Archive for the ‘மகேஷ்’ Category

தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)!

ஜூலை5, 2016

தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார் (தி இந்து)!

Sandhya murdered in front of many-mother crying

போலீசில் சரணடைந்த கொலையாளி: “ஒருதலை காதலில்” ஈடுபட்ட அடுத்த வீட்டு பையன் மகேஷ், சந்தியா தனது காதலை ஏற்றுக் கொள்ளாதலால்[1], அவளைப் பட்டப் பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு, தப்பி ஓடினான்[2]. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசாரணை மேற்கொண்டு மகேஷை தேடினர்[3]. மாலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்[4]. சந்தியா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமுடியாத வண்ணம் பல்வேறு தடைகளை மகேஷ் ஏற்படுத்தி உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்தியாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து உள்ளான், மகேஷ் மீது ஏற்கனவே சந்தியா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். கடந்த ஜனவரியில் சந்தியாவின் நிச்சயதார்த்ததையும் மகேஷ் தடுத்து உள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது[5]. ஏற்கனவே பிரச்சனை எழுந்த போது போலீசார் மகேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்தனர் என்று தெரியவந்து உள்ளது. காதலிக்க மறுத்ததால் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[6].இதுபோன்ற தொடரும் ஒரு தலைக் காதல் கொலைக்கு முற்று கிடைப்பது எப்படி? எப்போது???[7]

தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்

தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்: “தி இந்து” இப்படியொரு முடிவுடன் செய்தி “ஒருதலை காதல்லென்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருப்பது, திகைப்படையச் செய்வதாக உள்ளது. “ஒருதலைகாதல்” என்று சொல்லிக் கொண்டு அலையும் இத்தகைய குரூரக் கொலையாளிகளை எவ்விதத்தில் நியாயப்படுத்தலாம்? ஒரு பெண் தனக்குக் கிடைக்கும்-கிடைக்காது என்பதனை எப்படி இன்னொருவன் தீர்மானிக்கலாம். அத்தகைய அதிகாரம் அத்தகைய கொலைகாரர்களுக்கு உள்ளதா? ஒரு தாய், தனது மகளின் மீது இல்லாத உரிமை அல்லது ஒரு பெண்ணிற்கே தன் மீது இல்லாத உரிமை எப்படி இன்னொருவனுக்கு வர முடியும்? எல்லோரும் இளம்பெண்களை இவ்வாறு பாவித்து, சொந்தம் கொண்டாடி, முடிவெடுக்க ஆரம்பித்தால், இன்னும் எத்தனை அப்பாவி பெண்கள் கொலைசெய்யப்படுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Mahesh killer AP of Sandhya- mother crying

“தி இந்துவின்” வக்கிரமான ஆதரவு திகைக்க வைக்கிறது: இது அத்தகைய செய்தி வெளியிட்ட ஊடகத்தின் வன்மத்தினை எடுத்துக் காட்டுகிறது எனலாம். பெண்ணின் உரிமைகள் என்றேல்லாம் பேசும், இந்த ஊடகங்கள், இங்கு, பெண்களை விடுத்து, அந்த கொலையாளிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது ஏன், எப்படி என்று யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக “தி இந்து” குழும வெளியீடுகள் “மார்க்சீய” சித்தாந்த்தத்தை பின்பற்றும் பதிரிக்கையாளர்கள்-செய்தியாளர்கள் ஆதிக்கம் செல்லுத்தும் செய்தி நிறுவனம் என்பது தெரிந்த விசயம். ஆகவே, ஒருதலை காதல் விசயத்தில், ஏதோ எதேச்சதிகாரத்துவத்தை ஆதரித்து செய்திகளை வெளியிடுகிறது போலும்[8]. ஆக, சுவாதி கொலையாளியும் அவ்வாறே கூறுவான் மற்றும் இனிவரும் கொலையாளிகளும், “தமிழ்.இந்துவின்” சித்தாந்தத்தைப் பின்பற்றுவார்கள் போலும். ஒருதலை காதல் என்று சொல்லிக் கொண்டே கைகளில் கத்திகளை வைத்து அலைந்து கொண்டிருப்பார்கள், அதனை “தி இந்து” நியாயப்படுத்தும் போல!

