ஆபாசவீடியோஆசிரியை 2022 வழக்கு 2023ல்விசாரணைக்குவருவது, நீதிபதிமுறையாகதீர்ப்பளித்துள்ளது (2)
பிப்ரவரி 2023ல்வழக்குவிசாரணைக்குவருவது: மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ராதிகா, 45. இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் ‘வீடியோ’ வெளியானது[1]. இது அவருடன் தகாத நட்பை தொடர்ந்த வீரமணி, 39, என்பவரால் எடுக்கப்பட்டது[2]. அந்த படங்கள், ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்தனர். வீரமணி, ராதிகா 2022 ஏப்., 1ல் [01-04-2922] கைது செய்யப்பட்டனர். ராதிகாவிடம் இருந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், ‘குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
ஆபாச ‘வீடியோ‘ விவகாரத்தில்ஆசிரியைமீது ‛குண்டாஸ்‘ சரியே: உயர்நீதிமன்றம்உத்தரவுநீதிபதிகள்பிறப்பித்தஉத்தரவு: “வீரமணியைசுதந்திரமாகநடமாடஅனுமதித்தால்மக்கள்மனதில்பீதியைஏற்படுத்தும்; குழந்தைகளுக்குஅச்சுறுத்தலாகஇருக்கும். கைதுஉத்தரவில்எவ்விததவறையும்நாங்கள்காணவில்லை. ராதிகாமனுதகுதிஅடிப்படையில்ஏற்புடையதல்ல. இருமனுக்களும்தள்ளுபடிசெய்யப்படுகின்றன,” இவ்வாறு உத்தரவிட்டனர். ஆக, நீதிபதி உறுதியாகத்தான் தீர்ப்பு அளித்துள்ளார். இருப்பினும், நிர்மலா, காசி, பொள்ளாச்சி முதலிய வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கம் கிருத்துவப் பள்ளி வழக்கும் அமுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, இத்தகைய சீரியசான விசயங்களில் கூட, சட்டம், நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் அதிகாரிகள், சம்பந்தப் பட்டவர்கள், ஏதோ காரணங்களுக்காக பாரபட்சமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. இதனால், சமூகம் மேன்மேலும் சீர்கெட்டுத்தான் போகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவ்வாறு இருப்பதே திகைப்பாக, அதிர்ச்சியாக, கவலையாக இருக்கிறது.
செல்போன்கலாச்சாரத்தில்கற்புபறிபோகும்நிலையும், வியாபாரமும்: இப்பொழுதெல்லாம் செல்போன் எல்லோரிடத்திலும் உள்ளது எனலாம். சினிமாவை அடுத்து, செல்போன் அனைவரது வாழ்க்கையிலும் புகுந்து விட்டது. எனெனில், அதில் சினிமாவே வந்து விட்டது. டிவிசெனல்கள், டெலிசீரியல்களும் சேர்ந்து விட்டது. ஆக, இனி ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட டிவி என்ற நிலை தாண்டி, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் செல்போனை வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள். இதனால், செல்போன், இன்டர்நெட் வியாபாரிகளுக்குத் தான் வியாபாரம் பெருகி வருகிறதே தவிர, உபயோகிப்பவர்களுக்கு தீமை தான் வந்து சேர்கிறது. புதிய மீடியா தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் காதல், செக்ஸ் மற்றும் காதல் ஆகியவை எப்போதும் முக்கியமானவை என்று அவை வியாபாரமயமாக்கப் படுகின்றன..
ஆபாசம், சமூகவலைப்பின்னல்மற்றும்டேட்டிங்தளங்கள்உலகம்முழுவதும்பிரபலமானஇணையதளங்கள்ஆகி, சமூகஊடகங்கள்மூலம்பெருகிவருகின்றன. காதல், காமம், கொக்கோகம் என்று மேற்கு நாடுகளில் புதிய பொருளாதாரங்களை உருவாக்குகிறது – நாம் டிண்டர், கிரைண்டர், கீல், ஹிட்ச் மற்றும் ஓக்குப்பிட் யுகத்தில் இருந்து, மேற்கத்தைய கலாச்சாரம் இளைஞர்களைக் கெடுத்து வருகின்றது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் ஃபேஸ்புக்கின் இலவச அடிப்படை முயற்சியுடன், அது ஒருங்கிணைக்கப்பட்டது. காதல் உட்பட சமூக நடவடிக்கைகளுக்கான ஒரே இடத்தில் அதன் நிலை. உதாரணமாக, மியான்மரில், குடிமக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் எதிர்மறையாகப் புகாரளித்தனர், ஆனால் அவர்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டபோது, பதில் மிகப்பெரியதாக இருந்தது. அதாவது, ராணுவ ஆட்சி நடந்தாலும், பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், இத்தகைய தொழில்கள் நடந்து வருகின்றன. செக்ஸ், போதை மருந்து, ஆயுதங்கள், கள்ளக் கடத்தல், தீவிரவாதம் என்பவை சேர்ந்து தான் செயல்பட்டு வருகின்றன.
இன்டர்நெட் மூலம் சீரழியும் பெண்கள்: மத பாரம்பரியங்களில் ஈடுபாடு கொண்டுள்ள நாடுகளான, ஜோர்டானில் இருந்து இந்தியா வரை உள்ள ஏழை சமூகங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே ஒரு பெண்ணிடம் பேசவே இல்லை, என்பதில்லை. ஏனெனில், இப்பொழுது செல்போன் எல்லோருடைய கைகளிலும் உள்ளது. எதிர் பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ஆன்லைன் அரட்டை தான். அதன் மூலம், இவர்கள் எளிதில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆணாதிக்க சமூகங்களில் உள்ள பெண்கள், அநாமதேயம், அணுவாக்கம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றைத் தேடுவதால், திறந்த சமூகங்களை ஆன்லைனில் எதிர்க்கிறார்கள், இல்லையெனில் இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சமூகங்களில் வருவது கடினம்.
பலதார உறவு முதலியன பெண்மை, குடும்பங்களைக் கெடுக்கின்றன: இப்பொழுது, இந்தியாவில் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் கூட, தாம்பத்தியத்தைத் தாண்டிய உடலுறவு, சேர்ந்து வாழும் முறை, விருப்பத்துடன் செக்ஸ் போன்றவற்றிற்கு சட்டப்படி அனுமதி கொடுத்துள்ள நிலைப்பாடுள்ளதால், பெண்கள் அத்தகைய உடலுறவுகளை வைத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள். அந்நிலையில், விபச்சாரம் என்பதற்கும் எந்த வரையறையும் கொடுக்க முடியாது. பெண்களையும் அவ்வாறு கணிக்க முடியாது. திருமணம், திருமண முறிவு என்று பலமுறை நடக்கும் பொழுதும், பெண்கள் கற்பு பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு ஆணுக்கு மேல் உடலுறவு கொண்ட பிறகு, அது மறக்கப் படுகிறது என்றாகிறது. ஏனெனில், பெண்களும் அவ்விசயத்தில் விருப்பத்துடன் ஈடுபடுகிறார்கள் என்றே ஆகிறது. “கல்யாண மன்னன்” என்பது போல, “கல்யாண ராணி” என்றெல்லாம் கூட ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பணம், சுகமான அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற காரணங்களுக்கு பெண்களே அவ்வாறு தயாராகி விடுகிறார்கள்.
கேட்பாரற்ற நிலையும், புலம்பல்களும்: அந்நியர்களுடன் நட்பு கொள்வது, போலி அன்பு, ஏமாற்றத்தைக் கண்டறிதல் என்பதெல்லாம் சாதாரணமாகி விட்டது. பணம் சம்பாதிக்க செக்ஸ், செக்ஸ் மூலம் வியாபாரம், வியாபாரத்திற்கு ஆள் சேர்ப்பு, அத்தகைய நிறுவனமாக்கப் பட்ட தொழில்கள், அத்தொழில்களில் ஈடுபடும் ரௌடிகள், குற்றவாளிகள், கிரிமினல்கள், அரசியல் சார்பு கொண்டவர்கள், வேலியை மேய்க்கும் பயிர்கள் முதலியவை அதிகமாகியுள்ள நிலையில், அவையெல்லாமே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊழல் என்பது, இதிலும் புரையோடி விட்டதால், கேட்பாரற்ற நிலையும் உருவாகி விட்டது. ஆக ஒழுக்கம், நேர்மை, நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு புலம்புகிறவர்கள் புலம்பிக் கொண்டே இருக்கலாம்.
ஆபாசவீடியோஆசிரியை 2022 வழக்கு 2023ல்விசாரணைக்குவருவது, நீதிபதிமுறையாகதீர்ப்பளித்துள்ளது (1)
கொக்கோகத்தில்சீரழிந்தஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].
குடும்பத்தைக்கெடுத்தபாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.
மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பாலியல்கொக்கோகத்தின்விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.
