Archive for the ‘நாணம்’ Category

அக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா?

திசெம்பர்10, 2011

அக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா?

 

கணவனை இழந்த மனைவியின் கள்ள உறவு: கணவனை இழந்த பெண்கள் ஒன்று கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இலை நாகரிகத்தின் பாதையைப் பின்பற்றுவதானால், மறுபடியும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில் இருந்த பெண்ணின் முடிவுதான் இது. ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை ஒருவர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் திருவண்ணாமலை அருகே நடந்துள்ளதாம். திரிவண்ணாமலை கார்த்திகை தீபம், கிரிவலம் என்று அமர்க்ல்களப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் இப்படியொரு காமதீபம் எரியூட்டல்!

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது, எதற்கு காமம்? திருவண்ணாமலை அருகே நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. 45 வயதான இவரது கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார்.  அஞ்சலைக்கு ஒரு மகன் விஜயகுமார் (25), ஒரு மகள் ரேவதி (22) உள்ளனர்[1]. ரேவதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை.அஞ்சலைக்கும், காசி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தானே பிரச்சினை! தனது மகளின் 3 பவுன் நகையை காசி எடுத்து விற்று விட்டதை அறிந்தார் அஞ்சலை. சரசமாட வரும்போது, உருவிவிட்டார் போலும்!! இதனால் காசி மீது கடும் கோபம் கொண்டார். இது தொடர்பாக அஞ்சலத்திற்கும், காசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது[2].

கள்ள உறவு என்று இருக்கும் போது, மகன் சபரி மலைக்குச் சென்றால் என்ன, எந்த மலைக்குச் சென்றல் என்ன? மகன் இந்த நிலையில் அஞ்சலையின் மகன் விஜயக்குமார் சபரிமலைக்கு போயுள்ளார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த காசி, அஞ்சலையை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் சபரிமலைக்குப் போயிருக்கும் நேரத்தில் இது கூடாது என்று அஞ்சலை மறுத்துள்ளார்.  தனது மகன் சபரிமலைக்கு சென்று வந்தபிறகு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது[3].  கள்ள உறவுக்கென்ன நியாயம், தர்மம், சாத்திரம்? இதெல்லாம் பார்க்காத நிலையில் தானே, உறவு இருந்துள்ளது?

கள்ள உறவு கொண்ட ஆணின் சீற்றம் எரித்து விட்டது: காமத்தீ கொண்ட காமுகனுக்கு என்ன சாத்திரம்? இதனால் கோபமடைந்த காசி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அஞ்சலை மீது ஊற்றி தீவைத்து விட்டார். தீக்காயம் பட்டு துடித்த அஞ்சலையை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தன்னை காசிதான் தீவைத்துக் கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார் அஞ்சலை. இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார் காசியைக் கைது செய்தனர்[4]. இந்த நிலையில் அஞ்சலை இறந்து விட்டதால் அவரது வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக மாற்றி காசி மீதான வழக்கையும் கொலை வழக்காக போலீசார் பதிவுசெய்தனர்.

நவீன மனுக்கள், மனுவாதிகள், இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? நாளிதழ்களில், இப்படி திருமணத்தைக் கடந்த உடலுறவு, திரைப்படங்களில், தி-சீரியல்களில் நியாயப்படுத்தப்படுகிறது. கதை, கட்டுரை, கவிதை, இணைதளம் என்றால் கேட்கவே வேண்டாம். ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு சுதந்திரம். நாய்களையும் விஞ்சி தெருக்களில் கூட உடலுறவு கொள்ளலாம். அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள், எழுதப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளுக்கு சாகித்ய அகடமி, பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகள் கூட கொடுக்கலாம். ஆனால், கணவன்-மனைவி எப்படி ஒழுங்காக இருக்க  வேண்டும் என்ரு சொல்வாரார்களா? நவீன மனுக்கள் இதற்கு என்ன சாத்திரம் உருவாக்கப் போகிறார்கள்?

வேதபிரகாஷ்

09-12-2011


[1] நக்கீரன், உல்லாசத்திற்குமறுப்பு: உயிருடன்தீவைக்கப்பட்டபெண்பரிதாபமாகஉயிரிழப்பு, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66740

[4] தினமணி, திருவண்ணாமலை: இணங்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்றவர் கைது, First Published : 09 Dec 2011 02:49:34 PM IST; Last Updated : 09 Dec 2011 03:07:42 PM IST, http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88:+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81&artid=519545&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest


செக்ஸ் வலையில் வீழ்ந்த வின்சென்ட்!

