Archive for the ‘கடமை’ Category

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

கொக்கோகத்தில் சீரழிந்த ஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].

குடும்பத்தைக் கெடுத்த பாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.

மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலியல் கொக்கோகத்தின் விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.

வீரமணிராதிகா ஆபாச வீடியோ எடுப்பதில் ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11].  இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].

வீடியோக்களை போலீஸார் ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20].  அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] நக்கீரன், மாணவர்களை மிரட்டி ஆபாச வீடியோ; ஆசிரியை ஃபோனால் அதிர்ந்த காவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/female-teacher-arrested-madurai

[3] ஜீடிவி.செய்தி, மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்கசிந்த வீடியோ..!, Written by – Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-seduce-students-and-make-fun-of-them-leaked-video-387734

[5] காமதேனு, பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது,  Updated on : 2 Apr, 2022, 8:08 pm, 2 min read

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/lady-teacher-arrested-pocso-act-in-madurai

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST

[8] https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-school-teacher-in-madurai-r9pi3f

[9] மாலை மலர், மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த ஆசிரியைவீடியோவை பரவவிட்ட கள்ளக்காதலன் கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).

[10] https://www.maalaimalar.com/news/state/2022/04/02114939/3638297/Tamil-News-School-teacher-arrested-near-Madurai.vpf

[11] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

[12] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[15] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[16] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[17] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[18] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[21] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[22] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

உலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு?

மார்ச்8, 2018

உலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு?

Women in Vedic age

சரித்திர ரீதியில் வேதகாலம்என்று இருந்ததில்லை: “வேதகாலம்” என்று, இப்பொழுது குறிப்பிடுகின்ற, சரித்திர காலகட்டத்தில் இல்லை. ஐரோப்பியர் ஆராய்ச்சி செய்த போது, அவ்வாறான காலத்தைக் குறிப்பிட்டனர்.  வேதம் ஓதி, அவ்வழி பின்பற்றும் காலட்டத்தில், மற்ற நெறிகள் இல்லை என்பதில்லை. அதனை வேதங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஒரு காலகட்டத்தில், அவர்ர்கள் ப்பெரும்பான்மையினராக இருந்து, பிறகு சுருங்கி விட்டனர் என்பது, சரித்திரம் மூலம் தெரிகிறது. அதனால் தான், வேதங்கள் தோன்றியது எங்கு என்று ஆயும் போது, ஆர்க்டிக் பகுதி, மத்திய ஆசியா, மத்தியத் தரைக்கடல் பகுதி, என்றெல்லாம் கருதுகோள்கள் வைக்கப்பட்டன. C.1450 BCE காலத்து பகோஷ்காய் கல்வெட்டு, மெசமடோமியா பகுதி மக்கள் “இந்த்ரசீல், மித்ரசீல், வௌணசீல், நசாத்தியா” என்று வேதக் கடவுளர்களை நோக்கி விளித்தப் பிறகு, தமது மற்ற கடவுளகளையும் சாட்சியாக விளிப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆகவே, அவர்களின் தொகை குறைந்தபோது, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியனவரும், மற்றவரிடம் மாற ஆரம்பித்தன. மாறினவர்கள் தங்களது சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் தான் முரண்பாடுகள் ஏற்பட்டன.

Bogozkoi inscription

சரித்திரத்தில் “இந்தியா” என்று படிக்கும் போது, இப்பொழுதுள்ள 1947-இந்தியாவிற்குள் எல்லாவற்றையும் அடக்கும் விதமாக எழுதப் படுகிறது. ஆனால், குஷானர் போன்ற வம்சாவளியினர், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்டு வந்தனர். ஜைனர்கள் [திகம்பரர் மற்றும் ஸ்வேதம்பரர்] மத்தியத் தரைக் கடல் நாடுகளில் ஆண்டு வந்தனர். இவர்கள் எல்லோருமே வேத நெறியிலிருந்து மாறுபட்டவர் மற்றும் எதிர்ப்பவர்கள். ஆக, அவர்களையும் மற்றவர்களையும் ஒப்பீடு செய்ய முடியாது. அந்நிலையில், அக்காலத்தைய வேதநெறி மக்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். குறிப்பாக கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் வேதங்களைப் படித்து, வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால், அவர்களுக்கு தடை விதித்தனர். அப்பொழுதுதான், பாஷாண்டிகளான அவர்கள் வேதம் கற்கக் கூடாது போன்ற பிரிவுகள் சேர்க்கப் பட்டன.

