Archive for the ‘சாதாரணமான இலக்கு’ Category

காலில்விழுந்து “இதுவும் ஒருவ கைசிகிச்சை தான்’ என்று சொன்ன கயவன்

ஓகஸ்ட்1, 2012

காலில்விழுந்து இதுவும்ஒருவகைசிகிச்சைதான்என்று சொன்ன கயவன்

ஊடகங்களின் செய்திகள்: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார். தினமலர் இப்படி செய்தி வெளியிட்ட நிலையில், மற்ற செய்தி இணைதளங்கள், “தனியார் மருத்துவ மனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்” என்று வெளியிட்டுள்ளன[1]. அதாவது, அவர் முயன்றார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, “……..தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது.” என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் அல்லது சும்மாயிருக்க வேண்டும் அதாவது, அரைகுறைகயாக வெளியிடக் கூடாது. இல்லையென்றால், ஊடகங்கள் சிலருக்கு ஜால்ரா போடுகின்றன அல்லது கைக்கூலிகளாக வேலை செய்கின்றன என்றுதான் தோன்றும், தெரியவரும். ஆங்கில ஊடகங்களில், “Doctor arrested for raping 16-year-old girl[2]”,  “Doctor held for raping 16-year-old girl in Madurai[3]”, “Madurai doctor held for molesting girl[4]” என்று வந்துளன.

சில்மிஷத்தில்ஈடுபட்ட பொறுப்புள்ள டாக்டர்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் “டைபாய்டு’ இருப்பது தெரிந்தது. தொடர்ந்து “குளுகோஸ்’ ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். “வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்’ என “சில்மிஷத்தில்’ ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். “இதை வெளியே சொல்ல வேண்டாம்’ எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

காலில் விழுந்து இதுவும் ஒருவகை சிகிச்சை தான்என்று சொன்ன கயவன்: இதையறிந்த டாக்டர், மாணவியிடம் “இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்’ என சமாதானப்படுத்தி, “வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என காலில் விழுந்தார்[5]. இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக “உடைத்து’ வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.

கற்ப்பைக் காத்துக் கொள்ள கடுமையாகப் போராடிய மாணவி: போலீசார் கூறுகையில், “”மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் “சில்மிஷத்தில்’ ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,” என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.

வகுப்புகேட்டடாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை “ரிமாண்ட்’ செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் “ஏ’ வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இவ்வாறு விவஸ்தையில்லாமல், சொகுசைக் கேட்டுப் பெறத்துடிக்கும் சட்டமீறல் பேர்வழிகளை கரடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

மின்திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதாவது பணத்தால் எதையும் சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்னம் உள்ளது. மேலும் அவ்வாறே, வருமானவரிக்கு தப்பிக்கும் வழியில் நிறைய சம்பாதித்துள்ளார் என்றும் தெரிகிறது.

“சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார்: அப்படியென்றால், தாய், சகோதரி, மகள் என்று யாரை வேண்டுமானாலும், இத்தகைய வக்கிரக் காமக் கொடூர வன்புத்தியாளர்கள் செய்யக்கூடும், ஆகவே அத்தகைய மனப்பாங்கையே அனுமதிக்கலாகாது. மறுபடியும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தான் சொல்லவேண்டியுள்ளது. டாக்டர்கள் இக்காலத்தில், தம் மீது எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பலவழிகளில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். மருந்து-மாத்திரைகளைக்  கொடுத்து தங்களது நோயாளிகளை பரிசோதித்து வருகிறார்கள் என்பதும் உண்மை. பின்விளைவுகளை அறிந்து கொண்டு, அவற்றை மருந்து உற்பத்தியாளர்களுக்குத் திரிவிக்க, பல லட்சங்களைப் பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, குறிப்பாக பெண்கள் இத்தகைய கயவர்களிடம் சிக்கிக் கொள்ளமல் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். பெண் எனும் போது, கூட ஒருவரை அனுமதித்தாக வேண்டும். மருத்துவம் என்ற போர்வையில் இத்தகைய கற்பழிப்புகளை நியாயப்படுத்தவோ, சபலம் என்று தப்பித்துக் கொள்ளவோ விடக்கூடாது.

