Archive for the ‘திராவிடம்’ Category

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

வாடகைத் தாய்தாய் அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.

வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

வாடகைத் தாயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].

ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:

  1. குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
  2. முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
  3. வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
  4. மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
  5. ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல்  முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
  6. மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
  7. குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
  8. எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] விகாஷ் பிடியா, வாடகைத் தாய், ஆதாரம் : டாக்டர். மனோகரன்.

[2] https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bbeb9fb95bc8ba4bcd-ba4bbebafbcd

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

குழந்தையின்மை: தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு நினைப்பது, எழுதுவது தவறு, காலம் தாழ்ந்து குழந்தை பிறப்பதும் நிதர்சனமாகத் தான் உள்ளது. இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். தத்து எடுப்பு என்ற சாதாரணமான முறையும் இருந்தது. முன்பெல்லாம் குடும்பத்தில், உறவினர்களில் அப்பழக்கம் இருந்தது. பிறகு மற்றவர்களிடமிருந்து தத்து எடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. உண்மை பெற்றோர் வந்து சொந்தம் கொண்டாடுவது பணம் கேட்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அனாதை இல்லங்கள்போன்றவை,, இதனை ஒரு வியாபாரமாக்கியது. அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. அதனால், படிப்படியாக தத்து எடுக்கும் முறை குறைந்த்து. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.

விஞ்ஞான முறையில் கருத்தரித்தல், குழந்தை பெற்றல்: குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை. ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.

வாடகைத் தாய்: இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.

இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய்: இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம். வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.

இந்தியாவில் வாடகைத் தாய் தொழில் நடைபெறுகிறது: பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவியன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது மலிவானது: இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம். குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

வாடகைத் தாய் உருவாகும் புதிய பிரச்சினைகள்: வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது. வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

வாடகைத் தாய் சட்டச் சிக்கல்கள்: தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.

© வேதபிரகாஷ்

03-04-2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

தாய்மை நீர்த்து, ஆபாசமான நிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.

கவர்ச்சி அரசியல், வாடகைத் தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (22-04-2022) சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.

பாலியல் குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குழந்தை பெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].

தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]  தினமணி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அமைச்சா் கீதா ஜீவன், By DIN  |   Published On : 22nd April 2022 02:22 AM  |   Last Updated : 22nd April 2022 02:22 AM

[2]https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3831404.html

[3] நியூஸ்.18.தமிழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு, By WebDesk WebDesk Fri, 22 Apr 2022.

[4] https://newstm.in/amp/tamilnadu/Child-by-surrogate-mother-270-days-leave-for-female-employe/cid7217147.htm

பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]

மார்ச்13, 2019

பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள்காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]

Panimalar, tweet - instagram

பனிமலர் என்ற பெண்ணியம், பெரியாரிஸ கற்ப்பியம், காதல் தோல்வி சித்தாந்தம் முதலியன: பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம் என்ற பெண், டிவி செனல்களின் மூலம் பிரபலமாகி இருப்பது தெரிகிறது. திக-திமுக ஆதரவுகளால், அப்பிரபலம் சித்தாந்தத்துடன் சேர்ந்து சார்புடையாதாகி உள்ளது. சன் டிவி, பாலிமர் டிவி, புதிய தலைமுறை முதலிய டிவி செனல்களில் வேலை செய்ததாக உள்ளது. செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு முதலியவற்றால் பிரபலம். போதாகுறைக்கு, ஊடகத்தினரும் பரஸ்பர விலம்பரங்கள் கொடுத்துள்ளனர். இளம்பெண் என்பதனால், அந்த கவர்ச்சி உந்துதல் விளம்பரம் அதிகமாகவே உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்…………………..இப்படி சொல்லவே வேண்டாம், அதிகமாகவே உள்ளது[1]. இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்த விவகாரங்கள் வேறு, இதோ விகடன் விவரங்களைக் கொடுக்கிறது.

                       Panimalar, vikatan

என் காதல் சொல்ல வந்தேன்பனிமலர் சொல்லும் காதல் கதை[2]: பனிமலர் சொல்வது[3], ‘‘உலகில், யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; எல்லோருமே தனித்துவம் மிக்கவர்கள்தாம். நிறைவேறாத பத்து காதல்களுக்குப் பிறகு, மற்று மொரு காதல் வந்தாலும்கூட அதுவும் புதிதாகவே இருக்கும்!’’ – வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் . ‘‘பள்ளிப் பருவத்தில், எல்லோருக்குமே எதிர் பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனாலும், அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்த ஈர்ப்பின் வீரியம் குறைந்து மறைந்தேபோகும். 13 வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், 15 அல்லது 16 வயதாகும்போது பிடிக்காமல்கூட போகலாம்… மாற்றத்துக்கு உட்பட்ட உளவியல் உண்மை இது. உடல்ரீதியாக வளரிளம் பருவத்து மாற்றங்களைக் குழந்தைகளிடம் விளக்கிக் கூறுகிற நாம், அதே பொறுப்பு உணர்வுடன் மனரீதியிலான இந்த மாற்றங்களையும் எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும்”.

