Posts Tagged ‘செக்ஸி’

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் படவேண்டும்.

ஜூன்23, 2023

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் பட வேண்டும்.

குடும்பங்கள் கட்டுப்பாடுகளை மீறுவது ஏன்?: சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியவர் சொன்னதை கேட்காமல் இருப்பது போன்ற நிலைகளில் குடும்பங்கள் சிதறுகின்றன. குடும்பத் தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் குடும்ப அங்கத்தினர் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிறார். இதனால், ஆண்கள் உறவுகளை மீறினால், பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம், அனால், பெண்கள் முயலும் போது, தீராத பழி, பெற்றோர், உற்றோர், மற்றோர் அதிகமாக பாதிக்கும் நிலை உண்டாகிறது. பெண்களை கவனிக்காமல் வளர்க்கும் அல்லது வளர்க்கப் படும் பெண்களும் தங்கள் இச்சைக்கு ஏற்றப் படி செயல்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது பணம் தான் பிராதானம் என்ற நிலை உருவானப் பிறகு, பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போன்ற வெறி வரும் பொழுது, நியாயம், தர்மம் போன்றவையும் மறக்கப் படுகின்றன. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கவனித்து வந்தால் எவ்வாறு தனிதனிபர் ஒழுக்கம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நெறிமுறை முதலியவை பின்பற்றாமல் சீரழிகின்றன என்பதையும் கவனிக்கலாம்.

பாலியல் குற்றங்கள் அதிகமாவது: நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சினிமாவின் சீரழிக்கும் போக்கைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு, சினிமா தொழில் தான் விபசாரத்தை அதிக அளவில் ஊக்குவிக்கிறது, உருவாக்கி வருகிறது எனலாம். இதைப் பற்றி சமூக ஆராய்ச்சியாளர்கள் சரிவர கண்டுகொள்வதில்லை. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதிலும் கிருத்துவ-இஸ்லாமிய குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இதுவும் செக்யூலரிஸ ரீதியில் தான் நடந்து வருகின்றன. செய்திகள் வெளி வந்தாலும், பிறகு என்னவாயிற்று என்று சொல்லப் படுவதில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குடும்ப விபசாரம் என்று புதிய பிபசாரம்: சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது[1]. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் என்று தினத்தந்தி[2] விளக்கமும் கொடுக்கிறது. சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது[3]. அப்படியென்றால், இது ஏதோ ஏற்கெனவே இருந்தது போலவும், இப்பொழுது, திடீரென்று நடப்பது போலவும் தெரிகிறது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள், என்று ஒரு வரியில் முடிக்கிறது. பிறகு, இதற்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத் தானே செய்வர். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்[4]. குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்[5]. இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்[6]. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது, இதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது.

தொடர்ந்து தொடர்ச்சியாக செய்து வரும் முறை: போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். இதில் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, நீதிமன்றத்திற்குச் சென்று, ஏதாவது தண்டனை என்று கொடுக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்யப் படுகிறதா அல்லது போலீசாறே நேராக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். இதிலும் புதிர்கள் பலவுள்ளன. அப்பெண்களுக்கு வாதிடும் வக்கீல்கள் யார், எவ்வாறு அவர்கள் விடுதலை பெறுகின்றனர் என்பதும் புரியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். பிறகு செய்த குற்றத்தையே திரும்ப செய்வது போலாகிறது. சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

புரோக்கர்கள் எல்லாம் இருப்பது, இது ஒரு திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது: அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான  ஆமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54), பிரசாந்த் (30) ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. இவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதும் தெரிகிறது[8]. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொழில்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து நடக்கும் சமூக சீரழிவைத் தடுத்தாக வேண்டும்: அப்படி எல்லாமே சொல்லி வைத்தது போல சக்கரம் சுழல்வது போல, இந்நிகழ்வுகள் திரும்ப-திரும்ப நடப்பது அசாதாரணமாக உள்ளது. மற்ற தொழில்கள் போல இதுவும் திட்டப்படி, முறையாக, செயல்பட்டு வருகிறது என்றாகிறது. இதில் வக்கீல்கள், புரோக்கர்கள், வீட்டு சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு விடுபவர், போலீஸார், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், இது நடப்பது தெரிந்துள்ளது. செய்வது, கைதாவது, பிறகு சட்டப் படி அல்லது ஏதோ ஒரு நுணுக்கத்தில் வெளியே வருவது எல்லாம் யாரும் ஓசியில் செய்ய் மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கும் உரிய காசு கிடைக்கிறது. இத்தகைய விபசாரிகளுக்கு ஆஜராகும் வாதிடும் வக்கீல்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிரது. ஆமாம், அதுவும் அவர்கள் தொழில் தான்! யாராக இருந்தாலும், வாங்கிய காசுக்காக அவர்கள் ஆஜராக வேண்டியது தான்! பிறகு, இதில் எதுவோ இடிக்கிறதே? அப்பெண்களின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லையே. நுகர்வோர் பண்டங்கள் போல அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். சமூகம் அவர்களை விபசாரிகள் என்றாலும், வேறு வழியில் ஆதரிக்கின்றது.