வேதபிரகாஷ்

01-08-2012


குளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

ஜூலை24, 2012

குளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

திருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.

தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].

மோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்
ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

படமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

யார் அந்த மற்றவர்கள்?: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா? தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்!

  • தமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்கள் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று?
  • திராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா?
  • திராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கிறதா?
  • திராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா?
  • திரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா?

 

 


[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ?

[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.

[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.

[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.

ஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது!

பிப்ரவரி19, 2012

ஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது!

 

ஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது[1]: கிருத்துவப் பாதிரிகளின் முறையை சென்னையில் மற்றவர்களும் பின்பற்றுவதைப் போல உள்ளது. ஊட்டி ப்ரின்ஸ்பால் மற்றும் ஹைதரபாத் பள்ளி நிறுவனர் கடைப்டித்ததைப் போலவே காதர் மொய்தீனும் செய்துள்ளது வியப்பாக உள்ளது. அதாவது ஒரு ஆண் வயதுக்கு வந்த சிறுமிகளை, மாணவிகளை தனியாக அழைப்பது, செக்ஸ் ரீதியில் ஆபாசப் படம் காட்டி, பேசுவது, அதற்கு ஒரு பெண் துணையாக இருப்பது, பிறகு அப்பாவி சிறுமிகளை, மாணவிகளை பாலியில் ரீதியில் “சில்மிஷம் செய்வது” / புணர்வது, என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றங்கள் நடப்பதில் எப்படி ஒற்றுமையுள்ளது என்று தெரிகிறது. ஆபாச படம் காட்டி, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பேன்சி கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு? ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு? என்று கேட்க வேண்டும் போல இருக்கிறது. ஒரு பெண்ணே, இரு சிறுமிகளின் வாழ்க்கையுடன் விபரீதமாக விளையாடுகிறாள் என்றால் என்னவென்பது?

சிறுமிகள் / மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்: இக்காலத்தில், சிறுவயதிலேயே, திரைப்படங்களினால், டிவியினால் சிறுமிகள் / மாணவிகள் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். வயது / பருவ கோளாரினால் சிலர் அதன் விளைவுகளை அறியாமலேயே, அப்படி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ண உந்துதால், குறிப்பாக கூடா சகவாசம் முதலியவற்றால் அத்தகைய செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். பிறகு, ருசி கண்ட பூனை போல சந்தர்ப்பம் வரும் போது அத்தகைய திருட்டுக் கனியை ருசிக்க ஆசைப்படுவதனால்க், மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளா முயல்கிறார்கள் அத்தகைய நிலையின் விளைவுதான் இக்த்தகைய குற்றங்கள் பெருகிகின்றன. ஆகவே அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலர் ஏதோ இலவசமாக அல்லது வலிந்து கொடுக்கிறார்கள், சலுகை  செய்கிறார்கள் என்பதால் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனனில் இது வாழ்க்கைப் பிரச்சினை.

வேதபிரகாஷ்

19-02-2012


குறிப்பிட்ட பகுதியில் வயதான பெண்மணிகள் கொலை செய்யப் படுவது ஏன்?

மே12, 2011

குறிப்பிட்ட பகுதியில் வயதான பெண்மணிகள் கொலை செய்யப் படுவது ஏன்?


