Archive for the ‘மலேசியாவில் விபச்சாரம்’ Category

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது

ஜூன்29, 2010

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=28410

கொடுங்கையூர் கொடுமைகளின், தீவிரவாத்தத்தின் மையாமாகிறது: சென்னை : வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அன்பழகன்(35), புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த முருகன்(35), லோகம்பாள்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ்(28) மற்றும் ஆந்திராவின் கோதாவரி மாவட்டம், தேவதள்ள பாளத்தைச் சேர்ந்த புஜ்ஜிபாபு(26) ஆகியோர், சென்னையிலிருந்து பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவர்களை சுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபசாரம்: இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தார். புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த மோசடி கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப இருந்த பெண்களின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல்கள் கைப்பற்றப்பட்டன. பெருநகர குற்றவியல் கோர்ட் உத்தரவுப்படி, குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்மோசடியில் ஈடுபடும் கும்பல்களை தேடும்பணி தொடரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெண்களை-விபச்சாரத்தில்-தள்ளுவது-2010

பெண்களை-விபச்சாரத்தில்-தள்ளுவது-2010

சுற்றுலா விசா, மலேசியா-சிங்கப்பூர் விபச்சாரம்: இவையெல்லாமே நன்றாக ஏற்படுத்தப் பட்ட தொழிலாக, வியாபாரமாக நடப்பதாகத் தெரிகிறது. இவர்களுக்கும், மற்ற சினிமாத்துறை ஆட்கள் செய்வதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. விமானத்தில் பறந்து சென்று நடிகைகள் விபச்சாரம் செய்து வருவதாக, முன்பு புவனேஸ்வரியே குற்றஞ்சாட்டியது நினைவில் கொள்ளவேண்டும். துபாய் மற்றும் மற்ற ஆசிய நாடுகளிலும் இது வேறு வடிவங்களில், சேய்க்குகளின் வீட்டு வேலைக்காரிகள் முதலிய போர்வைகளில் நடைபெறுகின்றது.