  1. குடும்ப விபசாரம் என்று செய்தி வருகிறது, அந்த அபசாரத்திற்கு ஒரு வரையறை, விளக்கமும், வியாக்யானமும் கொடுக்கப் படுகிறது.
  2. ரூ.5000 கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களுக்கு உல்லாசம் கிடைக்கும்!
  3. இவ்வாறு வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் – தினத்தந்தி.
  4. குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.
  5. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்
  6. போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
  7. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.. இப்படியாக இவ்வேலை சுழற்சியாக நடைபெற்று வருகிறது!
  8. இதில் பல புதிர்களும், கேள்விகளும் எழுகின்றன. எப்படி, ஏன், எவ்வாறு இதில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்?
  9. ஒற்றுமையாக சொல்லி வைத்தால் போல சம்பந்தப் பட்டவர்கள் இச்சுழற்சியை வெட்டெறியாமல் தொடர்ந்து நடத்த விடுகின்றனர்?
  10. தாய்மை, பெண்மை, குடும்பம், ஒழுக்கம், கற்பு,..…முதலியவற்றைப் போற்றுவோர் ஏன் அமைதியாக இருக்கின்றனர்? இச்சமூக ஊனத்தை என்னென்பது?

© வேதபிரகாஷ்

23-06-2023


[1] தினத்தந்தி, ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும்குடும்ப விபசாரம், தினத்தந்தி Jun 23, 3:49 pm

[2] https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5000-you-will-be-treated-with-a-party-and-family-prostitution-again-in-chennai-992672

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்டைம்ஸ், Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!, Kalyani Pandiyan S, Jun 23, 2023, 09:47 AM IST

[4] https://tamil.hindustantimes.com/amp/entertainment/3-women-involved-in-domestic-prostitution-business-in-chennai-have-been-arrested-131687492971595.html

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள், First Published Jun 23, 2023, 11:55 AM IST

[6] https://tamil.asianetnews.com/gallery/crime/prostitution-that-took-place-in-chennai-women-caught-half-dressed-rwp0ic

[7] தினமலர், பாலியல் தொழில் புரோக்கர் இருவர் கைது, பதிவு செய்த நாள்: ஜூன் 23,2023 00:29.; https://m.dinamalar.com/detail.php?id=3355385

[8] https://m.dinamalar.com/detail.php?id=3355385

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)

பிப்ரவரி 2023ல் வழக்கு விசாரணைக்கு வருவது: மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ராதிகா, 45. இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் ‘வீடியோ’ வெளியானது[1]. இது அவருடன் தகாத நட்பை தொடர்ந்த வீரமணி, 39, என்பவரால் எடுக்கப்பட்டது[2]. அந்த படங்கள், ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்தனர். வீரமணி, ராதிகா 2022 ஏப்., 1ல் [01-04-2922] கைது செய்யப்பட்டனர். ராதிகாவிடம் இருந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், ‘குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “வீரமணியை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும்; குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். கைது உத்தரவில் எவ்வித தவறையும் நாங்கள் காணவில்லை. ராதிகா மனு தகுதி அடிப்படையில் ஏற்புடையதல்ல. இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” இவ்வாறு உத்தரவிட்டனர். ஆக, நீதிபதி உறுதியாகத்தான் தீர்ப்பு அளித்துள்ளார். இருப்பினும், நிர்மலா, காசி, பொள்ளாச்சி முதலிய வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கம் கிருத்துவப் பள்ளி வழக்கும் அமுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, இத்தகைய சீரியசான விசயங்களில் கூட, சட்டம், நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் அதிகாரிகள், சம்பந்தப் பட்டவர்கள், ஏதோ காரணங்களுக்காக பாரபட்சமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. இதனால், சமூகம் மேன்மேலும் சீர்கெட்டுத்தான் போகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவ்வாறு இருப்பதே திகைப்பாக, அதிர்ச்சியாக, கவலையாக இருக்கிறது.

