மத்தியஅரசுகொண்டுவந்துள்ளசட்டத்தின்படி, கருமுட்டைகளைஅதற்கானவங்கிகளில்இருந்துமட்டுமேபெறவேண்டும்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, கருமுட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெறவேண்டும். ஆனால் இதற்கான கருமுட்டை வங்கிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. 23 வயது முதல் 35 வயது வரையிலான பெண்களிடம் அவர்களின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருமுட்டைகளை எடுக்க வேண்டும். குழந்தையில்லாத தம்பதியருக்கு ஒருமுறைக்கு மேல் கருமுட்டைகளையோ அல்லது விந்தணுக்களையோ தானமாக வழங்கக்கூடாது என்று அந்த சட்டத்தில் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்தது[1]. இதில் உள்ள சட்டப்பிரிவுகளை எதிர்த்து காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த, கருமுட்டைகளை தானமாக பெற விரும்பும் 143 பெண்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[2]. இதிலிருந்து, இதையே ஒரு தொழிலாக செய்ய பெண்கள் தயாராகி விட்டனர் என்று தெரிகிறது.
செயற்கைகருத்தரித்தல்மூலமாககுழந்தைபெற்றுக்கொள்ளும்உரிமையைபறிக்கும்செயல்என்பதால்இந்தசட்டப்பிரிவுகளைரத்துசெய்யவேண்டும்: குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் இது மருத்துவரீதியாக நடைமுறை சாத்தியமற்றது. ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது[3]. இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தையில்லாத தம்பதியினர், செயற்கை கருத்தரித்தல் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்கும் செயல் என்பதால் இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்[4], என்றளவுக்கு, மனுவில் கோரியுள்ளனர். அதாவது, அந்த அளவுக்கு சட்ட நுணுக்கள் அவர்களுகேத் தெரியுமா அல்லது அவர்களுக்கு அவ்வாறு ஆலோசனைக் கூறப்பட்டதா அல்லது, பின்னணியில் வியாபார ரீதியில் தொடர்ந்து செய்ய, சம்பந்தப் பட்டவர்கள் சட்ட ரீதியில் இருக்கும் தடுப்புகளை உடைக்க முயல்கின்றனரா என்று கவனிக்க வேண்டும்.
ஆய்வுஅறிக்கை: மேலும், கருமுட்டை வங்கிகள் அமைக்கும்வரை கருமுட்டைகளை தானமாக பெற்று செயற்கை கருத்தரித்தல் நடைமுறையை தொடர அனுமதிக்க வேண்டும்[5]. அத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி 6 முறை கருமுட்டைகளை தானமாக பெற அனுமதிக்க வேண்டும்[6]. இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது[7]. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், ஒரு பெண் தனது வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை உள்ளதா என கேள்வி எழுப்பினர்[8]. அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்[9]. இதையடுத்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர்[10].
அமெரிக்க–ஐரோப்பியசோதனைகளும், இந்தியபெண்மையின்சோதனையும்: ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது என்றால், இந்தியாவில் அத்தகைய ஆய்வுகளை நடத்தியுள்லனரா, யார் நடத்தியது என்று தெரியவில்லை. இனிமேல் ஒரு வேளை ஆராய்ச்சி செய்து அறிக்கை தயார் செய்வார்கள் போலிருக்கிறது. இனப்பெருக்க மருத்துவத்திற்கான அமெரிக்கன் சொசைட்டி (The American Society for Reproductive Medicine, ஏஎஸ்ஆர்எம்) ஒரு முட்டை நன்கொடையாளருக்கு அவரது வாழ்நாளில் ஆறு சுழற்சிகள் என்று தொழில்துறை வரம்பை அமைத்துள்ளது, அதற்கு உதவும் கிளினிக்கிற்கு அல்ல. அவள் ஆறு சுழற்சிகளை முடித்தவுடன், அவள் வேறொரு வசதியிலோ அல்லது மற்றொரு பெறுநருக்கோ நன்கொடை அளிக்க தகுதியுடையவள் ஆகமாட்டாள். முட்டை தானம் செய்பவர்களுக்கு இந்த வரம்புக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, நன்கொடையாளருக்கு ஏற்படும் உடல்நல அபாயம் மற்றொன்று கவனக்குறைவாக உள்ள உறவின்மை ஏற்படுதல். முக்கியமாக கருமுட்டை உருவாவதற்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகளால் கருப்பை வீக்கமடையும். இதை கருப்பை உயர் ரத்த வெளிப்பாடு என்று கூறுவார்கள். இந்த முறையினால் நன்கொடையாளர்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக மரணம் நேரும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கருப்பையில் இருந்து முட்டை எடுக்கும் போது கவனமாக செயல்படவில்லை என்றால் கருப்பை கிழிந்து ரத்தப்போக்கு ஏற்படும்[11]. இவற்றையெல்லாம் தானம் செய்யும் பெண்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆகவே, ஒன்றுக்கு மீறி செய்யும் தானம், உயிருக்கு ஆபத்தும் உண்டாக்கும்[12].
