கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?
தமிழகநடிகையபலகணவன்மார், பலதாரமண, விவாகரத்துஎன்றெல்லாம்இருக்கும்பொழுதுபெண்ணியம்எங்கிருந்துவருகிறது: கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வ்துமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்[1], கணவனுக்கு பாதபூஜை செய்து, பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை பிரணிதா[2]. இதெற்கெல்லாம் உதாரணம் சொல்ல தமிழகத்திலேயே பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, ஒன்றிற்கு மேலாக ஐந்து கணவர் வரை மணம் செய்து விவாகரத்து செய்த நவீன பெண்ணுத்துவ வீராங்கனைகளும் இருக்கிறார்கள். பிறக்கும் குழந்தைகள் அப்பா யார் என்றால் என்ன பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் தான் கவலைப் படவேண்டும். ஆனால், கண்ணகி பிற்ந்த மண், நாங்கள் தான் கண்ணகிக்கே சிலை வைத்தே என்றும் தப்பட்டம் அடிப்பார்கள். மனைவி-துணைவி என்று புது தாம்பத்தைய விளக்கத்தையும் உண்டாக்குவார்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள், பகுத்தறிவு, பெண்ணியம் என்றெல்லாமும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சினிமா-அரசியல் போர்வையில், எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கைகளும் சீரழிந்துள்ளன, தற்கொலைகளும் நடந்துள்ளன. பிறகு, இவர்கள் எப்படி விமர்சிக்க முடியும்?
17-07-2023 ஆடிஅமாவாசைமுன்னிட்டுகணவனுக்குபாதபூஜைசெய்தது: இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் நடிகை பிரணிதா அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார் என்று ஒரு ஊடகம் ஆரமொஇக்கிறது. அப்படியென்றால், சினிமாவில் செக்யூலரிஸம் இல்லையா, எப்பொழுது இவ்வாறு, மதம் பார்த்து விமர்சிக்கும் போக்கு வந்தது? இது செக்யூலரிஸமா, பெரியாரிஸமா, பகுத்தறிவா, எது? . தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ்[3]. இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்[4]. இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்[5]. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் 17-07-2023 தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்[6].
பிரணிதாநடிகைபுகைப்படத்தைவெளியிட்டது: அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2022லும் இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர்[7]. அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்[8]. கடந்த ஆண்டு தனது கணவருக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்ட நிலையில், ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா[9]. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள நிலையில், அவருக்குள்ள உரிமையை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அதே நிலையில், அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். தவிர, இது இரண்டாம் ஆண்டாக செய்துள்ளார். எனவே, இதை ஏதோ புதியது மாதிரி விமர்சனம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
சமூகவளைதளத்தில்ட்ரோல்செய்தது, திர்மறையாகவிமர்சித்தது: அதாவது இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்[10]. பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ள நிலையில், சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்[11]. இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து, நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்[12]. நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர்[13]. நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்[14].
தமிழகத்தில் பெண்ணியத்தின் நிலை: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய முரண்பாட்டை பலவிசயங்களில் கவனிக்கலாம். பெரும்பாலும், நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்று பேசும், எழுதும், தம்பட்டம் அடிக்கும் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் அதிகமாகவே காணலாம். ஏனெனில் அவர்களது தலைவர்களே அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். இரண்டு தாரம், மூன்று தாரம் என்பது சகஜமான விசயம். பல கணவர் அதாவது விவாக ரத்து செய்து மறுபடியும் கணவர் கொள்ளும் முறையும் இயல்பாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதற்கும் அவர்கள் புது விளக்கம் அளிக்கக் கூடும். அந்நிலையில், தமிழ் பெண்களின் ஐந்து குணங்களை (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு) இங்கு தேடிப் பாத்தாலும் கிடைக்காது. அவற்றை சொன்னால், என்னது என்று கேட்கும் நிலையில் “நவீன கண்ணகிகள்” உள்ளார்கள். பிறகு, எந்த பெண்ணாவது, பதிவிரதை, பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் பேசினால் ஏளனம் தான் செய்வார்கள்.
உரிமை எல்லோருக்கும் தானே இருக்க வேண்டும்? சினிமா நடிகைகளில் எதிர்பார்ப்பது என்பது நடக்குமா என்று தெரியவில்லை. அந்நிலையில், ஒரு நடிகை தனது கணவனுக்கு பாத பூஜை செய்கிறாள் எனும்பொழுது, இவர்களுக்கு பிரச்சினையாகிறது. என்னது, “திராவிட மாடலுக்கு” ஒவ்வாததாக இருக்கிறதே, இதற்கு நல்ல விளம்பரமு கிடைக்கிறதே என்ற கொதிப்பும் ஏற்படுகிறது. ஏலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் செய்யு பொழுது, படம் போடும் பொழுது, கொதிப்பு கொஞ்சம் அதிகமாகிறது. இத்தகைய கேள்விகளை தங்களது “ரோல் மாடல்களாக,” தலைவர்களாக இருப்பவரைப் பார்த்து கேட்பார்களா அல்லது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் சென்று ட்ரால் செய்வார்களா? என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறீரே, உமது மனைவி கோவில்-கோவிலாக சுற்றுகிறாரே என்று கேட்க முடியுமா. கேட்டால் அது அவரது உரிமை, நான் அதில் தலையிட மாட்டேன் என்பாரோ? பிறகு, யாருடைய உரிமையில், யார் நுழைவது, கேள்வி கேட்பது?
[7] தமிழ்.பிஹைன்ட்.டாக்கீஸ், போனவருஷம்மாதிரி Troll செய்தால் – கணவருக்குபாதபூஜைசெய்தபுகைப்படத்தைவெளியிட்டுசூர்யாபடநடிகைவிளாசல்., By Arun Kumar, ஜூலை 18, 2023.
