Archive for the ‘மடம்’ Category

ஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா?

ஓகஸ்ட்5, 2012

ஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா?

திருவண்ணாமலையில்தீயகாரியங்கள்தொடர்ந்து நடந்து வருவது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன[1]. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.

மாணவ-மாணவியர்களிடையே நட்பு தேவையா என்ற கேள்வி எழுகிறது: படிக்கின்ற வயதில் கோ-எடுகேஷன் என்ற முறையில், இப்பொழுது கல்லூரிகளில் மாணவ-மாணவியர்கள் சேர்ந்தே படிக்கின்றனர். ஆனால், மேனாட்டுக் கலாச்சார பாதிப்பினால், நவீன மாயைகளினால், மேற்கத்தைய மோகத்தினால் அவர்கள் சிகரெட், மது, குடி, போதை மருந்து[2] என்று பலவழிகளில் சீரழிக்கப் படுகிறார்கள். நட்பு என்ற பெயரில் ஆரம்பித்து[3], ஊக்குவிக்கப் பட்டு, பிறகு காதல் என்ற மாயவலையில் சிக்க வைத்து, மாணவிகளைக் கெடுக்கவே, சில கூட்டங்கள் வேலை செய்து வருகின்றன. பிறந்த நாளில் பார்ட்டி நடுத்துவது, மது அருந்துவது, ஆடுவது இல்லை பப்பிற்குச் செல்வது போன்ற விதத்தில் இவர்கள் நடந்து வருகிறார்கள். இதனால், அந்த சிகரெட், மது, குடி, போதை மருந்து விற்பவர்களுக்கும், பப் போன்ற கேளிக்கை விடுதிகள் நடத்துபவர்களுக்கும் தான் ஆதாயமே தவிர, மாணவ-மாணவியர்களுக்கு வாழ்க்கை சீரழிவுதான். இந்நிலையில் தான் இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன.

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்[4]:இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது!

ஆசிரியர்களே மாணவியர்களை செக்ஸ் வக்கிரமங்களுக்குட் படுத்துதல், கற்பழித்தல் முதலியன[5].

பெற்றொர்களிடம் தெரிவிக்காமல், வீட்டிற்கு செல்லாமல், மற்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது[6].

செக்ஸ்சபலத்தினால்சீரழியும்பெண்களும்[7], செக்ஸ்வெறியில்அலையும்காமுகன்களும்!

தாயிற்குப்பிறாவதமிருகங்களின்செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[8]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்[9]. தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[10]. இந்த செய்தி வந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் திருவண்ணாமலையில் மற்றொரு கொடூர செய்தி.

கல்லூரிமாணவிக்குகுளிர்பானத்தில்மதுகலந்துகொடுத்து, ஆபாசபடம்எடுத்தஇரண்டுவாலிபர்கள்: கல்லூரி மாணவிக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, ஆபாச படம் எடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்[11]. திருவண்ணாமலை அடுத்த இசுக்கழி காட்டேரி பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா, 18. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் திருவண்ணாமலையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த வினோத், நட்புடன் பழகி வந்துள்ளார். இப்படி நட்புடன் பழகுவது தான் பிரச்சினையில் முடிகிறது.

மாணவிகள் பலிக்கடா ஆகும் நிலை: இக்காலத்தில், பள்ளிகள்-கல்லூரிகளில் திடீரென்று, மாணவிகள்- மாணவியர் சேர்ந்து படிப்பதால், அவர்கள் பார்த்துக் கொள்ள, பெசிக்கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சினிமா அத்தகைய அணுகுமுறைகளைக் கொச்சைப் படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப் படுத்தி, விரசமாக்கியுள்ளது[12]. சினிமாக்களில் வரும் வார்த்தைகளை நடைமுறையில் பேசிக் கொண்டு, கலாட்டா செய்து கொள்வது, நாகரிகமாகி விட்ட நிலையில், ஆபாசம் நடைமுறையாகி விட்டது. இதனால், வக்கிரம் தலைக்கேறுகிறது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று கெட்ட மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் மாணவிகள் பலிகடாவாகிறார்கள்.

சினிமாக்களில் பார்ப்பதை செயல்படுத்துவது: ஜனவரி மாதம் பிரியா கல்லூரியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது, வினோத், பிரியாவிடம் ஆடு தொட்டி தெருவில் உள்ள, தன் அத்தை வீட்டுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார். இப்படி மாணவிகள் நம்பிச் செல்வதும் விபரீதத்தில் தான் முடிகிறது. கூப்பிட்டதும் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. அங்கு பிரியாவுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார், அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது, வினோத், தன் மொபைல் போனில் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது[13]. மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா, தனக்கு உடல் நிலை சரியில்லை என நினைத்து, வீட்டுக்கு சென்று விட்டார்.

செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா: தங்கள் மகன்-மகள் படிக்க பெற்றோர்கள், ஆயிரங்களைக் கொட்டி, கல்லூரிகளில் சேர்த்து, போன், லேப்டாப் என்று வாங்கிக் கொடுக்கிறார்கள், ஆனால், அவர்கள் இப்படியெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என்று எல்லா பெற்றோர்களுக்கும் தெரியாது[14]. மொபைல் போனில் இருந்த ஆபாச படத்தை வினோத், தன் லேப்-டாப்பில் ஏற்றி நண்பர் செந்தில்குமார் என்பவருக்கும் காட்டி உள்ளார். இது குறித்து பிரியாவுக்கு தெரிந்தது, வினோத்திடம் பிரியா, “ஏன்? ஆபாச படம் எடுத்தாய்’ என, கண்டித்துள்ளார். அப்போது, “நான் தவறு செய்து விட்டேன், இதை அழித்து விடுகிறேன்’ என, கூறினார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வினோத்தை கண்டித்துவிட்டு சென்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பிரியாவின் ஆபாச படம், பலரது மொபைல் போனில் பரவி உள்ளது. அந்த படத்தை வினோத், தன் நண்பர்கள் மொபைல் போன்களுக்கு பரப்பி உள்ளார். இதையறிந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார், வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

 

நாகரிகம் பெயரில் கலாச்சாரத்தை சீரழித்து வரும் மேனாட்டு கருவிகள்: தமிழ் சினிமாக்கள் புளூ பிளிம் எடுப்பது தான் பாக்கி. ஏற்கெனெவே சன்-டிவி நித்யாநந்தா-ரஞ்சிதா வீடியோவை தேர்வு நடக்குக்கும் தொடர்ந்து போட்டு நல்ல காரியத்தை செய்துள்ளது. அதனால், அத்தகைய படங்கள் எடுத்தால், இக்குழுமங்களே ஒளிபரப்பி நல்ல காரியங்களை மேன்மேலும் செய்துவிடும். இப்படி டிவி, கேமரா, செல்போன், லேப்டாப் முதலியன, படிப்பிற்காக என்றில்லாமல், கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவதை மாணவர்கள் கற்ருக் கொள்கிறார்கள். கேடுகெட்ட கயவர்கள், அவற்றை இணைதளங்களிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே, முதலில் இத்தகைய சமூக சீரழிப்பாளர்களை, அடையாளங்கொண்டு எல்லோரும் கண்டித்து, ஒதுக்க வேண்டும். மாணவ-மாணவியர்களை அவர்களிடமிருந்து காக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

05-08-2012


[2] கல்லூரிகளில் போதை மருந்துகளை விற்பது, பிறகு போதை மருந்து பழக்கம் நீக்க புணர்நிர்மான நிலையங்களை நடத்துவது என்ற செயல்கள் நடந்து வருகின்றன. முன்பு, பணக்காரர்கள், வசதியுள்ளவர்கள், கெட்டுப் போனவர்கள் என்ற நிலை மாறி, ஏழை-மத்தியத்தர குடும்ப மாணவர்களை இலக்காக வைத்துக் கொண்டு, இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

[3] ரக்ஷா-பந்தன் என்பது முஸ்லீம்களின் குரூர கற்பழிப்புகள், பெண்கள் கடத்தப் படுவது, முதலிய கொடிய காரியங்களினின்று காப்பாற்ரிக் கொள்ள 13-14ம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டப் பழக்கம். இதனைக் கட்டிக் கொண்டால், முஸ்லீமாக இருந்தாலும், இந்துப் பெண்ணை சகோதரியாக நினைத்து விட்டு விடவேண்டும். ஆனால், இப்பொழுது, அதனை “பிரெண்ட்சிப் பாண்ட்” என்று சொல்லி உண்மையினை மறைக்கப் பார்க்கிறார்கள்.

