Posts Tagged ‘சிறார் கற்பழிப்பு’

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

செப்ரெம்பர்12, 2017

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

Girl raped- Arni doctor-Dinakaran

மருத்துவரும் தனது தொழில் தர்மத்தை மீறி கற்பழித்தது: இந்த நிலையில், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் மயக்க மருந்து நிபுணராக இருக்கும் டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் வார்டு உதவியாளர் பாண்டியன் ஆகிய 2 பேரும், சுரேஷ் மூலம் சித்ராவின் வீட்டிற்கு வந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்[1]. ஆசை இணங்க மறுத்த மாணவிக்கு, போதை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு கற்பழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான், அந்த கொடூர கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய், சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் 07-09-2017 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில், கோயம்பேட்டு போலீசார், நள்ளிரவு ஆரணிக்கு வந்து, டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவியாளர் பாண்டியனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்[2].  மருத்துவ படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையில் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள், ஆனால், மனிதத்தன்மையே இல்லாமல், ஒரு மாணவியை, இவ்வாறு சீரழித்த செய்தி, அதே நேரத்தில் வந்தாலும், உருத்தவில்லை.

Girl raped- Arni doctor-Tamil Hindu

மருத்துவமனையில் சோதனை, விசாரணை: இதற்கிடையில், மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குநர் நவநீதம் 08-09-2017 அன்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்[3]. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்[4]. போலீஸ் வருவதையறிந்து மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய அவரது உறவினர் சித்ரா மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்[5]. அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால், சென்னை மாணவியை போலவே, வேறு யாராவது சிறுமிகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவரக்கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[6].

Arni doctor arrested for raping Koyambedu girl-09-09-2017

தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் ஆர்பாட்டம், இல்லையே ஏன்?: போராட்டம் இப்படி பிரச்சினைகளை அலசி பார்க்கும் போது, உள்ளே இருப்பது ஊழல் தான் என்று தெரியவரும். 1960களிலிருந்து, தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், ஊழல் என்பது சாதாரணமான விசயமாகி விட்டது. சென்னை கார்பரேஷன், தாலுகா ஆபீஸ், என்று எலா துறைகளிலும், செய்ய வேண்டிய வேலைக்கே காசு கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. அரிசி ஊழல், கோதுமை ஊழல் என்றதெல்லாம் கருணாநிதி ஆட்சியில் நாறியது, நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வந்தன. சர்க்காரியா கமிஷன், திமுக ஊழலை விஞ்ஞான ரீதியில், பக்குவமாக செய்ய வல்லது என்று எடுத்துக் காட்டியது. மற்ற எல்லாவற்றிற்கும் கொடி பிடித்து, பதாகை ஏந்தி, சாலை மறியல் செய்து ஆர்பாட்டம், போராட்டம் செய்யும் கூட்டங்கள் ஊழல் என்று வரும்போது அமைதியாக இருக்கின்றன. இப்பொழுது கூட, அதிமுக ஊழல் என்று பேசுவதோடு சரி. ஆனால், தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று எவனும் போராட்டம் நடத்த மாட்டேன் என்கிறானே ஏன்? கருணாநிதியில் கோதுமை ஊழல் பயமுருத்துகிறதா? விஞ்ஞான முறையில் ஊழல் செய்த வித்தகர்கள் “டாக்டர்” என்ற பெயரில் அலைகிறார்கள். ஆனால், எம்.பி.பி.எஸ்-டாக்டர் மட்டும் ஓசியில் வருமா?

three-medical-students-commit-suicide

ஊழல் பணத்தை முதலீடு செய்தாலும், லாபத்தை எதிர்பார்ப்பார்களே?: கல்வித்துறையில் அரசியல்வாதிகள், பாவகாரியங்களில் சம்பாதித்தப் பணத்தை முதலீடு செய்து நுழைந்த போதிலேயே அதன் தரம் குறைந்து விட்டது. கல்வியை வியாபாரமாக்கி, ஊழலாக்கி, சூதாட்டமாக்கி பணம் கொழிக்கும் களமாக மாற்றியப்பிறகு அதன் தன்மையே கெட்டு சீரழிந்து விட்டது. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, கள்ளப்பணம் / கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், கடத்தல்காரர்கள், கிரிமினல்கள் என்று எல்லோருமே முதலீடு செய்து, ஒவ்வொரு கல்லூரிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தக்காரர், தலைவர், சேர்மேன் என்றாகி விட்டனர். 70 வருடங்களாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு இவர்களின் பின்னணி, யோக்கியதை எல்லாமே தெரிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டபோதே பல விவரங்கள் வெளிவந்தன[7]. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது[8].

