Archive for மே, 2020

கொரோனா-கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]  

மே19, 2020

கொரோனாகோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]

Sex workers,and corona control-4

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும்: இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சிறப்பு பேராசிரியருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது[1]: “பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஏற்கனவே நோய்கள் இருந்தால், கொரோனா வைரஸ் தொற்றுநோயும் தாக்குகிறபோது நிலைமை மோசமாகி விடும். கொரோனா வைரஸ் தாக்குகிறபோது 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் தோன்றும். அவர்கள் உடலில் உள்ள ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு பொருள்), நோயை எதிர்க்கத் தொடங்கி விடும். அதே நேரத்தில் ஏற்கனவே பால்வினை நோய்களோ, எய்ட்ஸ் நோயோ, காசநோயோ இருந்திருந்தால், அவர்களை கொரோனா வைரஸ் தாக்குகிறபோது அது ஆபத்தானது. கடுமையான அறிகுறிகள் தோன்றும். மரணமும் நிகழும். கொரோனா வைரஸ் ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா சோனாகச்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 5 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதுமே பெண் பாலியல் தொழிலாளர்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவது நின்று போய்விட்டது.

Sex workers - demanding their rights

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால்பாதுகாப்பு இல்லை: டாக்டர் நரேஷ் புரோகித் தொடர்ந்து கூறியதாவது, “தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அவர்கள் சிரமப்படுகிற நிலை வந்துள்ளது. சோனாகச்சி பகுதியில் மட்டுமே தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அது இப்போது நின்று போய் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் பாதிபேர் விபசார தொழிலையே நம்பி உள்ளனர். காப்பீடு கூட செய்து கொள்வதில்லை. தமிழ்நாட்டில் 5-ல் 2 பேரும், கர்நாடகத்தில் 5-ல் ஒருவரும் இந்த நிலையில்தான் உள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் 31 சதவீத பாலியல் தொழிலாளர்கள் நிதி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் உள்ளனர். நோயுற்றால் சிகிச்சை கூட பெறுவதில்லை. ஊரடங்கை இப்போது அரசு முடிவுக்கு கொண்டுவந்தாலும், பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை உடனே தொடங்கி விட முடியாது. குறைந்தபட்சம் 1 மாதம் காத்திருக்க வேண்டியது வரும். கொரோனா பரவுவது நின்று விட்டது என்ற நிலை வர வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[2].

Sex workers - HIV awareness campaign

பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்: அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்[3]. ஊரடங்கிற்கு பின் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை விடுதிகள் மூடப்பட்டிருந்தால், இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்[4]. மேலும் ஆய்வு முடிவுகளை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்[5]. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாலியல் தொழில் விடுதிகளை தொடர்ந்து மூடியிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்[6]. இதனால் 45 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் 72 சதவீதம் குறையும் மற்றும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைய 17 நாட்கள் வரை தாமதம் ஆகும். இந்த தாமதம் அரசுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை காக்க கூடுதல் அவகாசம் அளிக்குமெனவும் கூறியுள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல் 60 நாட்களில் விடுதிகள் மூடப்பட்டிருந்தால், கொரோனா உயிரிழப்பு 63 சதவீதம் அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sex workers - training, meeting

அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு[7]: அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 16 மாநிலங்களில் உள்ளனர். தலைமை செயலகம் தில்ல்யில் உள்ளது[8].  AINSW பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், HIV தடுப்பு, சமூக பாதுகாப்பு, குடும்ப மேன்பாடு, குழந்தைகள் படிப்பு என்று பலவிதங்களில் உதவி வருகின்றது. தங்களது தொழிலில் அவர்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், சமூக மறுப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மீண்டு, அவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டும் போன்றவற்றிற்கு பயிற்சி, மனநல ஆலோசனை, மருத்துவ வசதிகள் முதலியனக் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவில் அதர்மவழி பெண்களை ஈடுபடுத்துதல் தடுப்புச் சட்டம் [The Immoral Traffic (Prevention) Act, 1956 -“ITPA”] இவர்களின் தொழிலைக் கட்டுப் படுத்தி வருகின்றது. வேறு வழி ./ வேலை இல்லை என்ற பட்சத்தில் தான் சூழ்நிலை காரணங்களுக்காக, அவர்கள் இத்தொழிலில் தள்ளப் பட்டுள்ளார்கள்.அப்படி பார்த்தால், இந்திய சமூகமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டலாம். அவர்கள் இந்துக்கள் எனும் போது, மற்ற இந்துக்களும் பொறுப்பாகிறார்கள். அந்நிலையில் அவர்களும் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு, இந்துமதத்தை வைத்து பல கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் அரசியல், வியாபாரம் செய்து வருகின்றன. ஆக, அவவை இதை எதிர்கொள்ளாமல் தத்துவம் பேசினால், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை.

