Archive for the ‘ஷ்யாம்’ Category

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

நவம்பர்23, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

Radha, Faizul fight bigamy, porn etc

வழக்கம் போல தமிழ் ஊடகங்களின் ரியாக்ஸன்: இவ்வாரம் முழுவதும் தருண் தேஜ்பாலின் “லிப்ட் செக்ஸ்”, “எலிவேடர் ரேப்”, என்றெல்லாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் அத்தகைய விருவிருப்பு வேண்டும் என்ற ரீதியில் செய்திகள் வந்துள்ளன. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஐந்து கல்யாணம் செய்து கொண்ட ஆண்கள், கணவனைக் கொன்ற மனைவி, கள்ளக் காதல், கணவன் – மனை சண்டை என்று புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பஓதா குறைக்கு சினிமாக்காரர்களின் புகார்கள் வேறு. பட்டிமன்றம் நடத்துகிற அளவுக்கு கமிஷனர் அலுவலகத்தில் கள்ளக் காதல் புகார்கள் குவிகின்றன. சினிமா தொடர்பானவையாக இருந்தால் நட்சத்திர அந்தஸ்துதான். சந்திரனுக்கு அனுப்புகிற ராக்கெட்டை படம் பிடிக்க குவிவது போல் குவிந்துவிடுகின்றன மீடியாக்கள். விஷயம் இதுதான். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (30). இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன், மானஸ்தன், அடாவடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லாத நிலையில் 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்[1]. இப்படி தமிழ் ஊடகங்கள் படு குஷியாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

Radha-Parvin, Faizul fight bigamy, porn etc- Nakkeeran

பர்வீன் ராதாவானது ஷ்யாமுக்காகவா, பைசுலுக்காகவா: இது குறித்து செய்தியாளர்களிடம் ராதா கூறியது[2]: “ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். தாயாருடன் வசிக்கிறேன். இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக

நடித்துள்ளேன். தெலுங்கு படத்தி லும் நடித்துள்ளேன். கடந்த 2008-ல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பைசூல் என்பவர் எனக்கு அறிமுகமானார். ஆகஸ்ட் 16ம் தேதி எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர் சினிமாவுக்கு நடிக்க வந்தால் பெயரை மாற்ற வேண்டும் என்று ஏன் பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. இதில் விசித்திரம் என்னவென்றால், இன்றைய நிலையில் முஸ்லிம்கள் இந்து பெயர்களில் மறைந்து கொள்வது தான்!

திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். தான் ஒரு வைரவியாபாரி என்றும், விரைவில் ஒரு புதுப்படம் தயாரிக்க உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதில் என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் அடிக்கடி என்னைச் சந்தித்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதை நம்பி நானும் அவருடன் பழகி வந்தேன்.

Radha-Parvin, Faizul fight bigamy, porn etc.

2008ம்ஆண்டுமுதல் 2012ம்ஆண்டுவரைஎன்னுடன்உறவுகொண்டார்: “அதன் படி, ஆசை வார்த்தை கூறி 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை என்னுடன் உறவு கொண்டார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்தோம். நான் கர்ப்பம் ஆனேன். அதை கலைக்க சொன்னார். வைர வியாபாரத் தில் தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அதில் இருந்து மீண்ட உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதை நம்பி கர்ப்பம் கலைக்கப்பட்டது[3]. இந்நிலையில் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனை ஈடுகட்ட பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். இன்றைக்கு ஒப்புக்கொண்ட உடலுறவு, ஒப்புக்கொள்ளாத உடலுறவு என்றெல்லாம் சட்டப்படிப் பேசப் படுகின்றது. இந்நிலையில், இவர் ஒப்புக்கொண்டு உடலுறவு கொண்டுள்ளார் என்று அறிவித்திருப்பது தாம்பத்தயத்தையேக் கேவலப்படுத்துவதாகும்

அதிலிருந்து மீண்ட பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பைசூல் கூறினார். இதனால், என்னிடம் இருந்த ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன்[4]. அதன் பிறகும் அவர் என்னைத் திருமணம் செய்யத் தயங்கியதால் சந்தேகமடைந்து அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன்.

Radha-Parvin, Faizul fight bigamy, porn etc- Nakkeeran2

ஏற்கனவே  திருமணமாகி  விட்ட   பைசூல்: “அப்போது தான் பைசூலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விஷயம் எனக்குத் தெரிந்தது. மேலும் அவர் சட்ட விரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே பைசூல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று நடிகை ராதா தெரிவித்தார். அவருக்கு திருமணம் ஆனது எனக்கு முதலில் தெரியாது. அவரை உண்மையாக நேசித்தேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவிபோல் இருந்தபோது, அதை தனது செல்போனில் படம் பிடித்தார். ஏன் அந்தரங்கத்தை செல்போனில் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் உன் நினைவாக அதை பார்ப்பதற்காகத் தான் என்று கூறினார்.

