Archive for the ‘கொல்கொத்தா’ Category

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)

ஜனவரி18, 2014

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)

 

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சுனந்தா புஷ்கரின் முதல் திருமணம்  1988-89: ஜனவரி 1 1962 ம் தேதி பொமை என்ற இடத்தில் காஷ்மீரில் பிறந்த சுனந்தா புஷ்கர், ராணுவம் மற்றும் நிலசுவாந்தார்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். லெப்டினென்ட் கர்னல் புஷ்கர் நாத தாஸ் என்பவரின் மகள். 1983ல் அவர் ஓய்வு பெற்றார். இவரது இரண்டு சகோதர்களில் ஒருவர் வங்கியிலும், மற்றொருவர் ராணுவத்திலும் வேலைசெய்கிறார்கள். 1986-88 ஆண்டுகளில் ஶ்ரீநகரில் உள்ள அரசு கல்லுரியில் படித்தார். அப்பொழுது சஞ்சய் ரைனா என்பரை மணந்து கொண்டார். இருப்பினும் 1989ல் விவாகரத்தில் அவர்களது உறவு முடிந்தது.

 

Sasi, Sunanda and sons through Tilothama

Sasi, Sunanda and sons through Tilothama

சுஜித் மேனனுடன்  1991ல் நடந்த இரண்டாவது திருமணம்: சுனந்தாவிற்கு ஏற்கெனவே சுஜித் மேனன் என்பவருடன் நட்பிருந்தது. வியாபாரத்தில் நாட்டக் கொண்ட சுனந்தாவை துபாய்க்கு அழைத்துச் சென்றது சஞ்சய் ரைனா இல்லை, சுஜித் மேனன் தான். முதலில் நண்பராகவே மதித்து வந்த சுனந்தா, காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். ஆனால், சுஜித் மேனனோ அவரிடத்தில் இருக்கும் பணம் தனது வியாபார ஆசைகளுக்கு உதவும் என்ற கனவுடன் இருந்தார். துபாய்க்குச் சென்ற அவர், அங்கு சுஜித் மேனன் என்பவரை 1991ல் மணந்து கொண்டார்.

Sunanda Sasi

பொமை, காஷ்மீரத்தில் நடந்த தீவிரவாதத்தில் அவரது வீட்டிற்கு தீவைத்தது,  குடும்பம் வெளியேறியது: 1990ல் பொமையில் நடந்த கலவரத்தில், அங்கிருந்து இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். பரமுல்லா மாவட்டத்தில் பிப்ரவரி 21 2009ல் நடந்த ராஷ்ட்ரீய ரைபில்ஸ் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்[1]. ராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. பொமை-சோப்புர் வீதிகளில் ஆர்பாட்டக்காரர்கள் தெருக்களில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ரகளை செய்தனர்[2]. இதை சாக்காக வைத்துக் கொண்டு, இந்துக்களில் வீடுகள் தாக்கப்பட்டன. ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது[3]. ஆனால், இந்துக்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. வீடுகளுக்கும் நெருப்பு வைக்கப் பட்டது. இதனால் இந்துக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. இதெல்லாம் 2009ல் நடந்தாலும், 1990லும் அவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால், சுனந்தா குடும்பத்தினர் பொமையை விட்டு வெளியேறினர்.

shashi_tharoortwitter0220141501(1)

துபாயில் தனது திறமையால் வளர்ச்சியடைந்த வியாபாரம்: இதற்குள், நவம்பர் 1991ல் சுஜித் மேனன் – சுனந்தா புஷ்கர் தம்பதிகளுக்கு சிவ் என்ற மகன் பிறந்தான். “எக்ஸ்பிரஷன்ஸ்’ ஏன்ற கம்பெனியைத் துவக்கி துபாயில் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு மற்றும் பேஷன் ஷோக்கள் நடத்தியதில் பணம் சம்பாதித்தார். பொருட்கள் அறிமுகம், பலவித நிகழ்ச்சிகள் ஏற்பாடு, பேஷன் ஷோக்கள் முதலியவற்றை ஹேமந்த திரிவேதி, ரேஹா பிள்ளை, விக்ரம் பட்னிஸ், ஐஸ்வர்யா ராய் போன்றோருடன் நடத்தினார். மம்மூட்டியை வைத்து நடத்திய ஷோவில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால், சுஜித் மேனனுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டது. போதாகுறைக்கு 1997ல் தில்லியில் நடந்த ஒரு விபத்தில் சுஜித் மேனன் இறந்தார். இதனால், இவருக்கு மிரட்டல் தொலைபேசிகள் வர ஆரம்பித்தனர். தனது கணவனின் கடனை இவர் தீர்க்க வேண்டியதாயிற்று. அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் உதவி செய்தனர்.