[8] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ?

https://womanissues.wordpress.com/2012/07/24/denigrating-womanhood-corrupting-society-raping/

[12] உண்மையிலேயே சினிமாக்காரர்கள், வசனம் எழுதுபவர்கள், நகைச்சுவை நடிகர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்திருப்பார்களேயானால், அத்தகைய செயல்களை செய்திருக்க மாட்டார்கள், ஆனால், தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அத்தகைய கேடு கெட்டவர்களை கல்லுரி விழாக்களில் அழைத்து சிறப்பிக்கின்றர்கள் என்பது, அதைவிட கேவலமான விவகாரம்.

[13] இனி மாணவிகள் இவ்விஷயங்களில் விவரமாக போதிக்க வேண்டியுள்ளது. ஒன்று பெற்றொர்கள் அல்லது ஆசிரியைகள் மற்றவர்கள், அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். இப்படி மாணவர்கள் அழைத்தால், அதை தவிர்க்க வேண்டும், தனியாக இருப்பதை அறவே தவிர்க்க வேண்டும், என்றெல்லாம் அறிவுருத்தவேண்டும்.

[14] செல்போன் வாங்கிக் கொடுப்பதை நிறுத்தினாலே, மாணவ-மாணவியர்கள் உருப்பட்டுவிடுவார்கள், திருந்திவிடுவார்கள், படிப்பில் கவனத்தைச் செல்லுத்துவார்கள். இருப்பதைப் பிடிங்கிக் கொண்டாலும் நல்லதுதான்.

கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!

திசெம்பர்19, 2011

கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!

கிருத்துவத்தில் பெண்களின் நிலை: கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் அதிகமாகவே அடக்கியாளப்பட்டார்கள். ஆண்டவனால் படைக்கப் பட்ட ஆதாம்-ஏவாள் அண்ணன்-தங்கை அல்லது அக்காள்-தம்பி என்ற உறவில் இருந்தும் எப்படி புணைந்து குழந்தைகள் பெற்றெடுத்து மனிதகுலத்தை விருத்தியடையச் செய்தார்கள் என்ற முரண்பாட்டைப் பற்றி கிருத்துவர்கள் கவலைப்படுவதில்லை. பகுத்தறிவாளிகளும் அதனைப் பற்றி விவாதிப்பதில்லை. “ஆதாம்-ஏவாள்” கருத்துருவாக்கம், பெண்ணின் தோற்றம் அத்தகைய அடக்கியாளும் தமைக்கு வழிவகுத்தது.

மேரியின் புனிதமான குழந்தை பெற்றெடுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்: ஏசுகிருஸ்து மேரிக்கு ஒரு ஆண்தொடர்பு இல்லாமல் குழந்தை பிறந்தது என்று மத்ததின் அடிப்படை கொள்கையாக இருந்து, அதனை கிருத்துவர்கள் எல்லோருமே நம்பியாக / ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஜோஸப் என்ற கணவன் இருந்தான், அவன் ஏசுகிருஸ்துவின் தகப்பன் என்று ஏற்றுகொள்ள மறுத்தனர் அல்லது மறுக்க / மறக்கப் பட்டது. அதனால், பெண்கள் பூட்டியே வைக்கப் பட்டார்கள். இது அடுத்த பெண்ணடிமையின் நிலை. முதலாம் ஆதாமின் பாவ,ம், இவ்வாறு இரண்டாவது ஆதாமின் மூலமுன் தொடர்கிறது போலும்!

தேவரடியார்களான கன்னியாஸ்திரிக்கள் – ஏசுவின் மனைவிகள்; கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் பெண்கள் அனைவருமே ஆண்டவனுக்கு சொந்தம். அவர்கள் கர்த்தருக்காக/ கர்த்தருக்குப் படைக்க / அர்பணிக்கப் பட்டவர்கள்[1]. கன்னியாஸ்திரிக்களாகும் பெண்களுக்கு ஏசுவுடன் திருமணம் செய்விக்கப் படுகிறது[2]. விரல்களில் மோதிரம் அணிவிக்கப் படுகிறது[3]. அதனால் அவர்கள் “கன்னியாஸ்திரிக்கள்” என்ற நிலையில் இருந்து தங்களது கற்பைக் காத்துப் பேணி சேவைசெய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடிய வேண்டும். அவர்கள் “தேவரடியார்கள்” என்று சொல்லப்பட்டவர்களை விட மிகவும் மோசமாக நடத்தப் பட்டார்கள் / படுகிறார்கள். இந்த கன்னியாஸ்திரிக்களாகும் விழாவைப் பற்றி / சடங்குகளைப் பற்றி / மந்திரங்களைப் பற்றி, எந்த ஆராய்ச்சியாளனும், சரித்திர ஆசிரியனும், பகுத்தறிவுவாதியும் விவாதித்ததில்லை!

கிருத்துவ வார்த்தைகளிலேயே பொருள் பொறுந்தியுள்ளதை கவனிக்க வேண்டும்: சர்ச், ஆபெட், அப்பே, செமினரி, கான்வென்ட், ஆஸ்பத்திரி என்று சேர்ந்துதான் இருக்கும்.

சர்ச் = மாதாகோவில், கிருத்துவர்களின் வழிபடும் இடம்,

ஆபெட் = மதகுமார்கள் வசிக்குமிடம்,

செமினரி = மாணவர்கள் தங்கி படிக்குமிடம்,

கான்வென்ட் = குழந்தைகள் படிக்குமிடம், தங்கி படிக்குமிடம்,

நன்னெரி = கன்னியாஸ்திரிக்கள் வசிக்குமிடம்

ஆஸ்பத்திரி = குழந்தைகள் பிறக்குமிடம், கிருத்துவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பிடம்.

கன்னித்தன்மை / கற்பைக் காக்கும் இடைக்கச்சை: போப்புகள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற குருமார்கள் பிரமச்சரியத்தைக் காத்து வாழ வேண்டும். கன்னியாஸ்திரிக்களும் கற்போடு வாழ வேண்டும். ஆனால் முன்னவர்கள் பின்னவர்களிடம் உறவுகொண்டு பிரச்சினைகள் வர ஆரம்பித்தபோது, கன்னியாஸ்திரிக்களுக்கு “கர்டில்” என்ற “பெல்ட்” அணிவிக்க ஆரம்பித்தார்கள்[4]. அது இக்கால ஜட்டி / பேன்டி / நேப்கின் போன்றது. இடுப்பைச் சுற்றி பெண்குறியை மறைக்கும் உடையாகும்[5]. அதற்கு பூட்டு-சாவி இருந்தன[6]. மதகுருமார்கள் இடுப்புக்கச்சையை அணிவித்து சாவிகளை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்[7]. இடைக்காலத்திற்குப் பிறகு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன, குறைய ஆரம்பித்தன. பொரடஸ்டென்ட் (கத்தோலிக்க எதிர்ப்பு) கிருத்துவம் பிரமச்சரியத்தை கட்டாயமாக்கவில்லை, அதாவது மதகுருமார்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதனால், கன்னியாஸ்திரிக்கள் ஓரளவிற்குத் தப்பித்தார்கள்!