செல்போன் கலாச்சாரத்தில் கற்பு பறிபோகும் நிலையும், வியாபாரமும்: இப்பொழுதெல்லாம் செல்போன் எல்லோரிடத்திலும் உள்ளது எனலாம். சினிமாவை அடுத்து, செல்போன் அனைவரது வாழ்க்கையிலும்  புகுந்து விட்டது. எனெனில், அதில் சினிமாவே வந்து விட்டது. டிவிசெனல்கள், டெலிசீரியல்களும் சேர்ந்து விட்டது. ஆக, இனி ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட டிவி என்ற நிலை தாண்டி, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் செல்போனை வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள். இதனால், செல்போன், இன்டர்நெட் வியாபாரிகளுக்குத் தான் வியாபாரம் பெருகி வருகிறதே தவிர, உபயோகிப்பவர்களுக்கு தீமை தான் வந்து சேர்கிறது. புதிய மீடியா தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் காதல், செக்ஸ் மற்றும் காதல் ஆகியவை எப்போதும் முக்கியமானவை என்று அவை வியாபாரமயமாக்கப் படுகின்றன..

ஆபாசம், சமூக வலைப்பின்னல் மற்றும் டேட்டிங் தளங்கள் உலகம் முழுவதும் பிரபலமான இணைய தளங்கள் ஆகி, சமூக ஊடகங்கள் மூலம் பெருகி வருகின்றன. காதல், காமம், கொக்கோகம் என்று மேற்கு நாடுகளில் புதிய பொருளாதாரங்களை உருவாக்குகிறது – நாம் டிண்டர், கிரைண்டர், கீல், ஹிட்ச் மற்றும் ஓக்குப்பிட் யுகத்தில் இருந்து, மேற்கத்தைய கலாச்சாரம் இளைஞர்களைக் கெடுத்து வருகின்றது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் ஃபேஸ்புக்கின் இலவச அடிப்படை முயற்சியுடன், அது ஒருங்கிணைக்கப்பட்டது. காதல் உட்பட சமூக நடவடிக்கைகளுக்கான ஒரே இடத்தில் அதன் நிலை. உதாரணமாக, மியான்மரில், குடிமக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் எதிர்மறையாகப் புகாரளித்தனர், ஆனால் அவர்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டபோது, பதில் மிகப்பெரியதாக இருந்தது. அதாவது, ராணுவ ஆட்சி நடந்தாலும், பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், இத்தகைய தொழில்கள் நடந்து வருகின்றன. செக்ஸ், போதை மருந்து, ஆயுதங்கள், கள்ளக் கடத்தல், தீவிரவாதம் என்பவை சேர்ந்து தான் செயல்பட்டு வருகின்றன.

இன்டர்நெட் மூலம் சீரழியும் பெண்கள்: மத பாரம்பரியங்களில் ஈடுபாடு கொண்டுள்ள நாடுகளான, ஜோர்டானில் இருந்து இந்தியா வரை உள்ள ஏழை சமூகங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே ஒரு பெண்ணிடம் பேசவே இல்லை, என்பதில்லை. ஏனெனில், இப்பொழுது செல்போன் எல்லோருடைய கைகளிலும் உள்ளது. எதிர் பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ஆன்லைன் அரட்டை தான். அதன் மூலம், இவர்கள் எளிதில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆணாதிக்க சமூகங்களில் உள்ள பெண்கள், அநாமதேயம், அணுவாக்கம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றைத் தேடுவதால், திறந்த சமூகங்களை ஆன்லைனில் எதிர்க்கிறார்கள், இல்லையெனில் இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சமூகங்களில் வருவது கடினம்.

பலதார உறவு முதலியன பெண்மை, குடும்பங்களைக் கெடுக்கின்றன: இப்பொழுது, இந்தியாவில் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் கூட, தாம்பத்தியத்தைத் தாண்டிய உடலுறவு, சேர்ந்து வாழும் முறை, விருப்பத்துடன் செக்ஸ் போன்றவற்றிற்கு சட்டப்படி அனுமதி கொடுத்துள்ள நிலைப்பாடுள்ளதால், பெண்கள் அத்தகைய உடலுறவுகளை வைத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள். அந்நிலையில், விபச்சாரம் என்பதற்கும் எந்த வரையறையும் கொடுக்க முடியாது. பெண்களையும் அவ்வாறு கணிக்க முடியாது. திருமணம், திருமண முறிவு என்று பலமுறை நடக்கும் பொழுதும், பெண்கள் கற்பு பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு ஆணுக்கு மேல் உடலுறவு கொண்ட பிறகு, அது மறக்கப் படுகிறது என்றாகிறது. ஏனெனில், பெண்களும் அவ்விசயத்தில் விருப்பத்துடன் ஈடுபடுகிறார்கள் என்றே ஆகிறது. “கல்யாண மன்னன்” என்பது போல, “கல்யாண ராணி” என்றெல்லாம் கூட ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பணம், சுகமான அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற காரணங்களுக்கு பெண்களே அவ்வாறு தயாராகி விடுகிறார்கள்.