 

Tilothama - first wife of Sasi

Tilothama – first wife of Sasi

சசிதரூரின் முதல் மனைவி திலோத்தமா முகர்ஜி: சசி முதலில் இவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கனிஷ்க் மற்றும் இஷான் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 2007ல் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திலோத்தமா ஒரு பேராசியராக வேலை செய்து வந்தார். இதனால் கொல்கொத்தா மற்றும் நியூயார்க் நகரங்களில் பிரபலமாக இருந்தார். இதனால், சசிக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இதைப் பற்றி ஒரு பேட்டியிலும் வெளிப்படையாக தெரிவித்தார். இதனால், இவர்கள் உறவு விவாகரத்தில் முடிந்தது.

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

சசிதரூரின் இரண்டாவது மனைவி கிரிஸ்டா கையில்ஸ் 2007[4]: கிரிஸ்டா கைல்ஸ் என்ற இரண்டாவது மனைவியுடன் துபாய்க்கு வந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது, இவருக்கும் கிரிஸ்டா கைல்ஸ் தொடர்பு ஏற்பட்டது. பிறகு 2007ல் திருமணம் செய்து கொண்டனர்[5]. ஏற்கெனவே திலோத்தமா முகர்ஜியை [Tilottama Mukherjee] திருமணம் செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப் பட்டது. கிரிஸ்டாவுடன் தாம்பத்யம் இருக்கும் போதே, சசி சுனந்தாவுடன் நெருக்கமாக இருந்த செய்திகள் வெளியாகினனுதய்பூரில் இருவரும் தங்கியிருந்தபோது, கிரிஸ்டா கைல்ஸ்-சசிதரூர் பிளவு நிரந்தரமானது. தில்லி மற்றும் துபாயில், சுனந்தா சசி தரூரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து வந்தார். இதனால், தரூருக்கு பாதிப்பு ஏற்பட்டது[6].

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

மூன்றவது மனைவியாக சுனந்தா புஷ்கர்  2010: இருப்பினும் 2010ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் சசி தரூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். அப்பொழுது தான், சுனந்தா ரூ 70 கோடிகளை ஐபிஎல் வியாபாரத்தில் முதலீடு செய்தார். ஆனால், ரூ 70 கோடிகளுக்கான பங்குகளை ரூ 1530 கோடிகளுக்கு விற்றுவிட்டார். இதனால், சசி தரூர் தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற பேச்சு எழுந்தது, இதனால் பதவியும் பறிபோனது. இருப்பினும் மனிதவள மேம்பாட்டுத் துறை பிறகு அளிக்கப்பட்டது.

 

Tarar-sasi-sunanda twitting break of love

Tarar-sasi-sunanda twitting break of love

சுனந்தாவின் வியாபாரத் திறமை: பணக்கார குடும்பத்தில் பிறந்து, வியாபார நுணுக்கங்களை அறிந்திருந்ததால், பெண்ணாக இருந்தாலும், வெற்றிகரமாக வியாபாரத்தை செய்து வந்தார். ஆனால், ஆண்கள் அவரை ஏமாற்றி வந்துள்ளனர் என்று தெரிகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, காதலித்து திருமணம் செய்து கொண்ட முதல் கணவருடன் வேறுபாடு ஏற்பட்டதால் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு இரண்டாவது கணவரோ, ஏகப்பட்ட கடனை வைத்து விட்டு விபத்தில் இறந்து போனார், அதிலிருந்து மீளவும் இவர் படாத பாடு பட்டார். அப்பொழுது சிவ் குழந்தையாக, சிறுவனாக இருந்தான். அந்த சோதனையிலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. திருமணம் ஆகியும், சசிதரூர் மூலம் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தன. கேப்ரியிலா டெமிட்ரியாடிஸ் [Gabriella Demetriades] விசயத்தில் லலித் மோடி விசா கொடுக்க வேண்டாம் என்று வலியிருத்தியும் சசிதரூர் அந்த அழகிக்கு விசா கொடுத்தார்[7]. சுனந்தாவின் விவகாரத்தையும் லலித் மோடிதான் வெளிப்படுத்தினார்[8].