[13] தமிழ்.பிளிம்.பீட்ஸ், கணவர்பாதங்களுக்குபூஜைபண்ணபிரபலநடிகை.. நீங்கஎன்னவேணாட்ரோல்பண்ணுங்கஎனகேப்ஷன்வேற!, By Mari S| Updated: Monday, July 17, 2023, 18:20 [IST]
ஆபாசவீடியோஆசிரியை 2022 வழக்கு 2023ல்விசாரணைக்குவருவது, நீதிபதிமுறையாகதீர்ப்பளித்துள்ளது (2)
பிப்ரவரி 2023ல்வழக்குவிசாரணைக்குவருவது: மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ராதிகா, 45. இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் ‘வீடியோ’ வெளியானது[1]. இது அவருடன் தகாத நட்பை தொடர்ந்த வீரமணி, 39, என்பவரால் எடுக்கப்பட்டது[2]. அந்த படங்கள், ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்தனர். வீரமணி, ராதிகா 2022 ஏப்., 1ல் [01-04-2922] கைது செய்யப்பட்டனர். ராதிகாவிடம் இருந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், ‘குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
ஆபாச ‘வீடியோ‘ விவகாரத்தில்ஆசிரியைமீது ‛குண்டாஸ்‘ சரியே: உயர்நீதிமன்றம்உத்தரவுநீதிபதிகள்பிறப்பித்தஉத்தரவு: “வீரமணியைசுதந்திரமாகநடமாடஅனுமதித்தால்மக்கள்மனதில்பீதியைஏற்படுத்தும்; குழந்தைகளுக்குஅச்சுறுத்தலாகஇருக்கும். கைதுஉத்தரவில்எவ்விததவறையும்நாங்கள்காணவில்லை. ராதிகாமனுதகுதிஅடிப்படையில்ஏற்புடையதல்ல. இருமனுக்களும்தள்ளுபடிசெய்யப்படுகின்றன,” இவ்வாறு உத்தரவிட்டனர். ஆக, நீதிபதி உறுதியாகத்தான் தீர்ப்பு அளித்துள்ளார். இருப்பினும், நிர்மலா, காசி, பொள்ளாச்சி முதலிய வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கம் கிருத்துவப் பள்ளி வழக்கும் அமுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, இத்தகைய சீரியசான விசயங்களில் கூட, சட்டம், நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் அதிகாரிகள், சம்பந்தப் பட்டவர்கள், ஏதோ காரணங்களுக்காக பாரபட்சமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. இதனால், சமூகம் மேன்மேலும் சீர்கெட்டுத்தான் போகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவ்வாறு இருப்பதே திகைப்பாக, அதிர்ச்சியாக, கவலையாக இருக்கிறது.
செல்போன்கலாச்சாரத்தில்கற்புபறிபோகும்நிலையும், வியாபாரமும்: இப்பொழுதெல்லாம் செல்போன் எல்லோரிடத்திலும் உள்ளது எனலாம். சினிமாவை அடுத்து, செல்போன் அனைவரது வாழ்க்கையிலும் புகுந்து விட்டது. எனெனில், அதில் சினிமாவே வந்து விட்டது. டிவிசெனல்கள், டெலிசீரியல்களும் சேர்ந்து விட்டது. ஆக, இனி ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட டிவி என்ற நிலை தாண்டி, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் செல்போனை வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள். இதனால், செல்போன், இன்டர்நெட் வியாபாரிகளுக்குத் தான் வியாபாரம் பெருகி வருகிறதே தவிர, உபயோகிப்பவர்களுக்கு தீமை தான் வந்து சேர்கிறது. புதிய மீடியா தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் காதல், செக்ஸ் மற்றும் காதல் ஆகியவை எப்போதும் முக்கியமானவை என்று அவை வியாபாரமயமாக்கப் படுகின்றன..
ஆபாசம், சமூகவலைப்பின்னல்மற்றும்டேட்டிங்தளங்கள்உலகம்முழுவதும்பிரபலமானஇணையதளங்கள்ஆகி, சமூகஊடகங்கள்மூலம்பெருகிவருகின்றன. காதல், காமம், கொக்கோகம் என்று மேற்கு நாடுகளில் புதிய பொருளாதாரங்களை உருவாக்குகிறது – நாம் டிண்டர், கிரைண்டர், கீல், ஹிட்ச் மற்றும் ஓக்குப்பிட் யுகத்தில் இருந்து, மேற்கத்தைய கலாச்சாரம் இளைஞர்களைக் கெடுத்து வருகின்றது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் ஃபேஸ்புக்கின் இலவச அடிப்படை முயற்சியுடன், அது ஒருங்கிணைக்கப்பட்டது. காதல் உட்பட சமூக நடவடிக்கைகளுக்கான ஒரே இடத்தில் அதன் நிலை. உதாரணமாக, மியான்மரில், குடிமக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் எதிர்மறையாகப் புகாரளித்தனர், ஆனால் அவர்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டபோது, பதில் மிகப்பெரியதாக இருந்தது. அதாவது, ராணுவ ஆட்சி நடந்தாலும், பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், இத்தகைய தொழில்கள் நடந்து வருகின்றன. செக்ஸ், போதை மருந்து, ஆயுதங்கள், கள்ளக் கடத்தல், தீவிரவாதம் என்பவை சேர்ந்து தான் செயல்பட்டு வருகின்றன.
இன்டர்நெட் மூலம் சீரழியும் பெண்கள்: மத பாரம்பரியங்களில் ஈடுபாடு கொண்டுள்ள நாடுகளான, ஜோர்டானில் இருந்து இந்தியா வரை உள்ள ஏழை சமூகங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே ஒரு பெண்ணிடம் பேசவே இல்லை, என்பதில்லை. ஏனெனில், இப்பொழுது செல்போன் எல்லோருடைய கைகளிலும் உள்ளது. எதிர் பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ஆன்லைன் அரட்டை தான். அதன் மூலம், இவர்கள் எளிதில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆணாதிக்க சமூகங்களில் உள்ள பெண்கள், அநாமதேயம், அணுவாக்கம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றைத் தேடுவதால், திறந்த சமூகங்களை ஆன்லைனில் எதிர்க்கிறார்கள், இல்லையெனில் இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சமூகங்களில் வருவது கடினம்.
பலதார உறவு முதலியன பெண்மை, குடும்பங்களைக் கெடுக்கின்றன: இப்பொழுது, இந்தியாவில் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் கூட, தாம்பத்தியத்தைத் தாண்டிய உடலுறவு, சேர்ந்து வாழும் முறை, விருப்பத்துடன் செக்ஸ் போன்றவற்றிற்கு சட்டப்படி அனுமதி கொடுத்துள்ள நிலைப்பாடுள்ளதால், பெண்கள் அத்தகைய உடலுறவுகளை வைத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள். அந்நிலையில், விபச்சாரம் என்பதற்கும் எந்த வரையறையும் கொடுக்க முடியாது. பெண்களையும் அவ்வாறு கணிக்க முடியாது. திருமணம், திருமண முறிவு என்று பலமுறை நடக்கும் பொழுதும், பெண்கள் கற்பு பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு ஆணுக்கு மேல் உடலுறவு கொண்ட பிறகு, அது மறக்கப் படுகிறது என்றாகிறது. ஏனெனில், பெண்களும் அவ்விசயத்தில் விருப்பத்துடன் ஈடுபடுகிறார்கள் என்றே ஆகிறது. “கல்யாண மன்னன்” என்பது போல, “கல்யாண ராணி” என்றெல்லாம் கூட ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பணம், சுகமான அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற காரணங்களுக்கு பெண்களே அவ்வாறு தயாராகி விடுகிறார்கள்.
