Archive for the ‘ஆசிரியர் செக்ஸ்’ Category

மதுரைப் பள்ளியில்  நடந்த பாலியல் தொல்லை வழக்கு ஏன் கிடப்பில் கிடக்கிறது? மார்ச் முதல் மே வரை அமைதி காக்கும் மர்மம் என்ன?

மே30, 2021

மதுரைப் பள்ளியில்  நடந்த பாலியல் தொல்லை வழக்கு ஏன் கிடப்பில் கிடக்கிறது? மார்ச் முதல் மே வரை அமைதி காக்கும் மர்மம் என்ன?

யார் அந்த மதுரை பள்ளி ஆசிரியர்? என்ன நடந்தது?[1] (மார்ச் 2021): நக்கீரன் இதழில் மார்ச் மாதம் வந்த விவரங்கள், “சில குற்றங்கள், சட்டத்தின் பார்வையில் அது பெரிய குற்றமாகவே இருந்தாலும், சமூகச் சூழல்களால் வெளிப்படாமல் மறைக்கப்படுகிறது. அப்படி ஒரு குற்றச்செயலில் மதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் சிக்காமல், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு மட்டும் ஆளாகியிருக்கிறார். மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை நடத்துபவரின் மகனான விஜய், ஆரப்பாளையத்தில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்[2]. கரோனா லாக்டவுன் நேரத்தில் இவர், அந்தப் பள்ளியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவியைப் பள்ளிக்கு வரவழைத்து, காரில் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் மீது புகார் அளித்தது: நக்கீரன் தொடர்கிறது, “அந்த மாணவிக்கு ஆபாசப் படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வந்ததை, அவருடைய அக்கா தனது கணினியில் உள்ள செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றோரிடம் தெரிவிக்க, மாணவி சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை ஆதாரமாக இணைத்து, கடந்த 28-7-2020 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யரிடம் புகார் அளித்தனர்பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினருக்கு ஆசிரியர் விஜய்யிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக பேசி முடிக்கப்பட்ட நிலையில், 29-7-2020 அன்று மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து போல நடத்தப்பட்ட அந்த விசாரணையின்போது, மாணவி தரப்பிடம் உள்ள ஆதாரங்கள் பறிக்கப்பட்டு, பெயரளவுக்கு ஆசிரியர் மீதான நடவடிக்கையாக, 30-7-2020 அன்று விஜய்யிடம், செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளிக்குப் பணியிடமாறுதல் உத்தரவு (..எண் 4/015663/18) வழங்கினர்”.

 புகாரை மறைக்கமாற்ற முயன்ற நிலை: நக்கீரன் தொடர்கிறது, “ஆசிரியர் விஜய்யை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், கண்துடைப்பாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்… 4-8-2020 அன்று விஜய் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை (தர்ஸ்ரீ.சர்.4/009179/2020) தயாரித்தபோது, முதலில்மாணவியை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்என்று உறுதிபடக் கூறிவிட்டு, பிறகு அதை அழித்துவிட்டுபாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்,’ எனத் திருத்தியுள்ளனர். மாணவி தரப்பிடம் வெற்றுத்தாள்களில் கையொப்பம் பெற்றும், கல்வி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேரம் நடத்தியும், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் வாங்கிக் கொடுத்தும், மீடியேட்டராக இருந்து விவகாரத்தைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தாராம், ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர். மூன்று வாட்ஸ்ஆப் குழுக்களை ஆரம்பித்து, அதில் பள்ளி மாணவிகளை இணைத்து, ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், ஆபாசப் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பாலியல் வீடியோக்களை அனுப்பி வந்திருக்கிறார் விஜய். அவருடைய 10 வருட ஆசிரியர் பணியில், எத்தனை மாணவிகள் சீரழிக்கப்பட்டனரோ?