With Lalit Modi

கடைசியாக மெஹர் தரார்Mehr Tarar)[9]: தரூரின் பெண் பித்தம் இப்பொழுது மெஹர் தராரின் பின்னால் சென்றதால், அதன் விளைவு சுனந்தாவின் மர்மமான இறப்பில் முடிந்துள்ளது. சுனந்தா புஷ்கர் தனது கணவர் சசி தரூரை பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரான மெர் தரார் பின் தொடர்வதாக தனது டுவிட்டர் வலை தளத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அவர், மெர் என்ற பெண், தரூர் மற்றும் எனது கம்ப்யூட்டரில் ஊடுருவி (ஹேக்கிங் செய்து) உள்ளார்.  “மெர் தொடர்ந்து எனது கணவரை பின் தொடர்கிறார்அந்த பெண் ஒரு .எஸ்.. உளவாளிஎங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லைபாகிஸ்தான் .எஸ்.. உளவாளியான ஹேக்கர் எங்களை தொடர்கிறார்”, என குறிப்பிட்டு இருந்தார். அவர் மெர் தரார் பெயரிட்டு எழுதியுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், “ஒரு பெண் துணிச்சலுடன் இந்தியர் ஒருவர் மீது காதலுடன் இருக்கிறார்தயவு செய்து சசி, என்னை விலகி போக செய்து விடாதீர்நான் கெஞ்சி கேட்கிறேன்சசி உங்களை நான் காதலிக்கிறேன்”, என தெரிவித்து உள்ளார். அதன் பின் மற்றொரு டுவிட்டர் செய்தியில், டுவிட்டரில் பின் தொடர்பவர்களை கவருவதற்காக அவர் (தரார்) செய்வதென்றால் இது மிக கேவலமான ஒன்று.  அவரை குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறேன்.

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

ஒரு நாளைக்கு 20 முறை கால் செய்வது என்பது அவரை (தரூர்) பின் தொடர்வது தானே”, என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இன்னொரு டுவிட்டர் செய்தியில், “சசி தரூரும், நானும் மிக மகிழ்ச்சியாக உள்ளோம்இது அவரது (தரார்) தகவலுக்காகஇதனை அறிந்து அவர் (தரார்) வருத்தப்படுவார்தற்போது நான் நோய்வாய்ப்பட்டு உள்ளேன் என கருதுகிறேன்எனவே அதற்கு சிகிச்சை பெற செல்ல இருக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

 

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

 

டுவிட்டரில் மெர்தரார்[10]: சுனந்தாவின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து தரார் எழுதியுள்ள டுவிட்டர் செய்தியில், “என்னால் நம்ப முடியவில்லைஒரு பெண்ணின் துணிச்சல்ஒரு பெண் தனது கணவரை மற்றொரு பெண்ணுடன் தொடர்புபடுத்துவது என்பது எப்பொழுதும் மிக மோசமான நோயாகும்அவர் செய்த திருமணத்திற்கு உரிய மரியாதை இது இல்லை”, என தெரிவித்துள்ளார். தரார் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில், “அந்த பெண்ணின் அறிவு அவரது ஆங்கில அறிவு மற்றும் ஸ்பெல்லிங்கை (எழுத்து) காட்டிலும் மிக பலவீனமாக உள்ளதுஉங்களது அறிவை மேம்படுத்தி கொள்ளுங்கள்”, என கூறியுள்ளார். மற்றொரு டுவிட்டர் செய்தியில் தரார், “நான் செய்த ஒரே காரியம் அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்தது தான்ஆனால், அதன் பின், ஒரு பெண் (சுனந்தா) என்னை .எஸ்.. உளவாளி என தேசிய சேனல் ஒன்றில் கூறுவதை நான் கேட்டேன்”, என குறிப்பிட்டு உள்ளார். எது எப்படியாகிலும், சுனந்தா இறப்பின் பின்னால் எது என்பது விளக்கப்பட வேண்டியுள்ளது.

