Archive for the ‘தாய்’ Category

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

வாடகைத் தாய்தாய் அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.

வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

வாடகைத் தாயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].

ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:

  1. குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
  2. முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
  3. வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
  4. மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
  5. ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல்  முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
  6. மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
  7. குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
  8. எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] விகாஷ் பிடியா, வாடகைத் தாய், ஆதாரம் : டாக்டர். மனோகரன்.

[2] https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bbeb9fb95bc8ba4bcd-ba4bbebafbcd

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

தாய்மை நீர்த்து, ஆபாசமான நிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.

கவர்ச்சி அரசியல், வாடகைத் தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (22-04-2022) சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.

பாலியல் குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குழந்தை பெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].

தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]  தினமணி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அமைச்சா் கீதா ஜீவன், By DIN  |   Published On : 22nd April 2022 02:22 AM  |   Last Updated : 22nd April 2022 02:22 AM

[2]https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3831404.html

[3] நியூஸ்.18.தமிழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு, By WebDesk WebDesk Fri, 22 Apr 2022.

[4] https://newstm.in/amp/tamilnadu/Child-by-surrogate-mother-270-days-leave-for-female-employe/cid7217147.htm

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [3]

மே5, 2019

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [3]

Dark or Amul baby baby sale in Tamilnadu-those arrested-2

முட்டை வியாபார தொடர்பு குழந்தை விற்கும் வியாபாரமாக மாறியது: முட்டை விற்பனையில் உண்டான தொடர்பு, நாளடைவில் இத்தகைய பெரிய வியாபாரமாக மாறியது[1]. குழந்தை இல்லை என்று வரும் தம்பதியர் இலக்காயினர். லட்சங்களை செலவழித்து குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஆயிரங்களில் குழந்தையையே வாங்கி விடலாம் என்ற குறுக்கு வழியைக் காட்டுகின்றனர். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன[2]. குழந்தை தத்தெடுப்பவர் நேராக குழந்தையை பெறலாம் என்றிருந்தாலும், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள், விதவைகள் முதலியோரும் தத்தெடுக்கலாம் என்பதால், இடைத் தரகர்கள் மூலம், குழந்தைகள் விற்கப்படுகின்றன[3]. அரசு அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளதால், காசு கிடைத்தால், அதையும் செய்ய தயாராக இருக்கின்றனர். அதனால் தான், 30 ஆண்டுகளாக, அமோகமாக, இவ்வியாபாரம் நடந்துள்ளது. இதற்கு இந்து சட்டம் உபயோகப் படுத்துவது நோக்கத் தக்கது. ஏனெனில், வாங்கியவர்களில் கிருத்துவர், முகமதியர் உள்ளனர். இதில் ஈடுபட்டுள்ளதிலும், முகமதிய பெண்கள் உள்ளனர்.

Rasipuram babies sale gag - Dinakaran

சமூகநல ஆர்வலர்கள் எடுத்துக் காட்டுவது (2010 முதல் 2015 வரை): முன்னர் இதே போன்ற குழந்தை விற்பனை விவகாரத்தில், கோமல் கன்டோரா என்ற சிறுவர் உரிமைகள் இயக்கத்தின் இயக்குனர், “இரண்டு முதல் நான்கு வயது வரையில் உள்ள குழந்தைகள் தாம் இவர்களின் குறியாக இருக்கின்றன. இதெல்லாம் குழந்தை கடத்தலா அல்லது இவ்வாறு குழந்தைகளைக் கடத்தி நிதி பெறுகிறார்களா என்று தெரியவில்லை. இத்தலைய மீறல்கள் இருக்கும் வரையில் அரசின் கண்காணிப்பு, சோதனைகள் முதலியவை இருக்க வேண்டும்”, என்று கருத்துத் தெரிவித்தார்[4]. அப்பொழுது, ஏற்கெனவே சிக்கிய ஒரு ஆள் மறுபடியும் அதே வேலையில் ஈடுபடுகிறான். இதே ரஸ்ஸல் ராஜ் ஜூலை.2015ல் மனைவி, மாமியார்களுடன் கைது செய்யப்படுகிறார், மாமனார் தப்பித்துக் கொண்டார் போலும். பிரபுதாஸ் விசயத்தில், ஏ. நாராயணன் கூறியுள்ளதாவது[5], “சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப் படும் இல்லங்களினின்று சிறுமிகளை காப்பாற்றிய பிறகு எல்லா விதிமுறைகளையும் போலீஸார் மீறுகின்றனர். குழந்தை கர்ப்பமாக இருந்தது இரண்டு மாதங்கள் வரையும் கண்டுகொள்ளாமல் விடுப்பது ஆச்சரியமாக உள்ளது. சிறுமிகள் மீட்டவுடன் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், போலீஸார் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைகின்றனர். இது சிறார் நீதி சட்டத்திற்கு [Juvenile Justice Act] புறம்பானது.” டி.ஜிபிக்கு கொடுத்துள்ள மனுவில் 9ல், 8 குழந்தைகள் அவ்வாறு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முதலில் குழந்தைநல கமிட்டியின் முன்பு உரிய விசாரணைக்குட்படுத்திய பிறகு, அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் போன்றவற்றை செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் Juvenile Justice Act, 2000 and Tamil Nadu Juvenile Justice Rules, 2001 சட்டங்களின் கீழ் செய்யவேண்டியவை[6]. இவையெல்லம் 2010-2015களில் நடந்தவை என்றால், 2019லும், அதேநிலை உள்ளதை கவனிக்கலாம்.

Baby sale - CBCID- handed over.2

உசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.

Baby sale, periyar blessing-1

யாரும், எந்த சித்தாந்தவாதியும் கவலைப் படாமல் இருப்பது, திகைப்படையச் செய்கிறது: ஈவேரா பிறந்த மண்ணில் குழந்தைகள் திருட்டு, வியாபாரம் எல்லாம் நடந்துள்ளதே எப்படி? எல்லாம் பெரியார் செயலா? என்று எந்த பகுத்தறிவுவாதியும் கண்டுகொள்ளவில்லை. ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி விசித்திரத்தின் முழு வடிவம் தான். இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா வேறொருவரா? என்றெல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஈரோட்டில், இந்த ரோட்டில், ஈவேரா மண்ணில், பெரியார் பூமியில் இப்படி நடக்கலாமா, அவரது கொம்பு என்னவாயிற்று,  ஓடிவிட்டதா? பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், திருச்ச்செங்கோடு, ராசிபுரம், சேலம் எல்லாம் அருகில் தானே உள்ளது. ஈவேராவுக்கு, அண்ணாவுக்கு எல்லாம் குழந்தை இல்லை என்பதால், பெரியார் ஆசியுடன், அம்மணி இச்சேவையில் இறங்கினார் போலும்!

Baby sale, periyar blessing-2

குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம்  தயாரித்ததாக வாக்குமூலத்தில் ஒப்புதலும் உள்ளது. வழக்கறிஞர், குழந்தை விற்பனைக்காக, அப்படியென்ன போலி ஆவணம் தயாரிக்க்க முடியும்? இப்படியெல்லாம் வியாபாரம் உள்ளதா? வேறு விவகாரங்கள், பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது தத்தெடுப்பு போர்வையில் அரசு அதிகாரிகள் பலநிலைகளில் ஒத்துழைத்து நடந்துள்ள  குழந்தை விற்பனை வியாபாரம். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன.இனி என்னாகும் என்று பார்ப்போம். சில நாட்களில் செய்திகள் அடங்கி விடும், மக்கள் மறந்து விடுவர், மற்றவர்களும் தங்களது வேலையை, தொழிலை ஆரம்பித்து விடுவரோ?