கேட்பாரற்ற நிலையும், புலம்பல்களும்: அந்நியர்களுடன் நட்பு கொள்வது, போலி அன்பு, ஏமாற்றத்தைக் கண்டறிதல் என்பதெல்லாம் சாதாரணமாகி விட்டது. பணம் சம்பாதிக்க செக்ஸ், செக்ஸ் மூலம் வியாபாரம், வியாபாரத்திற்கு ஆள் சேர்ப்பு, அத்தகைய நிறுவனமாக்கப் பட்ட தொழில்கள், அத்தொழில்களில் ஈடுபடும் ரௌடிகள், குற்றவாளிகள், கிரிமினல்கள், அரசியல் சார்பு கொண்டவர்கள், வேலியை மேய்க்கும் பயிர்கள் முதலியவை அதிகமாகியுள்ள நிலையில், அவையெல்லாமே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊழல் என்பது, இதிலும் புரையோடி விட்டதால், கேட்பாரற்ற நிலையும் உருவாகி விட்டது. ஆக ஒழுக்கம், நேர்மை, நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு புலம்புகிறவர்கள் புலம்பிக் கொண்டே இருக்கலாம்.
ஜூன் 2022 – ஈரோட்டில்ஆரம்பித்தவிவகாரம்: சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா, அவர் கருமுட்டைகளை விற்பதற்கு துணை செய்ததாக கூறப்படும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தோழி மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 16வயது மகளை வளர்த்து வந்த தாய், கணவனை பிரிந்தார். அதே பகுதியில் வேலை செய்த பெயின்டருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்தார். பெயின்டரும், அப்பெண்ணும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். மகளை பெயின்டர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, 8 முறை கருமுட்டை விற்பனை செய்துள்ளார்[1]. இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்[2]. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரித்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஈரோடு பாரதிபுரம் ஜான் ஆகியோரை போக்சோ, ஆதார் அட்டையை திருத்தம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
சம்பந்தப்பட்டமருத்துவமனைகள்மீதுநீதிமன்றங்கள்மூலம்ஒழுங்குநடவடிக்கைஎடுக்கபரிந்துரைவழங்கப்படுகிறது: சென்னை, தேனாம்பேட்டையில் பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது[3]: சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது.அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலியாக உள்ளது.போலியான ஆதார் அட்டை என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது கருமுட்டை தானம் குறித்த சாதக, பாதகங்கள் சிறுமியிடம் முறையாக விளக்கப்படவில்லை.விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை. கருமுட்டை விவகாரத்தில், ஆறு மருத்துவமனைகள் ஐசிஎம்ஆர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து 2 தனியார் மருத்துவமனைகள் நீக்கம். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நீதிமன்றங்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்[4].
சிறுமியின்தாய்ஏற்கனவேகருமுட்டைதானம்என்றபெயரில்கருமுட்டைகளைவிற்பனைசெய்யும்தொழிலைசெய்துவந்தவா்: இந்த விவகாரம் தொடா்பாக சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் துணை இயக்குநா் குருநாதன், இணை இயக்குநா் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்கிய 6 போ் குழுவினா், ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தொடரும் நிலையில், சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவா் என்பதும், அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் தனது மகளையும் கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. சேலம் மற்றும் ஒசூா் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
14 வயதுமுதல் 16 வயதுவரைஇரண்டுஆண்டுகளாககருமுட்டைஎடுத்துவிற்றுள்ளனா்: ஈரோடு, பெருந்துறையில் ஆய்வு செய்தோம். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை பதிவேடுகளை சரிபார்த்து வருகிறோம். இதில் தவறு நடந்திருந்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னா், கேரளம் மற்றும் ஆந்திரம் மாநில அரசுகள் உதவியுடன் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றார். 21 வயதுக்கு மேல் உள்ளவா்களிடம் மட்டும்தான் கருமுட்டையை அவா்களது அனுமதியோடு பெற வேண்டும். ஆனால், இந்த சிறுமியிடம் 14 வயது முதல் 16 வயது வரை இரண்டு ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்றுள்ளனா். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மருத்துவச் சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இனப்பெருக்கதொழில்நுட்பஒழுங்குமுறைச்சட்டத்தைஅமல்படுத்ததமிழகஅரசுகுழுஅமைத்தது; இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக, மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான இந்தக் குழுவிற்கு குடும்பநலத் துறை இயக்குநர் துணை தலைவராகவும், மாதர் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தச் சட்டத்தின் படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்களிடம் இருந்து மட்டும்தான் கருமுட்டைகள் வாங்க வேண்டும்,
வாழ்நாளில் ஏழு கருமுட்டைகள் வரை மட்டுமே கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டது[5].
சம்பந்தப்பட்ட மருத்துவர், கருமுட்டை அளிக்கும் பெண்ணை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது,
எந்த மோசடியிலும் ஈடுபடக் கூடாது.
மீறி ஈடுபட்டால், முதல் முறை குறைந்தபட்சம் ரூ.5 லட்சம், அதிகபட்சம் ரூ.10 லட்சம், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[6].
சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு நடைமுறையில் உள்ள இனப்பெருக்க தொழில்நுட்பம், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்கும் விதமாகவும், தமிழக சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியார் மருத்துவமனைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்பது தொடர்பாகவும் இனிவரும் நாள்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
[5] தினமணி, கருமுட்டைவிவகாரம்: ஒழுங்குறைசட்டத்தைஅமல்படுத்தகுழுஅமைத்ததுதமிழகஅரசு, By DIN | Published On : 11th June 2022 10:56 AM | Last Updated : 11th June 2022 06:47 PM
பெரியார்மண்ணில்பில்லி–சூனயம்எடுக்கும்சாமியார்: வழக்கம்போல மறுபடியும் சாமியார் என்ற போர்வையில் ஒரு ஏமாற்று பேர்வழி பல பெண்களை ஏமாற்றியுள்ளது திகைப்பாக உள்ளது. இது பெரியார் மண், கடவுள் இல்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, கோவில்களில் உள்ள சிலைகளை திருடி அது போன்ற காரியங்கள் எய்து வந்தாலும், இது போலமக்கள் ஏமாந்து போன கதையை மறுபடியும் படிக்கும்போது புதிராகத்தான் உள்ளது. திராவிட திருநாட்டில் ஒரு பக்கம் நாத்திகம் பேசி கொண்டும், “பெரியார் மண்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டும், பகுத்தறிவு ரீதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தாலும், மறுபக்கம் திராவிட மணி போன்றவர்கள், மக்களை ஏமாற்றி வந்தது கவனிக்கத் தக்கது. பகுத்தறிவு வேலை செய்யவில்லையா, பில்லி-சூனியம் வேலை செய்ததா, மக்கள் அதனை நம்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடவேண்டும் என்ற போக்கு காணப்படுகிறது. லஞ்சம் கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கு என்ற தத்துவத்தை உருவாக்கி வைத்திருப்பது போல, இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒரு புதிய தத்துவத்தை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது.
பில்லி–சூன்னியம்நீக்குவேன்என்றுபெண்களைவசப்படுத்தினானாம்!: காஞ்சிபுரம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்கிற செல்வமணி / பெருமாள் மணி [35 வயது], விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் மாந்திரீகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாரன் என்று கதையினை ஊடகங்கள் ஆரம்பிக்கின்றன. மனைவியை பிரிந்த செல்வமணி, தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்[1]. இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார். இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர்[2]. அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்[3].
பலபெண்களைதன்னோடுதங்கவைத்துள்ளான்: பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் பகுதிகளில் பில்லி, சூனியம் செய்து, நல்ல வருமானம் ஈட்டியுள்ளார்[4]. தம்மிடம் மாந்திரீகம் செய்ய வரும் இளம் பெண்களையும் குடும்ப பெண்களையும் தம்மோடு மாதக் கணக்கில் தங்க வைத்துள்ளார்[5]. தனது விருப்பத்துக்கு இணங்க வைத்த மணி, எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அம்பலமாகியுள்ளது[6]. மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களை வாழ்வை சூறையாடும் செல்வமணியின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. என்பதெல்லாம், எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பெண்கள் என்ன அந்த அளவிற்கு முட்டாள்களா, ஒருவன் கூட படுத்து, இவ்வாறு சோரம் போவதற்கு என்பது புதிராக உள்ளது. இல்லை, அவர்களும், இவனோடு சேர்ந்து, விபச்சாரம் செய்தார்களா என்று தெரியவில்லை. இதைப் போன்ற செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன. கைதுகள் நடக்கின்றன. ஆனால், மறுபடியும் அதே குற்றங்கள் தொடர்கின்றன.
மகளைதனியாகஅனுப்பிமாந்திரீகம்செய்யஒப்புக்கொண்டதந்தை: காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க மாந்திரீகம் செய்யுமாறு செல்வமணியை நாடியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணை தம்மோடு தங்க வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டி இருப்பதாக செல்வமணி கூறியுள்ளார். மகளை செல்வமணியுடன் அனுப்பி ஓராண்டாகியும் திரும்ப அனுப்பாததால் திரும்ப அனுப்புமாறு, அந்த பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாந்திரீக செல்வமணி, அந்த பெண்ணை தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பெண்ணின் தந்தையை மிரட்டியுள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணை மாந்திரீக செல்வமணி, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை, போலீஸில் புகாரளித்தார். உடனடியாக களமிறங்கிய போலீசார் மாந்திரீக செல்வமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர். மாந்திரீகம் செய்வதாக, பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் அறிந்து அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போலிசாமியார், பலவேடங்களில்பலரைஏமாற்றிவந்திருக்கிறானாம்: பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது[7]. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளாரன்[8]. சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது[9]. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு ஊரில் ஏமாற்றியதும், ‘கெட் அப்’பையும் மாற்றிக் கொள்வான். பொதுமக்களிடம் பல இடங்களில் அடி, உதை வாங்கியும் தப்பி வந்துள்ளான். போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட்டுகளில் காசு கொடுக்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது[10]. இவன் மூன்று முறைகல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். இரண்டுகுழந்தைகளும் இருக்கின்றன[11]. சில வருடங்களுக்கு முன்னர், அவர்கள் பிரிந்து சென்று விட்டனர். மற்ற பெண்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரம் இல்லை என்று போலீஸார் சொல்கின்றனர்[12]. அதாவது, பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்றால், ஆதாரங்கள் இல்லை என்று தான் ஆகும்.
[11] Indian Express, Villupuram: Man sexually abuses girl on pretext of black magic, Allegedly kept her in his custody for over six months, arrested, Published: 29th May 2019 03:40 AM | Last Updated: 29th May 2019 03:40 AM
[12] “Villagers allege that Selvamani had been targeting women from helpless families and blackmailed them saying that they must have sexual relations with him to make the rituals work,” the police said. The accused had been married and has two children. His wife and children left him a few years ago. However, the police said there were no evidence for his affair with other women.
புவனேஸ்வரிகைது, தினமலர்செய்தி, நடிகர்–நடிகையர்பேச்சு, பத்திரிக்கையாளர்கள்வழக்குதொடுத்தல், பத்திரிக்கையாளர்கைது, ஆனால், நடிகர்–நடிகையர்தப்பித்துவருகின்றனர் 2009 முதல் 2017 வரை!