ஜூலை17, 2010
செக்ஸ் வலையில் வீழ்ந்த வின்சென்ட்!
முன்பு பதிவு செய்யாமல் விடுபட்டது
கும்பகோணம், பிப்.13, 2010-
பெங்களூர் எம்.வி.நகர் 8-வது மெயின்ரோடு, 8-வது தெருவை சேர்ந்தவர் விசார் மகன் வின்சென்ட் (வயது 33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக வேலை பார்த்தார்.
அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் கண் டாக்டர் சாந்தி (44). இவர் அடிக்கடி வின்சென்டை தனது அறைக்கு அழைத்து பேசுவாராம். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் 2 பேரையும் வேலையில் இருந்து நீக்கியது.
இந்த சூழ்நிலையில் வின்சென்ட் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், டாக்டர் சாந்தி தன்னை மோசடியாக செக்ஸ் வலையில் சிக்க வைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தையும் மற்றும் 26 பவுன் தங்க நகையும் பறித்து கொண்டார் என்றும், அத்துடன் தன்னை அடியாட்களை வைத்து சித்ரவதை செய்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் சாந்தியை நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி வின்சென்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தபோது டாக்டர் சாந்தி இரட்டை அர்த்தங்கள் கொண்ட பேச்சால் என்னை மயக்கினார். நானும் அவரது வலையில் விழுந்து அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு நாங்கள் 2 பேரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்போம். பின்னர் பல்வேறு காரணங்களை கூறி நகை, பணத்தையும் பறித்துக்கொண்டார். எங்களது உறவை அறிந்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் எங்களை வெளியேற்றியதால் வேலூருக்கு சென்று அங்கு என்னை ஒரு வீட்டில் வைத்து என்னை இஷ்டப்படி சாந்தி நடத்தினார். வேலூரில் படிக்கும் ஒரு மாணவரோடு தொடர்பு எற்பட்டதால் என்னை ஒதுக்கிவிட முடிவு செய்து என்னை அடித்து துன்புறுத்தினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலீசார் நேற்று டாக்டர் சாந்தியிடம் விசாரித்த போது அவரை பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் பிரபல டாக்டர். அவரது மகள் தான் சாந்தி. இவர் தஞ்சாவூரில் மருத்துவ கல்லூரியில் படித்தபோது மலேசியாவை சேர்ந்தவரும், அதே கல்லூரியில் படித்தவருமான குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளான். டாக்டர் சாந்தி திருச்சி கே.கே.நகரில் கண் மருத்துவமனை நடத்தி வந்தார். இந்நிலையில் டாக்டர் குணசேகரனுக்கும், சாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக குணசேகரன் மலேசியாவிற்கு சென்று விட்டார்.
பின்னர் திருச்சியை சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திரபோசுடன் சாந்திக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதல் 2001 முதல் 2005 வரை நீடித்தது. பின்னர் அவரையும் கழற்றிவிட்டு, தன்னுடன் மருத்துவ கல்லூரியில் படித்த கும்பகோணத்தை சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்து கணவன்- மனைவியாக வாழ்ந்தார்.
அப்போது கும்பகோணம் ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு எடுத்து டாக்டர் சாந்தி தங்கினார். சில நாட்களில் பாலமுருகனுக்கும், சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இந்த பிரச்சினைக்கு பிறகு பெங்களூரை சேர்ந்த ஆனி என்ற டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில் வின்சென்ட்டை 5-வது காதலராக வலையில் சிக்கவைத்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன.
கும்பகோணத்திற்கு நேற்று வந்த டாக்டர் சாந்தியின் 2-வது கணவர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், என்னுடன் டாக்டர் சாந்தி, சுமார் 5 ஆண்டுகள் பழகி என்னிடம் பணத்தை ஏமாற்றியதோடு என்னையும் போலீசில் சிக்க வைத்துவிட்டார். இவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினையை உண்டாக்குவது தான் டாக்டர் சாந்தியின் வேலை. இவரால் வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே கும்பகோணத்திற்கு வந்துள்ளேன். அவரின் செக்ஸ் டார்ச்சர் வெளி உலகிற்கு தெரிந்தால் தான் அப்பாவிகளுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் சாந்தியின் லீலைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணமான பெண்கள், தயங்கிய போலீஸார், தப்பிவிட்ட விபச்சாரிகள்!

மே14, 2010

நிர்வாணமான பெண்கள், தயங்கிய போலீஸார், தப்பிவிட்ட விபச்சாரிகள்!

உடம்பு விற்று விபச்சாரத் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு செய்தி வருகிறது.

அதுவும் அவ்வாறான பலான தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் மொட்டுவிட்டு, விரியத் துடித்துக் கொண்டிருக்கும் வயதுள்ள “டீ-ஏஜ்” பெண்களாம்!

காப்பாற்றி, அவர்களை மீட்கலாம், என்று போலீஸார் சென்றபோது, அலமாரிகள், கப்போர்டுகள் என்ற இடங்களில் எல்லாம் ஒளிந்த் கொண்டு வெளிவராமல் சதாய்த்தனராம்.

வலுக்கட்டாயமாக, வெளியே இழுத்தபோது, அப்பெண்கள் தங்களுடைய உடைகளை எல்லாம் அவித்துப் போட்டுவிட்டனராம்.

அதுமட்டுமல்லாது, நிர்வாணமாக நின்று கொண்டு, “எங்கே, இப்பொழுது, என்னை பிடி பார்ப்போம்”, என்று கிண்டல் வேறு செய்தனராம்.

என்ன செய்வது என்று மலைத்து, தயங்கி நின்றபோது, அவர்கள் தப்பித்து ஓடியே விட்டனராம்!

இந்திய பெண்களின் வீரம் அலாதியாகத்தான் உள்ளது.

குஷ்பு, சுதா, புவனேஸ்வரி……………………முதலியோர் இவர்களின் பிச்சை வாங்கவேண்டும்.

ரஞ்சிதாவுக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம்! – கிளம்பி விட்டனர் வீராங்கனைகள்!

மே12, 2010
ரஞ்சிதாவுக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம்! – பெண் வழக்கறிஞர்
புதன்கிழமை, மே 12, 2010, 12:23[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/12/woman-activist-protest-ranjitha.html
கம்யூனிஸவாதிகளைப் பொறுத்த வரைக்கும் நடக்கமுடியாதவற்றையெல்லாம், நடப்பதுபோல பிரமிப்பை ஏற்படுத்துவார்கள், அறிக்கை விடுவார்கள்!

உதாரணத்திற்கு, கம்யூனிசத்திலேயே சமத்துவம் கிடையாது. ஏசியில் ஜாலியாக தூங்கும் காம்ரேடுகள், பிளாட்ஃபாரத்தில் தூங்கும் காம்ரேடுகள் என்றுதான் உள்ளார்கள்!

இதே நிலை மற்ற எல்லாவிஷயங்களிலும் உள்ளன. இருப்பினும், ஏதோ எல்லோரும் சமம் என்பது பொல வாய்சவடால் விடூக்கொண்டிருப்பார்கள்!