கருத்தடை மாத்திரிகைகள் / சாதனங்கள்: இருப்பினும் கன்னியாஸ்திரிக்களுடன் உறவு ஏற்படும்போது, கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமுற்று குழந்தைகளைப் பெற்றெடுப்பதுண்டு. கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் “அபார்ஷன்” செய்யக் கூடாது. அப்படி செய்திருந்தால் “ஏசுகிருஸ்துவே” பிறந்திருக்க முடியாது. அதனால் தான் கிருத்துவம் ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்கள் முதலியவற்றை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், மறுபுறம் கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமாகாமல் இருக்க இப்பொழுது கருத்தடை மாத்திரிகைகளை சாப்பிடலாம் என்று பரிந்துரை செய்கிறது. “எய்ட்ஸ்” விழிப்புணர்வு போன்று “பிங்க்” நிறத்தில், “பிங்க் பைபிளையும்”[8] வெளியிட்டாகிவிட்டது! கத்தோலிக்கப் பத்திரிக்கைகளும் அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தாகிவிட்டது[9]. உலகமுழுவதும் ஒரு லட்சம் கன்னியாஸ்திரிக்கள் இருக்கிறர்களாம். அவர்கள், பிரம்மச்சரியத்தைக் காப்பதால், மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கு உள்ளாகிறர்களாம். அதனால், அவற்றிலிருந்து தப்பிக்க கர்ப்பத்தடை மாத்திரிகைகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்[10]. கத்தோலிக்க சர்ச் இதற்கு அனுமதியளித்துள்ளதாம்[11]. ஒருவேளை இவ்வாறு செயற்கை முறை தேவையில்லை என்றால், உண்மையாகவே உடலுறவு கொண்டால் அப்பிரச்சினை தீர்ந்து விடுமே, அதாவது, பெண்களை அடக்காமல், இயற்கை ரீதியில் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்குமே?

வேதபிரகாஷ்

19-12-2011


[5] A priestly vestment generally made of white linen, but sometimes of silk, wool, or cotton and of the color of the day, tied around the waist to confine the alb, worn at Mass. It symbolizes chastity. Wrapping it about the alb the priest prays: “Bind me, O Lord, with the cincture of purity and chastity.” As a cord, or often as a broad sash, it is included in almost every form of religious or ecclesiastical costume.

[6]chastity belt is a locking item of clothing designed to prevent sexual intercourse. They may be used to protect the wearer from rape or temptation. Some devices have been designed with additional features to prevent masturbation. Chastity belts have been created for males and females, ostensibly for the purpose of chastity.

[7] Chastity Belts - Also known as a "girdle of purity", chastity belts peaked in popularity during the twelfth century, when crusaders and warring knights were away from their homes for long periods of time.  Forged out of metal by blacksmiths, a husband could lock his wife in one of two forms of girdles-- a partial chastity belt covering only the front region of the vagina (with a narrow vertical slit which allowed for urination), or a full chastity belt which also covered the back regions of a woman's anatomy (with a second opening to allow for defecation.) Physicians of the time claimed that a women could wear either the full or partial chastity belts for months without any harmful effects--as long as the woman washed the area frequently.

அக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா?

திசெம்பர்10, 2011

அக்னி சேத்திரத்தில் நடந்த பெண் எரிக்கொலை: ஆண்டவனுக்கு பொறுக்குமா?

 

கணவனை இழந்த மனைவியின் கள்ள உறவு: கணவனை இழந்த பெண்கள் ஒன்று கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இலை நாகரிகத்தின் பாதையைப் பின்பற்றுவதானால், மறுபடியும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில் இருந்த பெண்ணின் முடிவுதான் இது. ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை ஒருவர் உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் திருவண்ணாமலை அருகே நடந்துள்ளதாம். திரிவண்ணாமலை கார்த்திகை தீபம், கிரிவலம் என்று அமர்க்ல்களப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் இப்படியொரு காமதீபம் எரியூட்டல்!

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது, எதற்கு காமம்? திருவண்ணாமலை அருகே நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. 45 வயதான இவரது கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார்.  அஞ்சலைக்கு ஒரு மகன் விஜயகுமார் (25), ஒரு மகள் ரேவதி (22) உள்ளனர்[1]. ரேவதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை.அஞ்சலைக்கும், காசி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தானே பிரச்சினை! தனது மகளின் 3 பவுன் நகையை காசி எடுத்து விற்று விட்டதை அறிந்தார் அஞ்சலை. சரசமாட வரும்போது, உருவிவிட்டார் போலும்!! இதனால் காசி மீது கடும் கோபம் கொண்டார். இது தொடர்பாக அஞ்சலத்திற்கும், காசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது[2].

கள்ள உறவு என்று இருக்கும் போது, மகன் சபரி மலைக்குச் சென்றால் என்ன, எந்த மலைக்குச் சென்றல் என்ன? மகன் இந்த நிலையில் அஞ்சலையின் மகன் விஜயக்குமார் சபரிமலைக்கு போயுள்ளார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த காசி, அஞ்சலையை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் சபரிமலைக்குப் போயிருக்கும் நேரத்தில் இது கூடாது என்று அஞ்சலை மறுத்துள்ளார்.  தனது மகன் சபரிமலைக்கு சென்று வந்தபிறகு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது[3].  கள்ள உறவுக்கென்ன நியாயம், தர்மம், சாத்திரம்? இதெல்லாம் பார்க்காத நிலையில் தானே, உறவு இருந்துள்ளது?

கள்ள உறவு கொண்ட ஆணின் சீற்றம் எரித்து விட்டது: காமத்தீ கொண்ட காமுகனுக்கு என்ன சாத்திரம்? இதனால் கோபமடைந்த காசி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அஞ்சலை மீது ஊற்றி தீவைத்து விட்டார். தீக்காயம் பட்டு துடித்த அஞ்சலையை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தன்னை காசிதான் தீவைத்துக் கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார் அஞ்சலை. இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார் காசியைக் கைது செய்தனர்[4]. இந்த நிலையில் அஞ்சலை இறந்து விட்டதால் அவரது வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக மாற்றி காசி மீதான வழக்கையும் கொலை வழக்காக போலீசார் பதிவுசெய்தனர்.

நவீன மனுக்கள், மனுவாதிகள், இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? நாளிதழ்களில், இப்படி திருமணத்தைக் கடந்த உடலுறவு, திரைப்படங்களில், தி-சீரியல்களில் நியாயப்படுத்தப்படுகிறது. கதை, கட்டுரை, கவிதை, இணைதளம் என்றால் கேட்கவே வேண்டாம். ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு சுதந்திரம். நாய்களையும் விஞ்சி தெருக்களில் கூட உடலுறவு கொள்ளலாம். அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள், எழுதப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளுக்கு சாகித்ய அகடமி, பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகள் கூட கொடுக்கலாம். ஆனால், கணவன்-மனைவி எப்படி ஒழுங்காக இருக்க  வேண்டும் என்ரு சொல்வாரார்களா? நவீன மனுக்கள் இதற்கு என்ன சாத்திரம் உருவாக்கப் போகிறார்கள்?