 

unandas tweet to Omar Abdullah

unandas tweet to Omar Abdullah

 

வேதபிரகாஷ்

© 16-01-2014


[2] However, sources said thousands of people took to streets at Bomie-Sopore and staged a massive demonstration on Sunday morning demanding punishment for security personnel, who allegedly fired at the youths on Saturday evening killing two of them. The protesters carrying the body of one of the deceased also demanded withdrawal of troops from the area. http://articles.timesofindia.indiatimes.com/2009-02-22/india/28001056_1_sopore-town-mohammad-amin-tantray-enquiry

[5] At the UN, which is a formal, hierarchy-driven set-up, Tharoor had not kicked off so many controversies. But even there his personal life came in for some tongue-wagging, as he got into a relationship with Christa Giles, a Canadian citizen working at the UN, and later married her. When appointed head of the public affairs division in the UN headquarters in New York, he moved his girlfriend to the office next to him. But as a rule he has been above board.

http://www.dnaindia.com/sport/report-shashi-tharoor-a-man-in-love-with-himself-1372620

[6] It was a whirlwind affair and to Tharoor’s credit, he outed Sunanda almost immediately, especially in Delhi, as the official consort of the MoS, external affairs. Their eagerness to be accepted in the power capital was evident with their presence at every social do and event. Sure, it’s hard to make friends when you are living between two cities, but as a hostess sniffs, “Sunanda invites people she meets on a plane for an intimate dinner with the minister. It may be first class but this is not Dubai, this is Delhi, where pedigree counts, not wannabe.” http://www.outlookindia.com/article.aspx?265098

[8]E-mails between Modi and the Minister’s office in January show that the model’s visa was due to expire in February 2010 and Modi wanted Tharoor’s office to ensure that her request for the visa’s renewal be turned down. The Ministry didn’t oblige — and Demetriades did get a visa. When asked why he wanted her visa blocked, Modi declined to comment.

http://archive.indianexpress.com/news/modi-told-tharoors-office-to-deny-visa-to-this-model/606183/

வயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்!

நவம்பர்13, 2013

வயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்!

intern_harassment-blog-snapshotபடிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது ஏன் என்று ஆராயவேண்டியுள்ளது, ஆனால், உண்மை சொன்னால் கோபம் வருகிறது[1] அல்லது சொன்னவர்கள் மேலேயே பாய்கின்ற போக்கும் காணப்படுகின்றது[2]. டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், “நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம்” என்றார்[3]. பெண்ணிய குழுகிகளிடமிருந்து எதிர்ப்பு வந்ததால், தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கமும் அளித்தார். இந்நிலையில், சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், செயற்முறை பயிற்சிக்காக, ஒரு முதிர்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற, ஓய்வடைந்த உச்சநீதி மன்ற நீதிபதியிடம் சென்றபோது, அவர் சில்மிஷத்தில் இறங்கினாராம். ஸ்டெல்லா ஜோன்ஸ் என்ற மாணவி, இணைதளத்தில் தனது அந்த கசப்பான அனுபவத்தை கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்[4].

In Delhi at that time (24 December 2012, Christmas Eve[5]), interning during the winter vacations of my final year in University, I dodged police barricades and fatigue to go to the assistance of a highly reputed, recently retired Supreme Court judge whom I was working under during my penultimate semester. For my supposed diligence, I was rewarded with sexual assault (not physically injurious, but nevertheless violating) from a man old enough to be my grandfather. I won’t go into the gory details, but suffice it to say that long after I’d left the room, the memory remained, in fact, still remains, with me[6].

பெண் வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய தனிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் வழக்குரைஞர் ஒருவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்று வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற மாணவி ஒருவர், அண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2012 தில்லியில் பயிற்சியில் இருந்தபோது ஹோட்டல் அறையில் தனக்கு அந்த நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தனது தாத்தா வயதிலான அவரின் செயல்பாட்டால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்[7].

இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ்[8] ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் கவனத்துக்கு வழக்குரைஞர் எம்.எல்.சர்மா எடுத்துச் சென்றார். இந்த விவகாரத்தை பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்[9]. பெண் வழக்குரைஞர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதியும் செவ்வாய்க்கிழமை முறையிட்டார். பத்திரிகையில் வெளியாகிய செய்தியை வாசித்துக் காட்டினார். மேலும், இதை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பணிபுரியும் இடங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்தளித்துள்ள விதிமுறைகளை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் வாஹன்வதி சுட்டிக்காட்டினார்[10].

இதையடுத்து, தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதாவது: “அரசுத் தலைமை வழக்குரைஞராக இந்த விவகாரத்தில் நீங்கள் (வாஹன்வதி) எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இதை நாங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெண் வழக்குரைஞரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தினாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இந்த நீதிமன்றம் அக்கறையுடன் உள்ளது. இதில் நடவடிக்கை எடுப்பதில் தாமதிக்க விரும்பவில்லை. பெண் வழக்குரைஞர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற இரு நீதிபதிகளிடமும் மதிய உணவு இடைவெளியின் போது ஆலோசித்தேன். அதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெ.எல். தத்து, ரஞ்சனா பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிக் குழுவை நியமித்துள்ளேன்[11]. இந்தக் குழுவானது புகார் குறித்து முழுமையாக விசாரிக்கும். செவ்வாய்க்கிழமை மாலையே விசாரணையைத் தொடங்கும். உண்மையைக் கண்டறிந்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்”, என்றார் அவர்[12].

படிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்குட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது நெருக்கத்தினால் தான். மேலும் இக்காலத்தில், இந்தியாவில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசும் பழக்கம் உருவாகி விட்டது. சினிமாக்களில் மட்டுமல்லாது, டிவியிலேயே, செக்ஸ் காட்சிகள், திரைப்படங்கள் முதலின அதிகமாகவே காட்டுகிறார்கள். இதனால், காண்பதை தொடவேண்டும் என்ற வக்கிரமான எண்ணம் ஆண்களின் மனங்களில் ஏற்படுகின்றது, வளர்கின்றது, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருன்றது. இதற்கு பெண்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பதை பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பது மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. படித்த, நாகரிக பெண்களைப் போல மற்ற கோடிக்கணக்கான பெண்களை ஒப்பிட முடியாது. இப்பொழுது படித்த பெண்களுக்கே இத்தகைய பாலியல் கொடுமைகள் நேரிடும் போது, மற்றவர்களின் நிலை என்னாவது என்பதை அறியலாம்.

மேலும் சினிமா நடிக-நடிகைருக்குத் தேவையில்லாத பட்டங்களும் கொடுக்கப் படுகின்றன. அத்தகைய கூத்துகள் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நடந்தேறுகின்றன[13]. இதனால், அப்பட்டங்களின் மதிப்பே குறைந்து விடுகிறது. பல்கலைக்கழகத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், அத்தகைய நெருக்கத்தின் மயக்கத்தினால் பாலியிலலில் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது[14]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே காமுகர்களாக, கொலைகாரர்களாக ம்ழாறும் நிலையும் வந்துவிட்டது[15]. எம்.பில், பி.எச்டி படிக்கும் மாணவிகளிடம் கெய்டுகள் மற்றவர்கள், அம்மாதிரியான பாலியல் தொந்தரவுகள் செய்து வருகின்றார்கள். அவற்றில் பெரும்பாலும் 99% வெளியே வருவதில்லை. ஒன்று வெளியே சொன்னால் படிப்பு முடிக்க முடியாது, பிறகு சொல்லமுடியாது, ஏனெனில் அது மானப்பிரச்சினையாகி விடும்.


[12] தினமணி, பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொந்தரவு: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை விசாரிக்க தனிக் குழு அமைப்பு, First Published : 13 November 2013 05:54 AM IST

[13] Vedaprakash, சினிமாகாரர்கள், நிகர்நிலைபல்கலைக்கழகங்கள், “டாக்டரேட்கொடுப்பதுஇத்யாதி!,

http://academicdegradation.wordpress.com/2010/02/01/doctorates-conferred-on-actresses-actors/

[15] வேதபிரகாஷ், 18 பெண்களைகற்பழித்துகொலைசெய்தஆசிரியர்! -`சயனைட்கொடுத்துகொன்றபயங்கரம்! http://academicdegradation.wordpress.com/2009/10/22/18-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/