© வேதபிரகாஷ்

05-05-2019

Baby sale - CBCIS takes over

[1] Through the connection built through sale of the eggs, they were able to allegedly find childless couples for whom fertility treatments hadn’t worked and offered to sell them babies instead. Through contacts with health officials, they were able to know which babies had been born at which government hospital to what kind of families and thereby narrow in on vulnerable families that they would allegedly convince to give up their babies.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/05/namakkal-child-adoption-racket-baby-products-1972804.html

[2] Indian Express, Namakkal child adoption racket: Baby ‘products’, Published: 05th May 2019 04:49 AM | Last Updated: 05th May 2019 04:49

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/05/namakkal-child-adoption-racket-baby-products-1972804.html

[3] Vishwaraj alleges that the gang, in this case, exploited loopholes in the Hindu Adoption and Maintenance Act. “Through this, the two parties (donating and adopting parents) may meet directly and adopt children. Not only couples but bachelors, spinsters, widows also can adopt children. Although there are many norms to be followed, no one follows them. Middlemen and brokers have used loopholes here for illegal adoption. Registration of the child has to be made mandatory for adoption under this Act,” he said.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/05/namakkal-child-adoption-racket-baby-products-1972804.html

[4] “Children between the ages of 2 and 4 are most vulnerable,” said Komal Ganotra, Delhi-based director for policy, research and advocacy for CRY (Child Rights and You).”We don’t know whether there is an adoption racket, or they are trafficked to raise money from donations,” he said.  Activists say monitoring systems need to be strengthened even for government registered homes. “Inspections must be continuous as these children are under someone else’s custody and they are tutored to speak only certain things,” said Ganotra. “If they are abused, children will open up to people who continuously visit them. So it is important they have an external interface. We find lesser instances of abuse among children who stay in child care homes and go out to a public school.”

http://timesofindia.indiatimes.com/city/chennai/Child-rescued-from-unlicensed-home-in-Chennai-fourth-in-three-days/articleshow/47797478.cms

[5] Indian Express, Police Flout All Norms After Rescuing Children From Illegal Homes: Activist, By Express News Service, Published: 06th September 2015 04:08 AM; Last Updated: 06th September 2015 04:14 AM.

[6] http://www.newindianexpress.com/cities/chennai/Police-Flout-All-Norms-After-Rescuing-Children-From-Illegal-Homes-Activist/2015/09/06/article3013001.ece2

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

ஒக்ரோபர்20, 2018

திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! அபிராமி விவகாரம் [3]

Abhirami -narriage photo

காதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Abhirami -kids killed

அபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்?[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

Abhirami kiiling- selling story -6

வீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].

sundaram- spoiler of society

வேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா  இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து  கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.

Abhirami - sond and daughter

ஊடகக் காரர்களின் தற்கொலை புரளிபுரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9].  குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.

Abhirami kiiling- selling story -5

பிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:

  1. வீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,
  2. கஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,
  3. பெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,
  4. சமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,
  5. பேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.
  6. கள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.
  7. கண்டித்த கணவனை எதிர்க்கிறாள்.
  8. புருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.
  9. அதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.
  10. பிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்??

இதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.

© வேதபிரகாஷ்

20-10-2018

Abhirami kiiling- selling story -3

[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமிபரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10

[2] https://www.maalaimalar.com/News/District/2018/09/03121035/1188560/Abirami-Confessions-about-Children-murder-case.vpf

[3] Police suspect that Karunika (4) might have died on Thursday night itself, while Abirami mixed heavy dose of sleeping pills again in the milk on Friday night and gave it to her son Ajay (6) and waited for Vijay to return from work.As it was the month-end, Vijay who works in the loans section of a private bank in T Nagar had to stay back in office, thus narrowly escaped. The incident came to light when Vijay returned home on Saturday morning and found both his children dead with foaming mouth.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[4] Abirami befriended Sundaram as she often went to the restaurant he worked, with the family. It later developed as a relationship between them. Vijay, who came to know about it, warned Abirami to discontinue the affair two weeks ago. However, Abiramai allegedly abandoned the family and went to stay with Sundaram.

DTnext, Woman might have killed her daughter a day before, say cops, Published: Sep 03,201802:19 AM.

https://www.dtnext.in/News/City/2018/09/03021911/1086936/Woman-might-have-killed-her-daughter-a-day-before-.vpf

[5] Mirror Now, Woman poisons her two children, ditches banker husband to elope with worker at a biriyani shop, Updated Sep 07, 2018 | 00:42 IST.

[6] https://www.timesnownews.com/mirror-now/in-focus/article/fir-lodged-on-court-order-for-promoting-conversion-to-christianity-say-police/281240

[7] After committing the crime, Abirami left for Nagercoil, from where she and Sundaram planned to go to Kerala. But Sundaram was arrested by the police in Chennai. “After reaching Nagercoil, Abirami disposed of her SIM card,” said a police officer. She called Sundaram from a traffic policeman’s mobile phone unaware that he had been arrested. The Kundrathur police called the traffic policeman’s number to confirm that she was in Nagercoil.

The Hindu, Chennai woman arrested for murdering her children Abirami, SPECIAL CORRESPONDENT, CHENANI , SEPTEMBER 03, 2018 01:11 IST; UPDATED: SEPTEMBER 03, 2018 09:17 IST.

https://www.thehindu.com/news/cities/chennai/woman-arrested-for-murdering-her-children/article24850557.ece

 

[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலைபுழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.

[9] https://www.maalaimalar.com/News/District/2018/09/26120958/1193860/Kundrathur-Abirami-tears-in-puzhal-jail.vpf

உலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு?

மார்ச்8, 2018

உலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு?

Women in Vedic age

சரித்திர ரீதியில் வேதகாலம்என்று இருந்ததில்லை: “வேதகாலம்” என்று, இப்பொழுது குறிப்பிடுகின்ற, சரித்திர காலகட்டத்தில் இல்லை. ஐரோப்பியர் ஆராய்ச்சி செய்த போது, அவ்வாறான காலத்தைக் குறிப்பிட்டனர்.  வேதம் ஓதி, அவ்வழி பின்பற்றும் காலட்டத்தில், மற்ற நெறிகள் இல்லை என்பதில்லை. அதனை வேதங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஒரு காலகட்டத்தில், அவர்ர்கள் ப்பெரும்பான்மையினராக இருந்து, பிறகு சுருங்கி விட்டனர் என்பது, சரித்திரம் மூலம் தெரிகிறது. அதனால் தான், வேதங்கள் தோன்றியது எங்கு என்று ஆயும் போது, ஆர்க்டிக் பகுதி, மத்திய ஆசியா, மத்தியத் தரைக்கடல் பகுதி, என்றெல்லாம் கருதுகோள்கள் வைக்கப்பட்டன. C.1450 BCE காலத்து பகோஷ்காய் கல்வெட்டு, மெசமடோமியா பகுதி மக்கள் “இந்த்ரசீல், மித்ரசீல், வௌணசீல், நசாத்தியா” என்று வேதக் கடவுளர்களை நோக்கி விளித்தப் பிறகு, தமது மற்ற கடவுளகளையும் சாட்சியாக விளிப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆகவே, அவர்களின் தொகை குறைந்தபோது, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியனவரும், மற்றவரிடம் மாற ஆரம்பித்தன. மாறினவர்கள் தங்களது சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் தான் முரண்பாடுகள் ஏற்பட்டன.

Bogozkoi inscription

சரித்திரத்தில் “இந்தியா” என்று படிக்கும் போது, இப்பொழுதுள்ள 1947-இந்தியாவிற்குள் எல்லாவற்றையும் அடக்கும் விதமாக எழுதப் படுகிறது. ஆனால், குஷானர் போன்ற வம்சாவளியினர், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்டு வந்தனர். ஜைனர்கள் [திகம்பரர் மற்றும் ஸ்வேதம்பரர்] மத்தியத் தரைக் கடல் நாடுகளில் ஆண்டு வந்தனர். இவர்கள் எல்லோருமே வேத நெறியிலிருந்து மாறுபட்டவர் மற்றும் எதிர்ப்பவர்கள். ஆக, அவர்களையும் மற்றவர்களையும் ஒப்பீடு செய்ய முடியாது. அந்நிலையில், அக்காலத்தைய வேதநெறி மக்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். குறிப்பாக கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் வேதங்களைப் படித்து, வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால், அவர்களுக்கு தடை விதித்தனர். அப்பொழுதுதான், பாஷாண்டிகளான அவர்கள் வேதம் கற்கக் கூடாது போன்ற பிரிவுகள் சேர்க்கப் பட்டன.