Vedic women- illustrative purpose

ரிக்வேத சாகைகளை இயற்றியவர்கள் பெண்ரிஷிக்கள்: வேத காலத்தில் பெண்களின் நிலை ஆண்களுக்கு சமமாக இருந்தது என்பது, பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ரோமஸ, லோபமுத்ரா, அபல, கத்ரு, விஸ்வவர, கோஷ, வகம்பிர்னி, பௌலமி, யமி, இந்திரானி, சாவித்ரி, தேவஜமி – ரிக் வேத கால பெண் ரிஷிக்கள்! நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள்! இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம்! இது இக்காலத்தைய பற்பல கட்டுக்கதைகளை உடைத்தெரிகிறது. இருப்பினும், இத்தகைய உண்மைகளை, இக்கால சித்தாந்திகள் மறைத்து வருகின்றனர்.

Vedic women- illustrative purpose-2

பெண் எந்தநிலையிலும் கல்வி கற்கலாம், பிரம்ம ஞானத்தையும் பெறலாம்: பிரம்ம ஞானத்தை கர்கி பிரமச்சாரியாக இருந்த போதும், சூடால கிரஸ்தியாக இருந்தபோதும் [திருமணனமான பின்னும்], பெற்றனர்! பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர்! பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது! ஏனெனில், அவர்கள் வேதங்களில் உள்ள சில சாகைகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர். பிரம்மவதினி [கல்யாணத்திற்கு முன்பு] மற்றும் சதயோவது [கல்யாணத்திற்குப் பின்பு] என்ற நிலைகளில் பெண்கள் சிறந்து விளங்கினர்.  பிரம்மவதினி யக்ஞோபவீதம் அணிந்து பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களைக் கற்பது. சதயோவது கல்யாணம் ஆனப் பிறகு, யக்ஞோபவீதம் அணிந்து வேதங்களைக் கற்பது.

Vedic women- illustrative purpose-3

பெண் கல்வியின் முக்கியத்துவம்: பெண்கள் குடும்பதினை நிர்வகிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் தான், அவர்களின் கல்வி ஆண்களுக்கு சமமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு பெண் படித்தால், குடும்பமே படித்த நிலை அடைகிறது என்பதை அன்றே உணர்ந்திருந்தனறர்; எங்கு பெண்கள் போற்றி-ஆராதிக்கப் படுகிறார்களோ, அங்கு கடவுட்தன்மை கொண்டவர்கள் மகிழ்கிறார்கள்! எங்கு அவ்வாறில்லையோ, எந்த சடங்கு-கிரியை செய்தாலும் பலனற்று போய் விடுகிறது.

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः ।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः ॥ ५६ ॥
Where women are honoured, there the gods rejoice; where, on the other hand, they are not honoured, there all rites are fruitless.—(56)

ஆனால், கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் பெண்களை வேறு முறையில் நடத்திய போது, வேதநெறி விற்பன்னர்கள், விதிமுறைகளை மாற்றியமைத்தனர். கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தனர். காவர்கள் ஆதிக்கம் மத்தியத் தரைக்கடல் மற்றும் இன்றைய வடமேற்கு பகுதிகளில் அதிகமாக இருந்தபோது, தம் பெண்கள் அவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது, போன்றவை நடந்த போது, பெண்கள் வேதங்கள் கற்கக் கூடாது என்று வந்தது. ஏனெனில், அவர்கள் மூலம், எதிர்-பிரச்சாரக் காரர்களுக்கு, விசயங்கள் தெரியக் கூடாது என்ற விதத்தில், அத்தடை விதிக்கப் பட்டது. இக்காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார கம்பெனிகளில் ரகசியம் காப்பாற்றப் படும் யுக்திகள் போன்று, அவை செயல்பட வேண்டியதாயிற்று.