விஜய் சஸ்பென்ட் செய்யப் பட்டது: நக்கீரன் தொடர்கிறது, “தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நம்மிடம் மறுத்துப் பேசினார் ஆசிரியர் விஜய், “மூன்று தடவை விசாரணை நடத்தியிருக்காங்க. அஃபிசியலா எல்லாம் முடிஞ்சிருச்சு. ஏதாவது ரிப்போர்ட் வேணும்னா.. சி... ஆஃபீஸில் கேட்டுக்கங்க. நான் அந்த மாதிரி எதுவும் பண்ணல. உள்ளூர் ஸ்கூல்ல கரோனா நிவாரணத்துக்கு நான் அதிக நிதி கலெக்ட் பண்ணுனதுனால, பொறாமைல இருக்கவங்க பண்ணுன கம்ப்ளைண்ட்என்றார் படபடப்புடன். மதுரை, பொன்னகரத்தில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யரை சந்தித்தோம். “போன மார்ச்ல எக்ஸாம் முடிஞ்ச பிறகுதான் கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க. பேரண்ட் கம்ப்ளைண்ட் கைக்கு வந்ததும், விஜய்க்கு ஃபோன் பண்ணுனோம். அவர் அட்டெண்ட் பண்ணல. மறுநாளே அந்தப் புகாரை சி...க்கு அனுப்பிட்டேன். பெற்றோர் தரப்பில், நடந்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கொடுத்து, விஜய்யை டிரான்ஸ்பர் பண்ணனும்னு சொன்னாங்க. மொதல்ல டிரான்ஸ்பர் ஆகி.. இப்ப சஸ்பெண்ட்ல இருக்காரு. ஸ்கூலுக்கு உள்ளே தப்பு எதுவும் நடக்கல. எல்லாமே ஆன்லைன்ல நடந்திருக்குஎன்றார்”.

மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா:நக்கீரன் தொடர்கிறது, “மதுரை, செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். “எங்க ஸ்கூல்ல விஜய் சேர்ந்து ரெண்டு நாள்கூட இருக்காது. ஏதோ பிளான் பண்ணி சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துட்டாங்க. அந்த ஆர்டர்ல விபரம் எதுவும் குறிப்பிடலஎன்றார். மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயாவை தொடர்புகொண்டோம். “எந்த விஷயத்தையும் மூடி மறைக்கல. ஒரு கமிட்டி போட்டு விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. கோவிட் பீரியட்ங்கிறதால உடனே ஆக்ஷன் எடுக்க முடியல. அதனால, மொதல்ல டிரான்ஸ்பர் கொடுத்திட்டு, அப்புறம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். இன்னும் முழுமையா விசாரணை நடந்து முடியல. அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததா சொல்லுறது பொய். பணம் வாங்கியிருந்தால் சஸ்பெண்ட் பண்ணியிருப்போமா?” என்று கேட்டார்”.

மார்ச் 2021ல் இந்தியன் எக்ஸ்பிரசும் விவரமாக செய்தி வெளியிட்டிருந்தது[3]: குற்றஞ்சாட்டப் பட்ட நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படவில்லை, அச்சட்டப் பிரிவுகளின் படி கைதும் செய்யப் படவில்லை. விசாரனைக் குழு கூட்டத்திற்கு அந்த பெண்ணோ, பெற்றோரோ ஆஜராகவில்லை என்றுதான், அரசு அதிகாரிகளின் தரப்பில் சொன்னதாக செய்தியில் உள்ளது. எஸ்.கே. பொன்னுத்தாய், விசாரணை மட்டும் போதாது, போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[4]. வழக்கறிஞர் ஷாஜி செல்லன் என்பவரும், இது போன்ற புகார் வரும் பொழுது, பள்ளி நேரிடையாக போலீஸிடம் புகார் கொடுக்க வேண்டும். விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். எது எப்படியாகிலும், இப்பொழுது, மறுபடியும் இப்பிரச்சினை எழுந்துள்ளது.

 விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது (மே 2021): மார்ச் மாதத்தில் நக்கீரன் செய்தியை வெளியிட்டப் பிறகு, மற்ற ஊடகங்கள் வெளியிட்டனவா என்று தெரியவில்லை. ஆனால், மே 2021ல் திடீரென்று அதைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை, “பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்” என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள். மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்[5]. ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன் 2020 ஜூலையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தந்தை மாநகராட்சி, மாவட்டகல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. மேலகோபுரத்தெரு கோதண்டம் ‘போக்சோ’ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்[6].