Sex workers - training

முடிவுரை: இப்பிரச்சினையை முறையாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

  1. ஒவ்வொரு இந்துவும் வெட்கப் படவேண்டிய விசயம் என்னவென்றால், இந்தியாவில் 50,00,000 முதல் ஒரு கோடி பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
  2. இவர்கள் எல்லோருமே அகில இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு என்றதில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்!
  3. இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு – All India Network of Sex Workers (AINSW) இருப்பது நிதர்சனம்!
  4. இப்பொழுதைய கொரோனா நோய், தொற்று, மற்றும் ஊரடங்கு விவகாரங்களால், அவர்களது தொழில் பாதித்துள்ளது.
  5. சம்பளம் இல்லாததால், சாப்பாடிற்கே வழியில்லாத நிலையில், வாடும் இவர்களில் 60% தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
  6. குழந்தைகளுடன் இருக்கும் இவர்களில், சிலர் இரண்டு மாதமாக, சரியான உணவு உண்ணாமல் தவிக்கின்றனர்.
  7. ஆக, பெண்மை, பெண்ணியம், பெண்ணியத் தூய்மை, கற்பு…இவற்றைப் பற்றியெல்லாம் இந்துத்துவ வாதிகள் ஏன் அலசுவதில்லை?
  8. பூர்ணகும்பம், பிரசாதம் போன்றவற்றிற்கு அளந்து தள்ளுகிறார்களே, அரை கோடி பாரதிய நாரிமணிகளின் நிலை தெரியவில்லையா?
  9. “பாரத் மாதா கி ஜே” கோஷம் போடுபவர்கள், இத்தகைய நிதர்சனங்களுக்கு, உண்மைகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
  10. கோடிகணக்கில் நிவாரணம், உதவி பற்றி பிரமாதமாக வாத-விவாதம் புரிபவர்கள், இவர்களின் குழந்தைகள் கதி பற்றி யோசித்தது உண்டா?

© வேதபிரகாஷ்

18-05-2020

Hindutva, sex and adventure-novel

[1] மாலைமலர், பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா தாக்கினால் ஆபத்துமருத்துவ நிபுணர் எச்சரிக்கை, பதிவு: ஏப்ரல் 20, 2020 11:38 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/04/20113817/1436390/COVID-19-Medical-expert-Warns-Risk-if-corona-attacks.vpf

[3] தினமலர், பாலியல் விடுதிகளை மூடுவதால் 72 % கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம், Updated : மே 17, 2020 14:27 | Added : மே 17, 2020 14:25.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2541050

[5] தினமலர், சிவப்பு விளக்கு பகுதிகளால் வைரஸ் பரவல் அதிகரிக்கும், Added : மே 16, 2020 23:43.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2540619

[7] https://www.nswp.org/featured/all-india-network-sex-workers-ainsw

[8] NSWP, The Matrix,62 Newhaven Road, Edinburgh, EH6 5QB, Scotland UK;  For more information contact:+44 (0)131 553 2555; secretariat@nswp.org

கொரோனா-கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! [1]

மே19, 2020

கொரோனாகோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! [1]

60 percent sex workers return home, The pioneer, 18-05-2020-1

ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை: ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், டில்லியில் இருந்து, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர்[1]. அதாவது மற்ற தொழிலாளர்கள் போன்று, இவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். தில்லி, மும்பை, கொல்கொத்தா போன்ற நகரங்களில் அடிகடி மக்கள் வியாபாரம் போன்ற விசயங்களுக்காக வந்து செல்வதால், “செக்ஸ்” என்பது அங்கெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கிறது. முக்கியமாக, கிரிக்கெட், அனைத்துலக மாநாட்டு கூடுதல், விழாக்கள் எனும் போது, லட்சக் கணக்கில் கூட்டம் கூடும் போது, அவர்கள், “செக்ஸ்” தேடிச் செல்வது சாதாரணமான விசயமாகிறது. குறிப்பாக அயல்நாட்டு பெண்களே வருகிறார்கள் என்று செய்திகளில் படித்திருக்கலாம். இப்பொழுது, கொரோனாவினால், பீதி கிளம்பியுள்ள நிலையில், பாலியல் தொழிலாளர்களிடம் சென்றால், நோய் வராது என்ற கேரன்டி இல்லை என்ற பட்சத்தில். அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலுக்கு மத்தியில் டெல்லியின் பாலியல் தொழிலாளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்[2]. இது அவர்களில் பலரை பட்டினியின் விளிம்பிற்கு தள்ளியது.