கேட்பாரற்ற நிலையும், புலம்பல்களும்: அந்நியர்களுடன் நட்பு கொள்வது, போலி அன்பு, ஏமாற்றத்தைக் கண்டறிதல் என்பதெல்லாம் சாதாரணமாகி விட்டது. பணம் சம்பாதிக்க செக்ஸ், செக்ஸ் மூலம் வியாபாரம், வியாபாரத்திற்கு ஆள் சேர்ப்பு, அத்தகைய நிறுவனமாக்கப் பட்ட தொழில்கள், அத்தொழில்களில் ஈடுபடும் ரௌடிகள், குற்றவாளிகள், கிரிமினல்கள், அரசியல் சார்பு கொண்டவர்கள், வேலியை மேய்க்கும் பயிர்கள் முதலியவை அதிகமாகியுள்ள நிலையில், அவையெல்லாமே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊழல் என்பது, இதிலும் புரையோடி விட்டதால், கேட்பாரற்ற நிலையும் உருவாகி விட்டது. ஆக  ஒழுக்கம், நேர்மை, நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு புலம்புகிறவர்கள் புலம்பிக் கொண்டே இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] Thinamalar, ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated : பிப் 02, 2023  07:31 |  Added : பிப் 02, 2023  07:26.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3232195

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

கொக்கோகத்தில் சீரழிந்த ஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].

குடும்பத்தைக் கெடுத்த பாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.

மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலியல் கொக்கோகத்தின் விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.

வீரமணிராதிகா ஆபாச வீடியோ எடுப்பதில் ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11].  இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].

வீடியோக்களை போலீஸார் ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20].  அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] நக்கீரன், மாணவர்களை மிரட்டி ஆபாச வீடியோ; ஆசிரியை ஃபோனால் அதிர்ந்த காவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/female-teacher-arrested-madurai

[3] ஜீடிவி.செய்தி, மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்கசிந்த வீடியோ..!, Written by – Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-seduce-students-and-make-fun-of-them-leaked-video-387734

[5] காமதேனு, பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது,  Updated on : 2 Apr, 2022, 8:08 pm, 2 min read

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/lady-teacher-arrested-pocso-act-in-madurai

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST

[8] https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-school-teacher-in-madurai-r9pi3f

[9] மாலை மலர், மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த ஆசிரியைவீடியோவை பரவவிட்ட கள்ளக்காதலன் கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).

[10] https://www.maalaimalar.com/news/state/2022/04/02114939/3638297/Tamil-News-School-teacher-arrested-near-Madurai.vpf

[11] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

[12] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[15] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[16] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[17] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[18] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[21] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[22] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]  

ஒக்ரோபர்19, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]

Eloped teacher with 16-year boy caught in Chennai

40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம்  ஆலப்புழா மாவட்டம் சேர்தலா  பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்[3].  கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.  மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகாரம் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான் போல.

Eloped teacher with 16-year boy caught in Chennai-3

25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா? சரி, புருஷன்? இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்!

Dravidian teacher teach what

பெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.

Nagapatnam prof eloped with girl student

மோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagapatnam prof eloped with girl student-2.jpg

1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்?: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “சரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் பட்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜமாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங்களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.

Eloped teacher with 16-year boy caught in Chennai-2

மறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு  யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

19-10-2018

Reassess dravidian ideology for the increase in sex crime

[1] மாலைமலர், பள்ளி மாணவனுடன் காதல்சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.

[2] https://youtu.be/w2QZH5lJDH4?t=11

[3] https://www.maalaimalar.com/News/District/2018/09/29101100/1194536/Kerala-female-teacher-missing-with-10th-std-student.vpf

[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM

[5] https://www.thanthitv.com/News/India/2018/09/29080845/1010123/Kerala-school-teacher-Eloped-with-school-student.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST

[7] https://tamil.oneindia.com/news/tamilnadu/student-threaten-commit-suicide-teacher/articlecontent-pf313351-323714.html