பெண்ணியவாதிகள் மற்றும் சித்தாந்தவாதிகளின் மௌனம்: கருமுட்டை தானம் என்பது ரத்த தானம் போன்றது அல்ல; உறுப்பு தானம் ரத்த தானத்தை விட மாறுபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம், ஆனால், அதையும் ரத்த தானம் போன்றவற்றுடன் ஒப்பிட முடியாது; அந்நிலையில் கருமுட்டை தானம் என்பது, பெண்மையினை, பெண்ணின் தாய்மையை, பெண்ணின் உடல் நலத்தை பாதிக்கக் கூடிய விவகாரம் ஆகும். இது பற்றி மேலே விவரிக்கப் பட்டது. ஈரோடு விவகாரத்தில் ஈடுபட்டுள்ள பெயர்கள் மறைக்கப் பட்டாலும், முஸ்லிம்கள் என்று தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட மதம் என்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், இணைப்பு (nexus), சம்பந்தம், அத்தகைய வேலையை வியாபாரமாக செய்யும் முறை, மற்ற மாநிலங்களிலும் இருக்கும் தொடர்புகள் அதையும் கவனிக்கத் தூண்டுகிறது. இருப்பினும், வாடகை தாய் போல, இதற்கும் சட்டரீதியில் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், அதை பின்பற்றாமல், பெண்களை கருமுட்டை உருவாக்கும் எந்திரம் போல பாவிக்கப் பட்டு, சதாய்க்கப் படுகின்றனர். இதுவரை, பெண் உரிமை, பெண்ணியம் என்றெல்லாம் பேசும், கூவும், கூச்சலிடும் நாரிமணிகள், பெண்மணிகள் யாரும் இது பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை தான் தெரிகிறது. இந்துத்துவம், திராவிடத்துவம், பெரியாரிஸம் என்றெல்லாம் பேசுபவர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
[5] தமிழ்.ஒன்.இந்தியா, பெண்ணிடம்ஒருமுறைக்குமேல்கருமுட்டைகளைஎடுக்கலாமா? “ஆதாரத்தைகாட்டுங்கள்” சென்னைஹைகோர்ட்உத்தரவு, By Jackson Singh, Updated: Friday, December 16, 2022, 19:38 [IST].
ஜூன் 2022 – ஈரோட்டில்ஆரம்பித்தவிவகாரம்: சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா, அவர் கருமுட்டைகளை விற்பதற்கு துணை செய்ததாக கூறப்படும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தோழி மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 16வயது மகளை வளர்த்து வந்த தாய், கணவனை பிரிந்தார். அதே பகுதியில் வேலை செய்த பெயின்டருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்தார். பெயின்டரும், அப்பெண்ணும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். மகளை பெயின்டர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, 8 முறை கருமுட்டை விற்பனை செய்துள்ளார்[1]. இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்[2]. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரித்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஈரோடு பாரதிபுரம் ஜான் ஆகியோரை போக்சோ, ஆதார் அட்டையை திருத்தம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
சம்பந்தப்பட்டமருத்துவமனைகள்மீதுநீதிமன்றங்கள்மூலம்ஒழுங்குநடவடிக்கைஎடுக்கபரிந்துரைவழங்கப்படுகிறது: சென்னை, தேனாம்பேட்டையில் பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது[3]: சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது.அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலியாக உள்ளது.போலியான ஆதார் அட்டை என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது கருமுட்டை தானம் குறித்த சாதக, பாதகங்கள் சிறுமியிடம் முறையாக விளக்கப்படவில்லை.விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை. கருமுட்டை விவகாரத்தில், ஆறு மருத்துவமனைகள் ஐசிஎம்ஆர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து 2 தனியார் மருத்துவமனைகள் நீக்கம். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நீதிமன்றங்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்[4].
சிறுமியின்தாய்ஏற்கனவேகருமுட்டைதானம்என்றபெயரில்கருமுட்டைகளைவிற்பனைசெய்யும்தொழிலைசெய்துவந்தவா்: இந்த விவகாரம் தொடா்பாக சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் துணை இயக்குநா் குருநாதன், இணை இயக்குநா் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்கிய 6 போ் குழுவினா், ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தொடரும் நிலையில், சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவா் என்பதும், அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் தனது மகளையும் கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. சேலம் மற்றும் ஒசூா் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
14 வயதுமுதல் 16 வயதுவரைஇரண்டுஆண்டுகளாககருமுட்டைஎடுத்துவிற்றுள்ளனா்: ஈரோடு, பெருந்துறையில் ஆய்வு செய்தோம். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை பதிவேடுகளை சரிபார்த்து வருகிறோம். இதில் தவறு நடந்திருந்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னா், கேரளம் மற்றும் ஆந்திரம் மாநில அரசுகள் உதவியுடன் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றார். 21 வயதுக்கு மேல் உள்ளவா்களிடம் மட்டும்தான் கருமுட்டையை அவா்களது அனுமதியோடு பெற வேண்டும். ஆனால், இந்த சிறுமியிடம் 14 வயது முதல் 16 வயது வரை இரண்டு ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்றுள்ளனா். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மருத்துவச் சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இனப்பெருக்கதொழில்நுட்பஒழுங்குமுறைச்சட்டத்தைஅமல்படுத்ததமிழகஅரசுகுழுஅமைத்தது; இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக, மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான இந்தக் குழுவிற்கு குடும்பநலத் துறை இயக்குநர் துணை தலைவராகவும், மாதர் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தச் சட்டத்தின் படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்களிடம் இருந்து மட்டும்தான் கருமுட்டைகள் வாங்க வேண்டும்,
வாழ்நாளில் ஏழு கருமுட்டைகள் வரை மட்டுமே கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டது[5].