“தினமலர்‘ செய்திஆசிரியர்லெனினைபோலீசார்கைது[1]: நடிகைகள் குறித்து வெளியான செய்தி தொடர்பாக, கடந்த 7ம் தேதி, அக்டோபர் 2009, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். பின், நிபந்தனையற்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பல நடிகர், நடிகையர் இழித்தும், பழித்தும் பேசியது வீடியோ ஆதாரம் மூலம் தெரியவந்தது. பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவாக பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், நடிகர்களுக்கு எதிராக, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 15-10-2009 அன்று எட்டு பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
பத்திரிகையாளர்அன்பழகனின்மனைவிகிருஷ்ணவேணிதாக்கல்செய்தமனுவில்கூறியிருப்பதாவது[2]: “தினமலர்’ நாளிதழில் வந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க வளாகத்தில், கடந்த 7ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத் தினருக்கு எதிராகவும், மிகவும் அருவருப்பான முறையிலும், கீழ்த்தரமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். நடிகர் விஜயகுமார், “தினமலர் அலுவலகத்திற்குச் சென்று நான்கு பேரை வெட்டி கூறு போடுவேன்’ என பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அசதுல்லாவின் மனைவி நூர்ஜான், முருகநாதன், நிலாவேந்தன், வேலாயுதம், சென்மான், ஜெயவீரன், சரவணன் ஆகியோரும், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அன்பழகன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அசதுல்லா, அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சத்யாலயா ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்துநடந்தவழக்கில்நடிகர்–நடிகையர்நீதிமன்றத்திற்குவரமால்இருந்தது: இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துகள் என்றும், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும்[3], பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும்[4], மற்றும் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்[5]. இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது[6]. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அதனால், வழக்குப் போட்டவரும் விடுவதாக இல்லை போலும்.
சம்பந்தப்பட்ட 8 பேரும்இந்தவழக்கில்இருந்துதங்களைவிடுவிக்ககோரி03.01.2012-ல்மனுதாக்கல்செய்தது: இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் பேசியதையெல்லாம் மறந்து விட்டனரா அல்லது “வழக்கை ரத்து செய்யக்கோரும்” அளவிற்கு யாதாவது செய்துள்ளனரா, சமரசத்திற்கு சென்றுள்ளனரா என்றெல்லாம் தெரியவில்லை. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஊட்டி கோர்ட்டில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது[7]. அதன்படி ஊட்டி கோர்ட்டில் இந்த வழக்கு 23-05-2017 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது[8]. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத் குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார். தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்[9]. உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் மனு தாக்கல் செய்துள்ளார்[10].
சமுதாயபொறுப்பு [Social Responsibility]-லிருந்து நடிக-நடிகையர் தப்பித்துக் கொள்ள முடியாது: இவ்வழக்கு பத்திரிக்கையாளர்களுக்கும், நடிகர்-நடிகைகளுக்கும் இடையேயுள்ள பிரச்சினையா, நடிகர்-நடிகைகளுக்கு இடையேயுள்ள தொழில் போட்டியா, அவதூறா, இதனை 2009லிருந்து இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன, இடையில் இவர்கள் எல்லோருமே, தமிழக சமூகத்தின் மாண்பு, மேன்பு, கலாச்சாரம், பண்பாடு, முதலியவற்றைக் காப்பது போல, பட இடங்களில், மேடைகளில், நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதும், அறிவுரை கூறியதும், போன்றவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. அதே போல கடந்த 60 வருடங்களாக, சமூதாயம், குறிப்பாக பெண்கள் நிலை சீரழிந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இன்றைக்கு சமுதாய பொறுப்பு [Social Responsibility] என்றேல்லாம் பேசப்பட்டு வருகின்றது. அந்நிலையிலஆ நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து சினிமா பார்க்கும் போது, படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்பதை விட, அவர்கள் சமூகப் பிரச்சினைகள் பற்றி பேச வந்துவிடுவதாலும், கருத்துகள் கூறூவதாலும், குறிப்பிட்ட விளம்பரங்களில், இந்த பொருள், சேவை … முதலியவற்றை வாங்குங்கள் என்று தூண்டும் நிலைக்கும் வந்து விட்டதால், அவர்கள் பேசுவது, நடந்து கொள்வது முதலியவஏற்றைப் பற்றி மற்றவர்களும் கண்காணிப்பது, விமர்சிப்பது என்பது இயல்பாகி விடுகின்ற நிலை ஏற்பட்டு விட்டது.
புவனேஸ்வரிகைது, தினமலர்செய்தி, நடிகர்–நடிகையர்பேச்சு, பத்திரிக்கையாளர்கள்வழக்குதொடுத்தல், பத்திரிக்கையாளர்கைது, ஆனால், நடிகர்–நடிகையர்தப்பித்துவருகின்றனர்!
விபசாரவழக்கில்நடிகைபுவனேஸ்வரிகைது (அக்டோபர் 2009): சென்னையில் கடந்த 2009-ம் அக்டோபர்.2 அன்று ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்[1]. அப்பொழுது தன்னை மற்றும் கைது செய்து, சிறையில் அடைத்து என்று நடவடிக்கைகள் எடுத்த போது, மற்ற நடிகைகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பேசினார். சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம். இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.
போலீசாரிடம் லிஸ்ட் கொடுத்தார் என்ற செய்தி: தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி. வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி. அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார். அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம். இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.
கருணாநிதிதலையிடவேண்டும்!: “எனவே, இதுகுறித்துதாங்கள்தகுந்தநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுதென்னிந்தியநடிகர்சங்கஉறுப்பினர்கள்அனைவர்சார்பாகஉங்களைஅன்புடன்வேண்டுகிறோம். உங்கள்அனுமதியுடன்தமிழககாவல்துறைதலைவரிடமும்சென்னைபோலீஸ்கமிஷனருக்குதகுந்தநடவடிக்கைஎடுப்பதற்காகஇந்தமனுவின்நகலைஅளிக்கிறோம்”, என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விசயம் முதலமைச்சர் வரை போக வேண்டிய அவசியம், அவசரம், முக்கியத்துவம் இருந்ததா? எத்தையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்? நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.
இப்பொழுது 2017ல்அடக்கிவாசிக்குஊடகங்கள்: இதனால், பெருத்த பிரச்சினை ஆகியது. இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 தினத்தந்தி] / அக்டோபர் 3-ஆம் தேதி [தினமணி] அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினமலரில் அச்செய்தி வெளியானது[2]. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 07-10-2009ல் நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் –
1. சரத்குமார்,
2. சத்யராஜ்,
3. சூர்யா,
4. விஜயகுமார்,
5. விவேக்,
6. அருண்விஜய் மற்றும்
7. இயக்குனர் சேரன்,
8. நடிகை ஸ்ரீபிரியா
ஆகியோர் பத்திரிகையாளர்களை மிக தரக்குறைவாகவும், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது.
விபசாரம்பற்றிநடிகையர்–நடிகர்கள்ஏன்கோபமடைகின்றனர்?[3]: நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் வெளியிடப்பட்டன[4]: அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.
ரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.
விவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..
ஸ்ரீபிரியா: பாஸ்டர்ட். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’
சத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’.
அருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.
நடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார்.
ஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா?[5].
பெண்ணே பெண்ணை கொடுமைப் படுத்தும் போக்கு: விபச்சாரத்திற்கு மறுத்த குஜராத் பெண்ணின் மார்பகங்களைத் துண்டித்த ரூபிபேகம்!
Breasts cut off – 2014 Bhiwandi pimp
பெண்ணின் மார்பகத்தைத் துண்டித்த பெண் கைது[1]: மகாராஷ்டிராவில், தானே மாவட்டத்தில் பிவாண்டி நகரம் உள்ளது. இந்நகரம் ஜவுளித் தொழிலுக்கு புகழ் பெற்றது மற்றும் முன்பு மதகலவரம் நடந்ததாலும் இப்பெயர் நினைவில் உள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து செல்வதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து, புரோக்கர்களின் மூலம் பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பலர், லாபம் சம்பாதித்து வருகின்றனர். இங்குள்ள விபசாரவிடுதி ஒன்றில், குஜராத்திலிருந்து, புதிதாக அழைத்து வரப்பட்ட, 29 வயது மதிக்கத் தக்க இளம்பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினர்[2], ஆனால், அந்தபெண், இதற்கு இணங்கவில்லை[3]. ஆவேசமடைந்த, விபசார விடுதி உரிமையாளரான பெண், தன்னுடன் இருந்த ஆண் அடியாட்களின் துணையுடன், அந்த பெண்ணின் மார்பகங்களை சூடான இரும்பினால் பல முறை சித்திரவதை செய்யப்பட்டு, துண்டித்து, குரூரமாககொடுமைசெய்துள்ளார்[4]. பற்களும்உடைக்கப்பட்டுள்ளன[5]. இதில், அந்தபெண், பரிதாபமாகஇறந்தார், என்றெல்லாம்தமிழ்ஊடகங்கள்அரைகுறையாகசெய்திகளைவெளியிட்டுள்ளன.
பெண்களைக் கொடுமைப் படுத்தும் கிருத்துவ குரூரமுறை
ரூபி பேகம் யார் – நடந்ததுஎன்ன?: ரூபிபேகம் (34) [Ruby Begum (34)] என்ற பெண் விபசார விடுதியின் உரிமையாளர், இவர் பல பெண்களை வைத்து விபச்சாரத்தைத் தொழிலாக நடத்தி வருகிறார். [தமிழ் ஊடகங்கள் இப்பெரைக் கூட குறிப்பிடவில்லை] இவர் மும்பை புறநகர் பகுதியான பிவாண்டி நகரில் விபசார விடுதி வைத்து நடத்தி வருகிறாள். அஸ்லம் ஷேக் [Aslam Sheikh] என்ற ஏஜென்ட் குஜராத்திலிருந்து தன்னுடைய சகோதரி என்று சொல்லி அந்தபெண்ணைக் கடத்தி வந்தான். ரூ 30,000/-க்கு அவளுக்கு விற்றுள்ளான். இவன், இவனது நண்பன் ஆலம் மற்றும் ரூபி வாடிக்கையாளர்களிடம் விட்ட போது, அவள் மறுத்துளாள்[6]. இதனால் எட்டு நாட்கள் அவளை ஒருஅறையில் பூட்டி வைத்து கொடுமைப் படுத்தியுள்ளனர், ஆனால், அவள்விபச்சாரம்செய்யஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த பேகம் ஆலம் மற்றும் அப்சல் என்ற அடியாட்கள் துணையுடன், அந்த பெண்ணின் மார்பகங்களை சூடான இரும்பினா ல்பலமுறை குத்தி சித்திரவதை செய்யப்பட்டு, துண்டித்து, குரூரமாக கொடுமை செய்துள்ளார். ஒருவேளைஇறந்து விடுவாளோ என்று பயந்து விட்டுச்சென்றதாகத் தெரிகிறது. குற்றுயிராகக் கிடந்தஅவளைப் பார்த்த சிலர், பிவான்டியில் ஐ.ஜி.எம். மருத்துவமனையில் அப்பெண் ணை சிகிச்சைக்கிற்காக சேர்க்கப்பட்டிருக்கிறாள். பாடிப்பினாலும், அதிர்ச்சியினாலும், கொடுமைப்படுத்தியதானாலும்அவள்பேசமுடியாதநிலையில்இருக்கிறாள். அவள்இயல்பானநிலைக்குவந்ததும், போலீஸார்அவளிடத்தில்விசாரித்துஉண்மையினைஅறியஉள்ளனர்.
Medieval christian persecution of women as witches
ரூபி பேகம் கைது, சிறை, வழக்குப் பதிவு செய்யப்படுதல்: விசாரித்தததில்ரூபிபேகம் (34) [Ruby Begum (34)] என்றபெண்தான்அத்தகைய கொடுமை செய்திருக்கிறாள்என்றுதெரியவந்ததால், அவளைப் பிடித்து விசாரித்தபோது ஒப்புக்கொண்டுள்ளாள். மாஜிஸ்ட்ரேட்டின்முன்புகொண்டுவரப்பட்டபேகம், மார்ச் 25 வரைபோலீஸ்பாதுகாப்பில்வைத்திருக்கஉத்தரவிடப்பட்டுள்ளது[7]. இதனால், போலீசாரால்கைதுசெய்யப்பட்டஅவள்சிறையில்அடைக்கப்பட்டார்[8]. ஆலம்மற்றும்அப்சல்என்றஇருவர்ஓடிமறைதுள்ளனராம்[9]. இக்குற்றம்மார்ச் 19 அன்றுநடந்துள்ளதாகத்தெரிகிறது. இந்தியகுற்றவியல்சட்டம்மற்றும்பெண்களைதீயவழிகளுக்குடுபடுத்தும்செயல்–தடுப்புசட்டம்முதலியவற்றின்பிரிவுகளில் [Sections of the IPC and the Prevention of Immoral Trafficking Act (PITA)] இவர்களின்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது[10].
