Archive for the ‘நீதிபதி’ Category

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

கொக்கோகத்தில் சீரழிந்த ஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].

குடும்பத்தைக் கெடுத்த பாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.

மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலியல் கொக்கோகத்தின் விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.

வீரமணிராதிகா ஆபாச வீடியோ எடுப்பதில் ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11].  இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].

வீடியோக்களை போலீஸார் ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20].  அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] நக்கீரன், மாணவர்களை மிரட்டி ஆபாச வீடியோ; ஆசிரியை ஃபோனால் அதிர்ந்த காவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/female-teacher-arrested-madurai

[3] ஜீடிவி.செய்தி, மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்கசிந்த வீடியோ..!, Written by – Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-seduce-students-and-make-fun-of-them-leaked-video-387734

[5] காமதேனு, பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது,  Updated on : 2 Apr, 2022, 8:08 pm, 2 min read

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/lady-teacher-arrested-pocso-act-in-madurai

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST

[8] https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-school-teacher-in-madurai-r9pi3f

[9] மாலை மலர், மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த ஆசிரியைவீடியோவை பரவவிட்ட கள்ளக்காதலன் கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).

[10] https://www.maalaimalar.com/news/state/2022/04/02114939/3638297/Tamil-News-School-teacher-arrested-near-Madurai.vpf

[11] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

[12] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[15] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[16] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[17] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[18] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[21] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[22] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன (1)

ஓகஸ்ட்3, 2017

பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளிகல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன (1)

Vellore nursing student suicide - July 2017-TOI

ஜூலை.7 2017 –17 வயது மாணவி தற்கொலைகடவுள் அழைத்தாராம்!: வேலூருக்கு அருகில் காகிதபேட்டரை என்ற ஊரில் உள்ள ஒரு மகளிர் ஹாஸ்டலில் தங்கி, தேவநாதன் என்பவரின் மகளான நளினி (வயது 17) நர்ஸிங் டிப்ளோமா படித்து வந்தார். குறிப்பிட்ட நளன்று, எல்லோருக்கும் கல்லூரிக்குப் புறப்பட்டனர். அப்பொழுது, நளினி தான் வர நேரம் ஆகும், தாமதமாக வருகிறேன் என்றாளாம். ஆனால், 10.30 அளவில், ஹாஸ்டல் வார்டன் நாதியா, அவள் தூக்கில் தொங்கியதைக் கண்டு, போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் வந்து, உடலை சோதனைக்கு அனுப்பி வைத்தது. அவள் அறையில், “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்ற கடிதம் இருந்ததை பார்த்தனர்[1]. அதனை தற்கொலை கடிதம் என்று சொல்லப்பட்டது[2].

God calls me, I am going to HIM

கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்று பெரியார் மண்ணில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாவார்களா?: வேடிக்கை என்னவென்றால், இதைத் தவிர வேறு காரணம் எதுவும் கூறப்படவில்லை, பிரேத பரிசோதனை மற்றும் இதர விவரங்களும் தெரியவில்லை. தமிழ் ஊடகங்கள் இதை வெளியிடவே இல்லை. பொதுவாக, கிருத்துவ கல்வி நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிகள் என்றால், விசயங்கள் மறாஇக்கப் படுகின்றன. ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் கிருத்துவர் மற்றும் கிருத்துவ சார்பு கொண்டவர்களாக இருப்பதால், அத்தகைய இருட்டடிப்பு செய்யப் படுகிறது. “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்று பெரியார் மண்ணில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாவார்களா என்று எந்த பகுத்தறிவுவாதி, பெரியார்-தொண்டன் மற்ற எவனும் கேட்கவில்லை, ஏன் கண்டுகொள்ளவில்லை. ஊடக மற்றும் நாத்திக தர்மங்கள் தமிழகத்தில் இவ்வாறுதான் வேலை செய்து கொண்டிருக்கின்றன.

Pudikottai teacher suicide- June 2017- court ordered Dinakaran

ஜூன்.13 2017 – செக்ஸ் டார்ச்சர் கொடுத்து ஆசிரியை தற்கொலை  செய்து கொண்ட வழக்கில் ஆசிரியருக்கு தண்டனை: புதுக்கோட்டை கவிநாடு மேற்கு சண்முகா நகரை சேர்ந்தவர் மதிவாணன் (45).  ஆலங்குடி அருகே தெற்கு ராயப்பட்டி ஆரம்ப தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், புதுக்கோட்டை ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். இவருடன் அதே பகுதி காமராஜபுரம் 25ம் வீதியை சேர்ந்த வீராச்சாமி மனைவி புவனேஸ்வரி (35) ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தார்.  புவனேஸ்வரிக்கு, மதிவாணன் பள்ளியிலும் தொலைபேசி மூலமாகவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆசிரியராக இருப்பவர், ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற நிலை மறந்த போதே, இவன் மிருகமாகி விட்டான். அந்நிலையிலேயே, இவன் கட்டுப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். கடந்த 7.5.2015ம் தேதியன்று புவனேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். அப்போது மீண்டும் தொலைபேசி மூலம் பேசி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்ததால் புவனேஸ்வரி மனமுடைந்தார். இதையடுத்து விரக்தியில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் புவனேஸ்வரி கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்[3].