சம்பந்தப்பட்ட மருத்துவர், கருமுட்டை அளிக்கும் பெண்ணை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது,
எந்த மோசடியிலும் ஈடுபடக் கூடாது.
மீறி ஈடுபட்டால், முதல் முறை குறைந்தபட்சம் ரூ.5 லட்சம், அதிகபட்சம் ரூ.10 லட்சம், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[6].
சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு நடைமுறையில் உள்ள இனப்பெருக்க தொழில்நுட்பம், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்கும் விதமாகவும், தமிழக சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியார் மருத்துவமனைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்பது தொடர்பாகவும் இனிவரும் நாள்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
[5] தினமணி, கருமுட்டைவிவகாரம்: ஒழுங்குறைசட்டத்தைஅமல்படுத்தகுழுஅமைத்ததுதமிழகஅரசு, By DIN | Published On : 11th June 2022 10:56 AM | Last Updated : 11th June 2022 06:47 PM
வாடகைத்தாய்– தாய்அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.
வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.
வாடகைத்தாய்ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும் அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction) அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
பேபிமன்ஜிவழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.
புதியசட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR) அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.
வாடகைத்தாயும்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும் சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின் மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].
ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:
குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல் முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.
குழந்தையின்மை: தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு நினைப்பது, எழுதுவது தவறு, காலம் தாழ்ந்து குழந்தை பிறப்பதும் நிதர்சனமாகத் தான் உள்ளது. இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். தத்து எடுப்பு என்ற சாதாரணமான முறையும் இருந்தது. முன்பெல்லாம் குடும்பத்தில், உறவினர்களில் அப்பழக்கம் இருந்தது. பிறகு மற்றவர்களிடமிருந்து தத்து எடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. உண்மை பெற்றோர் வந்து சொந்தம் கொண்டாடுவது பணம் கேட்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அனாதை இல்லங்கள்போன்றவை,, இதனை ஒரு வியாபாரமாக்கியது. அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. அதனால், படிப்படியாக தத்து எடுக்கும் முறை குறைந்த்து. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.
விஞ்ஞான முறையில் கருத்தரித்தல், குழந்தை பெற்றல்: குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை. ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.
வாடகைத்தாய்: இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.
இரண்டாவதுடிரெடிஷனல்வாடகைத்தாய்: இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம். வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.
இந்தியாவில்வாடகைத்தாய்தொழில்நடைபெறுகிறது: பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவியன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தியாவில்வாடகைத்தாய்மூலம்குழந்தைபெறுவதுமலிவானது: இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம். குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
வாடகைத்தாய்உருவாகும்புதியபிரச்சினைகள்: வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது. வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.
வாடகைத்தாய்சட்டச்சிக்கல்கள்: தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.
“ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாகஇருக்கிறேன்” – பதில் சொல்லாமல் ஓடிய நிகிதா ஆஜாத் – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (3)
27-11-2015 அன்றையஎன்னுடையபதில்: அந்த இளம்பெண், என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு, முஸ்லிம்களின் பழக்க-வழக்கக்களையும் நாங்கள் மதிப்பதில்ல என்று குறிப்பிட்டதாலும், இதுதான் உங்களது பிரச்சாரத்தின் “நாகரிகம்” மற்றும் “பண்பாடா”, “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்ன நினைப்பார்கள் என்று, நான் பதிவு செய்ததால், இப்பதிலை பதிவு செய்கிறேன்[1]:
மதப்பிரச்சினை/சண்டைகளை உங்களது கிருத்துவ மற்றும் முஸ்லிம் நண்பர்கள் தான் செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினை குறைக்கூறுகின்றனர், அதே நேரத்தில் மற்ற மதங்களின் நல்லதை எடுத்துக் காட்டுகிறார்கள் என்பதை அவர்களது பதிவுகளிலிருந்தே (உண்மையில் அவையெல்லாம் தவறு, பொய் மற்றும் கட்டுக்கதைகள்) அறிந்து கொள்ளலாம்[2].
இப்பொழுதுதான், “பாலியல்ரீதியில்வேற்றுமைப்படுத்தும்எல்லாமதங்கள்மற்றும்சடங்குகள்எல்லாவற்றிற்கும்எதிர்க்கிறோம்”, என்ற வாதமே வந்துள்ளது. அதிலும், நான் பல இடங்களில் அவர்களது வாதங்களுக்கு எதிராக பதில் கொடுத்த பிறகு, என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் இதனை ஆரம்பித்துள்ளீர்கள். அதனால் தான், நான் ஆரம்பத்திலேயே, “செக்யூலரிஸத்துடன்ரத்தத்தைசொரியுங்கள்” என்று குறிப்பிட்டேன்[3].
அவதுறான, மோசமான, கீழ்த்தரமான வார்த்தைகள், படங்களுடன் பிரச்சாரம் செய்து வருவதால் தான், உங்களை நீங்களே நியாயப்படுத்திக் கொள்ள, “நேரிடையானவிவாதம்புரிவதுஅவர்களதுதிட்டமல்லஎன்றுதெரிகிறது”, என்ற வாதம் வைக்கப்பட்டுள்ளது.
நேரிடையான விவாதம் – உங்களுடைய பதிவுகளில் இல்லை, அதனை எடுத்துக் காட்டிய நிலையில், அத்தகைய பிரதிவாதமும் வெளிப்படுகிறது.
பார்ப்பனஅடிப்படைவாதிகள்நமதுஇயக்கத்திற்குஅவப்பெயர்ஏற்படுத்தஇன்னொருமுறையைத்தேர்ந்தெடுத்துள்ளார்கள்[4] – என்னது இது? என்னை “பார்ப்பன அடிப்படைவாதி”, “மத-அடிப்படைவாதி” என்று அழைப்பதற்கு என்ன உரிமை உள்ளது?
உம்முடைய திட்டம் என்ன?
நான் எடுத்துக் காட்டியவற்றை முறைப்படி எதிர்கொள்ள முடியவில்லை, பதிலளிக்க முடியவில்லை என்றால், இயலாமை மற்றும் அந்த பொருளைப்பற்றிய உண்மை தெரியாது என்பதனை ஒப்புக்கொள்ளுங்கள்.
இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடவேண்டாம்.
உண்மையில், உமது தாக்குதல் போக்கிலிருந்தே, உமது நிலை வெளிப்பட்டுவிட்டது[5].
நம் மீது ஆணாதிக்க வார்த்தைகளை உபயோகித்தும், “உங்கள்தாயார்கள்உங்களுடையபதிவுகளைப்பார்த்தால்” என்றும் ஆரம்பித்துள்ளார்கள்- ஆமாம், நான் இவ்வாறுபதிவு செய்தேன்.
“எனக்குவயது 65 ஆகிறது, அதனால், உங்களதுபிரச்சாரப்போக்கைக்கவனித்து, மிக்ககவலையுடன்உங்களுக்குமற்றும்உமதுநண்பர்களுக்குபதிலளிக்கஆரம்பித்துள்ளேன்.
“இன்றைக்குஇணைதளத்தைகுழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள்என்றுபலரும்பார்க்கிறார்கள். அதனால், நிச்சயமாகபடங்கள்அல்லதுவேறுமுறையில் (கருத்துகளை) வெளிப்படுத்தும்போது, நாகரிகம்மற்றும்பண்பாடுகடைப்பிடிக்கப்படவேண்டும்”
மற்ற விமர்சனங்கள் என்னைப் பற்றியதல்ல என்றாலும், நான் நியூட்டனது மூன்றாம் விதி எப்படி வேலை செய்யும் என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு உதாரணம் சொல்வதானால், “கடவுளே, என்னுடையகால்களிடையேபார்க்காதே, சரியா” என்ற புகைப்படம்[7].
“அதேநேரத்தில்நமதுஆதரவாளர்களைஅந்தகோவில்மற்றும்கோவில்அதிகாரிகரிகளுக்குஎதிராகஎந்தவிதமானவார்த்தைகளையும்உபயோகப்படுத்தவேண்டாம்என்றுவேண்டிக்கொள்கிறேன்” – இப்பொழுது தான், இவ்வாறு சொல்கிறிர்கள்! ஆனால், உங்களது முழுப்பிரச்சாரம், கோவில், கோவில் நிர்வாகத்தினர், பழக்க-வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு எதிராகத்தான் இருந்துள்ளன, இருக்கின்றன. ஆகையால், சட்டப்படி, யாதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் வந்துவிட்டது.
ஓ, பிரச்சாரகர்களே, அமைதியாகவும், சாந்தமாகவும், பொறுமையாகவும் யோசியுங்கள். ஏனெனில், உங்களில், பெரும்பாலோர், பள்ளி-கல்லூரிகளில், நிறைய ஆசைகளுடன், எதிர்பார்ப்புகளுடன் மனங்களில் படித்து வருகிறீர்கள். ஆகையால், நிகிதா ஆஜாத் போன்றோர்களால் தூண்டிவிடப்பட்டு, சித்தாந்தரீதியில், இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதை விட, உங்களது படிப்புகளில் கவனத்தைச் செல்லுத்துங்கள்.