mbbs-medical-college-money-spinning-industry

பணம் இருந்தால் டாக்டராகலாம்: 80-90% மார்க்குகள் வாங்கினால் மருத்துவக் கல்லூரியில், ஏன் இஞ்சினியரிங் கல்லுரியில் கூட சீட் கிடைக்காது. அதாவது 4-7 மற்றும் 40-70 லட்சங்கள் முறையே கொடுக்காமல் கிடைக்காது. ஆனால், படிக்கக் கூடிய மாணவர்கள், மருத்துவராக வேண்டும் என்று ஆர்வம், சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு சீட் கிடையாது. ஒருவேளை 99% வாங்கி சேர்ந்தால் கற்பழித்து கொலை கூட செய்யப்படலாம். அப்படி ஒரு திரைப்படத்தையே எடுத்து விட்டார்கள்[9]. ஆகவே, பணமுள்ளவர்கள் லட்சங்கள் கொடுத்து டாக்டராகி மக்களைக் கொடுமைப் படுத்துதுவர். ஈவு-இரக்கமில்லாமல் பணத்தை உறிஞ்சுவர். பிணங்களையும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வர். இப்படித்தான் மருத்துவர்கள் / டாக்டர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பணம் இருப்பதனால், கோடிகளைக் கொட்டி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்கள். அதில் மற்ற மருத்துவம் படித்தவர்களை வஏலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவ வேலை செய்யாமல், வியாபார ரீதியில் என்ன செய்ய வேண்டும், சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபிறகு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் மருத்துவன் என்ன கிடைக்கும்?

mbbs-in-tamilnadu-rate-fixed-in-colleges

குழப்ப அரசியலில் உழப்பப் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள்: ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவில் பிரிவுகள் ஏற்பட்டு, ஆட்சி, அதிகாரம், பணம்…முதலியவற்றிற்காக, சசிகலா மற்றவர் போட்டி போடும் நிலையில், திமுக தனது பண பலத்தினால், குழப்பத்தை உண்டாக்க முயன்று வருகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அமைக்கவும் ஆசை இருக்கிறது. அதே நேரத்தில், நான்கு ஆண்டு ஆட்சியை யாரும் விட்டுத் தரவும் முடியாத நிலையுள்ளது. ஆக, ஆட்சியைக் களைத்தால், செலவு எல்லோருக்கும் தான். அந்நிலையில் எல்லோருமே ஒழுங்கு மாதிரி, கிடைக்கும் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி, குளிர்காய பார்க்கின்றனர். அனிதாக்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், உண்மையாக யாரும் அத்தகையவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சீட்டை விற்று, லட்சங்களை, கோடிகளை அள்ள வேண்டும் என்ற பேராசை தான் உள்ளது. இப்பொழுது சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முதலியோர் எல்லாம், இப்பிரச்சினைகளில் நுழைந்து, குழப்பத்தை அதிகரித்து வருகிறார்கள். கருப்புப் பணத்தின் பிறப்பிடங்களில் முக்கியமாக இருப்பதும் தெரிந்த விசயமே. திராவிட அரசியலைப் பொறுத்த வரையில், அரசியல்-சினிமா சேர்ந்திருந்தாலும், இப்பொழுதையவர் திடீரென்று தங்களது ஆர்வத்தைக் காட்டி வருவதால், மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

11-09-2017

mbbs-medical-courses-fees-rate-fixed-in-colleges

[1] மின்முரசு, மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது!, செப்டம்பர்.9, 2017.

