Archive for the ‘இழப்பீடு’ Category

சோதனைக் குழாய்க் குழந்தை முதல் “வாடகைத் தாய்” வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு (1)

திசெம்பர்17, 2022

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு (1)

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: செயற்கை முறையில் கருதரித்தல் முறை அறிமுகமானதிலிருந்து, சில தம்பதியர் அதனை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். குழந்தை இல்லாதோர், முதலில் தயக்கத்தைக் காட்டி வந்தாலும், பிறகு, அதனை பயன்படுத்தி வந்தனர். அந்நிலையில், “வாடகைத் தாய்” பொன்ற முறையும் ஆரம்பிக்கப் பட்டது. இதில் அயல்நாட்டு தம்பத்தியர் இருப்பதால், நிறைய பணம் கிடைக்கும் என்ற நிலையில், சில பெண்களதற்கு உட்பட்டு, “வாடகைத் தாயாக” மாறினர். இவ்வாறு, எந்த நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்கிற கவர்ச்சி வாசகங்களோடு, கருத்தரித்தல் மையங்களின் விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன[1]. குழந்தையின்மை பிரச்னை இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஓர் உளவியல் பிரச்னையாக மாறியிருக்கும் நிலையில், சில தனியார் கருத்தரித்தல் மையங்களின் வியாபார நோக்கத்தால், கருமுட்டைக்கான சந்தை பூதாகரமாகியிருக்கிறது[2]. அதையொட்டி, சட்டவிரோதச் செயல்களும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. 

செயற்கை முறையில் கருதரித்தல் முறைகள்: செயற்கை கருவூட்டல் (Artificial insemination) என்பது உடலுறவு தவிர வேறு வழிகளில் vivo  கருத்தரித்தல் மூலம் கர்ப்பத்தை அடைவதற்காக ஒரு பெண்ணின் கருப்பை வாய் அல்லது கருப்பை குழிக்குள் விந்தணுவை வேண்டுமென்றே அறிமுகப்படுத்துவதாகும். இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) / சோதனைக் குழாய்க் குழந்தை, என்பது கருத்தரித்தல் செயல்முறையாகும், அங்கு ஒரு முட்டையானது விட்ரோவில் உள்ள விந்துடன் (“கண்ணாடியில்”) இணைக்கப்படுகிறது. ஒரு நபரின் அண்டவிடுப்பின் செயல்முறையை கண்காணித்தல் மற்றும் தூண்டுதல், அவர்களின் கருப்பையில் இருந்து கருமுட்டை அல்லது கருமுட்டை (முட்டை அல்லது முட்டை) அகற்றுதல் மற்றும் ஆய்வகத்தில் ஒரு கலாச்சார ஊடகத்தில் விந்தணுக்களை கருவுற அனுமதிப்பது ஆகியவை இந்த செயல்முறையை உள்ளடக்கியது. கருவுற்ற முட்டை (ஜைகோட்) 2-6 நாட்களுக்கு கரு வளர்ப்பிற்கு உட்பட்ட பிறகு, அது வெற்றிகரமான கர்ப்பத்தை நிறுவும் நோக்கத்துடன் கருப்பையில் வடிகுழாய் மூலம் மாற்றப்படுகிறது.

பெண்களிடமிருந்து கருமுட்டைகள் உருவாக்கி எடுத்து விற்றல்: இத்தகைய செயற்கை முறையில் கருதரித்தல் முறைகளுக்கு, கருமுட்டைகள் தேவைப் படுவதால், அவற்றை தானமாகக் கொடுக்கும் செயல்பாடு, விற்கும் முறையாகி, வியாபாரமாகி விட்டது. பெண்களுக்கு 10 நாட்களுக்கு உயர்திறன் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு முட்டை உற்பத்தி செயற்கையாக அதிகரிக்கப்படும். பிறகு மூன்று நாட்கள்கழித்து, மயக்க மருந்து தரப்பட்டு, உடலுக்குள் ஊசி செலுத்தப்பட்டு அந்த ஊசி மூலமாகவே அந்த முட்டைகள் வெளியே எடுக்கப்படும். ஒரு பெண் எத்தனை முட்டைகள் உருவாக்க முடியும் என்பது பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. கூடுதல் கருமுட்டைகள் எடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் பின்விளைவுகளை உருவாக்கும். அந்தப் பெண்களுக்கு தலைவலி, உடல் பருமன், அசதி முதல், கைகால் செயல் இழத்தல், சிறுநீரகக் கோளாறு, மரணம் என பலவிதமான பாதிப்புகள் ஏற்படும்.