Jain women- illustrative purpose-3

சைத்திய-கோவில் முறைகளில் பெண்கள் எவ்வாறு மந்திரதந்திரயந்திர முறைகளினால் சீரழிஉக்கப் பட்டனர்?: மாஹா வீரர் மற்றும் புத்தர் மடங்களில் பெண்-துறவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சேத்தால், ஒழுக்கம் கெட்டு விடும் என்று எச்சரித்தார்கள். ஆனால், வற்புருத்தல் பேரில், அவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தர்-அனந்தன் உரையாடல் இதனை மெய்ப்பிக்கிறது. உருவ வழிபாடு இல்லை என்ற நிலையிலிருந்து, உருவ வழிபாடு அறிமுகப் படுத்தப் பட்ட நிலைகளில், வழிபடும் இடங்கள் உருவாக்கப் பட்டன. அவை நாளடைவில் கட்டிடங்களாக, குறிப்பிட்ட முறைகளில் சைத்தியங்கள், கோவில்கள் என்று மாறின. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தது, அவர்களது சிற்பங்கள், மந்திர-தந்திர-யந்திர நூல்களே எடுத்துக் காட்டின. ஆனால், வேதநெறி பெண்கள் அவற்றில் பங்கு கொள்வது தடுக்கப் பட்டது. கஜுராஹோ போன்ற இடங்களில் இந்து-ஜைன-பௌத்தம் என்ற மூன்று வகை கோவில்களும் இருக்கின்றன என்ற இடைக்கால குழப்பத்திலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.

Buddhist women- illustrative purpose-3

வேதகாலத்தில் கோவிலே இல்லை எனும்போது பூஜாரியும் இல்லை: வேதகால கடவுள் வழிபாட்டு முறையில் உருவம், விக்கிரகம் இல்லை எனும் போது, வழிபடும் இடம், கோவில் இல்லை என்றாகிறது. கோவில் இல்லை என்றால் பூஜாரியும் இல்லை. ஆனால், இக்காலத்தில், “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனால், இன்று பெண்கள் பூஜாரிகளாக முடிவதில்லை,” என்று வாதிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. இங்கு தான் வேதநெறி பின்பற்றப் படும் முறை மற்றும் இதர முறைகள் வருகின்றன. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், தங்களது முறைகளை உருவாக்கிக் கொண்டர், சேர்த்துக் கொண்டனர். ஆகம நெறிகள் வளர்ந்த போது, அவற்றிற்கேற்றபடி, சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டாயின. ஆகவே, “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன” போன்ற வாதங்களை வைத்து, வாத-விவாதங்கள் செய்வது முட்டாள்தனமானது, சரித்திர ரீதியில் பொய்யானது. மேலும் அத்தகைய உரிமைகளுடன் போராடி, ஆர்பாட்டமாக வரும் பெண்கள் ஒன்றும் வேதகால பெண்கள் போல வேத விற்பன்னர்களாகவோ, தேர்ச்சி பெற்றவர்களாகவோ இல்லை. ஆகமங்கள் பெண்களைக் கட்டுப் படுத்துகின்றன, தடுக்கின்றன என்றால், ஆகமங்களில் அத்தகைய கட்டுப் பாடுகள் ஏன் இருக்கின்றன என்று ஆராய வேண்டும். வேதங்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

women monks - illustrative purpose-3

இக்காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?: இக்காலத்தில், எல்லோரும் வேதகாலத்து மக்கள் மாதிரி இருக்க முடியாது. வேத கொள்கைகளை பின்பற்றலாம். மற்றவர்களிடமும் அதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஒழுக்கம், நேர்மை, தருமம், நியாயம் முதலியவற்றின் மீது ஆதாரமாக, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருப்பதை பின்பற்றலாம். பல செயல்களுக்கு இயந்திரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உபயோகப் படுத்தப் படும் நிலையில், எத்தனையோ சடங்குகள், கிரியைகள், சம்ஸ்காரங்கள் … செய்யப் படாமல் போகின்றன அல்லது சுருக்கப் படுகின்றன. ஆ     கையால், தார்மீக அளவில் தான் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் நிலை வந்துள்ளது. ஆக, தனிமனித ஒழுக்கம் தான், அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலையுள்ளது. அந்நிலையில், பெண்களுக்கான பொறுப்புகள் அதிகமாகியுள்ளன.