சஸ்பென்ட் செய்யப் பட்ட விஜயபிரபாகரன்: நீதிமன்ற உத்தரவின்படி விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,க்கள்) சேர்க்கப்பட்டு நகர் தெற்கு அனைத்துமகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விஜயபிரபாகரனை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா ‘சஸ்பெண்ட்’ செய்தார். அவர் கூறுகையில் “புகார் அளித்தவுடன் பெண்கள் பள்ளியில் இருந்து ஆண்கள் பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில் கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,” என்றார். மே 25 2021லிருந்து, சிறியதாக, இச்செய்தி வெளியிடப் பட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

30-05-2021


[1] நக்கீரன், ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் அத்துமீறல்மதுரை பள்ளி பயங்கரம்!, அதிதேஜா, Published on 02/03/2021 (10:51) | Edited on 02/03/2021 (11:09)

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/online-classes-incident-madurai-school-terror

[3] Indian Exppress, ‘Eight Months On, Minor Awaits Justice For Abuse, Published: 04th March 2021 03:49 AM  |   Last Updated: 04th March 2021 03:49 AM.

[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/mar/04/eight-months-on-sexually-abused-minor-girl-awaiting-justice-2271910.html

[5] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீதுபோக்சோவழக்கு; 2 டி...,க்கள் மீதும் நடவடிக்கை, Added : மே 25, 2021  05:58.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2773488

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]  

ஒக்ரோபர்19, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]

Eloped teacher with 16-year boy caught in Chennai

40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம்  ஆலப்புழா மாவட்டம் சேர்தலா  பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்[3].  கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.  மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகாரம் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான் போல.

Eloped teacher with 16-year boy caught in Chennai-3

25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா? சரி, புருஷன்? இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்!

Dravidian teacher teach what

பெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.

Nagapatnam prof eloped with girl student

மோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagapatnam prof eloped with girl student-2.jpg

1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்?: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “சரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் பட்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜமாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங்களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.

Eloped teacher with 16-year boy caught in Chennai-2

மறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு  யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

19-10-2018

Reassess dravidian ideology for the increase in sex crime

[1] மாலைமலர், பள்ளி மாணவனுடன் காதல்சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.

[2] https://youtu.be/w2QZH5lJDH4?t=11

[3] https://www.maalaimalar.com/News/District/2018/09/29101100/1194536/Kerala-female-teacher-missing-with-10th-std-student.vpf

[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM

[5] https://www.thanthitv.com/News/India/2018/09/29080845/1010123/Kerala-school-teacher-Eloped-with-school-student.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST

[7] https://tamil.oneindia.com/news/tamilnadu/student-threaten-commit-suicide-teacher/articlecontent-pf313351-323714.html

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! [1]

ஒக்ரோபர்19, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்!  [1]

Married Prof eloped with girl-student

திருமணம் ஆகி, இரு குழந்தைகள் உள்ளவன், மாணவியுடன் வைத்த உறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Position of chastity on Tamilnadu-1

தனது வகுப்பில் படிக்கும்ம் மாணவியுடன் காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.

Position of chastity on Tamilnadu

மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்![3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா? இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].

Eloped teacher with 16-year boy caught in Mysore

பிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’  என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.  அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.

16 loves 26

16-வயது மாணவன், டீச்சருக்கு காதல் செய்தி அனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.  இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

© வேதபிரகாஷ்

19-10-2018

16 loves 26.cellphone

[1] நக்கீரன், மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்!, செல்வகுமார், Published on 16/10/2018 (18:57) | Edited on 16/10/2018 (19:11)

[2] https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/wife-and-tears-love-and-pupil-and-professor?fbclid=IwAR1UMWNVgNW8ygZqVJw-Olv0gNx979LqM6mZ8qT4jitDTBfKVvldWlzOn1I

[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால் அதுசிம்புவுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி!, By Vishnupriya R Published: Wednesday, October 17, 2018, 6:30 [IST]

[4] https://tamil.oneindia.com/news/nagapattinam/lecturer-fall-love-with-student-near-vedaranyam/articlecontent-pf331673-332162.html

 

[5] தமிழ்.இணைதளம், 2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியருடன் காதல் வயப்பட் மாணவி!, அக்டோபர் 18, 2018.

[6]  https://www.60secondsnow.com/ta/tamil-nadu/college-lecturer-fall-love-with-student-1170936.html

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்!, By Sathish KFirst Published 9, Sep 2018, 6:11 PM IST

[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.

[9] https://tamil.asianetnews.com/crime/student-who-sent-a-video-to-the-teacher-pesglg

[10] அக்கா ஐ லவ் யூ என்று எப்படி ன்சொல்வான் என்று தெரியவில்லை.