குழந்தையின்மை, கருமுட்டை தானம்: விதிமுறைகளை பின்பற்றாமல் கருமுட்டை தானம் பெறும் கருத்தரிப்பு மையங்கள், அப்பாவி  பெண்களின் உயிருக்கு உலைவைக்கும் நிலையை உருவாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2.75 கோடி பேர் குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நகர்ப்புறங்களில் 6 தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்னை உள்ளது. இந்தியாவில் திருமணமானவர்களில் 46 சதவீதம் பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. 31-40வயதுக்கு உட்பட்ட 63 சதவீதம் தம்பதிகளுக்கும், 21-30வயதுக்கு உட்பட்ட 34 சதவீதம் தம்பதிகளுக்கும் இந்த பிரச்னை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நம்நாட்டில் பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியா, குழந்தையின்மை பிரச்னை: மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியா, குழந்தையின்மை பிரச்னையில் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, ஹார்மோன் குறைபாடுகளால் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றெடுக்க முடியாத பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் அவர்களுக்கு கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை கருவாக மாறாத நிலையில் வெளியேறுகின்றன. இதனால் உயிரோட்டமுள்ள கருமுட்டைகளை பிற பெண்களிடம் தானமாக பெற்று கணவரின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருவை உருவாக்குகின்றனர். இதனை மனைவியின் கர்ப்பப்பையில் வைத்து சிசுவை வளர்க்கின்றனர்.

கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது: இந்தவகையில் நவீன மருத்துவத்தின் உச்சமாக விளங்கும் கருமுட்டை தானம் என்பது குழந்தையில்லாத பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பெரும்பாலும் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை விட, ஏதோ ஒருவகையில் தன்னுடைய ரத்தம் என்று சொல்லிக் கொள்வதையே பெற்றோர் விரும்புகிறார்கள். இதற்கு அடித்தளமாய் இருப்பது தான் கருமுட்டை தானம். குடும்பத்தில் ஒருவரோ, நெருங்கிய தோழியோ தனக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தால் அவர்களிடம் கருமுட்டை தானம் கேட்டு குழந்தை பெற்றுக்கொள்வதை பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாக கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள், புரோக்கர்கள், வியாபாரம்: இந்த கருமுட்டை தானத்திற்கு சொந்தங்களும், தோழிகளும் உதவ முன்வராத நிலையில் நேரடியாக செயற்கை கருத்தரிப்பு மையங்களை அணுகுகின்றனர். அவர்களும் இதற்கான புரோக்கர்களை வைத்து காரியம் சாதித்து வருகின்றனர். இந்த புரோக்கர்கள் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் குடும்பங்களை குறி வைத்து பணத்தாசை காட்டி பெண்களுக்கு  வலை விரிக்கின்றனர். முதலில் தானம் கொடுக்கும் பெண்களை கடவுளை போல் இவர்கள் அணுகுகின்றனர். அவர்கள் ஒப்புக் கொண்டவுடன் தானம் பெற்றுவிட்டு கருவேப்பிலையை போல் வீசிச் செல்கின்றனர் என்பதும் கொடுமை. அதேபோல் அபாயம் உணராமல் பல பெண்கள் புரோக்கர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். கருமுட்டை ஒரு பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இருக்கும். அதனை மைனஸ் 194 சென்டி கிரேடுக்கு மாற்றி லிக்விட் நைட்ரஜனில் உறைய வைக்கின்றனர். இதனை க்ரையோலாஜிக் என்று அழைக்கின்றனர். இதனை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பாதுகாக்கலாம். இந்தவகையில் பல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தானம் கொடுக்க வரும் பெண்களிடம் இருந்து எடுக்கப்படும் அளவுக்கதிகமான கருமுட்டைகளை சேமித்து வைத்து, கொள்ளை லாபம் பார்த்து வருவதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

2021ல் அறிமுகப் படுத்தப் பட்ட மத்திய அரசு சட்டமும், உடனடியாக நடைமுறைக்கு எடுத்து வராத தமிழக மாநிலாரசும்: நாட்டில் செயற்கை கருத்தரித்தலை முறைப்படுத்தும் வகையில், இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்தது[3].  இதில் உள்ள சட்டப்பிரிவுகளை எதிர்த்து காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த, கருமுட்டைகளை தானமாக பெற விரும்பும் 143 பெண்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[4]. ஆனால், தமிழ்நாடு உள்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக சிறுமியின் தாய் உள்பட நான்கு போ் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

