Archive for the ‘மலம்’ Category

சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

ஓகஸ்ட்19, 2013

சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

Deceit-siddha-rapist

சித்தர்உட்பட 7 பேர்கைது: இப்படி ஊடகங்கள் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள். இதனால்தான் போலும், இப்பொழுது, போதை ஊசி போட்டு சிறுமியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சித்தர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்[1].  மேலும், தலைமறைவான புரோக்கர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் சிறுமலர் (வயது 35) இவரது மகள் அமலா  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 14). இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் வளாகத்தில் சந்தேகபடும்படியாக சுற்றித்திரிந்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் மாங்காய் வியாபாரம் செய்து வருவதும், விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால் தப்பித்து ஓடி வந்ததது தெரிய வந்தது. இதைதொடர்ந்து சிறுமியை ஆந்திர போலீசார் தமிழக போலீஸ் டிஜிபி ராமனுஜத்திடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமானுஜம் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இது குறித்து சிறுமியிடம் நடந்த   முதற்கட்ட விசாரணையில் வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த அறவழிசித்தர் (வயது 48) என்பவர் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பல முறை கற்பழித்ததும், இதற்கு அவரது தாயார் சிறுமலர் உடந்தையாக இருந்தார் என்பதும் தெரியவந்தது.

Deceit-siddha-rapist.4

இரவுபூஜைசெய்தால்எல்லாம்சரியாகிவிடும்என்று கற்பழித்த அறவழிசித்தர்: அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார்[2]. மேலும்,  சித்தருடைய நண்பர்களான குமார், செல்வம் உள்ளிட்ட 6 பேர் கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து தன்னை கற்பழித்ததாகவும் சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்[3].   பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு “அறவழி சித்தர்” என்ற குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த சாமியாருக்கு வயது 48 ஆகிறது. அந்த சாமியார், சசிகலாவிடம் இரவு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார் அந்த சாமியார். அன்று இரவு பூஜைக்குப் பதில் சிறுமியை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி கற்பழித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தாயாரிடம் வந்து கதறியுள்ளார்.

Deceit-siddha-rapist

சாமியார்எதுசெய்தாலும்அதுநல்லதுக்குத்தான்: அதற்கு அந்தத் தாயார், சாமியார் எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார் மகளை. சிறுமியின் தாயாரே இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் சாமியார் பலமுறை சிறுமியை வரவழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார்[4]. ஊடகங்களும் தாயே ஒப்புக்கொண்டு மகளை கற்பழிக்க விடுத்தாள் என்பது போல செய்திகளைத் தந்துள்ளன. ஏழ்மை உறவுகளை கெடுத்துவிடும், பந்தங்களை அறுத்துவிடும், பாசங்களைக் போக்கிவிடும் என்று அவர்கள் அறியாதவர் போலும். ஆங்கிலத்தில் “சென்சேஷனல் ஜேர்னலிஸம்” என்பார்களே, அவ்விதத்தில், மகிழ்சியோடு, ரோமாஞ்சனத்துடன் செய்திகளை அள்ளிக் கொட்டியுள்ளார்கள்.

Deceit-siddha-rapist.3

சித்தரின்ஆசிரமத்தில்ஆபாசசி.டி.க்கள்: அறவழி சித்தரின் 2 அறைகள் கொண்ட ஆசிரமத்தில் போலீசார் சோதனையிட்ட போது ஆபாச சி.டி.க்கள் சிக்கியது. விபசாரகும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் சிறுமி அபர்ணாவிடம் உல்லாசம் அனுபவிக்க விபசார புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அபர்ணா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. அவர் கூறும் போது,  “விபசார கும்பலிடம் என்னை போல் மேலும் 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். ஒருத்தி தி.நகரை சேர்ந்தவள் என்றும், இன்னொருத்தி மூலக்கடையை சேர்ந்தவள்” என்றும் கூறினார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். அவரது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி திட்டமிட்டுள்ளது. கைதான அறவழி சித்தர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்தரிடம் ஏமாந்த பெண்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.

Deported-phedophiles-in-India

மீதுபாலியல்கொடுமை, பெண்வன்கொடுமைஉட்பட  ஐந்துபிரிவுகளின்கீழ்போலீசார்வழக்குபதிவு: இந்த சம்பவம் தொடர்பாக அறவழி சித்தர் மற்றும் சிறுமியின் தாயார் சிறுமலரை 17-08-2013 அன்று போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சீனிவாசன்  தலைமையில் போலீசார் 17-08-2013 இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இதில், 18-08-2013 மாலை  கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து சிறுமியை கற்பழித்தவர்களான பி.வி காலனியை சேர்ந்த ராஜேஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த பப்லு, புதுப்பேட்டையை சேர்ந்த கணேஷ், திருவான்மியூரை சேர்ந்த சதிஷ், நியூ ஆவடி சாலையை சேர்ந்த பப்லு,  ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து  5 பேரையும் கைது செய்தனர்[5]. இவர்கள்  ஐந்து பேர் மீது பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை உட்பட  ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IT_Act_does_not_cover_Chold_porn


[1] மாலைச்சுடர், சித்தர்உட்பட 7 பேர்கைது, Monday, 19 August, 2013   03:02 PM