விபச்சாரத்தொழிலும், பெண்களும், தார்மீகமும், பிழைப்பும்: அனுமன்தெக்டி / காமாதிபுரா என்றஇடத்தில்விபச்சாரம்அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுஒருதொழிலாகவேஉள்ளதால், அவ்வாறுஅரசால்அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களதுநலனிற்காகசங்கினி / காமாதிபுராபோன்றஇடங்களில்வங்கியும் [Sangini Women’s Co-operative Bank] செயல்பட்டுவருகின்றது[11]. அவர்களதுநலன், ஆரோக்யம், குழந்தைகள்வளர்ப்பு, படிப்புபோன்றவிசயங்களில்இவ்வங்கிகள்உதவிவருகின்றன[12]. வழக்கம் போல அந்நிய ஊடகங்கள், இந்திய பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்பது போல செய்திகளை வெளியிட்டுள்ளன. இக்காலத்தில் விபச்சாரம் சட்டரீதியில் சில பகுதியில் நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. அந்நிலையில், அத்தொழிலைச் செய்ய பெண்கள் தேவை என்ற விசயம் புரிந்து கொள்ள முடியாதது அல்ல. ஆனால், எந்த பெண்ணுமே விபச்சாரத்தை அறிந்து செய்ய முன்வரமாட்டாள். எனவே, ஏற்கெனவே பாதிக்கப் பட்டப் பெண்கள் வருவர் என்பது போல உள்ளது, மேலும் ஏழ்மையில் உள்ளவர்கள் பெண்களை விற்ருவிடுதல், வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால், அதையும் மீறி ஏஜென்டுகளை வைத்துக் கொண்டு பெண்களைக் கடத்திக் கொண்டு வருதல், பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு வருதல்,, விற்றல் போன்ற வேலைகளில் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. அவர்களை கண்காணித்து போலீஸாரும் அவ்வப்போது பிடித்து வருகின்றனர்[13].
விபச்சாரத்திற்கு பெண்கள் நுகரும் பொருட்களாகும் போது: ஒரு பெண், இன்னொரு பெண்ணை அவ்வாறு செய்ய முடியுமா, நினைத்திருப்பாளா என்று நினைத்துப் பார்த்தால், ரூபி பேகம் போன்றவர்களுக்கு விபச்சாரத்திற்கு எடுத்துவரப்படும் பெண்கள் வியாபாரப் பொருட்கள் தாம். காசு கொடுத்து வாங்குவதால், அபொருட்கள் உபயோகத்திற்குப் போக வேண்டும், அவற்றால், பதிலுக்கு வரும்படி வரவேண்டும். செலவு போக லாபம் பார்க்க வேண்டும். ஆகவே, எப்படி ஒரு வணிகன் அல்லது வியாபாரி உள்ளானோ அதுப்போல இப்பெண்ணும் இருப்பதால், அவளிடத்தில் பெண்மை என்று எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. அதனால் தான் அவள் பெண்ணின் தனங்களையே அறுத்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறாள். இங்கு சமூக சேவகிகள், மனோதத்துவ வித்தகர்கள், சமூகமேதைகள் முதலியோர், பெண்கள் ஏன் சீரழிக்கப் படுகின்றனர் என்பதை விட, அவர்கள் சீரழிந்த பிறகு, அவர்களின் உரிமைகள் என்ன என்பனவற்றைப் பற்றி தான் விவாதிக்கிறார்கள். மேலும் இந்தியர்-அல்லாத ஊடக வித்வான்களும் அவற்றைப் பற்றிதான் முக்கியத்துவத்தையும் அளிக்கிறார்கள். இத்தகைய சமூக சீரழிவுகளை எடுத்துக் காட்டினால், அவர்கள் எல்லோரும், நாகரிகத்தை, மற்றத்தை, முன்னேற்றத்தை எதிர்ப்பவர்கள் என்றும் முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.
பெண்களை மதித்தல்-மிதித்தல் என்ற முரண்பாடான போக்கு: இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் இப்பிரச்சினை பெண்களை மதித்தல்-மிதித்தல் என்ற முரண்பாடான சித்தாந்தத்தில் தான் அறிவிஜீவிகள் அணுகி வருகின்றனர். விபச்சாரம் கூடாது, ஆனால், விபச்சாரிகளின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்; பெண்களை மதிக்க வேண்டும், ஆனால், எச்.ஐ.வி வராமல் உடலுறவு கொள்ள வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன, போதிக்கப்படுகின்றன. இந்திய சமுதாயத்தைப் பொறுத்த வரையிலும் முகலாயர் மற்றும் ஐரோப்பியர் ஆட்சி காலங்களில் விபச்சாரம் பலமுறைகளில் ஊக்குவிக்கப் பட்டது, பெருக்கப் பட்டது. இப்பொழுது எம்,என்,சி கம்பெனிகளின் வரவினால், அமெரிக்கத் தாக்குதல்களினால், விபச்சாரம் மறுபடியும் பலமுறைகளில் ஊக்குவிக்கப் படுகிறது, பெருக்கப் படுகிறது. அவர்களுக்கு வேண்டியவற்றை “சப்ளை” செய்யவேண்டும் எண்ணத்தில் இவையெல்லாம் செய்யப் படுகின்றன. பெங்களூரு எப்படி மேனாட்டவர்களுக்கு ஏற்ப குடி, கூத்து எல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டுள்ளனவோ, அதேபோல, எங்கு அத்தகைய தொழிற்சாலைகள் அல்லது அவர்களது தங்குமிடங்கள் உள்ளனவோ அங்கு அவர்களது வசதிகளுக்கு ஏற்ப இவையெல்லாம் செய்துதரப்படுகின்றன. தொழிற்நுட்பம் மாற்றம் செய்ய வரும் ஆலோசகர்கள் என்ற ரீதியில் இவர்கள் வந்து செல்வதாலும், அவர்கள் மூலம், ஆதாயங்கள் கிடைப்பதாலும், இந்திய கூட்டாளிகள் இவற்றைச் செய்துத்தரத் தயங்குவதில்லை.
[1]தினமலர், பெண்ணின்மார்பகத்தைதுண்டித்தபெண்கைது, சென்னை, 21-03-2014, பக்கம்.9.
[4] Ruby allegedly attacked her when she refused to cooperate, said the police. The victim was rescued by locals, and admitted to a local hospital. On Saturday, she was shifted to the Thane civic hospital. The police are yet to record her statement. The victim was earlier branded with hot iron by Ruby.
[6]The girl was forced to get into the flesh trade by Alam, Ruby and the brothel-keeper’s boy-friend Afzal. She was produced in front of customers but the brave girl kept refusing, said the police “Getting frustrated that she was not making any money, the trio beat her up eight days ago,” said Bhiwande police inspector Rajan Saste. She was taken into a isolated room where the girl was brutally beaten by Alam and Afzal. “Her breasts were slashed by Alam and her teeth were broken by Afzal,” Saste added.
ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது!