Mahesh killer AP of Sandhya- police

ஒருதலை காதல் என்று இளம்பெண்களை கொலைசெய்வது எதில் சேர்க்க முடியும்?:

  1. தந்தையை இழந்து, தாயுடன் வாழ்ந்து வந்த 18-வயது இளம்பெண். தந்தை இல்லாத தாய்-மகள் நிலை எப்படியிருக்கும் என்று யோசிக்க வேண்டும்.
  2. பீடிசுற்றி பிழைத்து வந்த தாய்-மகள். அதாவது, உழைத்து சம்பாதித்து வாழும் நிலை வெளிப்படுகிறது.
  3. படித்து வந்த மகேஷ், காதல் என்று அந்த ஏழை மகளுக்கு வலைவீசியது. அதாவது, படிப்பதில் அக்கரை இல்லாமல், இப்படி பெண்களின் பின்னால் சுற்றும் போக்கு வெளிப்படுகிறது.
  4. அவனது முகத்தைப் பார்த்தாலே, இக்காலத்து “ரோமியோ” மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ளது தெரிகிறது. அவனது பின்னணியை ஊடகங்கள் கொடுக்கவில்லை.
  5. ஆனால், சந்தியாவின் முகத்தைப் பார்த்தால், குழந்தை போல உள்ளது. அதனால், அக்கயவன், மிரட்டியே சாதிக்கத் துணிந்துள்ளான் என்று தெரிகிறது.
  6. சென்ற வருடம் புகார் கொடுத்தபோதே, சமரசம் / அறிவுரை கொடுத்து அனுப்பிய போலீஸ், மகேஷுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தால், இக்கொலை நடந்திருக்காது.
  7. ஏனெனில், அதனை அவன் மதிக்கவில்லை. தொடர்ந்து அவளின் பின் சென்று, தொந்தரவு செய்துள்ளான்.
  8. இவ்வருடம் ஜனவரி 2016ன் போது, நிச்சயதார்த்தம் சமயத்தில் கலாட்டா செய்தபோதும், போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.
  9. இப்பொழுது, ஜூலையில் கொலையே செய்து விட்டுருக்கிறான்.
  10. இப்பொழுது அப்பாவி 18-வயது சந்தியா கொலைசெய்யப்பட்டு, இறந்து விட்டாள். வாழவேண்டிய வயதில் சாகடிக்கப்பட்டுள்ளாள். கொலைகாரனும், தனது வாழ்க்கையை அழித்துக் கொண்டு, சிறைசெல்லப் போகிறான்.

Mahesh killer AP of Sandhya- police explain

முதலில், ஒருதலை காதல் என்பது செயற்கை, இளம்வயதில் வயதுகோளாறினால் ஏற்படுவது, படித்து-வேலைக்கு செல்லாமல், வாழ்க்கையில் ஸ்திரமடையாமல் பொறுப்பற்ற நிலையில் ஈடுபடுவது, பிறகு ஸ்திரமடைந்த நிலையில் கூட பெண்ணிற்கு பிடிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற நிலையில் பிடிவாதமாக ஈடுபடுவது முதலியன தவறு என்று பையன்களுக்கு, ஆண்களுக்கு புரிய வைக்கவேண்டும்.

© வேதபிரகாஷ்

05-07-2016

[1] http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[2] http://www.thehansindia.com/posts/index/Crime/2016-07-03/Telangana-Girl-killed-in-public-for-rejecting-marriage/239438

[3] தமிழ்.வெப்துனியா, காதலிக்க மறுத்த இளம் பெண் கழுத்தறுத்து கொலை: பட்டப்பகலில் பயங்கரம், ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:10 IST)

[4] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/young-girl-killed-in-public-place-telungana-116070300014_1.html

[5] தினமணி, காதலை ஏற்க மறுத்த மற்றொரு இளம் பெண் கழுத்து அறுத்து கொலை, By DN, ஹைதராபாத், First Published : 03 July 2016 12:57 PM

[6] http://www.thinaboomi.com/2016/07/03/57679.html

[7] http://www.dinamani.com/india/2016/07/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87/article3511923.ece

[8] தமிழ்.இந்து, சுவாதி சம்பவம் போல தெலங்கானாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலைகொலையாளி கைது, Published: July 4, 2016 08:48 ISTUpdated: July 4, 2016 09:07 IST

 

ஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்!

