Archive for the ‘அறிவழகன்’ Category

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

Indian films depicting rape-1

கற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

Indian films depicting rape-2

கற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர்? மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.

Indian films depicting rape-3-Raima Sen injured in Rape Scene

பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா?: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்? பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா? அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா?

rape case- Cinema-bollywood style-illustration

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:

  1. தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.
  2. பேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
  3. கதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.
  4. கேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  5. அதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  6. தெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.
  7. அனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.
  8. அடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.
  9. வேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  10. தேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-11-2017

Arivazagan rape case- Cinema-Kichaka-illustration

[1] News18, 10 Ultra-Regressive Scenes From Bollywood Movies That Encourage Creep Behaviour, Pathikrit Sanyal, Updated:June 23, 2016, 2:10 PM IST.

[2] http://www.news18.com/news/buzz/10-ultra-regressive-scenes-from-bollywood-movies-that-encourages-you-to-be-a-creep-1027367.html

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (2)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (2)

Arivazagan rape case- One India Tamil

இதற்கு முன்என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Arivazagan rape case- Thinathanthi

அரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா? என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Arivazagan rape case- vikatan

37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.

 

பாதிக்கப்படும் பெண்கள்

பாதிக்கப்படும் பெண்கள்

வாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.

1.       “நான், எம்.சி.., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1.       பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
2.       பேஸ்புக்வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.
3.       மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.

4.       அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.

 

4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.
5.       அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.
6.       சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன்அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட்டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.
7.       பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.
8.      சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9.       இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.

இவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.

 

© வேதபிரகாஷ்

19-11-2017

techie-burglar-raped-many-women-indian-express-18-11-2017

[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM

[2] http://www.dailythanthi.com/News/State/2017/11/17034200/At-the-knife-at-stolen-houses-Rape-arrested-for-raping.vpf

[3] விகடன், ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்!’ – சென்னையில் சிக்கியசெக்ஸ் கிரிமினல்அறிவழகனின் பின்னணி, Posted Date : 13:31 (17/11/2017); Last updated : 20:31 (17/11/2017)

[4] https://www.vikatan.com/news/tamilnadu/108078-i-left-job-to-enjoy-my-life-says-criminal.html

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1898449

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்ததுஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)

Arivazhagan case- DM-18_11_2017_017_005.small

தடுக்கி விழுந்த திருடனைப் பிடித்ததில் கிடைத்த செக்ஸ் குற்றவாளி: சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ். இவர் நேற்று அதே பகுதியில் தனியாக நடந்து சென்றார்[1]. அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபன், கத்தி முனையில், 8,500 ரூபாயை பறித்து தப்பினான்[2]. இதையடுத்து, கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர்[3]. அப்போது, குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், மின்னல் வேகத்தில் பறந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, அறிவழகன், 29, என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவனிடம், கத்தி மற்றும் மொபைல் போனில், விதவிதமான பெண்களின் புகைப்படங்கள், சில பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[4]. பின் அவனை, அடையாறு துணை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கிண்டியில், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, 25க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடியதுடன், 300 சவரன் நகைகளை, அறிவழகன் பறித்துள்ளது தெரிய வந்தது[5]. இதையடுத்து, குமரன் நகர் போலீசார், நேற்று அறிவழகனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவனை தங்கள் காவலில் எடுத்தும் விசாரிக்க உள்ளனர்.

Techie-burglar raped many women-Dinamalar- 18-11-2017

கற்பழித்தப் பெண்களின் எண்ணிக்கையை பலவாறு குறிப்பிடுவது: சென்னையில், 25க்கும் மேற்பட்ட பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பை சூறையாடிய, காமுகனை போலீசார் கைது செய்தனர் என்கிறது தமிழ்.வெப்துனியா[6]. பெண்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் 25-50 என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், ஊடகங்களில் வந்துள்ள அத்தகைய செய்திகளை போலீஸ் மறுத்து, அவர்களது முதல்கட்ட விசாரணையில், கிண்டியிலுள்ள ஒரு பெண்ணைக் கற்பழித்துதான் தெரியவந்துள்ளது என்று, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது[7]. ஆனால், “டெக்கான் ஹெரால்ட்” அவன் பல பெண்களைக் கற்பழித்தான் என்று தான் கூறுகிறது[8]. ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி, அவன் கத்திமுனையில் மிரட்டி, பல பெண்களைக் கற்பழித்ததை உறுதி செய்தார் என்றும் கூறுகிறது[9]. மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு, அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினார்[10]. இது, பல பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது குடும்பம் முதலிய விவகாரங்களுக்கு அஞ்சி புகார் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. என்னதான், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம், பெயர் முதலிய விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும் என்றாலும், ஒருநிலையில், நீதிமன்றத்தில் அவை தெரிய வர்த்தான் செய்கிறது. இதனால், வரும் விளைவுகளை அஞ்சிதான், பெண்கள் மறைத்து வாழ வேண்டியுள்ளது. இதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள், அத்தகைய கற்ப்பழிப்பாளர்களுக்கு, மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

