ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)


ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

கொக்கோகத்தில் சீரழிந்த ஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].

குடும்பத்தைக் கெடுத்த பாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.

மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலியல் கொக்கோகத்தின் விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.

வீரமணிராதிகா ஆபாச வீடியோ எடுப்பதில் ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11].  இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].

வீடியோக்களை போலீஸார் ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20].  அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] நக்கீரன், மாணவர்களை மிரட்டி ஆபாச வீடியோ; ஆசிரியை ஃபோனால் அதிர்ந்த காவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/female-teacher-arrested-madurai

[3] ஜீடிவி.செய்தி, மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்கசிந்த வீடியோ..!, Written by – Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-seduce-students-and-make-fun-of-them-leaked-video-387734

[5] காமதேனு, பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது,  Updated on : 2 Apr, 2022, 8:08 pm, 2 min read

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/lady-teacher-arrested-pocso-act-in-madurai

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST

[8] https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-school-teacher-in-madurai-r9pi3f

[9] மாலை மலர், மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த ஆசிரியைவீடியோவை பரவவிட்ட கள்ளக்காதலன் கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).

[10] https://www.maalaimalar.com/news/state/2022/04/02114939/3638297/Tamil-News-School-teacher-arrested-near-Madurai.vpf

[11] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

[12] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[15] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[16] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[17] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[18] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[21] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[22] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக