ஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா?
திருவண்ணாமலையில்தீயகாரியங்கள்தொடர்ந்து நடந்து வருவது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன[1]. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.
மாணவ-மாணவியர்களிடையே நட்பு தேவையா என்ற கேள்வி எழுகிறது: படிக்கின்ற வயதில் கோ-எடுகேஷன் என்ற முறையில், இப்பொழுது கல்லூரிகளில் மாணவ-மாணவியர்கள் சேர்ந்தே படிக்கின்றனர். ஆனால், மேனாட்டுக் கலாச்சார பாதிப்பினால், நவீன மாயைகளினால், மேற்கத்தைய மோகத்தினால் அவர்கள் சிகரெட், மது, குடி, போதை மருந்து[2] என்று பலவழிகளில் சீரழிக்கப் படுகிறார்கள். நட்பு என்ற பெயரில் ஆரம்பித்து[3], ஊக்குவிக்கப் பட்டு, பிறகு காதல் என்ற மாயவலையில் சிக்க வைத்து, மாணவிகளைக் கெடுக்கவே, சில கூட்டங்கள் வேலை செய்து வருகின்றன. பிறந்த நாளில் பார்ட்டி நடுத்துவது, மது அருந்துவது, ஆடுவது இல்லை பப்பிற்குச் செல்வது போன்ற விதத்தில் இவர்கள் நடந்து வருகிறார்கள். இதனால், அந்த சிகரெட், மது, குடி, போதை மருந்து விற்பவர்களுக்கும், பப் போன்ற கேளிக்கை விடுதிகள் நடத்துபவர்களுக்கும் தான் ஆதாயமே தவிர, மாணவ-மாணவியர்களுக்கு வாழ்க்கை சீரழிவுதான். இந்நிலையில் தான் இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன.
உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்[4]:இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது!
ஆசிரியர்களே மாணவியர்களை செக்ஸ் வக்கிரமங்களுக்குட் படுத்துதல், கற்பழித்தல் முதலியன[5].
பெற்றொர்களிடம் தெரிவிக்காமல், வீட்டிற்கு செல்லாமல், மற்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது[6].
செக்ஸ்சபலத்தினால்சீரழியும்பெண்களும்[7], செக்ஸ்வெறியில்அலையும்காமுகன்களும்!
தாயிற்குப்பிறாவதமிருகங்களின்செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[8]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்[9]. தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[10]. இந்த செய்தி வந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் திருவண்ணாமலையில் மற்றொரு கொடூர செய்தி.
கல்லூரிமாணவிக்குகுளிர்பானத்தில்மதுகலந்துகொடுத்து, ஆபாசபடம்எடுத்தஇரண்டுவாலிபர்கள்: கல்லூரி மாணவிக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, ஆபாச படம் எடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்[11]. திருவண்ணாமலை அடுத்த இசுக்கழி காட்டேரி பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா, 18. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் திருவண்ணாமலையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த வினோத், நட்புடன் பழகி வந்துள்ளார். இப்படி நட்புடன் பழகுவது தான் பிரச்சினையில் முடிகிறது.
மாணவிகள் பலிக்கடா ஆகும் நிலை: இக்காலத்தில், பள்ளிகள்-கல்லூரிகளில் திடீரென்று, மாணவிகள்- மாணவியர் சேர்ந்து படிப்பதால், அவர்கள் பார்த்துக் கொள்ள, பெசிக்கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சினிமா அத்தகைய அணுகுமுறைகளைக் கொச்சைப் படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப் படுத்தி, விரசமாக்கியுள்ளது[12]. சினிமாக்களில் வரும் வார்த்தைகளை நடைமுறையில் பேசிக் கொண்டு, கலாட்டா செய்து கொள்வது, நாகரிகமாகி விட்ட நிலையில், ஆபாசம் நடைமுறையாகி விட்டது. இதனால், வக்கிரம் தலைக்கேறுகிறது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று கெட்ட மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் மாணவிகள் பலிகடாவாகிறார்கள்.
சினிமாக்களில் பார்ப்பதை செயல்படுத்துவது: ஜனவரி மாதம் பிரியா கல்லூரியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது, வினோத், பிரியாவிடம் ஆடு தொட்டி தெருவில் உள்ள, தன் அத்தை வீட்டுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார். இப்படி மாணவிகள் நம்பிச் செல்வதும் விபரீதத்தில் தான் முடிகிறது. கூப்பிட்டதும் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. அங்கு பிரியாவுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார், அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது, வினோத், தன் மொபைல் போனில் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது[13]. மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா, தனக்கு உடல் நிலை சரியில்லை என நினைத்து, வீட்டுக்கு சென்று விட்டார்.
செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா: தங்கள் மகன்-மகள் படிக்க பெற்றோர்கள், ஆயிரங்களைக் கொட்டி, கல்லூரிகளில் சேர்த்து, போன், லேப்டாப் என்று வாங்கிக் கொடுக்கிறார்கள், ஆனால், அவர்கள் இப்படியெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என்று எல்லா பெற்றோர்களுக்கும் தெரியாது[14]. மொபைல் போனில் இருந்த ஆபாச படத்தை வினோத், தன் லேப்-டாப்பில் ஏற்றி நண்பர் செந்தில்குமார் என்பவருக்கும் காட்டி உள்ளார். இது குறித்து பிரியாவுக்கு தெரிந்தது, வினோத்திடம் பிரியா, “ஏன்? ஆபாச படம் எடுத்தாய்’ என, கண்டித்துள்ளார். அப்போது, “நான் தவறு செய்து விட்டேன், இதை அழித்து விடுகிறேன்’ என, கூறினார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வினோத்தை கண்டித்துவிட்டு சென்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பிரியாவின் ஆபாச படம், பலரது மொபைல் போனில் பரவி உள்ளது. அந்த படத்தை வினோத், தன் நண்பர்கள் மொபைல் போன்களுக்கு பரப்பி உள்ளார். இதையறிந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார், வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
நாகரிகம் பெயரில் கலாச்சாரத்தை சீரழித்து வரும் மேனாட்டு கருவிகள்: தமிழ் சினிமாக்கள் புளூ பிளிம் எடுப்பது தான் பாக்கி. ஏற்கெனெவே சன்-டிவி நித்யாநந்தா-ரஞ்சிதா வீடியோவை தேர்வு நடக்குக்கும் தொடர்ந்து போட்டு நல்ல காரியத்தை செய்துள்ளது. அதனால், அத்தகைய படங்கள் எடுத்தால், இக்குழுமங்களே ஒளிபரப்பி நல்ல காரியங்களை மேன்மேலும் செய்துவிடும். இப்படி டிவி, கேமரா, செல்போன், லேப்டாப் முதலியன, படிப்பிற்காக என்றில்லாமல், கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவதை மாணவர்கள் கற்ருக் கொள்கிறார்கள். கேடுகெட்ட கயவர்கள், அவற்றை இணைதளங்களிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே, முதலில் இத்தகைய சமூக சீரழிப்பாளர்களை, அடையாளங்கொண்டு எல்லோரும் கண்டித்து, ஒதுக்க வேண்டும். மாணவ-மாணவியர்களை அவர்களிடமிருந்து காக்க வேண்டும்.
வேதபிரகாஷ்
05-08-2012
[1] https://womanissues.wordpress.com/2011/12/10/widow-burnt-to-death-as-she-refused-sex-with-parmour/
[2] கல்லூரிகளில் போதை மருந்துகளை விற்பது, பிறகு போதை மருந்து பழக்கம் நீக்க புணர்நிர்மான நிலையங்களை நடத்துவது என்ற செயல்கள் நடந்து வருகின்றன. முன்பு, பணக்காரர்கள், வசதியுள்ளவர்கள், கெட்டுப் போனவர்கள் என்ற நிலை மாறி, ஏழை-மத்தியத்தர குடும்ப மாணவர்களை இலக்காக வைத்துக் கொண்டு, இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
[3] ரக்ஷா-பந்தன் என்பது முஸ்லீம்களின் குரூர கற்பழிப்புகள், பெண்கள் கடத்தப் படுவது, முதலிய கொடிய காரியங்களினின்று காப்பாற்ரிக் கொள்ள 13-14ம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டப் பழக்கம். இதனைக் கட்டிக் கொண்டால், முஸ்லீமாக இருந்தாலும், இந்துப் பெண்ணை சகோதரியாக நினைத்து விட்டு விடவேண்டும். ஆனால், இப்பொழுது, அதனை “பிரெண்ட்சிப் பாண்ட்” என்று சொல்லி உண்மையினை மறைக்கப் பார்க்கிறார்கள்.
[4] https://womanissues.wordpress.com/2012/02/19/five-youngsters-molest-one-female-friend-degraded-indian-society/
[8] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ?
https://womanissues.wordpress.com/2012/07/24/denigrating-womanhood-corrupting-society-raping/
[10] http://tamil.oneindia.in/news/2012/07/24/tamilnadu-woman-commits-suicide-near-chengam-158316.html
[12] உண்மையிலேயே சினிமாக்காரர்கள், வசனம் எழுதுபவர்கள், நகைச்சுவை நடிகர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்திருப்பார்களேயானால், அத்தகைய செயல்களை செய்திருக்க மாட்டார்கள், ஆனால், தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அத்தகைய கேடு கெட்டவர்களை கல்லுரி விழாக்களில் அழைத்து சிறப்பிக்கின்றர்கள் என்பது, அதைவிட கேவலமான விவகாரம்.
[13] இனி மாணவிகள் இவ்விஷயங்களில் விவரமாக போதிக்க வேண்டியுள்ளது. ஒன்று பெற்றொர்கள் அல்லது ஆசிரியைகள் மற்றவர்கள், அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். இப்படி மாணவர்கள் அழைத்தால், அதை தவிர்க்க வேண்டும், தனியாக இருப்பதை அறவே தவிர்க்க வேண்டும், என்றெல்லாம் அறிவுருத்தவேண்டும்.
[14] செல்போன் வாங்கிக் கொடுப்பதை நிறுத்தினாலே, மாணவ-மாணவியர்கள் உருப்பட்டுவிடுவார்கள், திருந்திவிடுவார்கள், படிப்பில் கவனத்தைச் செல்லுத்துவார்கள். இருப்பதைப் பிடிங்கிக் கொண்டாலும் நல்லதுதான்.