“பதிலாகசித்தாந்தரீதியில், வாதங்களைஉபயோகப்படுத்துங்கள். அதுநமதுபிரச்சாரத்தைமேன்படுத்தும்” – என்று இப்பொழுது பறைச்சாற்ற அரம்பித்து விட்டாகியது போலும். இப்பொழுது தான் உங்களது பிரச்சாரத்தில் தரமில்லை என்று உணர்ந்தீர்கள் போலும்! இன்றைக்கு வெள்ளிக் கிழமை, கடைசி நாளான இன்று உமக்கு ஞானோதயம் பிறந்துள்ளது.
நான் அன்னை தெய்வம் உங்களுக்கெல்லாம் எல்லாவிதமான செழுமை, சீமை மற்றும் சிறந்த எதிர்காலத்தை கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
வேதபிரகாஷ்.
27-11-2015.
இதற்கு நிகிதா ஆஜாதால் பதில் கொடுக்க முடியவில்லை, மாறாக, என்னை அந்த உரையாடலில் பங்குக் கொள்ள தடை செய்தது மட்டுமல்லாது, தளத்தைப் பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள். ஆகவே, இதுதான், என்னுடைய கடைசி பதிலாக இருக்கப்போகிறது[8].
எண்ணவுரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, என்றெல்லாம் இவர்கள் பேசுகிறாற்கள், ஆனால், அது இவ்வாறுதான், செயல்படுகிறது. அடுத்தவர்களது எண்ணம், கருத்து, பேச்சு பற்றி அவர்களுக்கு பொறுமையில்லை, அவற்றிற்கு தடை விதிக்கிறார்கள்.
இத்தகைய போக்கை என்னவென்று சொல்வது?
இவ்விதமாகத்தான், அவர்கள் தங்களது சகிப்புத் த்ன்மையினை வெளிப்படுத்துகிறார்கள் போலும்?
அவர்களது பிரச்சாரத்தை டிசம்பர் 4 வரை நீட்டித்துள்ளது போல தெரிகிறது.
வேதபிரகாஷ்.
30-11-2015.
அதற்குள், சென்னையில் வெள்ளம் வந்து என்னை முடக்கி விட்டது. ஆறுநாட்களில் சிறையில் இருந்தது போல தனியாக இருந்தேன். மின்சாரம், தொலைபேசி. இன்டெர்நெட் என்று எதுவும் இல்லை. இன்று தான், நண்பரின் உதவியால் ஓரளவிற்கு, வெளிவந்துள்ளேன்.
[2] இதையெல்லாம் பதிவு செய்யும் போதே, உலகளவில் ஐசிஸ், ஐசில், முதலிய தீவிரவாதம் பற்றி பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த பெண்கள் அவற்ரைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கைதான்!
[3] இது அக்குழுவில் உள்ள பெண்களை நன்றாகவே, பாதித்துள்ளது என்று தெரிகிறது. ரத்தம் மனிதர்களுக்கு, ஏன் பெண்களுக்கும் ஒன்று என்றிருக்கும் போது, தடையும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும். பிறகு, சபரிமலையைப் பிடித்துக் கொண்டிருப்பது, எதையோ திசைத்திருப்பும் போக்காக உள்ளது போலும்!
[4] அதாவது, எதையும் பொருட்படுத்தாமல், அடுத்தவர்களை வசைப்பாடுவது என்பதனை, இந்த இளம்பெண்ணிற்கு இந்த வயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால், அச்சித்தாந்தவாதிகள் பெரியவர்களை என்ன மதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
[5] பொதுவாக, இவர்கள் மற்றவர்களை “பாசிஸவாதிகள்” என்றும் குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் தாம்“பாசிஸவாதிகளாக” இருக்கிறார்கள். ஏனெனில், இவர்கள், என்றுமே தாங்கள் சொல்வதைத்தான், அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்ல வேண்டும், அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது, என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
[6] நிருபர் கேட்ட துடுக்கான கேள்விக்கு, துடுக்காகவே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை வைத்துக் கொண்டு, இவ்வாறான, பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அற்ப விளம்பரத்தப் பெறவேண்டும் என்பது, இவர்களுக்குத்தான் தோன்றியுள்ளது.
[7] உண்மையில், இந்த புகைப்படத்தைக் கண்டித்து, சிலர் பதில் அளித்துள்ளனர். அது, புகைப்படத்தைப் போன்று வக்கிரமாகத்தான் இருந்துள்ளது.
“ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” அல்லது “ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” [“Happy to Bleed”] என்று இளம்பெண்கள் ஏதோ பிரச்சினை ஆரம்பித்தபோது, சரி, ஏதோ, பெண்ணிய வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பொறுமையாக அந்த தளத்தில் உள்ள உரையாடல்கள் முழுவதும் படித்த பிறகு, அது சித்தாந்த ரீதியில் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டு, அங்கு பதில் அளித்தேன். நாத்திகர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் இப்பிரச்சினையை வைத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயல்படுவது தெரிந்தது. ஆனால், அக்குழு நாத்திகம், கம்யூனிஸம், இந்திய எதிர்ப்பு[1], காலிஸ்தான் ஆதரவு[2], இந்து-எதிர்ப்பு[3] என்று பலநிலைகளில் செயல்படுவது புரிந்தது. நிகிதா ஆஜாத் என்ற இளம்பெண், சீக்கிய பென் ஆனதால், இவற்றையெல்லாம், ஒரு கலவையாக்கி, இப்பிரச்சினையில் லாபம் பெற முயல்வது தெரிகிறது. “யூத் கி ஆவாஜ்” (இளைஞர்களின் குரல்), “பேஸ் புக்” முதலியவற்றில் உள்ளவையும் அதே தோரணையில் உள்ளன[4]. ஜனநாயக வாலிபர் சங்கம் (DSO) போர்வையிலும் அச்சித்தாந்தங்கள் வெளிப்பட்டு பதிவாகியுள்ளன[5]. தமிழில், தீக்கதிரில், “ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” என்பது பற்றி, சிறு குறிப்பும், கீழ்கண்டவாறு வெளியாகியுள்ளது. டிசம்பர் 6, 2015 அன்று இடதுசாரி கூட்டங்கள் “பாபரி மஸ்ஜிதுக்கு” ஆதராவாக நடத்திய பேரணிக்கு ஆதரவான பதிவுகள் உள்ளன. இனி, தீக்கதிரில் என்ன உள்ளது என்பதனை பார்ப்போம்.
நிகிதாஆஜாதின்அறிக்கை: நான் அந்த வளைத்தளத்தில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்து, அவர்களது பாரபட்சம் மிக்க போக்கை எடுத்துக் காட்டினேன்[8]. ஆனால், நிகிதா ஆஜாத் என்ற அந்த இளம்பெண், கீழ்கண்டவாறு, ஒரு பதிவை செய்தார்:
“நண்பர்களே, இது ஒரு முக்கியமான அறிவிப்பு.”.
“நாம் பாலியல் ரீதியில் வேற்றுமைப் படுத்தும் எல்லா மதங்கள் மற்றும் சடங்குகள் எல்லாவற்றிற்கும் எதிர்க்கிறோம் என்று தெளிவுப்படுத்தியப் பிறகும், பலர் நமது பிரச்சாரத்திற்கு எதிராக மதப்பிரச்சினை/சண்டைகளை வைத்து பொறுப்பற்ற முறையில் கெட்டப்பயரை உண்டாக்க முயல்கிறார்கள். நாம் வெளிப்படையாக இஸ்லாத்தில் கடைப்பிடிக்கும் பெண்ணுறுப்பு அறுப்பு சடங்கு மற்றும் பெண்களை மசூதிகளில் ஆண்களுக்கு சமமாக தொழுகைப் புரிய அனுமதிப்பது போன்றவற்றை எதிர்க்கிறோம் என்று பதிவு செய்த பிறகும்[9], பார்ப்பன அடிப்படைவாதிகள் நமது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த இன்னொரு முறையைத் தேர்ந்தெர்டுத்துள்ளார்கள்[10]. நாகரிகம், பண்பாடு போன்றவையற்ற முறையில் செயல்படுவதாக, நம் மீது ஆணாதிக்க வார்த்தைகளை உபயோகித்தும்[11], “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்றும் ஆரம்பித்துள்ளார்கள். இதனால், நேரிடையான விவாதம் புரிவது அவர்களது திட்டமல்ல என்று தெரிகிறது[12]. இந்த மதவெறியர்கள் எல்லோரும் பெண்கள் தங்களுக்கு எது சரி என்று எந்த முறையிலும் தங்களது கருத்துகளை வெளியிடவும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் நமது எதிர்ப்புப் பிரச்சாரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் ஆணையிட முயல்கிறார்கள்”.
“அதுமட்டுமல்லாது, இந்த தனிநபர்கள் நமது இயக்கவாதிகளை விபச்சாரிகள் என்றும், நாமெல்லோரும் கூட்டாக கற்பழிப்பதற்குத்தான் லாயக்கு என்றும், அதனால், சமையலறைகளில் கிடப்பதற்குத்தான் லாயக்கு என்ற வரையில் சொல்கிறார்கள்”.
“ஆனால், நமது இயக்கத்திற்கு ஒரே நாள் எஞ்சியுள்ளது என்ற நிலையில், இவ்விதமான பொறுப்பற்ற விமர்சனத்தை ஒதுக்கித் தள்ளுகிறோம். இந்த சந்தேசத்தை / அறிவிப்பை பகிருங்கள். சமூக வளைத்தளத்தில் இப்பிரச்சாரத்தை செய்வதால், நாம் இத்தகைய மிரட்டல்களைப் பெற்றுள்ளோம். உண்மையிலேயே, தெருக்களில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தால், என்ன நடக்கும் என்பது தெரியவில்லை”.
