Archive for the ‘கடன் கொடுத்தல்’ Category

பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்படஆறு பேர் கைது!

ஓகஸ்ட்8, 2010

பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்படஆறு பேர் கைது

கற்பழிப்பு வழக்கில் நகராட்சி தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2010,23:59 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=60836

ராமநாதபுரம் (12-08-2010): கற்பழிப்பு வழக்கில் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் ஜாமீன் மனுவை, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தள்ளுபடி செய்தது. ராமேஸ்வரத்தில் யாஸ்மின்பானு என்ற பெண்ணை கும்பலாக கற்பழித்ததாக நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜலீல் சார்பில், அவரது வக்கீல் ஷேக் இபுராகிம் ஜாமீன் மனுதாக்கல்: இந்நிலையில், ஜலீல் சார்பில், அவரது வக்கீல் ஷேக் இபுராகிம், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

அரசு தரப்பு வக்கீல் மனோகரன் கூறியதாவது: பாதிக்கப்பட்ட யாஸ்மின்பானுவுக்கு மருத்துவ சோதனை முடியாமல் உள்ளதால், சாட்சியங்களை அவர் கலைத்துவிடுவார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை ஏற்று, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி பாலசந்திரகுமார் தள்ளுபடி செய்தார்.

பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்படஆறு பேர் கைது[1]; ராமேஸ்வரத்தில் பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்த நகராட்சித் தலைவர் ஜே. ஜலீல் உட்பட ஆறு பேரை, போலீசார் 07-08-2010 சனிக்கிழமை அன்று கைது செய்தனர்[2]. தினகரன் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் நிர்வாண போட்டோவை வெளியிட்டுள்ளது[3].

தினகரன் வெளியிடுள்ள போட்டோ

தினகரன் வெளியிடுள்ள போட்டோ

பெண்கள் கடன் கொடுப்பது-வாங்குவது போன்ற விவகாரங்கள்: பெண்கள் எப்படி கடன் கொடுக்கின்றார்கள், வாங்கச் செல்கிறார்கள் என்ற விஷயங்கல் எல்லாம் ஆச்சரியமாக உள்ளன. இவை தமது கணவன்மார்களுக்குத் தெரிந்து செய்கின்றனரா, தெரியாமல் செய்கின்றனரா என்பது அடுத்த விஷயம், இல்லை பெண்கள் அந்த அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் என்பதா, என்றும் புரியவில்லை. ஆனால், நடந்துள்ளது, பெண்கள் இன்னும் தாக்கப்படும் நிலையில்தான் உள்ளனர், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை………………என்பன தெரிகின்றது. அதற்கும் மேலாக, இக்கால ஆண்கள் எந்த அளவிற்கு காமமிருகங்களாக இல்லை மிருகங்களைவிட கேவலமாக உள்ளனர் என்றும் தெரிகின்றது.

பெண்ணைக்கற்பழித்த-ஆறு-கூரூர-காமக்கொடூரர்கள்

பெண்ணைக்கற்பழித்த-ஆறு-கூரூர-காமக்கொடூரர்கள்

தர வேண்டிய பணத்தை வாங்கச் சென்ற பெண்கள் கற்பழிப்பு: கீழக்கரை எஸ்.என்.தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மனைவி யாஸ்மின் பானு (32). இவர், ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் (தி.மு.க.,) ஜலீல் தர வேண்டிய பணத்தை வாங்க, கடந்த 5ம் தேதி மாலை 6 மணிக்கு, ராமேஸ்வரத்தில் ஜலீலுக்குச் சொந்தமான கட்டடத்திற்கு சென்றார். இவருடன் நிஷா (48) வும் சென்றார். அங்கிருந்த ஜலீல், இருவருக்கும் குளிர்பானம் கொடுத்துள்ளார். இதை குடித்த இருவரும் மயங்கினர். அரைகுறை மயக்க நிலையில் இருந்த யாஸ்மின் பானுவை, ஜலீல் மற்றும் அவருடன் இருந்த மேலும் ஐந்து பேர் கற்பழித்தனர்.

