Archive for the ‘ஐந்து கணவர்’ Category

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

ஜூலை20, 2023

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

தமிழக நடிகைய பல கணவன்மார், பல தார மண, விவாகரத்து என்றெல்லாம் இருக்கும் பொழுது பெண்ணியம் எங்கிருந்து வருகிறது: கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வ்துமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்[1], கணவனுக்கு பாதபூஜை செய்து, பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை பிரணிதா[2]. இதெற்கெல்லாம் உதாரணம் சொல்ல தமிழகத்திலேயே பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, ஒன்றிற்கு மேலாக ஐந்து கணவர் வரை மணம் செய்து விவாகரத்து செய்த நவீன பெண்ணுத்துவ வீராங்கனைகளும் இருக்கிறார்கள். பிறக்கும் குழந்தைகள் அப்பா யார் என்றால் என்ன பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் தான் கவலைப் படவேண்டும். ஆனால், கண்ணகி பிற்ந்த மண், நாங்கள் தான் கண்ணகிக்கே சிலை வைத்தே என்றும் தப்பட்டம் அடிப்பார்கள். மனைவி-துணைவி என்று புது தாம்பத்தைய விளக்கத்தையும் உண்டாக்குவார்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள், பகுத்தறிவு, பெண்ணியம் என்றெல்லாமும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சினிமா-அரசியல் போர்வையில், எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கைகளும் சீரழிந்துள்ளன, தற்கொலைகளும் நடந்துள்ளன. பிறகு, இவர்கள் எப்படி விமர்சிக்க முடியும்?

17-07-2023 ஆடி அமாவாசை முன்னிட்டு கணவனுக்கு பாத பூஜை செய்தது: இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் நடிகை பிரணிதா அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார் என்று ஒரு ஊடகம் ஆரமொஇக்கிறது. அப்படியென்றால், சினிமாவில் செக்யூலரிஸம் இல்லையா, எப்பொழுது இவ்வாறு, மதம் பார்த்து விமர்சிக்கும் போக்கு வந்தது? இது செக்யூலரிஸமா, பெரியாரிஸமா, பகுத்தறிவா, எது? . தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ்[3]. இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்[4]. இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்[5]. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் 17-07-2023 தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்[6].

பிரணிதா நடிகை புகைப் படத்தை வெளியிட்டது: அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2022லும் இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர்[7]. அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்[8]. கடந்த ஆண்டு தனது கணவருக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்ட நிலையில், ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா[9]. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள நிலையில், அவருக்குள்ள உரிமையை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அதே நிலையில், அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். தவிர, இது இரண்டாம் ஆண்டாக செய்துள்ளார். எனவே, இதை ஏதோ புதியது மாதிரி விமர்சனம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சமூக வளைதளத்தில் ட்ரோல் செய்தது, திர்மறையாக விமர்சித்தது: அதாவது இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்[10]. பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ள நிலையில், சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்[11]. இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து, நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்[12]. நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர்[13]. நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்[14].

தமிழகத்தில் பெண்ணியத்தின் நிலை: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய முரண்பாட்டை பலவிசயங்களில் கவனிக்கலாம். பெரும்பாலும், நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்று பேசும், எழுதும், தம்பட்டம் அடிக்கும் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் அதிகமாகவே காணலாம். ஏனெனில் அவர்களது தலைவர்களே அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். இரண்டு தாரம், மூன்று தாரம் என்பது சகஜமான விசயம். பல கணவர் அதாவது விவாக ரத்து செய்து மறுபடியும் கணவர் கொள்ளும் முறையும் இயல்பாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதற்கும் அவர்கள் புது விளக்கம் அளிக்கக் கூடும். அந்நிலையில், தமிழ் பெண்களின் ஐந்து குணங்களை (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு) இங்கு தேடிப் பாத்தாலும் கிடைக்காது. அவற்றை சொன்னால், என்னது என்று கேட்கும் நிலையில் “நவீன கண்ணகிகள்” உள்ளார்கள். பிறகு, எந்த பெண்ணாவது, பதிவிரதை, பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் பேசினால் ஏளனம் தான் செய்வார்கள்.

உரிமை எல்லோருக்கும் தானே இருக்க வேண்டும்? சினிமா நடிகைகளில் எதிர்பார்ப்பது என்பது நடக்குமா என்று தெரியவில்லை. அந்நிலையில், ஒரு நடிகை தனது கணவனுக்கு பாத பூஜை செய்கிறாள் எனும்பொழுது, இவர்களுக்கு பிரச்சினையாகிறது. என்னது, “திராவிட மாடலுக்கு” ஒவ்வாததாக இருக்கிறதே, இதற்கு நல்ல விளம்பரமு கிடைக்கிறதே என்ற கொதிப்பும் ஏற்படுகிறது. ஏலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் செய்யு பொழுது, படம் போடும் பொழுது, கொதிப்பு கொஞ்சம் அதிகமாகிறது. இத்தகைய கேள்விகளை தங்களது “ரோல் மாடல்களாக,” தலைவர்களாக இருப்பவரைப் பார்த்து கேட்பார்களா அல்லது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் சென்று ட்ரால் செய்வார்களா? என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறீரே, உமது மனைவி கோவில்-கோவிலாக சுற்றுகிறாரே என்று கேட்க முடியுமா. கேட்டால் அது அவரது உரிமை, நான் அதில் தலையிட மாட்டேன் என்பாரோ? பிறகு, யாருடைய உரிமையில், யார் நுழைவது, கேள்வி கேட்பது?

© வேதபிரகாஷ்

20-07-2023


[1] தினமலர், கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா, ஜூலை 18, 2023. 12:47.IST.

[2] https://cinema.dinamalar.com/tamil-news/114841/cinema/Kollywood/Pranitha-performed-foot-pooja-for-her-husband.htm

[3] தமிழ்.இந்து,  கணவருக்கு பாத பூஜை: சர்ச்சையில் பிரணிதா, செய்திப்பிரிவு, Published : 19 Jul 2023 05:23 AM; Last Updated : 19 Jul 2023 05:23 AM.

[4] https://www.hindutamil.in/news/cinema/south-cinema/1057900-pranitha-subhash-touches-husband-feet-on-bheemana-amavasya.html

[5] தினத்தந்தி, கணவருக்கு பாத பூஜை செய்துசர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா, ஜூலை 19, 1:12 pm.

[6] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actress-pranita-who-got-involved-in-controversy-after-doing-foot-puja-for-her-husband-1011216

[7] தமிழ்.பிஹைன்ட்.டாக்கீஸ், போன வருஷம் மாதிரி Troll செய்தால்கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை விளாசல்., By Arun Kumar, ஜூலை 18, 2023.

[8] https://tamil.behindtalkies.com/pranitha-subhash-touches-husbands-feet-on-bheemana-amavasya/

[9] சினி.உலகம், கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை, Pranitha Subhash, By Parthiban.A, 18-07-2023.