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

ஜூலை28, 2013

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

Rahul Gandhi meets potential Youth Congress candidates

सौ टका टंच माल – சௌ டகா டஞ்ச் மால்[1]: மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்கார் பாராளுமன்ற தொகுதியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், அந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனாட்சி நடராஜன் கடந்த தேர்தலில் பிஜேபியை வென்று எம்.பி ஆனார். ராகுலின் முக்கியமான குழுக்களில் உறுப்பினர்.Meenakshi Natarajan with Rahul.2 ராகுலுக்கு வேண்டியவர்[2]. விழாவில் பேசிய திக் விஜய்சிங் தனது பேச்சின் இடையே திடீர் என்று பெண் எம்.பி.யை வர்ணித்தார். முதலில் அவர் பேசுகையில், “இந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் கடினமான உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர், தொகுதி மக்களுக்காக இங்கும் அங்கும் ஓடி உழைப்பவர். ஆனால் நான் சமயத்துக்கு தக்க படி நடந்து கொள்ளும் அரசியல் வாதி”, எனக் கூறினார். இறுதியில் திடீர் என்று ‘‘அவர் அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண்’’ [सौ टका टंच माल[3] = sau taka tunch maal] என்று வர்ணித்தார்[4]. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது[5]. ஊடகங்கள் இதனை பெரிது படுத்தியது எனலாம்.

Meenakshi Natarajan with Rahul.3

சலசலத்த செய்தி அடங்கிவிட்டது: திக்விஜய்சிங் எப்பொழுதுமே அடாவடித் தனமான பேசக்கூடியவர் தாம். பொதுவாக பிஜேபி, சங்கப் பரிவார் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்பார். இது போல் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கண்டு கொள்ளாது. தற்போது அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திக்விஜய்சிங்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. திக்விஜய்சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். ரேணுகா சௌத்ரி என்ற, சோனியாவுடன் நடனம் ஆடிய அம்மையாரும், இதைப் பற்றியெல்லாம் ஒன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.

Meenakshi Natarajan.3

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு: ஹிந்தியில் வார்த்தைகளை பலவிதமாக உபயோகப் படுத்தலாம், புரிந்து கொள்ளலாம். நடைமுறையில், சினிமா தாக்கத்தால், பல வார்த்தைகள் இரண்டு பொருள்களுடன் பிரோகிக்கப்படும் நிலை வந்து விட்டது. சில நல்ல வார்த்தைகள் கூட உபயோகிக்க பயமாக இருக்கிறது. ஏனெனில், சாதாரணமான வார்த்தைகளுக்கு அசிங்கமான, ஆபாசமான அர்த்தத்தை ஏற்றிச் சொல்லப்பட்டு, பிரயோகப்படுத்தப் பட்டு வருவதால், அவ்வார்த்தையை உபயோகப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. இல்லை, பொது இடங்களில் வார்த்தையை உபயோகித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற நிலையும் வந்து விட்டது. இருப்பினும், வள்ளுவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது:

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு”

Meenakshi Natarajan with Rahul.4

திக்விஜய் சிங் கொடுத்த விளக்கம்: இங்கு திக்விஜய் சிங் சொல்லியிருப்பதால் தான் விஷயம் விவகாரமாகி இருக்கிறது. கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று, யாதாவது சொல்லிவிடுவாரோ என்று ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன போலும். . இதற்கிடையே திக்விஜய் சிங் பெண் எம்.பி.யை அப்படி வர்ணிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் எம்.பி.யை ‘‘சுத்த தங்கம்’’ என்று தான் சொன்னேன். ஆனால் டெலிவிஷன் செய்தியில் தவறான அர்த்தத்தில் சொல்லி விட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Meenakshi Natarajan with Digvijay Singh

மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை: திக்விஜய்சிங் பேச்சுக்கு மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அவர் கூறும் போது, ‘‘திக்விஜய் சிங்கின் பேச்சை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர் எனது பணியை வரவேற்று பாராட்டினார். ஆனால் கொடூர புத்தி கொண்டவர்கள் தான் அவரது பேச்சை திரித்து கூறுகிறார்கள். அந்த விழாவில் 15 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அவர்கள் சரியான கண்ணோட்டத்தில் தான் பேச்சை கேட்டார்கள்’’ என்றார்[6].

Print

வேதபிரகாஷ்

© 28-07-2013


[1] மெட்ராஸ் பாசை அல்லது சினிமா பாசையில் “பிகரு”, “பார்ட்டி” என்பது போன்ற வார்த்தை.

[2] போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவருடைய பின்னணியில் பலத்துடன் இருப்பவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

[6] Natarajan said she wasn’t offended. “His statement has to be looked at in complete perspective. He has appreciated my work.” She told TOI the comments were being misinterpreted by mischievous elements. “It’s the work of an evil mind. There were about 15,000 people at the meeting who took it in the right spirit.”

http://timesofindia.indiatimes.com/india/Digvijaya-calls-Meenakshi-Natarajan-sau-tunch-maal-rapped-for-sexist-remark/articleshow/21380305.cms?