© வேதபிரகாஷ்

17-12-2022


[1] விகடன், அச்சுறுத்தும் கருமுட்டைச் சந்தை! – அலட்சியம் காட்டும் அரசு!, துரைராஜ் குணசேகரன், Published:10 Aug 2022 5 AMUpdated:10 Aug 2022 5 AM

[2] https://www.vikatan.com/news/general-news/special-story-about-ovum-market

[3] இ.டிவி.பாரத், ஒரு பெண் வாழ்நாளில் எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யலாம்? உயர்நீதிமன்றம் கேள்வி, டிசம்பர் 17, 4:35 am.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/oocyte-donors-file-restrain-petition-of-central-new-enactment-of-donation/tamil-nadu20221216193951262262039

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்-பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன?

ஜூன்11, 2016

பாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றனஆண்பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன?

முருகன் கொலை ஜூன் 2016

பாலியல் தொடர்புடைய குற்றங்கள், கொலைகள் அதிகமாகி வருவது: தமிழகத்தில் 1960களிலிருந்து 2016 வரை நடந்துள்ள குற்றங்களை அலசிப்பார்த்தால், பாலியில் ரீதியிலானவை அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். கண்ணகி சிலைக்குப் போராடியவர்கள், கற்புக்குப் போராடமல் இருப்பது திராவிடத்துவத்தின் சிறப்பே எனலாம். முக்கியமான விசயங்களை தார்மீக கண்ணோட்டத்தில் நெருங்காமல் இருப்பதாலேயே, பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கண்ணகி பிறந்த மண்ணில், கற்பைப்பற்றி கேவலமாக பேசுவதும், பெண்களும் அவ்வாறே தாம்பத்திய உறவுகளைக் கடந்து மற்றவர்களுடன் உறவுகள் கொண்டுள்ளதும், விபச்சாரம் பெருகுவதும், தகாத உடலுறுவுகள்-கொக்கோக காதல்கள் உண்டாகுவதும் அத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்குகின்றன. ஆனால், உண்மையை மறைத்து, கூலிப்படை கொலைகள் அதிகரிக்கின்றன, சட்டம் ஒழுங்குமுறை சீரழிந்துள்ளது, என்றெல்லாம் வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Marriage, divorce, childrenகுற்றங்கள் பெண்கள், மற்றும் பாலியல் சமந்தப்பட்டாதாக இருப்பதை கவனிக்க வேண்டும்: சில நாட்களில் நடந்துள்ளவற்றைப் பார்த்தாலே, அது புரியும்.

  1. வேன் டிரைவர் ராஜேஷ்தனது கள்ளக்காதலி கவுரியின் மகள்களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இது குறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[1].
    1. பெண், ஆணை விட்டு விலகியது – திருமண முறிவு.
    2. ஆண், பெண்ணை மதிக்காதது – பெண்மை காமத்திற்கு என்ற நோக்கில் அணுகியது.
    3. மகள் ஸ்தானத்தில் இருந்த பெண்களை காமத்துடன் அணுகியது.
    4. குற்றத்தில் முடிந்தது.
  1. குளித்தபோது ஆபாச படம் எடுத்த வாலிபரை காரில் கடத்தி, கணவருடன் சேர்ந்து பழி வாங்கிய சென்னை பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான நந்தினியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்[2].
    1. இளைஞன் வக்கிரமாக உருவானது.
    2. பெண்மையினை மதிக்காமல், ஆபாசமாக்கியது.
    3. பெண்மை பெண்மையினை இழந்தது.
    4. குற்றத்தில் முடிந்தது.
  2. கணவன் முருகனை (சென்னை வழக்கறிஞர்), மனைவி லோகேஷினி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்களை வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்ய வைத்தாள்[3].
    1. தாமத்திய பந்ததத்தின் புனிதத்தை பெண்ணே கெடுத்தது.
    2. கணவனைத் தாண்டி மற்றொருவருடன் உறவு கொண்டது.
    3. தட்டிக் கேட்டதால், கொன்றுவிட தீர்மானித்தது.
    4. பெற்றுக் கொண்ட குழந்தைகளின் நிலமையினையும் மறந்தது.
    5. ஆட்களை வைத்துக் கொன்றது.