Vedic women- illustrative purpose

ரிக்வேத சாகைகளை இயற்றியவர்கள் பெண்ரிஷிக்கள்: வேத காலத்தில் பெண்களின் நிலை ஆண்களுக்கு சமமாக இருந்தது என்பது, பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ரோமஸ, லோபமுத்ரா, அபல, கத்ரு, விஸ்வவர, கோஷ, வகம்பிர்னி, பௌலமி, யமி, இந்திரானி, சாவித்ரி, தேவஜமி – ரிக் வேத கால பெண் ரிஷிக்கள்! நோத, அக்ரஷ்தபாஷ, சிகதனிவவாரி, கௌபாயன முதலியோர் சாம வேத கால, பெண் ரிஷிக்கள்! இதில் இரண்டு காலகட்டங்கள் ரிக்-யஜுர் என்று அறியப் படுகின்றன. ரிக் வேத சுக்தங்கள் 10-134, 10-39,10-40, 10-91, 10-95,10-107,10-109,10 – 154,10-159,10-189, முதலிவவற்றை பாடியவர் பெண் ரிஷிக்கள் தாம்! இது இக்காலத்தைய பற்பல கட்டுக்கதைகளை உடைத்தெரிகிறது. இருப்பினும், இத்தகைய உண்மைகளை, இக்கால சித்தாந்திகள் மறைத்து வருகின்றனர்.

Vedic women- illustrative purpose-2

பெண் எந்தநிலையிலும் கல்வி கற்கலாம், பிரம்ம ஞானத்தையும் பெறலாம்: பிரம்ம ஞானத்தை கர்கி பிரமச்சாரியாக இருந்த போதும், சூடால கிரஸ்தியாக இருந்தபோதும் [திருமணனமான பின்னும்], பெற்றனர்! பிரம்ம ஞானத்தை மைத்ரேயி வனவாசத்தில் இருந்த போதும், சுலபயோகினி சந்நியாசியாக இருந்த போதும், பெற்றனர்! பெண் எந்த நிலையில் இருந்தாலும், வேதங்களைப் படிக்கலாம், பிரம்ம ஞானத்தைப் பெறலாம். எந்த தடையும் இல்லை என்பது தெரிகிறது! ஏனெனில், அவர்கள் வேதங்களில் உள்ள சில சாகைகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர். பிரம்மவதினி [கல்யாணத்திற்கு முன்பு] மற்றும் சதயோவது [கல்யாணத்திற்குப் பின்பு] என்ற நிலைகளில் பெண்கள் சிறந்து விளங்கினர்.  பிரம்மவதினி யக்ஞோபவீதம் அணிந்து பிரம்மச்சாரியாக இருந்து வேதங்களைக் கற்பது. சதயோவது கல்யாணம் ஆனப் பிறகு, யக்ஞோபவீதம் அணிந்து வேதங்களைக் கற்பது.

Vedic women- illustrative purpose-3

பெண் கல்வியின் முக்கியத்துவம்: பெண்கள் குடும்பதினை நிர்வகிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் தான், அவர்களின் கல்வி ஆண்களுக்கு சமமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு பெண் படித்தால், குடும்பமே படித்த நிலை அடைகிறது என்பதை அன்றே உணர்ந்திருந்தனறர்; எங்கு பெண்கள் போற்றி-ஆராதிக்கப் படுகிறார்களோ, அங்கு கடவுட்தன்மை கொண்டவர்கள் மகிழ்கிறார்கள்! எங்கு அவ்வாறில்லையோ, எந்த சடங்கு-கிரியை செய்தாலும் பலனற்று போய் விடுகிறது.

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः ।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः ॥ ५६ ॥
Where women are honoured, there the gods rejoice; where, on the other hand, they are not honoured, there all rites are fruitless.—(56)

ஆனால், கிரேக்கர், ஜைனர், பௌத்தர் போன்றோர் பெண்களை வேறு முறையில் நடத்திய போது, வேதநெறி விற்பன்னர்கள், விதிமுறைகளை மாற்றியமைத்தனர். கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தனர். காவர்கள் ஆதிக்கம் மத்தியத் தரைக்கடல் மற்றும் இன்றைய வடமேற்கு பகுதிகளில் அதிகமாக இருந்தபோது, தம் பெண்கள் அவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது, போன்றவை நடந்த போது, பெண்கள் வேதங்கள் கற்கக் கூடாது என்று வந்தது. ஏனெனில், அவர்கள் மூலம், எதிர்-பிரச்சாரக் காரர்களுக்கு, விசயங்கள் தெரியக் கூடாது என்ற விதத்தில், அத்தடை விதிக்கப் பட்டது. இக்காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார கம்பெனிகளில் ரகசியம் காப்பாற்றப் படும் யுக்திகள் போன்று, அவை செயல்பட வேண்டியதாயிற்று.

Jain women- illustrative purpose-3

சைத்திய-கோவில் முறைகளில் பெண்கள் எவ்வாறு மந்திரதந்திரயந்திர முறைகளினால் சீரழிஉக்கப் பட்டனர்?: மாஹா வீரர் மற்றும் புத்தர் மடங்களில் பெண்-துறவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சேத்தால், ஒழுக்கம் கெட்டு விடும் என்று எச்சரித்தார்கள். ஆனால், வற்புருத்தல் பேரில், அவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தர்-அனந்தன் உரையாடல் இதனை மெய்ப்பிக்கிறது. உருவ வழிபாடு இல்லை என்ற நிலையிலிருந்து, உருவ வழிபாடு அறிமுகப் படுத்தப் பட்ட நிலைகளில், வழிபடும் இடங்கள் உருவாக்கப் பட்டன. அவை நாளடைவில் கட்டிடங்களாக, குறிப்பிட்ட முறைகளில் சைத்தியங்கள், கோவில்கள் என்று மாறின. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தது, அவர்களது சிற்பங்கள், மந்திர-தந்திர-யந்திர நூல்களே எடுத்துக் காட்டின. ஆனால், வேதநெறி பெண்கள் அவற்றில் பங்கு கொள்வது தடுக்கப் பட்டது. கஜுராஹோ போன்ற இடங்களில் இந்து-ஜைன-பௌத்தம் என்ற மூன்று வகை கோவில்களும் இருக்கின்றன என்ற இடைக்கால குழப்பத்திலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.

Buddhist women- illustrative purpose-3

வேதகாலத்தில் கோவிலே இல்லை எனும்போது பூஜாரியும் இல்லை: வேதகால கடவுள் வழிபாட்டு முறையில் உருவம், விக்கிரகம் இல்லை எனும் போது, வழிபடும் இடம், கோவில் இல்லை என்றாகிறது. கோவில் இல்லை என்றால் பூஜாரியும் இல்லை. ஆனால், இக்காலத்தில், “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனால், இன்று பெண்கள் பூஜாரிகளாக முடிவதில்லை,” என்று வாதிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. இங்கு தான் வேதநெறி பின்பற்றப் படும் முறை மற்றும் இதர முறைகள் வருகின்றன. கிரேக்க நிர்வாணக் கொள்கையுடையவர், ஜைனர் மற்றும் தாந்திரிக பௌத்தர்கள், தங்களது முறைகளை உருவாக்கிக் கொண்டர், சேர்த்துக் கொண்டனர். ஆகம நெறிகள் வளர்ந்த போது, அவற்றிற்கேற்றபடி, சடங்கு, கிரியை, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டாயின. ஆகவே, “வேதகாலத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன” போன்ற வாதங்களை வைத்து, வாத-விவாதங்கள் செய்வது முட்டாள்தனமானது, சரித்திர ரீதியில் பொய்யானது. மேலும் அத்தகைய உரிமைகளுடன் போராடி, ஆர்பாட்டமாக வரும் பெண்கள் ஒன்றும் வேதகால பெண்கள் போல வேத விற்பன்னர்களாகவோ, தேர்ச்சி பெற்றவர்களாகவோ இல்லை. ஆகமங்கள் பெண்களைக் கட்டுப் படுத்துகின்றன, தடுக்கின்றன என்றால், ஆகமங்களில் அத்தகைய கட்டுப் பாடுகள் ஏன் இருக்கின்றன என்று ஆராய வேண்டும். வேதங்களை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