© வேதபிரகாஷ்

08-03-2018

women day 08-03

பகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, ஆனால், பேய்-பிசாசு உண்டு: திராவிட நல்திருநாட்டி

நவம்பர்22, 2016

பகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, ஆனால், பேய்பிசாசு உண்டுதிராவிட நல்திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும்!

puzhal-excorcist-magician-dm-22-11-2016

திராவிட சித்தாந்திகளும், செக்யூலரிஸ பேய்களும்: சமீபத்தில் நடந்துள்ள “மந்திரவாதிகள்” சம்பந்தப்பட்ட விவகாரங்கள் திடுக்கிட வைப்பதாகவும், கவலையாகவும் இருக்கின்றன. 60 ஆண்டுகளாக நாத்திகம் போதித்து, கடவுள் நம்பிக்கையை சீரழித்து, பெரியார்-அறிஞர்-கலைஞர்-பேராசியர் போன்றோர் “திராவிடர்களை” பகுத்தறிவோடு “முட்டாள்கள்” ஆக்கியிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் “பேய் கதைகள்” எழுதி, “பேய் சினிமாக்கள்” எடுத்து, மற்றொரு “ஞானத்தையும்” வளர்த்துள்ளனர். இது “விட்டலாச்சார்யா” பாணியை விடுத்து, பெரியாரிஸ-ஹாரி பாட்டர் முறையில் சென்றாதால், பகுத்தறிவு-நம்பிக்கையாளர்கள், மாற்று வழிகளில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர் போலும். ஆமாம், “ஆத்மா” இல்லையென்று சொல்லி “பேய்-பிசாசுகளில்” நம்பிக்கை வந்து விட்டது. “அம்மனோ சாமியோ, அத்தையோ மாமியோ கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ..?” பாணியில் சினிமாவில் பேயோட்டியது 1960களில். இன்றோ, “எக்ஸார்ஸிட்”, “ஓமன்” ரேஞ்சுகளை மீறி விட்டார்கள். பேய் என்றாலே பாதிரி-சிலுவைகள் தான் வரவேண்டும். பேய்களும் மாறிவிட்டன, அதாவது, மதம் மாற்றப்பட்டு விட்டன. செக்யூலரிஸ இந்தியாவில், இனி பேய்களுக்குக் கூட மதம் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இனி சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்-அலசுவோம்.

puzhal-magician-exorcist-22-11-2016

பேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்குசூடு! பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம்[1]: பேய் விரட்டுவதாக கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணின் உடலில் சூடு போட்ட, போலி மந்திரவாதி உட்பட இருவரை, போலீசார் தேடுகின்றனர். பாவம், பேயெல்லாம் கிடைக்கிறது, பார்க்கிறார்கள், பேசுகிறார்கள் ஆனால், பேயோட்டுகிறவர்களை தேட வேண்டியிருக்கிறது. சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 36; தொழிலாளி. இவரது மனைவி, ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். ராஜேஸ்வரி, மன அழுத்தம் காரணமாக, கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவரிடம் செல்ல வேண்டு என்று தெரியவில்லை போலும். தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என நினைத்த விஜயகுமார், அதே பகுதியைச் சேர்ந்த, மந்திரவாதி சந்திரன் என்பவனின் உதவியை நாடியுள்ளார். அதற்கு அவர், ’50 ஆயிரம் ரூபாய் செலவாகும். 48 நாட்களில் உன் மனைவி குணமாகிவிடுவார்’ என, நம்பிக்கை அளித்திருக்கிறான். அதற்கு முன்பணமாக, 5,000 ரூபாயும் பெற்றுள்ளான்.