தற்போது, போலீசுக்கு சென்றால் அந்த அந்தரங்க காட்சிகளை இணைய தளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். பைசூலை நம்பி திரைப்பட தொழிலை விட்டு விட்டேன். பணத்தையும் இழந்து விட்டேன்”, இவ்வாறு அவர் கூறினார்[5].  எந்த ஆணும் இப்படி வக்கிரமாக படம் எடுப்பானா என்று தெரியவில்லை, அப்படி எடுத்ததைப் பற்றிக் கேட்டவளுக்கு விளக்ஜ்கம் அளித்த விதம் அதைவிட கேவலமாக இருக்கிறது. மிருகங்களைவிட கேவலமான இவர்களின் கதை, சமூகத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது.

ஐந்து  பேரைத்  திருமணம்  செய்தேனாநான்  ஒன்றும்  விபச்சாரி  அல்ல! – நடிகை  ராதா[6]:  இவரின் குற்றச்சாட்டுகளை தொழில் அதிபர் பைசூல் மறுத்து, ராதா பலரை திருமணம் செய்தவர் என்றும், அவருக்கு 5 முறை திருமணமாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள ராதா, ஆறு வருடங்களுக்கு முன்னால் காத்தவராயன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, சவுந்தரபாண்டி என்பவர் பைசூலை சிங்கப்பூரில் பெரிய வைர வியாபாரி, பைனான்சியர் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்.

பைசூல் எனது தீவிர ரசிகர் என்றும் கூறினார். அப்போது எனக்கு பண கஷ்டம் இருந்ததால், ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். இதனால் பைசூல் மேல் மரியாதை ஏற்பட்டது. அதன்பிறகு அடிக்கடி சந்திதார். ஒருநாள் என் கையை பிடித்து காதலிப்பதாக சொன்னார். காரில் என் வீட்டு முன்னால் அடிக்கடி வந்து நின்றார். பெரிய பணக்காரன் என்று நினைத்தேன். இப்படி பைக்கில் வருவது, காரில் வருவது, பணக்காரன் போல நடிப்பது, போன்ற கதைகளை வைத்துக் கொண்டுதான், இக்கால இளைஞர்களின் மனங்களை சினிமாக்காரர்கள் கெடுத்து வருகிறார்கள். அதில் நடிகையே சிக்கிக் கொண்டது, அவர்களின் தராதரத்தை மெய்ப்பிப்பது போல உள்ளது.

என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை காட்டினார். நானும் நம்பினேன். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி என்னோடு வாழத் தொடங்கினார். ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினோம். என்னை மணந்து கொள்வார் என்று முழுமையாக நம்பினேன். வைர வியாபாரத்துக்கு தேவைப்படுவதாக ரொக்கம், நகை என்று ரூ.50 லட்சத்துக்கு மேல் என்னிடம் வாங்கினார் அதன்பிறகு வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

நிறைய  நடிகைகள்  மற்றும்  பெண்களுடன்  அவருக்கு  செக்ஸ்  தொடர்பு  இருப்பது  தெரிய  வந்தது: விசாரித்தபோது நிறைய நடிகைகள் மற்றும் பெண்களுடன் அவருக்கு செக்ஸ் தொடர்பு இருப்பது தெரியவந்தது இதனால் அதிர்ச்சியானேன்.  நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். காமக் கொடூரனாக நடந்து கொள்வார்.

அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்[7].  பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். பல பெண்கள், நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு இருந்தது, எனும்போது, சினிமாவின் தரமும் விளங்குகிறது. படுத்தால் சான்ஸ் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள் போலும்.

ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள்.மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்.

நடிகையை  திருமணம்  செய்து  கொண்டு  வாழ  முடியாது: நடிகையை திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று இப்போது சொல்கிறார். அப்படியென்றால் –

  1. ஆறு வருடங்கள் என்னொடு குடித்தனம் நடத்தியது எதற்காக?
  2. என் கையால் சமைத்து சாப்பிட்டது எதற்காக?
  3. வீட்டிலேயே கதியாக கிடந்தது எதற்காக?
நம்பிய என்னை மோசம் செய்து விட்டார். பைசூல் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்ட தகவல்களும் எனக்கு தெரிய வந்தது. இவரது கூட்டாளி ஒருவன் மலேசியாவில் கைதாகி இருக்கிறான். நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். இப்படி கேள்விகள் கேட்பதால் என்ன லாபம்? இவர்களின் சீரழிவு கதைகள் தமிழகத்திற்கு தேவையானதா? இவற்றை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியம் என்ன? சமூகம் சீரழிவில் இவர்கள் பங்களிக்கின்றனரா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

காமக் கொடூரனாக நடந்து கொள்வார். செக்ஸ் வைத்துக் கொண்டதையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளார்[8]. அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்.

