சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)
பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சுனந்தா புஷ்கரின் முதல் திருமணம் 1988-89: ஜனவரி 1 1962 ம் தேதி பொமை என்ற இடத்தில் காஷ்மீரில் பிறந்த சுனந்தா புஷ்கர், ராணுவம் மற்றும் நிலசுவாந்தார்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். லெப்டினென்ட் கர்னல் புஷ்கர் நாத தாஸ் என்பவரின் மகள். 1983ல் அவர் ஓய்வு பெற்றார். இவரது இரண்டு சகோதர்களில் ஒருவர் வங்கியிலும், மற்றொருவர் ராணுவத்திலும் வேலைசெய்கிறார்கள். 1986-88 ஆண்டுகளில் ஶ்ரீநகரில் உள்ள அரசு கல்லுரியில் படித்தார். அப்பொழுது சஞ்சய் ரைனா என்பரை மணந்து கொண்டார். இருப்பினும் 1989ல் விவாகரத்தில் அவர்களது உறவு முடிந்தது.
சுஜித் மேனனுடன் 1991ல் நடந்த இரண்டாவது திருமணம்: சுனந்தாவிற்கு ஏற்கெனவே சுஜித் மேனன் என்பவருடன் நட்பிருந்தது. வியாபாரத்தில் நாட்டக் கொண்ட சுனந்தாவை துபாய்க்கு அழைத்துச் சென்றது சஞ்சய் ரைனா இல்லை, சுஜித் மேனன் தான். முதலில் நண்பராகவே மதித்து வந்த சுனந்தா, காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். ஆனால், சுஜித் மேனனோ அவரிடத்தில் இருக்கும் பணம் தனது வியாபார ஆசைகளுக்கு உதவும் என்ற கனவுடன் இருந்தார். துபாய்க்குச் சென்ற அவர், அங்கு சுஜித் மேனன் என்பவரை 1991ல் மணந்து கொண்டார்.
பொமை, காஷ்மீரத்தில் நடந்த தீவிரவாதத்தில் அவரது வீட்டிற்கு தீவைத்தது, குடும்பம் வெளியேறியது: 1990ல் பொமையில் நடந்த கலவரத்தில், அங்கிருந்து இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். பரமுல்லா மாவட்டத்தில் பிப்ரவரி 21 2009ல் நடந்த ராஷ்ட்ரீய ரைபில்ஸ் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்[1]. ராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. பொமை-சோப்புர் வீதிகளில் ஆர்பாட்டக்காரர்கள் தெருக்களில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ரகளை செய்தனர்[2]. இதை சாக்காக வைத்துக் கொண்டு, இந்துக்களில் வீடுகள் தாக்கப்பட்டன. ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது[3]. ஆனால், இந்துக்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. வீடுகளுக்கும் நெருப்பு வைக்கப் பட்டது. இதனால் இந்துக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. இதெல்லாம் 2009ல் நடந்தாலும், 1990லும் அவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால், சுனந்தா குடும்பத்தினர் பொமையை விட்டு வெளியேறினர்.
துபாயில் தனது திறமையால் வளர்ச்சியடைந்த வியாபாரம்: இதற்குள், நவம்பர் 1991ல் சுஜித் மேனன் – சுனந்தா புஷ்கர் தம்பதிகளுக்கு சிவ் என்ற மகன் பிறந்தான். “எக்ஸ்பிரஷன்ஸ்’ ஏன்ற கம்பெனியைத் துவக்கி துபாயில் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு மற்றும் பேஷன் ஷோக்கள் நடத்தியதில் பணம் சம்பாதித்தார். பொருட்கள் அறிமுகம், பலவித நிகழ்ச்சிகள் ஏற்பாடு, பேஷன் ஷோக்கள் முதலியவற்றை ஹேமந்த திரிவேதி, ரேஹா பிள்ளை, விக்ரம் பட்னிஸ், ஐஸ்வர்யா ராய் போன்றோருடன் நடத்தினார். மம்மூட்டியை வைத்து நடத்திய ஷோவில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால், சுஜித் மேனனுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டது. போதாகுறைக்கு 1997ல் தில்லியில் நடந்த ஒரு விபத்தில் சுஜித் மேனன் இறந்தார். இதனால், இவருக்கு மிரட்டல் தொலைபேசிகள் வர ஆரம்பித்தனர். தனது கணவனின் கடனை இவர் தீர்க்க வேண்டியதாயிற்று. அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் உதவி செய்தனர்.