women monks - illustrative purpose-3

இக்காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?: இக்காலத்தில், எல்லோரும் வேதகாலத்து மக்கள் மாதிரி இருக்க முடியாது. வேத கொள்கைகளை பின்பற்றலாம். மற்றவர்களிடமும் அதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஒழுக்கம், நேர்மை, தருமம், நியாயம் முதலியவற்றின் மீது ஆதாரமாக, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருப்பதை பின்பற்றலாம். பல செயல்களுக்கு இயந்திரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உபயோகப் படுத்தப் படும் நிலையில், எத்தனையோ சடங்குகள், கிரியைகள், சம்ஸ்காரங்கள் … செய்யப் படாமல் போகின்றன அல்லது சுருக்கப் படுகின்றன. ஆ     கையால், தார்மீக அளவில் தான் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் நிலை வந்துள்ளது. ஆக, தனிமனித ஒழுக்கம் தான், அனைத்தையும் நிர்ணயிக்கும் நிலையுள்ளது. அந்நிலையில், பெண்களுக்கான பொறுப்புகள் அதிகமாகியுள்ளன.

© வேதபிரகாஷ்

08-03-2018

women day 08-03

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (3)

Indian films depicting rape-1

கற்பழிப்பு, ஒழுக்கம் குடும்பம், சினிமா முதலியன: இந்திய சினிமாக்களில் கற்பழிப்பு காட்சிகள் “தத்ரூபமாகவே”, 10-15 நிமிடங்களுக்கு தாராளாமாகக் காட்டியுள்ளனர். அத்தகைய வக்கிர காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியகாலம் [1960-1990] உண்டு, இப்பொழுதும், அத்தகைய நிலை தொடர்கிறது. மலையாள படங்கள் அதற்காக பிரபலமாக இருந்தது. மலையாளப் படம் என்ற பெயரில், நடுவில் ஆபாசப் படம் காட்டும் முறையும் இருந்தது. முன்பெல்லாம் “அடல்ஸ்-ஒன்லி” என்று போஸ்டர் பார்த்து ஜனங்கள் போகும், இப்பொழுதோ, அத்தொல்லையே இல்லை, ஒவ்வொரு குத்தாட்டமே, கற்பழிப்பை விட மோசமான காட்சிகளாக இருக்கின்றன. பாடல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், அந்த அளவுக்கு ஆபாசம், கொக்கோகம், நிர்வாணம் முதலியவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருக்கின்றன. முன்பெல்லாம், அத்தகைய கற்பழிப்புக் காட்சிகளில் “டூப்” போடுவதாகச் சொல்லப்படும். இப்பொழுதோ, அந்நடிகைகளே தாராளமாக நடித்துக் கொடுக்கின்றனர். கற்பழிப்புக் காட்சிகளில், உண்மையாகவே கற்பழித்த நிதர்சனங்களும் உண்டு. பிரபல நடிகைகளே அதில் உள்ளனர். இப்பொழுதும், ஒரு நடிகையைக் கற்பழிக்க, ஒரு நடிகனே கோடிகளில் பேரம் பேசி, ஆளை அனுப்பி, நிறைவேற்றியுள்ளான். ஆனால், அவனை குற்றத்திலிருந்து மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

Indian films depicting rape-2

கற்பழிப்பு, கொக்கோக விவரிப்பு முதலியவற்றை செய்யும் பொறுப்புள்ளவர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள்: அத்தகைய பாலியல் பாடல்களை எழுதியவர்கள் தாம், கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ, கவிஞர், புலவர் போர்வையில் உலா வருகின்றனர். அத்தகைய ஆபாசமான, அரை-முக்கால் நிர்வாணமான காட்சிகளில் நடித்தவர்கள் தாம் மாதிரிகளாக, தலைவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு பட்டம், பணம், பதவி எல்லாம் கொடுக்கப்படுகின்றன. மேலும் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பற்பல பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது நிகழ்ச்சிகள் முத்லியவற்றில் வரவழைக்கப் பட்டு, பெண்ணியம், பெண்ணுரிமைகள், குடும்பம், போன்றவற்றைப் பற்றி பேசவும் வைக்கின்றனர். இவற்றால் மாணவ-மாணவியர் எதை கற்றுக் கொள்வர்? மிக-மிக மோசமான காட்சிகள் என்று ஊடகங்களே பட்டியல் இட்டுக் காட்டுகின்றன[1]. அதாவது, அத்தகையக் காட்சிகளைப் பார்த்தால், பார்த்தவர்களும் அவ்வாறே செய்யத் தூண்டப்படுவர் என்ற ரீதியில் சித்தரிக்கிறது[2]. ஆனால், அவையே அதிலும் முதலீடு செய்கின்றன. அதாவது, ஊடகக்காரர்களே, படத்தொழொலும் ஈடுபட்டுள்ளனர்.

Indian films depicting rape-3-Raima Sen injured in Rape Scene

பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்மனைவி உறவுமுறைகளை போற்றாமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லதா?: பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் சித்தாந்திகள், எழுத்தாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பார்த்தால், 1% கூட இல்லை என்றே புலப்படுகிறது. மனைவி-துணைவி-வைப்பாட்டி-காமக்கிழத்தி-கீப் என்ற ரீதியில் வாழும் இவர்கள் எப்படி சமுதாயத்திற்கு மாதிரிகளாக, அறிவுரைக் கூறும் மனிதர்களாக இருக்க முடியும்? பெண்மையை, தாய்மையை, கற்பை, ஒழுக்கத்தை, குடும்ப மேன்மயை, கணவன்-மனைவி உறவுமுறைகளை போற்றும், பாதுகாக்கும், கடைபிடிக்கும் பண்புகளை, குண்ங்களை, சிறப்புகளை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதிக்கப் படுகின்றனவா? அதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் உரிமைகள் என்று போதிக்கும் போது, கற்புன் மேன்மையினைப் பற்றி சொல்லிக் கொடுக்காமல், வேண்டும் என்றால் சேர்ந்து வாழலாம்-பிரிந்து போகலாம், பெண்கள் குழந்தைகளை உருவாக்கும் எந்திரங்கள் இல்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாமலே, வாழலாம், வாழ்க்கை நடத்தலாம், குடும்பமும் நடத்தலாம் பொன்றேல்லாம் போதிக்கப்படுகின்றன. பிரச்சார,ம் செய்யப் படுகின்றன. பிரபல நடிகர்களும் அவ்வாறே போதிக்கின்றனர். இதனால், கணவன்-மனைவி உறவுமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்படாதா?

rape case- Cinema-bollywood style-illustration

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விவரங்கள்:

  1. தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய முறைகளை [மேலே அவன் குறிப்பிட்ட சாத்திய கூறுகள் முதலியன] கையாளுவதை அறிந்து, அவற்றை முழுக்க தவிர்க்க வேண்டும்.
  2. பேஸ்புக்,வாட்ஸ்-அப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. செல்போன் எண்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
  3. கதவைத் திறக்காமல் பேசி அனுப்புவது சிறந்தது. உள்ளே வர வேண்டிய அவசியம் ஏற்படும் போது, உடன் ஆண் துணை இருப்பது அவசியம்.
  4. கேஸ் கொண்டு வருபவன், கேன் – வாட்டர் சப்ளை செய்பவன், பேப்பர் போடுபவன், முதலியவருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  5. அதே போல வீட்டிற்கு வேலை செய்ய வரும், பழுது பார்க்க வரும், எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்றவர்களுடனும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  6. தெரியாத பெண்களை வீட்டிற்குள் விடக் கூடாது. தண்ணீர் கேட்டு வரும், குழந்தைகளுடன் வரும் பெண்களையும் விடக்கூடாது.
  7. அனாதை இல்லம், கோவில் போன்ற வசூலுக்கு வருபவர்களையும் ஊக்குவிக்கக் கூடாது.
  8. அடிக்கடி வரும், திரும்ப-திரும்ப ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில், நாளாக-நாளாக, அவர்களது போக்குவரத்து, சந்தேகம் இல்லாமல் போகும் நிலையை உண்டாக்கும், அது அவர்கள் குற்றத்தை செய்ய தோதுவாகி விடும்.
  9. வேலைக்காரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பெயர்களைச்சொல்லிக் கொண்டு வரும் ஆண்கள், முதலியோருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  10. தேவையில்லாத விற்பனை செய்வது போல வருவது, விசாரிக்க வருவது, அட்ரஸ் கேட்டு வருவது,….. போன்ற வகையறாக்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-11-2017

Arivazagan rape case- Cinema-Kichaka-illustration

[1] News18, 10 Ultra-Regressive Scenes From Bollywood Movies That Encourage Creep Behaviour, Pathikrit Sanyal, Updated:June 23, 2016, 2:10 PM IST.