வீரமணி–ராதிகாஆபாசவீடியோஎடுப்பதில்ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11]. இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].
வீடியோக்களைபோலீஸார்ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20]. அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.
[1] நக்கீரன், மாணவர்களைமிரட்டிஆபாசவீடியோ; ஆசிரியைஃபோனால்அதிர்ந்தகாவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும்ஆபாசபடம்.. டியூசன்வந்தபள்ளிமாணவர்களைகரெக்ட்செய்துஆசிரியைஉல்லாசம்.. வெளியானவீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST
[9] மாலை மலர், மாணவர்களைமயக்கிஉல்லாசம்அனுபவித்தஆசிரியை– வீடியோவைபரவவிட்டகள்ளக்காதலன்கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).
[11] தினத்தந்தி, டியூசனுக்குவந்தமாணவர்களுடன்உல்லாசமாகஇருந்துவீடியோஎடுத்துரசித்தஅரசுஆசிரியை; கள்ளக்காதலன்கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).
[17] தினத்தந்தி, டியூசனுக்குவந்தமாணவர்களுடன்உல்லாசமாகஇருந்துவீடியோஎடுத்துரசித்தஅரசுஆசிரியை; கள்ளக்காதலன்கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).
ஆபாசவீடியோவா, கொக்கோககாணொலியா, வார்த்தையில்நீலப்படம்எடுக்கத்தயாராகும்பெண்ணியப்புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)
ரூ 1500/- வாங்கிக்கொண்டுகொக்கோகபேச்சுப்பேசியபெண்கொடுத்தபுகார்: இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் ஒரு பகீர் புகாரினைக் கொடுத்தார். 1500 ரூபாய் கொடுத்து தன்னை அப்படி பேசச் சொன்னதாகவும்… கமென்ட் செக்ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் பேசியதாகவும் கூறியிருந்த அந்தப் பெண்…, “என்னிடம்சொன்னபடிஅவர்கள்கமென்ட்செக்ஷனைஆஃப்செய்யவில்லை. ஆகையால், நான்கடுமையானவிமர்சனத்துக்குஆளாகியுள்ளேன். நான்பேசியபலவிஷயங்களைகட்செய்துவிட்டுஆபாசமானவார்த்தைகளைமட்டுமேவெளியிட்டுள்ளனர். என்னைப்போலநிறையபெண்களிடம்இப்படிச்செய்துள்ளனர்,” எனப் புகார் தெரிவித்தார். ஆனால், பேசும் போது, அவற்றிற்கு எல்லாம், அர்த்தம் தெரியாமல் பேசினால் என்று சொல்ல முடியாது. அழுத்தம் கொடுத்துப் பேசுதல், நக்கலாக சிரித்துக் கொண்டே பதில் அளிப்பது, முகத்தை ஏதோ வெட்கம் வந்து திருப்பிக் கொள்வது போல நடிப்பது முதலியன, அப்பட்டமாக செய்தவை என்று உறுதியாகின்றன. கற்பழிப்பு காட்சியில், உண்மையாக கற்பழித்தால், பெண் என்ன செய்வாள் போன்றது தான், இத்தகைய முறையற்ற வீடியோக்கள். அப்பெண் பேசியதாக, ஒரு வீடியோவில், அப்பெண் தான் செய்ததை நியாயப் படுத்தும் வகையில் தான் பேசியிருப்பது திகைப்பாக இருக்கிறது. புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெண்கொடுத்தபுகார்மீதுநடவடிக்கைஎடுத்தது: போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, அத்தனை பேர், இத்தகைய கேவலமான வீடியோவைப் பார்க்கின்றனர் என்றால், அவர்களது, வக்கிர மனநிலையினையும் எடுத்துக் காட்டுகிறது, இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பலவேசம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மூன்றுபேர்கைது, சிறையில்அடைப்பு: `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய மூவர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் [ Sections 354(b), 294(b), 509, 506(ii) of IPC and Section 4 of Tamil Nadu Prohibition of Women Harassment Act] வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இத்துடன் செய்திகள் நின்று விடும். பிறகு, என்னவாயிற்று என்று ஊடங்கங்கள் விவரங்களைக் கொடுப்பதில்லை. வாசகர்கர்களும், ஏதோ டிவி-சீரியல், சினிமா, பட்டி மன்றம் பார்த்தது போன்று, மறந்து விடுவார்கள். இதே போன்று, இன்னொரு செய்து வந்தால், ரசித்து அதனை பார்ப்பார்கள்.
போலீஸாரின்நடவடிக்கை, யூ–டியூப்முடக்கப்பட்டது: அவர்களிடமிருந்து எல்லா உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது[1]. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது[2]. இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்[3]. இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்[4]. இதையடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று சென்னை நகர துணை ஆணையர் யுடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார்[5]. அதைவைத்து இப்போது சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளதாக யுடியுப் நிர்வாகம் அறிவித்துள்ளது[6].
கமலஹாசன்யோசித்துப்பார்க்கவேண்டியது: “மன்மதன் அம்பு,னென்ற படதத்தில், இதைவிட கேவலமாக, கொக்கோமாக, ஒரு பாடல் எழுதி, சேர்த்திருப்பதை நினைவு கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் அப்பாட்டில் வெளிப்பட்டன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது. இப்படி பதினொன்று ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன்[7]. இப்பொழுது, 2021 தேர்தலுக்காக, ஏதோ ஒழுக்கமான ஆள் போன்று பிரச்சாரம் செய்து வருவது தமாஷாக இருக்கிறது.
மின்னணுசாதனங்களின்வளர்ச்சி, இத்தகையசீரழுகளைஅதிகமாக்குகிறது: இன்றைக்கு காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்ட மனிதர்களைத் தான், பலரை, பல நேரங்களில், தொழில்களில், வேலைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க் நேரிடுகிறது. பல சமயங்களில், “துஷ்டரைக் கண்டால் தூர விலகு,” போன்ற கொள்கையில், பலர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். 1960-70களில் எப்படி “சரோஜா தேவி“ புத்தகங்கள் எப்படி காம வக்கிர மனங்களுக்குத் தீனி போட்டதோ, அது போல, 2000களில் “புளு பிலிம்” போன்றவை அத்தகைய கள்ளத்தனங்களுக்கு உதவின. வீடியோ கேசட், சிடி-டிவிடி-பென் டிரைவ் என்று வந்து விட்டப் பிறகு, அவற்றின் மூலம் விற்றல்-வாங்கல் பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. டெஸ்க்-டாப் என்று ஆரம்பித்து, லாப்-டாப் என்று மாறிய போதும், அவ்வாறே, மனங்களை உடல்களை பாதித்தன. இப்பொழுது, செல்போன், கைபேசி, என்று பலவித வசதிகளுடன் வரும் நிலையில், இவையெல்லாம், யார் வேண்டுமானாலும், பார்க்கலாம், சுவைக்கலாம் என்ற நிலை வந்து விட்டது.
இன்டெர்நெட்மாயவலைகோடிகள்புரளும்வியாமாரமாகியநிலை: இன்டர்நெட், வலைதளம், சர்வர், மாயவலை, மின்னாக்கம் செய்யப் பட்ட விவரங்கள்-தகவல்கள் சேமிப்பு, பரப்பு என்றெல்லாம் வியாபாரம் தொழிற்நுட்ப ரீதிகளில் விரிந்த போது, சம்பந்தப் பட்டவர்களுக்கு கோடிகளில் வருவாய் வர ஆரம்பித்தது. அவை, தொடர்ந்து நுகரும் நிலைகளில், நிரந்த வருமானமாகி, பெருக ஆரம்பித்தது. இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் போல, இன்டெர்நெட்-மாயவலை இடம் விற்பனை, டொமைன் பெயருக்கு காசு என்றெல்லாம் தொழில்கள் விஸ்தாரமாகியது. செல்போன் மூலம், தனிநபர், தனியாக, தன்னிச்சைக்கேற்றவாறு, நல்லதோ-கெட்டதோ, எந்த விசயங்களையும் தேடலாம், அணுகலாம், பெறலாம் என்ற போது, அத்தகைய மனிதர்களும் அதிகமாக ஆரம்பித்தனர்.