60 percent sex workers return home, The pioneer, 18-05-2020-2

கொடிய நோய்க்கிருமியைக் குறைக்கும் என்ற அச்சம் வாடிக்கையாளர்களை விலக்கி வைத்திருக்கிறது: கொடிய நோய்க்கிருமியைக் குறைக்கும் என்ற அச்சம் வாடிக்கையாளர்களை விலக்கி வைத்திருக்கிறது, இது நகரத்தில் பாலியல் தொழிலாளர்கள் மீது பலவீனமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது[3]. ஊரடங்கு அமலில் உள்ளதால், டில்லியில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது[4]. குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்க முடியவில்லை என்ற நிலை வந்துள்ளது. இதனால், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் துவங்கி உள்ளனர்[5]. இதுகுறித்து, அனைத்து இந்திய பாலியல் தொழிலாளர்கள் அமைப்பின் / வலையமைப்பின் (AINSW) தலைவர் குசும் கூறியதாவது[6]: டில்லியில் இருந்து, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்[7]. அதாவது, டில்லியில் மொத்தமுள்ள, 5,000 பாலியல் தொழிலாளர்களில், 3,000 பேர் சென்றுவிட்டனர்[8]. உணவு, மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால், அவர்கள் இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சமூக விலக்கல், இங்கு அதிகமாகவே வேலைசெய்துள்ளது.

Sex workers, DM, 18-05-2020
எச்..வி.,க்கு உரிய சிகிச்சை இல்லை: பாலியல் தொழிலாளர் பலருக்கு, எச்.ஐ.வி., தொற்று போன்ற நோய்கள் உள்ளன. அந்நிலையில், கொரோனாவும் சேர்ந்தால், பெரிய கொரோன பாதிப்பு ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த, நாங்கள் இதுவரை எடுத்துள்ள முயற்சிகள், இனி பயன் அளிக்காது. சொந்த ஊரில், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்காது. அவர்களின் உடல்நலம் குறித்த கவலை அதிகமாக உள்ளது. பாலியல் தொழிலாளர்களின் இடம்பெயர்வு, டில்லியில் மட்டுமல்லாமல், பல நகரங்களிலும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறியதாவது: டில்லியில் தற்போது உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள், மருந்துகள், முக கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கி வருகிறோம். அவர்களுக்கு, எய்ட்ஸ் சிகிச்சை குறித்த அடிப்படை தகவல்களையும் அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Sex workers, Zee News Tamil, 18-05-2020

வாடிக்கையாளர் வர பயப்படுவதால், சேமிப்பு எல்லாம் தீர்ந்து விட்டது, வரும்படி பூஜ்யம் ஆகி விட்டது: பாலியல் தொழிலாளி ஷாலினி கூறுகையில்… டெல்லியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்திற்கு திரும்பினார். நான் 18 வயதில் .பில் உள்ள எனது தவறான வீட்டிலிருந்து ஓடிவிட்டேன். நான் ஒரு நடிகையாக இருக்க விரும்பினேன், ஆனால் என்னை ஆதரிப்பதற்காக பாலியல் வர்த்தகத்தில் இறங்கினேன்என்று 26 வயதான ஷாலினி PTI-யிடம் தெரிவித்தார். “இந்த வியாபாரத்தில் (பாலியல் வர்த்தகம்) இறங்கிய பிறகு, குறைந்தபட்சம் நான் உணவுக்காக போராடவில்லை, நான் தெருக்களில் இல்லை. ஆனால் கொரோனா வைரஸ் வெடித்தது மற்றும் பூட்டப்பட்டதிலிருந்து, எனக்கு பூஜ்ஜிய வாடிக்கையாளர்கள் உள்ளனர், பணம் வறண்டு போகிறது” என்று அவர் கூறினார். இது இந்திய பெண்களின் நிலையின்சியும் எடுத்துக் காட்டுகிறது. ஏழ்மை, குடும்ப சூழ்நிலை, உறவினர்களின் சதாய்ப்புகள் முதலியனவும் காரணமாகின்றன.

Sex workers,and corona control-2

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு  தற்போது 1.3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது: AINSW-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் குமார் கூறுகையில்[9]…. GP சாலை முற்றிலுமாக மூடப்பட்டு அதன் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். “உலர் ரேஷன், மருந்துகள், முகமூடிகள் மற்றும் சானிடிசர் ஆகியவற்றை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். HIV சிகிச்சை குறித்த அடிப்படை தகவல்களையும் அவர்களுக்கு வழங்கினோம்,” என்று அவர் கூறினார். ஹோலி சமயத்தில் பாலியல் தொழிலாளர்கள் பலர் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர், ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு திரும்பவில்லை என்று குமார் கூறினார்[10]. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்தியா தற்போது 1.3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாடு தழுவிய பூட்டுதல் ஆரம்பத்தில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மே 17 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வைரஸ் இதுவரை 2,872 உயிர்களைக் கொன்றது மற்றும் நாட்டில் 90,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது.