[2] http://www.news18.com/news/buzz/10-ultra-regressive-scenes-from-bollywood-movies-that-encourages-you-to-be-a-creep-1027367.html

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)

நவம்பர்20, 2017

50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்ததுஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)

Arivazhagan case- DM-18_11_2017_017_005.small

தடுக்கி விழுந்த திருடனைப் பிடித்ததில் கிடைத்த செக்ஸ் குற்றவாளி: சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ். இவர் நேற்று அதே பகுதியில் தனியாக நடந்து சென்றார்[1]. அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபன், கத்தி முனையில், 8,500 ரூபாயை பறித்து தப்பினான்[2]. இதையடுத்து, கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர்[3]. அப்போது, குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், மின்னல் வேகத்தில் பறந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, அறிவழகன், 29, என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவனிடம், கத்தி மற்றும் மொபைல் போனில், விதவிதமான பெண்களின் புகைப்படங்கள், சில பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[4]. பின் அவனை, அடையாறு துணை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கிண்டியில், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, 25க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடியதுடன், 300 சவரன் நகைகளை, அறிவழகன் பறித்துள்ளது தெரிய வந்தது[5]. இதையடுத்து, குமரன் நகர் போலீசார், நேற்று அறிவழகனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவனை தங்கள் காவலில் எடுத்தும் விசாரிக்க உள்ளனர்.

Techie-burglar raped many women-Dinamalar- 18-11-2017

கற்பழித்தப் பெண்களின் எண்ணிக்கையை பலவாறு குறிப்பிடுவது: சென்னையில், 25க்கும் மேற்பட்ட பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பை சூறையாடிய, காமுகனை போலீசார் கைது செய்தனர் என்கிறது தமிழ்.வெப்துனியா[6]. பெண்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் 25-50 என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், ஊடகங்களில் வந்துள்ள அத்தகைய செய்திகளை போலீஸ் மறுத்து, அவர்களது முதல்கட்ட விசாரணையில், கிண்டியிலுள்ள ஒரு பெண்ணைக் கற்பழித்துதான் தெரியவந்துள்ளது என்று, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது[7]. ஆனால், “டெக்கான் ஹெரால்ட்” அவன் பல பெண்களைக் கற்பழித்தான் என்று தான் கூறுகிறது[8]. ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி, அவன் கத்திமுனையில் மிரட்டி, பல பெண்களைக் கற்பழித்ததை உறுதி செய்தார் என்றும் கூறுகிறது[9]. மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு, அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினார்[10]. இது, பல பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது குடும்பம் முதலிய விவகாரங்களுக்கு அஞ்சி புகார் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. என்னதான், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம், பெயர் முதலிய விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும் என்றாலும், ஒருநிலையில், நீதிமன்றத்தில் அவை தெரிய வர்த்தான் செய்கிறது. இதனால், வரும் விளைவுகளை அஞ்சிதான், பெண்கள் மறைத்து வாழ வேண்டியுள்ளது. இதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள், அத்தகைய கற்ப்பழிப்பாளர்களுக்கு, மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

Techie-burglar raped many women-Vikatan- 18-11-2017

போலீசாரிடம் அறிவழகன் அளித்துள்ள வாக்குமூலம்[11]: “நான், எம்.சி.., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. ‘பேஸ்புக்வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டதுமூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன். அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன்அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன்.’பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பை சூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[12].

Techie-burglar raped many women-Asianet-Newsable- 18-11-2017

கிண்டி பெண்ணைக் கற்பழித்தவன் இவன் தான், காமக்கொடூரன்: போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: “சில தினங்களுக்கு முன், கிண்டி பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துவிட்டதாக புகார் அளித்து இருந்தார்[13]. அந்த வாலிபன், அறிவழகன் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 25க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து இருப்பதாக தெரிவித்துள்ளான். அந்த வீடுகளுக்கு சென்று விசாரித்து வருகிறோம். இந்த காமக்கொடூரனை காவலில் எடுத்து விசாரித்தால் தான், பல உண்மைகள் தெரிய வரும்”, இவ்வாறு அவர்கள் கூறினர். [14] இதிலும் போலீஸார் கூறினர் என்று முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது, விசித்திரமாக இருக்கிறது. மிகவும் திகைப்படைய செய்யக் கூடிய, மென்மையான, அதே நேரத்தில் குரூரமான குற்றத்தை செய்த விவகாரத்தில், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

© வேதபிரகாஷ்

19-11-2017

Women t home subjected to rape-3

[1] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/thief-who-rapping-women-when-theft-arrest-117111700002_1.html

 

[2] தமிழ்.ஒன்.இந்தியா, வீடு புகுந்து கத்திமுனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன் கைது.. சென்னையில் பரபரப்பு, Posted By: Veera Kumar, Updated: Friday, November 17, 2017, 10:23 [IST].

[3] https://tamil.oneindia.com/news/tamilnadu/man-raped-over-50-women-chennai-say-cops-302074.html

[4] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017  23:52

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1898449

[6] தமிழ்.வெப்துனியா, கத்திமுனையில் 50 பெண்களை சூறையாடிய திருடன்சென்னையில் அதிர்ச்சி, Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:55 IST)

[7] Denying news reports in a section of the media that he was a serial rapist targeting lone women, the city police made it clear that preliminary investigation had revealed that he raped a woman in Guindy and not over 50 as projected by a section of the press.  The  Hindu, Techie-turned burglar confesses to rape, SPECIAL CORRESPONDENT, CHENNAI, NOVEMBER 18, 2017 01:07 IST; UPDATED: NOVEMBER 18, 2017 01:07 IST.UPDATED: NOVEMBER 18, 2017 01:07 IST

[8] DECCAN CHRONICLE, Chennai: Caught, thief admits to being serial rapist, Published: Nov 17, 2017, 1:45 am IST; Updated: Nov 17, 2017, 7:21 am IST.

[9] The 26-year-old man told investigators that apart from indulging in burglary and knifepoint robbery, he had also raped several home-alone women at knifepoint. A senior police officer confirmed to DC [Deccan Chronical] that the suspect did confess about raping women. However, police are checking the veracity of the claims and the process to identify and get statements from the supposed victims is underway, police sources said.

http://www.deccanchronicle.com/nation/crime/171117/chennai-caught-thief-admits-to-being-serial-rapist.html

[10] Asianet.Newsable, Thief caught in Chennai admits to being a serial rapist, By Team Asianet Newsable | 02:11 PM November 17, 2017.

[11] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017  23:52

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1898449

[13] லைவ்டே, சொகுசாக வாழ 50 பெண்களை பலாத்காரம் செய்த பட்டதாரி.! வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்..!!, நவ 16, 2017.