சுதா ராமலிங்கம் வீராவேசம்:  சுதா என்ற கம்யூனிஸ சித்தாந்திக்கு இப்படி கோபம் வருகிறது, “நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும்“, என்ன இதெல்லாம், இப்படியொரு அக்கரை? அது மட்டுமா, “இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் “, என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார். இவரின் பெயர் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் சாவிலும் அடிபட்டது. இவர் இப்பொழுது திடீரென்று, ரஞ்சிதாவிற்காக கிலம்பி விட்டது ஆச்சரியமாக உள்ளது.

Sudha Ramalingam

Sudha Ramalingam

சுதா போலீஸாரை மிரட்டினாரா? சுதா ராமலிங்கம் மகளிர் அமைப்புகளில் தீவிரமாக உள்ளவர். நடிகை ரஞ்சிதா இவரது பாதுகாப்பில் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசார் சுதா ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, “நடிகை ரஞ்சிதா பற்றி போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னிடம் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. ஆனால் ரஞ்சிதா மீது எனக்கு அனுதாபம் உள்ளது. அவரைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கிறார். அவரை மேலும் அசிங்கப்படுத்தக் கூடாது என்பதே என் விருப்பம்.

ரஞ்சிதாவிற்காக பரிதாபப் படும் சுதா: ரஞ்சிதா தப்பி ஓடப் பார்க்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன. அவர் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை முறைப்படி கையாள வேண்டும். அநாவசியமான கருத்துக்களைப் பரப்பக்கூடாது. ரஞ்சிதா குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் நிரூபிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை. ரஞ்சிதா பற்றி அவதூறுகள் வெளி வருகின்றன. நடிகை என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது சரியல்ல. ரஞ்சிதா விஷயத்தில் பெண் உரிமை அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். பெண்களை போதைப் பொருளாக பயன்படுத்துவதை எதிர்த்து இப் போராட்டம் நடைபெறும் என்றார்.

ரஞ்சிதா குறித்து நடிகர்களிடம் போலீஸ் விசாரணை!

புதன்கிழமை, மே 12, 2010, 10:07[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/12/ranjitha-nithyananda-sex-scandal-enquiry-advocate.html

இழுத்தடிக்கும் ரஞ்சிதா, தேடியலையும் போலீஸ்: விசாரணைக்கு வராமல் இழுத்தடிக்கும் ரஞ்சிதா இருப்பிடம் குறித்து தமிழ், தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம், உடனே விசாரணை க்கு வரவேண்டும். இல்லையேல் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்றாவது நோட்டீஸையும் ரஞ்சிதாவுக்கு அனுப்பியுள்ளது கர்நாடக போலீஸ். இந்த பலமுனை நெருக்கடி காரணமாக அடுத்த இரு தினங்களில் பெங்களூருக்கு ரஞ்சிதா வருவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். செக்ஸ் மோசடி. ஆன்மீக மோசடி, நில மோசடி, பொதுமக்கள் பணத்தை கையாண்டதில் முறைகேடு, செக்ஸ் ஒப்பந்தம் போட்டு பெண்களுடன் உறவு என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, 8 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின் ராம் நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நித்யானந்தா.இவருடன் செக்ஸ் காட்சிகளுடன் தோன்றிய நடிகை ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து, ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர். ஆனால் ரஞ்சிதாவோ இதோ அதோ என்று இழுத்தடித்து வருகிறார்.பெங்களூர் சிஐடி அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ஏற்கனவே 2 தடவை நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, விசாரணைக்கு வருமாறு ரஞ்சிதாவுக்கு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் மூன்றாவது நோட்டீஸை நேற்று அனுப்பினர்.இதையடுத்து, இன்னும் இரு நாட்களில் நடிகை ரஞ்சிதா பெங்களூர்  வந்து சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆவார் என்று ரஞ்சிதாவின் வழக்கறிஞர் தெரிவித்ததாக கர்நாடக போலீஸார் கூறினர்.

நடிகர்கள், இயக்குநர்களிடம் விசாரணை: இதற்கிடையே, ரஞ்சிதாவின் வாக்குறுதியை இனி நம்ப முடியாது என முடிவு செய்த கர்நாக போலீஸ் அவர் மறைந்திருக்கும் இடத்தை தீவிரமாகத் தேடத் துவங்கிவிட்டனர். ரஞ்சிதா கிடைத்துவிட்டால், நித்யானந்தாவுக்கு எதிராக பல முக்கிய தகவல்களைப் பெற முடியும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.எனவே ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதா எங்கே பதுங்கி இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டு வருகின்றனர்.இதையெல்லாம் அறிந்த ரஞ்சிதா, இன்னும் ஒரிரு நாளில் ரஞ்சிதா போலீசில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

நித்யானந்தாவின் சிறைக்காவல் நீடிப்பு: இந் நிலையில் நித்யானந்தாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவிற்கு எதிராக கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்த சிஐடி போலீசார், நித்யானந்தாவின் சிறைக் காவலை நீட்டிக்க வலியுறுத்தினர்.இந்த வேண்டுகோளை ஏற்ற ராம்நகர் நீதிமன்றம், வரும் 26ம் தேதி வரை நித்யானந்தாவை சிறையில் வைக்க உத்தரவிட்டது.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை!

ஏப்ரல்28, 2010

குஷ்புவும், கற்பும், கே.ஜி.பாலகிருஷ்ணனும், மற்ற நீதிபதிகளும்!

vedaprakash எழுதியது

தமிழச்சிகளும், தமிழச்சன்களும் அமைதியாக இருப்பது நன்றாகவே தெரிகிறது.

கற்பியல், களவியல் பேசி நியாயப் படுத்தக் கூட்டங்களும் கிளம்பிவிடும்.