[2]https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/108155/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[3] தினகரன், ஆரணியில் மயக்க ஊசி போட்டு கொடுமை சென்னை சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர், உதவியாளர் கைது, 2017-09-10@ 00:13:38

[4]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=334338

 

[5] தினமலர், சிறுமியை சீரழித்த காமுகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு, பதிவு செய்த நாள். செப்டம்பர்.8, 2017. 22.44.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[7] https://academicdegradation.wordpress.com/2010/04/24/%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95/

தினமலர்,  கேதன் தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார், ஏப்ரல் 25,2010,00:00  IST.

[8] http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7320

[9] அதில் ஒரு பிராமணப் பெண் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாகவும், மறுத்ததால் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதாகவும் காண்பிக்கப் படுகிறது.

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

ஜூன்27, 2015

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனங்கள்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனங்கள்

கற்பழித்தவனை திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா?: கற்பழித்தவனோடு சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை ஐகோர்ட்டால் சமரசத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட கடலூர் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர், என்று தினகரன் செய்தி வெளியிட்டது[1].  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொடிக்களம் கிராமம் சட்ட நிபுணர்கள் மற்றும் மகளீர் அமைப்புகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த ஊர். இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதனால் எதிர்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[2].  ஊடகங்களுக்கோ, விவஸ்தையே இல்லாமல், எல்லாவாற்றையும் போட்டுக் கொண்டிருக்கிறது. “தி ஹிந்து”வில் “சேட்” என்று பட்டிமன்றம் நடத்தியுள்ளது[3].

Rape Indian law position

Rape Indian law position

தமிழகத்தில் சிறார் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. உலகத்திலேயே பிரசித்திப் பெற்ற பிடோபைல்கள் தமிழகத்தை, குறிப்பாக சென்னையை புகலிடமாகக் கொண்டிருந்தனர். சென்னையில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்தில், பீடோபைல் / பிடோபைல் என்கின்ற குழந்தைக் கற்பழிப்பாளர்கள் பிடிபட்டுள்ளனர்[4]. வில் ஹியூம் என்பவன், சென்னையில் 30 வருடங்களாகத் தங்கியிருந்தவன் 2011லந்தான் பிடிபட்டான்[5]. பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் தப்பி மறைந்து விட்டானாம்.  08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டான்[6]. அப்பொழுது இந்த சட்டமேதைகள் எல்லாம் எங்கேயிருந்தனர் என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுதோ, அவரவர் கருத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனம்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனம்

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் கருத்து: “அனைத்திந்திய முற்போக்குப் பேரவை” என்று திடீரென்று எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து அப்பேரவையின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்[7], “கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதல் இச்சிறுமி கருத்தரித்து குழந்தையையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் சமரச மையத்தில் தீர்வுகாணலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இது வருத்தமளிக்கிறது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் மற்றும் அவரின் எதிர்காலத்தையும், அவர்களது சமூக பொருளாதார பாதுக்காப்பைக் கருத்தில் கொண்டும் பாலியில் குற்றவாளியையே திருமணம் செய்துகொள்ளும் வகையிலான இத்தகைய சமரச முயற்சிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமைகளுக்கு எதிரானது. திருமணம் என்றால் என்ன என்ற புரிந்துகொள்ளாத செயலாகும். பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மோசமான கண்ணோட்டமாகும். இது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் மற்றுமொரு தண்டைனயாகும். அப்பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனுபவித்த கொடுமைகளுக்கு, அவமானங்களுக்கு இது நியாயம் வழங்குவதாக இருக்காது.

Wilhelums Weijdeveld - etherlands

Wilhelums Weijdeveld – etherlands

ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா?:  “வன்புணர்சியில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கிடவேண்டும். அதற்குப் பதிலாக வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து வைக்க முயல்வது பல்வேறு மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். குற்றவாளிக்கு தண்டனை என்பதற்குப் பதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே பரிசளிப்பது போல் உள்ளது.   பாலியல் குற்றவாளி ஏற்கனவே மணமானவர் என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவருக்கு இரண்டாம் தாரமாக மணம் செய்து வைக்க சொல்வார்களா? ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா? ஒரே நபர் பல பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தால் பாதிக்கப் பட்ட அந்த பெண்கள் அனைவரையும் பாலியல் குற்றவாளிக்கு மனைவிமார்களாக்க முடியுமா? இதற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்லப்போகிறது? இது  நமது நீதித்துறையின் ஆணாதிக்க மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது”. பிறகு தொடர்கிறார்.