Sex workers,and corona control-3

நமது நாட்டில் விபசாரம் தடை செய்யப்பட்டுள்ளது:. ஆனாலும், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல மாநகரங்களில் குறுகிய பாதைகளில், சந்துகளில் சட்ட விரோதமாக விபசாரம் நடக்கிறது. இந்தியாவில் வணிக ரீதியிலான விபசாரத்தில் ஏறத்தாழ ஒரு கோடி பெண் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 1.6 சதவீதத்தில் பால்வினை நோய்கள், எய்ட்ஸ், காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரம், 2017 நிலவரம் ஆகும். இதை 2018-ம் ஆண்டு ஒரு ஆய்வின்போது ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது. இப்போது நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாலியல் தொழிலாளர்கள் துன்பத்தில் வாடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர்களின் அடிப்படை தேவைகளை செய்து தருமாறு மாநில அரசுகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.  ஆக, உள்ளுக்குள் இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, வெளியில் வேறு மாதிரி வேடம் போடுவதில் எந்ட்தவித பலனும் இல்லை.

© வேதபிரகாஷ்

18-05-2020

Sex workers,and corona control-5

[1] தினமலர், சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பாலியல் தொழிலாளர்கள், Updated : மே 18, 2020 05:50 | Added : மே 18, 2020 05:47.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2541492

[3] தினசரி, தில்லியிலிருந்து புலம் பெயரும் பாலியல் தொழிலாளர்கள், 18-05-2020, 1:10 PM.

[4] https://dhinasari.com/life-style/143234-delhi-field-of-sex-workers-go-to-own-villages.html

[5] The Hindu, Lockdown: Over 60% of sex workers in Delhi return to their home states, NEW DELHI, MAY 17, 2020 13:34 IST, UPDATED: MAY 17, 2020 13:34 IST

[6] https://www.thehindu.com/news/cities/Delhi/lockdown-over-60-of-sex-workers-in-delhi-return-to-their-home-states/article31606490.ece

[7] TimesNow, Lockdown: Over 60 per cent of sex workers in Delhi return to their home states, Delhi, PTI, Updated May 17, 2020 | 20:53 IST

[8] https://www.timesnownews.com/delhi/article/lockdown-over-60-per-cent-of-sex-workers-in-delhi-return-to-their-home-states/593261

[9] ஜீ.செய்தி, முழு ஊரடங்கால் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய 60% பாலியல் தொழிலாளர்கள், Updated: May 17, 2020, 01:17 PM IST

[10] https://zeenews.india.com/tamil/lifestyle/over-60-per-cent-of-sex-workers-in-delhi-return-to-their-home-states-amid-lockdown-335099

காசியின் காவியும், மனத்தில் கருமையும், உடலில் விஷமும்: பெண்களைச் சீரழித்த காமக் கொடூரன்! துரித தண்டனையே தீர்வு! [3]

மே14, 2020

காசியின் காவியும், மனத்தில் கருமையும், உடலில் விஷமும்: பெண்களைச் சீரழித்த காமக் கொடூரன்! துரித தண்டனையே தீர்வு! [3]

Kasi - has gang behind, 14-05-2020

பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் பாதிக்கப் பட்ட பெண் குற்றசாட்டு: கொரோனா படுத்தும் பாடு எல்லோரையும் கவலையில், பீதியில், பொருளாதார பிரச்சினைகளில் மூழ்கியிருக்கும் நேரத்தில், இந்த காமுகன் காசியின் செய்தி இடை-இடையே வந்து திகைக்க வைக்கிறது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட இருவர் அளித்த புகாரின் பெயரில் மூன்று வழக்குகள் பதிவு செய்த போலீசார், காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று ஆரம்பித்த விவகாரம் பெரிதாகி வருகிறது. அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் தாக்கல் செய்த மனு, நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், காசியைமூன்று  நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனிடையே, மோசடி இளைஞர் காசி மீது, மேலும் ஒரு பெண் சமூக வலைதளத்தில் புகார் கூறியுள்ளார். காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுள் தானும் ஒருத்தி எனவும், காசி தனி ஆளில்லை, அவன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்[1]. காசிக்கு உறுதுணையாக இருந்த அந்த கும்பலையும் காவல்துறை விட்டுவிடக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்[2].