வேதபிரகாஷ்

09-12-2011


[1] நக்கீரன், உல்லாசத்திற்குமறுப்பு: உயிருடன்தீவைக்கப்பட்டபெண்பரிதாபமாகஉயிரிழப்பு, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66740

[4] தினமணி, திருவண்ணாமலை: இணங்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்றவர் கைது, First Published : 09 Dec 2011 02:49:34 PM IST; Last Updated : 09 Dec 2011 03:07:42 PM IST, http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88:+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81&artid=519545&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest


அமெரிக்காவை மிஞ்சும் தமிழர்கள் / இந்தியர்கள்!

நவம்பர்6, 2011

அமெரிக்காவை மிஞ்சும் தமிழர்கள் / இந்தியர்கள்!

 

நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை: கணவனுக்கு வலை வீச்சு[1]: இத்தகைய வன்முறைக் குற்றங்கள் தமிழகத்தில், இந்தியாவில் நடப்பது நிறுத்தப்படவேண்டும். சமூகத்தில் கணவன்-மனைவி உறவுமுறைகளில் ஏன் விரிசல்கள் வருகின்றன என்பதை ஆய்ந்து முதலில் தீர்வு காணவேண்டும். சென்னையை அடுத்த மணப்பாக்கம் பெரிய காலனியை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 40). மணல் விற்பனை செய்யும் ஏஜெண்ட். இவருடைய மனைவி ஜெயா (35). இவர்களுக்கு லோகேஸ்வரி (15), இலக்கியா (13) ஆகிய மகள்களும் உள்ளனர். ஜெயா பூ வியாபாரம் செய்து வந்தார். ஜெயாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு

அமரிக்காவைப் போன்ற குற்றங்கள் இந்தியாவில் பெருகி வருவது, அபாயகரமானது. பொதுவாக தமிஅழ் திரைப்படங்களில், டிவி-சீரியல்களில்  கணவன்-மனைவி உறவுமுறை மிகவும் கொச்சைப் படுத்தப் படுகிறது. ஒரு பெண் பலருடன் தொடர்பு, ஒரு ஆணுக்கு பல மனைவிகள் என்று தான் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் அவ்வாறு சமூகத்தை, பெண்மையைக் அசிங்க / கொச்சைப் படுத்துவோர்களுக்கு தேசிய / மாநில விருதுகள் எல்லாம் கொடுக்கப் படுகின்றன.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். ஜெயாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி அன்று ஜெயாவுக்கும், சேதுராமனுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டதற்கு, ஜெயா ஊருக்கு சென்றிருப்பதாக கூறி சேதுராமன் மழுப்பியுள்ளார். அதன்பிறகு ஜெயாவைக் காணவில்லை. சொந்த ஊருக்கு சென்று இருப்பதாக ஜெயராமன் கூறினார்[2]. இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள பொது கிணற்றில் கடந்த 2 தினங்களாக சேதுராமன் மண்எண்ணெய், பெனாயில் ஆகியவற்றை ஊற்றியதை பொதுமக்கள் பார்த்தனர். எதற்காக இதை கிணற்றில் கொட்டுகின்றாய்?” என்று அந்த பகுதி மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், கிணற்றில் கழிவுகளைப் போட்டேன். துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊற்றினேன்” என்றார். இதற்கிடையே அங்கு துர்நாற்றம் அதிகமாக வீசுவதைக் கண்ட பொதுமக்கள் கிணற்றின் மேல் இருந்த மூடியை அகற்றி பார்த்தனர். அப்போது 4 பாலிதீன் பைகள் கிணற்றில் கிடந்தது தெரிய வந்தது[3].


மனைவி உடலைத் துண்டு-துண்டாக்கி கிணற்றில் போட்ட கணவன்[4]: உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் அளித்தனர். பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர்கள் முருகேசன், விஜயகுமார், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றில் மிதந்த 4 பைகளை வெளியே எடுத்து பார்த்தபோது ஒரு பெண்ணின் கால்கள், உடல் பாகங்கள், கைகள் இருந்தன. தனது மனைவி ஜெயாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பையில் போட்டு கிணற்றில் சேதுராமன் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.

சாவைப் பற்றி அருமையாகப் பேசப் பட்டு வருகின்றன, மனித உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றெல்லாம் வியாக்யானம் / விளக்கல் கொடுக்கப் படுகின்றன. பயங்கரமான கொலையாளிகளுக்கு கூட தூக்குத் தண்டனை கூடாது என்று பேசப்படுகின்றன. நாளைக்கு இந்த கொலையாளிக்கும் திருந்தலாம் என்று குறைந்த தண்டனைக் கொடுக்கலாம். சிறையிலிருந்த் வெளியே வந்ததும், இன்னொரு திருமணத்தையும் செய்து கொள்ள பரிந்துறைக்கலாம்.

சேதுராமனை தேடி சென்றபோது வீட்டை பூட்டிக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
மகள்களை தவிக்க வைத்த தகப்பன்: அவருடைய மகள் லோகேஸ்வரி பரங்கிமலையில் உள்ள பள்ளியில் 10 ம் வகுப்பும், இன்னொரு மகள் இலக்கியா 8 ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சேதுராமனின் மகள்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்,   எங்களுடைய தந்தை பகலில் பள்ளிக்கூடத்திற்கு வந்து,  நான் ஊருக்கு செல்கிறேன். 2 நாளில் வந்து விடுவேன்’ என்று கூறி சென்றார்” என்று தெரிவித்தனர். மேலும், ஜெயாவின் தலை கிடைக்கவில்லை. பொதுக்கிணறு கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாததால் மூடி போடப்பட்டு உள்ளது.


தலைமறைவான கணவன், தேடிவரும் தனிப்படை: மனைவி நடத்தையால் சந்தேகப்பட்டு அவளை சேதுராமன் கொடூரமாக கொலை செய்து பாலிதீன் பைகளில் உடல் உறுப்புகளைப் போட்டு கற்களை கட்டி கிணற்றில் போட்டு இருக்கிறார்[5].

இப்பொழுதெல்லாம் பொலீஸ் தனிப்படை அமைப்பது என்ற செய்தி அடிக்க்கடி வருகின்றது. அப்படி போலீஸார் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஜெயாவை கொலை செய்து விட்டு கடந்த 27 ந் தேதி முதல் எதுவும் நடக்காததுபோல அந்த பகுதியில் சேதுராமன் நடமாடி இருக்கிறார். மேலும் கிணற்றில் கிடக்கும் தலையை எடுக்க தண்ணீரை அகற்ற வேண்டும் என்று தீயணைப்பு துறையினருக்கு போலீசார் அழைப்பு விடுத்தனர். அவர்கள் வராததால் போலீசார் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை வெளியேற்றி தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தப்பி ஓடிய சேதுராமனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

துரோகம்இழைத்தமனைவியைகண்டம்துண்டமாகவெட்டிகொலைசெய்தேன்: கணவன்வாக்குமூலம்[6]: மனைவியின் உடலை, கண்டம் துண்டமாக வெட்டி, கிணற்றில் வீசிய கொடூரக் கணவனை, போலீஸார் கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின்படி, பாறாங்கற்களைக் கட்டி வீசிய தலை, கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது[7]. திருச்செந்தூர் அடுத்த, பிச்சவிளையைச் சேர்ந்தவர் சேதுராமன் (40). இவர், சிறுவயதில், குடும்பத் தகராறில் சென்னைக்கு ஓடி வந்து, மளிகைக் கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளில் வியாபாரம் செய்தார். நண்பர்களுடன், திண்டிவனத்தில் விபச்சார விடுதிக்கு, சேதுராமன் சென்ற போது, அங்கு, கடலூரைச் சேர்ந்த ஜெயா (16), என்ற பெண்ணுடன் ஜாலியாக இருந்தார். ஜெயாவின் அழகில் மயங்கி, அவரை சென்னைக்கு அழைத்து வந்த சேதுராமன், பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டார்[8].
சென்னை, கிண்டி மடுவங்கரையில், ஜெயாவும், சேதுராமனும் வாடகை வீட்டில் வசித்தனர். அச்சகம், கம்ப்யூட்டர் மையத்தை நடத்திய சேதுராமனுக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், கொளத்தூரில் தியேட்டரை லீசுக்கு எடுத்து, சினிமா படங்களைத் திரையிட்டார். மணப்பாக்கம் பெரிய காலனியில் இடம் வாங்கி, வீடு கட்டி குடும்பத்தோடு சேதுராமன் குடியேறினார். சினிமா தொழிலை விட்டுவிட்டு, மணல் வியாபாரத்தை, சேதுராமன் செய்து வந்தார். இந்நிலையில், சேதுராமன் விருப்பத்துடன், ஜெயா, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களை வாங்கி, வியாபாரம் செய்து வந்தார். அப்போது, ஜெயாவுக்கும், கோயம்பேடு வியாபாரி ஜான் பீட்டருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சேதுராமன், பழைய நிலையைச் சுட்டிக்காட்டி,