சசிதரூரின் முதல் மனைவி திலோத்தமா முகர்ஜி: சசி முதலில் இவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கனிஷ்க் மற்றும் இஷான் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 2007ல் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திலோத்தமா ஒரு பேராசியராக வேலை செய்து வந்தார். இதனால் கொல்கொத்தா மற்றும் நியூயார்க் நகரங்களில் பிரபலமாக இருந்தார். இதனால், சசிக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இதைப் பற்றி ஒரு பேட்டியிலும் வெளிப்படையாக தெரிவித்தார். இதனால், இவர்கள் உறவு விவாகரத்தில் முடிந்தது.
சசிதரூரின் இரண்டாவது மனைவி கிரிஸ்டா கையில்ஸ் 2007[4]: கிரிஸ்டா கைல்ஸ் என்ற இரண்டாவது மனைவியுடன் துபாய்க்கு வந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது, இவருக்கும் கிரிஸ்டா கைல்ஸ் தொடர்பு ஏற்பட்டது. பிறகு 2007ல் திருமணம் செய்து கொண்டனர்[5]. ஏற்கெனவே திலோத்தமா முகர்ஜியை [Tilottama Mukherjee] திருமணம் செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப் பட்டது. கிரிஸ்டாவுடன் தாம்பத்யம் இருக்கும் போதே, சசி சுனந்தாவுடன் நெருக்கமாக இருந்த செய்திகள் வெளியாகினனுதய்பூரில் இருவரும் தங்கியிருந்தபோது, கிரிஸ்டா கைல்ஸ்-சசிதரூர் பிளவு நிரந்தரமானது. தில்லி மற்றும் துபாயில், சுனந்தா சசி தரூரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து வந்தார். இதனால், தரூருக்கு பாதிப்பு ஏற்பட்டது[6].
மூன்றவது மனைவியாக சுனந்தா புஷ்கர் 2010: இருப்பினும் 2010ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் சசி தரூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். அப்பொழுது தான், சுனந்தா ரூ 70 கோடிகளை ஐபிஎல் வியாபாரத்தில் முதலீடு செய்தார். ஆனால், ரூ 70 கோடிகளுக்கான பங்குகளை ரூ 1530 கோடிகளுக்கு விற்றுவிட்டார். இதனால், சசி தரூர் தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற பேச்சு எழுந்தது, இதனால் பதவியும் பறிபோனது. இருப்பினும் மனிதவள மேம்பாட்டுத் துறை பிறகு அளிக்கப்பட்டது.
சுனந்தாவின் வியாபாரத் திறமை: பணக்கார குடும்பத்தில் பிறந்து, வியாபார நுணுக்கங்களை அறிந்திருந்ததால், பெண்ணாக இருந்தாலும், வெற்றிகரமாக வியாபாரத்தை செய்து வந்தார். ஆனால், ஆண்கள் அவரை ஏமாற்றி வந்துள்ளனர் என்று தெரிகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, காதலித்து திருமணம் செய்து கொண்ட முதல் கணவருடன் வேறுபாடு ஏற்பட்டதால் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு இரண்டாவது கணவரோ, ஏகப்பட்ட கடனை வைத்து விட்டு விபத்தில் இறந்து போனார், அதிலிருந்து மீளவும் இவர் படாத பாடு பட்டார். அப்பொழுது சிவ் குழந்தையாக, சிறுவனாக இருந்தான். அந்த சோதனையிலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. திருமணம் ஆகியும், சசிதரூர் மூலம் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தன. கேப்ரியிலா டெமிட்ரியாடிஸ் [Gabriella Demetriades] விசயத்தில் லலித் மோடி விசா கொடுக்க வேண்டாம் என்று வலியிருத்தியும் சசிதரூர் அந்த அழகிக்கு விசா கொடுத்தார்[7]. சுனந்தாவின் விவகாரத்தையும் லலித் மோடிதான் வெளிப்படுத்தினார்[8].
கடைசியாக மெஹர் தரார் ( Mehr Tarar)[9]: தரூரின் பெண் பித்தம் இப்பொழுது மெஹர் தராரின் பின்னால் சென்றதால், அதன் விளைவு சுனந்தாவின் மர்மமான இறப்பில் முடிந்துள்ளது. சுனந்தா புஷ்கர் தனது கணவர் சசி தரூரை பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரான மெர் தரார் பின் தொடர்வதாக தனது டுவிட்டர் வலை தளத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அவர், மெர் என்ற பெண், தரூர் மற்றும் எனது கம்ப்யூட்டரில் ஊடுருவி (ஹேக்கிங் செய்து) உள்ளார். “மெர் தொடர்ந்து எனது கணவரை பின் தொடர்கிறார். அந்த பெண் ஒரு ஐ.எஸ்.ஐ. உளவாளி. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஹேக்கர் எங்களை தொடர்கிறார்”, என குறிப்பிட்டு இருந்தார். அவர் மெர் தரார் பெயரிட்டு எழுதியுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், “ஒரு பெண் துணிச்சலுடன் இந்தியர் ஒருவர் மீது காதலுடன் இருக்கிறார். தயவு செய்து சசி, என்னை விலகி போக செய்து விடாதீர். நான் கெஞ்சி கேட்கிறேன். சசி உங்களை நான் காதலிக்கிறேன்”, என தெரிவித்து உள்ளார். அதன் பின் மற்றொரு டுவிட்டர் செய்தியில், டுவிட்டரில் பின் தொடர்பவர்களை கவருவதற்காக அவர் (தரார்) செய்வதென்றால் இது மிக கேவலமான ஒன்று. அவரை குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறேன்.