மும்பையில் விபச்சாரம்: மும்பையில் விபச்சாரம் என்பது ஒரு சமூகப் பிரச்சினை அதே நேரத்தில் தொழிலாகவும் இருந்து வருகிறது[1]. இந்தியாவிலேயே வெளிப்படையாக “ரெட்-லைட் ஏரியா” என்று குறிப்பிடப் பட்டு விபச்சாரம் தொழிலாக நடத்தப் பட்டு வருகிறது. ஆனால், அதனால், பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகின்றது. ஜான் கெர்ரி என்ற அமெரிக்க செயலாளரால் வெளியிடப் பட்டுள்ள “Trafikking in persons Report – 2013” அறிக்கையில் இதைப் பற்றி அலசப்பட்டுள்ளது[2]. இது குறிப்பிற்காக இது கவனத்திற்கு கொண்டு வந்தாலும், இன்றைய நிலையில் அமெரிக்காவின் தாக்கத்தால் தான் இந்திய சமூகம் அதிகமாகவே கெட்டு வருகிறது[3]. கம்பெனிகள், அவர்கள் கொடுக்கும் விளம்பரங்கள், அவற்றின் பொருட்கள், சேவைகள் எல்லாமே ஒரே கோணத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அதில் பெண்மையைப் போற்றுவதாக ஒன்றும் இல்லை. ஆபாசமாக, நிர்வாணமாகக் காட்ட வேண்டும் என்றுதான் அவை உள்ளன. பிறகு அவர்கள் எப்படி இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.
மாடல் புரோக்கர் விபச்சாரம் நடத்தியது: மும்பை அந்தேரியில் சொகுசு பலமாடி அடுக்குக்கட்டிடங்கள் கொண்ட பகுதி – ஒஸிவாரா, லோகன்ட்வாலா. அங்கு வாழ்பவர்கள் எல்லோருமே IAS மறும் IPS அதிகாரிகள் தாம். ஒரு சொஸைடி அமைக்கப் பட்டு அவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். ஒரு IAS அதிகாரியின் பிளாட்டை [flat B 1402, Meera Towers, Oshiwara area, Lokhandwala] இம்தியாஸ் கான் என்ற மாடல்களை வைத்து விழாக்கள் நடத்துபவன் வாடகைக்கு எடுத்திருக்கிறான். ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கிறானாம். மாடல்களை உருவாக்குகின்றவன், அறிமுகப்படுத்துப்பவன், புகைப்படங்கள் எடுப்பவன், சாதாரணமாக அவ்வாறு மாடலுக்கு வரும் பெண்களுடன் உறவாடாமல் இருக்கமாட்டான் ஏன்ன்பது தெரிந்த விஷயமே. அத்தொழிலுக்கு வரும் பெண்களும் பெண்மைக்குரியவற்றை விட்டுவிட்டுதான் வேலைக்கு வரவேண்டியுள்ளது. கேமராவின் முன்பு, உடலைக் காட்டி-காட்டி பழக்கமாகி விடுவதால் ஒரு நிலையில் விபச்ச்சாரத்திற்கும் ஒப்புக் கொள்கிறார்கள் போலும். அதனால், இம்தியாஸ் கான் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்து வருகிறான்.
போலீஸாருக்கு தகவல் கிடைத்தது, கைது செய்தது: இதைப் பற்றி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், விபச்சாரிகளை தேடி வருவது போல வந்து பேரம் பேசியுள்ளனர். புரோக்கர் குறைந்த நேரத்திற்கு என்றால் நடிகைகூட கிடைப்பாள் என்று ரூ. ஒரு லட்சம் கேட்டான். பிறகு பேரம் பேசியதில் ரூ.25,000/-ற்கு ஒப்புக் கொண்டான். ஒரு நடிகையுடன், வெளியே வந்தப்போது, போலீஸார் பிடித்துக் கொண்டனர். இந்நிலையில் குறிப்பிட்ட பிளாட்டை போலீஸார் ரெயிட் செய்தலில் ஐந்து நடிகைகள், மூன்று புரோக்கர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நடிகைகள்[4] டெலிவிஷன் நிகழ்சிகள், தினசரி தொடர்கள், போஜ்பூரி மற்றும் இந்தி திரைப்படங்கள் முதலியவற்றில் நடித்துள்ளனர்[5]. அதில் ஒருவர் பிரபலமான இந்தி நடிகை திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதால், பெயர் வெளியிடப்படவில்லை[6]. பிடிபட்ட புரோக்கர்கள் – இம்தியாஸ் செயிக், இஸ்ரர் ஆலம் மற்றும் கரன் முண்டே [Imtiyaz Shaikh, Israr Alam and Karan Munde] என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்[7].
நாகரிகத்தின் சீரழிவு: சூரியநெல்லி பெண் வழக்கு பெரிய-பெரிய அரசியல்வாதிகளால் காலம் நீட்டிக்கப்பட்டது. வழக்கின் நிலையும் நீர்க்கப்பட்டது. இன்று கற்பழிப்பு வழக்கு விபச்சார வழக்கு போல மாற்ற முயற்சி செய்யப்படுகிறது[8]. மேனாட்டு நாகரிகம் படித்தவர்களையும் எப்படி பாதிக்கும் என்பது சமீபத்தைய வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன[9]. பெண்களே மறைமுக விபச்சாரத்திற்கு ஒப்புக் கொள்ளும் நிலையிம் தெரிகிறது[10]. தில்லி கற்பழிப்பு வழக்கு தேவையில்லாத அளவிற்கு, அநாவசியமான விஷயங்கள் விவாதிக்கப் பட்டு, அந்தரங்கள் ஊடகங்களில் வெளியாகின. உடலுறவுக்கு ஏற்ற வயது எது என்றெல்லாம் அமைச்சர்கள் விவாதித்தனர்[11]. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை[12] என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்! பள்ளிமாணவிகள் காதலர்களுடன் சுற்றுலா என்று சென்றது[13], ஆசிரியர்கள் மாணவிகளை செக்ஸ் தொல்லை செய்தது[14], முதலியன சமூக பிறழ்சி என்பதை விட, அமெரிக்காவின் தாக்கம் இந்திய சிறுவர்களை, மாணவர்களை அதிக அளவில் கெடுக்கிறது என்றுதான் தெரிகிறது.
[4] During the interrogation, the police officers discovered that all the five girls are known actresses; some of them have played character roles in Saas Bahu daily soaps. Others have also acted in Bhojpuri and C grade films.