விபச்சாரிகளுக்கு அத்தகைய எண்னம் இருக்குமா, இல்லை சோரம் போனதால் போகட்டும் என்ற நிலை வளருமா, “மரத்து விட்டது / பழகி விட்டது” என்ற மனப்போக்கா, முதலியவற்ரைப் பற்றி மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

ஜெயாவை கண்டித்தார். ஆயினும், ஜான் பீட்டருடனான தொடர்பை, ஜெயா விடவில்லை. தன் 13, 12 வயது பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, ஜெயாவின் சொந்த ஊரான கடலூருக்கு, குழந்தைகளுடன் ஜெயாவை சேதுராமன் அனுப்பி வைத்தார். ஓராண்டுக்குப் பின், “இனிமேல் எங்கும் போகமாட்டேன்’ எனக் கூறி, சென்னையில் சேதுராமனுடன் சேர்ந்து, ஜெயா குடும்பம் நடத்தி வந்தார். சிறிது நாட்களுக்குப் பின், அடிக்கடி ஜெயா வெளியே சென்று வந்தார். இதனால், ஜெயா மீது சேதுராமனுக்கு மீண்டும் சுந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள், காஞ்சிபுரத்தில், ஜான் பீட்டருடன் ஜெயா இருந்ததை, நேரில் பார்த்த சேதுராமான், அவரை அடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில், தீபாவளிக்கு சில நாட்கள் முன், வெளியூர் போவதாகக் கூறி சேதுராமன் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பியபோது, 25 வயது வாலிபர் ஒருவருடன், ஜெயா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோபத்தில், ஜெயாவின் தலையை சுவரில் மோதினார். இதில், படுகாயமடைந்த ஜெயா, மூர்ச்øசுயாகிவிட்டார். உட்கார்ந்த நிலையிலேயே ஜெயா இறந்துகிடந்தார். ஜெயாவின் உடலை கண்டம் துண்டமாக வெட்டி, கழுவி, பிளாஸ்டிக் பையில் போட்டார். தலையை மட்டும், வேறொரு பிளாஸ்டிக் பையில் போட்டு, உடன் பெரிய பாறாங்கற்களை இணைத்து, பொதுக் கிணற்றில் போட்டுவிட்டார். தினமும்

விபச்சாரர விடுதியில் இருந்த ஜெயாவை மீட்டு, வாழ்க்கை கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்ததால், கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டதால், இதையும் நியாயப்படுத்த முடியுமா என்று அறிவுஜீவவிகள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கிணற்றில் வீசிய உடல் உறுப்புகள், வெளியே வருகிறதா என, பல நாட்கள் கண்காணித்தார். துர்நாற்றம் வீசியதை அறிந்த பொது மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மழை பெய்ததால், கிணற்றில் மிதந்த உறுப்புகளை, போலீஸார் கண்டெடுத்தனர். தலை மட்டும் கிடைக்காததால், மாநகராட்சி ஊழியர்கள் கிணற்றில் தீவிரமாகத் தேடினர். கொலை செய்த சேதுராமனின் வீடு பூட்டிக் கிடந்தது. அவனது மொபைல்போன் டவர், கே.கே.நகர் பகுதியில் காட்டியது. இதையடுத்து, சேதுராமனை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான சேதுராமன் கொடுத்த தகவலின்படி, கிணற்றில் கற்களைக் கட்டி, தூக்கி வீசிய தலையையும் போலீஸார் கண்டுபிடித்தனர். “விபச்சாரர விடுதியில் இருந்த ஜெயாவை மீட்டு, வாழ்க்கை கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்ததால், கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்’ என, சேதுராமன், போலீஸ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் கொலை செய்தேன் மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம்[9]: திருச்செங்கோட்டை அடுத்து உள்ள நாராயணம் பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டையன் (வயது 37) என்பவரின் மனைவி வளர்மதி (27) இவர் களுக்கு தினேஷ், தீபா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 03.11.2011 அன்று வளர்மதி அவரது வீட்டில் கழுத்தில் துண்டால் நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  இது குறித்து தகவல் அறிந்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு

நக்கீரனில் வெளிவந்துள்ள இச்செய்தி அதே மாதிரி இருந்தாலும், பெயர்கள், இடம் முதலியவை மாறியிருப்பதால், வேறாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் வன்முறை எண்ணங்கள் வளர்வது, அத்தகைய கொடிய-குரூருரமான குற்றங்களையும் செய்யத்துண்டுவது, அத்தகைய மனப்பாங்கை ஏற்படுத்தி கொள்வது முதலியன சமூக-ஆய்விற்குரியது. கடந்த அக்டோபர் 2ம் தேதி, இதேப்போல சுரேஷ் என்பவன் குமரி என்ற தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்துள்ளான்[10].

விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து பிண த்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக வளர்மதியின் கணவர் செங்கோட்டையனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 04.11.2011 அன்று காலை திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தல் என்னும் இடத்தில் செங்கோட்டையனை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து செங்கோட்டையன் தனது மனைவியை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசில் கொடுத்து உள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:  எனது மனைவி வளர்மதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இது பற்றி நான் அவரிடம் கேட்ட போதெல்லாம் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. நான் அவளிடம் எதுவும் கேட்டால் என்னிடம் கோபித்து கொண்டு அடிக்கடி அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவாள். என்னை தவிக்க விட்டு விட்டு அவள் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததால் இது குறித்து அவளிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டதில் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு அவளின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாள். எனவே நான் சம்பவத்தன்று அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்றேன். அங்கு வளர்மதி மட்டும் தனியாக இருந்தாள் அவளிடம் வா நாம் குடும்பம் நடத்தலாம் என அழைத்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்து நான் அவளை அங்கு கிடந்த துண்டை எடுத்து அவளது கழுத்தை நெரித்து கொன்றேன். இவ்வாறு செங்கோட்டையன் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.


[6] தினமலர், துரோகம்இழைத்தமனைவியைகண்டம்துண்டமாகவெட்டிகொலைசெய்தேன்: கணவன்வாக்குமூலம், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=344208

காதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்!

பிப்ரவரி18, 2010

காதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்!