Panimalar, supporting Vairamuthu
`இனக்கவர்ச்சிஎனும் மாயக் காதல்முதல் காதல் தோல்வி: வளரிளம் பருவத்தில் வரக்கூடிய `இனக்கவர்ச்சி’ எனும் மாயக் காதல் எனக்கும் வந்ததுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தாலும் எனக்கே சிரிப்பை வரவழைக்கும் நிகழ்ச்சி அது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உணர்வு மறைந்துபோனது ஆச்சர்யம். அதன்பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல்களுமே மிக நீளமானவை. பணி நிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தபிறகு, நீண்ட நாள்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளலாம் என எண்ணினேன். ஆனால், அந்த உறவு ஒருநாள் முறிந்துபோனது. மனது உடைந்து, அழுது புலம்பி, அந்த மன அழுத்தத்தில் வாழ்க்கையின் அடுத்தடுத்த முடிவுகளைத் தப்புத்தப்பாக எடுத்து அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனாலும்கூட, ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதும் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். `காதலரோடுதான் பிரச்னையே தவிர, காதலில் ஒருபோதும் பிரச்னை இல்லை’ என்ற தெளிவுதான் அது. எனவே தான், முதல் காதல் தோல்வி. ஏற்படுத்தியிருந்த வலியிலிருந்து என்னை மறுபடியும் மீட்டெடுத்து வர உதவியதும் காதலாகவே அமைந்தது.

Panimalar, T shirt
உலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே?[4]: பனிமலர் சொல்லும் காதல்-தாம்பத்தியம் லாஜிக்[5], `காதல் ஒருமுறைதான் மலரும். உதிர்ந்துவிட்டால் மீண்டும் மலராது’ என்றெல்லாம் இட்டுக்கட்டி, காதலைப் புனிதப்படுத்தும் முயற்சி இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்ல… `பார்க்காமலே காதல், பேசாமலே காதல்’ என்றெல்லாம் காதலை உயர்த்திப்பிடித்து தெய்விகக் காதல் வரிசையில் பட்டியலிடுவதன் பின்னணியில், `எங்கள் காதலில் செக்ஸ் இல்லை… இது புனிதமானது’ என்று கட்டமைக்கப் பார்க்கிறார்கள்.

உலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே? அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல்? ஆக, காதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இது, காதலில் இயல்பானது என்பதை உணரும்போதுதான், `என்னை ஏமாற்றிவிட்டார், அதற்காக பழி வாங்குகிறேன் ‘ என்று கிளம்ப மாட்டார்கள்”.

இங்கு நேரிடையாக, தனது முதல் காதலுடன் தாம்பத்தியம் வைத்துக் கொண்டது, மறைமுகமாக சொல்கிறார். அதனை நியாயப் படுத்த, பொதுவாக ஒரு வாதத்தை கேள்வியாகக் கேட்டுள்ளார். ஒருசெல் மற்றும் மிருகங்களின் தாம்பத்தியமும், மனித தாம்பத்தியமும் ஒன்றா என்பதை யோசித்டுப் பார்க்க வேண்டும். அமீபா ஒரு தன்-புணர்ச்சி ஜீவனாகும்.

Panimalar, Tutocorin issue
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது காதல்[6]: பனிமலர், இரண்டாவது காதலை விவரித்தது[7], “இரண்டாவது முறை என்னை ஆட்கொண்ட காதலுக்கு ஆயுள் ஐந்து வருடங்கள். `எல்லாம் சரியாக நடக்கிறது’ என்ற மகிழ்ச்சியோடு திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரவிருந்தபோது, அந்த இரண்டாவது காதலும் கைநழுவிப் போனது.

இம்முறை இன்னும் அதிகமாக காயப்பட்டேன். அதன் வடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வெறுமையும் தனிமையும் ஒருசேர அழுத்தும் அந்தத் தருணத்தில், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால்கூட பிரிவு பற்றிய எண்ணங்கள்தாம் ஞாபகத்துக்குள் வந்து அழுகையை வரவழைக்கும். செல்போனை எடுத்துப் பேசிவிடலாமா அல்லது ஒரு மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் மனதைச் சிதறடிக்கும்.

இரண்டாவது காதல் திருமணம் வரைச்சென்று நின்று விட்டது என்றால், காரணம் என்ன என்று வெளியிடப் படவில்லை. பிரபலங்களில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இங்கு மனநிலை பாதித்துள்ளதால், அதனை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது நவநாகரிகமான காதலாக உள்ளது. செல்போன், மெஸேஜ் என்றரீதியில் உள்ளது. ஆகவே, டேடிங், மேடிங் இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. முந்தைய வாதத்தை எடுத்துக் கொண்டால் இருக்கிறது எனலாம்!?

Panimalar, rain issue

கவுன்சிலிங் பெற்று புது மனிஷியாகியது[8]: இரண்டு காதலன்களை விடுத்து, இரண்டு காலல்களை முறித்த பனிமலர், கவுன்சிலிங்கிற்கு சென்று விளக்கியது[9], “வெறுத்துப்போய் வேலைக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்து முடங்கிக்கிடந்தேன்.

தினம் ஒருவேளைதான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் தொலைந்தேபோனது. ஒருகட்டத்தில், என்னுடைய மன அழுத்தத்தைக் கண்டு எனக்கே பயம் வந்துவிட்டது. தயங்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். என் எதிர்மறைச் சூழலை மாற்றிக்கொள்ள, ரொம்பவே முயற்சி செய்தேன்.

இரண்டு ஆண்களுடன் பழக்கம், இரண்டு காதல்கள், இரண்டு காதல் ணை அதிகமாக பாதித்ததில்தோல்விகள்,….என்பன, இப்பெண் இயற்கையாகவே உள்ளது. ஆனால், இத்தகைய நவநாகரிகமான, பொதுவான ஆண்-பெண் உறவு முறைகளை மீறி விளக்கம் கொடுக்கும் பெண்ணால் தாங்க முடியவில்லை என்றால், அவ்வெல்லைகளை மீறியப் பிரச்சினையாகிறது.

ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். புதுப்புது பயணங்களை மேற்கொண்டேன். வலியில் அழுந்திக்கிடந்த மனதுக்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்த இந்த மாற்றங்கள்தாம் என்னை மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறப்பெடுக்க வைத்திருக்கின்றன.

© வேதபிரகாஷ்

13-03-2019

Panimalar, different faces

[1] இது கூட யார் பதிவிட்டது என்று தெரியவில்லை – http://panimalarpanneerselvam.blogspot.com/

[2] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)

[3] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[4] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).

[5]  https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[6] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).

[7] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

[8] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! – பனிமலர் பன்னீர்செல்வம்,

த.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)

[9] https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment/145468-interview-with-news-reader-panimalar-panneerselvam.html

குஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசின் கவர்ச்சி அரசியல்! (2)

ஜூன்9, 2017

குஷ்புநக்மாவிஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினாஜான்சிகௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளதுகாங்கிரசின் கவர்ச்சி அரசியல்! (2)

Congress women wing leaders fight - 06-06-2017-3

ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்: மகளிர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, ஹசீனா சையதின் கணவரை பிடித்துத் தள்ளும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின[1]. ஹசீனா சையத், அவரது கணவர் ஒரு பக்கமாகவும் கவுரி கோபால், ஜான்சி ராணி ஆகியோர் மற்றொரு தரப்புமாகவும் மோதிக்கொண்டனர். இது குறித்து ஹசீனா சையதிடம் கேட்டபோது, “நடந்துவந்துகொண்டிருந்தபோது, திடீரென கவுரி கோபால் தன்னை பின் பக்கத்திலிருந்து தாக்கினார். நான் நிலைகுலைந்துபோனேன். பிறகு, மாநிலத் தலைவரின் அறைக்குச் சென்றேன். அங்கும் வந்து சேலையைப் பிடித்து இழுத்தார்” என்று தெரிவித்தார்[2]. பிறகு, ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்[3]. ஒரு முஸ்லிம் பெண்மணி இவ்வாறு கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் ஒருபக்கம் தாலியே தேவையில்லை, தாலி அறுக்கும் திருவிழா என்றெல்லாம் நடக்கும் போது, இந்துக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, இந்த மகளிர் எல்லாம் அதற்கு ஆதாரவாக குரல் எழுப்புவது கூட கிடையாது. அந்நிலைய்ல், இங்கு தாலி சென்டிமென்டை, இந்த முகம்திய பெண்மணி கொண்டு வருவது வியப்பாக இருக்கிறது. ‘திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்!’ என்று கொதித்த, அவர் இது தொடர்பாக தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் ஹசீனா கூறினார்[4].

Congress women wing leaders fight - 06-06-2017-4

திருநாவுக்கரசரிடம் பதவி குறித்து பெண்கள் புகார்: இதனால், கவுரி மீது அதிருப்தி அடைந்த ஹசீனா, கவுரியின் மாவட்ட தலைவர் பதவியை பறித்து, தன் ஆதரவாளர் கோமதியை நியமிக்க, பரிந்துரை செய்தார். டில்லி மேலிடமும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவல் கவுரிக்கு தெரிய வந்ததும், மாநில மகளிர் காங்., தலைவர் ஜான்சிராணியிடம் முறையிட்டார். உடனே, அவர், கவுரிக்கு மாநில அளவில் பதவி வழங்கும்படி, மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார்.  இப்பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை, 04-06-2017 அன்று கவுரி சந்தித்து பேசினார். அப்போது, தன் பதவி பறிப்புக்கு, ஹசீனா தான் காரணம் என, புகார் கூறினார். தனக்கு, மாநில நிர்வாகி பதவி வேண்டாம் என்றும், ஏற்கனவே வகித்த மாவட்ட தலைவர் பதவி தான் வேண்டும் என்றும், திருநாவுக்கரசரிடம் கூறியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார். அதற்கு திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என, கூறி விட்டார்.

 Congress women wing leaders fight - 06-06-2017-8

மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று திருநாவுக்கரசர் சொன்னதும் சண்டை ஆரம்பம்: அந்த நேரத்தில், சத்தியமூர்த்தி பவனுக்குள், ஹசீனா வந்தார். அவருக்கும், கவுரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஹசீனா வின் கணவர் சையது குறுக்கிட்டதும், கவுரியின் ஆதரவாளர்கள் களத்தில் குதித்தனர்; இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சண்டையை தடுக்க முடியாமல், திருநாவுக் கரசர் தவித்தார். சத்தம் கேட்டு, மற்ற நிர்வாகிகள் ஓடி வந்து, இருதரப்பினரையும் அமைதிப் படுத்தினர். அடிதடியில் காயமடைந்த கவுரி, ஹசீனா, ஜான்சிராணி ஆகிய மூவரும், நேராக டாக்டர்களிடம் சென்று, சிகிச்சை பெற்றனர். ”யார் மீது தவறு என்பதை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல், ‘உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்; சண்டை போட வேண்டாம்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என, அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தில்லிக்குக் கட்டுப் பட்டு நடப்பவர்கள், ஒரு அதிகாரமும் இல்லை என்று தெரிகிறது. மேலும், பெண்கள் நேரிடையாக ராகுலிடம் புகார் கொடுப்பதும் சிந்திக்க்த்தக்கது.