இப்படி தினம்-தினம் நடக்கும் குற்றங்கள், கொலைகள் முதலியன பாலியல் சம்பந்தமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது. இவை உதாரணங்கள் தாம், மற்றவை விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதுவும் பெண்களின் உரிமையா - சுபஶ்ரீ - ஜூன் 2016நான்கு வருடங்களில் இரண்டு கணவர்கள், சொத்துக்கு ஆசைப்பட்டது (ஜூன்.2016): 2007ல் திருமணம் நடந்த, சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்துள்ளார்[4]. இந்நிலையில் சரணவன், சென்னை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்றத்தில், தன் மனைவி சுபஸ்ரீ மீது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விவாக ரத்து செய்து விட்டதால் 2011ல் தன்னை திருமணம் செய்து கொண்ட நடிகை சுபஸ்ரீ தன்னையும் ஏமாற்றிவிட்டதாக அவரது, 2வது கணவர் சீனிவாசனும், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இரண்டு பிரச்சினையிலும், சுபஶ்ரீ சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டார் என்று தெரிகிறது. முதல் கணவர் தொடுத்த வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகை சுபஸ்ரீ எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். 2வது கணவரும் நடிகை சுபஸ்ரீ மீது மோசடி வழக்கு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].

  1. ஆண்கள் செக்ஸுக்கு ஆசைப்படுவது.
  2. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் கொள்கைகளை பறக்கவிடுவது.
  3. பெண்கள் சொத்துக்கு, ஜாலியான வாழ்க்கைக்கு சோரம் போவது.
  4. விவாக ரத்து என்பதனை சட்டரீதியில் பயன்படுத்தி, அதனையே, உறவுகளை சீரழிக்க உபயோகப்படுத்திக் கொள்வது.

ப்ரியதர்ஷன், லிசி ஜூன் 2016பிரியதர்ஷன்லிசி திருமணம், விவாக ரத்து (மே.2016): பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற  மகனும் உள்ளனர். ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மார்ச் 2016ல்  விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்[6]. கணவன் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண்ணைக் குறித்து தேவையில்லாமல் எழுதுவதான் பத்திரிகை தர்மமா? இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள உங்களிடம்  எனக்கு கூற வேண்டிய விஷயம் ஒன்றுதான் உள்ளது. நான் பிரியதர்ஷனுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கில், மூன்று மாதத்தில் தீர்ப்பு  வந்துவிடும். தயவு செய்து என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள். இவ்வாறு லிசி கூறியுள்ளார்[7].

  1. சினிமா உலகத்தில் இயக்குனர் நடிகைகளை பலவித காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.
  2. இன்றைய நிலையில், அது ஒரு வியாபார நிர்பந்தம், ஒப்பந்தம் என்ற நிலையில் இருக்கின்றது.
  3. ஒப்பந்தங்கள், விருப்பங்கள் முடிந்தால், கழண்டு கொள்வது-கழட்டி விடுவது சகஜம் தான்.
  4. விவாக ரத்து சட்டப்படி வேலையை செய்யும்.
  5. பிறந்த குழந்தைகள் பாதிக்கப்படும்.
  6. ஆனால், பணம் இருப்பதால், சமாளித்துக் கொள்ளலாம்.

Prema, Jivan Apachu, ஜூன் 2016ஜீவன் அப்பாச்சுபிரேமாதிருமணம், விவாக ரத்து (மார்ச்.2016): 2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா[8]. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார்[9]. விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரேமா.

  1. திருமணம் பெற்றோர் நிச்சயித்தாலும், கருத்து வேறுபாடு ஏற்படுவது.
  2. பணம் அதிகமாக இருப்பதால், “ஈகோ” பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.
  3. “நடிகை” என்ற நிலை சாஃப்ட்வேர் என்ஜினியரை உருத்திக் கொண்டிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

11-06-2016

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1540231

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/10121140/1017841/youth-murder-case-one-man-arrested-in-Chennai.vpf

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1537246

[4] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணம் செய்து மோசடி: டிவி நடிகை மீது 2 கணவர்கள் மனுஎழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த நடிகை, By: Mayura Akilan, Updated: Wednesday, June 8, 2016, 12:04 [IST]