காதலால் தந்தையுடன் மோதல்: சென்னை வில்லிவாக்கத்தை சோந்தவர் செல்லத்தம்பி. இவருடைய மூன்றாவது மகள் சண்முகசுந்தரி (26). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவு பேராசிரியராக உள்ளார். இவர் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் தினமும் சென்று வந்தார். பிற்பகலில் அண்ணா பல்கலைகழகத்துக்குச் சென்று எம்.இ படித்தார். அதன் பின் வீட்டுக்குச் செல்வார். வழக்கம் போல் இன்று காலையில் அவர் கல்லூரி பஸ்சில் வந்தார். பின் தனது பையை அலுவலக அறையில் வைத்துவிட்டு அமர்ந்து இருந்தார். அப்போது சண்முகசுந்தரிக்கு, அவரது தந்தை போன் செய்துள்ளார். போனில் பேசியபடி சண்முகசுந்தரி 4வது மாடிக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏறபட்டுள்ளது. எனவே அழுதபடியே அவர் இருந்துள்ளார். இதை கல்லூரி ஊழியர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் 4வது மாடியில் இருந்து சண்முக சுந்தரி திடீரென குதித்தார். பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

பெண்கள் இருவரும் காதலித்து பெற்றோரை தனிமைப் படுத்தினால்? இது குறித்து போலீசுக்கு, கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. கே கே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமணி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சண்முகசுந்தரியின் அக்கா காதல் திருமணம் செய்தவர். அதேபோல், சண்முகசுந்தரியும் காதல் திருமணம் செய்து கொள்வார் என அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்முகசுந்தரியை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளார். மேலும் இவர் சக மாணவர் ஜெகன் என்பருடன் காதல் உள்ளதாகத்தெரிகிறது. இதனால் அவருக்கு தந்தையுடன் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாது வேறு இடத்தில் பயன் பார்த்து திருமணம் நடத்திவிட தந்தை முயற்ச்சிகளை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிந்தவுடன் இவர் மறுத்துள்ளார், எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தந்தை-மகள் இருவருக்கும் சண்டை-வாக்குவாதம் நடந்து வருகிறது. அதே போல் இன்றும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டுள்ளது. மனமுடைந்த சண்முகசுந்தரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிறுக்குத்தனமான காதறுப்புக் காதல்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). கோடம்பாக்கம் சின்னராஜபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர். தந்தை ரயில்வே ஊழியராக உள்ளார். ரேவதி, என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரானேஷை தேடி வருகின்றனர்.

காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சொனிமாவைப் பார்த்து ஏமாறும் இளைஞர்கள்: படிப்பதற்காகப் பெண்கள் வெளியே செல்கிறர்கள். கல்லுரிகளில் ஆண்-பெண்கள் சேர்ந்து படிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. அதேமாதிரி, படித்த / வேலைக்குச் செல்லும் பெண்களும் தைரியமாக வெளியே வருகிறர்கள். தமது ஆண் நண்பர்களுடன் பேசுகிறர்கள், ரிசப்ஸன், கல்யாணம், விருந்து, பார்ட்டி, பிரிவு-உபசாரம் போன்ற காரணங்களுக்காக சத்திரத்திற்கு, ஓட்டல்களுக்குச் செல்கிறர்கள், சாப்பிடுகிறார்கள். அதாவது ஆண்கள் / பெண்கள் எப்படி ஆண்கள் / பெண்கள் கூட சாதாரணமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்களே, அதேமாதிரி இப்பொழுது ஆண்கள்-பெண்கள் சேர்ந்து செய்துவருகிறர்கள். சில நேரங்களில் நெருக்கம் கிருக்கத்தைக் கொடுத்து நட்பு பிணைத்து காதலாகலாம்.

வெலைசெய்யும் பெண்களின் காதல் / கல்யாணம்: வேலைசெய்யும் பெண்களுக்கு மற்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு தைரியம் வந்து “சம்பாதிக்கிறோமே” என்ற நிலையில் பெற்றொர்கள் ஒப்புக்கொள்ளமலேயே வீடைவிட்டு தெரிந்தோ / தெரியாமலோ சென்றுவிட்டு தனியாக குடித்தனம் நடத்தலாம் என்ற எண்ணமெல்லாம் தைரியமாக வரலாம். ஆனால், அதில் அவர்களுக்கு மற்ற கடமைகள் உள்ளதை அவர்கள் மறக்கக் கூடாது. குடும்பம் என்பது ஒரு பந்த-பாச சுழற்ச்சியில் இயங்குவது. குறிப்பாக பெண்களை மட்டும் பெற்ற பெற்றோர்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது பெண்களை நம்பிதான் சாகும் வரை இருக்கவேண்டியுள்ளது. மற்ற உறவினர்கள் பார்த்துக் மொள்வார்கள் என்று சொல்லமுடியாது.

காதலில் இறங்கும் இளசுகள்: இனி தொடர்ந்து, அக்காதலை அலசும்போது, இதில் பெரும்பாலும், அதிகமாக ஆண்களுக்கும், சில பெண்களுக்கும் காம-இச்சை / மோகம் / ரோமாஞ்சகம்தான் முன்னிற்கின்றதேத் தவிர காதலும் இல்லை, நட்பும் இல்லை. அங்கங்கு தெருமுனைகளில் / இருட்டாக அல்லது யாரும் பார்க்க மாட்ட்டர்கள் என்பது போன்ற இடங்களிலும் பேசுவதும், விவாதிப்பதும், சண்டைபோடுவதும் சகஜமாகிவிட்டன. முன்பெல்லாம் யாராவது பெரியவர்கள் அவர்களை விரட்டுவதுண்டு. இப்பொழுதோ “உங்களுக்கு என்ன? இது எங்கள் சமாச்சாரம்” என்று ஆணவத்துடன், அகம்பாவத்துடன் பேசுவதால், “இப்படியாவது ஒழிந்து போங்கள்” என்று அவர்களும் ஒதுங்கிவிடுகிறர்கள்.

சினிமா காதல் செய்து பெண்களை வதைக்காதீர்: ஆனால் பெற்றொர்கள் அதுமாதிரி சொல்லமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்போதுதான் பிரச்சினை வருகிறது. ஆகவே, ஆண்கள் பெண்களை காதலிக்கும் முன் இதையெல்லாம் கருத்தில் கொண்டு காதலியுங்கள், அப்பொழுதுதான் வாழ்க்கை நன்றக இருக்கும், பைத்தியக்காரத்தனமாக “சினிமா காதலில்” இறங்கி பெண்களை வதைக்காதீர்கள் / பெண்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.

என் கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம்- சாமியார் மனைவி!

திசெம்பர்29, 2009

என் கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம்- சாமியார் மனைவி

புதன்கிழமை, டிசம்பர் 23, 2009, 9:34[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/23/easwara-srikumar-s-wife-suspects.html

Lalitha Sreekumar
Eswarakumar Swamiji and Hemalatha

போலீசிடம் வரும் ஹேமலதாவும், வராத ஸ்ரீகுமாரும்: சென்னை: சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இந்த பாடு படுத்துகிறார் போலும் என்று கூறியுள்ளார் ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா. சென்னை காம்தார்நகரை சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் மீது தேனாம்பேட்டை கிரியப்பா தெருவை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறினார். இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு வருமாறு சாமியாரை அழைத்தும் அவர் வராமல் டேக்கா கொடுத்து வருகிறார். இதனால் அவருக்கு கெடு விதித்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இந்த பாடு படுத்துகிறார்போலும்: இந்த நிலையில் தனது கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இவ்வாறு செய்கிறாரோ என்று கூறியுள்ளார் சாமியாரின் மனைவி லலிதா. இதுகுறித்து அவர் கூறுகையில், “குருஜி தவறு ஏதும் செய்யவில்லை என்றாலும் பெண்களுக்கு சட்டத்தில் சாதகமான இடம் உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் கூறுவது உண்மையா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். ஹேமலதாவுக்கு பின்னணியில் நிலஅபகரிப்பு கும்பல் ஒன்று உள்ளது. அவர்களின் பணம் தான் அவரை கோர்ட்டு, போலீஸ் நிலையம் என்று பேச வைக்கிறது. ஒரு பெண் சாதாணமாக கற்பழிப்பு புகார் கொடுக்க முடியாது. ஒருவேளை குருஜி மேல் ஹேமலதாவுக்கு விருப்பம் (காதல்) ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. குருஜி நல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரை கைது செய்ய வைத்தே தீருவேன் என்று ஹேமலதா கூறி வருவதில் இருந்தே அவரது உள்நோக்கம் என்ன என்று புரிகிறது. அவரது பின்னணியில் உள்ள நிலஅபகரிப்பு கும்பலின் சதி தான் இந்த அவதூறு வழக்கு. சில சட்ட காரணங்களால் குருஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை”, என்றார் லலிதா.