Congress women wing leaders fight - 06-06-2017-6

காங்கிரஸ் பெண்கள் எப்படி, எவ்வாறு, ஏன் நேரிடையாக தொடர்பு கொள்ள முடிகிறது?: ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்ட போது, திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியது, காங்கிரஸில் பெண்களுக்கு ஏதோ விசேசமான சலுகை அளிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, தேவையென்றால், அவர்கள், நேரிடையாக ராகுலுடன் தொடர்பு கொள்ளலாம். அப்படியென்றால், ராகுல் அப்படி என்ன தமிழகத்து காங்கிரஸ் பெண்களிடம் நெருக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். ஆண்-தலைவர்களுக்கு கொடுக்கப் படாத அத்தகைய  சலுகை அல்லது அதிகாரத்தை பெண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது ஏன்? அப்படியென்ன, இப்பெண்களால் தமிழகத்தில், காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா அல்லது பெண்களை வைத்து அவ்வாறு சாதிக்கலாம் என்ற திட்டம் ராகுலிடம் உள்ளதா என்றெல்லாம் அலசவேண்டியுள்ளது.

Congress women wing leaders fight - 06-06-2017-7

 காங்கிரஸும், நடிகைகளும், அரசியலும்[5]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.

Congress women wing leaders fight - 06-06-2017-9

நடிகைகள்பென்களை வைத்து காங்கிரசின் கவர்ச்சி அரசியல் திட்டம்: சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 2015ல்ந டந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை  வலியுறுத்தி பேசினார். தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர்  மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பியது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது. இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[6], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத் தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு  இளைஞர்கள்  போராட்டம்  நடத்துவது  புது விதமானதுகடந்த  காலங்களில்  தேர்தலில்  போட்டியிட  சீட்  பெறுவதற்காக

அந்த  பெண்கள்  புது விதமாக ரகசிய  போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[7]. ஆக தமிழக காங்கிரஸ் பெண்களும் இத்தகைய புது விதமான சண்டைகளை ஆரம்பித்துள்ளனர் போலும்!

 

© வேதபிரகாஷ்

09-06-2017

 

[1] பிபிசி.தமிழ், தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் மோதல், பதிவு செய்த நாள்: ஜூன் 07,2017.

[2] http://www.bbc.com/tamil/india-40193459

[3] விகடன், திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்!’- கொதிக்கும் ஹசீனா சையத், Posted Date : 16:50 (07/06/2017); Last updated : 16:50 (07/06/2017).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/91612-haseena-syed-complaints-over-congress-party-fight.html

[5] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[6] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும். தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில்நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.

[7] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/

குஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசீன் கவர்ச்சி அரசியல்! (1)

ஜூன்9, 2017

குஷ்புநக்மாவிஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினாஜான்சிகௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளதுகாங்கிரசீன் கவர்ச்சி அரசியல்! (1)

Congress women wing leaders fight - 06-06-2017-2

காங்கிரஸ் தலைவர்கள், ஆண்கள் சண்டை பெண்கள் சண்டை: தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று இருக்கிறது. அது, ஈ வி கே எஸ் இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், திருநாவுக்கரசர் என பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்பது தெரியும்[1]. அதேபோல், மகிளா காங்கிரசில், நக்மா மற்றும் விஜயதரணி கோஷ்டியினர், தொடர்ந்து குஷ்புவை வறுத்தெடுத்து வருவதும் அறிந்ததே[2]. காங்கிரஸும் கோஷ்ட்டி சண்டையும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றாலும், இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் போட்ட குடிமிடிபிடி சண்டை குழாய் அடி சண்டையை மிஞ்சிவிட்டது. தமிழக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக விஜயதாரணி இருந்த வரை கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அப்போது தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில்தான் விஜயதாரணியை மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கி விட்டு முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்[3]. இதற்கிடையே, மாநில மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். அதில் நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவும் ஒருவர்[4].

Congress women wing leaders fight - 06-06-2017-10

காங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் மனைவிகள்: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை நடந்தது, அதில், பெண்கள் – பெண் தலைவிகள் ஒரொருவரையொருவர் திட்டி-அடித்துக் கொண்டனர் என்று செய்திகளை “குழாயடி சண்டை” போல சுருக்கி விட முடியாது. பெண் அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு, “ரௌடியிஸம்” செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்கள் என்று தெரிகிறது. பெண்கள் “தாதா” ஆகி வருகிறார்கள் என்று தெரிகிறது. அதிகாரம், பணம் முதலிய பெண்ணிடத்தில் சேர்ந்தாலும், முடிவு அவ்வாறாகத்தான் இருக்கும் என்றாகிறது. 33% சதவீதம் பென்களுக்கு இடவொதிக்கீடு என்பதைப் பற்றி, இந்த கட்சிகளே மறந்து விட்டாலும், இவ்விசயத்தில் கொடுக்கிறார்கள் போலும். பொதுவாக, இத்தகைய விசயங்களில் கணவன்மார்களின் அழுத்தம், மறைமுகமாக இருக்கும். தங்களது மனைவிகளை வைத்து அரசியல் செய்வதும் காங்கிரஸ்காரர்களுக்கு கலையாக இருந்து வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில், சமீப காலத்தில் பெண்-தலைவர்கள் சண்டைப் போட்டுக் கொள்வது, கவனிக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், இவ்விசயம், நேரிடையாக ராகுலுக்கு எடுத்துச்ச் செல்லப்படுகிறது.  இருப்பினும் பெண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, எப்படி பாடுபட வேண்டியிருக்கிறது என்று ஆண்கள் உணர வேண்டும். ஆனால், பணம், அதிகாரம் என்றால், எல்லாம் மறந்து, பரந்து போகின்றன. அசமரசம், அனுசரனை, ஒத்துபோதல் போன்றவையும் வந்து விடுகின்றன.