[10] https://cineulagam.com/article/pranitha-pooja-to-husband-foot-1689607191

[11] அப்டேட்.நியூஸ்.360, இப்படியும் ஒரு நடிகையா…? கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதாகிண்டலுக்கு பளார் பதில்!, Author: Shree, 17 July 2023, 11:19 pm

[12]  https://www.updatenews360.com/cinema-tv/pranitha-performed-foot-puja-for-her-husband/

[13]  தமிழ்.பிளிம்.பீட்ஸ், கணவர் பாதங்களுக்கு பூஜை பண்ண பிரபல நடிகை.. நீங்க என்ன வேணா ட்ரோல் பண்ணுங்க என கேப்ஷன் வேற!, By Mari S| Updated: Monday, July 17, 2023, 18:20 [IST]

[14] https://tamil.filmibeat.com/news/actress-pranitha-done-patha-pooja-for-her-husband-on-bheemana-amavasya-110861.html

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மே14, 2023

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மேல்மலையனூரில் பரபரப்பு: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்: ஆண்களாவது, பெண்களாவது, ஏதாவது ஒரு வெறி, பித்து, பைத்தியம் என்று விடித்து விட்டால், பணம் சம்பாதிப்பது, ஜாலியாக வாழ்வது, எந்த கொள்கைஉம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எல்லாவிதமான குற்றங்களிலும் பெண்கள் சமமாக மட்டுமல்லாது, ஆண்களையும் மிஞ்சுயுள்ளார்கள், கொலை-கொள்ளைகளில் நம்பவே முடியாத நிலையில் உச்சத்தைத் தொடுள்ளார்கள். இனி ஆண்களுக்கே சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. எனவே, இந்நிலையில், மேல்மலையனூரில் 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்[1] என்ற செய்தி ஒன்றும் யாரையும் ஆச்சரியப் படுத்தி விடவில்லை. அவர் 6-வதாக ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[2] என்று தினத்தந்தி கூறினாலும், அதற்கே இது அலுத்துப் போன விசயம் தான். ஏனெனில், 70 ஆண்டுகளாக இது இத்தகைய சேய்திகளை வெளியிடுவதில் வல்லது.

டிசம்பர் 2022ல் திருமணம்: விழுப்புரம் மேல்மலையனூர், இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[3]:- முகநூல் மூலம் அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான்[4]. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்[5]. ஆக, முகநூல் இங்கும் விலையாடியிருப்பது தெரிகிறது. போன், இணைதளம் இன்றைக்கு பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. கோடிக் கணக்கான மக்களை ஏதோ ஒரு வழியில் கட்டுக்குள் வைத்திருக்கிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேச தொடங்கினர்[6].  அப்போது, மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார்[7].  காதலாக மலர்ந்தது கூடவே இவர்களது நட்பு மேலும் இணக்கமாக தொடர தொடங்கியது[8]. இவ்வாறாக நேரில் முகம்பாராமல் முகநூல் மூலமாக பேசிய இவர்களுக்குள் காதலும் மலர்ந்தது. இதையடுத்து காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மணிகண்டன் முடிவு செய்தார்[9]. அவர், மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவை தெரிவித்தார்[10]. இதற்கு காதலியும் பச்சைக்கொடி காட்டினார். அப்போது, திருமணத்தின் போது தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை, தான் மட்டும் தனது வீட்டை விட்டு வருவதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்[11]. கோவிலில் வைத்து திருமணம் இதையடுத்து, கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் 18-ந்தேதி, இவர்களது திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது[12]. ஆனால், பத்திரிக்கை அடிக்காமல் இருந்திருப்பார்களா, போட்டோ, வீடியோ எடுக்காமலா இருந்திருப்பார்கள்?

பிள்ளை வீட்டார் மட்டும் கலந்து கொண்ட கல்யாணம்: இதில் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மகாலட்சுமி தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. அப்பொழுது எப்படி, ஏன், எதற்காக விசாரிக்காமல் கல்யாணத்திர்கு ஒப்புக் கொண்டார்கள் என்பதும் வியக்காக இருக்கிறது. திருமணத்தின் போது, மணிகண்டன் வீட்டில் இருந்து மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டுள்ளனர். இதுவே “ரிவர்சில்” இருக்கிறது எனலாம். சொத்து பிரச்சினை மனதுக்கு பிடித்த காதலியை கரம்பற்றிவிட்டோம் என்கிற மனமகிழ்வில் மணிகண்டன், தனது ஆசை காதல் மனைவியுடன் இல்லற வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தார். அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளதாக எனக்கு போன் வந்தது. எனவே நான் ஊருக்கு சென்று அந்த பிரச்சினையை தீர்வு கண்டுவிட்டு, வந்துவிடுகிறேன் என்று மணிகண்டனிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய அவரும், ஊருக்கு சென்றுவிட்டு விரைவில் திரும்பி வந்துவிடு என்று வழியும் அனுப்பி வைத்தார்.

வீட்டில் இருந்த ஒரு லட்சம் பணம் மாயம்: அதன்படி திருமணமான 26-வது நாள், அதாவது, கடந்த ஆண்டு 2022 டிசம்பர் மாதம் 14-ந்தேதி மகாலட்சுமி, மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறி சென்றார். சொந்த ஊருக்கு சென்ற காதல் மனைவி எப்போது திரும்பி வருவார் என்கிற ஏக்கங்களுடன் மணிகண்டனும் இங்கு காத்திருந்தார். மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதன் பின்னர் தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது. ரூ.1 லட்சத்தை திருடிக்கொண்டு, திருமணத்தின் போது அணிவித்த 8 பவுன் நகையுடன் மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாரா? என்று மணிகண்டனுக்கு சந்தேகம் வந்தது. காதல் மனைவியின் மிரட்டல் இதையடுத்து, அவருக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசிய மகாலட்சுமி, சரியான பதிலை அளிக்கவில்லை. நகை, பணம் குறித்து கேட்ட போது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று போனில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

மிரட்டிய மனைவியின் மீது கணவன் புகார் கொடுத்தது: காதலித்து திருமணம் செய்த மனைவியின் இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய்விட்டார். போலீசில் புகார் பின்னர், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மகாலட்சுமியின் புகைப்படம், முகநூல் பக்க பதிவுகள், அவரது செல்போன் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர். அதில், அவர் சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று, மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

6ம் கணவருடன் வாழ்ந்து வருவது: விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- 5-வதாக சிக்கிய மணிகண்டன் மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர் தான் மணிகண்டன். ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். அபகரித்து செல்லும் நகை, பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, மனதுக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார். கையில் உள்ள பணம் செலவானவுடன், மீண்டு்ம் தனது கல்யாண லீலைகளை அரகேற்றி வந்துள்ளார். 3 குழந்தைகளின் தாய் மணிகண்டனை தனது வலையில் சிக்க வைத்து, நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.

மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும். வயதை மறைத்து, தன்னை விட 2 வயது சிறியவரான மணிகண்டனை அவர் திருமணம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர், யாருடைய பராமரிப்பில் உள்ளார்கள் என்பது குறித்து மகாலட்சுமி போலீசில் தெளிவாக தெரிவிக்கவில்லை. கல்யாண ராணி கைது தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று வழக்கம் போல ஊடகம் ஊளையிட்டுள்ளது. ஆனால், எந்ஹ தமிழச்சியும், தமிழச்சியின் கற்பு, மானம், முதலியவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. டிவி-பட்டிமன்ற விவதங்களும் நடத்தப் படுவதில்லை.

© வேதபிரகாஷ்

14-05-2023


[1] தினத்தந்தி, மேல்மலையனூரில் பரபரப்பு:5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார், தினத்தந்தி மே 14, 12:15 am (Updated: மே 14, 12:16 am).