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/television-actress-surrenders-court-255480.html

[6] தினகரன், இயக்குனர் பிரியதர்ஷனும் மீண்டும் சேர்ந்து வாழ்வது நடக்காது, Date: 2016-05-25@ 00:39:08.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=219433

[8] தினமணி, விவாகரத்து கோரி பிரபல கன்னட நடிகை பிரேமா மனு!, By DN, First Published : 04 March 2016 02:52 PM IST

[9]http://www.dinamani.com/cinema/2016/03/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-/article3310245.ece

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

ஜூன்27, 2015

சிறார் கற்பழிப்புகள், பிடோபைல்கள், சுற்றுலா செக்ஸ் முதலியனவும்: சட்டங்களின் முன்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களின் நிலையும்!

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனங்கள்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனங்கள்

கற்பழித்தவனை திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா?: கற்பழித்தவனோடு சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை ஐகோர்ட்டால் சமரசத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட கடலூர் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர், என்று தினகரன் செய்தி வெளியிட்டது[1].  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொடிக்களம் கிராமம் சட்ட நிபுணர்கள் மற்றும் மகளீர் அமைப்புகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த ஊர். இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதனால் எதிர்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[2].  ஊடகங்களுக்கோ, விவஸ்தையே இல்லாமல், எல்லாவாற்றையும் போட்டுக் கொண்டிருக்கிறது. “தி ஹிந்து”வில் “சேட்” என்று பட்டிமன்றம் நடத்தியுள்ளது[3].

Rape Indian law position

Rape Indian law position

தமிழகத்தில் சிறார் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. உலகத்திலேயே பிரசித்திப் பெற்ற பிடோபைல்கள் தமிழகத்தை, குறிப்பாக சென்னையை புகலிடமாகக் கொண்டிருந்தனர். சென்னையில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்தில், பீடோபைல் / பிடோபைல் என்கின்ற குழந்தைக் கற்பழிப்பாளர்கள் பிடிபட்டுள்ளனர்[4]. வில் ஹியூம் என்பவன், சென்னையில் 30 வருடங்களாகத் தங்கியிருந்தவன் 2011லந்தான் பிடிபட்டான்[5]. பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் தப்பி மறைந்து விட்டானாம்.  08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டான்[6]. அப்பொழுது இந்த சட்டமேதைகள் எல்லாம் எங்கேயிருந்தனர் என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுதோ, அவரவர் கருத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

தி ஹிந்து படம் - நீதிபதி விமர்சனம்

தி ஹிந்து படம் – நீதிபதி விமர்சனம்

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் கருத்து: “அனைத்திந்திய முற்போக்குப் பேரவை” என்று திடீரென்று எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து அப்பேரவையின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்[7], “கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதல் இச்சிறுமி கருத்தரித்து குழந்தையையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் சமரச மையத்தில் தீர்வுகாணலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இது வருத்தமளிக்கிறது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் மற்றும் அவரின் எதிர்காலத்தையும், அவர்களது சமூக பொருளாதார பாதுக்காப்பைக் கருத்தில் கொண்டும் பாலியில் குற்றவாளியையே திருமணம் செய்துகொள்ளும் வகையிலான இத்தகைய சமரச முயற்சிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமைகளுக்கு எதிரானது. திருமணம் என்றால் என்ன என்ற புரிந்துகொள்ளாத செயலாகும். பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மோசமான கண்ணோட்டமாகும். இது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் மற்றுமொரு தண்டைனயாகும். அப்பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனுபவித்த கொடுமைகளுக்கு, அவமானங்களுக்கு இது நியாயம் வழங்குவதாக இருக்காது.

Wilhelums Weijdeveld - etherlands

Wilhelums Weijdeveld – etherlands

ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா?:  “வன்புணர்சியில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கிடவேண்டும். அதற்குப் பதிலாக வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து வைக்க முயல்வது பல்வேறு மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். குற்றவாளிக்கு தண்டனை என்பதற்குப் பதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே பரிசளிப்பது போல் உள்ளது.   பாலியல் குற்றவாளி ஏற்கனவே மணமானவர் என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவருக்கு இரண்டாம் தாரமாக மணம் செய்து வைக்க சொல்வார்களா? ஒரு பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவில் ஈட்பட்ட அனைவருக்கும் மனைவியாக்க முடியுமா? ஒரே நபர் பல பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தால் பாதிக்கப் பட்ட அந்த பெண்கள் அனைவரையும் பாலியல் குற்றவாளிக்கு மனைவிமார்களாக்க முடியுமா? இதற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்லப்போகிறது? இது  நமது நீதித்துறையின் ஆணாதிக்க மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது”. பிறகு தொடர்கிறார்.

