Archive for the ‘மாமியார்’ Category

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

குழந்தையின்மை: தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு நினைப்பது, எழுதுவது தவறு, காலம் தாழ்ந்து குழந்தை பிறப்பதும் நிதர்சனமாகத் தான் உள்ளது. இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். தத்து எடுப்பு என்ற சாதாரணமான முறையும் இருந்தது. முன்பெல்லாம் குடும்பத்தில், உறவினர்களில் அப்பழக்கம் இருந்தது. பிறகு மற்றவர்களிடமிருந்து தத்து எடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. உண்மை பெற்றோர் வந்து சொந்தம் கொண்டாடுவது பணம் கேட்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அனாதை இல்லங்கள்போன்றவை,, இதனை ஒரு வியாபாரமாக்கியது. அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. அதனால், படிப்படியாக தத்து எடுக்கும் முறை குறைந்த்து. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.

விஞ்ஞான முறையில் கருத்தரித்தல், குழந்தை பெற்றல்: குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை. ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.

வாடகைத் தாய்: இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.

இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய்: இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம். வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.

இந்தியாவில் வாடகைத் தாய் தொழில் நடைபெறுகிறது: பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவியன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது மலிவானது: இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம். குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

வாடகைத் தாய் உருவாகும் புதிய பிரச்சினைகள்: வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது. வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

வாடகைத் தாய் சட்டச் சிக்கல்கள்: தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.

© வேதபிரகாஷ்

03-04-2022

வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்!

செப்ரெம்பர்24, 2010

வாஷிங்மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்[1]; சேர்த்தலா (கேரளா): வாஷிங் மிஷினில் தன் எட்டு மாத ஆண் குழந்தையை போட்டு கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார்[2]. அவர் ஏற்கெனவே மனோதத்துவ மருத்துவரிடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்[3]. இது இக்காலக் கட்டத்தில் பெண்கள் எந்த அளவிற்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தவர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. இப்படி சராசரி குடும்பங்களில், இவ்வாறானப் பிர்ச்சினைகள் உள்ளன. ஒன்று, கணவன் வேலைக்குச் சென்றவுடன், மாமியார்-மறுமகள் சண்டை ஆரம்பித்து விடும், இல்லை, தனியாக இருக்கும் மனைவி, ஏதாவது செய்து விடுவாள். குறிப்பாக, அவள் வெறும் சமைப்பது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது, என்றிருக்கும் போது, வேறு வேலை இல்லை எனும்போது, பிரச்சினைகளில், மன அழுத்தங்களில் சிக்கிக் கொள்கிறாள்.

ஜான் மார்க்கோஸின் மனைவி சுமா: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா தெற்கு பகுதியில் ஆர்த்தங்கல்லைச் சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ் (46); எர்ணாகுளத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றுகிறார்; இவரது மனைவி சுமா (40). இவர்களது மகள் மிலன் மரியா(10), ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஷாரோன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இப்படி அழகான குடும்பம் தான், ஆனால், ஏன் பிரச்சினை வர வேண்டும்?

குழந்தை அழுததால் கொலை செய்த தாய்: நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, வாஷிங் மிஷினில் நீரை நிரப்பிய சுமா, அதில் குழந்தையை அமுக்கி, வாஷிங் மிஷினை மூடினார். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்த அவர், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தார். குழந்தை அழுது கொண்டிருந்ததாம், முதலில் சமாதம் செய்து பார்த்தாராம். அழுகை நிறுத்தாதலால், கோபமடைந்த அவர், இம்முடிவிற்கு வந்துள்ளார்[4]. ஆக, இது புதிதாக வந்த பிரச்சினையில்லை. மனத்தில், ஏதோ அந்த அளவிற்கு, அக்குழந்தை மீது வெறுப்பை வளர்த்திருக்கிறார். மேலும், முதல் குழந்தை பெண், இரண்டாவது ஆண் என்று இருக்கும் போது, ஆன் குழந்தையைக் கொல்லத்துணிந்துள்ளதால், கணவன்-மனைவி பிரச்சினையும் உள்ளது தெரிகிறது.

போலீஸுக்குத் தானே சென்று தான் கொலை செத்து விட்டதாகக் கூறியது; பிறகு, அங்கிருந்து பஸ் மூலம் ஆலப்புழா சென்று, அங்கிருந்து ஆட்டோவில் சென்ற அவர், தான் ஒரு குற்றம் செய்து விட்டதாகவும் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என, கேட்டதை தொடர்ந்து, ஆலப்புழா எஸ்.பி அலுவலக மகளிர் பிரிவு[5] போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர் தான் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். இது தனது குற்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு மனநிலை பாதிக்கப் பட்டுள்ளார் எனத்தெரிகிறது.

பிறகு விசாரணை செய்த போலீஸார்; அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்து வாஷிங் மெஷினைப் பார்த்தபோது குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடலை போலீஸார் மீட்டனர். அப்பெண்ணையும் கைது செய்தனர்[6]. வியாழக்க்கிழமையன்று மாஜீஸ்ட்ரேட்டின் முன்பு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி விசாரணை நடத்தப் படும்[7]. சுமாவின் கணவர் ஜான். அவர் வேலைக்காக சென்று இருந்தார். அதேபோல மூத்த மகள் தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சுமா இப்படி ஒரு விபரீதத்தை செய்துள்ளார்.சுமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வாஷிங் மிஷினில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், அவள் எப்பொழுதும் வீட்டில் கதவுகளை சாத்திக் கொண்டு தனியாக இருப்பாள் என்றும், இதையடுத்து ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிந்தது[8].

மூன்று வருடங்கள் கழித்து, சென்னையில் ஒரு பெண், சந்தாகத்தின் பேரில் தன்னுடைய குழந்தையைக் கொன்று, வாஷின்மெஷினில் மறைத்து வைத்தது காலத்தின் கோலமதான்!


[1] வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண், செப்டம்பர் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=91525

[2] http://www.emirates247.com/news/world/infant-drowns-in-washing-machine-in-kerala-2010-09-23-1.294375

[3] http://www.indianexpress.com/news/Briefly-Nation/686792

[4] http://www.dailythanthi.com/article.asp?NewsID=596180&disdate=9/24/2010

[5] http://www.dinakaran.com/crimedetail.aspx?id=16162&id1=11

[6] http://thatstamil.oneindia.in/news/2010/09/23/kerala-child-murder-woman.html

[7] http://news.oneindia.in/2010/09/23/metally-ill-mum-drowns-baby-in-washing-machine.html

[8] http://www.ndtv.com/article/cities/mother-drowns-baby-in-washing-machine-in-kerala-54174