நள்ளிரவில் நிர்வாண வீடியோ எடுத்தல், மறுபடியும் கற்பழிப்பு: நள்ளிரவில் சுயநினைவுக்கு வந்த பின்னும், கத்தியை காட்டி மிரட்டி நிர்வாணமாக்கி, மொபைல் போனில் படமெடுத்த இவர்கள், மீண்டும் தங்களது உடல் பசியை தீர்த்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 6 மணி வரை குடிபோதையில், ஒருவர் மாற்றி ஒருவராக வெறிச்செயலை அரங்கேற்றினர். பின், “நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது’ என, மிரட்டி இருவரையும் அனுப்பினர்.

இன்னொரு விவரம் இப்படியுள்ளது – கடத்தல், விருந்தினர் மாளிகையில் கற்பழிப்பு, நிர்வாண போட்டோ எடுத்தல்[4]: ராமேஸ்வரம் இளம் பெண் கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில் நகராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகராட்சித் தலைவராக இருப்பவர் ஜலில். திமுகவைச் சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கீழ்க்கரைக்கு சென்றுள்ளார். அங்கு ஜாஸ்மீன் என்ற பெண்ணை கடத்தி வந்துள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் அருகில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில், தனது நண்பர்கள் 5 பேருடன் ஜாஸ்மீனை ஜலில் கற்பழித்துள்ளார். மேலும் செல்போன்களில் இதை படமாகவும் பிடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்: பாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு, ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் 06-08-2010 வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்[5]. அவரது உத்தரவுப்படி, ராமேஸ்வரம் டவுன் ஸ்டேஷனில் புகார் செய்தார். நகராட்சித் தலைவர் ஜலீலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர். போனில் யாஸ்மின் பானுவை மிரட்டி எடுக்கப்பட்ட நிர்வாணக் காட்சிகள் இருந்ததை உறுதி செய்தனர். அவரது தகவலைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன்(45), உதயகுமார்(36), ஷேக்(42), ரகுபதி(21), ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கேசவன்(31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கமலாபாய் டி.எஸ்.பி., விசாரணை செய்து, நேற்று காலை ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் குமரேசன் உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு கூறியதாவது: “நகராட்சித் தலைவர் ஜலீல் என்னிடம் கடனாக வாங்கியிருந்த 10 ஆயிரம் ரூபாயை தராததால், பல முறை கேட்டேன். பணம் தருவதாகக் கூறியதால் பஸ்-ஸ்டான்டிற்கு அருகிலுள்ள அவரது கட்டடத்திற்கு நிஷாவுடன் ஜூலை 5, 2010 அன்று[6] சென்றேன்[7]. குளிர்பானம் கொடுத்து, என்னை பலமுறை கெடுத்தனர். கத்தியைக் காட்டி நிர்வாணமாக்கி மொபைல் போனில் படமெடுத்த ஜலீல், இன்டர்நெட்டில் போட்டு மானத்தை வாங்கி விடுவேன் எனக் கூறி, மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் கெடுத்தார். சிகரெட்டால் சுட்டு, அடித்து சித்ரவதை செய்தார்[8], இவ்வாறு யாஸ்மின் பானு கூறினார்.

ஜலீல் துப்பாக்கியைப் பறித்து சுட முயன்றது[9]: கைது செய்யப்பட்ட ஆறுகொடூரக் கற்ப்பழிப்பாளிகளை கோர்ட் உத்தரவுப்படி மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் ராமநாதபுரம் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்கு பின், மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த, நேற்று மாலை (09-08-2010) ஆறு பேரையும் போலீசார் வேனில் ராமேஸ்வரம் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இவர்களை படம் எடுக்க, நாளிதழ் மற்றும் தனியார் “டிவி’ போட்டோகிராபர்கள் கோர்ட் வாசலில் காத்திருந்தனர். போலீஸ் வேன் வந்ததும், கீழே இறங்கிய ஜலீல், “படம் எடுக்க கூடாது’, என தகாதவார்த்தையில் திட்டினார். திடீரென, பாதுகாப்பிற்கு வந்த போலீசாரின் துப்பாக்கியை பறித்து, போட்டோகிராபர்களை சுட முயன்றார். உடனே போலீசார், ஜலீலை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர். அப்போது மயக்கம் அடைந்தது போல் நடித்த ஜலீல் முகத்தில், போலீசார் தண்ணீர் தெளித்து மீண்டும் வேனிற்குள் கொண்டு சென்றனர். பின், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த மாஜிஸ்திரேட் குமரேசன், அவர்களை ஆக., 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டர். ஜலீல் உள்ளிட்ட ஆறுபேரும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் அட்மிட் செய்ய டாக்டர்கள் சான்றிதழ் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நகராட்சி தலைவர் ஜலீலை பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என சான்றிதழ் கொடுத்துள்ளதால், இவருக்கு முறையான பரிசோதனை நடத்திட வேண்டும், என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கோர்ட்டில் படம் எடுக்க சென்ற போட்டோகிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற ஜலீல் குறித்து, நேற்று மாலை ராமேஸ்வரம் வந்த ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் புகார் தெரிவித்த நிருபர்கள்,”பாதுகாப்பு வழங்கும்படி,’ கேட்டுக்கொண்டனர்.