[2] https://www.dailythanthi.com/News/State/kalyana-rani-who-cheated-and-married-5-men-963809

[3] மாலைமலர், 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி , By மாலை மலர், 14 மே 2023 7:29 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/kalyana-rani-cheated-and-married-6-men-608748

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கைது.. போலீஸாரே அதிர்ந்த பகீர் பின்னணி!, By Vishnupriya R Updated: Sunday, May 14, 2023, 10:06 [IST].

[6] https://tamil.oneindia.com/news/villupuram/coimbatore-mahalakshmi-arrested-by-cheating-6-men-511735.html

[7] தினகரன், சமூக வலைதளம் மூலம் அனாதை என கூறி 5 திருமணம் செய்து பணம், நகை கொள்ளையடித்த கல்யாண ராணி: சேலம் அருகே 6வது கணவனுடன் வசித்தபோது சிக்கினார், May 14, 2023, 12:16 am

[8] https://www.dinakaran.com/married_5_people_robbed_money_jewels_husband_salem/

[9] லோகல்.செய்தி, 5 ஆண்களுடன் திருமணம்சிக்கிய கல்யாண ராணி, By Mohan Ramachandran, May 14, 2023, 09:05 IST.

[10] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/marriage-with-5-men-trapped-wedding-queen-10167086

[11] தமிழ்.ஸ்பார்க், மீண்டும் ஒரு திருமண மோசடி..!! 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி..!!, Sat, 13 May 2023 18:43:11 IST Author by Priya

[12] https://www.tamilspark.com/tamilnadu/the-police-have-arrested-a-young-woman-who-was-involved

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

குழந்தையின்மை: தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு நினைப்பது, எழுதுவது தவறு, காலம் தாழ்ந்து குழந்தை பிறப்பதும் நிதர்சனமாகத் தான் உள்ளது. இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். தத்து எடுப்பு என்ற சாதாரணமான முறையும் இருந்தது. முன்பெல்லாம் குடும்பத்தில், உறவினர்களில் அப்பழக்கம் இருந்தது. பிறகு மற்றவர்களிடமிருந்து தத்து எடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. உண்மை பெற்றோர் வந்து சொந்தம் கொண்டாடுவது பணம் கேட்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அனாதை இல்லங்கள்போன்றவை,, இதனை ஒரு வியாபாரமாக்கியது. அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. அதனால், படிப்படியாக தத்து எடுக்கும் முறை குறைந்த்து. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.

விஞ்ஞான முறையில் கருத்தரித்தல், குழந்தை பெற்றல்: குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை. ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.

வாடகைத் தாய்: இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.

இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய்: இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம். வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.

இந்தியாவில் வாடகைத் தாய் தொழில் நடைபெறுகிறது: பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவியன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது மலிவானது: இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம். குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

வாடகைத் தாய் உருவாகும் புதிய பிரச்சினைகள்: வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது. வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

வாடகைத் தாய் சட்டச் சிக்கல்கள்: தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.

© வேதபிரகாஷ்

03-04-2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

தாய்மை நீர்த்து, ஆபாசமான நிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.

கவர்ச்சி அரசியல், வாடகைத் தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (22-04-2022) சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.

பாலியல் குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குழந்தை பெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].

தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]  தினமணி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அமைச்சா் கீதா ஜீவன், By DIN  |   Published On : 22nd April 2022 02:22 AM  |   Last Updated : 22nd April 2022 02:22 AM

[2]https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3831404.html

[3] நியூஸ்.18.தமிழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு, By WebDesk WebDesk Fri, 22 Apr 2022.

[4] https://newstm.in/amp/tamilnadu/Child-by-surrogate-mother-270-days-leave-for-female-employe/cid7217147.htm

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? (1)

ஜனவரி15, 2021

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? (1)

யூடியூப் மோகம் கொக்கோகத்தை நெருங்கிய விதம்: இணையதளங்களில் புற்றீசல்கள் போல இப்போது யூடியூப் சேனல்கள் பெருகிவிட்டன. இந்த சேனல்களில் பொதுமக்களுக்கு பயன்படும் நல்ல விசயங்களும் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகிறது[1]. அதிகமான பேர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை நடத்துவோருக்கு அதிக அளவில் பணம் கொட்டும்[2]. இதனால்தான் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள்.  “மக்களிடம் கருத்து கேட்கிறோம்,” என்ற பெயரில் ஆபாச அத்துமீறலில் ஈடுபடும் சில யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது `சென்னை டாக்ஸ்’ யூ-டியூப் சேனல் விவகாரம்[3]. தங்கள் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்ததாக ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது[4].

ஆபாச பேச்சு வீடியோ: அரசியல் போக்குகள், சமூகப் பிரச்னைகள், பெண் உரிமைகள் என பொதுவெளியில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், எளிதில் அதிக வியூஸ் பெறவேண்டும் என்ற வெறியில் சில யூடியூப் சேனல்கள் வக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காமத்தையும், அந்தரங்க விஷயங்களையும் மையப்படுத்தி தவறான உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டு, அதற்கு மக்கள் சொல்லும் கருத்துகளில் எந்த இடத்தில் ஆபாசமான சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்கின்றனவோ அந்த இடத்தை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிடுகின்றன. அதன் அடுத்தகட்டமாக பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கும் கொடுமையும் நடக்கிறது என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இத்தகைய பேச்சுகளை ஆதரிக்கும் விதத்தில் தான், இன்றும் ஊடகங்களில் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பெண் பேசிய விதம் தவறுதான், ஆனால், ஆண்கள் எப்படி தனக்கு மூன்று-நான்கு மனைவியர் உள்ளனர், பலருடன் உடலுறவு வைத்துக் கொண்டேன் என்றேல்லாம் பேசுகிறானோ, அதேபோல, பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. இப்படியும், ஒரு ஆங்கில செனலில் பேட்டி ஒளிபரப்பப் பட்டது.

“2020 எப்படி போனது?” போர்வையில் ஆபாச கேள்விபதில் நிகழ்ச்சி: சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் “2020 எப்படி போனது?” என்ற டாபிக்கில் கருத்து கேட்டு தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தனர் `சென்னை டாக்ஸ்’ குழுவினர்[5]. அந்த வீடியோவில் ஒரு பெண் மிகவும் ஆபாசமாகப் பேசியிருந்ததால் பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை ஏகத்துக்கும் தாக்கி கமென்ட் செய்தனர்[6]. கேட்ட கேள்விகள், கொடுத்த பதில்கள், வார்த்தை விபச்சாரம் போலிருந்தது. அம்மண், இம்மண் என்றெல்லாம் அரற்றினாலும், பெண்மை போகும் பாதையை மாற்ற முடியவில்லை, வார்த்தை விபச்சாரமும் பெருகுகிறது! கவர்ச்சி அரசியலில் மூழ்கி இந்துத்துவம் மயங்கும் போது, வார்த்தையில் நீலப்படம் எடுக்கும் தருணமும் வந்து சேர்கிறது பெண்மை மறக்கிறது! வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள், உலா வரும் வேளையில் எல்லாமே பறக்கின்றன. நிலைமை மோசமாகி விட்டது என்றறிந்த, அப்பெண் உஷாராகி, புகார் கொடுத்தாள்.