Congress women wing leaders fight - 06-06-2017-9

ஹசீனா சையத் கெளரி கோபால் சண்டை வெளிப்படுத்தியது: சமீபத்தில், சென்னை வந்திருந்த ராகுலை வரவேற்க, சத்தியமூர்த்தி பவன் முன், மகளிர் காங்கிரசார் வரவேற்பு பேனர்களை வைத்திருந்தனர்[5]. திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர், கவுரி கோபால் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அகில இந்திய மகளிர் காங்., செயலர் ஹசீனா சையது படம் இல்லை[6]. இதனால் கெளரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது[7]. அதாவது, அசீனாவுக்கு அந்த அளவுக்கு காங்கிரஸில் செல்வாக்கு உள்ளது என்றாகிறது. இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என்று தற்போது கௌரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்[8]. இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Congress women wing leaders fight - 06-06-2017

ஹசீனா சையத் கெளரி கோபால் வாய் சண்டை கைசண்டையனது: மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அசினா சையத், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கவுரியை பார்த்து என்னை பகைத்துக் கொண்டால் உன்னுடைய பதவி பறிபோனது என்றும் கூறினார்[9]. ஆத்திரம் அடைந்த கவுரி, அசினா கன்னத்தில் அறைந்து விட்டு அழுதுக் கொண்டே திருநாவுக்கரசர் அறைக்கு சென்றார்[10]. கன்னத்தில் அடி வாங்கிய அசினா, கணவருக்கு தகவல் தெரிவித்தார்[11]. தகவல் கிடைத்த ஐந்து நிமிடத்தில், அசினா கணவர் உமர் பவனுக்குள் நுழைந்து கவுரியை கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்தார்[12]. “ ஏய் என்னடி”, என்று கேட்டுக்கொண்டே ஆபாச வார்த்தையில் ஜான்சிராணியை திட்டிக்கொண்டே தாக்கினார்[13]. அதற்கு ஜான்சிராணியோ, “ஏய் எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும்”, என்று கத்திக்கொண்டே ஹசீனாவின் கணவரை விரட்டினார்[14]. மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் சண்டைபவனானது. அதை தடுக்க வந்த மாநில தலைவி ஜான்சி ராணிக்கும் அடி விழுந்தது[15]. ஒரு பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய நபரை அங்குள்ள பத்திரிகையாளர்கள் கண்டித்தனர்[16]. காங்கிரஸ் குடுமி பிடி சண்டை பவனை போர்க்களமாக்கியது[17]. ஆனால், அங்கு இருந்த கதர் சட்டைக்காரர்கள் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[18].

© வேதபிரகாஷ்

09-06-2017

Congress women wing leaders fight - 06-06-2017-5

[1] NewsFast, Congress fighting in sathyamoorthy bhavan,arrested, 6/7/2017 2:59:37 PM

[2] http://www.newsfast.in/news/congress-fighting-in-sathyamoorthy-bhavanarrested

[3] சென்னை.ஆன்.லைன், தலை முடியை பிடித்து அடித்துக் கொண்ட காங்கிரஸ் பெண் தலைவர்கள், June 07, 2017, Chennai

[4] https://chennaionline.com/article/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

[5] தினமலர், மகளிர் காங்கிரசார் குடுமிப்பிடி சண்டை தடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் தவிப்பு, பதிவு செய்த நாள் : ஜூன் 07,2017,22:45 IS

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1785855

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்த காங்கிரசார்!, By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:41 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/when-haseena-was-attacked-the-congress-guys-285227.html

[9] பாலிமர்.செய்தி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணியினர் கைகலப்பு, 07-ஜூன்-2017 15:38

https://www.polimernews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5/

[10]https://www.polimernews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5/

[11] தினமலர், சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்., ‛கும்மாங்குத்து, பதிவு செய்த நாள். ஜூன்.07, 2017. 15.09.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1785732

[13] தமிழ்.ஒன்.இந்தியா, எங்க வந்து யாரு கிட்டசெருப்பு பிஞ்சிரும்சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை,By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:26 [IST]

[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/hassena-s-husband-attacks-jhansi-rani-285237.html

[15] ஈநாடு.தமிழ், சத்தியமூர்த்தி பவனில் காங். தொண்டர்கள் கைகலப்பு, Published 07-Jun-2017 19:50 IST | Updated 19:51 IST

[16] http://tamil.eenaduindia.com/State/Chennai/2017/06/07195035/cadres-clash-in-chennai-congress-headquarters.vpf

[17] விகடன், மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன், Posted Date : 16:18 (07/06/2017); Last updated : 16:18 (07/06/2017).

[18] http://www.vikatan.com/news/tamilnadu/91602-clash-between-congress-women-representatives-at-sathyamoorthi-bhavan.html

திவ்யாவின் மறுப்பு, இளவரசன் இறப்பு – காதல் தோல்வியா, கலப்புமண முறிவா, திராவிடத்தின் குழப்பமா?