puzhal-magician-exorcist-22-11-2016-dm-cutting

மந்திராவாதி மனைவியை உள்ளே அழைத்துச் சென்றானாம், கணவன் வெளியே நின்றானாம்: 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, விஜயகுமார், தன் மனைவியை, சந்திரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ‘ராஜேஸ்வரியை பிடித்துள்ள பேயை விரட்ட, சிறப்பு பூஜை செய்ய போகிறேன்’ எனக் கூறி, அப்பெண்ணை அழைத்துக்கொண்டு, சந்திரன் உள்ளே சென்றுள்ளார். அவனது உதவியாளன் நவீன், வீட்டிற்குள் இருந்தான். விஜயகுமார், வீட்டின் வெளியே நின்றிருந்தார். என்னடா இது, இப்படி செய்கிறார்களே என்று யோசித்திருக்க வேண்டாமோ? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போலி மந்திரவாதி சந்திரனும், நவீனும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்று உள்ளனர். அதற்கு, ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும், ராஜேஸ்வரியின் உடலில் சூடு போட்டுள்ளனர்[2]. அலறி துடித்த அவர், வெளியில் ஓடி வந்து, கணவனிடம், மந்திரவாதியின் அட்டகாசம் பற்றி கூறியிருக்கிறார்.

puzhal-magician-22-11-2016

பேயோட்ட வந்தவன் ஓடிவிட போலீஸார் தேடுகிறார்களாம்: பேயோட்டுகிறேன் என்று பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்து, அதிர்ச்சி அடைந்த விஜய குமார் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தோர், அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், விசயம் அறிந்த, போலி மந்திரவாதியும், அவனது உதவியாளனும் தப்பி ஓடிவிட்டனர். அருத்தம் அடைந்த விஜய குமார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆக, பேயை மந்திரவாதி விட்டு ஓடிவிட, போலீஸார் அவனை தேடுவது, நல்ல தமாஷுதான்! இனி திராவிடத்தின் கேரளதேசத்தில் நடந்ததைப் பார்ப்போம்[3]. “தமிநாடு-கேரளா திராவிடப் பண்பாட்டு உறவுகள்” என்று திராவிடத்துவவாதிகள் இன்றும் எழுதி வருகிறார்கள்[4]. கேரளாவில் மந்திரம்-சூனியம்-பேயோட்டுதல்-ஆரூடம்-பிரசன்னம் முதலியவற்றை பார்ப்பதில், செய்வதில் நிறைய பேர் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளதும் வியப்பான விசயம் தான்.

kerala-man-allegedly-stopped-wife-from-breastfeeding-baby-until-prayers

மந்திரவாதி சொன்னதால், பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க தடுத்த கணவன்தப்பாமல் கேட்ட மனைவி[5]: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான ஹப்சத்தை பிரசவத்திற்காக முக்கத்தில் உள்ள இ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். 04-11-2016 காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மத குருவின் அறிவுரைப்படி, மசூதியிலிருந்து 5 முறை தொழுகைக்கான அழைப்புச் சத்தம் கேட்காதவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மனைவியிடம் அபுபக்கர் கூறியுள்ளார்[6]. அதை ஏற்று, பெற்ற குழந்தைக்கு தாயும் பால் கொடுக்க மறுத்துவிட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தாய்ப்பால் கொடுக்க அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குழந்தைக்கு ஏதாவது ஆனால் கூட தான் பொறுப்பேற்பதாக உறுதியளித்து, தனது மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையிலிருந்து கட்டாய டிஸ்சார்ஜ் பெற்று அழைத்துச் சென்றுவிட்டார்[7].

female-workers-breast-feed-male-workers-for-good-workவிசாரணையில், தம்மை தலாக் செய்துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்த மனைவி: இருப்பினும் மருத்துவமனை பிரச்சினை வரக்கூடாது என்று போலீஸாரிடம் புகார் கொடுத்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, உரிய விசாரணை நடத்த கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தாமரச்சேரி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து பிறந்த குழந்தையின் உரிமையான தாய்ப்பாலை கொடுக்க மறுத்ததாக தாய் ஹப்சத், தந்தை அபுபக்கர் மீது சிறார் நீதிச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்[8]. இந்நிலையில், குழந்தையின் தந்தை அபுபக்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பகுதியை சேர்ந்த ஐதூருஸ் என்ற மந்திரவாதி கூறியதால்தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார்[9]. இதையடுத்து முக்கம் போலீஸார் அபுபக்கர் மற்றும் மந்திரவாதி ஐதூருஸை கைது செய்தனர்[10]. முன்னதாக, இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தம்மை தலாக் செய்‌துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