“அதே நேரத்தில் நமது ஆதரவாளர்களை அந்த கோவில் மற்றும் கோவில் அதிகாரிகரிகளுக்கு எதிராக எந்தவிதமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பதிலாக சித்தாந்த ரீதியில், வாதங்களை உபயோகப்படுத்துங்கள். அது நமது பிரச்சாரத்தை மேன்படுத்தும்”.
[9] இவர்கள் இந்த வயதிலேயே, இந்த அளவுக்கு பொய் சொல்ல தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் என்பது வியப்பாகத்தான் உள்ளது.
[10] இடதுசாரிகள் தங்களது போக்கை, மற்றவர்கள் மீது ஏற்றிச் சொல்லும் போக்கையும் இங்கு கவனிக்கலாம்.
[11] இதெல்லாம், ஆணாதிக்க வார்த்தைகள் என்று இவர்கள் தாம் கண்டுபிடித்தார்கள் போலும்!
[12] நான் நேரிடையாக வாதம் செய்தபோது, எத்ர்கொள்ள முடியாமல், அப்படியே நம்மீது திருப்பும் போக்கு, சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. என்ன செய்வது, இவர்கள் எல்லோருமே, நமது பேத்திகள் போன்றுதான் உள்ளார்கள். பொறுத்துத்தான் போக வேண்டியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை பார்க்க முடியும்[1]. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, “கடவுள் ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி. அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறப்பட்டிருக்கும், என்று குறிப்பிடும் விகடன், இது கேரள உயர்நீதி மன்ற தீப்ப்பின் மீது ஆதாரமானதாகும், என்பதனை எடுத்துக் காட்டவில்லை. ஆனால், விகடன் தொடர்ந்து, அதையும் மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோவில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள். பிரபல கன்னட நடிகை ஜெய்மாலா, தான் 2006-ம் ஆண்டு சபரிமலைக்குள் சென்று கடவுள் ஐயப்பனை தொட்டு வழிபட்ட தகவலை 2010-ம் ஆண்டு கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து, கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது[2]. இப்பிரச்சினை மற்றும் சினிமா ஷுட்டிங் எடுப்பவர்கள் மற்ற விஐபிக்கள் எப்படி இந்த விதிமுறைகளை மீறியுள்ளார்கள் என்பது, பல நேரங்களில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளன[3] என்று தெஹல்கா எடுத்துக் காட்டியுள்ளது.
பரயாறுகோபாலகிருஷ்ணனிடம்கேட்டதனால், அவர்சொன்னபதிலைபிரச்சினையாக்கும்குழுக்கள்: மாதவிடாய் போக்கு உள்ள பெண்கள், சபரிமலை செல்ல அனுமதியில்லை. குறிப்பாக, 6 வயது சிறுமியர் முதல், 60 வயது பெண்கள் வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மாதவிடாய் காலத்தில், சபரிமலைக்கு வந்து விடக் கூடாது; அவ்வாறு செல்வது, தீட்டு என, காலம் காலமாக நம்பப்படுவது தான். சபரிமலை அய்யப்பன் கோவிலை கட்டுப்படுத்தும் அமைப்பான, தேவசம் போர்டின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், ‘சபரிமலைக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவரா?’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்[4]. பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன், “மனிதர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய கருவிகள் வந்துள்ளது போல, பெண்கள்தூய்மையாகதான்இருக்கிறார்களாஎனஉறுதிசெய்வதற்கானபரிசோதனைசெய்யும்கருவிஏதேனும்கண்டுபிடித்தால்தான்அதுசாத்தியம்“, என்றார்[5]. ஊடகக்காரர்கள் கேட்ட கேள்வி, தோரணை விஷமத்தனமானது, அதனால், அவரும் அதற்கேற்ற முறையில் பதில் கூறியுள்ளார்.