Pudikottai teacher suicide- June 2017- court ordered Dinakaran-2

பாலியல் குற்றத்திற்கு தண்டனை கொடுத்தால், இறந்தவர் நிலை என்ன?: இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர். பின்னர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மதிவாணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையம் அனுபவிக்க வேண்டும். இது தவிர பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்[4]. சிறைதண்டனை அனுபவிப்பதால் அப்பெண்ணின் உயிர் திரும்ப வந்து விடுமா? “தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக” என்றால், “உயிர் போனதற்கு” எந்த தண்டனையும் இல்லையா? அதற்கு இழப்பீடு எப்படி கிடைக்கும்?

Tirupur Registar arrested for rape- 01-04-2017-The Hindu

மே.20 2017 – வாய்பேசாத இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய காப்பக தாளாளருக்கு தண்டனை: கோவை சோமனூர் அடுத்த கோதபாளையம் மற்றும் முருகன்பாளையத்தில் ‘திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளின், தாளாளர் முருகசாமி(57). கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 82 மாணவர்கள், 102 மாணவிகள் என மொத்தம் 184 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், படித்து முடித்தவர்கள் இதே பள்ளியில் பணியாற்றி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கோதபாளையம் பள்ளியின் முன்னாள் மாணவியும், தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவருமான வாய்பேச இயலாத இளம்பெண் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் தன் கணவருடன் வந்து ஒரு புகார் அளித்தார். அதில், 2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார் என கூறி இருந்தார்[5]. இந்த புகார் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் குற்றம், பள்ளி மாணவிகளை ஏமாற்றுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்[6]. மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி (40), பயிற்றுனர்கள் பிரமிளா (28), ரேவதி (30), பாபு (35) ஆகியோரையும் கைது செய்தனர்[7]. இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்[8].

-Murugaswamy gor awarclaim worked hard-Chitra Devi

ஏப்ரல்.20 2017 – பாலியல் தொல்லைக்குட்பட்ட மாணவி தற்கொலை முயற்சி: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி ஊராட்சி செங்கான்வட்டம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் துட்டம் பட்டி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினரான கோவிந்தராஜ் என்ற வாலிபர் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தார்[9]. இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து பெற்றோர் தாரமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாணவி வீட்டில் வி‌ஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்[10]. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் 11-ம் வகுப்பு மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

03-08-2017

Omalur girl attempted suicide - 20-04-2017- Malai Malar

[1] The Times of India, Nursing student ends life in Tamil Nadu, Shanmughasundaram J| TNN | Updated: Jul 7, 2017, 05.32 AM IST

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/nursing-student-ends-life-in-tn/articleshow/59476355.cms

[3] தினகரன், செக்ஸ் டார்ச்சரால் ஆசிரியை தற்கொலை, 2017-06-13@ 21:40:56.

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=311083

[5] தமிழ்.முரசு, காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தாளாளர் உள்பட 5 பேருக்கு சிறை, 5/10/2017 3:50:26 PM

[6] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107242

[7] The Hindu, Correspondent of special school held on rape charge, STAFF REPORTER, COIMBATORE,MAY 10, 2017 01:02 IST UPDATED: MAY 10, 2017 01:02 IST.

[8] http://www.thehindu.com/news/national/tamil-nadu/correspondent-of-special-school-held-on-rape-charge/article18416477.ece

[9] மாலைமலர், ஓமலூர் அருகே பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி, பதிவு: ஏப்ரல் 20, 2017 16:56.

[10] http://www.maalaimalar.com/News/District/2017/04/20165638/1080952/Omalur-near-school-girl-student-suicide-attempt.vpf

வயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்!

நவம்பர்13, 2013

வயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்!

intern_harassment-blog-snapshotபடிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது ஏன் என்று ஆராயவேண்டியுள்ளது, ஆனால், உண்மை சொன்னால் கோபம் வருகிறது[1] அல்லது சொன்னவர்கள் மேலேயே பாய்கின்ற போக்கும் காணப்படுகின்றது[2]. டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், “நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம்” என்றார்[3]. பெண்ணிய குழுகிகளிடமிருந்து எதிர்ப்பு வந்ததால், தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கமும் அளித்தார். இந்நிலையில், சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், செயற்முறை பயிற்சிக்காக, ஒரு முதிர்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற, ஓய்வடைந்த உச்சநீதி மன்ற நீதிபதியிடம் சென்றபோது, அவர் சில்மிஷத்தில் இறங்கினாராம். ஸ்டெல்லா ஜோன்ஸ் என்ற மாணவி, இணைதளத்தில் தனது அந்த கசப்பான அனுபவத்தை கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்[4].