M.L.Bright-Brite

M.L.Bright-Brite

தவறான முன்னுதாரணமாகி விடும்: “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைக்கும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குற்றவாளியே முழுமையான இழப்பீடு வழங்கவேண்டும். அந்த குழந்தையை வளர்ப்பதற்கான அனைத்து பொருளாதார செலவுகளையும் அக்குற்றவாளியே ஏற்கவேண்டும். அதைவிடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார பாதுகாப்பை காரணம் காட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவனையே மணக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சி பெண்களை இழிவுபடுத்துவதாகும்.      ஒரு பெண்ணின் தனிமனித உரிமையை மதிக்காமல், அவளது உடலின் மேல் அத்துமீறி செயல்பட்ட ஒரு மிருகத்தை, அப்பெண்ணுக்குவாழ்வளித்தல்என்ற பெயரில் மணம் முடித்துவைப்பது  கொடுமையானது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்தான் வாழ்வளிக்க முடியும் என்பதே ஒரு ஆணாதிக்க வெளிப்பாடு தான்பெண்கள் சமூகபொருளாதார ரீதியாக ஆண்களையே சார்ந்திருக்க வேண்டும், சுயேச்சையாக வாழமுடியாது என்ற தவறான பிற்போக்கு சிந்தனையையே நீதித்துறையும் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.      பாலியல் வல்லுறவு கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கும், பாலியல் வல்லுறவு மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்தியமாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.    எனவே, சென்னை உயர்நீதி மன்றம் தனது சமரச உத்தரவு  முயற்சியை திரும்பப் பெறவேண்டும். பாலியல் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும்  என அனைத்திந்திய முற்போக்குப் பேரவை  கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு கூறியுள்ளார்[8].

St george boarding schoolவி.மோகன் மைனர் பெண்ணை 2009ல் கற்பழித்தது, கைது செய்யப்பட்டது, சிறைதண்டனை பெற்றது: கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை சேர்ந்தவர் வி. மோகன். பெற்றோரை இழந்த 17 வயது மைனர் பெண்ணை கற்பழித்ததாக விருதாச்சலம் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 2009-ம் ஆண்டு மோகன் கைது செய்யப்பட்டார். அப்போது, கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், மோகனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

கற்பழித்தவனின் மேல்-முறையீடு: இதையடுத்து, இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்என்றும், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மோகன் மனு தாக்கல் செய்தார். தம்மால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்[9]. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், இதேபோன்ற இன்னொரு வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய வாலிபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுபோல் இந்த வழக்கிலும் ஒரு முயற்சி எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். மனுதாரரை சிறைக்கு அனுப்பி எந்த பலனும் யாருக்கும் ஏற்பட போவது இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் அனாதையாக உள்ளார். எனவே, மனுதாரர் பெண்ணை திருமணம் செய்ய தயாராக உள்ளாரா? என்று சமரசமாக பேசி அதன் முடிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன் என உத்தரவிட்டார்[10].

பாதிக்கப்பட்ட பெண் சொல்லும், வைக்கும் வாதங்கள்: இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசி மூலம் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது இந்த உத்தரவு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாக என்னிடமே மூன்று முறை கூறியுள்ளார். அப்படிப்பட்டவரை என்னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று மறுப்பு தெரிவித்தார். என் விருப்பத்தோடத்தான் உறவு கொண்டதாக நீதிமன்றத்துல அவர் கூறியுள்ளது சுத்தப் பொய். தற்போது, “ஒழுங்கா என்னை திருமணம் செய்து கொண்டு பண்ணிக்கிட்டு கேஸ்ல இருந்து வெளியில கொண்டு வந்துவிடு.. நான் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்.. நீ வேற வழியை பார்த்துக் கொள்”, என மிரட்டுகிறார் மோகன். அப்படி செய்யவில்லை எனில் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்[11]. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் அதிர வைக்கும் புகார்களை அடுக்கி வருகிறார்[12]. தன்னுடைய சொத்துகளை உங்கள் பெயரிலோ, உங்கள் குழந்தை (தற்போது ஆறு வயது) பெயரிலோ எழுதித்தர மோகன் முன்வந்தால் சமரசத்துக்கு ஒப்புக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்தப் பெண், ‘அதற்கெல்லாம் வழியே இல்லை. இதெல்லாம் வெறும் வாய்வித்தை. என்னை ஏமாற்றியதுபோல் கோர்ட்டையும் மற்ற அனைவரையும் ஏமாற்ற அவர் எந்த நிலைக்கும் போவார்’ என்று திட்டவட்டமாக கூறினார்[13].