‘ஹேப்பிடூபிளீடு‘ என்றபெயரில், பேஸ்புக்இணையதளத்தில்பக்கத்தைதுவக்கிபிரச்சாரம்: இதை அறிந்த, கேரளா மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள், கடும் கோபம் அடைந்தனர். ‘ஹேப்பி டூ பிளீடு’ என்ற பெயரில், பேஸ்புக் இணையதளத்தில் பக்கத்தை துவக்கி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கோபத்தை வார்த்தைகளாக வடித்து விட்டனர். ‘மாதவிடாய் காலத்தில் பெண்கள், சுத்தமாக இருப்பதில்லை என்பதை இவர் அறிந்தாரா அல்லது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடவுளை வணங்கக் கூடாது என, கடவுள் சொல்லியுள்ளாரா?’ என, பல பெண்கள், தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர். போதாக்குறைக்கு, பல பெண்கள், மாதவிடாய் காலத்தில் அணியும் ஆடைகளையும் காட்டி, கோபால கிருஷ்ணனுக்கு எதிர்ப்பை காட்டினர்[6]. அவரது இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
நிகிதாஆசாத்என்பவரின்பிரச்சாரம்[7]: இது குறித்து முகநூலில் “மாதவிடாயை சந்தோசமாக அனுபவியுங்கள்” (Happy to Bleed) என்ற தலைப்பில், தேவஸ்தானத் தலைவரைக் கண்டித்து நிகிதா ஆசாத் என்பவர் ஒரு பக்கத்தை ஆரம்பித்துள்ளார்[8]. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது எதிர்ப்புகளை பதிந்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறும்போது, தேவஸ்தான நிர்வாகியின் இந்தப்பேச்சு, பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நமது சமூகத்தில் பின்பற்றப்படும் பெண்களுக்கான வன்மத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முகநூளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப்பக்கத்தில் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்[9]. ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் இனைவார்கள் என்று எதிர் பார்க்கிறோம் என்றார். கடந்த 21-11-2015 சனிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பக்கத்தில், பெண்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியும், மாதவிடாயின்போது எடுக்கப்பட்ட படங்ககளையும், உபயோகப்படுத்திய சேனிட்டரி நேப்கின்களின் படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மாதவிடாய்நிஜமும், நிதர்சனமும்: தமிழ்.ஒன்.இந்தியா சொல்கிறது, இந்நிலையில் உண்மையிலேயே மாதவிடாய் என்றால் என்ன… அதை ஏன் தீண்டத் தகாத விஷயமாக இன்னும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்களுக்கு மாதம் தோறும் நடக்கும் ஒரு சாதாரண உடல் சார்ந்த சுழற்சியால் ஏன் இவ்வளவு போராட்டம் என்பதைப் பற்றியெல்லாம் பெரிய கல்வி கற்ற நிலையில் இருப்பவர்களுக்கே சரியான அறிவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை[10]. புதுப்பிக்கும் சுழற்சி: மாதாமாதம் கருவினைச் சுமக்க இருக்கின்ற பெண்ணின் கர்ப்பையானது தன்னையே புதுப்பித்துக் கொள்கின்ற ஒரு நிகழ்வுதான் மாதவிடாய். அதற்கு சரியான பெயர் “மாத ஓய்வு”. விலக்கு என்பதே அந்த 3 நாட்களும் பெண்களின் உடலில் சோர்வு அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினாலேயே அக்காலத்தில் வீட்டிலிருந்து ஓய்வு அளித்தார்கள்[11]. இக்காலத்திலும், பெண்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குளித்து விட்டு சமைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். குளிக்காமல் சாபிடும் பெண்களும் இருக்கிறார்கள்.
எனக்குமாதவிடாய்ஏற்படும்போதும்நான்கோவிலுக்குள்நுழைந்துவழிபட்டால்கடவுளுக்குக்கோபம்ஒன்றும்வராது: “எனக்குகருப்பைஇருக்கிறது. அதனால்மாதத்திற்குஒருமுறைஅதிலிருந்துரத்தம்வழியும். எனக்குமாதவிடாய்ஏற்படும்போதும்நான்கோவிலுக்குள்நுழைந்துவழிபட்டால்கடவுளுக்குக்கோபம்ஒன்றும்வராது. திரு.பிரயார்கோபாலகிருஷ்ணன்அவர்களே, உங்களைப்போன்றுதான்பெண்கள்மாதவிடாய்நேரத்தில்சுத்தமற்றவர்கள்எனபலரும்நினைக்கிறார்கள். இதேசுத்தமற்றரத்தத்தில்தான்நீங்கள் 9 மாதங்கள்உங்கள்அம்மாவின்கருவறையில்இருந்தீர்கள்என்பதைமறந்துவிடாதீர்கள்”, என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை போடுபவர்கள் எழுதியுள்ளனர்[12]. எல்லாம் சரிதான், ஆனால், மற்ற கடவுளர்களுக்கு கோபம் வருவதால் தானே, யூதம், கிருத்துவம், இஸ்லாம், அவர்களை தடுக்கிறது. அங்கே, கீழ் கண்ட கமென்டைப் போட்டேன்:
I have carefully gone through the thread.
As usual, the comments have been drifting to different directions with the intruding varied opinion.
The prohibition of menstruating women to enter religious places, participate in Eucharist and rituals etc., has been there throughout the world among the Jews, Christians, Muslims, Hindus and others, even today.
Therefore, hope you bleed more happily and reasonably with secularism.
நிகிதா ஆஜாத் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து விட்டார். என்ன செய்வது, பெண்கள் இந்நாட்டு கண்கள் ஆயிற்றே? இருப்பினும் சில பெண்கள் தெருக்களில் “என்னுடைய ஸ்கர்டில் ரத்தம் இருக்கிறது, வந்து பார்”, என்ற பதாகைகளுடன் நிற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது[13]. பெற்ற தாய்மார்கள் என்ன நினைப்பார்களோ?
வேதபிரகாஷ்
24-11-2015
[1] விகடன், மாதவிலக்குகுறித்துசபரிமலைதேவசம்போர்டுதலைவர்சர்ச்சைகருத்து: பெண்கள்கொதிப்பு!, Posted Date : 10:18 (24/11/2015); Last updated : 10:18 (24/11/2015)