[14] https://liveday.in/chennai/chennai-c1/graduate-man-raped-50-women-to-live-in-luxury/

சின்னாராஜ் நான்கு பெண்களைக் கற்பழிக்கத் துணிந்தது, கொன்றது, பிணங்களுடன் வாழ்ந்தது ஒழுக்க சீர்கேடா, காம-வக்கிரமா, குரூரக் கொக்கோகமா?

ஜூன்27, 2016

 சின்னாராஜ் நான்கு பெண்களைக் கற்பழிக்கத் துணிந்தது, கொன்றது, பிணங்களுடன் வாழ்ந்தது ஒழுக்க சீர்கேடா, காம-வக்கிரமா, குரூரக் கொக்கோகமா?

Royapettai 4 - women murder- Malaimalar - 1

கொலையாளி பிணங்களுடன் வசித்தான் : ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரையும், அருகருகே படுக்க வைத்து, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி உள்ளான். பின், யாரோ மர்ம நபர்கள் கற்பழித்து கொன்று விட்டது போல நாடகமாட, போர்வையை கசக்கி, சடலங்களின் மேலே போட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி உள்ளான். பின், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, போதையில் பிணங்களுடன் வசித்துள்ளான். துர்நாற்றம் அதிகமானதால், ‘ரூம் ஸ்பிரே’ அடித்ததுடன், அளவுக்கு அதிகமாக பினாயிலும் ஊற்றி உள்ளான். நாற்றம் அதிகமானதால், பக்கத்து வீட்டார் அவனை கேள்விகளால் துளைத்து எடுக்க துவங்கி உள்ளனர். அவர்களிடம், ‘பாண்டியம்மாள், குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டாள்; வீட்டில் எலி செத்துக் கிடக்கிறது’ எனக்கூறி, அவனே, ஒரு எலியை கொன்று வந்து காட்டிவிட்டு மாயமாகி உள்ளான். 22-06-2016 மாலை வரை, அவன் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டார், 23-06-2016 அன்று ஜன்னலை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, பாண்டியம்மாள் மற்றும் மூன்று பெண்கள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்[1]. இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் ராஜாபகதூர், சென்னை ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்[2]. போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் பிணங்கள் கிடந்துள்ளன. சின்னராஜ் மாயமாகி இருந்தான். அவனது மொபைல் போனும், ‘சுவிட்ச் – ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. காலை, அவன் மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்த போது, போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில், நான்கு பெண்களையும் கொன்றதை, அவன் ஒப்புக் கொண்டான்.

Royapettai 4 - women murder- Malaimalar - 2போலீசாரிடம், அவன் அளித்துள்ள வாக்குமூலம்: என்னை திருமணமே செய்துக் கொள்ள விடாமல், அடிமை போல் பாண்டியம்மாள் நடத்தினாள். அவளது மகளை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டேன். பின், தவறை உணர்ந்து பாண்டியம்மாளிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால், அவள் என்னை, ஒரு புழுவைப் போல நடத்தினாள். நான் சம்பாதிக்கும் பணம் மட்டும் அவளுக்கு வேண்டும்; நான் வேண்டாம் என்றாகிப் போனது. இதனால், பாண்டியம்மாள் மற்றும் அவளது மகள்களை கொன்று விட்டேன். இவ்வாறு அவன் கூறியுள்ளான். தனது வக்கிரம் தீராதலால், கொலை செய்தான் என்றாகிறது. தன்னைவிட வயதான தாயிடம் உடலுறவு வைத்துக் கொண்டான் என்றாள், அவளுடைய இளமையான மகள்களை அனுபவிக்கத் துடித்தான் என்பது, ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு மனதில் சபலம், அத்தகைய எண்ணம் இருந்து, நாளாக அது, தகாத காமமாகி சீரழிவில் வந்து முடிந்துள்ளது போலும்.

Royapettai 4 - women murder- Malaimalar - 3கற்பழிப்பு நாடகம்: போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொலைக்கு பின், பாண்டியம்மாள் உள்ளிட்ட நான்கு பேருடனும், சின்னராஜ் உறவு கொண்டுள்ளான். அதுபற்றி கேட்டால், ‘மர்ம நபர்கள் கற்பழித்து, மனைவி, மகள்களை கொன்று விட்டதாக நாடகமாட அப்படி செய்தேன்’ என, கூறுகிறான். மெரினா கடற்கரையில் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை எடுக்க, அவன் வந்தபோது பிடித்து விட்டோம்’ என்றார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பாண்டியம்மாள் மற்றும் அவருடைய 3 மகள்கள் கொலை வழக்கிற்கான தேவையான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன. எவ்வாறு சின்னராஜ் கொலை செய்தார் என்று நடித்து காட்டினார். அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாண்டியம்மாளின் 3 மகள்களும் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இதனை உறுதி செய்ய முடியும். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சின்னராஜ்வுக்கு உரிய தண்டனையை பெற்று தர நடவடிக்கை எடுத்துள்ளோம், இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பாண்டியம் மாளின் தந்தை பால்சாமி சென்னை வந்தார்[3]. அவரிடம் மகள் மற்றும் 3 பேத்திகள் உடல் ஒப்படைக்கப்பட்டது. நான்கு பேரின் உடல்களையும் சென்னை ஐஸ்அவுசில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது[4]. எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்த சின்னராஜிவை போலீஸ் சும்மா விடக்கூடாது. அவருக்கு தூக்கு தண்டனை வாங்கி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்[5].மகளின் இருப்பிடம் தெரிந்ததைத் தொடர்ந்து அவர்களை கடந்த 19ம் தேதி சின்னையா தனது ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பாண்டியம்மாள் மகிழ்ச்சியுடன் இருந்ததால், மகள் சந்தோசமாக வாழட்டும் என அவர் கருதியுள்ளார்[6]. ஆனால், ஒரே வாரத்தில் இப்படி அவர்களது வாழ்க்கை முடிந்து போகும் என எதிர்பார்க்கவில்லை என அவர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது[7].

Royapettai 4 - women murder- Malaimalar - 4சின்னராஜும், சின்னதுரை போல ஏற்கெனவே திருமணம் ஆனவரா?: வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள், இக்கொலைகள் பற்றிய விவரங்களையும் பலவிதமாக வெளியிட்டுள்ளன. சின்னராஜின் வாக்குமூலம் என்று மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுள்ளன. உலக்கை, கம்பி என்று கொலை செய்யப்பட்ட ஆயுதம் மாறி-மாற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னராஜ், சின்னதுரை முதல் மனைவி, அடுத்த திருமணம் போன்ற விசயங்களும் அரைகுறையாகத்தான் விவரங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. சின்னத்ரை பாண்டியம்மாள் விலகியப் பிறகு ஹிருமணம் செய்தாளா, முன்னரே செய்து கொண்டாரா என்பது தெளிவாக இல்லை. சின்னராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிறது விகடன்[8]. ஆனால், மேலும் அதைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கவில்லை. பாண்டியம்மாளுக்கு, இது தெரியுமா-தெரியாதா என்பதும் தெரியவில்லை. அப்படியென்றால், இதில் சம்பந்தப் பட்டவர்கள், ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள், அடுத்தவர்களுடன் உறவு வைத்துக் கொண்டனர் என்றாகிறது.