[1] நியூஸ்.18.தமிழ், கைதானயூடியூப்சேனல்நபர்களின்செல்பேசியில், வெளியிடப்படாதஏராளமானபெண்களின்வீடியோக்கள்கண்டுபிடிப்பு, NEWS18 TAMIL, LAST UPDATED: JANUARY 12, 2021, 1:21 PM IST.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,பெண்ணிடம்ஆபாசபேட்டி.. யூடியூப்சேனலுக்குசென்னைமாநகரபோலீஸ்ஆப்பு.., Ezhilarasan Babu, Chennai, First Published Jan 15, 2021, 10:57 AM IST
யூ–டியூப்மோகம்கொக்கோகத்தைநெருங்கியவிதம்: இணையதளங்களில் புற்றீசல்கள் போல இப்போது யூடியூப் சேனல்கள் பெருகிவிட்டன. இந்த சேனல்களில் பொதுமக்களுக்கு பயன்படும் நல்ல விசயங்களும் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகிறது[1]. அதிகமான பேர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை நடத்துவோருக்கு அதிக அளவில் பணம் கொட்டும்[2]. இதனால்தான் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள். “மக்களிடம் கருத்து கேட்கிறோம்,” என்ற பெயரில் ஆபாச அத்துமீறலில் ஈடுபடும் சில யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது `சென்னை டாக்ஸ்’ யூ-டியூப் சேனல் விவகாரம்[3]. தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்ததாக ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது[4].
ஆபாசபேச்சுவீடியோ: அரசியல் போக்குகள், சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் என பொதுவெளியில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், எளிதில் அதிக வியூஸ் பெறவேண்டும் என்ற வெறியில் சில யூடியூப் சேனல்கள் வக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காமத்தையும், அந்தரங்க விஷயங்களையும் மையப்படுத்தி தவறான உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டு, அதற்கு மக்கள் சொல்லும் கருத்துகளில் எந்த இடத்தில் ஆபாசமான சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்கின்றனவோ அந்த இடத்தை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிடுகின்றன. அதன் அடுத்தகட்டமாக பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கும் கொடுமையும் நடக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இத்தகைய பேச்சுகளை ஆதரிக்கும் விதத்தில் தான், இன்றும் ஊடகங்களில் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பெண் பேசிய விதம் தவறுதான், ஆனால், ஆண்கள் எப்படி தனக்கு மூன்று-நான்கு மனைவியர் உள்ளனர், பலருடன் உடலுறவு வைத்துக் கொண்டேன் என்றேல்லாம் பேசுகிறானோ, அதேபோல, பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. இப்படியும், ஒரு ஆங்கில செனலில் பேட்டி ஒளிபரப்பப் பட்டது.
“2020 எப்படிபோனது?” போர்வையில்ஆபாசகேள்வி–பதில்நிகழ்ச்சி: சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் “2020 எப்படி போனது?” என்ற டாபிக்கில் கருத்து கேட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தனர் `சென்னை டாக்ஸ்’ குழுவினர்[5]. அந்த வீடியோவில் ஒரு பெண் மிகவும் ஆபாசமாகப் பேசியிருந்ததால் பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை ஏகத்துக்கும் தாக்கி கமென்ட் செய்தனர்[6]. கேட்ட கேள்விகள், கொடுத்த பதில்கள், வார்த்தை விபச்சாரம் போலிருந்தது. அம்மண், இம்மண் என்றெல்லாம் அரற்றினாலும், பெண்மை போகும் பாதையை மாற்ற முடியவில்லை, வார்த்தை விபச்சாரமும் பெருகுகிறது! கவர்ச்சி அரசியலில் மூழ்கி இந்துத்துவம் மயங்கும் போது, வார்த்தையில் நீலப்படம் எடுக்கும் தருணமும் வந்து சேர்கிறது பெண்மை மறக்கிறது! வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள், உலா வரும் வேளையில் எல்லாமே பறக்கின்றன. நிலைமை மோசமாகி விட்டது என்றறிந்த, அப்பெண் உஷாராகி, புகார் கொடுத்தாள்.
யார்அந்தபெண்? வீடியூவில்பேசியபெண்: புகார் அளித்த ஜோதி கிரிதர்சிங் என்கிற அந்த பெண், 21 மணி நேரம் 2900 நபர்களுக்கு மேல் மெஹந்தி போட்டு கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்[7]. சிறந்த தொழில் முனைவோராக பெயர் எடுத்தவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் பெஸ்ட் டிரெய்னர் என கட்டுரை வெளியாகியிருக்கிறது[8]. வடைபோச்சு போன்ற ஷோக்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பு செய்திருக்கிறார். நடிப்புத் துறையிலும் இருந்து வந்துள்ளார். அப்பெண் கூறியதன்படி, “அந்த பேட்டி வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக பேசிய, 1500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ. அந்த சேனல்காரர்கள் 2020 உங்களை என்னவெல்லாம் செஞ்சது? 2021 எப்படி போகப் போகிறது என்பதை பற்றி கேட்பதாக முதலில் கூறினார்கள். சென்னை டாக்ஸ் சேனலில் மட்டும் தான் போடுவோம் என்று கூறினார்கள். இதற்கு முன்பாக பல பெண்களை இப்படி பணம் கொடுத்து பேச வைத்ததாகவும் கூறி அவர்களின் பட்டியலை கொடுத்தார்கள். அந்த பெண்களும் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டதாக தங்கள் மனக்குமுறலை என்னிடம் பகிர்ந்தார்கள். இதை வெளிக்கொண்டு வரவே, நான் இதை செய்தேன். அந்த பணமும் அவர்களாக கொடுத்ததுதான். ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசலாம் என்கிற பேச்சு சுதந்திரத்தை தான் வெளிப்படுத்தினேன். இந்த சேனலை பார்த்துவிட்டு, இதில் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என கூறியும் அவர்கள் பகிர்ந்துவிட்டார்கள்.” என தெரிவித்துள்ளார்.
தானேபுகார்கொடுத்ததுஏன்?: இந்த புகாரையும் அப்பெண்ணே கொடுத்துள்ளார். அதற்கு காரணமாக அவரே கூறியதாவது:- “முதலில்அந்தசேனல்தரப்பில்கமெண்ட்செக்ஷனைஆஃப்செய்துவைத்திருப்பதாகதான்உறுதிஅளித்தார்கள். ஆனால்அவர்கள்அவ்வாறுசெய்யவில்லை. இந்தவீடியோவைரலான 15 நிமிடங்களில்கமெண்ட்செக்ஷனில்மோசமானகமெண்டுகள்குவிந்தன. என்னால்தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவர்களிடம்கேட்டபோதுசேனலின்தலைமைஅதைகேட்டுக்கொள்ளவில்லைஎனகூறினார்கள். இதனால்என்பெயரைமீட்டெடுக்கஅந்தசேனலைச்சேர்ந்தவரிடம்கேட்டேன். அப்போதுஎன்பெயருடன்சேர்த்துஇந்தவீடியோவைவைரல்செய்தார்கள்.ஆனால்அதுதான்இன்னும்மனஉளைச்சலாக்கியது. உண்மையில்என்னடாஇப்படிலாம்பேசவைக்குறீங்கஎன்றுதான்அந்தவீடியோவில்நான்பேசியிருக்கிறேன். இவைநடந்தஅடுத்தஒருமணிநேரத்திலேயேஇந்தவிவகாரம்பற்றிநான்போலீஸ்ஸ்டேஷனில்தெரிவித்தேன். இந்தபுகாரைநானாகவேகொடுத்தேன். காவல்துறைஇந்தவீடியோவைநீக்குவதாகதெரிவித்துள்ளார்கள். இப்படிஎதிர்மறையாகபேசிநான்பிரபலமாகிவிட்டேன். இதைவைத்துஇதுபோன்றவிஷயங்களுக்குமுற்றுப்புள்ளிவைக்கஎன்பங்களிப்பைதரநினைக்கிறேன்.” என கூறியுள்ளார். இறுதியாக, “நான் யாருக்கும் இதை சொல்லி புரியவைக்க முடியாது. என் பதில்களில் யாரும் திருப்தி அடையவும் வாய்ப்பில்லை. நான் யாருக்கும் தெரியாத எந்த விஷயமும் பேசவில்லை. அத்துடன் இந்த பேட்டியில் நான் பேசியவற்றை இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்.” என அந்த பேட்டியில் ஜோதி தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகளும், சமுக சீர்பழிப்பாளர்களும் ஒன்றே: “நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்,” என்ற நிலையில் அந்த பெண்மணி இருக்கும் போது, ரூ.1,500/- அத்தகைய கொக்கோக பதில்களைச் சொல்லி, பெண்ணுரிமை பேசி, பிறகு ஜகா வாகியிருப்பது, தமாஷாக இருக்கிறது. ஊழல் அரசியல்வாத்களுக்கும், இத்தகைய, கொக்கோக பெண்ணியப் போராளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காசுக்கு இவர்களிடம் பஞ்சமில்லை என்றால், அதையும் மீறி ஆட்டிப் படைக்கும் காரணிதான், இவர்களை சீரழிக்கும் வேலைகளில் ஈடுபட செய்கின்றன. சமூக பிரக்னை இல்லாமல், யாரும், சமூக பிரச்சினைகள் அணுக முடியாது. ஆனால், போலித் தனமாக, ஆசியல்வாதிகள் செய்வார்கள். இதுப்போலத்தான் இக்கூட்டமும்.
