஆசிரியைகைது, பதிவு: மார்ச் 22, 2019 03:15 AM