தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [3]
முட்டை வியாபார தொடர்பு குழந்தை விற்கும் வியாபாரமாக மாறியது: முட்டை விற்பனையில் உண்டான தொடர்பு, நாளடைவில் இத்தகைய பெரிய வியாபாரமாக மாறியது[1]. குழந்தை இல்லை என்று வரும் தம்பதியர் இலக்காயினர். லட்சங்களை செலவழித்து குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஆயிரங்களில் குழந்தையையே வாங்கி விடலாம் என்ற குறுக்கு வழியைக் காட்டுகின்றனர். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன[2]. குழந்தை தத்தெடுப்பவர் நேராக குழந்தையை பெறலாம் என்றிருந்தாலும், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள், விதவைகள் முதலியோரும் தத்தெடுக்கலாம் என்பதால், இடைத் தரகர்கள் மூலம், குழந்தைகள் விற்கப்படுகின்றன[3]. அரசு அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளதால், காசு கிடைத்தால், அதையும் செய்ய தயாராக இருக்கின்றனர். அதனால் தான், 30 ஆண்டுகளாக, அமோகமாக, இவ்வியாபாரம் நடந்துள்ளது. இதற்கு இந்து சட்டம் உபயோகப் படுத்துவது நோக்கத் தக்கது. ஏனெனில், வாங்கியவர்களில் கிருத்துவர், முகமதியர் உள்ளனர். இதில் ஈடுபட்டுள்ளதிலும், முகமதிய பெண்கள் உள்ளனர்.
சமூகநல ஆர்வலர்கள் எடுத்துக் காட்டுவது (2010 முதல் 2015 வரை): முன்னர் இதே போன்ற குழந்தை விற்பனை விவகாரத்தில், கோமல் கன்டோரா என்ற சிறுவர் உரிமைகள் இயக்கத்தின் இயக்குனர், “இரண்டு முதல் நான்கு வயது வரையில் உள்ள குழந்தைகள் தாம் இவர்களின் குறியாக இருக்கின்றன. இதெல்லாம் குழந்தை கடத்தலா அல்லது இவ்வாறு குழந்தைகளைக் கடத்தி நிதி பெறுகிறார்களா என்று தெரியவில்லை. இத்தலைய மீறல்கள் இருக்கும் வரையில் அரசின் கண்காணிப்பு, சோதனைகள் முதலியவை இருக்க வேண்டும்”, என்று கருத்துத் தெரிவித்தார்[4]. அப்பொழுது, ஏற்கெனவே சிக்கிய ஒரு ஆள் மறுபடியும் அதே வேலையில் ஈடுபடுகிறான். இதே ரஸ்ஸல் ராஜ் ஜூலை.2015ல் மனைவி, மாமியார்களுடன் கைது செய்யப்படுகிறார், மாமனார் தப்பித்துக் கொண்டார் போலும். பிரபுதாஸ் விசயத்தில், ஏ. நாராயணன் கூறியுள்ளதாவது[5], “சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப் படும் இல்லங்களினின்று சிறுமிகளை காப்பாற்றிய பிறகு எல்லா விதிமுறைகளையும் போலீஸார் மீறுகின்றனர். குழந்தை கர்ப்பமாக இருந்தது இரண்டு மாதங்கள் வரையும் கண்டுகொள்ளாமல் விடுப்பது ஆச்சரியமாக உள்ளது. சிறுமிகள் மீட்டவுடன் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், போலீஸார் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைகின்றனர். இது சிறார் நீதி சட்டத்திற்கு [Juvenile Justice Act] புறம்பானது.” டி.ஜிபிக்கு கொடுத்துள்ள மனுவில் 9ல், 8 குழந்தைகள் அவ்வாறு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முதலில் குழந்தைநல கமிட்டியின் முன்பு உரிய விசாரணைக்குட்படுத்திய பிறகு, அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் போன்றவற்றை செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் Juvenile Justice Act, 2000 and Tamil Nadu Juvenile Justice Rules, 2001 சட்டங்களின் கீழ் செய்யவேண்டியவை[6]. இவையெல்லம் 2010-2015களில் நடந்தவை என்றால், 2019லும், அதேநிலை உள்ளதை கவனிக்கலாம்.
உசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.
யாரும், எந்த சித்தாந்தவாதியும் கவலைப் படாமல் இருப்பது, திகைப்படையச் செய்கிறது: ஈவேரா பிறந்த மண்ணில் குழந்தைகள் திருட்டு, வியாபாரம் எல்லாம் நடந்துள்ளதே எப்படி? எல்லாம் பெரியார் செயலா? என்று எந்த பகுத்தறிவுவாதியும் கண்டுகொள்ளவில்லை. ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி விசித்திரத்தின் முழு வடிவம் தான். இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா வேறொருவரா? என்றெல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஈரோட்டில், இந்த ரோட்டில், ஈவேரா மண்ணில், பெரியார் பூமியில் இப்படி நடக்கலாமா, அவரது கொம்பு என்னவாயிற்று, ஓடிவிட்டதா? பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், திருச்ச்செங்கோடு, ராசிபுரம், சேலம் எல்லாம் அருகில் தானே உள்ளது. ஈவேராவுக்கு, அண்ணாவுக்கு எல்லாம் குழந்தை இல்லை என்பதால், பெரியார் ஆசியுடன், அம்மணி இச்சேவையில் இறங்கினார் போலும்!
குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்ததாக வாக்குமூலத்தில் ஒப்புதலும் உள்ளது. வழக்கறிஞர், குழந்தை விற்பனைக்காக, அப்படியென்ன போலி ஆவணம் தயாரிக்க்க முடியும்? இப்படியெல்லாம் வியாபாரம் உள்ளதா? வேறு விவகாரங்கள், பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது தத்தெடுப்பு போர்வையில் அரசு அதிகாரிகள் பலநிலைகளில் ஒத்துழைத்து நடந்துள்ள குழந்தை விற்பனை வியாபாரம். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன.இனி என்னாகும் என்று பார்ப்போம். சில நாட்களில் செய்திகள் அடங்கி விடும், மக்கள் மறந்து விடுவர், மற்றவர்களும் தங்களது வேலையை, தொழிலை ஆரம்பித்து விடுவரோ?
© வேதபிரகாஷ்
05-05-2019
[1] Through the connection built through sale of the eggs, they were able to allegedly find childless couples for whom fertility treatments hadn’t worked and offered to sell them babies instead. Through contacts with health officials, they were able to know which babies had been born at which government hospital to what kind of families and thereby narrow in on vulnerable families that they would allegedly convince to give up their babies.
[2] Indian Express, Namakkal child adoption racket: Baby ‘products’, Published: 05th May 2019 04:49 AM | Last Updated: 05th May 2019 04:49
[3] Vishwaraj alleges that the gang, in this case, exploited loopholes in the Hindu Adoption and Maintenance Act. “Through this, the two parties (donating and adopting parents) may meet directly and adopt children. Not only couples but bachelors, spinsters, widows also can adopt children. Although there are many norms to be followed, no one follows them. Middlemen and brokers have used loopholes here for illegal adoption. Registration of the child has to be made mandatory for adoption under this Act,” he said.
[4] “Children between the ages of 2 and 4 are most vulnerable,” said Komal Ganotra, Delhi-based director for policy, research and advocacy for CRY (Child Rights and You).”We don’t know whether there is an adoption racket, or they are trafficked to raise money from donations,” he said. Activists say monitoring systems need to be strengthened even for government registered homes. “Inspections must be continuous as these children are under someone else’s custody and they are tutored to speak only certain things,” said Ganotra. “If they are abused, children will open up to people who continuously visit them. So it is important they have an external interface. We find lesser instances of abuse among children who stay in child care homes and go out to a public school.”
[5] Indian Express, Police Flout All Norms After Rescuing Children From Illegal Homes: Activist, By Express News Service, Published: 06th September 2015 04:08 AM; Last Updated: 06th September 2015 04:14 AM.
[6] http://www.newindianexpress.com/cities/chennai/Police-Flout-All-Norms-After-Rescuing-Children-From-Illegal-Homes-Activist/2015/09/06/article3013001.ece2