பகுத்தறிவுக் காவலர்கள், கண்ணகியைப் பிடித்துக் கொண்டு, கற்ப்பை எடைபோட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள்.

நாளைக்கு இவர்களுக்கெல்லாம் கலைமாமணி, திருவள்ளுவர், பெரியார், ……………முதலிய விருதுகள் எல்லாம் காத்திருக்கின்றன.

தேவை என்றால், பத்மஸ்ரீ…………………….இத்யாதிகளும் பரிந்துரைக்கப் படும்!

எதிர்பார்த்தபடியே குஷ்பு மீதான வழக்குகள் தள்ளுபடி!

Maxim-KushbooMaxim-Kushboo

திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார். படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை: கற்ப்புக்கரசி கண்ணகி பிறந்த நாட்டில், இப்படியொரு விவாதம் வந்து, அதற்கு தமிழனே தீர்ப்பும் அளித்திருப்பது, தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்! பெண்களுக்கான திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆகையால் இனி, 21 வயது வரை வயதுக்கு வந்த பெண்கள்

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. பெற்றோர்கள் கூட என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை!

படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை:

தமிழகத்தில் படித்த இளைஞர்கள் என்ன அந்த அளவிற்கு கேடு கெட்டவர்களா என்று தெரியவில்லை.

இல்லை, தமிழ் பெண்களும் அத்தகைய சோரம் போனவர்களாக இருந்து, தாலிக் கட்டிக் கொள்ளத் தயார் ஆகிறார்களா என்றும் தெரியவில்லை!

அதாவது, ஒன்று பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால், கற்புள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சியோ, சோதனயோ செய்யக் கூடாது!

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

நடிகை குஷ்பு ‘கற்பு’ வழக்கு : சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5728

சென்னை : தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பெஞ்ச்’ வழக்கை விசாரித்து வந்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

ஏப்ரல்23, 2010

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

இனி மறுபடியும் நித்யானந்தா வந்து விட்டதால், ஊடகங்கள் இனி எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கும். 100ற்க்கும் மேலாக வெயில் அடித்தாலும் கவலையில்லை, இனிமேல் தினம் தினம் சூடான செய்திகள் தாம்!

போதாக் குறைக்கு தாந்திரிக முறையிலான செக்ஸ் என்றெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

நிச்சயமாக, இந்தியா இடைக் காலத்திற்குச் செல்கிறது.

ஆமாம், முகமதியர்கள் / முகலாயர்கள், துருக்கியர்கள் எப்படி காம வேட்டையில் ஈடுபட்டு, இந்தியப் பெண்களை கற்பழித்து செக்ஸ் அனுபவித்தார்களோ, இந்திய பண்டிதர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய நூல்களை எழுத வைத்தார்களோ, அதன்படியே செக்ஸ் அனுபவித்து குரூரங்களில் ஈடுபட்டார்களோ…………………..அவ்விவகாரங்கள் எல்லாம் வெளிப்படும்!

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24389

பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக கோர்ட்டில் சாமியார் நித்யானந்தா ஆஜர்
ஏப்ரல் 23,2010,00:00  IST
Front page news and headlines today

பெங்களூரு : இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில், லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேமராக்கள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏழாயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சாமியார் நித்யானந்தாவும், அவருடன் இருந்தவர்களும் சிம்லா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, அர்கி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில், நித்யானந்தா உள்ளிட்டோர் ஆஜர்படுத்த பட்டனர். முறைப்படி வாரன்ட் பெற்று, பெங்களூருவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நித்யானந்தாவை வேன் மூலம் சண்டிகாருக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கு கொண்டுவந்தனர்.

பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணியளவில் சாமியாருடன் விமானம் பெங்களூரு வந்தது. போலீஸ் காரில், நித்யானந்தாவை பாதுகாப்பாக ஏற்றி, ராம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். விமான நிலையத்தில் இருந்து சாமியாரை வெளியே அழைத்து வந்தபோது, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கேலி, கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரைத் தாக்கவும் சிலர் முற்பட்டனர். நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

நித்யானந்தாவை தாக்க முயற்சி: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சாமியார் நித்யானந்தாவை கன்னட அமைப்பினர் கேலியும், கிண்டலும் செய்து தாக்க முயற்சித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையில் சாமியார் அழைத்து செல்லப்பட்டார். சாமியார் நித்யானந்தா, மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றிரவு 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வருவதற்குள், பெரும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் பலத்த கெடுபிடிக்கிடையே சாமியார் நித்யானந்தா காருக்கு அழைத்து வரப்பட்டார். பத்திரிகையாளர்களும் அதிகளவில் குழுமியிருந்தனர். சாமியார் நித்யானந்தா விமான நிலைய வாசல் பகுதிக்கு வரும் போது, அங்கு நின்றிருந்த கன்னட அமைப்பினர், அவரை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர், அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடிக்கு இடையே, சாமியார் சிரித்தவாரே போலீஸ் காரில் ஏறினார்.

நித்யானந்தா பிடிவாரன்ட் நிறுத்தி வைப்பு
ஏப்ரல் 23,2010,00:00  IST

Court news detail

வழக்கை மாற்றிவிட்டு நாடகம் ஆடும் சட்டங்கள்: நித்யானந்தா வக்கீல்கள், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் அளித்த உறுதிமொழியை ஏற்று, அவரது பிடிவாரன்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்  வக்கீல் செல்வமணி, கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், காவி உடை அணிந்து தவறுகள் செய்த சாமியார் நித்யானந்தா மீது, 295ஏ சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா, ஏப்., 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார். அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, ஏப்., 19ல் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், 19ம் தேதி நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தாவை பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், நித்யானந்தாவின் வக்கீல்கள் இருவர், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நேற்று ஆஜராயினர். நித்யானந்தாவை வரும் ஜூன்  20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்தனர். அதை ஏற்று நீதிபதி குணசேகரன் வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