கொள்ளை-கொலையாளர்களுக்கு எளிமையான, சாதாரணமான இலக்குகள்: வயதானவர்கள், குறிப்பாக பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் இவ்வாறான கொலைகள் நடப்பது, இவர்கள் எல்லாம் கொள்ளை-கொலையாளர்களுக்கு எளிமையான, சாதாரணமான இலக்குகள் போல இருக்கிறது[1]. ஆகவே, அவர்களைத் தெரிந்தவர்கள், தெரிந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள், அறிந்து கொண்டவர்கள், அமைதியாக காரியத்தை செய்து மறைந்து விடுகிறார்கள். சில வழக்குகளில் கொலையாளிகள் பிடிபடுகிறார்கள், சில வழக்குகள் அமைதியாக மூடப்படுகின்றன. மேலும், இவர்களுக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை அல்லது அவர்கள் கவனம் செல்லுத்துவது இல்லை, என்ற நிலை இருக்கும் போது, வழக்குகள் மூடப்பட்டாலும், கேட்பார் யாரும் இல்லாததால் மறக்கப்படும். கொலையானவர்களின் ஆத்மாக்கள் அமைதியாக ஆண்டவன் தான் வழி போல இருக்கிறது.

மேற்கு மாம்பலத்தில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொலை: மேற்கு மாம்பலத்தில் தனியாக இருந்த இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொன்று, நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, மேற்கு மாம்பலம், கோதண்டராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (75); இவரது தங்கை காமாட்சி (72). வயதான இருவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தத் தெருவில் குடியிருந்து வந்தனர்[2]. ஜெயலட்சுமிக்கு திருமணமாகி, கணவர் பிரிந்து சென்று விட்டார். காமாட்சி, கோல்கட்டாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி., வேதியியல் படித்து முடித்து, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். இதன் மூலம் காமாட்சி, மாதம் 19 ஆயிரம் ரூபாய், பென்ஷன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. காமாட்சிக்கு திருமணமாகவில்லை. திருமணமாகிய ஜெயலட்சுமியின் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாலும், காமாட்சியும், அவருடனேயே வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்கு முன், அதே பகுதியில் உள்ள தனபாலன் தெருவில் வசித்து வந்தனர்.

வேலைக்காரி கதவு தட்டி திறாக்காததால் சந்தேகப் பட்டு கதவு திறக்கப்பட்டது: இவர்களது வீட்டில், கன்னியம்மாள் என்ற பெண், கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார். நேற்று கன்னியம்மாள், ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து பணிகளை முடித்துச் சென்றுவிட்டார். பகல் 12 மணிக்கு வழக்கம் போல், பணிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறம் பாதியளவு தாழிடப்பட்ட நிலையில் இருந்தது. கதவை யாரும் வலுக்கட்டாயமாக திறந்ததாகத் தெரியவில்லை[3]. கன்னியம்மாள் கூப்பிட்டும், யாரும் வந்து திறக்காததால், கதவைத் திறந்து உள்ளே சென்றார். அங்கு, உள் அறையில் ஜெயலட்சுமி, பேச்சு மூச்சற்ற நிலையில் கிடந்தார். உள்ளே சென்று பார்த்த போது, சமையலறையில் காமாட்சி, துண்டால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கீழே கிடந்தார். உடனடியாக கன்னியம்மாள், அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாரின் யூகங்கள், வழக்கு பதிவு முதலியன: அசோக்நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் தலைமையில் போலீசார், சம்பவ இடம் வந்து, இருவரது உடல்களையும் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமியின் கழுத்தில், தாலி அப்படியே இருந்தது. ஆனால், இருவரது உடலிலும் இருந்த மற்ற நகைகள் மாயமாகியுள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[4]. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும், சிதறி கிடந்தன. அவர்கள் பட்டுப்புடவை, நகைகள் அணிந்து வெளியில் சென்று வருவர் என்று தெரிகிறது. இதை கவனித்து வந்தவர்கள் தொடர்ந்து வந்து வீட்டில் நுழைந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். ஒன்றிற்கு மேலான நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இரட்டை கொலை தொடர்பாக, தெற்கு மண்டல இணை கமிஷனர் பெரியய்யா, தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சில முன்னம் நடந்த கொலைகள்- ஐவரி டவர்ஸ், ஏரிக்கரைத் தெரு – ஒரு பெண் கொலை: ஏரிக்கரைத் தெருவில் உள்ள ஐவரி டவர்ஸ் என்ற அடுக்குமாடி வீட்டில் 7-8 வருடங்களுக்கு முன்பு, தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப் பட்டார். உண்மையில் அவர் கொலை செய்யப்பட்டதே, இருநாட்கள் கடந்துதான் தெரிய வந்தது. அதுவும் பணம்-நகை-பொருளுக்காக நடந்த கொலை என்று சொல்லப் பட்டது.