ஹேமலதா வாக்குமூலத்தில் கூறியதாக ஊடகங்களில் வெளியானது: தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஹேமலதா. இது உண்மையா என்று விசாரிக்க வேண்டுமானால் சாமியார் நிச்சயம் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விமர்சனம்:

ஊடகங்களின் தொல்லைத் தாங்கமுடியவில்லை.

அறைத்த மாமவையே அறைத்து, செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. முன்னமே, இதிலுள்ள முரண்பாடுகள், இடைவெளிகள் முதலியவற்றைச் சுட்டிக் காண்பித்தேன்:

2007ல் கற்ப்பழிப்பு, 2009ல் புகார்! இந்நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதை ஏன் வெளியில் சொல்லவில்லை?. நான் எந்த தவறும் செய்யவில்லை. முடிந்தால் என் மீதான புகாரை அப்பெண் நிரூபித்து காட்டட்டும். ஒரு முறை சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், இன்னொரு முறை டெல்லியில் வேலை வாங்கி தருவதாக நான் கூறியதாகவும் தப்பு தப்பாக பேசுகிறார்”.

ஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல், சொத்து தகராறு, சிவில் பிரச்சினை……………….?

49 தடவை அமைதி, 50வது தடவை புகார்: “50 முறை நான் பலாத்காரம்”: இது நிச்சயமாக உள்நோக்குள்ள புகார். 50 தடவை பலாத்காரம் செய்தால் எப்படி 49 தடவை அமைதியாக இருந்து, 50வது தடவை புகார் செய்கிறார். ஏதோ ‘சாமியாருக்கு” பரிந்து விவாதிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர் அவ்வாறே செய்திருந்தால், தாரளமாக தண்டனைக் கொடுப்பலாம். ஆனால் இந்த புகாரிலுள்ள செயற்க்கைத்தனம் வெளிப்படுவதால் விவாதிக்க வேண்டியுள்ளது. பெண் ஒப்புக்கொள்ளாமல் அத்தகைய 49 திரும்ப-திரும்ப பலாத்காரம் செய்தல்கள் நிகழ்ந்திருக்காது. எந்தெந்த நாட்களில், எங்கு, எப்படி அந்த 49 பலாத்காரம் செய்தல்கள் நடந்தன என்றும் கேட்கப் படலாம்.

இப்பொழுது, 15 நாட்களுக்குப் பிறகு, தீடீரென்று 30 + 20 = 50என்று கணக்கு சொல்கிறார்கள் ஊடகக்காரர்கள்!

முன்பு ஊடகங்கள் குறிப்பிட்டது: “இந்நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார்”.

இப்பொழுது குறிப்பிடுவது: தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஹேமலதா.

இவ்வாறு செய்திகளைப் போட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறார்களா? உண்மையிலேயே,  பெண்களின் நிலைக்காக வருத்தப் படுகிறார்களா?

ஈஸ்வர ஸ்ரீகுமார்,  மனைவி லலிதா மற்றும் ஹேமலதா ஒருவருக்கொருவர் நன்றாகவே தெரிந்துள்ளனர்.

சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இந்த பாடு படுத்துகிறார் போலும்“, என்று கூறியுள்ளார் ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா.

இப்படி ஒரு மனைவி கூறுவதிலிருந்தே பல சாத்தியக்கூறுகள் வெளியாகின்றன:

1. “ஃபிஸியோதெராஃபிஸ்ட்” என்ற வந்த ஹேமலதாவிற்கு அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இது லலிதாவிற்குத் தெரிந்தேயுள்ளது.

3. ஹேமலதா தனது கணவனிடத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார் எனும்போது, அவளை தனது கணவனிடத்தில் நெருக்கமாக எந்த காரணத்திற்கும் விட்டிருக்கக்கூடாது.

4. தனியாக இருக்கும் பெண், தனது வாழ்வாதாரங்களுக்காக, தன்னை ஒரு இடத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்வாள் என்பது உண்மை. சந்தர்ப்பம் வரும்போது, நிச்சயமாக அதைப் பயன்படுத்திக் கொள்வாள்.

5. பிறகு தனக்குப் போட்டியாக உள்ள பெண்ணைக் கழட்டிவிட, வெளியேற்றப் பார்ப்பாள். எல்லாம் அரசியல்வாதி மாதிரிதான்.

6. இப்படி இரு பெண்கள் கூறுவது உண்மையென்றால், இதில் ஒன்றும் விஷயமோ, விவகாரமோ இல்லையென்றே சொல்லிவிடலாம்.

7. சாமியாரக இருந்தாலென்ன, முதலமைச்சாரக இருந்தாலென்ன, கவர்னராக இருந்தாலென்ன………………..இல்லை நடிகையாக………….நடிகனாக………….பாமரனாக…………….., தொழிலாளியாக,  ……………….., இருந்தாலென்ன………….நடப்பது நடந்துகொண்டேயிருக்கிறது

8. ஆகவே அப்பெண்கள் படுக்கையறை விஷயத்தை இவ்வாறு ‘பப்ளிக்” விஷயமாக்கிவிட்டது தான் அசிங்கமாக இருக்கிறது.

9. விசித்திரமென்னவென்றால். நமது பெண் வீராங்கனைகள், போராளிகள், தமிழச்சிகள் முதலியோர் அமைதி காக்கின்றனர்.

10. தேவநாதன் விஷயத்தில் வந்த வீரம் மற்றவர்களுக்கும் இங்கு வரவில்லை.

11. மற்ற இந்து-அல்லாத சாமியார்களை மறந்தேவிட்டார்கள் போலும்!

12. ஆஹா, துடப்பைக்கட்டையில் கூட ஜாதி-மதம் பார்க்கும் தமிழகமே வாழ்க!

!!!!!

பெண்களின் மார்புடை சர்ச்சை!

திசெம்பர்18, 2009

பெண்களின் மார்புடை சர்ச்சை!

ஜாக்கெட்‘: அரசின் கட்டுப்பாடுஆசிரியைகள் கடும் அதிருப்தி

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009, 11:04[IST]

http://www.deccanchronicle.com/chennai/dress-code-teachers-tn-871

பெற்றோர்களிடமிருந்து புகார்கள்: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு[1] உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்தது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.

ஜாக்கெட்டுகளின் அசிங்கமான-ஆபாசமான அமைப்பு: நாகரிகம் மாறுகிறது, ஆனால் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை. அவையும் மாறுகின்றன என்றால் மேனாட்டு கோளாறுகள் மூலம்தான். காமத்திற்கும்-காதலுக்கும், நாகரிகத்திற்கும்-ஒழுக்கத்த்ற்கும் இலக்கணம் கேட்டு வாதிப்பதில் கற்போ, பெண்களின் ஐங்குணங்களையோப் போற்றிக் காக்க முடியாது[2]. முன்னும் பின்னும் வேண்டுமென்றே வடிவமைப்பு என்ற “போர்வையில்” உடலை அதிகமாக வெளிக்காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு செய்யவேண்டும் என்ற முறையில் அவை இருக்கின்றன (vulgar design cuts of Blouse ). இதில் ஜன்னல் வகைமாடல் (Window type designer blouses) மிகவும் பிரசித்தம், இதை .டிஸைனர் பளவுஸ் என்றும் கூறுகிறார்கள். குஷ்பு இதைதான் அணிந்து பிரபலமாக்கி வருகிறார். அதற்காக அவர் பணமும் பெறுகிறார். ஆண்கள் டி-சர்ட்டுகள், வெளிர்க்கப்பட்ட உடலை ஒட்டிய இருக்கமான ஜீன்ஸ் (bleached and skin-tight jeans) முதலியவை அணிந்து வரக்கூடாது.