கொரோனா–கோவிட்-19 ஊரடங்குநேரத்தில்பாலியல்தொழிலாளர்களின்நிலைமை, அவர்கள்படும்பாடு! தீர்வு என்ன? [2]
பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனாவைரஸ்தாக்கினால்என்னஆகும்: இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சிறப்பு பேராசிரியருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது[1]: “பாலியல்தொழிலாளர்களைப்பொறுத்தமட்டில்அவர்களுக்குஏற்கனவேநோய்கள்இருந்தால், கொரோனாவைரஸ்தொற்றுநோயும்தாக்குகிறபோதுநிலைமைமோசமாகிவிடும். கொரோனாவைரஸ்தாக்குகிறபோது 80 சதவீதம்பேருக்குலேசானஅறிகுறிகள்தோன்றும். அவர்கள்உடலில்உள்ளஆன்டிபாடி (நோய்எதிர்ப்புபொருள்), நோயைஎதிர்க்கத்தொடங்கிவிடும்.அதேநேரத்தில்ஏற்கனவேபால்வினைநோய்களோ, எய்ட்ஸ்நோயோ, காசநோயோஇருந்திருந்தால், அவர்களைகொரோனாவைரஸ்தாக்குகிறபோதுஅதுஆபத்தானது. கடுமையானஅறிகுறிகள்தோன்றும். மரணமும்நிகழும்.கொரோனாவைரஸ்ஏற்கனவேமேற்குவங்காளத்தில்கொல்கத்தாசோனாகச்சிபகுதிஉள்ளிட்டபல்வேறுஇடங்களில்உள்ள 5 லட்சம்பாலியல்தொழிலாளர்களின்வாழ்வாதாரத்தைபாதித்துள்ளது. மேற்குவங்காளத்தில்கொரோனாவைரஸ்பரவத்தொடங்கியதுமேபெண்பாலியல்தொழிலாளர்களைத்தேடிவாடிக்கையாளர்கள்வருவதுநின்றுபோய்விட்டது.
பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனாவைரஸ்தாக்கினால்– பாதுகாப்பு இல்லை: டாக்டர் நரேஷ் புரோகித் தொடர்ந்து கூறியதாவது, “தங்களதுஅன்றாடவாழ்க்கையைநடத்துவதற்கேஅவர்கள்சிரமப்படுகிறநிலைவந்துள்ளது.சோனாகச்சிபகுதியில்மட்டுமேதினமும் 15 ஆயிரம்முதல் 20 ஆயிரம்வாடிக்கையாளர்கள்வருவார்கள். அதுஇப்போதுநின்றுபோய்இருக்கிறது.மகாராஷ்டிராமாநிலத்தில்உள்ளபாலியல்தொழிலாளர்களில்பாதிபேர்விபசாரதொழிலையேநம்பிஉள்ளனர். காப்பீடுகூடசெய்துகொள்வதில்லை. தமிழ்நாட்டில் 5-ல் 2 பேரும், கர்நாடகத்தில் 5-ல்ஒருவரும்இந்தநிலையில்தான்உள்ளனர்.தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகமாநிலங்களில் 31 சதவீதபாலியல்தொழிலாளர்கள்நிதிபாதுகாப்பற்றநிலையில்இருக்கிறார்கள். அவர்கள்வறுமையில்உள்ளனர். நோயுற்றால்சிகிச்சைகூடபெறுவதில்லை.ஊரடங்கைஇப்போதுஅரசுமுடிவுக்குகொண்டுவந்தாலும், பாலியல்தொழிலாளர்கள்தங்கள்தொழிலைஉடனேதொடங்கிவிடமுடியாது. குறைந்தபட்சம் 1 மாதம்காத்திருக்கவேண்டியதுவரும். கொரோனாபரவுவதுநின்றுவிட்டதுஎன்றநிலைவரவேண்டும். அவர்கள்வாழ்வாதாரத்துக்குஅரசுநிதிஉதவிவழங்கவேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[2].
பாலியல்தொழில்விடுதிகளைமூடுவதால், கொரோனாதொற்றால்எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீதஇறப்புகளின்எண்ணிக்கைகுறையகூடும்: அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்[3]. ஊரடங்கிற்கு பின் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை விடுதிகள் மூடப்பட்டிருந்தால், இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்[4]. மேலும் ஆய்வு முடிவுகளை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்[5]. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாலியல் தொழில் விடுதிகளை தொடர்ந்து மூடியிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்[6]. இதனால் 45 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் 72 சதவீதம் குறையும் மற்றும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைய 17 நாட்கள் வரை தாமதம் ஆகும். இந்த தாமதம் அரசுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை காக்க கூடுதல் அவகாசம் அளிக்குமெனவும் கூறியுள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல் 60 நாட்களில் விடுதிகள் மூடப்பட்டிருந்தால், கொரோனா உயிரிழப்பு 63 சதவீதம் அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகிலஇதியபாலியல்தொழிலாளர்கூட்டமைப்பு[7]: அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 16 மாநிலங்களில் உள்ளனர். தலைமை செயலகம் தில்ல்யில் உள்ளது[8]. AINSW பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், HIV தடுப்பு, சமூக பாதுகாப்பு, குடும்ப மேன்பாடு, குழந்தைகள் படிப்பு என்று பலவிதங்களில் உதவி வருகின்றது. தங்களது தொழிலில் அவர்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், சமூக மறுப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மீண்டு, அவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டும் போன்றவற்றிற்கு பயிற்சி, மனநல ஆலோசனை, மருத்துவ வசதிகள் முதலியனக் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவில் அதர்மவழி பெண்களை ஈடுபடுத்துதல் தடுப்புச் சட்டம் [The Immoral Traffic (Prevention) Act, 1956 -“ITPA”] இவர்களின் தொழிலைக் கட்டுப் படுத்தி வருகின்றது. வேறு வழி ./ வேலை இல்லை என்ற பட்சத்தில் தான் சூழ்நிலை காரணங்களுக்காக, அவர்கள் இத்தொழிலில் தள்ளப் பட்டுள்ளார்கள்.அப்படி பார்த்தால், இந்திய சமூகமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டலாம். அவர்கள் இந்துக்கள் எனும் போது, மற்ற இந்துக்களும் பொறுப்பாகிறார்கள். அந்நிலையில் அவர்களும் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு, இந்துமதத்தை வைத்து பல கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் அரசியல், வியாபாரம் செய்து வருகின்றன. ஆக, அவவை இதை எதிர்கொள்ளாமல் தத்துவம் பேசினால், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை.
முடிவுரை: இப்பிரச்சினையை முறையாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
ஒவ்வொரு இந்துவும் வெட்கப் படவேண்டிய விசயம் என்னவென்றால், இந்தியாவில் 50,00,000 முதல் ஒரு கோடி பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
இவர்கள் எல்லோருமே அகில இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு என்றதில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்!
இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு – All India Network of Sex Workers (AINSW) இருப்பது நிதர்சனம்!
இப்பொழுதைய கொரோனா நோய், தொற்று, மற்றும் ஊரடங்கு விவகாரங்களால், அவர்களது தொழில் பாதித்துள்ளது.
சம்பளம் இல்லாததால், சாப்பாடிற்கே வழியில்லாத நிலையில், வாடும் இவர்களில் 60% தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
குழந்தைகளுடன் இருக்கும் இவர்களில், சிலர் இரண்டு மாதமாக, சரியான உணவு உண்ணாமல் தவிக்கின்றனர்.
ஆக, பெண்மை, பெண்ணியம், பெண்ணியத் தூய்மை, கற்பு…இவற்றைப் பற்றியெல்லாம் இந்துத்துவ வாதிகள் ஏன் அலசுவதில்லை?
பூர்ணகும்பம், பிரசாதம் போன்றவற்றிற்கு அளந்து தள்ளுகிறார்களே, அரை கோடி பாரதிய நாரிமணிகளின் நிலை தெரியவில்லையா?
“பாரத் மாதா கி ஜே” கோஷம் போடுபவர்கள், இத்தகைய நிதர்சனங்களுக்கு, உண்மைகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
கோடிகணக்கில் நிவாரணம், உதவி பற்றி பிரமாதமாக வாத-விவாதம் புரிபவர்கள், இவர்களின் குழந்தைகள் கதி பற்றி யோசித்தது உண்டா?