முதல்வரின்கிரீன் சிக்னல்பின்பே நகராட்சி தலைவர் கைது : டி.எஸ்.பி .,க்கே தெரியாமல் மறைப்பு[10]: ராமேஸ்வரத்தில்  “கேங் ரேப்பிங் ‘ கில் ஈடுபட்டநகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீலை, முதல்வர் கருணாநிதியின் “கிரீன் சிக்னல்’ கிடைத்த பின்பே கைது செய்துள்ளனர். இது டி.எஸ்.பி.,க்கே தெரியாமல் நடத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் “கேங் ரேப்பிங் ‘ கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் “அட்மிஷன்’ போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.

“கேங் ரேப்” ஜலீலின் பின்னணியில் பகீர் தகவல்கள்: இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த “ஆபரேசனை’ முடித்துள்ளனர். வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். “கேங் ரேப்பில்’ ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.

முந்தைய ஹம்லா ஆபரேசன்” தோல்வி, இப்பொழுதைய ஆரேஷன் வெற்றி:  இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, “கிரீன் சிக்னல்’ கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தி.மு.க., பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த “ஹம்லா ஆபரேசனில்’ கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை (கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

ஹாலிவுட் படங்களை மிஞ்சுகிறது ஜலீலின் விவகாரங்கள்: குளிர்பானம் கொடுத்து முறை கெடுத்தது, கத்தியைக் காட்டி நிர்வாணமாக்கி மொபைல் போனில் படமெடுத்தது, இன்டர்நெட்டில் போட்டு மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டியது, மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் கெடுத்து, சிகரெட்டால் சுட்டது, அடித்து சித்ரவதை செய்தது முதலியவை ஜலீலின் குரூர மனப்பாங்கைக்காட்டுகிறது. வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க, ராமேஸ்வரம் டி.எஸ்.பி. கமலாபாய், உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. செய்வதறியாது திகைத்த தி.மு.க., பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். அதாவது மருத்துவமனை டாக்டர்களும் அதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர். மேலும் முதலமைச்சரை கலந்தாலோசித்து நடவடிக்கை என்பது, மற்ற விவகாரங்களை மறைப்பது போல உள்ளது.


[1] தினமலர், பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்பட 6 பேர் கைது, ஆகஸ்ட் 08,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57107

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/DMK-municipal-chairman-arrested-on-charges-of-rape/articleshow/6272519.cms

[3] http://www.dinakaran.com/crimedetail.aspx?id=12485&id1=11

[4] http://thatstamil.oneindia.in/news/2010/08/07/rameswaram-dmk-municipal-chairman.html

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/DMK-municipal-chairman-arrested-on-charges-of-rape/articleshow/6272519.cms

[6] http://asiantribune.com/news/2010/08/09/rape-charges-police-arrested-dmk-municipal-chairman

[7] http://www.dinakaran.com/crimedetail.aspx?id=12341&id1=11

[8] http://expressbuzz.com/states/tamilnadu/tn-municipal-head-arrested-on-rape-charges/196332.html

[9]தினமலர், போட்டோ கிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற, தி.மு.., நகராட்சி தலைவர், ஆகஸ்ட் 09,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=58515

[10] தினமலர், முதல்வரின்கிரீன் சிக்னல்பின்பே நகராட்சி தலைவர் கைது : டி.எஸ்.பி.,க்கே தெரியாமல் மறைப்பு, ஆகஸ்ட் 09, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57757