டில்லி இமாம் முன்பு இம்மாதிரி கைது செய்யப்படவில்லையே ஏன்? சட்டம் இந்தியாவில் சரியாக நிறைவேற்றப் படுவதில்லை, என்பதற்கு நித்யானந்தா விவகாரம் மூலம் வெளிப்படுகிறது. நித்யானந்தா தண்டிக்கப்பட வேண்டியதுதான், ஆனால், ஏன் அதே சட்டம் மற்றவர்கள் விஷயத்தில் அமைதியாக செயல் படுகிறது இல்லை செயல்படாமலேயே இருந்து விடுகிறது என்ற கேல்விகள் தான் செக்யூலரிஸ நாட்டில் எழுகின்றன. அதிலும் குற்றமீறல்களைச் செய்தவர்கள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்றதும் ஒன்று அமுக்கி வாசிக்கப் படுகிறது, இல்லை ஊடகங்களில் செய்திகளே வராது (குறிப்பாக தமிழில் வராது), குற்றப் பத்திரிக்கைத் தாக்குதல் செய்யப்பட்ட பிறகும் கைதும் செய்யப் பட மாட்டார்கள்.

சங்கராச்சாரி கைது: டில்லி இமாம் விவகாரத்தில் இப்படித் தான் முன்பு மூன்றிற்கும் மேலான உயர்நீதி மன்றங்களினின்று கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது.  “பாரத மாதா ஒரு தெவிடியா”, “நீதிபதிகளின் கை-கால்களை உடைக்க வேண்டும்”, “………………..”, என்றெல்லாம் பேசியதர்காக அவ்வாறான வாரண்ட்டுகள் பிரப்பிக்கப்பட்டன. ஆனால், சாகும் வரை அந்த ஆள் கைது செய்யப் படவில்லை. ஆனால், அந்த இடைக் காலத்தில் இரண்டு சங்கராச்சாரியார்கள் அதே மாதிரியான, ஆனால் மிகவ்ய்ம் நாகரிகமான முறையில், இந்துக்கள் உரிமைகள் காக்கப் படுவதில்லை………….என்று பேசியதர்காக, கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக, குற்றங்களில் கூட மதரீதியிலாக நீதி மன்றக்கள், காவல் துறை, ஊடகங்கள் முதலியன, பாரபட்ச்சத்துடன் உள்ளன, குறிப்பாக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன?

ஏப்ரல்21, 2010
புது சீடருடன் செக்ஸ் சாமியார் நித்யானந்தா சிக்கினார்
ஏப்ரல் 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?News_id=7288

நித்யானந்தா வந்தாகி விட்டது!

கதவு எல்லோருக்கும் மறுபடியும் திறந்தாகிவிட்டது.

இனி ஜாலிதான்!

Front page news and headlines today

பெங்களூரு : ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குடிசை வீட்டிலிருந்த அவரும், அவரது சீடர் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், 7,000 அமெரிக்க டாலர், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த தகவல் வெளியானது. இந்த தகவலால் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடம் உட்பட இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நித்யானந்தா, ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்றிருப்பதாக, ஆசிரமவாசிகள் தெரிவித்தனர். பிடதி தியான பீடத்திலிருந்து அவரது சீடர்கள் பலர் வெளியேறினர். சீடர்களில் ஒருவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நித்ய தர்மானந்தா என்கிற லெனின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் கூறினார். நித்யானந்தா சம்பந்தப்பட்ட ‘சிடி’யையும் அவரிடம் ஒப்படைத்தார். சாமியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு விரோதமாக செக்ஸ் உறவு வைத்தல், கொலை மிரட்டல், சதி செய்தல் என ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்குகள் தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகாவில் நடந்துள்ளதால் வழக்குகள், கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா, மூன்று முறை வீடியோவில் தோன்றி, தன் நிலையை விளக்கினார். நித்யானந்தா மீதான இரு வழக்குகளை தவிர, மற்ற வழக்குகள் அனைத்தையும் கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சி.ஐ.டி., போலீசார், பிடதி ஆசிரமத்தில் மூன்று முறை சோதனையிட்டனர். அங்கு முக்கிய தஸ்தாவேஜுகளை கைப்பற்றினர். இந்த சூழ்நிலையில் சாமியார் நித்யானந்தா, ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். கடந்த 20ம் தேதி நித்யானந்தா ஆசிரமத்தில், சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். முக்கியமான டாக்குமென்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சி.ஐ.டி., போலீசார் நடத்திய சோதனையில், நித்யானந்தா இருக்குமிடம் தெரியவந்தது.
இதே வேளையில், நித்யானந்தாவை , சி.ஐ.டி., போலீசார், இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியாக தேடி வந்தனர். இமாச்சல பிரதேச போலீசாருடன் இணைந்து, கர்நாடகா மாநில சி.ஐ.டி., போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, அங்குள்ள சோலன் மாவட்ட அர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பதாக தகவல் கிடைத்தது. இரு மாநில போலீசாரும் அங்கு விரைந்தனர். நித்யானந்தாவும், அவருடன் இருந்த நித்ய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டியும் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முன்ஜாமீன் கோரிய மனுவில், நித்யானந்தாவின் கையெழுத்து வாங்குவதற்காக நித்ய பக்தானந்தா இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது தான் அவரும் பிடிபட்டார். இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தாவும், நித்ய பக்தானந்தாவும் குடிசை போன்ற வீட்டில் இருந்தனர். போலீசார் அவ்வீட்டை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்த லேப்-டாப், மூன்று லட்சம் ரூபாய் பணமும், ஏழு ஆயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அர்கி கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின், முறைப்படி அனுமதி பெற்று, பெங்களூருக்கு அவர்களை போலீசார் அழைத்து வருகின்றனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு, நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹூன்குந்த் உத்தரவிட்டார்.