ஊரடங்குநேரத்தில்பாலியல்தொழிலாளர்களின்நிலைமை: ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், டில்லியில் இருந்து, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர்[1]. அதாவது மற்ற தொழிலாளர்கள் போன்று, இவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். தில்லி, மும்பை, கொல்கொத்தா போன்ற நகரங்களில் அடிகடி மக்கள் வியாபாரம் போன்ற விசயங்களுக்காக வந்து செல்வதால், “செக்ஸ்” என்பது அங்கெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கிறது. முக்கியமாக, கிரிக்கெட், அனைத்துலக மாநாட்டு கூடுதல், விழாக்கள் எனும் போது, லட்சக் கணக்கில் கூட்டம் கூடும் போது, அவர்கள், “செக்ஸ்” தேடிச் செல்வது சாதாரணமான விசயமாகிறது. குறிப்பாக அயல்நாட்டு பெண்களே வருகிறார்கள் என்று செய்திகளில் படித்திருக்கலாம். இப்பொழுது, கொரோனாவினால், பீதி கிளம்பியுள்ள நிலையில், பாலியல் தொழிலாளர்களிடம் சென்றால், நோய் வராது என்ற கேரன்டி இல்லை என்ற பட்சத்தில். அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலுக்கு மத்தியில் டெல்லியின் பாலியல் தொழிலாளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்[2]. இது அவர்களில் பலரை பட்டினியின் விளிம்பிற்கு தள்ளியது.
கொடியநோய்க்கிருமியைக்குறைக்கும்என்றஅச்சம்வாடிக்கையாளர்களைவிலக்கிவைத்திருக்கிறது: கொடிய நோய்க்கிருமியைக் குறைக்கும் என்ற அச்சம் வாடிக்கையாளர்களை விலக்கி வைத்திருக்கிறது, இது நகரத்தில் பாலியல் தொழிலாளர்கள் மீது பலவீனமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. ஊரடங்கு அமலில் உள்ளதால், டில்லியில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது[4]. குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்க முடியவில்லை என்ற நிலை வந்துள்ளது. இதனால், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் துவங்கி உள்ளனர்[5]. இதுகுறித்து, அனைத்து இந்திய பாலியல் தொழிலாளர்கள் அமைப்பின் / வலையமைப்பின் (AINSW) தலைவர் குசும் கூறியதாவது[6]: டில்லியில் இருந்து, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்[7]. அதாவது, டில்லியில் மொத்தமுள்ள, 5,000 பாலியல் தொழிலாளர்களில், 3,000 பேர் சென்றுவிட்டனர்[8]. உணவு, மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால், அவர்கள் இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சமூக விலக்கல், இங்கு அதிகமாகவே வேலைசெய்துள்ளது.
எச்.ஐ.வி.,க்குஉரியசிகிச்சைஇல்லை: பாலியல் தொழிலாளர் பலருக்கு, எச்.ஐ.வி., தொற்று போன்ற நோய்கள் உள்ளன. அந்நிலையில், கொரோனாவும் சேர்ந்தால், பெரிய கொரோன பாதிப்பு ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த, நாங்கள் இதுவரை எடுத்துள்ள முயற்சிகள், இனி பயன் அளிக்காது. சொந்த ஊரில், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்காது. அவர்களின் உடல்நலம் குறித்த கவலை அதிகமாக உள்ளது. பாலியல் தொழிலாளர்களின் இடம்பெயர்வு, டில்லியில் மட்டுமல்லாமல், பல நகரங்களிலும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறியதாவது: டில்லியில் தற்போது உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள், மருந்துகள், முக கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கி வருகிறோம். அவர்களுக்கு, எய்ட்ஸ் சிகிச்சை குறித்த அடிப்படை தகவல்களையும் அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாடிக்கையாளர்வரபயப்படுவதால், சேமிப்புஎல்லாம்தீர்ந்துவிட்டது, வரும்படிபூஜ்யம்ஆகிவிட்டது: பாலியல் தொழிலாளி ஷாலினி கூறுகையில்… டெல்லியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்திற்கு திரும்பினார். “நான் 18 வயதில்உ.பி–ல்உள்ளஎனதுதவறானவீட்டிலிருந்துஓடிவிட்டேன். நான்ஒருநடிகையாகஇருக்கவிரும்பினேன், ஆனால்என்னைஆதரிப்பதற்காகபாலியல்வர்த்தகத்தில்இறங்கினேன்” என்று 26 வயதானஷாலினி PTI-யிடம்தெரிவித்தார். “இந்தவியாபாரத்தில் (பாலியல்வர்த்தகம்) இறங்கியபிறகு, குறைந்தபட்சம்நான்உணவுக்காகபோராடவில்லை, நான்தெருக்களில்இல்லை. ஆனால்கொரோனாவைரஸ்வெடித்ததுமற்றும்பூட்டப்பட்டதிலிருந்து, எனக்குபூஜ்ஜியவாடிக்கையாளர்கள்உள்ளனர், பணம்வறண்டுபோகிறது” என்று அவர் கூறினார். இது இந்திய பெண்களின் நிலையின்சியும் எடுத்துக் காட்டுகிறது. ஏழ்மை, குடும்ப சூழ்நிலை, உறவினர்களின் சதாய்ப்புகள் முதலியனவும் காரணமாகின்றன.
கொரோனாவைரஸ்தொற்றுநோயைக்கருத்தில்கொண்டுதற்போது 1.3 பில்லியன்மக்கள்வீட்டிலேயேஇருக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது: AINSW-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறுகையில்[9]…. GP சாலை முற்றிலுமாக மூடப்பட்டு அதன் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். “உலர் ரேஷன், மருந்துகள், முகமூடிகள் மற்றும் சானிடிசர் ஆகியவற்றை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். HIV சிகிச்சை குறித்த அடிப்படை தகவல்களையும் அவர்களுக்கு வழங்கினோம்,” என்று அவர் கூறினார். ஹோலி சமயத்தில் பாலியல் தொழிலாளர்கள் பலர் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர், ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு திரும்பவில்லை என்று குமார் கூறினார்[10]. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்தியா தற்போது 1.3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாடு தழுவிய பூட்டுதல் ஆரம்பத்தில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மே 17 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வைரஸ் இதுவரை 2,872 உயிர்களைக் கொன்றது மற்றும் நாட்டில் 90,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது.
நமதுநாட்டில்விபசாரம்தடைசெய்யப்பட்டுள்ளது:. ஆனாலும், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல மாநகரங்களில் குறுகிய பாதைகளில், சந்துகளில் சட்ட விரோதமாக விபசாரம் நடக்கிறது. இந்தியாவில் வணிக ரீதியிலான விபசாரத்தில் ஏறத்தாழ ஒரு கோடி பெண் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 1.6 சதவீதத்தில் பால்வினை நோய்கள், எய்ட்ஸ், காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரம், 2017 நிலவரம் ஆகும். இதை 2018-ம் ஆண்டு ஒரு ஆய்வின்போது ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது. இப்போது நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாலியல் தொழிலாளர்கள் துன்பத்தில் வாடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர்களின் அடிப்படை தேவைகளை செய்து தருமாறு மாநில அரசுகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. ஆக, உள்ளுக்குள் இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, வெளியில் வேறு மாதிரி வேடம் போடுவதில் எந்ட்தவித பலனும் இல்லை.
[5] The Hindu, Lockdown: Over 60% of sex workers in Delhi return to their home states, NEW DELHI, MAY 17, 2020 13:34 IST, UPDATED: MAY 17, 2020 13:34 IST
பின்னணியில்மிகப்பெரியகும்பல்செயல்படுவதாகவும்பாதிக்கப்பட்டபெண்குற்றசாட்டு: கொரோனா படுத்தும் பாடு எல்லோரையும் கவலையில், பீதியில், பொருளாதார பிரச்சினைகளில் மூழ்கியிருக்கும் நேரத்தில், இந்த காமுகன் காசியின் செய்தி இடை-இடையே வந்து திகைக்க வைக்கிறது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட இருவர் அளித்த புகாரின் பெயரில் மூன்று வழக்குகள் பதிவு செய்த போலீசார், காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று ஆரம்பித்த விவகாரம் பெரிதாகி வருகிறது. அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் தாக்கல் செய்த மனு, நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், காசியைமூன்று நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனிடையே, மோசடி இளைஞர் காசி மீது, மேலும் ஒரு பெண் சமூக வலைதளத்தில் புகார் கூறியுள்ளார். காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுள் தானும் ஒருத்தி எனவும், காசி தனி ஆளில்லை, அவன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்[1]. காசிக்கு உறுதுணையாக இருந்த அந்த கும்பலையும் காவல்துறை விட்டுவிடக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்[2].