Kasi with political connectio, Tamil Hindu, 28-04-2020

பல புகார்கள் வந்தும் 10 ஆண்டுகளாக சிக்காத காசி தற்போது சிக்கியது எப்படி…?[3]: விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உதவியிருக்கிறது. 50, 100 இப்பொழுது 200 ஆகி விட்டது போலும். சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை. அதாவது 2010லேயே வேலையை ஆரம்பித்து விட்டான்! பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த காசி, மறுபக்கம் அரசியல் அதிகாரத்தின் போதையில் மூழ்கியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் புகாரளித்தபோது, உடனே காசியை போலீசார் கைது செய்யவில்லை. சென்னையில் கொடுக்கப்பட்ட புகார், கன்னியகுமரிக்கு மாற்றி அவரை கைது செய்ய கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆனது அதிலும், சென்னை பெண் மருத்துவர் கடைசி நேரத்தில் புகாரை வாபஸ் பெறச்சொல்லி பல தரப்புகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அவரும் புகாரை வாபஸ் பெறலாம் என நினைத்தபோது, காசியால் ஏமாற்றப்பட்ட பெங்களூரு பெண் மருத்துவரிடம் பேசி மனஉறுதி அளித்தாகவும் கூறப்படுகிறது[4]. சின்மயியின் புகாரும் கவனிக்கத் தக்கது. காசியுடன் தொடர்பில் இருந்த 20 பேரின் பட்டியலையும் போலீசார் தயாரித்துள்ளனர்.

Kasi donning ochre, 14-05-2020

காமுகன் காசி காவி வேட்டியுடன் அலைவதேன்?: காசி நீதிமன்றத்துக்கு வந்த போது காவி வேட்டி மற்று நீல நிற சட்டை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தான். அவனை புகைப்படம் எடுத்த போது எந்த பதட்டமும் இன்றி போட்டோகிராபரை பார்த்து காதல் சின்னத்தை காசி காட்டியுள்ளான். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பெரும் குற்றத்தை செய்துவிட்டு முகத்தை கூட மூடாமல் பயமின்றி காதல் சின்னத்தை சிரித்தபடி போஸ் கொடுத்த காசியை இணையதள பயன்பாட்டார்கள் திட்டி வருகின்றனர். முன்னர் கோயம்புத்தூர் தீவிரவாதிகள் பல உயிர்களைக் கொன்று, நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, அதே தோரணையில் இருந்தத்தை கவனிக்கலாம், அதாவது, மாமெரும் குற்றம் செய்த பிறகும், இவர்கள் ஏதோ சாதித்து விட்டதைப் போல, “சிரிப்பது-கையை ஆட்டுவது” – இவ்வாறு நடந்து கொள்வதை கவனிக்கலாம், திட்டமிட்டே அவர்கள் மானுடத்தை சீரழித்து வருகின்றனர், மனிதர்களைக் கொல்கின்றனர். முன்னர் கிருத்துவர், ஏன் துலுக்கர் கூட காவி உடை அணிந்டு இந்தியர்களை ஏமாற்றினர், இப்பொழுதும் ஏமாற்றி வருகின்றனர். இந்த குரூரக் குற்றவாளிகளும் அதையே செய்கிறார்கள்.

Kasi - Nagerkoil advocates do not appear, 14-05-2020

14-05-2020 – நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் இந்த காமுகனுக்கு ஆஜராக மாட்டார்கள்தீர்மானம்: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ்[5], ”நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் மீது பெண்களை ஏமாற்றுதல், ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுதல், பெண்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் காசிக்கு ஆஜராக மாட்டர்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்,” என கூறியுள்ளார்[6]. இது வரை, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது[7]. அப்படியென்றால், அவர் தொடர்ந்து வாதாடுவாரா அல்லது பாதியில் விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.

Kasi fed politicians, 14-05-2020

விஐபிக்கள், அரசியல்வாதிகள் இவனிடம் பலன் பெற்றனர் என்றால் நிலைமை என்ன?: இதனிடையே, விஐபிக்கள், சிலரிடம் காசி நெருங்கி பழகி உள்ளார்.. அதில் சில கட்சி பிரமுகர்களும் அடக்கம் என்கிறார்கள்.. சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த விஐபிகளுக்கு ஹோட்டல்கள், ரிசார்ட்களும் உள்ளனவாம்.. நாகர்கோயிலில் இருந்து காரில் பெண்களை காசி இங்குதான் அழைத்து வருவாராம்[8].. இந்த ரிசார்ட், ஹோட்டல்களில் தங்க வைத்து மிரட்டிதான் ஆபாச படங்களையும் எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்[9]. ஒரு திரைப்பட நடிகரின் மகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் முதலியோரும், காசியால் சீரழிக்கப் பட்டப் பெண்களில் அடங்குவர் என்று தெரிகிறது[10]. பாண்டிச்சேரியில் ஒரு ரிசார்ட்டிலும் காசி தனது வேலைகளை செய்துள்ளான் என்றும், அங்கு விஐபிக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மகிழ்விக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும், போலீஸார் கண்டுபிடித்துள்ளது தெரிகிறது[11].