22-11-2016

islamic-breast-feed-fatwa-and-practice

[1] தினமலர், பேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்குசூடு! பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம்!, பதிவு செய்த நாள். நவம்பர்.21, 2016. 21.26.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1653780

[3]  அ. கருணானந்தம், தமிழ்நாடுகேரளா திராவிடப் பண்பாட்டு உறவுகள், விடுதலை ஞாயிறு மலர், பக்கம்.2, 19-11-2016.

[4] http://viduthalai.in/page2.html

[5] தினகரன், குழந்தைக்கு தாய்ப்பாலை தடுத்த தந்தை, மந்திரவாதி கைது, Date: 2016-11-06@ 01:09:59.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=256848

[7] தினமணி, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தடுத்த தந்தை மீது வழக்கு!, By DIN  |   Published on : 06th November 2016 10:09 AM.

[8] http://www.dinamani.com/latest-news/2016/nov/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2593625.html

[9] தமிழ்.வெப்துனியா, பூஜை செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கொலை செய்த மந்திரவாதி, Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:22 IST).

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sorcerer-cheating-and-murder-of-woman-116102500026_1.html

 

சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்த போராட்டம்!

நவம்பர்24, 2015

சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை பெண்ணிய வீராங்கனைகளின் ரத்த போராட்டம்!

 Happy to bleed - campaign - come and see the blood on my skirt

ந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை பார்க்க முடியும்[1]. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, “கடவுள் ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி.  அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறப்பட்டிருக்கும், என்று குறிப்பிடும் விகடன், இது கேரள உயர்நீதி மன்ற தீப்ப்பின் மீது ஆதாரமானதாகும், என்பதனை எடுத்துக் காட்டவில்லை. ஆனால், விகடன் தொடர்ந்து, அதையும் மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோவில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள்.  பிரபல கன்னட நடிகை ஜெய்மாலா, தான் 2006-ம் ஆண்டு சபரிமலைக்குள் சென்று கடவுள் ஐயப்பனை தொட்டு வழிபட்ட தகவலை 2010-ம் ஆண்டு கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து, கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது[2]. இப்பிரச்சினை மற்றும் சினிமா ஷுட்டிங் எடுப்பவர்கள் மற்ற விஐபிக்கள் எப்படி இந்த விதிமுறைகளை மீறியுள்ளார்கள் என்பது, பல நேரங்களில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளன[3] என்று தெஹல்கா எடுத்துக் காட்டியுள்ளது.

Happy to bleed - campaign - come and see the blood on my skirt- no more whisperபரயாறு கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதனால், அவர் சொன்ன பதிலை பிரச்சினையாக்கும் குழுக்கள்: மாதவிடாய் போக்கு உள்ள பெண்கள், சபரிமலை செல்ல அனுமதியில்லை. குறிப்பாக, 6 வயது சிறுமியர் முதல், 60 வயது பெண்கள் வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மாதவிடாய் காலத்தில், சபரிமலைக்கு வந்து விடக் கூடாது; அவ்வாறு செல்வது, தீட்டு என, காலம் காலமாக நம்பப்படுவது தான். சபரிமலை அய்யப்பன் கோவிலை கட்டுப்படுத்தும் அமைப்பான, தேவசம் போர்டின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், ‘சபரிமலைக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவரா?’ என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்[4].  பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன், “மனிதர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய கருவிகள் வந்துள்ளது போல, பெண்கள் தூய்மையாக தான் இருக்கிறார்களா என உறுதி செய்வதற்கான பரிசோதனை செய்யும் கருவி ஏதேனும் கண்டுபிடித்தால்தான் அது சாத்தியம்“, என்றார்[5]. ஊடகக்காரர்கள் கேட்ட கேள்வி, தோரணை விஷமத்தனமானது, அதனால், அவரும் அதற்கேற்ற முறையில் பதில் கூறியுள்ளார்.