பலபுகார்கள்வந்தும் 10 ஆண்டுகளாகசிக்காதகாசிதற்போதுசிக்கியதுஎப்படி…?[3]: விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உதவியிருக்கிறது. 50, 100 இப்பொழுது 200 ஆகி விட்டது போலும். சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை. அதாவது 2010லேயே வேலையை ஆரம்பித்து விட்டான்! பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த காசி, மறுபக்கம் அரசியல் அதிகாரத்தின் போதையில் மூழ்கியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் புகாரளித்தபோது, உடனே காசியை போலீசார் கைது செய்யவில்லை. சென்னையில் கொடுக்கப்பட்ட புகார், கன்னியகுமரிக்கு மாற்றி அவரை கைது செய்ய கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆனது அதிலும், சென்னை பெண் மருத்துவர் கடைசி நேரத்தில் புகாரை வாபஸ் பெறச்சொல்லி பல தரப்புகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அவரும் புகாரை வாபஸ் பெறலாம் என நினைத்தபோது, காசியால் ஏமாற்றப்பட்ட பெங்களூரு பெண் மருத்துவரிடம் பேசி மனஉறுதி அளித்தாகவும் கூறப்படுகிறது[4]. சின்மயியின் புகாரும் கவனிக்கத் தக்கது. காசியுடன் தொடர்பில் இருந்த 20 பேரின் பட்டியலையும் போலீசார் தயாரித்துள்ளனர்.
காமுகன்காசிகாவிவேட்டியுடன்அலைவதேன்?: காசி நீதிமன்றத்துக்கு வந்த போது காவி வேட்டி மற்று நீல நிற சட்டை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தான். அவனை புகைப்படம் எடுத்த போது எந்த பதட்டமும் இன்றி போட்டோகிராபரை பார்த்து காதல் சின்னத்தை காசி காட்டியுள்ளான். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பெரும் குற்றத்தை செய்துவிட்டு முகத்தை கூட மூடாமல் பயமின்றி காதல் சின்னத்தை சிரித்தபடி போஸ் கொடுத்த காசியை இணையதள பயன்பாட்டார்கள் திட்டி வருகின்றனர். முன்னர் கோயம்புத்தூர் தீவிரவாதிகள் பல உயிர்களைக் கொன்று, நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, அதே தோரணையில் இருந்தத்தை கவனிக்கலாம், அதாவது, மாமெரும் குற்றம் செய்த பிறகும், இவர்கள் ஏதோ சாதித்து விட்டதைப் போல, “சிரிப்பது-கையை ஆட்டுவது” – இவ்வாறு நடந்து கொள்வதை கவனிக்கலாம், திட்டமிட்டே அவர்கள் மானுடத்தை சீரழித்து வருகின்றனர், மனிதர்களைக் கொல்கின்றனர். முன்னர் கிருத்துவர், ஏன் துலுக்கர் கூட காவி உடை அணிந்டு இந்தியர்களை ஏமாற்றினர், இப்பொழுதும் ஏமாற்றி வருகின்றனர். இந்த குரூரக் குற்றவாளிகளும் அதையே செய்கிறார்கள்.
14-05-2020 – நாகர்கோவில்வழக்கறிஞர்சங்கம்இந்தகாமுகனுக்குஆஜராகமாட்டார்கள்– தீர்மானம்: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ்[5], ”நாகர்கோவிலைச்சேர்ந்தகாசிஎன்பவர்மீதுபெண்களைஏமாற்றுதல், ஆபாசபடம்எடுத்துஇணையத்தில்வெளியிடுதல், பெண்களைமிரட்டிபணம்பறித்தல்போன்றபல்வேறுகுற்றச்சாட்டுக்களுக்காககாவல்துறைவழக்குப்பதிவுசெய்துமேற்படிவழக்குகள்நாகர்கோவில்நீதிமன்றத்தில்நடந்துவருகிறது. காசியின்செயல்கள்மனிதகுலத்திற்கேஎதிராகஇருப்பதால்அவர்மீதுபதியப்பட்டுள்ளவழக்குகளில்நாகர்கோவில்வழக்கறிஞர்கள்சங்கஉறுப்பினர்கள்யாரும்ஆஜராகமாட்டார்கள்எனஎங்களதுசங்கத்தின்செயற்குழுகூட்டத்தில்முடிவுஎடுத்துள்ளோம். இதன்அடிப்படையில்கன்னியாகுமரிமாவட்டத்தில்உள்ளஎந்தஒருவழக்கறிஞரும்காசிக்குஆஜராகமாட்டர்கள்எனதெரிவித்துக்கொள்கிறேன்,” என கூறியுள்ளார்[6]. இது வரை, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது[7]. அப்படியென்றால், அவர் தொடர்ந்து வாதாடுவாரா அல்லது பாதியில் விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.
விஐபிக்கள், அரசியல்வாதிகள்இவனிடம் பலன் பெற்றனர் என்றால் நிலைமை என்ன?: இதனிடையே, விஐபிக்கள், சிலரிடம் காசி நெருங்கி பழகி உள்ளார்.. அதில் சில கட்சி பிரமுகர்களும் அடக்கம் என்கிறார்கள்.. சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த விஐபிகளுக்கு ஹோட்டல்கள், ரிசார்ட்களும் உள்ளனவாம்.. நாகர்கோயிலில் இருந்து காரில் பெண்களை காசி இங்குதான் அழைத்து வருவாராம்[8].. இந்த ரிசார்ட், ஹோட்டல்களில் தங்க வைத்து மிரட்டிதான் ஆபாச படங்களையும் எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்[9]. ஒரு திரைப்பட நடிகரின் மகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் முதலியோரும், காசியால் சீரழிக்கப் பட்டப் பெண்களில் அடங்குவர் என்று தெரிகிறது[10]. பாண்டிச்சேரியில் ஒரு ரிசார்ட்டிலும் காசி தனது வேலைகளை செய்துள்ளான் என்றும், அங்கு விஐபிக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மகிழ்விக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும், போலீஸார் கண்டுபிடித்துள்ளது தெரிகிறது[11].
செய்ய வேண்டியது என்ன?: கிருத்துவ பிஷப், பாஸ்டர், பாதிரி செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், முகமதியரின் அமுக்கி வாசிக்கும் அதைவிட மோசமான பயங்கரமான செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், …..நிர்மலா தேவி, பொள்ளாச்சி என்று விரிந்து, இப்பொழுது சுஜியில் வந்துள்ளது. இவையெல்லாமே, சமூகத்தை சீரழித்த மோசமான கயவர் கூட்டம் தான். இவர்களைத்தான் முன்னர் அரச்சர், ராக்ஷதர் என்றனர். அவர்களைக் கொல்ல, எப்படி கடவுள் அவதாரம் எடுத்தாரோ, அதேபோல, ஒரு அவதாரம் வந்து கொல்ல வேண்டும். இல்லையென்றால், சட்டங்களில் ஓட்டைகளை வைத்துத் தப்பித்துக் கொள்வர். ஆனால் பாதிக்கப் பட்ட பெண்களின் கதி அதோகதிதான். அவர்களின் கற்பை மீட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே, உடனடியாக, நடவடிக்கை எடுத்து, மரண தண்டனை கொடுத்தால் தான், எச்சரிக்கையாக இருக்கும், இனி, இது மாதிரியான குற்றங்கள் நடக்காமல் இருக்கும். கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்ற நிலையில், இவ்வழக்கை சீக்கிரம் நடத்தில், மரண தண்டனை கொடுத்தாலும், மக்கள் மகிழ்சி அடைவர்.
[10] It is said that the womaniser used to fell girls right from his school days and that the daughter of a film actor and police inspector’s daughter are also his victims.
India Glitz, Shocking! Actor’s daughter affected by serial rapist Nagercoil Kasi, Tuesday, May 5, 2020.
[11] The cops have also said to have unearthed Kasi’s resort in Pondicherry where he is suspected to have entertained VIPS and politicians as well. Sources add that many more shocking skeletons will be out in this serial rapist case.
70-100 பெண்களை சீரழித்த காசிப் பிரச்சினை அரசியலாக்கப் படுகிறதா, கொரோனாவில் அமுக்கப் படுகிறதா? [2]
இளம்பெண்டாக்டரைகாதலித்துஆசைதீரஉல்லாசம்… ஆபாசவீடியோக்களைவெளியிட்டுபுண்ணியம்தேடியகாசி..! 70 முதல் 100 பெண்கள்சீரழிந்தனர்![1]: இதன் முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்[2]. காசியில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக, ஒரு பெண் டாக்டர் பிப்ரவர் 24, 2019 அன்று புகார் கொடுத்தார் என்றுள்ளது[3]. மாட்டிக் கொண்ட காசியின் சகோதரனை, அதிமுக பிரமுகர் ஒருவர் அடித்ததால், இப்பிரச்சினை அரசியலாக்கப் பட்டது. இதற்குள், அவர் கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். ஆனால், பல பெண்கள் பாலியல் ரீதியில் சதாய்க்கப் பட்டுள்ளதால், பலர் சம்பந்தப் பட்டிருக்கக் கூடும் என்று எண்னப்படுகிறது[4]. மொபைல், லேப்டாப், ஹார்ட்-டிஸ்க், சிடிக்கள் என்று எல்லாமே பறிமுதல் செய்யப் பட்டு, ஆராயப் பட்டு வருகிறது[5]. இதில் மற்ற பெண்கள் இருப்பது தெரிந்தாலும், அவர்கள் தங்களது வாழ்க்கை நினைத்து புகார் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன[6]. கடந்த பிப்ரவரியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்ற வழக்குப் போன்றே இருப்பதாக, கருதப் படுகிறது[7]. எது எப்படியாகிலும், தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற நிலையில் இருப்பதால், மற்றவர்கக்கு சமூக பிரஞை இல்லாமல், ஏதோ, செய்திகள் படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம் என்ற நிலையில் இருந்து மறந்து விடுகிறார்கள்.