ஜூலை5, 2016

ஒருதலைகாதலில் ஈடுபட்டு சந்தியாவின் கழுத்தை எல்லோரும் பார்க்கும்படி அறுத்துக் கொன்ற குரூர, வக்கிர காமுகன்!

Sandhya was killed not of her faukt

ஏழ்மையில் பீடி சுற்றி சம்பாதித்து நடத்தும் குடும்பம்: சென்னையில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டது போல தெலுங்கானாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்று உள்ளது[1]. பொதுவாக இத்தகைய ஒப்பீட்ட்டை ஆங்கில ஊடகங்களும் பிரயோகித்துள்ளன. ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்[2].  தெலுங்கானா மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய்[3]. இவரது மகள் டி. சந்தியா (வயது 18). தந்தையை இழந்த இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார்[4]. அதாவது, தந்தை இல்லாத நிலையில், ஒரு பெண் வேலைசெய்து, சம்பாதித்து பெண்னை வளர்க்கும் நிலை. இளம்பெண்ணும், அத்த்தொழிலில் ஈடுபட்டுள்ளது அவர்களது ஏழ்மை ஆனால், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையைக் காட்டுகிறது.

Mahesh killer AP of Sandhyaஒருதலைகாதலில் ஈடுபட்ட மகேஷ்: இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எம். மகேஷ் (வயது 22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். படிக்கும் பையன்கள் இவ்வாறு படிப்பைத் தவிற மற்ற காரியங்களில், குறிப்பாக மாணவிகளில் பின்னால் சுற்றுவது, கலாட்டா செய்வது, காதல் என்பது, காதலிப்பது போன்றவைதான் சீரழிவுக்குக் கொண்டு செல்கிறது. தனது காதலை சந்தியாவிடம் தெரிவித்தார். அவர் காதலிக்க மறுத்து விட்டார் என்று ஊடகங்கள் வெளியிட்டாலும், அத்தகைய எண்ணாத்தில் பெண் இல்லை என்பது எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் சந்தியாவை ஒரு ஆண்டாக / ஒன்றரை ஆண்டாக[5] தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, காதலிக்குமாறு தொல்லை கொடுத்தார்[6]. அப்பொழுதே – சென்ற ஆண்டு 2015ல் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது[7]. ஆனால், சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக இருவரிடையில் சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்[8]. பிரச்சினையே இங்குதான் ஆரம்பித்துள்ளது எனலாம். மேலும், மகேஷின் பெற்றோர் கண்டித்தாரா-இல்லையா போன்ற விவரங்களை ஊடகங்கள் கொடுக்கவில்லை. பொறுப்புள்ள பெற்றோர், தங்கள் மகன் இவ்வாறு காதல் என்று அடுத்த வீட்டு பெண்ணின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பதை அவர்கள் எப்படி அணுகினார்கள், ஆதரித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள் என்று தெரியவில்லை.

Sandhya murdered in front of manyசந்தியாவின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய கயவன்: இந்நிலையில், சந்தியாவிற்கு வீட்டில் வரன் பார்த்துள்ளனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் திட்டமிட்டு, ஜனவரியில் நிச்சயதார்த்தம் வைத்தனர் (தந்தை இல்லை எனாறாலும், தமிழ் ஊடகம் “பெற்றோர்” என்று பன்மையில் குறிப்பிடுவதை கவனியுங்கள். நமது நிருபர்கள் அந்த அளவில் இருக்கிறார்கள்). பக்கத்து வீடான மகேஷுக்கு இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளான்[9]. அதை தடுக்கவும் முயற்சித்தான். தானும், சந்தியாவும் இருப்பது போன்ற புகைப்படத்தை பெண் பார்க்கவந்தவர்களிடம் காட்டி, கலாட்டா செய்தான், இதனால், அந்த நிச்சயதார்த்தம் நின்றது[10]. புகைப்படம் உண்மையா அல்லது இக்கால பையன்கள் மார்பிங் செய்து எடுத்ததா என்று குறிப்பிடவில்லை. இன்று செல்போனில் மேமரா உள்ளது என்பதால், பையன்கள் போலும்-வரும் பெண்களை எல்லாம் போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். தெரியாமல், சம்மதம் இல்லாமல் இவ்வாறு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளையும் தடுக்கவேண்டும்.