ஜூலை5, 2013

திவ்யாவின் மறுப்பு, இளவரசன் இறப்பு – காதல் தோல்வியா, கலப்புமண முறிவா, திராவிடத்தின் குழப்பமா?

கலப்புத் திருமணம், சுயமரியாதை திருமணங்கள் தோல்வியடைந்தது ஏன்?: திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் 1930கள் தொடங்கி 1960கள் வரை கலப்புத் திருமணம், சுயமரியாதை திருமணங்கள் செய்வது ஊக்குவிக்கப்பட்டாலும் ஜாதியம் தமிழகத்தில் மறையவில்லை[1], ஜாதிகள் பெருகிக் கொண்டே வருகின்றன. தாலிக்கட்டியத் திருமணங்கள் முறிந்தபோது, திராவிடத்துவ சித்தாந்திகள் திருமண முறிவு விழா நடத்தி, பெண்களை தாலிகளைக் கழட்டி, கட்டிய ஆண்களின் கைகளில் கொடுக்க வைத்து திருமணத்தை “திரு”வெடுத்து, அவமானத்தை உண்டாக்கினர். இத்தகைய “தாலி கழட்டும்”, “கழட்டிக் கொடுக்கும்”, “முறிவு” சட்டப்படி “விவாக ரத்து” ஆனதா அல்லது தனியாக பிறகு அவ்வாறு சட்டப்பட்டி[2] “விவாக ரத்து” பெற்றுக் கொண்டார்களா? அப்பொழுது “சுயமரியாதை” பார்க்கப்பட்டதா அல்லது தாலி போல கழட்டி வைக்க்க்கப் பட்டதா என்று அவர்கள் தாம் சுயவிளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் மறுபடியும் மறுமணம் செய்து கொண்டனரா, அப்படி செய்து கொண்டால் அதே ஜாதியில் செய்து கொண்டனரா, இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்ட ஆண்களின் நிலை, இரண்டாவது முறையாக இன்னொரு ஆணுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் நிலைப் பற்றியும் ஒன்றும் பேசப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை.

  • பிற்பட்ட ஜாதியினர், மிகவும் பிற்பட்ட ஜாதியினர், என்று நீண்டு,
  • தாழ்த்தப்பட்டவர், மிகவும் தாழ்த்தப்பட்டவர்,
  • ஒடுக்கப்பட்டவர், மிகவும் ஒடுக்கப்பட்டவர்,
  • ஒதுக்கப்பட்டவர், மிகவும் ஒதுக்கப்பட்டவர்,
  • சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர், சமூகத்தின் விளிம்பில் மிகவும் அதிகமாக தள்ளப்பட்டவர்,
  • நொறுக்கப்பட்டவர், மிகவும் நொறுக்கப்பட்டவர்,

என்றெல்லாம் விளக்கங்கள், விவரணங்கள், வர்ணனைகள் நீண்டன. எஸ்.சிக்களுக்குண்டான இடவொதுக்கீட்டில், உள்-ஓதுக்கீடு செய்கிறோம் என்று 3.5%த்தை ஜாதியேயில்லை என்று பறைச்சாற்றிக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது[3]. கிருத்துவர்களும் ஜாதியில்லை என்று சொல்லிக் கொண்டுதான், ஜாதி ரீதியில் இடவொதுக்கீடு கேட்கின்றனர்[4]. ஆக “தலித் என்ற போவையில் இப்படி “உயர்ந்த” மதங்களும் போட்டிப் போடுவது வியப்பானது தான்!

காதல், ஜாதி மற்றும் அரசியல்: 2014 தேர்தல் வருகின்ற நேரத்தில், இதனை அரசியல் ஆக்க கட்சிகள் தயாராக இருப்பதை அரசியல் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[5]. 2011ல் அதிமுக வென்ற பிறகு அல்லது திமுக கூட்டணி தோற்றப் பிறகு, பாமக திமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றது. ஆகையால் ஜாதிய ஓட்டு எதிர்பார்க்கும் அதிகாரத்தை விரும்பும் கட்சிகள் இதன் தயவை எதிர்பார்க்கும் நிலையுள்ளது என்று கருதப்படுகிறது[6]. எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் நுழைந்துள்ளனர்[7]. தங்களது அரசியல் இறப்பைத் தவிர்த்து உயிர்வாழ சிலக்கட்சிகள் இந்த இறப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. வியப்பாக ஆங்கில ஊடகங்களும் இதைப்பற்றி அதிகமாகவே அலசியுள்ளன. 05-07-2013 அன்று இரவில் “ஹெட்லைன்ஸ் டுடே” செனலில் இதைபற்றிய விவாதமும் நடந்தது. கீழ்கண்டவர்கள் விவாதத்தில் பங்கு கொண்டனர்:

  1. டாக்டர் செந்தில், பாமக.
  2. டி. எஸ். சுதிர், “ஹெட்லைன்ஸ் டுடே”, ஆசிரியர்
  3. பேராசியர் சுரிந்தர் சிங் ஜோத்கா, சமூக அறிவியல், ஜே.என்.யு

எப்படி பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இதனை அரசியலாக்கின என்ற விவரங்கள் அலசப்பட்டன. காதலிப்பது, ஓடிப்போவது முதலியன நடந்து கொண்டே இருந்தாலும், ஜாதிகள் மறையாமல் தான் இருக்கின்றன என்று பேராசியர் சுரிந்தர் சிங் ஜோத்கா, சமூக அறிவியல், ஜே.என்.யு எடுத்துக் காட்டினார். அதனால் எந்த சித்தாந்தம் தோற்றது என்று அவர் விளக்கவில்லை.