Happy to bleed - campaign against sabarimalai entry deenial to womenஹேப்பி டூ பிளீடுஎன்ற பெயரில், பேஸ்புக் இணையதளத்தில் பக்கத்தை துவக்கி பிரச்சாரம்: இதை அறிந்த, கேரளா மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள், கடும் கோபம் அடைந்தனர். ‘ஹேப்பி டூ பிளீடு’ என்ற பெயரில், பேஸ்புக் இணையதளத்தில் பக்கத்தை துவக்கி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கோபத்தை வார்த்தைகளாக வடித்து விட்டனர். ‘மாதவிடாய் காலத்தில் பெண்கள், சுத்தமாக இருப்பதில்லை என்பதை இவர் அறிந்தாரா அல்லது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடவுளை வணங்கக் கூடாது என, கடவுள் சொல்லியுள்ளாரா?’ என, பல பெண்கள், தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர். போதாக்குறைக்கு, பல பெண்கள், மாதவிடாய் காலத்தில் அணியும் ஆடைகளையும் காட்டி, கோபால கிருஷ்ணனுக்கு எதிர்ப்பை காட்டினர்[6]. அவரது இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

Happy to bleed - campaign against sabarimalai entry deenial to women.2நிகிதா ஆசாத் என்பவரின் பிரச்சாரம்[7]: இது குறித்து முகநூலில் “மாதவிடாயை சந்தோசமாக அனுபவியுங்கள்” (Happy to Bleed) என்ற தலைப்பில், தேவஸ்தானத் தலைவரைக் கண்டித்து நிகிதா ஆசாத் என்பவர் ஒரு பக்கத்தை ஆரம்பித்துள்ளார்[8]. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது எதிர்ப்புகளை பதிந்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறும்போது, தேவஸ்தான நிர்வாகியின் இந்தப்பேச்சு, பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நமது சமூகத்தில் பின்பற்றப்படும் பெண்களுக்கான வன்மத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முகநூளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப்பக்கத்தில் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்[9]. ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் இனைவார்கள் என்று எதிர் பார்க்கிறோம் என்றார். கடந்த 21-11-2015 சனிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பக்கத்தில், பெண்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியும், மாதவிடாயின்போது எடுக்கப்பட்ட படங்ககளையும், உபயோகப்படுத்திய சேனிட்டரி நேப்கின்களின் படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Happy to bleed - campaign - priyanka Sharma and Aina Singhமாதவிடாய் நிஜமும், நிதர்சனமும்: தமிழ்.ஒன்.இந்தியா சொல்கிறது, இந்நிலையில் உண்மையிலேயே மாதவிடாய் என்றால் என்ன… அதை ஏன் தீண்டத் தகாத விஷயமாக இன்னும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்களுக்கு மாதம் தோறும் நடக்கும் ஒரு சாதாரண உடல் சார்ந்த சுழற்சியால் ஏன் இவ்வளவு போராட்டம் என்பதைப் பற்றியெல்லாம் பெரிய கல்வி கற்ற நிலையில் இருப்பவர்களுக்கே சரியான அறிவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை[10]. புதுப்பிக்கும் சுழற்சி: மாதாமாதம் கருவினைச் சுமக்க இருக்கின்ற பெண்ணின் கர்ப்பையானது தன்னையே புதுப்பித்துக் கொள்கின்ற ஒரு நிகழ்வுதான் மாதவிடாய். அதற்கு சரியான பெயர் “மாத ஓய்வு”. விலக்கு என்பதே அந்த 3 நாட்களும் பெண்களின் உடலில் சோர்வு அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினாலேயே அக்காலத்தில் வீட்டிலிருந்து ஓய்வு அளித்தார்கள்[11]. இக்காலத்திலும், பெண்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குளித்து விட்டு சமைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். குளிக்காமல் சாபிடும் பெண்களும் இருக்கிறார்கள்.

