Archive for the ‘குளியலறை’ Category

வழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்!

ஓகஸ்ட்11, 2014

 

வழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்!

Girl students taking bath

Girl students taking bath

குற்றம், குற்றம் செய்யும் தன்மை முதலியவை வளரும் விதம்: இந்தியாவில் ஜனத்தொகை பெருகுகிறது, அதனால் எல்லா தேவைகளும் அதிகரிக்கிறது. பெண்களும் வேலைக்கு என்று கிளம்பி விட்டார்கள். இதனால், பெண்களுக்கு வேண்டிய வேலைகள் பெருகுகின்றன, அத்தகைய வேலைகளுக்கு தேர்ச்சி என்றும் பயிற்சி வகுப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று ஆரம்பிக்கப் படுகின்றன. வர்த்தக மயமாக்கும் எண்ணம் இருப்பதால், இதனை வைத்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் படுகின்றன. முதலில் பணம், பணம் சம்பாத்தியம் முதலியனத்தான் பிரதானமாக இருக்கின்றன. அதற்குப் பிறகு தான், ஒழுக்கம், சட்டங்களை மதித்தல், வரிகளைக் கட்டுதல் போன்ற எண்ணங்கள் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு வருகின்றன. அப்பொழுதும், பணம் செலவழிக்காமல் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் மேலிடும் போது, சட்டமீறல்களிலும் ஈடுபடுகிறார்கள். அச்சட்டமீறல்கள் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வைத்து நடத்தப் படும் நிறுவனங்கள், காரியங்கள், என்னத்தான் சேவை, உதவி, தர்மம் என்ற போர்வைகளில் ஆரம்பித்தாலும், செயல்பட்டாலும், நாளடைவில், அவற்றிலிருந்து ரஎப்படி பணம் சம்பாதிக்கலாம், அரசு சட்டதிட்டங்களை ஏய்க்கிலாம் என்று தான் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகின்றன.

Girls taking bath - roofless bathrooms - illustrative purpose

Girls taking bath – roofless bathrooms – illustrative purpose

சித்தாந்தங்கள் குற்றங்களைக் குறைக்கின்றனவா, பெருக்குகின்றனவா?: குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் சம்பந்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள் முதலியவற்றில், செக்ஸ்-தொல்லைகள், பாலியல் பலாத்காரங்கள், வக்கீர வன்புணர்வுகள் முதலியவையும் சேர்ந்து விடுகின்றன. கிருத்துவ நிறுவனங்களில் தொடர்ச்சியாக அத்தகைய சம்பவங்கள், நிகழ்வுகள் குற்றங்களுடன் நடப்பது வாடிக்கையாகி விட்டன. பெரியாரிஸம், கம்யூனிஸம் முதலியவை பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தன, அவர்களை அடுப்பறைகளிலிருந்து வெளியே வரச்செய்தன, அவர்களது சுதந்திரங்களைக் கொடுத்தன என்றெல்லாம் ஒரு பக்கம் வாதங்கள் வைக்கப் படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட-நாத்திக-இந்துவிரோதமான ஆட்சிமுறை, சித்தாந்தத் தாக்குதல்கள் முதலியவை நடைப் பெற்று வருகின்றன. அதனால், தார்மீக உணர்வுகள் போய்விட்டன, யாருக்கும் அடங்க வேண்டாம் என்ற வக்கிர குணங்கள் பெருகிவிட்டன, சட்டங்களை மதிக்கவும் வேண்டாம் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது, குற்றங்கள் பெருகிவிட்டன, என்ற வாத ங்களும் வைக்கப்படுகின்றன.

Registrar looking at Girl-students taking bath from first floor

Registrar looking at Girl-students taking bath from first floor

சித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டில் நடக்கும் குற்றங்கள்: குற்றவாளிகளுக்கு அதே சித்தாந்திகள், சித்தாந்த எண்ணங்கள் கொண்ட அரசியல்வாதிகள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், மேலும் சட்டதிட்டங்களை நடைப்படுத்த வேண்டியவர்கள், பெரிய இடங்களில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், முதலியோரும் இத்தகைய சித்தாந்த எண்ணங்களில் கட்டுப்பட்டுக் கிடப்பதால், குற்றங்களிலும் பாரபட்சம் பார்க்கின்றார்கள். நீதி-நியாயம் முதலியவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை என்ற கருத்தும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டுள்ளன, இன்னும் செய்யப் பட்டு வருகின்றன. ஊடகங்களும் அவர்களது கைகளுக்குள் இருப்பதால், அல்லது அவற்றின் சொந்தங்காரர்களாக இருப்பதால், அல்லது அத்தகைய சித்தாந்த கொள்கைகளில் கட்டுண்டுக் கிடப்பதால் அத்தகைய பாரபட்சம், ஒடருதலை பட்சம் முதலியவை சட்டமீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், குற்றங்களில் ஊறிப்போன பழக்கமான மனிதவிரோதிகள் தாம் இன்று படிப்பு, வேலை முதலிய சேவைகளை செய்யும் வித்தகர்களாக தோன்றுகிறார்கள். அவர்களால் நடத்தப் படும் நிறுவனங்களில் எவ்வாறு பெண்கள், மற்ரவர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டாதவர்கள், சித்தாந்தவிரோதிகள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் நடத்தப் படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Registrar looking at Girl-students taking bath