Sandhya murdered in front of many- AP Dunia representationகடைக்குச் சென்ற சந்தியாவின் பின்னால் வந்தவன் கழுத்தை அறுத்தான்: 02-07-2016 அன்று மதியம் சந்தியா காய்கறி வாங்குவதற்காக வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார், என்கிறது வெப்துனியா. “ஜன்டு பாம்” வாங்கச்சென்றாள்[11] என்கிறது “டெக்கான் குரோனிகல்”! அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ் அவரிடம் மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார்[12]. இதுவே அர்த்தமில்லாதது, ஏனெனில், காதல் என்பது இப்படித்தான் வரும் என்று யார் சொல்லிக் கொடுத்தது என்று தெரியவில்லை. அப்போது தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. என் பின்னால் சுற்றாதே என்று சந்தியா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியா பின்னால் சென்று அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்[13]. அதாவது, இந்த படுகொலை, பட்டப்பகலில், எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நடந்தது[14]. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்[15]. மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தாய் சருபாய், அவரது உடலை பார்த்து கதறி துடித்தார்[16]. தனக்கு கிடைக்காத சந்தியா வேறுயாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, மகேஷ் அவரை வெட்டிக் கொன்றுள்ளார்[17], என்கிறது “தி.இந்து”!

© வேதபிரகாஷ்

05-07-2016

[1] தினத்தந்தி, காதலிக்க மறுத்த இளம்பெண் பொதுமக்கள் மத்தியில் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 03,2016, 12:34 PM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/07/03123427/18-Year-Old-s-Throat-Slit-In-Public-In-Telangana-Attacker.vpf

[3] மாலைமலர், தெலுங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை: கல்லூரி மாணவர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 09:55.

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/03095502/1023062/Telangana-girl-hacked-to-death-for-rejecting-marriage.vpf

[5] Sources said Mahesh had been harassing the girl since one-and-a-half years.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[6] தினமலர், சென்னையை போல் மேலும் ஒரு சம்பவம் ;காதலை ஏற்க மறுத்த பெண் கொலை, பதிவு செய்த நாள்: ஜூலை3, 2016: 12.00.

[7]  Sandhya had complained of being harassed by him and her family had lodged a complaint with the police last year. Mahesh did not want her to get married to anyone else and had even tried to disrupt her engagement in January this year, police said. The police had earlier brokered peace between the two sides without taking any action against Mahesh.

http://www.ndtv.com/hyderabad-news/telangana-woman-killed-by-alleged-stalker-throat-slit-1427391

[8] http://www.ndtv.com/hyderabad-news/telangana-woman-killed-by-alleged-stalker-throat-slit-1427391

[9] தினபூமி, தெலுங்கானாவிலும் ஒருசுவாதி’ : ஒருதலை காதலால் கழுத்தை அறுத்துக் கொன்ற மாணவர், July 3, 2016.

[10] He created a scene during the engagement function of the girl with another man some time back by showing a photograph in which he was with Sandhya and the incident resulted in cancellation of the engagement.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[11] Mahesh overpowered Sandhya and slit her throat with a small knife while she was coming home after purchasing Zandu Balm from a shop. He fled when a     neighbour raised an alarm on seeing the incident.

http://www.deccanchronicle.com/nation/crime/030716/hyderabad-stalker-slits-minor-girls-throat-in-public.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1556141

[13] விகடன், காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை! இது தெலங்கானாவில்!, Posted Date : 10:43 (03/07/2016)

[14] The Hindusthan Times, 21-year-old stalker slits throat of teen in full public view, Updated: Jul 04, 2016 11:27 IST.

[15] http://www.hindustantimes.com/nation-newspaper/21-year-old-stalker-slits-throat-of-teen-in-full-public-view/story-o9gVP8LET91FTdeEgYb68N.html

[16] http://www.vikatan.com/news/crime/65780-girl-kill-for-refused-love.art

[17] http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article8806429.ece