நடிகை  ராதாவுக்கு  எதிரான  ஆதாரங்களை  வெளியிடுவேன்:   பைசூல்  பேட்டி[9]: நடிகை ராதா புகாருக்கு தொழில் அதிபர் பைசூல் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– ராதா என் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எனக்கு நிறைய தொல்லை கொடுத்தார். அரசியல்வாதிகளை வைத்தும் மிரட்டினார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் என்ற முறையில் என்னுடன் படம் எடுத்துக் கொண்டார். ராதா ஏற்கனவே திருமணம் ஆனவர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை வெளியிடுவேன்.  போலீஸ் கமிஷனரை சந்தித்து ராதா மீது புகார் அளிக்க உள்ளேன். எனக்கு நிறைய எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி உள்ளார். ராதாவின் பாஸ்போர்ட், வருமான வரித்துறை பான்கார்டு நகல்கள் என்னிடம் உள்ளன. அவற்றை போலீசில் ஒப்படைப்பேன். ராதாவை ஜெயிலுக்கு அனுப்புவேன்.  இவ்வாறு பைசூல் கூறினார்[10].

மதம், தொழில், ஊர், பெயர்  எல்லாம்  ஆரம்பத்தில்  அவர்  சொன்னது  பொய்: பர்வீன் பைசுலைப் பற்றி இப்படி குறிப்பிட்டதில் அவர்களது மதப்பிரச்சினையும் இருக்கிறது என்று தெரிகிறது. “பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள். மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்”. மேலும் “பலதார / ஐந்து திருமணங்கள்” என்ற பரஸ்பரக் குற்றச்சாட்டும் உள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும், ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைகளை வைத்திருக்கலாம். பிடிக்காவிட்டால், ஒத்துப்போகாவிட்டால், தலாக் செய்து விட்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ளலாம். அதே போல, பெண்ணும் தலாக் செய்து கொள்லலாம். மேலும், “மூத்தா” என்ற திருமணமுறையும் இஸ்லாத்தில் உள்ளது. அதன்படி, ஒரு ஆண், இன்னொரு பெண்ணை தான் விரும்பும் வரையில் சிறிது காலத்திற்கு சேர்ந்து இருக்கலாம், பிறகு விலகிக் கொள்ளலாம். ஷரீயத் சட்டப்படி, இத்தகைய முறையும் அனுமதிக்கப் படுகிறது. எனவே, பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா என்ற கேள்வியும் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

23-11-2013


[2] தினமணி, திருமணம் செய்து கொள்வதாக நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி, First Published : 23 November 2013 05:54 AM IST

[6] டமிள் ஒன் இந்தியா, ஐந்து பேரைத் திருமணம் செய்தேனா… நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! – நடிகை ராதா, Posted by: Shankar, Updated: Saturday, November 23, 2013, 14:15 [IST]

[9] மாலைமலர், நடிகைராதாவுக்குஎதிரானஆதாரங்களைவெளியிடுவேன்: பைசூல்பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 23, 1:15 PM IST

[11] Nikā al-Mutʿah (Arabic: نكاح المتعة‎, “pleasure marriage”) is a fixed-term or short-term marriage in Shia Islam, where the duration and compensation are both agreed upon in advance. It is a private and verbal marriage contract between a man and an unmarried woman and there must be declaration and acceptance as in the case of nikah. The length of the contract and the amount of consideration must be specified. There is no minimum or maximum duration for the contract. The Oxford Dictionary of Islam states that, “the minimum duration of the contract should be at least three days”. The wife must be unmarried, either Muslim or one of the ahl-e-kitab, she should be chaste and should not be addicted to fornication or a virgin without father, and due inquiries should be made into these regards. At the end of the contract period (i.e. dissolution of Mut’ah), the wife must undergo iddah.

[12] Both Shias and Sunnis agree that Mut’ah was legal in the beginning. Ibn Kathir writes: “There’s no doubt that in the outset of Islam, Mut’ah was allowed under the Shari’ah”.

Esposito, John L. (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 221. Retrieved April 4, 2013. Tafsir al-Qur’an al-Azim, Volume 1 p. 74.

[13] Mut’ah is an Arabic word meaning literary “joy, pleasure, compliance, fulfillment or enjoyment.’ Its meaning has to be taken in context of how it is used. So for example in an oath the word mutah means compliance or fulfillment; in terms of marriage it means happiness or joy while in terms of Hajj it means relaxing. As it has a number of meanings the Quran has nanstead the word ISTIMTAH is used which for Shias means mutah. Mutah in pre Islamic Arabia was used to mean pleasure marriage. Hence, the Shias says that when in the Quran the verse 4:24 says: “Forbidden to you are married women except your slave girls….” they say that as the same verse uses the word ISTIMTAH, therefore, this means that you cannot have temporary marriage with a married woman except if she makes her your slave girl. In Al Mizan by Ayatullah Tabatabaei the claim is made that often the Companions of the Prophet would withhold their slave girls from their husbands for two months to ensure they were not pregnant and have sex through mutah with them. Then after that they would withhold the girls again for two more months before returning them to their husbands. The Ayatuallah quotes this to prove his point that the Companions used the word Istimtah to mean mutah which was used in the context the pre Islamic Arabs did.