காசியின்நண்பர்கள், தேடுதல், அவர்களிடம்விசாரணை: மின்னணு கருவிகளிடமிருந்து பெற்ற விவரங்களை வைத்து, இவையெல்லாம், இவன் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்றறிந்து, அவற்றிற்கு துணை போன, மற்றவர்களை போலீஸார் தேடினர், கண்டு பிடித்தனர்.. வழக்கில் கைதான, நாகா்கோவில் காசியுடன் தொடா்பில் இருந்த நண்பா்கள், அரசியல் பிரமுகா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்[8]. காவல் கண்காணிப்பாளரிடம் காசி மீது அந்த மருத்துவா் புகார் அளித்தார். இதைத்தொடா்ந்து, காசி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனா்[9]. ஏற்கெனவே, இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றிருக்கும் பொழுது, இவ்வழக்கு எதற்கு என்று தெரியவில்லை. அவ்வழக்குகளை தீவிரமாகத் தொடர்ந்து நடத்தினால், பலர் மாட்டிக் கொள்ள வாய்புள்ளது. மேலும் பெண்களின் பெற்றோர், உறவினர், மற்றவர், இவ்வழக்கை முடித்துக் கொள்ளத்தான் விரும்புவர்.
முன்பகுதியில்நாலடிஆக்கிரமித்துகட்டியபங்களா: இந்நிலையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அவரது அடுக்குமாடி பங்களாவை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே காசியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க இளம் பெண்களிடம் மிரட்டி பறித்த பணத்தில் தனது வீட்டை நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி மாளிகையாக மாற்றி இருக்கிறார் காசி. இதைத்தொடர்ந்து காசியின் வீட்டை மாநகராட்சியினர் அளவீடு செய்தனர்[10]. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்பகுதியில் நாலடி ஆக்கிரமித்து கட்டி அந்த வீட்டில் தரைத்தளம், முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அனுமதியின்றி இரண்டாவது மற்றும் மூன்றாவது நான்காவது தளங்கள் என சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது[11]. பின்னர் காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு, வீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சீல் வைப்பதற்கான நோட்டீஸ் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது[12]. இதனைத் தொடர்ந்து விதி மீறிய கட்டடங்களை இடிக்க முடிவு செய்துள்ள நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நோட்டீஸ் அறிவிப்பு ஒன்றை அவரது வீட்டில் ஒட்டி உள்ளது[13].
காசிகைதுஎன்றுபலதடவைசெய்திவருவதுஏன்?: ஏற்கெனவே, சென்ற வாரம், காசி கைது செய்யப் பட்டான் என்று செய்தி வந்தது. எப்படி அதிவேகமாக பெண்களை ஏமாற்றி சொத்துக்களை குவித்து அதிவேகத்தில் காசி முன்னேறினானோ அதே வேகத்தில் காசி காவல்துறையிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காசியின் பிளாக்மெயில் வேலைகளுக்கு உடந்தையாக இருந்த அனைத்து நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த குற்றங்கள் வெளியே வந்துள்ள நிலையில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. இந்த நிலையில் நெல்லை நாங்குநேரி சிறையில் உள்ள காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[15]. இதனால் காசியால் பெயிலில் வர முடியாது குமரி காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் கூறுகிறார்கள்.
கொரோனாபிரச்சினையில்அமுக்கப்படுமா, இரண்டாவதுகரோனாவாகமாறுமா?” தமிழகத்தில் கற்பழிப்பு, நாகரிக உடலுறவு, பாலியல் வன்புணர்ச்சி என்பதெல்லாம், இரண்டாவது கொரோனா போன்று வேலை செய்து கொண்டிருக்கிறது! கண்ணகி, கற்பு என்றெல்லாம் பேசுவர், மேடைகளில் முழங்குவர், சிலைகள் வைப்பர், ஆனால், இது போன்று நடக்கும் போது கண்டு கொள்ளாமல் இருப்பர். எந்த கழகத் தோழரும், இனமான வீரரும் வாளோடு போராட வரவில்லை. கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் கூட, கோடிக் கணக்கில் வருகின்ற நிதியைத் திருப்பி, கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடும் நிலையில், இதெல்லாம், பெரிய விசயமாகவே தெரியவில்லை.
[3] Not giving into the blackmail attempt, the victim, who managed to free herself, lodged a complaint with police on February 24, 2019.
AsiaNetNews, From Pollachi to Nagercoil another case of sexual crime emerges in Tamil Nadu, By Team Newsable, Chennai, First Published 30, Apr 2020, 4:19 PM..
[4] The case assumed political overtones since a local functionary of the ruling AIADMK allegedly attacked the victim’s brother. The attack by the functionary, who was later expelled from the AIADMK, coupled with reports in a section of media opened a can of worms, leading the police to believe that over 50 women may have been victims of sexual assault by a network of men.
[5] The police recovered mobile phones, laptop, hard discs, CDs from him in which it was found he had stored intimate photographs and videos of several women.
UNI ,Goondas act slapped on youth after arrested for sexual harassment and extortion, UNI GSM CS 1745, Posted at: Apr 30 2020 5:45PM
[6] He was booked under various sections of the Indian Penal Code, Information Technology Act, 2000, and the Tamil Nadu Prohibition of Women’s Harassment Act.
[7] The case is similar to that of the Pollachi sexual assault case. A gang of men on February 12 allegedly tried to strip a woman inside a car near Pollachi, 500 km from Chennai. They shot a video of the act and tried to blackmail her using the visuals.
[8] தினமணி, தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை, By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]
[10] தமிழ்.இந்து, பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இளைஞரின் வீட்டை சீல் வைக்க நடவடிக்கை: நாகர்கோவில் மாநகராட்சி நோட்டீஸ், Published : 29 Apr 2020 05:34 PM; Last Updated : 29 Apr 2020 05:34 PM,
[11] ஏசியா.நெட்.நியூஸ், டாக்டர், எஞ்ஜினியர், நடிகர் மகள், மாணவிகளை மயக்கி பணம் பறிக்க உல்லாசம்… 4 மாடி வீடு கட்டிய பொலிகாளை காசி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 29, Apr 2020, 1:43 PM
[14] தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]
இளம்பெண்டாக்டரைகாதலித்துஆசைதீரஉல்லாசம்… ஆபாசவீடியோக்களைவெளியிட்டுபுண்ணியம்தேடியகாசி..! 70 முதல் 100 பெண்கள்சீரழிந்தனர்!
வயதுவந்தசிறுமியர், இளம்பெண்கள்காமுகர்களிடம்சிக்கிக்கொள்வதுஎப்படி?: சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றியுள்ளான், பாலியல் ரீதியில் சீரழித்துள்ளான், அவர்களை வைத்து ஆபாசப் படங்கள்-வீடியோ எடுத்துள்ளான், பணம் கேட்டு மிரட்டியுள்ளான் என்றெல்லாம் இந்த “கொரோனா” காலத்திலும் செய்திகளாக வருவது திகைப்பாக, வருத்தமாக, பிரமிப்பாக இருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இத்தகைய செய்திகள் நிறைய வந்து விட்டன. இருப்பினும், வயது வந்த சிறுமியர், மாணவியர், இளம்பெண்கள் முதலியோர் எப்படி, இத்தகைய காமக் கொடூரர்களிடம் எளிதாகச் சிக்குகின்றனர் என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. பெற்றோர் கவனிப்பு இல்லை என்பது அன்றாகத் தெரிகிறது. மொபைல் வைத்திருக்கும் பெண்கள், தேவையில்லாமல், அடையாளம் தெரியாத, சம்பந்தம் இல்லாத, வெளியாட்களுடம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. விளையாட்டிற்கு செய்கிறார்களா, மற்றவர்கள் போன்று, சமூக ஊடகங்களில் பிரபல ஆகவேடும் என்ற போலித்தனத்துடன் செயல்படுகின்றனரா, வேறு பிரச்சினைகளை மறக்க இங்கு வந்து மாட்டிக் கொள்கிறார்களா என்று பலகோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.