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது
ஏப்ரல் 21,2010,14:35  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1913

Top world news stories and headlines detail

நித்யானந்தா கைது: சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் மலைப்பகுதியில் கைது செய்யப்பட்டார். ரூ. 3 லட்சம் ரொக்கப்பணமும், வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் அமெரிக்க டாலருக்கான  டிராவல்லர் செக்கும் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இதன் மூலம் வெளிநாடு தப்பித்து செல்ல திட்டமிட்டிருந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட  அவர் இமாச்சல பிரதேச கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவசர, அவசரமாக கர்நாடகா கொண்டு வருகின்றனர் போலீசார் . தமிழக நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்த நித்தியானந்தரின் வீடியோ காட்சி ஒளிபரப்பானதும் இவர்களது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள அவரது ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நான் சட்ட ரீதியாக எவ்வித தவறும் செய்யவில்லை.

தலைமறைவான வாழ்க்கை: நடந்தது என்ன என்பது குறித்து நான் விரைவில் மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார் ஆனால் அவர் எங்கும் ,யாருக்கும் காட்சி தரவில்லை. வாரணாசியில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்க சென்றிருக்கிறேன் நான் வருவேன் என்றார்.இது வரை வரவில்லை. தலைமறைவு வாழ்க்கை நடத்தி ஒசாமா பின்லாடன் பாணியில் வீடியோ பேட்டி மட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் போலீசார் இவரை விட்டபாடில்லை. குறி வைத்துகொண்டே இருந்தனர். இந்நிலையில் நடிகையுடன் உல்லாசமாக இருந்தது மற்றும் ஆசிரமத்தில் நடந்த சட்ட விரோத செயல்கள் குறித்து தமிழக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கர்நாடக போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜாமீ்ன் மறுப்பு : தொடர்ந்து கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரமத்தில் துருவி, துருவி, ஆதாரங்களை சேர்த்தனர். இந்நிலையில் தாம் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இங்கும் அவருக்கு ஆதரவு கதவு திறக்கவில்லை. இந்நிலையில் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என கர்நாடக போலீசார் முகர்ந்து கொண்டிருந்தனர். இன்று இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருந்த நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். நடிகையுடன் உல்லாசமாக இருந்த அவரை இன்று இரவே கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். எனவே இவர் விமானத்தில் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. ஆனாலும் இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைத்து தீவிர விசா‌ரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ரஞ்சிதா கைது எப்போது ? : நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.

வீடியோ மூலம் நித்தியானந்தா சொன்னது என்ன ? : வீடியோவில் பேசியதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இந்த சோதனையான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனது மீதான குற்றச்சாட்டுகள், வதந்திகள் ஆகிய எல்லாவற்றுக்கும் எனது ஆதாரங்கள் திரட்டி வருகிறேன். திரட்டிய பின்னர் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர் மீது எந்த எந்த பிரிவுகளில் வழக்கு: நித்தியானந்தர் மீது பிடாதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ். பி., பிசனாகலி கூறியதாவது: சேலம் ஆத்தூரை சேர்ந்த லெனின் என்பவர் மூலம் தமிழக போலீசார் அனுப்பிய தகவல் படி நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஷன் 420 ( மோசடி ) , 376 ( கற்பழித்தல் ) , 377 ( முறையற்ற உடலுறவு ) , 506 ( பி ) (மிரட்டல்) , 120 ( பி) ( குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ) , 295 ( ஏ) , உள்ளிட்ட பிரிவின் கீழ் நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்?

ஏப்ரல்5, 2010

சானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்?

மற்ற விஷயங்களுக்கு எல்லாம், பெண்கள் உரிமைகள், பெண்ணியம், ……………..இந்தியாவில் பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் –

  • அலரும் ஜனநாயக மாதர்கள், …………………………………
  • பெண்ணிய வீராங்கனைகள், ………………………………
  • பெரிய பொட்டு வைத்த முகங்கள், ……………………….
  • தாலி-அறுத்த வகைப்போல பொட்டு வைக்காத பெண் புலிகள், சிங்கங்கள்…………….
  • பெண்ணுரிமை பேசும் தேன்மொழிகள், கனிமொழிகள்…………………….
  • இளம்-பெண்கள் குடித்தால் என்ன, யாருடன் ஆடினால் என்ன………என்றெல்லாம் கேட்டு புல்லரிக்க வைத்த அம்மணிகள்

இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்று சொல்ல முடியுமா?

யார் யாருடன் வாழ்ந்தால் என்ன என்றால், திருமணப்பதிவு எதற்கு?

ஏப்ரல்2, 2010

யார் யாருடன் வாழ்ந்தால் என்ன என்றால், திருமணப்பதிவு எதற்கு?

மனைவி தனது நிக்காநாமாவை வெளியிட்டாராம்!


சிலர் கேட்கிறார்கள் சானியா யாரைத் திருமணம் செய்து கொண்டால் என்ன? என்று, சரிதான் குஷ்பு சொல்கின்ற மாதிரி, உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது மாதிரி யார்-யார் கூட வேந்துமானாலும் சேர்ந்து இருக்கலாம், வாழலாம். அதுதான் இவர்களும் செய்து வருகிறார்கள். பிறகு எதற்கு திருமணம்? இதோ ஆயிஸா சித்திக் என்ற சொஹைப்பின் மனைவி தனது நிக்காநாமா என்ற திருமணப் பதிவைக் காட்டுகிறாரே? இது எதற்கு?

சேர்ந்து-பிரிந்து வாழ்வது என்பது ரொம்ப-ரொம்ப பணக்காரர்களிடையேயும் ரொம்ப-ரொம்ப ஏழைகளிடமும் இல்லையென்பார்கள்!

வித்தியாசம் பிளட்ஃபாரம் மற்றும் படுக்கையறைதான்!