Techie-burglar raped many women-Vikatan- 18-11-2017

போலீசாரிடம் அறிவழகன் அளித்துள்ள வாக்குமூலம்[11]: “நான், எம்.சி.., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. ‘பேஸ்புக்வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டதுமூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன். அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன்அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன்.’பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பை சூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[12].

Techie-burglar raped many women-Asianet-Newsable- 18-11-2017

கிண்டி பெண்ணைக் கற்பழித்தவன் இவன் தான், காமக்கொடூரன்: போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: “சில தினங்களுக்கு முன், கிண்டி பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துவிட்டதாக புகார் அளித்து இருந்தார்[13]. அந்த வாலிபன், அறிவழகன் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 25க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து இருப்பதாக தெரிவித்துள்ளான். அந்த வீடுகளுக்கு சென்று விசாரித்து வருகிறோம். இந்த காமக்கொடூரனை காவலில் எடுத்து விசாரித்தால் தான், பல உண்மைகள் தெரிய வரும்”, இவ்வாறு அவர்கள் கூறினர். [14] இதிலும் போலீஸார் கூறினர் என்று முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது, விசித்திரமாக இருக்கிறது. மிகவும் திகைப்படைய செய்யக் கூடிய, மென்மையான, அதே நேரத்தில் குரூரமான குற்றத்தை செய்த விவகாரத்தில், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

© வேதபிரகாஷ்

19-11-2017

Women t home subjected to rape-3

[1] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/thief-who-rapping-women-when-theft-arrest-117111700002_1.html

 

[2] தமிழ்.ஒன்.இந்தியா, வீடு புகுந்து கத்திமுனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன் கைது.. சென்னையில் பரபரப்பு, Posted By: Veera Kumar, Updated: Friday, November 17, 2017, 10:23 [IST].

[3] https://tamil.oneindia.com/news/tamilnadu/man-raped-over-50-women-chennai-say-cops-302074.html

[4] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017  23:52

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1898449

[6] தமிழ்.வெப்துனியா, கத்திமுனையில் 50 பெண்களை சூறையாடிய திருடன்சென்னையில் அதிர்ச்சி, Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:55 IST)

[7] Denying news reports in a section of the media that he was a serial rapist targeting lone women, the city police made it clear that preliminary investigation had revealed that he raped a woman in Guindy and not over 50 as projected by a section of the press.  The  Hindu, Techie-turned burglar confesses to rape, SPECIAL CORRESPONDENT, CHENNAI, NOVEMBER 18, 2017 01:07 IST; UPDATED: NOVEMBER 18, 2017 01:07 IST.UPDATED: NOVEMBER 18, 2017 01:07 IST

[8] DECCAN CHRONICLE, Chennai: Caught, thief admits to being serial rapist, Published: Nov 17, 2017, 1:45 am IST; Updated: Nov 17, 2017, 7:21 am IST.

[9] The 26-year-old man told investigators that apart from indulging in burglary and knifepoint robbery, he had also raped several home-alone women at knifepoint. A senior police officer confirmed to DC [Deccan Chronical] that the suspect did confess about raping women. However, police are checking the veracity of the claims and the process to identify and get statements from the supposed victims is underway, police sources said.

http://www.deccanchronicle.com/nation/crime/171117/chennai-caught-thief-admits-to-being-serial-rapist.html

[10] Asianet.Newsable, Thief caught in Chennai admits to being a serial rapist, By Team Asianet Newsable | 02:11 PM November 17, 2017.

[11] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017  23:52

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1898449

[13] லைவ்டே, சொகுசாக வாழ 50 பெண்களை பலாத்காரம் செய்த பட்டதாரி.! வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!, நவ 16, 2017.

[14] https://liveday.in/chennai/chennai-c1/graduate-man-raped-50-women-to-live-in-luxury/