துரதிருஷ்டமான இறப்பு: திவ்யா திரும்ப வருவதற்கு மறுத்ததால்[8], தற்கொலை செய்து கொண்ட இளவரசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடந்தது. காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், 04-07-2013 அன்று ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பதாக, அவரது உறவினர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது[9]. காலை, 7 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு நடந்தது. இதையொட்டி, கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில், மருத்துவமனை வளாகத்திலும், இரு நுழைவு வாயில் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரேத பரிசோதனைக்கு சில நிபந்தனைகளை முன் வைத்தனர். சேலம், கோவை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர். இதை போலீஸார் மற்றும் மருத்துவத்துறையினர் ஏற்க மறுத்ததோடு, சட்ட ரீதியான முறையில் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை, பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என, இளவரசன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் தலையீடு: இது தொடர்பாக போலீஸ் மற்றும் பொது மக்களிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொது செயலாளர் சிந்தனைசெல்வன் பேச்சு வார்த்தை நடத்தினார். காலை, 9.30 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் ஒரு வக்கீல் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடு நடந்த நிலையில், திடீரென மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தாங்கள் கூறும் இரண்டு டாக்டர்கள் முன்னிலையில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என, வலிறுத்தினர். மீண்டும் பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கோரிக்கை குறித்து போலீஸாரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காலை, 11 மணிக்கு கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பிரேத பரிசோதனை நடவடிக்கை குறித்து, டி.ஐ.ஜி., சஞ்சய்குமாரிடம் ஆலோனை நடத்தினார். பின்னர் இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம், ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இறப்பை அரசியலாக்கும் விடுதலை சிறுத்தை கட்சி: “எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள், பேச்சை வார்த்தை நடக்கும் போது, எப்படி பிரேத பரிசோதனை செய்தீர்கள்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “இளவரசன் கொலையில், ரயிலில் அடிபட்டால், இன்ஜின் டிரைவர் ஏன் புகார் தெரிவிக்கவில்லை. வி.ஏ.ஓ., மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். இளவரசன் இரங்கல் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். நாங்கள் கூறும் இரு டாக்டர்கள் முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் இளவரசன் உடலை எடுத்து செல்வோம்’ என, கூறி இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். காலை, 7 மணி முதல், 11 மணி வரை, நான்கு மணி நேரம் இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மதியம், 1 மணிக்கு மேலும் இளவரசன் உடலை வாங்க மறுத்ததால், அரசு மருத்துவமனை முன் பெரும் பதட்டமும், பரபரப்பும் இருந்தது.

புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இளவரசனின் மரணம் குறித்து சி.பி..  விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்: இளவரசன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று விடுதலைக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்[10]. புதுச்சேரியில் செய்தியானர்களிடம் பேசிய அவர் இளவரசனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். திவ்யா, அவரது தாயார் தேன்மொழி மற்றும் இளவரசனின் குடும்பத்திற்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய திருமாவளவன் அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இளவரசனின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கௌரவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே இளவரசனின் மரணம் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சிகள் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இளவரசனின் உடலை டாக்டர்கள் தண்டர் ஷிப், சதீஸ்குமார், பிரவின்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வரமுடியுமா? இது சாத்தியமா என்று கேட்டனர். பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர், இது வரை திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்[11], மேலும் திவ்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா, அவருக்கு கவுன்சிலிங் எதுவும் நடத்த வேண்டுமா என்றும் திங்கட்கிழமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கணவரை இழந்த மனைவி, காதலன்-தந்தை இருவரையும் இழந்த மகள் ஏன்ன்றிருக்கும் இருவரின் நிலை பரிதாபகரமானது ஆகும்.

கௌரவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்: தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கௌரவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளது வியப்பாக உள்ளது. “கௌரவ கொலை” என்பது உயர்ந்த சாதி பெண், தாழ்ந்த ஜாதி ஆணை காதலித்தால், ஓடிப்போனால், ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால், அப்பெண்ணின் உறவினர்கள் தங்களது  குலகௌரவத்தைக் காத்துக் கொள்ள  அப்பெண்ணைக் கொன்று விடுவர்[12]. ஆனால், அம்மாதிரி தமிழகத்தில் நடப்பதாக தெரியவில்லை. மாறாக காதலிக்கும் ஆண் அவதிக்குள்ளாகிறான். இந்த விஷயத்தில் அவ்வாறு தான் நடந்துள்ளது. சங்கத்தமிழ் நாகரிகத்தின், கலாச்சாரத்தின் படி காதலன் மடலேறி இறந்தானா, அல்லது கோழையாக தற்கொலை செய்து கொண்டானா என்றெல்லாம் விவாதிப்பது சரியாக இருக்காது.

வேதபிரகாஷ்

© 05-07-2013


[2] சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்ற நிலை வந்தபோது, இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு, பகுத்தறிவுவாதிகள் “இந்துக்களாகி” மரியாதையைப் பெற்றனர். அதேப்போல, விவாக ரத்துப் பெற்று, விடுதலை அடைந்தனர் போலும்.

[3] இதே நேரத்தில் தான் தமிழகம் முழுவதும் தமுமுக முஸ்லிம்களின் இடவொதிக்கீட்டை 3.5%லிருந்து உயர்ந்தப்பட வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இது “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது தீர்மானமாக ஏற்பட்டுள்ள சேர்வினையா என்று தெரியவில்லை.