அதுபோலத்தான், குஷ்புவின் வெற்றியைத் தொடர்ந்து “கற்புள்ள” நடிகைகள் எல்லாம் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். மற்றவர்களும் விடுவதாக இல்லை!

கம்ப்யூட்டர் எஞ்ஜினியருடன் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ இரண்டாவது திருமணம்!

வியாழக்கிழமை, ஏப்ரல் 1, 2010, 14:27[IST]

http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/04/01-karuthamma-heroine-marries.html

Rajasriஅன்சாரி முதல் கணவனாம்: கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தனது உறவுக்காரரும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருமான புஜங்கராவ் என்பவரை விஜயவாடாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் பாரதிராஜாவால் கருத்தம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், ராஜஸ்ரீ. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஜிம் மாஸ்டர் அன்சாரியை ரகசிய திருமணம் செய்தார். திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

புஜங்க ராவ் இரண்டாவது கணவனாம்: இந்த நிலையில் ராஜஸ்ரீ, ஹைதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் புஜங்கராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்ரீக்கு நெருங்கிய உறவினர் இந்த புஜங்கராவ். விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள். ராஜஸ்ரீ-புஜங்கராவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸில், வருகிற 4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ராஜஸ்ரீ, ஆந்திராவை சேர்ந்தவர். பெரிய மருது, அசோகவனம், நந்தா உள்பட பல படங்களில் நடித்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, அய்யனார் என்ற படத்தில் நடித்து முடித்தார். “இனிமேல் சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க வேண்டாம் என்று என் கணவர் புஜங்கராவ் கூறிவிட்டதால், நடிப்புக்கு இதோடு முழுக்குப் போட்டுவிட்டேன்” என்றார் ராஜஸ்ரீ!

சானியாவும் இதே கதைதான். முதலில் ஒன்று, பிறகு ஒன்று?

இஸ்லாமாபாத், ​​ மார்ச் 29:​ பாகிஸ்​தான் கிரிக்​கெட் வீரர் ஷோயப் மாலிக்கை டென்​னிஸ் வீராங்​கனை சானியா மிர்சா மணக்க உள்​ளார் என அந் நாட்டு டி.வி.​ சேனல் தெரி​வித்துள்ளது.இந்தியாவில் சானியாவின் பெற்றோரை ஷோயப்பின் தாயார் அண்மையில் சந்தித்ததாகவும்,​​ அவரை தனது மருமகளாக ஏற்க சம்மதம் தெரிவித்ததாகவும்,​​ ஏப்ரலில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் ஜியோ டெலிவிஷன் திங்கள்கிழமை தனது ஒளிபரப்பில் தெரிவித்தது.எனினும்,​​ இது குறித்து அதிகாரப்பூர்வமாக இரு தரப்பினரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.ஹைதராபாதைச் சேர்ந்த ஆயிஷா சித்திகி என்ற பெண்ணை 2002-ல் தொலைபேசி மூலம் மாலிக் திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.​ எனினும்,​​ அப்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்ததாக மாலிக் அப்போது தெரிவித்தார்.தனது பெண்ணை கைவிட்டதற்காகவும்,​​ விவாகரத்து வழங்காததற்காகவும் மாலிக் மீது வழக்கு தொடருவேன் என ஆயிஷாவின் தந்தை எச்சரிக்கை விடுத்திருந்தார்.தனது இளமை கால நண்பர் முகமது சோரப்புடன் சானியாவுக்கு 2009 ஜூலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.​ அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக ஜனவரி 28-ல் சானியா அறிவித்தார்.

Shoaib Malik, Sayali Bhagat (Inset: Sania Mirza)சோஹைப் மாலிக், பெரிய கில்லாடியாக இருப்பார் போல இருக்கிகிறது.
முன்பு, சாயாலி பகத் என்ற நடிகையுடன் “டேடிங்” வைத்திருந்தாராம்!
இவர் முந்தைய “மிஸ் இந்தியா” ஆவார்.
இருவரும் ஹோட்டலில் பார்க்கப் பட்டார்களாம்!
அதே நேரத்தில்; தான், அந்த ஹைதராபாத் பெண் புகார் செய்தாளாம்!
அப்பொழுது சாயாலி சொன்னாளாம், “இல்லை அவர் என்றுமே ஒத்தைத்தான்”, என்று!
ஆகவே, சானியாவும் அப்படித்தான்!
நிச்சயதார்த்தம் பழைய காதலுடன்!
திருமணம், இன்னொருவனுடன்!
வாழ்க காதல்!
வாழ்க கற்பு!
வாழக ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கை!

மாலிக் பலதடவை இல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.

பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல, கிரிகெட் வீரர்களுக்கும் பாலிஹுட் நடிகைகள் என்றால் அல்வாதான். மிழுங்கி விடுவற். இதோ, சொஹைப் அக்தர் இஸா தியோலுடன் கிரக்கமாக ஆடுகிறாராம்!

ம்ம்

காதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்!

பிப்ரவரி18, 2010

காதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்!