“ஒரு நாளைக்கு 20 முறை கால் செய்வது என்பது அவரை (தரூர்) பின் தொடர்வது தானே”, என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இன்னொரு டுவிட்டர் செய்தியில், “சசி தரூரும், நானும் மிக மகிழ்ச்சியாக உள்ளோம். இது அவரது (தரார்) தகவலுக்காக. இதனை அறிந்து அவர் (தரார்) வருத்தப்படுவார். தற்போது நான் நோய்வாய்ப்பட்டு உள்ளேன் என கருதுகிறேன். எனவே அதற்கு சிகிச்சை பெற செல்ல இருக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
டுவிட்டரில் மெர்தரார்[10]: சுனந்தாவின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து தரார் எழுதியுள்ள டுவிட்டர் செய்தியில், “என்னால் நம்ப முடியவில்லை. ஒரு பெண்ணின் துணிச்சல். ஒரு பெண் தனது கணவரை மற்றொரு பெண்ணுடன் தொடர்புபடுத்துவது என்பது எப்பொழுதும் மிக மோசமான நோயாகும். அவர் செய்த திருமணத்திற்கு உரிய மரியாதை இது இல்லை”, என தெரிவித்துள்ளார். தரார் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில், “அந்த பெண்ணின் அறிவு அவரது ஆங்கில அறிவு மற்றும் ஸ்பெல்லிங்கை (எழுத்து) காட்டிலும் மிக பலவீனமாக உள்ளது. உங்களது அறிவை மேம்படுத்தி கொள்ளுங்கள்”, என கூறியுள்ளார். மற்றொரு டுவிட்டர் செய்தியில் தரார், “நான் செய்த ஒரே காரியம் அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்தது தான். ஆனால், அதன் பின், ஒரு பெண் (சுனந்தா) என்னை ஐ.எஸ்.ஐ. உளவாளி என தேசிய சேனல் ஒன்றில் கூறுவதை நான் கேட்டேன்”, என குறிப்பிட்டு உள்ளார். எது எப்படியாகிலும், சுனந்தா இறப்பின் பின்னால் எது என்பது விளக்கப்பட வேண்டியுள்ளது.
வேதபிரகாஷ்
© 16-01-2014
[2] However, sources said thousands of people took to streets at Bomie-Sopore and staged a massive demonstration on Sunday morning demanding punishment for security personnel, who allegedly fired at the youths on Saturday evening killing two of them. The protesters carrying the body of one of the deceased also demanded withdrawal of troops from the area. http://articles.timesofindia.indiatimes.com/2009-02-22/india/28001056_1_sopore-town-mohammad-amin-tantray-enquiry
[3] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/murder-case-filed-against-army/articleshow/4169435.cms
[5] At the UN, which is a formal, hierarchy-driven set-up, Tharoor had not kicked off so many controversies. But even there his personal life came in for some tongue-wagging, as he got into a relationship with Christa Giles, a Canadian citizen working at the UN, and later married her. When appointed head of the public affairs division in the UN headquarters in New York, he moved his girlfriend to the office next to him. But as a rule he has been above board.
http://www.dnaindia.com/sport/report-shashi-tharoor-a-man-in-love-with-himself-1372620
[6] It was a whirlwind affair and to Tharoor’s credit, he outed Sunanda almost immediately, especially in Delhi, as the official consort of the MoS, external affairs. Their eagerness to be accepted in the power capital was evident with their presence at every social do and event. Sure, it’s hard to make friends when you are living between two cities, but as a hostess sniffs, “Sunanda invites people she meets on a plane for an intimate dinner with the minister. It may be first class but this is not Dubai, this is Delhi, where pedigree counts, not wannabe.” http://www.outlookindia.com/article.aspx?265098
[8]E-mails between Modi and the Minister’s office in January show that the model’s visa was due to expire in February 2010 and Modi wanted Tharoor’s office to ensure that her request for the visa’s renewal be turned down. The Ministry didn’t oblige — and Demetriades did get a visa. When asked why he wanted her visa blocked, Modi declined to comment.
http://archive.indianexpress.com/news/modi-told-tharoors-office-to-deny-visa-to-this-model/606183/