இறைச்சி கடை அஹிம்சை, பாசம் போன்ற நல்ல குணங்களை வளர்க்காது: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல இறைச்சிக்கடை / கோழி வியாபாரி- தங்கப்பாண்டியனின் மகன் காசி (வயது 26), இவன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளான. ஆக, இத்தகையோருக்கு இரக்கம் போன்ற மனித குணங்கள் குறைவாகவே இருக்கும். கொடுமை, குரூரம் போன்றவற்றைப் பற்றி கவலைப் பட முடியாது. ஏனெனில், பிறகு அந்த தொழிலே செய்ய முடியாது. சிக்ஸ் பேக் உடம்பு.. கூலிங்கிளாஸ், பைக் என மாஸ் காட்டி வந்தான். இவனுக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறான்.. சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவானாம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் காசி, டெமோ, சுஜி, டெமோ லுக் போன்ற பல்வேறு பெயர்களில் பல கணக்குகளைத் தொடங்கியுள்ளான். உள்ளூர் காவல்நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவரின் மகளையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பதறிய ஆய்வாளர் கமுக்கமாக பணியிட மாற்றம் வாங்கிச் சென்று விட்டார் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, புஜபல பராக்கிரமத்தை திறந்த மேனி மூலம் வெளிப்படுத்துவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்துள்ளார். இந்த வீடியோக்களைப் பார்க்கும் பள்ளிச் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை உணர்ச்சிவசப்பட்டு இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே கியூட்டாக உள்ளாரே என, லைக், கமென்ட், ஷேர் செய்யத் தொடங்குவார்கள்.
பணம், வசதிமுதலியவைவைத்துபெண்களைகுறிவைத்துள்ளது: ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டுள்ளான் என்கிறார்கள். அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வானாம். இந்த கருத்துக்களை பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.. லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர்.. அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையிம் எடுத்து வைத்து கொண்டு பணம் பறித்துள்ளான். காசியின் செல்போன் உட்பட அவனது பல ஹார்ட்-டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்… அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்[1]. காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன[2]. அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். ஸ்கூல் மாணவிகளை கூட காசி விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.. கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
சென்னயில்பெண்டாக்டரைகாதலித்துஏமாற்றியது: இவன் கல்லூரியில் படித்த போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும், காசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது[3]. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கமானது. அப்போது, அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளான்[4]. அப்போது அந்த காட்சிகளை அவர் செல்போன் மூலம் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டான். இதற்கிடையே படிப்பு முடிந்த பிறகு காசி சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினான். இந்த நிலையில் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு காசி மிரட்டி உள்ளான். அதாவது, பணம் கொடுக்க வில்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று கூறியுள்ளான். அதோடு நின்று விடாமல், ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளான். இதனால் பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளான். ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் கொடுப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை, தன்னால் போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் பரப்பினான். இதனை பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் இதுகுறித்து கோட்டார் போலீசில் காசி மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசியை சட்டரீதியாக விசாரித்தால் அவருடன் நட்பில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் மகன்களின் லீலைகளும் அம்பலத்தில் ஏறும் என்கின்றனர் போலீசார்.
ஊடகங்களின் வழக்கமான வர்ணனைகள்: கல்லூரி படிப்பு முடிந்ததும், வேலைக்குச் செல்லாமல், இருந்துள்ளான்[5]. நண்பர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி, அதில் தன்னை ஒரு சமூக ஆர்வலர், தொழில் அதிபர் போன்றுக் காட்டிக் கொண்டு, பல பெண்களிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்[6]. பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான்[7]. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளான்[8].. சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தனது காதல் வலைக்குள் விழ வைத்துள்ளான்[9]. அவனது பேச்சில் மயங்கி காதல் வலையில் சிக்கும் பெண்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் உறவு கொண்டுள்ளான் காசி[10]. பெண்களுடன் நெருங்கி பழகும் புகைப்படங்கள் எடுத்த இளைஞர் காசி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி, பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், கோட்டார் போலீஸில் புகார் கொடுத்தார். அவனை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி வடமாநில பெண்களையும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது[11]. இதையடுத்து, கைதான இளைஞர் காசி மீது 420, 66, 67 உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[12].
காதலித்துஆசைதீரஉல்லாசம்…பாலியல்உறவு……உடல்ரீதியிலானதொடர்பு…உடல்ரீதியிலானநெருக்கம்என்றால்என்ன?: தமிழ் மற்றும் ஆங்கில் ஊடகங்கள், ஊடக விற்ப்பனர்கள், நிருபர்கள், “கற்பழிப்பு” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதை கவனிக்கலாம். ஆனால், கீழ்கண்ட சொற்றொடர் பிரயோகங்கள் உள்ளன:
காதலித்து ஆசை தீர உல்லாசம்…
பாலியல் உறவு……
உடல் ரீதியிலான தொடர்பு
உடல் ரீதியிலான நெருக்கம் [physical intimacy]
அதாவது, ஒருவேளை, சமீபத்தைய உச்சநீதி மன்ற தீர்ப்பின் விளக்கம் படி, அவர்கள், விருப்பத்துடன் உடல் உறவு கொண்டதால், நாஜுக்காக அவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். அதாவது அவ்வாறு செய்தால், சட்டப் படி “கற்ப்பழிப்பு” ஆகாது. 60 வருடங்களுக்கு முன்னால், “சோரம் போனாள்” என்பார்கள், அதாவது, கற்பை இழந்தால் என்ற அர்தத்தில் குறிப்பிடுவர். விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், திருமணத்திற்கு முன்பாக விருப்பத்துடன் உடல் உறவு கொண்டனர், ஆகவே, இதெல்லாம் சகஜம் என்று கொள்ள முடியுமா? எதிர்காலம் நினைத்து, பெண்கள் புகார் கொடுக்காமல் இருக்கலாம். இப்பொழுது விசாரணையில் வெளிவரும் போதும், பெற்றோர் எதிர்காலம் நினைத்து, மறைக்கத்தான் செய்வர். இவர்கள் பிறகு கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று வாழும் போது என்னாகும்? எதிர்காலம் தான் பதில் சொல்லும்.
[1] தமிழ்.நியூஸ்.18, பள்ளிச்சிறுமிகள்முதல்பிரபலநடிகர்மகள்வரை…! 70 பெண்களின்அந்தரங்கவீடியோக்களைவைத்துமிரட்டியகிரிமினல்கைது, LAST UPDATED: APRIL 25, 2020, 3:27 PM IST.
[3] தினத்தந்தி, பெண்டாக்டர்ஆபாசபடங்களைசமூகவலைத்தளத்தில்பரப்பியகோழிக்கடைக்காரர்நாகர்கோவிலில்பரபரப்பு, பதிவு: ஏப்ரல் 25, 2020 06:19 AM மாற்றம்: ஏப்ரல் 25, 2020 06:39 AM
திராவிடதமிழச்சிமற்றும்தமிழச்சன்களின்காதல், காமம், கொக்கோகஓடல், கூடல்விளையாட்டுகள்! அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]
சகஜமாகஇருக்கும்அபிராமி[1]: இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்[2].
சமூக உளவியர், மனோதத்துவ நிபுணர் போன்ற போர்வையில், நிலையில் சிலர் கருத்துக் கூறுவது படு வேடிக்கையாக இருக்கிறது[3]. ஏனெனில், உண்மையிலேயே அத்தகைய விவகாரங்களில் ஆழ்ந்து ஆராயும் விற்பன்னர்களாக இருந்தால், அத்தகைய உணர்வுகள் எப்பட், ஏன், எவ்வாறு வருகின்றன என்று மூலங்களை அலசி வெளிப்படுத்து இருக்க வேண்டும். ஏதோ பொதுப்படையாக சொல்வது எல்லாம், “எக்ஸ்பர்ட் ஒபினியன்” என்று சொல்ல முடியாது. “ஃபுல் மேக்-அப்- டப்ஸ்மேஷில் கலக்கிய குன்றத்தூர்அபிராமி– வீடியோ” என்று செய்திகளை வெளியிடும்[4] ஊடகங்களின் வக்கிரத்தையும், அத்தகைய ஷோக்களை வெளிப்பரப்பும் சன் போன்ற டிவி செனல்களும் காரணமாவதை எடுத்துக் காட்ட வேண்டும்.. மியூசிக்கலி மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களினால் தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்[5]. ஆக, அபிராமி பற்ற்றிய ஆராய்ச்சி அதிகமாகவே இருக்கிறது. நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் இதை விட்டு விடுமா என்ன? இதோ அவர்களும் கிளம்பி விட்டார்கள்.
நக்கீரனின் அபிராமி பற்றிய ஆராய்ச்சி[6]: நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம். குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் “ஹோப் இண்டியா” அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம்[7], “திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.
கள்ளக்காதலால் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றன – அதிசய கண்டுபிடிப்பு[8]: கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை. அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள்[9].
குழந்தைகள் இடையூறு என்று கொலைசெய்யப் படுகிறார்களாம்![10]: அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்”’’என்கிறார் அவர்[11].
குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின்தேவநேயன் விடும் கதை[12]: குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்” என்கிறார் அழுத்தமாக. குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. “”அம்மா… நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்[13].