மதுரைப் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை வழக்கு ஏன் கிடப்பில் கிடக்கிறது? மார்ச் முதல் மே வரை அமைதி காக்கும் மர்மம் என்ன?
யார் அந்த மதுரை பள்ளி ஆசிரியர்? என்ன நடந்தது?[1] (மார்ச் 2021): நக்கீரன் இதழில் மார்ச் மாதம் வந்த விவரங்கள், “சில குற்றங்கள், சட்டத்தின் பார்வையில் அது பெரிய குற்றமாகவே இருந்தாலும், சமூகச் சூழல்களால் வெளிப்படாமல் மறைக்கப்படுகிறது. அப்படி ஒரு குற்றச்செயலில் மதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் சிக்காமல், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு மட்டும் ஆளாகியிருக்கிறார். மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை நடத்துபவரின் மகனான விஜய், ஆரப்பாளையத்தில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்[2]. கரோனா லாக்டவுன் நேரத்தில் இவர், அந்தப் பள்ளியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவியைப் பள்ளிக்கு வரவழைத்து, காரில் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் மீது புகார் அளித்தது: நக்கீரன் தொடர்கிறது, “அந்த மாணவிக்கு ஆபாசப் படங்களை வாட்ஸ்–அப்பில் அனுப்பி வந்ததை, அவருடைய அக்கா தனது கணினியில் உள்ள செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றோரிடம் தெரிவிக்க, மாணவி சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை ஆதாரமாக இணைத்து, கடந்த 28-7-2020 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யரிடம் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினருக்கு ஆசிரியர் விஜய்யிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக பேசி முடிக்கப்பட்ட நிலையில், 29-7-2020 அன்று மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து போல நடத்தப்பட்ட அந்த விசாரணையின்போது, மாணவி தரப்பிடம் உள்ள ஆதாரங்கள் பறிக்கப்பட்டு, பெயரளவுக்கு ஆசிரியர் மீதான நடவடிக்கையாக, 30-7-2020 அன்று விஜய்யிடம், செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளிக்குப் பணியிடமாறுதல் உத்தரவு (ந.க.எண் ஆ4/015663/18) வழங்கினர்”.
புகாரை மறைக்க–மாற்ற முயன்ற நிலை: நக்கீரன் தொடர்கிறது, “ஆசிரியர் விஜய்யை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், கண்துடைப்பாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்… 4-8-2020 அன்று விஜய் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை (தர்ஸ்ரீ.சர்.ஆ4/009179/2020) தயாரித்தபோது, முதலில் ‘மாணவியை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்’ என்று உறுதிபடக் கூறிவிட்டு, பிறகு அதை அழித்துவிட்டு ‘பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்,’ எனத் திருத்தியுள்ளனர். மாணவி தரப்பிடம் வெற்றுத்தாள்களில் கையொப்பம் பெற்றும், கல்வி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேரம் நடத்தியும், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் வாங்கிக் கொடுத்தும், மீடியேட்டராக இருந்து விவகாரத்தைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தாராம், ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர். மூன்று வாட்ஸ்–ஆப் குழுக்களை ஆரம்பித்து, அதில் பள்ளி மாணவிகளை இணைத்து, ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், ஆபாசப் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பாலியல் வீடியோக்களை அனுப்பி வந்திருக்கிறார் விஜய். அவருடைய 10 வருட ஆசிரியர் பணியில், எத்தனை மாணவிகள் சீரழிக்கப்பட்டனரோ?”
விஜய் சஸ்பென்ட் செய்யப் பட்டது: நக்கீரன் தொடர்கிறது, “தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நம்மிடம் மறுத்துப் பேசினார் ஆசிரியர் விஜய், “மூன்று தடவை விசாரணை நடத்தியிருக்காங்க. அஃபிசியலா எல்லாம் முடிஞ்சிருச்சு. ஏதாவது ரிப்போர்ட் வேணும்னா.. சி.இ.ஓ. ஆஃபீஸில் கேட்டுக்கங்க. நான் அந்த மாதிரி எதுவும் பண்ணல. உள்ளூர் ஸ்கூல்ல கரோனா நிவாரணத்துக்கு நான் அதிக நிதி கலெக்ட் பண்ணுனதுனால, பொறாமைல இருக்கவங்க பண்ணுன கம்ப்ளைண்ட்” என்றார் படபடப்புடன். மதுரை, பொன்னகரத்தில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யரை சந்தித்தோம். “போன மார்ச்ல எக்ஸாம் முடிஞ்ச பிறகுதான் கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க. பேரண்ட் கம்ப்ளைண்ட் கைக்கு வந்ததும், விஜய்க்கு ஃபோன் பண்ணுனோம். அவர் அட்டெண்ட் பண்ணல. மறுநாளே அந்தப் புகாரை சி.இ.ஓ.க்கு அனுப்பிட்டேன். பெற்றோர் தரப்பில், நடந்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கொடுத்து, விஜய்யை டிரான்ஸ்பர் பண்ணனும்னு சொன்னாங்க. மொதல்ல டிரான்ஸ்பர் ஆகி.. இப்ப சஸ்பெண்ட்ல இருக்காரு. ஸ்கூலுக்கு உள்ளே தப்பு எதுவும் நடக்கல. எல்லாமே ஆன்லைன்ல நடந்திருக்கு” என்றார்”.
மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா:நக்கீரன் தொடர்கிறது, “மதுரை, செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். “எங்க ஸ்கூல்ல விஜய் சேர்ந்து ரெண்டு நாள்கூட இருக்காது. ஏதோ பிளான் பண்ணி சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துட்டாங்க. அந்த ஆர்டர்ல விபரம் எதுவும் குறிப்பிடல” என்றார். மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயாவை தொடர்புகொண்டோம். “எந்த விஷயத்தையும் மூடி மறைக்கல. ஒரு கமிட்டி போட்டு விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. கோவிட் பீரியட்ங்கிறதால உடனே ஆக்ஷன் எடுக்க முடியல. அதனால, மொதல்ல டிரான்ஸ்பர் கொடுத்திட்டு, அப்புறம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். இன்னும் முழுமையா விசாரணை நடந்து முடியல. அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததா சொல்லுறது பொய். பணம் வாங்கியிருந்தால் சஸ்பெண்ட் பண்ணியிருப்போமா?” என்று கேட்டார்”.
மார்ச் 2021ல் இந்தியன் எக்ஸ்பிரசும் விவரமாக செய்தி வெளியிட்டிருந்தது[3]: குற்றஞ்சாட்டப் பட்ட நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படவில்லை, அச்சட்டப் பிரிவுகளின் படி கைதும் செய்யப் படவில்லை. விசாரனைக் குழு கூட்டத்திற்கு அந்த பெண்ணோ, பெற்றோரோ ஆஜராகவில்லை என்றுதான், அரசு அதிகாரிகளின் தரப்பில் சொன்னதாக செய்தியில் உள்ளது. எஸ்.கே. பொன்னுத்தாய், விசாரணை மட்டும் போதாது, போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[4]. வழக்கறிஞர் ஷாஜி செல்லன் என்பவரும், இது போன்ற புகார் வரும் பொழுது, பள்ளி நேரிடையாக போலீஸிடம் புகார் கொடுக்க வேண்டும். விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். எது எப்படியாகிலும், இப்பொழுது, மறுபடியும் இப்பிரச்சினை எழுந்துள்ளது.
விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது (மே 2021): மார்ச் மாதத்தில் நக்கீரன் செய்தியை வெளியிட்டப் பிறகு, மற்ற ஊடகங்கள் வெளியிட்டனவா என்று தெரியவில்லை. ஆனால், மே 2021ல் திடீரென்று அதைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை, “பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்” என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள். மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்[5]. ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன் 2020 ஜூலையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தந்தை மாநகராட்சி, மாவட்டகல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. மேலகோபுரத்தெரு கோதண்டம் ‘போக்சோ’ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்[6].
சஸ்பென்ட் செய்யப் பட்ட விஜயபிரபாகரன்: நீதிமன்ற உத்தரவின்படி விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,க்கள்) சேர்க்கப்பட்டு நகர் தெற்கு அனைத்துமகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விஜயபிரபாகரனை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா ‘சஸ்பெண்ட்’ செய்தார். அவர் கூறுகையில் “புகார் அளித்தவுடன் பெண்கள் பள்ளியில் இருந்து ஆண்கள் பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில் கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,” என்றார். மே 25 2021லிருந்து, சிறியதாக, இச்செய்தி வெளியிடப் பட்டு வருகிறது.
© வேதபிரகாஷ்
30-05-2021
[1] நக்கீரன், ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் அத்துமீறல் – மதுரை பள்ளி பயங்கரம்!, அதிதேஜா, Published on 02/03/2021 (10:51) | Edited on 02/03/2021 (11:09)
[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/online-classes-incident-madurai-school-terror
[3] Indian Exppress, ‘Eight Months On, Minor Awaits Justice For Abuse, Published: 04th March 2021 03:49 AM | Last Updated: 04th March 2021 03:49 AM.
[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/mar/04/eight-months-on-sexually-abused-minor-girl-awaiting-justice-2271910.html
[5] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீது ‘போக்சோ‘ வழக்கு; 2 டி.இ.ஓ.,க்கள் மீதும் நடவடிக்கை, Added : மே 25, 2021 05:58.