ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – கல்யாண ராணியா, சமூக தீவிரவாதமா – யார் தீர்மானிப்பது?
ஆண்களை ஏமாற்ற யாஸ்மின் கடைபிடித்த திட்டம் [modus operandi]: இம்ரானைப் பிரிந்த பிறாகு, யாஸ்மின் பானு, 6 பேரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அதாவது, யாஸ்மின் பானு, தனது அழகில் மயங்கி விழும் ஆண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை திருமணம் செய்வார். பின்னர், திருமணம் முடிந்து 2 நாட்கள் கணவருடன் குடும்பம் நடத்துவதுபோல நடித்து, அவர்களின் வீட்டில் இருந்து நகை-பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது[1]. அவர்கள் அனைவரிடமும் சில ஆபாச புகைப்பட ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்[2]. இதெல்லாம் அவளது “வரைமுறை திட்டமாக” இருந்து வந்துள்ளது. “கல்யாணம் பண்ணு, ஏமாற்று, தூக்கிப் போடு” என்று தான் யாஸ்மின் செய்து வந்ததாக, நியூஸ்-எக்ஸ் தலைப்பிட்டுக் கூறுகிறது[3]. மேலும் ஏழாவது கணவன் யார் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறது[4]. பெண்கள் இனி பணம் சம்பாதிக்க இவ்வழியையும் பின்பற்றலாம் என்று மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை[5]. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் தலைமறைவாக உள்ள கல்யாண ராணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட யாஸ்மின்: “மருதமலை” படத்தில் வடிவேலு போலீஸாக நடித்திருப்பார். அவரிடம் ஒவ்வொரு கணவராக வந்து தங்களது மனைவி குறித்து புகார் தருவார்கள். அந்தக் கதையாக இருக்கிறது இந்த பெங்களூர்ப் பெண்ணின் கதை”, என்று விமர்சிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[6]. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் யாஸ்மின் மீது பணம் கேட்டு மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தேட ஆரம்பித்தனர். உகைப்படங்கள் முதலியவை இருந்ததால், போலீஸார் அவளைக் கண்டு பிடித்து, கைது செய்தனர். கடைசியில் நீங்களும் அழகாத்தான் இருக்கீங்க என்று போலீசிடம் சொல்லாமல் இருந்தால் சரிதான், என்று முடித்திருக்கிறது[7] என்று நக்கல் அடிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. இப்படி தமிழ் ஊடகங்கள் இருக்கும் போது, ஆங்கில ஊடகங்கள், தமக்கேயுரிய பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளன.
வழக்கம் போல ஊடகங்களின் குசும்புத்தனம்: இந்தியா.டுடே, இதனை “ஷாதி ஸ்காம்” என்றே குறிப்பிட்டுள்ளது[8], அதாவது, மோசடி திருமணம், திருமண ஊழல் என்றே குறிப்பிட்டுள்ளது[9]. இஸ்லாத்தில் பலதார திருமணம் சாதாரணமான விசயம், அதாவது ஒரு ஆண் ஒரே நேரத்தில் 4 பெண்டாடிகளை வைத்திருப்பதும், ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்வதும், அவர்களது சட்டப்படி சரி என்று தான் முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் எங்களுடைய சமாச்சாரங்கள், எந்த கோர்ட்டோ, யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூப்பாடு போடுவதும், கலாட்டா செய்வதும், கலவரங்களில் ஈடுபடுவதும் என்றிருப்பதால், மற்றவர்களும், இதைப்பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. “டைம்ஸ் ஆப் இந்தியா”, ஒரு இந்து பெண் இருப்பது போல சித்தரித்துள்ளது, விசமத்தனமாக உள்ளது[10]. அதாவது, உதாரணத்திற்கான படம் என்று போட்டு, அப்பெண்ணின் நெற்றியில், குங்குமம் இருப்பது போலக் காட்டியுள்ளது[11].
இஸ்லாத்தில் பலதார திருமணம், தலாக் முதலியன: இந்தியன் எக்ஸ்பிரஸ் “ஜீவனாம்சம்” என்ற வார்த்தை உபயோகித்துள்ளது[12]. அப்படியென்றால், அவள் விவாக ரத்து பெற்றுள்ளாள் என்று தெரிகிறது[13]. அதாவது, இதில் சம்பந்தப்பட்டுள்ள ஆண்கள் பணக்காரர்கள் என்பதால், அவர்களுக்கு விசயம் தெரிந்திருக்கும். இவ்விசயம் இங்கிலாந்திற்கும் சென்றிருக்கிறது[14]. தன் மனைவிக்கு ஏழு கணவன்கள் இருப்பதை அறிந்ததும், யாரை நம்பித்தான் வாழ்வது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது[15]. இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் பலதார திருமணம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதால், பெண் கற்புள்ளவளாக அதாவது முன்னர் எந்த ஆணுடனும் உடலுறவு கொண்டிருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது, எதிர்பார்க்க முடியாது. ஒரு இஸ்லாமிய பெண் தானே, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற் ரீதியில் திடமாக, உறுதியாக வாழ்ந்தால் தான் அந்த நிலையை எதிர்பார்க்க முடியும். ஆனால், ஆண்கள், பலமுறை நிக்காஹ் செய்து கொள்ள வேண்டும் என்றதால் தான் தலாக் பற்றிய பிரச்சினை வருகிறது. அது இப்பொழுது முஸ்லிம் பெண்களிடம் பெரிய பிரச்சினை ஆகியுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய சட்ட போர்ட், தங்களுடைய விசயங்களில், எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது என்று உறுதியாகக் கூறியுள்ளது.
ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள்: அடுப்பங்கறையில், பெண்கள் இருந்த காலம் போய் விட்டது, பெண்கள் படித்து விட்டார்கள், வேலைக்கு செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள், குடும்பத்தைக் காப்பாற்றுகிறர்கள், இப்படி, நிறையவே சொல்லி, சந்தோஷப்படக் கூடிய விசயங்கள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்று பெருமைப் படக் கூடிய விசயங்களும் உள்ளன. ஆனால், இது போன்ற “கல்யாண ராணி” விவகாரங்கள், சமூகத்தையே சீரழிப்பதாக உள்ளது. இதனால், உறவுகள் உடையுமா, குடும்பங்கள் பிரியுமா, சமூகம் அழிந்து போகுமா என்று கவலைப்பட வேண்டியதாகிறது. இதை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், இந்தியாவிற்கு பேராபத்தான விசயம் என்றே சொல்லலாம். இது ஒரு தீவிரவாதச் எயலைவிட படுபயங்கரமானது எனலாம். ஆண்கள்-பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் விசயமாக இருப்பதால், நிச்சயம் அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று வலியுருத்த வேண்டியுள்ளது. தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால், தாம்பத்தியம், குடும்பம், சமூகம் ஏன் நாடே சீர் கெட்டு போகும் என்றதால், இவற்றைத் தடுக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
24-09-2016
[1] மாலைமலர், பெங்களூரில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்: போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய கணவர்கள், பதிவு: செப்டம்பர் 21, 2016 11:59
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/21115941/1040301/Complaint-against-woman-for-marrying-7-men-and-extorting.vpf
[3] NewsX Bureau, Marry, dupe, dump — This woman did this with 7 men, First Published |Thursday, September 22, 2016 – 13:57| Thursday, September 22, 2016 – 16:56.
[4] http://www.newsx.com/national/41800-marry-dupe-dump-this-woman-did-this-with-7-men
[5] இதைப் போன்ற கல்யாண ராணிகள் பற்றிய பதிவுகளை நிறையவே பதிவு செய்துள்ளேன்.
[6] தமிழ்.ஒன்.இந்தியா,8 வருடத்தில் 7 கல்யாணம்.. மிரட்டிய பெங்களூரு பெண்: புகார்களுடன் கிளம்பி வந்த 3 கணவர்கள்.., By: Mayura Akilan, Updated: Wednesday, September 21, 2016, 9:18 [IST]
http://tamil.oneindia.com/news/india/bengaluru-woman-marries-7-persons-8-years-263301.html
[7] http://tamil.oneindia.com/news/india/bengaluru-woman-marries-7-persons-8-years-263301.html
[8] IndiaToday.in, Shaadi.scam: Man files complaint against wife for marrying 7 other men, Posted by Vivek Surendran, Bengaluru, September 20, 2016 | UPDATED 15:57 IST
[9] http://indiatoday.intoday.in/story/bengaluru-wife-marry-seven-men-cheating/1/768587.html
https://www.youtube.com/watch?v=ds0xi4qMPMQ
[10] The Times of India, My wife has married 7 others, man tells cops, TNN | Updated: Sep 20, 2016, 11.10 AM IST.
[11] http://timesofindia.indiatimes.com/city/bengaluru/My-wife-has-married-7-others-man-tells-cops/articleshow/54418138.cms
[12] Express News Service, Complaint against woman for marrying seven men and extorting lakhs in alimony, Published: 20th September 2016 03:56 AM; Last Updated: 20th September 2016 11:08 AM.
[13] http://www.newindianexpress.com/cities/bengaluru/Complaint-against-woman-for-marrying-seven-men-and-extorting-lakhs-in-alimony/2016/09/20/article3625085.ece
[14] Dailymail.co.uk/, But who’s the breadwinner? Bengaluru man finds out wife has SEVEN other husbands, PUBLISHED: 21:45 GMT, 20 September 2016 | UPDATED: 21:54 GMT, 20 September 2016
[15] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3799058/NewHusband-com-Bengaluru-man-finds-wife-SEVEN-husbands.html