M.L.Bright-Brite

M.L.Bright-Brite

தவறான முன்னுதாரணமாகி விடும்: “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைக்கும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குற்றவாளியே முழுமையான இழப்பீடு வழங்கவேண்டும். அந்த குழந்தையை வளர்ப்பதற்கான அனைத்து பொருளாதார செலவுகளையும் அக்குற்றவாளியே ஏற்கவேண்டும். அதைவிடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார பாதுகாப்பை காரணம் காட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவனையே மணக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சி பெண்களை இழிவுபடுத்துவதாகும்.      ஒரு பெண்ணின் தனிமனித உரிமையை மதிக்காமல், அவளது உடலின் மேல் அத்துமீறி செயல்பட்ட ஒரு மிருகத்தை, அப்பெண்ணுக்குவாழ்வளித்தல்என்ற பெயரில் மணம் முடித்துவைப்பது  கொடுமையானது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்தான் வாழ்வளிக்க முடியும் என்பதே ஒரு ஆணாதிக்க வெளிப்பாடு தான்பெண்கள் சமூகபொருளாதார ரீதியாக ஆண்களையே சார்ந்திருக்க வேண்டும், சுயேச்சையாக வாழமுடியாது என்ற தவறான பிற்போக்கு சிந்தனையையே நீதித்துறையும் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.      பாலியல் வல்லுறவு கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கும், பாலியல் வல்லுறவு மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்தியமாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.    எனவே, சென்னை உயர்நீதி மன்றம் தனது சமரச உத்தரவு  முயற்சியை திரும்பப் பெறவேண்டும். பாலியல் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும்  என அனைத்திந்திய முற்போக்குப் பேரவை  கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு கூறியுள்ளார்[8].

St george boarding schoolவி.மோகன் மைனர் பெண்ணை 2009ல் கற்பழித்தது, கைது செய்யப்பட்டது, சிறைதண்டனை பெற்றது: கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை சேர்ந்தவர் வி. மோகன். பெற்றோரை இழந்த 17 வயது மைனர் பெண்ணை கற்பழித்ததாக விருதாச்சலம் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 2009-ம் ஆண்டு மோகன் கைது செய்யப்பட்டார். அப்போது, கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், மோகனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

கற்பழித்தவனின் மேல்-முறையீடு: இதையடுத்து, இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்என்றும், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மோகன் மனு தாக்கல் செய்தார். தம்மால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்[9]. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், இதேபோன்ற இன்னொரு வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய வாலிபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுபோல் இந்த வழக்கிலும் ஒரு முயற்சி எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். மனுதாரரை சிறைக்கு அனுப்பி எந்த பலனும் யாருக்கும் ஏற்பட போவது இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் அனாதையாக உள்ளார். எனவே, மனுதாரர் பெண்ணை திருமணம் செய்ய தயாராக உள்ளாரா? என்று சமரசமாக பேசி அதன் முடிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன் என உத்தரவிட்டார்[10].

பாதிக்கப்பட்ட பெண் சொல்லும், வைக்கும் வாதங்கள்: இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசி மூலம் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது இந்த உத்தரவு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாக என்னிடமே மூன்று முறை கூறியுள்ளார். அப்படிப்பட்டவரை என்னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று மறுப்பு தெரிவித்தார். என் விருப்பத்தோடத்தான் உறவு கொண்டதாக நீதிமன்றத்துல அவர் கூறியுள்ளது சுத்தப் பொய். தற்போது, “ஒழுங்கா என்னை திருமணம் செய்து கொண்டு பண்ணிக்கிட்டு கேஸ்ல இருந்து வெளியில கொண்டு வந்துவிடு.. நான் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்.. நீ வேற வழியை பார்த்துக் கொள்”, என மிரட்டுகிறார் மோகன். அப்படி செய்யவில்லை எனில் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்[11]. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் அதிர வைக்கும் புகார்களை அடுக்கி வருகிறார்[12]. தன்னுடைய சொத்துகளை உங்கள் பெயரிலோ, உங்கள் குழந்தை (தற்போது ஆறு வயது) பெயரிலோ எழுதித்தர மோகன் முன்வந்தால் சமரசத்துக்கு ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்தப் பெண், ‘அதற்கெல்லாம் வழியே இல்லை. இதெல்லாம் வெறும் வாய்வித்தை. என்னை ஏமாற்றியதுபோல் கோர்ட்டையும் மற்ற அனைவரையும் ஏமாற்ற அவர் எந்த நிலைக்கும் போவார்’ என்று திட்டவட்டமாக கூறினார்[13].