Royapettai 4 - women murder- Malaimalar - 5

சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா?: குரூரக் கொலைகளை விவரித்து ஏதோ பொழுதுபோக்கு செய்தியாக்கி விடுகின்றன. இதனால், படிப்பவர்கள், கதை மாதிரி படித்து விட்டு, உணர்ச்சியவற்றவர்களாகி விடுகின்றனர். நிருபர்கள், போலீசாரிடம் கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டு, எழுதி வைத்து, பிறகு, விவரமாக எழுதும் போது, தங்களது கற்பனையையும் சேர்த்து எழுதுவது போலிருப்பதால், ஒவ்வொரு செய்தியிலும், அவை மாறுபடுகின்றன. மேலும், எந்த ஊடகமும், ஏன் இத்தகைய குற்றங்களை நடக்கின்றன, அவற்றை எவ்வாறு தடுக்கலாம், குடும்பங்கள் சீரழியாமல் இருக்க என்ன வழி, நன்றாக குடும்பம் நடுத்துவது எப்படி என்றெல்லாம் விவரிப்பதில்லை. ஆண்-பெண் கட்டுப்பாடு, தாம்பத்திய ஒழுக்கம், தனிமனித தன்மை பேணல், போன்ற குணங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாதது திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-06-2016

[1]http://www.dinamani.com/tamilnadu/2016/06/25/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86/article3499617.ece

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article8772297.ece

[3] மாலைமலர், சின்னராஜூக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி, பதிவு: ஜூன் 25, 2016 15:40; மாற்றம்: ஜூன் 25, 2016 15:41

[4] http://www.maalaimalar.com/News/District/2016/06/25154025/1021383/The-death-penalty-must-be-brought-to-cinnaraju-pantiyammal.vpf

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=226867

[6] தமிழ்.ஒன்.இந்தியா, 4 பெண்கள் கொலை வழக்கு… ‘கொலையாளியைத் தூக்கில் போடுங்கள்’… பாண்டியம்மாளின் தந்தை ஆவேசம், By: Jayachitra, Published: Sunday, June 26, 2016, 17:13 [IST].

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-women-murderer-must-be-hanged-256896.html

[8] http://www.vikatan.com/news/crime/65496-women-murdered-in-chennai-in-the-last-24-hours.art

சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா?

ஜூன்27, 2016

சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா?

chennai_murder_buildingகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவன் சின்னராஜ் (35); ஸ்வீட் மாஸ்டர். 2012ல், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஒரு பேக்கரியில் வேலை பார்த்துள்ளான். அப்போது, அருகே இருந்த தேநீர் கடையில் வேலை பார்த்த, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தாலுகா, கட்டயம்பட்டியைச் சேர்ந்த, சின்னதுரையுடன் நெருங்கி பழகி உள்ளான். பழநியில், வாடகை வீட்டில் குடியிருந்த சின்னதுரையின் வீட்டிற்கு, சின்னராஜ் அடிக்கடி சென்று வந்த போது, தன்னை விட, ஐந்து வயது மூத்தவரும், மூன்று பெண் குழந்தைகளின் தாயுமான, சின்னதுரையின் மனைவி பாண்டியம்மாளுக்கும் (40) [மீனா என்றும் சொல்லப்படுகிறது[1]], அவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது[2]. சின்னராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிறது விகடன்[3]. கூடா உறவு, குடும்ப சீரழிவு இங்கேயே ஆரம்பித்துள்ளது. பாண்டியம்மாளின் படிதாண்டிய விளைவுதான் அழிவிற்கு கூட்டிச் சென்றுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை, பாண்டியம்மாளின் கணவர் கண்டித்துள்ளார். அடங்காத கள்ளக்காதல் ஜோடி, ஒரு கட்டத்தில், பழநியை விட்டு வெளியேறி உள்ளது. போதாகுறைக்கு, மூன்று மகள்களையும் கூட்டிச் சென்றுள்ளனர். பாண்டியம்மாள் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களையும் விட்டுவிட்டு தனியாக சென்று விட்டார் என்று பாண்டியம்மாளின் தந்தை பால்சாமி (65) கூறுகிறார்[4].

House where four women murdered2012லேயே சென்னைராயப்பேட்டைக்கு குடியேறிய பாண்டியம்மாள் முதலியோர்: சின்னராஜுக்கு, ஏற்கனவே சென்னையில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. 2012ல், பாண்டியம்மாள், 35, அவரது மகள்கள் பவித்ரா, 19, பரிமளா, 18, ஸ்நேகா, 16, ஆகியோருடன், சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள முத்து தெருவில், ராஜாபகதுார் என்பவரின் வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், ஐந்து பேரும் வாடகைக்கு குடியேறினர். சின்னராஜ் வீட்டிலேயே இனிப்பு பலகாரங்கள் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளான். பட்டினப்பாக்கத்தில் உள்ள கடையில் வேலையும் பார்த்துள்ளான். பாண்டியம்மாள் மகள்களில் பவித்ராவை, சோழிங்கநல்லுாரில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கிலும், பரிமளாவை, ‘பாரா மெடிக்கல்’ கல்லூரியிலும் படிக்க வைத்துள்ளான். இளைய மகள் ஸ்நேகா, பிளஸ் 2 படித்து வந்தார். அம்மாவின் 2-வது கணவர் என்றாலும், அப்பா என்று தான் 3 மகள்களும் சின்னராஜை பாசமாக அழைத்து வந்துள்ளனர். சின்னராஜூம் 3 பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து அவர்களிடம் அன்பாக இருந்துள்ளார். நாள்தோறும் சின்னராஜூவிடம் செக்ஸ் உறவில் ஈடுபட்ட வந்த பாண்டியம்மாள் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சின்னராஜூவுடன் செக்ஸ் உறவுக்கு மறுத்து வந்தார். இந்தநிலையில் சின்னராஜ் மனதில் காமவெறி எழுந்துள்ளது. அவருடைய பார்வை வயதுக்கு வந்த 3 மகள்கள் மீது திரும்பியது. மகள்கள் குளிப்பதையும், வீட்டில் ஆடைகளை உடுத்தும் காட்சியையும் சின்னராஜ் மறைமுகமாக பார்த்து நீண்ட நாட்களாக ரசித்து வந்துள்ளார்[5]. நாளடைவில் 3 மகள்களையும் அடைய வேண்டும் என்ற காமத்தீ சின்னராஜ் மனதில் பற்றி எரிய தொடங்கியது. முதலில் மூத்த மகள் பவித்ராவை (19) அடைவதற்காக அவரிடம் இரட்டை அர்த்தங்களிலும், ஆபாசமாக பேசியும் வந்தார். செக்ஸ் தொந்தரவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்[6]. இதுபற்றி பவித்ரா தனது தாயார் பாண்டியம்மாளிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

House where 4 women murderedமூத்த மகள் மீது வெறி[7]: மூன்று குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்த போதிலும், பாண்டியம்மாளிடம், மூத்த மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, சின்ராஜ் கூறியுள்ளான்[8]. இதனால், குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க துவங்கியது[9]. தன்னுடன் உறவு வைத்திருப்பதோடு, மகளுக்கும் வலை வீசுகிறானே என, பாண்டியம்மாள் வெகுண்டெழுந்து உள்ளார். விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று கருதிய பாண்டியம்மாள் யாரிடமும் சொல்லாமல், சின்னராஜை கண்டித்தார். இரவு நேரத்தில் சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார். இதனால், வீட்டிற்குள்ளேயே அவனை அனுமதிக்க மறுத்ததுடன், தான் வீட்டில் இருக்கும் போது மட்டுமே வர வேண்டும் என, நிபந்தனையும் விதித்துள்ளார். இதனால், பல இரவுகளை, மெரினா கடற்கரையிலேயே கழித்து வந்துள்ளான் சின்னராஜ். எனினும், அவனுக்கு பவித்ராவை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருந்துள்ளது. பாண்டியம்மாளும், அவனுடன் உறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளார். இதனால், சின்னராஜ், தன் உழைப்பில் மகள்களை படிக்க வைக்கும் பாண்டியம்மாள், தன்னை ஒரு கருவேப்பிலை போல் பயன்படுத்துகிறாரே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளான். மேலும், பாண்டியம்மாள் மற்றும் அவரது குழந்தைகளின் நடத்தை மீதும், அவனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது சின்னராஜூக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 3 மகள்களையும் அடைந்தே தீர வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் சின்னராஜ் வீட்டுக்குள் வந்தார்.

four women murdered and the murder - 25_06_2016_003_003_004தீர்த்துக்கட்டினான்: சில நாட்களுக்கு முன், பாண்டியம்மாள் மற்றும் மகள்களுடன் சின்னராஜ், காரைக்குடிக்கு சென்றான். ஜூன் 20ம் தேதி, அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். அன்று இரவு, போதையில் அவன் தகராறு செய்துள்ளான். இதனால், அவனை ஹாலில் படுக்க வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பாண்டியம்மாள், படுக்கை அறையில் துாங்கி உள்ளார். ஆனால், கதவு திறந்தே இருந்துள்ளது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென எழுந்த சின்னராஜ், இரும்பு கம்பியால், ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்த, பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோரை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொன்றுள்ளான். அப்போது விழித்து எழுந்த ஸ்நேகாவை, ‘அயர்ன் பாக்ஸ்’ ஒயரில் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளான் என்று தினமலர் விவரித்துள்ளது. “தி இந்து”வும் இதே விவரங்களை கொடுத்துள்ளது[10].

