நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II
இனி மறுபடியும் நித்யானந்தா வந்து விட்டதால், ஊடகங்கள் இனி எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கும். 100ற்க்கும் மேலாக வெயில் அடித்தாலும் கவலையில்லை, இனிமேல் தினம் தினம் சூடான செய்திகள் தாம்!
போதாக் குறைக்கு தாந்திரிக முறையிலான செக்ஸ் என்றெல்லாம் கிளம்பி விட்டார்கள்.
நிச்சயமாக, இந்தியா இடைக் காலத்திற்குச் செல்கிறது.
ஆமாம், முகமதியர்கள் / முகலாயர்கள், துருக்கியர்கள் எப்படி காம வேட்டையில் ஈடுபட்டு, இந்தியப் பெண்களை கற்பழித்து செக்ஸ் அனுபவித்தார்களோ, இந்திய பண்டிதர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய நூல்களை எழுத வைத்தார்களோ, அதன்படியே செக்ஸ் அனுபவித்து குரூரங்களில் ஈடுபட்டார்களோ…………………..அவ்விவகாரங்கள் எல்லாம் வெளிப்படும்!
பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
பெங்களூரு : இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.
இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில், லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேமராக்கள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏழாயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சாமியார் நித்யானந்தாவும், அவருடன் இருந்தவர்களும் சிம்லா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, அர்கி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில், நித்யானந்தா உள்ளிட்டோர் ஆஜர்படுத்த பட்டனர். முறைப்படி வாரன்ட் பெற்று, பெங்களூருவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நித்யானந்தாவை வேன் மூலம் சண்டிகாருக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கு கொண்டுவந்தனர்.
பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணியளவில் சாமியாருடன் விமானம் பெங்களூரு வந்தது. போலீஸ் காரில், நித்யானந்தாவை பாதுகாப்பாக ஏற்றி, ராம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். விமான நிலையத்தில் இருந்து சாமியாரை வெளியே அழைத்து வந்தபோது, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கேலி, கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரைத் தாக்கவும் சிலர் முற்பட்டனர். நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
நித்யானந்தாவை தாக்க முயற்சி: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சாமியார் நித்யானந்தாவை கன்னட அமைப்பினர் கேலியும், கிண்டலும் செய்து தாக்க முயற்சித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையில் சாமியார் அழைத்து செல்லப்பட்டார். சாமியார் நித்யானந்தா, மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றிரவு 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வருவதற்குள், பெரும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் பலத்த கெடுபிடிக்கிடையே சாமியார் நித்யானந்தா காருக்கு அழைத்து வரப்பட்டார். பத்திரிகையாளர்களும் அதிகளவில் குழுமியிருந்தனர். சாமியார் நித்யானந்தா விமான நிலைய வாசல் பகுதிக்கு வரும் போது, அங்கு நின்றிருந்த கன்னட அமைப்பினர், அவரை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர், அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடிக்கு இடையே, சாமியார் சிரித்தவாரே போலீஸ் காரில் ஏறினார்.
வழக்கை மாற்றிவிட்டு நாடகம் ஆடும் சட்டங்கள்: நித்யானந்தா வக்கீல்கள், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் அளித்த உறுதிமொழியை ஏற்று, அவரது பிடிவாரன்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் வக்கீல் செல்வமணி, கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், காவி உடை அணிந்து தவறுகள் செய்த சாமியார் நித்யானந்தா மீது, 295ஏ சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா, ஏப்., 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார். அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, ஏப்., 19ல் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், 19ம் தேதி நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தாவை பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், நித்யானந்தாவின் வக்கீல்கள் இருவர், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நேற்று ஆஜராயினர். நித்யானந்தாவை வரும் ஜூன் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்தனர். அதை ஏற்று நீதிபதி குணசேகரன் வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
டில்லி இமாம் முன்பு இம்மாதிரி கைது செய்யப்படவில்லையே ஏன்? சட்டம் இந்தியாவில் சரியாக நிறைவேற்றப் படுவதில்லை, என்பதற்கு நித்யானந்தா விவகாரம் மூலம் வெளிப்படுகிறது. நித்யானந்தா தண்டிக்கப்பட வேண்டியதுதான், ஆனால், ஏன் அதே சட்டம் மற்றவர்கள் விஷயத்தில் அமைதியாக செயல் படுகிறது இல்லை செயல்படாமலேயே இருந்து விடுகிறது என்ற கேல்விகள் தான் செக்யூலரிஸ நாட்டில் எழுகின்றன. அதிலும் குற்றமீறல்களைச் செய்தவர்கள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்றதும் ஒன்று அமுக்கி வாசிக்கப் படுகிறது, இல்லை ஊடகங்களில் செய்திகளே வராது (குறிப்பாக தமிழில் வராது), குற்றப் பத்திரிக்கைத் தாக்குதல் செய்யப்பட்ட பிறகும் கைதும் செய்யப் பட மாட்டார்கள்.
சங்கராச்சாரி கைது: டில்லி இமாம் விவகாரத்தில் இப்படித் தான் முன்பு மூன்றிற்கும் மேலான உயர்நீதி மன்றங்களினின்று கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது. “பாரத மாதா ஒரு தெவிடியா”, “நீதிபதிகளின் கை-கால்களை உடைக்க வேண்டும்”, “………………..”, என்றெல்லாம் பேசியதர்காக அவ்வாறான வாரண்ட்டுகள் பிரப்பிக்கப்பட்டன. ஆனால், சாகும் வரை அந்த ஆள் கைது செய்யப் படவில்லை. ஆனால், அந்த இடைக் காலத்தில் இரண்டு சங்கராச்சாரியார்கள் அதே மாதிரியான, ஆனால் மிகவ்ய்ம் நாகரிகமான முறையில், இந்துக்கள் உரிமைகள் காக்கப் படுவதில்லை………….என்று பேசியதர்காக, கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
ஆகவே, நிச்சயமாக, குற்றங்களில் கூட மதரீதியிலாக நீதி மன்றக்கள், காவல் துறை, ஊடகங்கள் முதலியன, பாரபட்ச்சத்துடன் உள்ளன, குறிப்பாக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.