Kasi - case argued by advocate, 14-05-2020

செய்ய வேண்டியது என்ன?: கிருத்துவ பிஷப், பாஸ்டர், பாதிரி செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், முகமதியரின் அமுக்கி வாசிக்கும் அதைவிட மோசமான பயங்கரமான செக்ஸ்-பாலியல் குரூரக் குற்றங்கள், …..நிர்மலா தேவி, பொள்ளாச்சி என்று விரிந்து, இப்பொழுது சுஜியில் வந்துள்ளது. இவையெல்லாமே, சமூகத்தை சீரழித்த மோசமான கயவர் கூட்டம் தான். இவர்களைத்தான் முன்னர் அரச்சர், ராக்ஷதர் என்றனர். அவர்களைக் கொல்ல, எப்படி கடவுள் அவதாரம் எடுத்தாரோ, அதேபோல, ஒரு அவதாரம் வந்து கொல்ல வேண்டும். இல்லையென்றால், சட்டங்களில் ஓட்டைகளை வைத்துத் தப்பித்துக் கொள்வர். ஆனால் பாதிக்கப் பட்ட பெண்களின் கதி அதோகதிதான். அவர்களின் கற்பை மீட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே, உடனடியாக, நடவடிக்கை எடுத்து, மரண தண்டனை கொடுத்தால் தான், எச்சரிக்கையாக இருக்கும், இனி, இது மாதிரியான குற்றங்கள் நடக்காமல் இருக்கும். கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்ற நிலையில், இவ்வழக்கை சீக்கிரம் நடத்தில், மரண தண்டனை கொடுத்தாலும், மக்கள் மகிழ்சி அடைவர்.

© வேதபிரகாஷ்

14-05-2020

Chinmayi accuses Kasi , Dinakaran, 01-05-2020

[1] தினத்தந்தி, காசி தனி ஆளில்லைபின்னணியில் கும்பல்” – சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பெண், பதிவு : மே 04, 2020, 05:02 PM

[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/04170212/1316830/Nagercoil-Sexual-Harassment-Case.vpf.vpf

[3] NEWS18, பல புகார்கள் வந்தும் 10 ஆண்டுகளாக சிக்காத காசி தற்போது சிக்கியது எப்படி…?, LAST UPDATED: MAY 4, 2020, 12:41 PM IST

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/nagarkovil-kasi-case-how-he-caught-to-police-san-286045.html

[5] நக்கீரன், காசிக்கு ஆஜராக மாட்டோம் என தீர்மானம்! நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி!, Published on 14/05/2020 (11:36) | Edited on 14/05/2020 (12:43)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/nagercoil-kasi-issue-nagercoil-advocate-association-decision

[7] தினத்தந்தி, காசி தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டோம்” – கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு, பதிவு : மே 14, 2020, 01:20 PM

https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/14132006/1347681/kasi-sexual-abuse-case-nagarcoil-lawers.vpf.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, யார் அந்த நடிகர் மகள்.. ஆபாச காசியின் வலையில் சீக்கி சீரழிந்தார்.. விஐபிகளுக்கும் தொடர்பா?, By Hemavandhana | Updated: Friday, May 1, 2020, 11:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/nagercoil/kanniyakumari-kasi-cheating-case-police-investigation/articlecontent-pf453653-384181.html

[10] It is said that the womaniser used to fell girls right from his school days and that the daughter of a film actor and police inspector’s daughter are also his victims.

India Glitz, Shocking! Actor’s daughter affected by serial rapist Nagercoil Kasi, Tuesday, May 5, 2020.

[11] The cops have also said to have unearthed Kasi’s resort in Pondicherry where he is suspected to have entertained VIPS and politicians as well. Sources add that many more shocking skeletons will be out in this serial rapist case.

https://www.indiaglitz.com/shocking-actors-daughter-affected-by-serial-rapist-nagercoil-kasi-tamil-news-259670

70-100 பெண்களை சீரழித்த காசிப் பிரச்சினை அரசியலாக்கப் படுகிறதா, கொரோனாவில் அமுக்கப் படுகிறதா? [2]

மே3, 2020

70-100 பெண்களை சீரழித்த காசிப் பிரச்சினை அரசியலாக்கப் படுகிறதா, கொரோனாவில் அமுக்கப் படுகிறதா? [2]