இந்திய சட்டங்கள் சொல்வதென்ன?: குற்றவியல் சட்டம் (திருத்தப்பட்டது) 2013ன்படி, எல்லாவிதமான பாலியல் செயலும் குற்றம் என்று தான் என்றுள்ளது. குற்றம் புரிந்தவனுக்கு 20 வருடம் சிறை மற்றும் தண்டத்தொகையுடன் கடுங்காவல் என்றும் உள்ளது, இது ஆயுள் வரை நீட்டிக்கலாம். பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைக் காக்கும் சட்டம், 2012ன் (POCSO Act) பிரிவுகளின் கீழும் தண்டனை கொடுக்கலாம்[14].  இருப்பினும், இதற்கு முன்னர் நடந்த குற்றங்கள், உரிய சட்டப் பிரிவுகளில் விசாரிக்க்கப்பட்டு, தண்டனை அளிக்கப்படும். இத்தகைய வழக்குகளில், பாதிக்கப் பட்ட பெண்ணின் மீது, குற்றம் புரிந்தவன் அழுத்தம் கொண்டு வந்து, சமரசம் செய்து கொள்ள செய்யக் கூடும், அந்நிலயில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது[15]. பிடோபைல் குற்றங்களில் மிகவும் பாரபட்சமாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் நடந்து கொண்டுள்ளன[16]. அதைப் பற்றி ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றன.

வேதபிரகாஷ்

© 26-06-2015

[1] தினகரன், பாலியல் பலதகாரம் செய்தவரை தூக்கில் போடுங்கள்: சமரச உத்தரவை ஏற்க மறுத்த பெண் உயர்நீதிமன்றத்துக்கு  கோரிக்கை, 19.06.15: வெள்ளிக்கிழமை, 2015-06-26.

[2] http://indianexpress.com/article/india/india-others/madras-high-court-judge-gives-bail-to-rape-accused-to-mediate-with-victim/

[3] Ramya Kannan, City Editor, The Hindu, Sudha Ramalingam, Human rights and gender-issues lawyer, and Vasundhara Sirnate, Chief Coordinator of Research at The Hindu Centre for Politics and Public Policy. Dennis S. Jesudasan என்று பெரிய பட்டாளமே கலந்து கொண்டுள்ளது. http://www.thehindu.com/news/national/live-chat-on-madras-high-courts-directive-rapistvictim-mediation/article7353924.ece

[4] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[5] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/

[6] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[7]  நக்கீரன், பாலியல் வன்புணர்ச்சி குற்ற வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்புவது சரியல்ல: .மு.பே, வெள்ளிக்கிழமை, 26, ஜூன் 2015 (22:51 IST)

[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=145779

[9]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=152739

[10] மாலைமலர், கற்பழித்தவனோடு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஐகோர்ட்டால் சமரசம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்ட பெண் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 8:41 PM IST

[11]  தமிள்.ஒன்.இந்தியா, பலாத்கார குற்றவாளியுடனேயே சமரசம்: ஹைகோர்ட் உத்தரவால் மிரட்டப்படும் அபலைப் பெண்!,

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/new-controversy-on-hc-order-giving-bail-rape-convict-row-229714.html

[13] http://www.maalaimalar.com/2015/06/26204137/cuddalore-molestation-victim-s.html

[14] http://timesofindia.indiatimes.com/city/chennai/Mediation-after-rape-No-your-honour-say-jurists/articleshow/47808975.cms

[15]  Supreme Court of India – Shimbhu & Anr vs State Of Haryana on 27 August, 2013; Author: P.Sathasivam; Bench: P Sathasivam, Ranjana Prakash Desai, Ranjan Gogoi http://indiankanoon.org/doc/137841605/

[16] https://atrocitiesonindians.wordpress.com/2013/11/17/protection-of-children-from-sexual-offences-act-2012/