இந்திய சட்டங்கள் சொல்வதென்ன?: குற்றவியல் சட்டம் (திருத்தப்பட்டது) 2013ன்படி, எல்லாவிதமான பாலியல் செயலும் குற்றம் என்று தான் என்றுள்ளது. குற்றம் புரிந்தவனுக்கு 20 வருடம் சிறை மற்றும் தண்டத்தொகையுடன் கடுங்காவல் என்றும் உள்ளது, இது ஆயுள் வரை நீட்டிக்கலாம். பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைக் காக்கும் சட்டம், 2012ன் (POCSO Act) பிரிவுகளின் கீழும் தண்டனை கொடுக்கலாம்[14].  இருப்பினும், இதற்கு முன்னர் நடந்த குற்றங்கள், உரிய சட்டப் பிரிவுகளில் விசாரிக்க்கப்பட்டு, தண்டனை அளிக்கப்படும். இத்தகைய வழக்குகளில், பாதிக்கப் பட்ட பெண்ணின் மீது, குற்றம் புரிந்தவன் அழுத்தம் கொண்டு வந்து, சமரசம் செய்து கொள்ள செய்யக் கூடும், அந்நிலயில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது[15]. பிடோபைல் குற்றங்களில் மிகவும் பாரபட்சமாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் நடந்து கொண்டுள்ளன[16]. அதைப் பற்றி ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றன.

வேதபிரகாஷ்

© 26-06-2015

[1] தினகரன், பாலியல் பலதகாரம் செய்தவரை தூக்கில் போடுங்கள்: சமரச உத்தரவை ஏற்க மறுத்த பெண் உயர்நீதிமன்றத்துக்கு  கோரிக்கை, 19.06.15: வெள்ளிக்கிழமை, 2015-06-26.

[2] http://indianexpress.com/article/india/india-others/madras-high-court-judge-gives-bail-to-rape-accused-to-mediate-with-victim/

[3] Ramya Kannan, City Editor, The Hindu, Sudha Ramalingam, Human rights and gender-issues lawyer, and Vasundhara Sirnate, Chief Coordinator of Research at The Hindu Centre for Politics and Public Policy. Dennis S. Jesudasan என்று பெரிய பட்டாளமே கலந்து கொண்டுள்ளது. http://www.thehindu.com/news/national/live-chat-on-madras-high-courts-directive-rapistvictim-mediation/article7353924.ece

[4] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

[5] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/

[6] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[7]  நக்கீரன், பாலியல் வன்புணர்ச்சி குற்ற வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்புவது சரியல்ல: .மு.பே, வெள்ளிக்கிழமை, 26, ஜூன் 2015 (22:51 IST)

[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=145779

[9]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=152739

[10] மாலைமலர், கற்பழித்தவனோடு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: ஐகோர்ட்டால் சமரசம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்ட பெண் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 8:41 PM IST

[11]  தமிள்.ஒன்.இந்தியா, பலாத்கார குற்றவாளியுடனேயே சமரசம்: ஹைகோர்ட் உத்தரவால் மிரட்டப்படும் அபலைப் பெண்!,

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/new-controversy-on-hc-order-giving-bail-rape-convict-row-229714.html

[13] http://www.maalaimalar.com/2015/06/26204137/cuddalore-molestation-victim-s.html

[14] http://timesofindia.indiatimes.com/city/chennai/Mediation-after-rape-No-your-honour-say-jurists/articleshow/47808975.cms

[15]  Supreme Court of India – Shimbhu & Anr vs State Of Haryana on 27 August, 2013; Author: P.Sathasivam; Bench: P Sathasivam, Ranjana Prakash Desai, Ranjan Gogoi http://indiankanoon.org/doc/137841605/

[16] https://atrocitiesonindians.wordpress.com/2013/11/17/protection-of-children-from-sexual-offences-act-2012/