 

2002ல் தி.நகர் ராகவையா தெருவில் மலர்க்கொடி (55) என்ற சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்டார்[5]: தனது வீட்டிலேயே மருத்துவ மனையை நடத்தி வரும் மலர்க்கொடி என்ற சித்தமருத்துவர் இதேபோல கொலை செய்யப் பட்டார். அதாயத்திற்கான கொலை என்று போலீஸாறர் வழக்கு பதிவு எய்தனர்.

 

2008 – எஸ். சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (73), மற்றும் வீட்டு வேலைக்காரி இன்பரசி (17) கொலை: செப்டம்பர் 2009ல் சென்னை மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் தாயையும், மகனையும் கொடூரமாகக் கொலை செய்து விட்டு நகைகளை திருடிக் கொண்டு தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர இரட்டைக் கொலை மற்றும் திருட்டு சென்னை நகர மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலை அப்பகுதியில் மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் எஸ். சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (73), மற்றும் வீட்டு வேலைக்காரி இன்பரசி (17) அசோக் நகர், நடேசன் சாலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர்[6]. சமீப காலமாக சென்னை நகரில் ஆதாயத்திற்காக கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மேற்கு மாம்பலத்தில் இரட்டைக் கொலை நடந்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனி 49-வது தெரு எப்-3 பிளாக்கில் வசிப்பவர் ராமசுப்பிரமணி (45). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் ஜெனரல் மானேஜராக பணியாற்றுகிறார்.

செப்டம்பர் 2009ல் மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் தாயையும், மகனையும் கொடூரமாகக் கொலை: இவரது மனைவி பெயர் அனந்தலட்சுமி என்ற விஜயா (39). பிளஸ்-2 வரை படித்துவிட்டு இசையும் கற்றுள்ளார். வீட்டில் சிறுவர்-சிறுமிகளுக்கு இசையும் கற்றுக் கொடுப்பார். காதல் திருமண தம்பதிகளான இவர்களுக்கு ஷோபனா (19) என்ற மகளும், சூரஜ் (12) என்ற மகனும் உள்ளனர். ஷோபனா என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். சூரஜ் 8-ம் வகுப்பு மாணவன். ராமசுப்பிரமணி பெங்களூரிலேயே தங்கி உள்ளார். அனந்தலட்சுமி மகன், மகளோடு வீட்டில் தனியாக வசித்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை, அல்லது மாதத்திற்கு 2 முறை ராமசுப்பிரமணி சென்னை வந்து மனைவி, குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார்.


நேற்று முன்தினம் ஷோபனா வழக்கம்போல கல்லூரிக்கு போய்விட்டார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சூரஜ் தாயார் அனந்தலட்சுமியோடு வீட்டில் இருந்தான். மாலை 5 மணியளவில் கல்லூரியில் இருந்து ஷோபனா வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டிக் கிடந்தது. கதவு பூட்டப்பட்டு வெளியே பூட்டு தொங்கியது. தாயாரும், தம்பியும் வெளியில் எங்காவது சென்றிருக்கலாம் என்று ஷோபனா நினைத்து வீட்டு வாசல் முன்பு காத்து இருந்து பார்த்தார். இவர்கள் வசிக்கும் வீடு கலா பிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ளது. ஷோபனா பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தாயாரும், தம்பியும் வெளியில் எங்காவது சென்றிருக்கிறார்களா என்று கேட்டார். வெளியில் எங்கும் போனதாக தெரியவில்லை என்று பக்கத்து வீட்டார் தெரிவித்தனர். உடனே தனது தாயாரின் செல்போனில் தொடர்புகொண்டு ஷோபனா பேச முயன்றார். செல்போன் `சுவிட்ச் ஆப்’ என்று பதில் அளித்தது. எங்காவது வெளியில் போய் இருப்பார்கள் என்று கருதிய ஷோபனா தனது தோழிகளின் வீட்டுக்கு போய்விட்டார்.