யார் அந்த பெண்? வீடியூவில் பேசிய பெண்: புகார் அளித்த ஜோதி கிரிதர்சிங் என்கிற அந்த பெண், 21 மணி நேரம் 2900 நபர்களுக்கு மேல் மெஹந்தி போட்டு கின்னஸ் ரெக்கார்டு செய்தவர்[7]. சிறந்த தொழில் முனைவோராக பெயர் எடுத்தவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் பெஸ்ட் டிரெய்னர் என கட்டுரை வெளியாகியிருக்கிறது[8]. வடைபோச்சு போன்ற ஷோக்களுக்கு நிகழ்ச்சித் தொகுப்பு செய்திருக்கிறார். நடிப்புத் துறையிலும் இருந்து வந்துள்ளார். அப்பெண் கூறியதன்படி, “அந்த பேட்டி வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்பாக பேசிய, 1500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ.  அந்த சேனல்காரர்கள் 2020 உங்களை என்னவெல்லாம் செஞ்சது? 2021 எப்படி போகப் போகிறது என்பதை பற்றி கேட்பதாக முதலில் கூறினார்கள். சென்னை டாக்ஸ் சேனலில் மட்டும் தான் போடுவோம் என்று கூறினார்கள். இதற்கு முன்பாக பல பெண்களை இப்படி பணம் கொடுத்து பேச வைத்ததாகவும் கூறி அவர்களின் பட்டியலை கொடுத்தார்கள். அந்த பெண்களும் இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டதாக தங்கள் மனக்குமுறலை என்னிடம் பகிர்ந்தார்கள். இதை வெளிக்கொண்டு வரவே, நான் இதை செய்தேன். அந்த பணமும் அவர்களாக கொடுத்ததுதான். ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசலாம் என்கிற பேச்சு சுதந்திரத்தை தான் வெளிப்படுத்தினேன். இந்த சேனலை பார்த்துவிட்டு, இதில் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என கூறியும் அவர்கள் பகிர்ந்துவிட்டார்கள்.” என தெரிவித்துள்ளார். 

தானே புகார் கொடுத்தது ஏன்?: இந்த புகாரையும் அப்பெண்ணே கொடுத்துள்ளார். அதற்கு காரணமாக அவரே கூறியதாவது:- “முதலில் அந்த சேனல் தரப்பில் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்திருப்பதாக தான் உறுதி அளித்தார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்த வீடியோ வைரலான 15 நிமிடங்களில் கமெண்ட் செக்ஷனில் மோசமான கமெண்டுகள் குவிந்தன. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களிடம் கேட்டபோது சேனலின் தலைமை அதை கேட்டுக் கொள்ளவில்லை என கூறினார்கள். இதனால் என் பெயரை மீட்டெடுக்க அந்த சேனலைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அப்போது என் பெயருடன் சேர்த்து இந்த வீடியோவை வைரல் செய்தார்கள். ஆனால் அது தான் இன்னும் மன உளைச்சலாக்கியது. உண்மையில் என்னடா இப்படிலாம் பேச வைக்குறீங்க என்று தான் அந்த வீடியோவில் நான் பேசியிருக்கிறேன். இவை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே இந்த விவகாரம் பற்றி நான் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்தேன். இந்த புகாரை நானாகவே கொடுத்தேன். காவல்துறை இந்த வீடியோவை நீக்குவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி எதிர்மறையாக பேசி நான் பிரபலமாகிவிட்டேன். இதை வைத்து இதுபோன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என் பங்களிப்பை தர நினைக்கிறேன்.” என கூறியுள்ளார். இறுதியாக, “நான் யாருக்கும் இதை சொல்லி புரியவைக்க முடியாது. என் பதில்களில் யாரும் திருப்தி அடையவும் வாய்ப்பில்லை. நான் யாருக்கும் தெரியாத எந்த விஷயமும் பேசவில்லை. அத்துடன் இந்த பேட்டியில் நான் பேசியவற்றை இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்.” என அந்த பேட்டியில் ஜோதி தெரிவித்துள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகளும், சமுக சீர்பழிப்பாளர்களும் ஒன்றே: “நான் 5 நிறுவனங்களில் பொறுப்புகளில் இருக்கிறேன். யாருக்கேனும் வேலைவாய்ப்புகள் தேவைப்பட்டால் அணுகுங்கள்,”  என்ற நிலையில் அந்த பெண்மணி இருக்கும் போது, ரூ.1,500/- அத்தகைய கொக்கோக பதில்களைச் சொல்லி, பெண்ணுரிமை பேசி, பிறகு ஜகா வாகியிருப்பது, தமாஷாக இருக்கிறது. ஊழல் அரசியல்வாத்களுக்கும், இத்தகைய, கொக்கோக பெண்ணியப் போராளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காசுக்கு இவர்களிடம் பஞ்சமில்லை என்றால், அதையும் மீறி ஆட்டிப் படைக்கும் காரணிதான், இவர்களை சீரழிக்கும் வேலைகளில் ஈடுபட செய்கின்றன. சமூக பிரக்னை இல்லாமல், யாரும், சமூக பிரச்சினைகள் அணுக முடியாது. ஆனால், போலித் தனமாக, ஆசியல்வாதிகள் செய்வார்கள். இதுப்போலத்தான் இக்கூட்டமும்.

© வேதபிரகாஷ்

15-01-2021


[1] தினத்தந்தி, சென்னை கடற்கரையில் பெண்களிடம் ஆபாச பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பு 3 பேர் அதிரடி கைது, பதிவு: ஜனவரி 13,  2021 06:39 AM

[2] https://www.dailythanthi.com/News/Districts/2021/01/13063945/3-arrested-for-taking-pornographic-interview-with.vpf

[3] விகடன், ஆபாச கேள்விகள்எல்லை மீறும் யூடியூப் சேனல்கள்யார் பொறுப்பு?, எம்.புண்ணியமூர்த்தி,  Published: Today at 8 AM; Updated:Today at 8 AM

[4] https://www.vikatan.com/social-affairs/controversy/controversy-over-chennai-talks-youtube-channels-viral-video-and-police-action

[5] புதியதலைமுறை, பெண்ணிடம் ஆபாச கேள்வி கேட்டு பேட்டி‘ – யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது, Web Team, Published :12, Jan 2021 10:24 AM.

[6] http://www.puthiyathalaimurai.com/newsview/90846/3-YouTuber-arrested-in-chennai

[7] தமிழ்.பிஹைன்ட்.த,வுட்ஸ், அப்படி பேசுன நானே ஏன் புகார் கொடுத்தேன்னா”.. “என்ன மாரி நிறைய பொண்ணுங்க குமுறிட்டு இருக்காங்க.. பெரிய லிஸ்டே இருக்கு!”.. ‘YOUTUBE’ வைரல் பெண்கண்ணீர்பேட்டி! வீடியோ!, By Behindwoods News Bureau | Jan 13, 2021 04:47 PM.

[8] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-talks-viral-girl-opens-up-reason-for-complaint-interview.html

ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்!