காதலால் தந்தையுடன் மோதல்: சென்னை வில்லிவாக்கத்தை சோந்தவர் செல்லத்தம்பி. இவருடைய மூன்றாவது மகள் சண்முகசுந்தரி (26). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவு பேராசிரியராக உள்ளார். இவர் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் தினமும் சென்று வந்தார். பிற்பகலில் அண்ணா பல்கலைகழகத்துக்குச் சென்று எம்.இ படித்தார். அதன் பின் வீட்டுக்குச் செல்வார். வழக்கம் போல் இன்று காலையில் அவர் கல்லூரி பஸ்சில் வந்தார். பின் தனது பையை அலுவலக அறையில் வைத்துவிட்டு அமர்ந்து இருந்தார். அப்போது சண்முகசுந்தரிக்கு, அவரது தந்தை போன் செய்துள்ளார். போனில் பேசியபடி சண்முகசுந்தரி 4வது மாடிக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏறபட்டுள்ளது. எனவே அழுதபடியே அவர் இருந்துள்ளார். இதை கல்லூரி ஊழியர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் 4வது மாடியில் இருந்து சண்முக சுந்தரி திடீரென குதித்தார். பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

பெண்கள் இருவரும் காதலித்து பெற்றோரை தனிமைப் படுத்தினால்? இது குறித்து போலீசுக்கு, கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. கே கே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமணி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சண்முகசுந்தரியின் அக்கா காதல் திருமணம் செய்தவர். அதேபோல், சண்முகசுந்தரியும் காதல் திருமணம் செய்து கொள்வார் என அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்முகசுந்தரியை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளார். மேலும் இவர் சக மாணவர் ஜெகன் என்பருடன் காதல் உள்ளதாகத்தெரிகிறது. இதனால் அவருக்கு தந்தையுடன் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாது வேறு இடத்தில் பயன் பார்த்து திருமணம் நடத்திவிட தந்தை முயற்ச்சிகளை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிந்தவுடன் இவர் மறுத்துள்ளார், எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தந்தை-மகள் இருவருக்கும் சண்டை-வாக்குவாதம் நடந்து வருகிறது. அதே போல் இன்றும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டுள்ளது. மனமுடைந்த சண்முகசுந்தரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிறுக்குத்தனமான காதறுப்புக் காதல்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). கோடம்பாக்கம் சின்னராஜபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர். தந்தை ரயில்வே ஊழியராக உள்ளார். ரேவதி, என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரானேஷை தேடி வருகின்றனர்.

காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சொனிமாவைப் பார்த்து ஏமாறும் இளைஞர்கள்: படிப்பதற்காகப் பெண்கள் வெளியே செல்கிறர்கள். கல்லுரிகளில் ஆண்-பெண்கள் சேர்ந்து படிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. அதேமாதிரி, படித்த / வேலைக்குச் செல்லும் பெண்களும் தைரியமாக வெளியே வருகிறர்கள். தமது ஆண் நண்பர்களுடன் பேசுகிறர்கள், ரிசப்ஸன், கல்யாணம், விருந்து, பார்ட்டி, பிரிவு-உபசாரம் போன்ற காரணங்களுக்காக சத்திரத்திற்கு, ஓட்டல்களுக்குச் செல்கிறர்கள், சாப்பிடுகிறார்கள். அதாவது ஆண்கள் / பெண்கள் எப்படி ஆண்கள் / பெண்கள் கூட சாதாரணமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்களே, அதேமாதிரி இப்பொழுது ஆண்கள்-பெண்கள் சேர்ந்து செய்துவருகிறர்கள். சில நேரங்களில் நெருக்கம் கிருக்கத்தைக் கொடுத்து நட்பு பிணைத்து காதலாகலாம்.

வெலைசெய்யும் பெண்களின் காதல் / கல்யாணம்: வேலைசெய்யும் பெண்களுக்கு மற்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு தைரியம் வந்து “சம்பாதிக்கிறோமே” என்ற நிலையில் பெற்றொர்கள் ஒப்புக்கொள்ளமலேயே வீடைவிட்டு தெரிந்தோ / தெரியாமலோ சென்றுவிட்டு தனியாக குடித்தனம் நடத்தலாம் என்ற எண்ணமெல்லாம் தைரியமாக வரலாம். ஆனால், அதில் அவர்களுக்கு மற்ற கடமைகள் உள்ளதை அவர்கள் மறக்கக் கூடாது. குடும்பம் என்பது ஒரு பந்த-பாச சுழற்ச்சியில் இயங்குவது. குறிப்பாக பெண்களை மட்டும் பெற்ற பெற்றோர்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது பெண்களை நம்பிதான் சாகும் வரை இருக்கவேண்டியுள்ளது. மற்ற உறவினர்கள் பார்த்துக் மொள்வார்கள் என்று சொல்லமுடியாது.

காதலில் இறங்கும் இளசுகள்: இனி தொடர்ந்து, அக்காதலை அலசும்போது, இதில் பெரும்பாலும், அதிகமாக ஆண்களுக்கும், சில பெண்களுக்கும் காம-இச்சை / மோகம் / ரோமாஞ்சகம்தான் முன்னிற்கின்றதேத் தவிர காதலும் இல்லை, நட்பும் இல்லை. அங்கங்கு தெருமுனைகளில் / இருட்டாக அல்லது யாரும் பார்க்க மாட்ட்டர்கள் என்பது போன்ற இடங்களிலும் பேசுவதும், விவாதிப்பதும், சண்டைபோடுவதும் சகஜமாகிவிட்டன. முன்பெல்லாம் யாராவது பெரியவர்கள் அவர்களை விரட்டுவதுண்டு. இப்பொழுதோ “உங்களுக்கு என்ன? இது எங்கள் சமாச்சாரம்” என்று ஆணவத்துடன், அகம்பாவத்துடன் பேசுவதால், “இப்படியாவது ஒழிந்து போங்கள்” என்று அவர்களும் ஒதுங்கிவிடுகிறர்கள்.

சினிமா காதல் செய்து பெண்களை வதைக்காதீர்: ஆனால் பெற்றொர்கள் அதுமாதிரி சொல்லமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்போதுதான் பிரச்சினை வருகிறது. ஆகவே, ஆண்கள் பெண்களை காதலிக்கும் முன் இதையெல்லாம் கருத்தில் கொண்டு காதலியுங்கள், அப்பொழுதுதான் வாழ்க்கை நன்றக இருக்கும், பைத்தியக்காரத்தனமாக “சினிமா காதலில்” இறங்கி பெண்களை வதைக்காதீர்கள் / பெண்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.