இரவு 9 மணி அளவில் ஷோபனா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போதும் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. சுமார் 5 மணி நேரம் தவித்துப்போன ஷோபனா ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று உணர ஆரம்பித்தார். கதவை தட்டிப் பார்த்தார். சத்தம் இல்லை. மீண்டும் தாயாரின் செல்போனுக்கு போன் செய்தார். அப்போதும் `சுவிட்ச் ஆப்’ என்றே பதில் வந்தது. இதனால் பயந்து போன ஷோபனா பக்கத்து வீட்டில் வசிக்கும் வார பத்திரிகை ஆசிரியரிடம் சென்று தனது தாயாரும், தம்பியும் காணவில்லை என்றும், வீடு வெளியில் பூட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார். உடனே வார பத்திரிகை ஆசிரியரும் வந்து கதவை தட்டிப் பார்த்தார். சத்தம் எதுவும் இல்லை. இதனால் அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அசோக்நகர் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரும் வந்து கதவை தட்டிப் பார்த்தார்கள். பதில் இல்லை.

இதனால் வேறு வழியில்லாமல் கதவை உடைத்து போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டுக்குள் கண்ட காட்சி அனைவருடைய நெஞ்சையும் பதற வைத்தது. வீட்டின் படுக்கை அறையில் மல்லாந்த நிலையில் அனந்தலட்சுமி ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.  உடலின் மற்ற பகுதிகளிலும் கத்தி குத்து காயங்கள் இருந்தன. சூரஜ் சமையல் அறையில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். வீட்டிற்குள் இருந்த பீரோவும் திறந்து அலங்கோலமாக கிடந்தது. அனந்தலட்சுமியின் பிணம் அருகே ரத்தம் படிந்த கத்திரிக்கோல் ஒன்று கிடந்தது. அந்த கத்திரிக்கோலால் தான் கொலையாளி அனந்தலட்சுமியையும், சூரஜையும் குத்தி சாய்த்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். தாயும், தம்பியும் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் கோரகாட்சியை பார்த்து ஷோபனா கதறி அழுதார்.

பட்டப்பகலில் இந்தக் கொலை நடந்துள்ளது. போலீஸ்  கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தகவல் அறிந்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் ஸ்டெபி சீனிவாசா தியேட்டர் அருகில் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அனந்தலட்சுமியின் பிணமும், சூரஜின் பிணமும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குள் கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டு நள்ளிரவுக்கு மேல் பெங்களூரில் இருந்து ராமசுப்பிரமணியும் காரில் சென்னைக்கு விரைந்து வந்தார். ஷோபனா, போனில் அம்மாவையும், தம்பியையும் காணவில்லை என்று தகவல் தெரிவித்ததாகவும், இதனால் இரவு 7 மணியளவில் காரில் புறப்பட்டு சென்னை வந்ததாகவும் ராமசுப்பிரமணி தெரிவித்தார்.

ஷோபனா அணிந்திருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்னொரு பீரோவுக்குள் இருந்த 40 சவரன் நகைகள் அப்படியே இருந்தன. அனந்தலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது வெளியில் கதவை தட்டினால் எளிதில் கதவை திறக்க மாட்டாராம். கதவை தட்டுவது யார் என்று வீட்டுக்குள் இருந்தபடியே நன்கு விசாரித்தபிறகுதான் கதவை திறப்பாராம். கொலையாளி எளிதில் வீட்டுக்குள் நுழைந்து அக்கம்பக்கத்தினருக்கு சத்தம் கேட்காதவாறு காரியத்தை கச்சிதமாக முடித்து சென்றுள்ளான். இதை வைத்து பார்க்கும்போது கொலையாளி அனந்தலட்சுமிக்கு நன்கு தெரிந்த நபராக தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம்  தொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.