செப்ரெம்பர்24, 2016

ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்!

yasmin-banu-married-7-men-20-09-2016பெங்களூரு எப்பொழுதோ அதிநவீன நகரமாகி, மேனாட்டவர்களுக்கு ஏற்றமுறையில் மாறிவிட்டது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது அங்குக் கிடைக்கிறது. மது, மாது என்று எது கேட்டாலும் ஓகே என்று அரசு விரித்து விட்டது. அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். கேட்டால், நமக்குத்தானே, இத்தனை ஐடி கம்பெனிகள் நடத்துகிறார்கள், பதிலுக்கு, அவர்களது தேவைகளையும் பூத்தி செய்ய வேண்டிய நிலையாகி விட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். முன்பு, பப்பில் பள்ளி-கல்லூரி மாணவிகள் சென்று குடித்து-ஆட்டம் போட்டு கலாட்டா செய்தபோது, ஶ்ரீராம்சேனா எதிர்த்தார்கள், ஆனால், அவர்கள் தாம், “இந்திய தலிபான்கள்” என்ற பெயரைப் பெற்றார்கள். இப்பொழுது, ஒரு பெண் இப்படி பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறாள். இதனை என்னவென்று சொல்வார்கள்? இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா? இல்லை, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், “செக்யூலரிஸ” பாணியில் ஒதுங்கி விடுவார்களா, அமைதியாக இத்துடன், மூடி மறைத்து விடுவார்களா?

imran-yasmin-20-09-2016யாஸ்மின் பானுவுடன், இம்ரானின் அனுபவம்: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவர் கே.ஜி.ஹள்ளி போலீசில் 19-09-2016 அன்று ஒரு புகார் கொடுத்தார்[1]. அதில், கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானு (வயது 30) என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த 2 நாட்கள் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதன்பிறகு யாஸ்மின் பானு திடீரென்று மாயமாகிவிட்டார். அதே சமயத்தில் எங்கள் வீட்டில் இருந்து நகை-பணத்தை யாஸ்மின் பானு திருடி சென்றுவிட்டார். என்னை திருமணம் செய்வதுபோல நடித்து எங்கள் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவர் திருடி சென்றுவிட்டார்[2]. தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாகவும், ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளதாகவும், இதுவரை ஏழு பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார்[3]. பணத்தைப் பற்றிக் கவலையில்லை, ஆனால், இப்படி பலபேரை மணந்திருப்பது தான் ஒருமாதிரியாக இருக்கிறது என்கிறார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஷோயப் மற்றும் அஃப்சல் எனும் இரண்டு பேர் தாமாக முன்வந்து தங்களும் யாஸ்மின் பானுவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று புகார் அளித்துள்ளனர்[4].

yasmin-yasmin-20-09-2016ரியல் எஸ்டேட் அதிபர் அப்சலின் அனுபவம்: இந்த நிலையில் இம்ரானை பிரிந்து சென்ற யாஸ்மின் பல தொழிலதிபர்களை தனது வலையில் விழ வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது[5]. இது தவிர எனக்கு அடுத்ததாக அப்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து 3வதாக சையத் சோயப் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசிப், 6வதாக சோயப் என அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவ்வாறு கல்யாண ராணியாக பலபேரை ஏமாற்றி வரும் எனது மனைவியை கைது செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்[6]. அபசலின் கதை இவ்வாறுள்ளது[7]. அப்சல் ரியல் எஸ்டேட் தொழுல் செய்து வருகிறார், ஒரு முறை யாஸ்மின் தன்னிடம் வேலை கேட்டு வந்தபோது, ரிசப்சனிஸ்ட் வேலை போட்டுக் கொடுத்தார். நாளடைவில், தானே, அவளிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார். பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள், அதிலும் ஏமாற்றுகாரி போன்ற விசயங்கள் தெரிய வந்தன[8].

afsal-yasmin-20-09-20162007லிருந்து 2016 வரை ஒன்பது ஆண்டுகளில் ஏழு திருமணம்[9]: வருடத்திற்கு ஒரு ஆண் என்ற வீதத்தில் திட்டமிட்டு, ஒவ்வொரு ஆணாக திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளது தெரிகிறது[10].

  1. இம்ரான்.
  2. அப்சல் பாஷா
  3. சையத் சோயப்
  4. ஈராஜ்.
  5. ஆசிப்.
  6. சோயப்.
  7. ……… [அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது]

அவ்விதத்தில் – உடல்-மனம் ரீதியில் இருப்பதற்கு அப்பெண் தயாராக இருந்தது தெரிகிறது. இல்லையென்றால், அப்படி ஈடு கொடுத்து வாழ்ந்திருக்க மாட்டாள். மேலும், “தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாக” இம்ரான் கூறியுள்ளதால், அந்த அளவுக்கு பலசாலியாக, தைரியசாலியாக, ஆண்களுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் உள்ளாள் என்றும் தெரிகிறது. இருப்பினும், இங்கும், எப்படி, ஓவொரு ஆண் திருமணம் செய்யும் போது, முந்தைய விவரங்களை அறியாமல், அறிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. காஜியிடம் நீக்காஹ் நாமா பதிவு, தலாக் என்ற விவாகரத்து முதலியவை இல்லாமல். அவள் எப்படி திருமணம் செய்து கொண்டாள் என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. முஸ்லிம் ஆண்கள் அந்த அளவுக்கு ஏமாறும் ஆட்களா என்றும் திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது “லவ்-ஜிஹாத்” என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. பிறகு, இதனை எந்த வகையில் சேர்ப்பது? இது உள்ளுக்குள் நடக்கும் “லவ்-ஜிஹாத்” என்று கூறலாமா?

 bengaluru-woman-marriages

போலீஸ் விசாரணையில் பல ஆண்களை திருமணாம் செய்து கொண்டது தெரிய வந்தது: அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானுவுக்கும், சாராய் பாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மின் பானுவும், இம்ரானும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் பிரிந்து விட்டனர். அப்போது யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார்.  இருப்பினும், அவ்வப்போது, போன் செய்து, இருவரும் இருக்கும் ஆபாசப்படங்கள் இருப்பதாகவும், கேட்டப் படத்தைக் கொடுக்கவில்லை என்றால், வெளியிடுவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தாள். இதனால், பொறுமை இழந்த இம்ரான் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

© வேதபிரகாஷ்

24-09-2016

yasmin-banu-married-seven-men-20-09-2016

[1] தினத்தந்தி, பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகைபணத்தை திருடி சென்றார் கல்யாண ராணிக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/09/21123333/In-Bangalore7-personsMarriedJewelrymoneyStealing-marriage.vpf

[3] சென்னை.ஆன்லைன், 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெங்களூர் பெண் : போலீஸில் சிக்கினார், September 20, 2016, Chennai

[4] http://chennaionline.com/article/8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

[5] லைவ்டே, 7ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கால்யாண ராணி..! 3 கணவர்கள் போலீசில் புகார்..!!, Sep 21, 2016 at 12:26 PM : By Liveday.

[6] http://liveday.in/general/7-marriage-woman-arrest/

[7] Deccan Herald, Woman held for marrying, cheating seven me,  Sep 20, 2016, DHNS

[8] http://www.deccanherald.com/content/571387/woman-held-marrying-cheating-seven.html

[9] தினகரன், எங்க பொண்டாட்டிக்கு 7 புருஷன்க சார்…’ போலீசில் 1, 2, 7 கணவர்கள் புகார், Date: 2016-09-21@ 01:05:26.