பாண்டியம்மாளின் தந்தை பால்சாமிகொலைப்பற்றிய மாறுபட்ட விவரங்கள்: மூத்த மகள் பவித்ராவை கற்பழிக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க வந்த பாண்டியம்மாள் தலையில் உலக்கையால் தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, சின்னராஜூவை நகத்தால் கீறி உள்ளார். இதையடுத்து பவித்ராவையும் அவர் உலக்கையால் தாக்கினார்.  அலறல் சத்தம் கேட்டு எழுந்த பரிமளா, சினேகா ஆகிய 2 மகள்களையும் சின்னராஜ் உலக்கையால் தாக்கி உள்ளார். அவர்கள் தட்டு தடுமாறி எழுந்த போது மீண்டும் மீண்டும் தாக்கியதில் அடுத்தடுத்து 4 பேரும் உயிரிழந்தனர். காமவெறியில் இருந்த சின்னராஜ் உயிரிழந்த 3 மகள்களின் ஆடைகளையும் களைந்துவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி உள்ளார். பின்னர் அவர்களை 2 நாட்கள் சின்னராஜ் கற்பழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்கள் அழுகிய பின்னரே சின்னராஜ் வெளியே சென்றுள்ளார். மேற்கண்டவாறு புதிய தகவல் வெளியாகி உள்ளது, என்று தினத்தந்தி விவரிக்கிறது.

© வேதபிரகாஷ்

27-06-2016

[1] http://www.newindianexpress.com/cities/chennai/Chennai-shocker-Man-murders-wife-girls-lives-with-their-bodies/2016/06/24/article3497934.ece

[2] தினமலர், சென்னையில் ஐந்து பெண்கள் படுகொலை, பதிவு செய்த நாள் : ஜூன் 25,2016,01:00 IST

[3] http://www.vikatan.com/news/crime/65496-women-murdered-in-chennai-in-the-last-24-hours.art

[4] தினகரன், எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டான்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி, Date: 2016-06-26@ 01:04:43

[5] தினத்தந்தி, சென்னையில் ஒரே வீட்டில் தாய், 3 மகள்கள் கொலை; 3 இளம்பெண்களும் கற்பழிக்கப்பட்டனரா? போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST

[6] http://www.dailythanthi.com/News/India/2016/06/26023143/Woman-and-3-teenage-daughters-found-murdered-in-Chennai.vpf

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1550326

[8] தினமணி, தாய், மூன்று மகள்கள் கொலை: படுபாதக செயலில் ஈடுபட்டது ஏன்? குற்றவாளி வாக்குமூலம், By dn, First Published : 25 June 2016 10:43 AM IST

[9] சின்னராஜ், தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்றதாகவும், பாண்டியம்மாள் அதனால், தன்னை ஏமாற்றாதே என்றதாகவும், அதற்கு, அப்படியென்றால், உன் முதல் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடு என்றதாகவும் விகடன் கூறுகிறது. http://www.vikatan.com/news/crime/65515-sweet-stall-employee-murders-wife-three-daughters.art

[10] தமிழ்.இந்து, வீட்டில் அழுகிய நிலையில் இருந்த 4 சடலங்கள் மீட்பு: சென்னை ராயப்பேட்டையில் மனைவி, 3 மகள்கள் படுகொலை, Published: June 25, 2016 09:13 ISTUpdated: June 25, 2016 09:22 IST.

 

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா – பெண்கள் படும் பாடு.

பிப்ரவரி10, 2014

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா – பெண்கள் படும் பாடு.

 

Women are the sufferers

Women are the sufferers

பெண்கள் படும் பாடு: எந்த மதப் பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆணை மணந்து கொண்டு வாழ விரும்புகிறாள் என்பது இயற்கையான நியதி, உண்மையும் ஆகிறது. அந்நிலையில் விவாக ரத்து என்பது அவளுக்கு நினைக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை ஆண் பிரிந்து சென்று விட்டால், இன்னொருவளுடன் சேர்ந்திருந்தால், அப்பெண் முதலில் தனித்திருக்கத்தான் விரும்புகிறாள். இன்னொருவனுடன் உறவு கொள்வதை மனதாலும் மறுக்கிறாள். அது கற்பு என்றும் போற்றப்படுகிறது. ஆனால், ஆண் ஒரு பெண்ணிற்கு மேல் உறவு கொள்ளும் போது, சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் போது, பெண் ஏன் அதுமாதிரி செய்யக்கூடாது என்று எண்ணம் வரலாம். நவீனகாலத்தில் விவாகரத்து மூலம் அது சட்டமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், பிறக்கும் குழந்தைகள் தங்களது தாய்-தந்தை என்று ஒருவர்-ஒருவர் அதாவது அம்மா-அப்பா என்று இருவரை மட்டும் தான் நினைக்க முடிகிறது. ஆனால், இப்பொழுது அம்மா ஒருவர், அப்பா ஒருவர் அதாவது வேறு வேறான நபர்கள் என்று தெரியும் போது, குழந்தைகள் தவிக்கத்தான் செய்யும். “உன் அம்மா ஒருத்தி, ஆனால், நீ வேறு அப்பாவுக்குப் பிறந்தவன்” எனும்போது மகன் எவ்வாறு உணர்வான், சமரசம் செய்து கொள்வான். பெண்ணின் நிலையும் அவ்வாறே கேள்வியாகிறது.

 

முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].

 

சாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.

 

வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக  தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர்  அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.

 

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.

 

1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர்! பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.

 

முஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.

 

ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது? 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].

 

வேதபிரகாஷ்

© 10-02-2014


[2] இனியொரு.டாட்.காம்,  http://inioru.com/?p=39133

[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST

 

[10] Yuvan has kept the marriage as a closely guarded secret since it is his second marriage. However, the event was publicized and eventually everyone came to know about it before the Yuvan’s wedding. Remember, Yuvan’s first marriage with Sujaya ended in divorce in 2008 and the promising music director now found Shilpa as his life partnerhttp://www.teluguone.com/tmdb/news/Music-Director-Yuvan-Shankar-Raja-Marriage-en-6135c1.html

[12] தினத்தந்தி, சினிமாஇசையமைப்பாளர்யுவன்சங்கர்ராஜாமுஸ்லிம்மதத்துக்குமாறினார், பதிவு செய்த நாள் : Feb 10 | 02:15 am

[14] While we tried to reach Yuvan regarding this, a source close to the music director revealed, “Yuvan was very attached to his mother and soon after she passed away, he started missing her a lot. He also met a spiritual guru, but we cannot say what exactly made him follow Islam,” and maintained that, he was definitely not inspired by fellow composer AR Rahman (who had converted to Islam) in his decision.

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[15] Yuvan, the source said, has been practicing Islam for almost a year now. “He has been doing namaz five times a day all these months. He is not missing his prayers even when he is at work and ensures that he allots time for it at his studio as well,” said the source. The source added that Yuvan is now in the process of converting to Islam. “Currently, he is planning to convert to Islam and is also thinking of going for a change of name. But, he is yet to decide on these. Since it is his personal decision, his family members respect it.”

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Yuvan-Shankar-Raja-embraces-Islam/articleshow/30113638.cms

[16] In 1995, the Supreme Court ruled in the Sarla Mudgal case that under the Hindu Marriage Act 1955, a Hindu husband cannot marry a second time simply by embracing Islam without lawfully dissolving the first marriage. He would be guilty of bigamy, the Court ruled.