Kasi house, Nagaekoil, encroached

இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..! 70 முதல் 100 பெண்கள் சீரழிந்தனர்![1]: இதன் முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்[2]. காசியில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக, ஒரு பெண் டாக்டர் பிப்ரவர் 24, 2019 அன்று புகார் கொடுத்தார் என்றுள்ளது[3]. மாட்டிக் கொண்ட காசியின் சகோதரனை, அதிமுக பிரமுகர் ஒருவர் அடித்ததால், இப்பிரச்சினை அரசியலாக்கப் பட்டது. இதற்குள், அவர் கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். ஆனால், பல பெண்கள் பாலியல் ரீதியில் சதாய்க்கப் பட்டுள்ளதால், பலர் சம்பந்தப் பட்டிருக்கக் கூடும் என்று எண்னப்படுகிறது[4]. மொபைல், லேப்டாப், ஹார்ட்-டிஸ்க், சிடிக்கள் என்று எல்லாமே பறிமுதல் செய்யப் பட்டு, ஆராயப் பட்டு வருகிறது[5]. இதில் மற்ற பெண்கள் இருப்பது தெரிந்தாலும், அவர்கள் தங்களது வாழ்க்கை நினைத்து புகார் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன[6]. கடந்த பிப்ரவரியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்ற வழக்குப் போன்றே இருப்பதாக, கருதப் படுகிறது[7]. எது எப்படியாகிலும், தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற நிலையில் இருப்பதால், மற்றவர்கக்கு சமூக பிரஞை இல்லாமல், ஏதோ, செய்திகள் படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம் என்ற நிலையில் இருந்து மறந்து விடுகிறார்கள்.

Hari clarified that he has nothing to do wit Kasi

காசியின் நண்பர்கள், தேடுதல், அவர்களிடம் விசாரணை: மின்னணு கருவிகளிடமிருந்து பெற்ற விவரங்களை வைத்து, இவையெல்லாம், இவன் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது என்றறிந்து, அவற்றிற்கு துணை போன, மற்றவர்களை போலீஸார் தேடினர், கண்டு பிடித்தனர்.. வழக்கில் கைதான, நாகா்கோவில் காசியுடன் தொடா்பில் இருந்த நண்பா்கள், அரசியல் பிரமுகா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாத் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்[8]. காவல் கண்காணிப்பாளரிடம் காசி மீது அந்த மருத்துவா் புகார் அளித்தார். இதைத்தொடா்ந்து, காசி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனா்[9].  ஏற்கெனவே, இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொடர்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் என்று பல சட்டங்களின் பிரிவுகளில், அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றிருக்கும் பொழுது, இவ்வழக்கு எதற்கு என்று தெரியவில்லை. அவ்வழக்குகளை தீவிரமாகத் தொடர்ந்து நடத்தினால், பலர் மாட்டிக் கொள்ள வாய்புள்ளது. மேலும் பெண்களின் பெற்றோர், உறவினர், மற்றவர், இவ்வழக்கை முடித்துக் கொள்ளத்தான் விரும்புவர்.

Rape works as second corona in TN, DM, 03-05-2020

முன்பகுதியில் நாலடி ஆக்கிரமித்து கட்டிய பங்களா: இந்நிலையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அவரது அடுக்குமாடி பங்களாவை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே காசியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது ஒருபுறமிருக்க இளம் பெண்களிடம் மிரட்டி பறித்த பணத்தில் தனது வீட்டை நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி மாளிகையாக மாற்றி இருக்கிறார் காசி. இதைத்தொடர்ந்து காசியின் வீட்டை மாநகராட்சியினர் அளவீடு செய்தனர்[10].  மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்பகுதியில் நாலடி ஆக்கிரமித்து கட்டி அந்த வீட்டில் தரைத்தளம், முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அனுமதியின்றி இரண்டாவது மற்றும் மூன்றாவது நான்காவது தளங்கள் என சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது[11]. பின்னர் காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு, வீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சீல் வைப்பதற்கான நோட்டீஸ் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது[12]. இதனைத் தொடர்ந்து விதி மீறிய கட்டடங்களை இடிக்க முடிவு செய்துள்ள நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நோட்டீஸ் அறிவிப்பு ஒன்றை அவரது வீட்டில் ஒட்டி உள்ளது[13].

Kasi arrested under Goondas act

காசி கைது என்று பலதடவை செய்தி வருவது ஏன்?: ஏற்கெனவே, சென்ற வாரம், காசி கைது செய்யப் பட்டான் என்று செய்தி வந்தது. எப்படி அதிவேகமாக பெண்களை ஏமாற்றி சொத்துக்களை குவித்து அதிவேகத்தில் காசி முன்னேறினானோ அதே வேகத்தில் காசி காவல்துறையிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காசியின் பிளாக்மெயில் வேலைகளுக்கு உடந்தையாக இருந்த அனைத்து நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த குற்றங்கள் வெளியே வந்துள்ள நிலையில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. இந்த நிலையில் நெல்லை நாங்குநேரி சிறையில் உள்ள காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[15]. இதனால் காசியால் பெயிலில் வர முடியாது குமரி காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் கூறுகிறார்கள்.