In Delhi at that time (24 December 2012, Christmas Eve[5]), interning during the winter vacations of my final year in University, I dodged police barricades and fatigue to go to the assistance of a highly reputed, recently retired Supreme Court judge whom I was working under during my penultimate semester. For my supposed diligence, I was rewarded with sexual assault (not physically injurious, but nevertheless violating) from a man old enough to be my grandfather. I won’t go into the gory details, but suffice it to say that long after I’d left the room, the memory remained, in fact, still remains, with me[6].

பெண் வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய தனிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் வழக்குரைஞர் ஒருவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்று வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற மாணவி ஒருவர், அண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2012 தில்லியில் பயிற்சியில் இருந்தபோது ஹோட்டல் அறையில் தனக்கு அந்த நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தனது தாத்தா வயதிலான அவரின் செயல்பாட்டால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்[7].

இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ்[8] ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் கவனத்துக்கு வழக்குரைஞர் எம்.எல்.சர்மா எடுத்துச் சென்றார். இந்த விவகாரத்தை பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்[9]. பெண் வழக்குரைஞர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதியும் செவ்வாய்க்கிழமை முறையிட்டார். பத்திரிகையில் வெளியாகிய செய்தியை வாசித்துக் காட்டினார். மேலும், இதை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பணிபுரியும் இடங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்தளித்துள்ள விதிமுறைகளை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் வாஹன்வதி சுட்டிக்காட்டினார்[10].

இதையடுத்து, தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதாவது: “அரசுத் தலைமை வழக்குரைஞராக இந்த விவகாரத்தில் நீங்கள் (வாஹன்வதி) எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இதை நாங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெண் வழக்குரைஞரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தினாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இந்த நீதிமன்றம் அக்கறையுடன் உள்ளது. இதில் நடவடிக்கை எடுப்பதில் தாமதிக்க விரும்பவில்லை. பெண் வழக்குரைஞர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற இரு நீதிபதிகளிடமும் மதிய உணவு இடைவெளியின் போது ஆலோசித்தேன். அதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெ.எல். தத்து, ரஞ்சனா பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிக் குழுவை நியமித்துள்ளேன்[11]. இந்தக் குழுவானது புகார் குறித்து முழுமையாக விசாரிக்கும். செவ்வாய்க்கிழமை மாலையே விசாரணையைத் தொடங்கும். உண்மையைக் கண்டறிந்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்”, என்றார் அவர்[12].

படிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்குட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது நெருக்கத்தினால் தான். மேலும் இக்காலத்தில், இந்தியாவில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசும் பழக்கம் உருவாகி விட்டது. சினிமாக்களில் மட்டுமல்லாது, டிவியிலேயே, செக்ஸ் காட்சிகள், திரைப்படங்கள் முதலின அதிகமாகவே காட்டுகிறார்கள். இதனால், காண்பதை தொடவேண்டும் என்ற வக்கிரமான எண்ணம் ஆண்களின் மனங்களில் ஏற்படுகின்றது, வளர்கின்றது, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருன்றது. இதற்கு பெண்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பதை பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பது மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. படித்த, நாகரிக பெண்களைப் போல மற்ற கோடிக்கணக்கான பெண்களை ஒப்பிட முடியாது. இப்பொழுது படித்த பெண்களுக்கே இத்தகைய பாலியல் கொடுமைகள் நேரிடும் போது, மற்றவர்களின் நிலை என்னாவது என்பதை அறியலாம்.

மேலும் சினிமா நடிக-நடிகைருக்குத் தேவையில்லாத பட்டங்களும் கொடுக்கப் படுகின்றன. அத்தகைய கூத்துகள் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நடந்தேறுகின்றன[13]. இதனால், அப்பட்டங்களின் மதிப்பே குறைந்து விடுகிறது. பல்கலைக்கழகத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், அத்தகைய நெருக்கத்தின் மயக்கத்தினால் பாலியிலலில் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது[14]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே காமுகர்களாக, கொலைகாரர்களாக ம்ழாறும் நிலையும் வந்துவிட்டது[15]. எம்.பில், பி.எச்டி படிக்கும் மாணவிகளிடம் கெய்டுகள் மற்றவர்கள், அம்மாதிரியான பாலியல் தொந்தரவுகள் செய்து வருகின்றார்கள். அவற்றில் பெரும்பாலும் 99% வெளியே வருவதில்லை. ஒன்று வெளியே சொன்னால் படிப்பு முடிக்க முடியாது, பிறகு சொல்லமுடியாது, ஏனெனில் அது மானப்பிரச்சினையாகி விடும்.


[12] தினமணி, பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொந்தரவு: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை விசாரிக்க தனிக் குழு அமைப்பு, First Published : 13 November 2013 05:54 AM IST

[13] Vedaprakash, சினிமாகாரர்கள், நிகர்நிலைபல்கலைக்கழகங்கள், “டாக்டரேட்கொடுப்பதுஇத்யாதி!,

http://academicdegradation.wordpress.com/2010/02/01/doctorates-conferred-on-actresses-actors/

[15] வேதபிரகாஷ், 18 பெண்களைகற்பழித்துகொலைசெய்தஆசிரியர்! -`சயனைட்கொடுத்துகொன்றபயங்கரம்! http://academicdegradation.wordpress.com/2009/10/22/18-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/