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=247053

 

முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

மார்ச்4, 2014

முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

ராகுல் பெற்ற முத்தம்

ராகுல் பெற்ற முத்தம்

காங்கிரசின்   “தெருவோர  காட்சிகள்விபரீதமானது: அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை 26-02-2014 அன்று அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அந்த காட்சி படத்துடன் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது[1]. வழக்கம் போல ஊடகங்கள் பரபரப்பிற்காக முரண்பாடான செய்திகளை வெளியிட்டன.

Rahul_Gandhi-Assam

Rahul_Gandhi-Assam

முத்தமிட்டப்  பெண்  இந்தபெண்  இல்லை: இந்த நிலையில் பெகஜன் பஞ்சாயத்து காங்கிரஸ் வார்டு உறுப்பினரான  போன்டி சூடியா [Bonti Chutia, 35] நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் சோ மேஸ்வரால் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் ஆவார். போன்டி சுடியா படுகொலை நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தவர் என்றும், அந்த கோபத்தில் தான் அவர் கணவர் சோமேஸ்வர், உயிரோடு தன் மனைவியை எரித்து கொன்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இவரது கணவர் சோமேஸ்வர் சூடியா [Someswar Chutia] க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு [Jorhat Medical College Hospital ] அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்[2]. கணவன்-மனைவி இருவரிடையே நெடுங்காலமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சண்டை ஏற்பட்டதால் அவ்வாறு நிகழ்ந்தது என்று அமன்ஜித் கௌர் என்ற போலீஸ் சூப்பிரென்டென்ட் கூறியுள்ளார்[3].

ராகுல் பெற்ற முத்தம்.2

ராகுல் பெற்ற முத்தம்.2

முரண்பட்ட  தகவல்களைக்  கொடுத்த  போலீசார்: ராகுல்காந்தியுடன் பேசி விட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருக்கும், அவரது கணவர் சோமேஸ்வரருக்கும் தகராறு ஏற்பட்டதில், போன்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் இந்த பரபரப்பு தகவலை அசாம் மாநில போலீசார் மறுத்தனர். சோமேஸ்வரும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே உண்மையான தகவல்கள் தெரிய வரும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட போன்டி சுடியா ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. ராகுலுடன் உரையாட அரங்கில் அமர்ந்திருந்த 600 பெண்களில் அவரும் ஒருவராவார். இதற்கிடையே காங்கிரசின் புகழை கெடுக்கவே ராகுலுக்கு முத்தமிட்டவர் கொலை செய்யப்பட்டதாக சிலர் சதி திட்டம் தீட்டி செய்தி பரப்பி விட்டதாக அசாம் மாநில முதல்–மந்திரி தருண் கோகேய் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “எரித்து கொலை செய்யப்பட்ட போன்டிக்கும், ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராகுலுடன் அரங்கில் இருந்த 600 பெண்களில் கூட ஒருவராக போன்டி இருக்கவில்லை. ராகுல் கூட்ட அரங்குக்கு வெளியில் அவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் போன்டி இருந்தார். மற்றபடி அவர் கொலைக்கும் ராகுல் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை”, என்று அசாம் முதல்– மந்திரி தருண் கோகேய் கூறினார்[4].

கமல் முத்தம்

கமல் முத்தம்

காங்கிரசுக்கு  எதிர்விளைவை  ஏற்படுத்திய  முத்தங்கள்: இளைஞராக காட்ட வேண்டும் என்ற திட்டம் போட்ட காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றபொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தது, அவரது முகத்திலேயே தெரிந்தது. பிறகு தான் பாதுகாப்பு போலீசார் பெண்களை அவர் அருகில் வர தடுக்க ஆரம்பித்தனர்[5]. ஆனால்……………அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பெண், இந்த பெண் இல்லை என்றதும், ஆங்கில ஊடகங்கள் தவறான செய்தியைக் கொடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டன[6]. இருப்பினும், காங்கிரசுக்கு இந்நிகழ்ச்சி ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. இனி உலகநாயகனின் விசயத்தைப் பார்ப்போம்.

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமல்ஹஸனின் முத்தங்களு ம், கட்டிப்  பிடிப்புகளும்: கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகின! கடந்த ஏப்ரல் 15,16,17ம் தேதிகளில் 2013 ஒளிப்பரப்பட்ட ராஜ்-டிவி நிகழ்ச்சியில் கமலஹாசன், அவருடன் சேர்ந்து வாழும் பத்தினி கவுதமி, மணமான நடிகை திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்.  “இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்’ என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, “என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன்’ என்கிறார்[7]. அது கிடைத்தால் செய்வீர்களா என்றதும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்பெண்மணி கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

கணவன்,   மனைவி  அல்ல; பார்ட்னர்; உடலுறவு   போன்ற   விஷயங்கள்  உண்டு: இந்த நிகழ்ச்சியில், “நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு?’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன? இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த கருமாந்திரத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று செய்திகள் வந்தன[9], அவ்வளவுதான், வழக்கம் போல அது எந்தநிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை[10].

Kamal-gautami-neengalum-vellalam-oru-kodi

Kamal-gautami-neengalum-vellalam-oru-kodi

பொது  அறிவு  நிகழ்ச்சியில்  அரங்கேறிய  அசிங்கங்கள்: பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா? நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[11]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் போலிசுக்குக் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்[12].

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

குடும்ப  வாழ்க்கையில்  தோல்வி  கண்டராகுல் கமல்  சமூகத்திற்கு  உதாரணங்கள்  அல்லர்: ராகுல் கந்தி இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ௐஇரார்கள். ஆனால், ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது என்கிறார்கள். யாரோ காதலி என்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. உண்மை எப்படியிருந்தாலும், நடக்கவேண்டிய வயதில் ஒரு ஆணுக்கு நடக்கவில்லை எனும்போது, அதில் பிரச்சினையுள்ளது என்பது தெரிகிறது. ஆக, தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி என்ற நிலையில் தான் ராகுல் உள்ளநிலை. கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[13]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[14] அதனால், இரண்டு பெண்கள் விசயங்களிலும் முத்தம் கொடுத்ததால், கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

© வேதபிரகாஷ்

04-03-2014


[3] Superintendent of Police Amanjeet Kaur said a case of unnatural death had been registered. She said the victim, Bonti Chutia, died of burn injuries, while her husband, Someswar Chutia, had also sustained 35 percent burn injuries. Kaur clarified that the victim was not the who was shown on television kissing Congress vice president Rahul Gandhi. “We have talked to people and came to know that although she (the victim) came to the venue Wednesday to interact with the Congress leader, she stayed outside the programme for some reasons,” Kaur said. “We also came to know from the neighbours that both the husband and wife had a strained relationship for a long time and that could be one of the reasons for the incident,” she said.

http://m.indiatoday.in//story/rahul-kiss-assam-woman-dead-burnt-to-death/1/346259.html

[6] *An earlier version of the story had reported that the victim was one of those who had kissed Rahul Gandhi at a Congress event. The mix-up was clarified by others who attended the event who said the victim was at the event but was not among those who kissed Rahul. We regret the error.

http://m.indiatoday.in//story/rahul-kiss-assam-woman-dead-burnt-to-death/1/346259.html

[8] தினமலர், கலாசாரத்தைசீரழிக்கின்றனர் : நடிகர்கமல், கவுதமிமீதுபுகார், 25-04-2013, http://www.dinamalar.com/news_detail.asp?id=698629