Yoni ritual with a woman- probably orchestratedஎனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்குக் கோபம் ஒன்றும் வராது:  “எனக்கு கருப்பை இருக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அதிலிருந்து ரத்தம் வழியும். எனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்குக் கோபம் ஒன்றும் வராது. திரு.பிரயார் கோபால கிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போன்றுதான் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமற்றவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 9 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”, என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை போடுபவர்கள் எழுதியுள்ளனர்[12]. எல்லாம் சரிதான், ஆனால், மற்ற கடவுளர்களுக்கு கோபம் வருவதால் தானே, யூதம், கிருத்துவம், இஸ்லாம், அவர்களை தடுக்கிறது. அங்கே, கீழ் கண்ட கமென்டைப் போட்டேன்:

I have carefully gone through the thread.

As usual, the comments have been drifting to different directions with the intruding varied opinion.

The prohibition of menstruating women to enter religious places, participate in Eucharist and rituals etc., has been there throughout the world among the Jews, Christians, Muslims, Hindus and others, even today.

Therefore, hope you bleed more happily and reasonably with secularism.

நிகிதா ஆஜாத் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து விட்டார். என்ன செய்வது, பெண்கள் இந்நாட்டு கண்கள் ஆயிற்றே?  இருப்பினும் சில பெண்கள் தெருக்களில் “என்னுடைய ஸ்கர்டில் ரத்தம் இருக்கிறது, வந்து பார்”, என்ற பதாகைகளுடன் நிற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது[13]. பெற்ற தாய்மார்கள் என்ன நினைப்பார்களோ?

வேதபிரகாஷ்

24-11-2015

[1] விகடன், மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!, Posted Date : 10:18 (24/11/2015); Last updated : 10:18 (24/11/2015)

[2] http://www.vikatan.com/news/article.php?aid=55482

[3] பார்வை – சபரிமலை சர்ச்சை – சக்கரியா, தெஹல்கா 15.07.2006 இதழில் வெளியானது. ஆசிரியரின் இசைவுடன் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில்: சுகுமாரன், http://www.kalachuvadu.com/issue-80/paarvai.htm

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1393880

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மாத விலக்கு குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் சர்ச்சை பேச்சு.. பேஸ்புக்கில் கொந்தளிப்பு, Posted by: Anbarasan Vijay Updated: Monday, November 23, 2015, 18:33 [IST].

[6] தினமலர், சபரிமலை தேவசம் போர்டு தலைவருக்கு ‘செம டோஸ்’, November 23, 2015, 21:27 [IST].

[7] https://www.facebook.com/events/757746744337128/

[8] http://tamil.oneindia.com/news/india/sabarimala-board-president-wants-machine-that-scans-menstruating-women-240492.html

[9] http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/

[10] தமிழ்.ஒன்.இந்தியா, ஹேப்பி டூ ப்ளீட்”- முன்னோர் வழக்கங்களை மூட நம்பிக்கைகள் ஆக்காதீங்க ப்ளீஸ்!, Posted by: Vijayalakshmi Updated: Tuesday, November 24, 2015, 10:08 [IST].

http://tamil.oneindia.com/news/india/happy-bleed-girls-240534.html

[11] http://tamil.oneindia.com/news/india/happy-bleed-girls-240534.html

[12] இப்போது.காம், இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள், எழுதியவர் நந்தினி வெள்ளைச்சாமி, November 23, 2015.

[13] http://feminisminindia.com/2015/04/10/come-and-see-the-blood-on-my-skirt-students-take-menstruation-to-the-streets/#.VlM8Z3YrLIU

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

ஓகஸ்ட்31, 2013

கலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்!

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

இவர்களுக்கு இந்த வேலை தேவையா?

திடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.  மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா?

தூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.

வில்-ஹியூம்-heum-pedophile

வில்-ஹியூம்-heum-pedophile

மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.

குழந்தைக் கற்பழிப்பாளிகளை  விட்டு வைக்கக் கூடாதுஅறிவுரை யாருக்கு தேவை?: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.

© வேதபிரகாஷ்

31-08-2013