[4] கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களை தலித்-கிருத்துவர்கள், தலித்-முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு ஏமாற்ரி வருவது, அம்பேத்கரையே ஏமாற்றுவதற்கு ஒப்பாகும். அதைவிட கேவலம் என்னவென்றால் அவர்களது கடவுளர்களையும் ஏமாற்றி வருவதுதான்.

[5] The reason for the tension in the area stems from politics. The PMK is quite a mercurial party, it was with the DMK-led coalition in the state until walking out from the tie-up after the AIADMK swept elections in 2011. With the 2014 Lok Sabha polls ahead, the party will be back in sought-after category. Therefore, the upper Hand may rest with the Vanniyars. Read more at: http://indiatoday.intoday.in/story/love-and-caste-in-the-time-of-coalitions-in-tamil-nadu/1/287045.html

[7]  CPI(M) Party’s state unit secretary G Ramakrishnan said the girl’s decision to part ways with her husband should be seen as having been taken based on the “casteist/social compulsions” and that the death had posed many questions. MDMK leader Vaiko also expressed shock over Ilavarasan’s death and said that his wife Divya’s decision to end her relationship with him was prompted by the strains caused between two communities following their marriage. He demanded a judicial probe into the death and steps to protect the girl. BJP state unit president Pon.Radhakrishnan said that government should convene a meeting of heads of various communities to ensure social harmony and sought a probe into Ilavarasan’s death.

http://www.indianexpress.com/news/parties-express-grief-and-demand-probe-into-dalit-boys-death/1138084/

[12] இது வடவிந்தியாவில் அதிகமாக நடந்து வருகின்றன. ஹரியானா போன்ற மாநிலங்களில் அரசியல் தலைவர்களே இதனை ஆதரித்து வெளிப்படையாக கருத்துக்களைச் சொல்லியுள்ளனர். ஓட்டுவங்கி அரசியலுக்காக காங்கிரஸும் இதனை ஆதரித்து வருகிறது.

மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?

மார்ச்21, 2013
மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?  மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.

மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு

தினமலர்  – ‎5 மணிநேரம் முன்பு‎
       

லண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …

மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்

பள்ளி சென்ற சிறுமி மலாலா

 தலிபான்கள் மட்டுமல்ல,  ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.

 தலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது?: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன? அவர்களை யார் படிக்க வைப்பார்கள்? ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும்? பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].

 மலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].

 இங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே? ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர்! 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

21-03-2013


[3] The 15-year-old began her first day at Edgbaston High School in Birmingham yesterday –  the city’s oldest independent school for girls – where she will study the full curriculum before selecting her GCSE options next year.

[6] Founded in 1876, Edgbaston High School is Birmingham’s oldest independent school for girls.

http://www.edgbastonhigh.co.uk/about-ehs

 

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

மார்ச்20, 2013

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.

  • இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
  • அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
  • இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
  • பாடி கேட்பரோ,
  • இல்லை பறித்தே விடுவரோ?

செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.

  • திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
  • இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
  • அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
  • வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
  • ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
  • அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].

இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?

Girls at Chennai pub

சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.

இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.

Ethiral college girls - Film promotion fest

எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.

பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.

Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6].

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.

According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7].

மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

Chennai college girls

இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!

18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?

  • வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
  • பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
  • மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
  • பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
  • சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.

இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?
© வேதபிரகாஷ்

20-03-2013


[4] Subsequently, `Dhina Thanthi’, a Tamil daily carried a news item on 24.9.2005 which first quoted the appellant’s statement published in `India Today’ and then opined that, “…it had created a sensation all over the State of Tamil Nadu. This news item also reported a conversation between the appellant and a correspondent from `Dhina Thanthi’, wherein the appellant had purportedly defended her views in the following manner (rough translation reproduced below): "The persons who are protesting against my interview, are talking about which culture? Is there anyone who does not know about sex in Tamil Nadu? Is there anyone who does not know about AIDS? How many men and women do not have sex before marriage? Why are people saying that after the marriage the husband and wife should be honest and faithful to each other? One should have confidence in the other, only to avoid the mistakes from being committed. If the husband, without the knowledge of the wife, or the wife, without the knowledge of the husband, have sex with other persons, if a disease is caused through that, the same will affect both the persons. It will also affect the children. Only because of this, they are saying like that”. குஷ்பு (வாதி)– கன்னியம்மாள் மற்றும் இன்னொருவர் (பிரதிவாதி) – http://indiankanoon.org/doc/1327342/

[9] It is, therefore, not only desirable but imperative that electronic and news media should also play positive role in presenting to general public as to what actually transpires during the course of the hearing and it should not be published in such a manner so as to get unnecessary publicity for its own paper or news channel. Such a tendency, which is indeed growing fast, should be stopped. We are saying so as without knowing the reference in context of which the questions were put forth by us, were completely ignored and the same were misquoted which raised unnecessary hue and cry.

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

மார்ச்14, 2013

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே?: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].

கிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]:  சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது!

கோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

படிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள்.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்?: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்? இதற்கு காரணம் என்ன? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில்  கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில்  பணிபுரிந்து வருகிறார்[8].  நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.

மாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா?: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும்  அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பாலியல்ரீதியாகபழக்கம் ?: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].

தமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்  மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்!: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.

பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].

காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].

மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.

வேதபிரகாஷ்

14-03-2013


[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/