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

நவம்பர்23, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

Radha, Faizul fight bigamy, porn etc

வழக்கம் போல தமிழ் ஊடகங்களின் ரியாக்ஸன்: இவ்வாரம் முழுவதும் தருண் தேஜ்பாலின் “லிப்ட் செக்ஸ்”, “எலிவேடர் ரேப்”, என்றெல்லாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் அத்தகைய விருவிருப்பு வேண்டும் என்ற ரீதியில் செய்திகள் வந்துள்ளன. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஐந்து கல்யாணம் செய்து கொண்ட ஆண்கள், கணவனைக் கொன்ற மனைவி, கள்ளக் காதல், கணவன் – மனை சண்டை என்று புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பஓதா குறைக்கு சினிமாக்காரர்களின் புகார்கள் வேறு. பட்டிமன்றம் நடத்துகிற அளவுக்கு கமிஷனர் அலுவலகத்தில் கள்ளக் காதல் புகார்கள் குவிகின்றன. சினிமா தொடர்பானவையாக இருந்தால் நட்சத்திர அந்தஸ்துதான். சந்திரனுக்கு அனுப்புகிற ராக்கெட்டை படம் பிடிக்க குவிவது போல் குவிந்துவிடுகின்றன மீடியாக்கள். விஷயம் இதுதான். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (30). இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன், மானஸ்தன், அடாவடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லாத நிலையில் 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்[1]. இப்படி தமிழ் ஊடகங்கள் படு குஷியாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

Radha-Parvin, Faizul fight bigamy, porn etc- Nakkeeran

பர்வீன் ராதாவானது ஷ்யாமுக்காகவா, பைசுலுக்காகவா: இது குறித்து செய்தியாளர்களிடம் ராதா கூறியது[2]: “ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். தாயாருடன் வசிக்கிறேன். இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக

நடித்துள்ளேன். தெலுங்கு படத்தி லும் நடித்துள்ளேன். கடந்த 2008-ல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பைசூல் என்பவர் எனக்கு அறிமுகமானார். ஆகஸ்ட் 16ம் தேதி எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர் சினிமாவுக்கு நடிக்க வந்தால் பெயரை மாற்ற வேண்டும் என்று ஏன் பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. இதில் விசித்திரம் என்னவென்றால், இன்றைய நிலையில் முஸ்லிம்கள் இந்து பெயர்களில் மறைந்து கொள்வது தான்!

திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். தான் ஒரு வைரவியாபாரி என்றும், விரைவில் ஒரு புதுப்படம் தயாரிக்க உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதில் என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் அடிக்கடி என்னைச் சந்தித்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதை நம்பி நானும் அவருடன் பழகி வந்தேன்.

Radha-Parvin, Faizul fight bigamy, porn etc.

2008ம்ஆண்டுமுதல் 2012ம்ஆண்டுவரைஎன்னுடன்உறவுகொண்டார்: “அதன் படி, ஆசை வார்த்தை கூறி 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை என்னுடன் உறவு கொண்டார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்தோம். நான் கர்ப்பம் ஆனேன். அதை கலைக்க சொன்னார். வைர வியாபாரத் தில் தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அதில் இருந்து மீண்ட உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதை நம்பி கர்ப்பம் கலைக்கப்பட்டது[3]. இந்நிலையில் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனை ஈடுகட்ட பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். இன்றைக்கு ஒப்புக்கொண்ட உடலுறவு, ஒப்புக்கொள்ளாத உடலுறவு என்றெல்லாம் சட்டப்படிப் பேசப் படுகின்றது. இந்நிலையில், இவர் ஒப்புக்கொண்டு உடலுறவு கொண்டுள்ளார் என்று அறிவித்திருப்பது தாம்பத்தயத்தையேக் கேவலப்படுத்துவதாகும்

அதிலிருந்து மீண்ட பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பைசூல் கூறினார். இதனால், என்னிடம் இருந்த ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன்[4]. அதன் பிறகும் அவர் என்னைத் திருமணம் செய்யத் தயங்கியதால் சந்தேகமடைந்து அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன்.

Radha-Parvin, Faizul fight bigamy, porn etc- Nakkeeran2

ஏற்கனவே  திருமணமாகி  விட்ட   பைசூல்: “அப்போது தான் பைசூலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விஷயம் எனக்குத் தெரிந்தது. மேலும் அவர் சட்ட விரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே பைசூல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று நடிகை ராதா தெரிவித்தார். அவருக்கு திருமணம் ஆனது எனக்கு முதலில் தெரியாது. அவரை உண்மையாக நேசித்தேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவிபோல் இருந்தபோது, அதை தனது செல்போனில் படம் பிடித்தார். ஏன் அந்தரங்கத்தை செல்போனில் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் உன் நினைவாக அதை பார்ப்பதற்காகத் தான் என்று கூறினார்.

தற்போது, போலீசுக்கு சென்றால் அந்த அந்தரங்க காட்சிகளை இணைய தளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். பைசூலை நம்பி திரைப்பட தொழிலை விட்டு விட்டேன். பணத்தையும் இழந்து விட்டேன்”, இவ்வாறு அவர் கூறினார்[5].  எந்த ஆணும் இப்படி வக்கிரமாக படம் எடுப்பானா என்று தெரியவில்லை, அப்படி எடுத்ததைப் பற்றிக் கேட்டவளுக்கு விளக்ஜ்கம் அளித்த விதம் அதைவிட கேவலமாக இருக்கிறது. மிருகங்களைவிட கேவலமான இவர்களின் கதை, சமூகத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது.

ஐந்து  பேரைத்  திருமணம்  செய்தேனாநான்  ஒன்றும்  விபச்சாரி  அல்ல! – நடிகை  ராதா[6]:  இவரின் குற்றச்சாட்டுகளை தொழில் அதிபர் பைசூல் மறுத்து, ராதா பலரை திருமணம் செய்தவர் என்றும், அவருக்கு 5 முறை திருமணமாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள ராதா, ஆறு வருடங்களுக்கு முன்னால் காத்தவராயன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, சவுந்தரபாண்டி என்பவர் பைசூலை சிங்கப்பூரில் பெரிய வைர வியாபாரி, பைனான்சியர் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்.

பைசூல் எனது தீவிர ரசிகர் என்றும் கூறினார். அப்போது எனக்கு பண கஷ்டம் இருந்ததால், ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். இதனால் பைசூல் மேல் மரியாதை ஏற்பட்டது. அதன்பிறகு அடிக்கடி சந்திதார். ஒருநாள் என் கையை பிடித்து காதலிப்பதாக சொன்னார். காரில் என் வீட்டு முன்னால் அடிக்கடி வந்து நின்றார். பெரிய பணக்காரன் என்று நினைத்தேன். இப்படி பைக்கில் வருவது, காரில் வருவது, பணக்காரன் போல நடிப்பது, போன்ற கதைகளை வைத்துக் கொண்டுதான், இக்கால இளைஞர்களின் மனங்களை சினிமாக்காரர்கள் கெடுத்து வருகிறார்கள். அதில் நடிகையே சிக்கிக் கொண்டது, அவர்களின் தராதரத்தை மெய்ப்பிப்பது போல உள்ளது.