Kasi arrested under Goondas act-action taken

கொரோனா பிரச்சினையில் அமுக்கப் படுமா, இரண்டாவது கரோனாவாக மாறுமா?” தமிழகத்தில் கற்பழிப்பு, நாகரிக உடலுறவு, பாலியல் வன்புணர்ச்சி என்பதெல்லாம், இரண்டாவது கொரோனா போன்று வேலை செய்து கொண்டிருக்கிறது! கண்ணகி, கற்பு என்றெல்லாம் பேசுவர், மேடைகளில் முழங்குவர், சிலைகள் வைப்பர், ஆனால், இது போன்று நடக்கும் போது கண்டு கொள்ளாமல் இருப்பர். எந்த கழகத் தோழரும், இனமான வீரரும் வாளோடு போராட வரவில்லை. கொரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் கூட, கோடிக் கணக்கில் வருகின்ற நிதியைத் திருப்பி, கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடும் நிலையில், இதெல்லாம், பெரிய விசயமாகவே தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

02-05-2020

Kasi arrested under Goondas act-action taken-fate of case

[1] வேதபிரகாஷ், இளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை தீர உல்லாசம்ஆபாச வீடியோக்களை வெளியிட்டு புண்ணியம் தேடிய காசி..! 70 முதல் 100 பெண்கள் சீரழிந்தனர்!, ஏப்ரல்.26, 2020.

[2] https://womanissues.wordpress.com/2020/04/26/father-sells-animal-flesh-and-son-is-after-woman-flesh-with-excessive-sex/

[3] Not giving into the blackmail attempt, the victim, who managed to free herself, lodged a complaint with police on February 24, 2019.

AsiaNetNews, From Pollachi to Nagercoil another case of sexual crime emerges in Tamil Nadu, By Team Newsable, Chennai, First Published 30, Apr 2020, 4:19 PM..

[4] The case assumed political overtones since a local functionary of the ruling AIADMK allegedly attacked the victim’s brother. The attack by the functionary, who was later expelled from the AIADMK, coupled with reports in a section of media opened a can of worms, leading the police to believe that over 50 women may have been victims of sexual assault by a network of men.

https://newsable.asianetnews.com/india/from-pollachi-to-nagercoil-another-case-of-sexual-crime-emerges-in-tamil-nadu-q9lkpo

[5] The police recovered mobile phones, laptop, hard discs, CDs from him in which it was found he had stored intimate photographs and videos of several women.

UNI ,Goondas act slapped on youth after arrested for sexual harassment and extortion, UNI GSM CS 1745, Posted at: Apr 30 2020 5:45PM

[6] He was booked under various sections of the Indian Penal Code, Information Technology Act, 2000, and the Tamil Nadu Prohibition of Women’s Harassment Act.

http://www.uniindia.com/goondas-act-slapped-on-youth-after-arrested-for-sexual-harassment-and-extortion/south/news/1976086.html

[7] The case is similar to that of the Pollachi sexual assault case. A gang of men on February 12 allegedly tried to strip a woman inside a car near Pollachi, 500 km from Chennai. They shot a video of the act and tried to blackmail her using the visuals.

[8] தினமணி, தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை, By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]

[9] https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/apr/30/pornography-issue-sb-accused-of-teenagers-inquiry-3410063.html

[10] தமிழ்.இந்து, பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இளைஞரின் வீட்டை சீல் வைக்க நடவடிக்கை: நாகர்கோவில் மாநகராட்சி நோட்டீஸ், Published : 29 Apr 2020 05:34 PM; Last Updated : 29 Apr 2020 05:34 PM,

[11] ஏசியா.நெட்.நியூஸ், டாக்டர், எஞ்ஜினியர், நடிகர் மகள், மாணவிகளை மயக்கி பணம் பறிக்க உல்லாசம்… 4 மாடி வீடு கட்டிய பொலிகாளை காசி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 29, Apr 2020, 1:43 PM

[12] https://www.hindutamil.in/news/crime/552026-nagercoil-corporation-to-seal-youth-kasi-s-home.html

[13] https://tamil.asianetnews.com/crime/doctor-engineer-actor-s-daughter-entertaining-students-making-money-q9jiub

[14] தமிழ்.ஒன்.இந்தியா, இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை By Shyamsundar I | Published: Wednesday, April 29, 2020, 22:14 [IST]

[15] https://tamil.oneindia.com/news/nagercoil/nagercoil-sexual-harassment-kasi-arrested-in-gundas-after-police-request/articlecontent-pf453366-384051.html