Registrar looking at Girl-students taking bath

சட்டவிரோதமாக மூன்று ஆண்டுகளாக நடத்தப் பட்டு வரும் ராயல் நர்சிங் கல்லூரி: தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராவணன்(48). இவர் காவேரி நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக “ராயல் நர்சிங் கல்லூரி” நடத்தி வருகிறார்[1]. இக்கல்லூரி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை, இப்படி ஒரு நாளிதழ் கூறுகிறதுஆனாலும் மாணவிகள் சேர்க்கப்பட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது[2]. இந்தாண்டு 36 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடத்தி வருகிறார் என்றதை எப்படி மறைக்க முடியும்? பிறகு எப்படி மாணவிகளை சேர்த்து ஏமாற்ற முடியும்? இவற்றிற்கு ஊடகங்கள் பதிலை சொல்லவில்லை. மாணவிகள் தங்கும் விடுதி, நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியில் உள்ள தாளாளர் ராவணன் வீட்டு மாடியிலும், வீட்டின் பின்பக்கம் உள்ள கட்டடத்திலும் செயல்பட்டு வருகிறது[3].

sneha-latest-wet-bathroom-illustrative purpose

sneha-latest-wet-bathroom-illustrative purpose

ஜூலையில் மாணவிகள் கொடுத்த புகார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர் கல்லூரியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று புகார் அளித்தனர். அதில், கல்லூரியிலும், விடுதியிலும் அடிப்படை வசதிகள் இல்லை. கல்லூரிக்கு உரிய அனுமதியும் இல்லை. மேலும், கல்லூரி விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் போது தாளாளர் எட்டிப்பார்த்து ரசிக்கிறார். விடுதி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என கூறியிருந்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், புகார் குறித்து விசாரிக்க வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்[4].

குறிப்பிட்ட மாணவி கொடுத்த புகார்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.  அந்த புகாரில் கூறியிருப்பதாவது[5]:–நான் தஞ்சையில் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்தேன். சேரும் போது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பாக தங்கும் விடுதிவசதிகள் உள்ளன என்றும் கல்லூரி தாளாளர் ராவணன் (47) கூறியதை நம்பி எனது பெற்றோர் அவர்கள் விடுதியில் தங்கி படிக்க வைத்தனர். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் கல்லூரி எந்தவித அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல் விடுதி என்ற பெயரில் கல்லூரி தாளாளரின் வீட்டின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய அறையில் தங்க வைத்தனர். என்னுடன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பலர் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் 17 வயது முதல் 18 வயதிற்குள்ளான மாணவிகள்.

ஜூலையில் மாட்டிக் கொண்டு ஆகஸ்டில் சிறை சென்ற இராவணன்: கடந்த ஜூலை மாதம் ஒருநாள் எங்களது கல்லூரி உரிமையாளர் ராவணன் நாங்கள் குளிக்கும் குளியறை அருகே வந்தார். அப்போது நான் அவரை மறைந்திருந்து பார்த்தேன். அவர் மாணவிகள் குளிக்கும் போது எட்டி பார்த்து கொண்டிருந்தார். அதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் எந்த மாணவி குளித்தாலும் அவர் எட்டிப்பார்ப்பதை நாங்கள் பார்த்தோம். இதை நாங்கள் வெளியில் சொன்னால் எங்களுடைய பள்ளி படிப்பு அசல் சான்றிதழ்களை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்தோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[6]. இந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்பல்கலை கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினாம்பாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இதையடுத்து மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் மீது பெண் வன்கொடுமை, பெண் மானபங்கம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராவணனை 09-08-2014 அன்று கைது செய்தனர்[7].திருச்சி மத்திய சிறையில் / பாபநாசம்  சிறையில்  அடைக்கப்பட்டார்[8].

© வேதபிரகாஷ்

11-08-2014

[1] தினகரன், தஞ்சையில் நர்சிங் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி உரிமையாளர் கைது, 11-08-2014.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=104679

[3] தினமணி, செவிலியர் கல்லூரித் தாளாளர் கைது,  By dn, தஞ்சாவூர், First Published : 11 August 2014 01:55 AM IST

[4]http://www.dinamani.com/tamilnadu/2014/08/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/article2373528.ece

[5] மாலைமலர், விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 1:13 PM IST

[6] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை நர்ஸிங் கல்லூரி தாளாளர் கைது, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 4:20

[7] http://www.maalaimalar.com/2014/08/10131342/shower-at-the-hostel-and-enjoy.html

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1043130