என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை காட்டினார். நானும் நம்பினேன். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி என்னோடு வாழத் தொடங்கினார். ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினோம். என்னை மணந்து கொள்வார் என்று முழுமையாக நம்பினேன். வைர வியாபாரத்துக்கு தேவைப்படுவதாக ரொக்கம், நகை என்று ரூ.50 லட்சத்துக்கு மேல் என்னிடம் வாங்கினார் அதன்பிறகு வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

நிறைய  நடிகைகள்  மற்றும்  பெண்களுடன்  அவருக்கு  செக்ஸ்  தொடர்பு  இருப்பது  தெரிய  வந்தது: விசாரித்தபோது நிறைய நடிகைகள் மற்றும் பெண்களுடன் அவருக்கு செக்ஸ் தொடர்பு இருப்பது தெரியவந்தது இதனால் அதிர்ச்சியானேன்.  நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். காமக் கொடூரனாக நடந்து கொள்வார்.

அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்[7].  பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். பல பெண்கள், நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு இருந்தது, எனும்போது, சினிமாவின் தரமும் விளங்குகிறது. படுத்தால் சான்ஸ் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள் போலும்.

ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள்.மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்.

நடிகையை  திருமணம்  செய்து  கொண்டு  வாழ  முடியாது: நடிகையை திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று இப்போது சொல்கிறார். அப்படியென்றால் –

  1. ஆறு வருடங்கள் என்னொடு குடித்தனம் நடத்தியது எதற்காக?
  2. என் கையால் சமைத்து சாப்பிட்டது எதற்காக?
  3. வீட்டிலேயே கதியாக கிடந்தது எதற்காக?
நம்பிய என்னை மோசம் செய்து விட்டார். பைசூல் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்ட தகவல்களும் எனக்கு தெரிய வந்தது. இவரது கூட்டாளி ஒருவன் மலேசியாவில் கைதாகி இருக்கிறான். நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். இப்படி கேள்விகள் கேட்பதால் என்ன லாபம்? இவர்களின் சீரழிவு கதைகள் தமிழகத்திற்கு தேவையானதா? இவற்றை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியம் என்ன? சமூகம் சீரழிவில் இவர்கள் பங்களிக்கின்றனரா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

காமக் கொடூரனாக நடந்து கொள்வார். செக்ஸ் வைத்துக் கொண்டதையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளார்[8]. அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்.

நடிகை  ராதாவுக்கு  எதிரான  ஆதாரங்களை  வெளியிடுவேன்:   பைசூல்  பேட்டி[9]: நடிகை ராதா புகாருக்கு தொழில் அதிபர் பைசூல் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– ராதா என் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எனக்கு நிறைய தொல்லை கொடுத்தார். அரசியல்வாதிகளை வைத்தும் மிரட்டினார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் என்ற முறையில் என்னுடன் படம் எடுத்துக் கொண்டார். ராதா ஏற்கனவே திருமணம் ஆனவர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை வெளியிடுவேன்.  போலீஸ் கமிஷனரை சந்தித்து ராதா மீது புகார் அளிக்க உள்ளேன். எனக்கு நிறைய எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி உள்ளார். ராதாவின் பாஸ்போர்ட், வருமான வரித்துறை பான்கார்டு நகல்கள் என்னிடம் உள்ளன. அவற்றை போலீசில் ஒப்படைப்பேன். ராதாவை ஜெயிலுக்கு அனுப்புவேன்.  இவ்வாறு பைசூல் கூறினார்[10].

மதம், தொழில், ஊர், பெயர்  எல்லாம்  ஆரம்பத்தில்  அவர்  சொன்னது  பொய்: பர்வீன் பைசுலைப் பற்றி இப்படி குறிப்பிட்டதில் அவர்களது மதப்பிரச்சினையும் இருக்கிறது என்று தெரிகிறது. “பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள். மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்”. மேலும் “பலதார / ஐந்து திருமணங்கள்” என்ற பரஸ்பரக் குற்றச்சாட்டும் உள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும், ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைகளை வைத்திருக்கலாம். பிடிக்காவிட்டால், ஒத்துப்போகாவிட்டால், தலாக் செய்து விட்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ளலாம். அதே போல, பெண்ணும் தலாக் செய்து கொள்லலாம். மேலும், “மூத்தா” என்ற திருமணமுறையும் இஸ்லாத்தில் உள்ளது. அதன்படி, ஒரு ஆண், இன்னொரு பெண்ணை தான் விரும்பும் வரையில் சிறிது காலத்திற்கு சேர்ந்து இருக்கலாம், பிறகு விலகிக் கொள்ளலாம். ஷரீயத் சட்டப்படி, இத்தகைய முறையும் அனுமதிக்கப் படுகிறது. எனவே, பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா என்ற கேள்வியும் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

23-11-2013


[2] தினமணி, திருமணம் செய்து கொள்வதாக நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி, First Published : 23 November 2013 05:54 AM IST

[6] டமிள் ஒன் இந்தியா, ஐந்து பேரைத் திருமணம் செய்தேனா… நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! – நடிகை ராதா, Posted by: Shankar, Updated: Saturday, November 23, 2013, 14:15 [IST]

[9] மாலைமலர், நடிகைராதாவுக்குஎதிரானஆதாரங்களைவெளியிடுவேன்: பைசூல்பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 23, 1:15 PM IST

[11] Nikā al-Mutʿah (Arabic: نكاح المتعة‎, “pleasure marriage”) is a fixed-term or short-term marriage in Shia Islam, where the duration and compensation are both agreed upon in advance. It is a private and verbal marriage contract between a man and an unmarried woman and there must be declaration and acceptance as in the case of nikah. The length of the contract and the amount of consideration must be specified. There is no minimum or maximum duration for the contract. The Oxford Dictionary of Islam states that, “the minimum duration of the contract should be at least three days”. The wife must be unmarried, either Muslim or one of the ahl-e-kitab, she should be chaste and should not be addicted to fornication or a virgin without father, and due inquiries should be made into these regards. At the end of the contract period (i.e. dissolution of Mut’ah), the wife must undergo iddah.

[12] Both Shias and Sunnis agree that Mut’ah was legal in the beginning. Ibn Kathir writes: “There’s no doubt that in the outset of Islam, Mut’ah was allowed under the Shari’ah”.

Esposito, John L. (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 221. Retrieved April 4, 2013. Tafsir al-Qur’an al-Azim, Volume 1 p. 74.

[13] Mut’ah is an Arabic word meaning literary “joy, pleasure, compliance, fulfillment or enjoyment.’ Its meaning has to be taken in context of how it is used. So for example in an oath the word mutah means compliance or fulfillment; in terms of marriage it means happiness or joy while in terms of Hajj it means relaxing. As it has a number of meanings the Quran has nanstead the word ISTIMTAH is used which for Shias means mutah. Mutah in pre Islamic Arabia was used to mean pleasure marriage. Hence, the Shias says that when in the Quran the verse 4:24 says: “Forbidden to you are married women except your slave girls….” they say that as the same verse uses the word ISTIMTAH, therefore, this means that you cannot have temporary marriage with a married woman except if she makes her your slave girl. In Al Mizan by Ayatullah Tabatabaei the claim is made that often the Companions of the Prophet would withhold their slave girls from their husbands for two months to ensure they were not pregnant and have sex through mutah with them. Then after that they would withhold the girls again for two more months before returning them to their husbands. The Ayatuallah quotes this to prove his point that the Companions used the word Istimtah to mean mutah which was used in the context the pre Islamic Arabs did.