நாகரிகமான முறையில் உடை அணிதல்! இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், “எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்”. நிச்சயமாக, மக்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆரோக்யமான கட்டுப்பாடை, பின்பற்ற வேண்டிய ஒழுங்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்தை எதிர்பார்க்கிறார்கள்.

நல்ல டேஸ்ட் / கெட்ட டேஸ்ட் / கேட்ட டேஸ்ட்: இத்தகைய விளக்கங்கள், இலக்கணங்கள், மரபுகள், விவாதங்கள் தேவையா? பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே? மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை! அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அவள் சமூகத்தில், அத்லிம் அறிந்து-தெரிந்திருக்கும் சமூகத்தில் இருக்கும்போது, நான் வேறுவிதமாக இருப்பேன் எனும்போது தான் வருகிறது விவகாரம்.

நடிகைகள் செய்வதை எல்லாம் ஆரிசியைகள் செய்வதை எந்த பெற்றொர்களும் விரும்ப மாட்டார்கள்: ஆசிரியைகளின் பெற்றோர்களோ, கணவன்மார்களோ, அவர்களது பிள்ளைகளே விரும்ப மட்டார்கள். எப்படி பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வரும் முன்னர், வர்ம் போது, வந்த பின்னர், தமது கைப் பைகளிலிருந்து நடமாடும் அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொண்டு அலங்காரப் படுத்த்க் கொண்டு உள்ளே நுழைகிறர்கள் என்பது அறிந்ததே. அதுபொலத் தான் ஆடை அலங்காரமும். ஏதாவது “ஃபங்ஸன்” / விழாக்களுக்கு செல்கிறர்கள் என்றால் தனியாக அத்ற்கு ஆடைகளையே எடுத்து வந்து விடுவார்கள். வீட்டில் திட்டுவார்கள், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அங்லிருந்து அணிந்து சென்று, பிறகு மறுபடியும் மாற்றி வீட்டிற்கு செல்வார்கள்! இத்தகைய “ஆடை மாற்றங்கள்” / போலித்தனங்கள் பெண்களுக்குத் தேவையில்லையே!

கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட்: குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார். ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” என்று குறிப்பிடும்போதே ஆசிரியைகள் வெட்கப் படவேண்டும், ஆத்திரமோ, கோபமோ படக்கூடாது. இங்கு கூட “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” எனும்போது “கண்ணை உருத்தாத / உருத்தாமலிருக்கும் விதமான ஜாக்கெட்” எது என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா, ஆராச்ச்சி செய்வார்களா?

“உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்” சமாச்சாரம் அல்ல: இன்று பெண்ணுரிமை என்று அதற்கும் உரிமைகள் கேட்டு கொடி பிடிக்கிறார்கள் பெண்கள், பெண்ணூர்மை சங்கங்கள் முதலியன! சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா? ஆகவே உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். ட்க்ஹெரிந்தும், தெரியாத மாதிரி நடிப்பது, விதண்டாவாதம் செய்வது முதலியனத் தான் பொறுப்பற்ற செயல்கள். அவர்கள் அசிங்கமான-ஆபாசமான ஜாக்கெட் அணியும் ஆசிரியைகளைவிட மோசமானவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடை: ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பல பள்ளிகளில் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் சீருடைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. அங்கும் அவ்வாதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உள்ளது.
பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும்: அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர். இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது. எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா? என்கிறார் அவர். சௌகரியம் என்று வேற்விதமாக வந்தால் என்னாவது, அதைத்தான் யயசிக்க வேண்டியுள்ளது.

தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.: உண்மை, ஆனால் விதண்டாவாதிகள் உடனே எது தனது கலாச்சாரம், யாருடைய கலாச்சாரம், எது பாரம்பரியம், யாருடைய பாரம்பரியம், என்றெல்லாம் வாதிடுவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். சங்க காலத்தில் பெண்கள் மார்பு கச்சை அணிந்தார்கள், கேரளாவில் சில பெண்கள் ஜாக்கெட்டே போடவில்லை, கோவில் சிலைகளே நிர்வாணமாகத் தானே உள்ளன என்ற வாத்ங்கள் எல்லாம் வரும். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் – ஆணோ, பெண்ணோ – தனது தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அத்தகைய நிலைக்குட்படித்துவார்களா? அதேப் போல தனது தந்தை, கணவன், சகோதரன், மகன் இவர்களை எந்த பெண்ணும் புதிய க்லாச்சாரம் / மேனாட்டு இலக்கண வர்க்க விதிகள் / பாலியல் சுதந்திரங்கள் என்ற நோக்கில் அனுமதிப்பார்களா அல்லது  கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவார்களா?

ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள்: ஊடகங்களில் ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள் நாகரிகமாகவா உள்ளன? இதோ உதாரணத்திற்கு சில – இவை ஆசிரியைகள் ஆடை, அலங்காரம், அழகு காட்டுதல், காதல், கள்ளக் காதல் முதலியவற்றை சம்பந்தப்பட்டது:

  • ஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது : கணவர், கள்ளக்காதலி மீது போலீஸ் சந்தேகம்http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=7592
  • பள்ளி சுவர் ஏறி குதித்து காதலை சொன்ன மாணவன் ஆகஸ்ட் 30,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4374
  • கள்ளத்தொடர்பு ஆசிரியை மீது நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு மே 06,2009,00:00  IST http://www.dinamalar.com/court_detail.asp?news_id=3030
  • பள்ளி மாணவி படுகொலை : ‘கல்நெஞ்ச’ ஆசிரியர் கைது நவம்பர் 09,2008,00:00  ISTதரணிசெல்வனுக்கும், அவர் வேலை பார்த்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தரணிசெல்வனின் மனைவி ராதிகாவை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர் http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=6115
  • கள்ளக்காதலால் ஆசிரியை குத்திக்கொலை : செஞ்சி அருகே கணவன் போலீசில் சரண் நவம்பர் 04,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=5972

இவையெல்லாம் தமிழக சினிமாக்களில் தமிழ் பேசி வரும் தமிழச்சி நடிகைகளின் விவகாரங்கள் அல்ல. தமிழச்சி ஆசிரியைகளின் அலங்கோலங்கள் தாம். சமூகத்தில் அக்கரைக் கொண்டவர்கள், பெண்ணுரிமை, தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்றெல்லாம் நியயப் படுத்துவார்களா? பாடம் சொல்லிக் கொடுக்குக் ஆசிரியைகள் இவ்வாறு இருந்தால், அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் என்னாவார்கள்?

பெண்களிடம்தான் உலகமே இருக்கிறது: இது ஏதோ சித்தாந்தம் அல்ல. அதனால்தான் எல்லா பிரச்சினைகள், விவாதங்கள், சர்ச்சைகள் சம்பாந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாமே பெண்களுடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஒரு ஆண்-பெண் சேரும் நிலை, சேர்ந்திருக்கும் அமைப்பு, குடும்பம், சமூகம், குமுக்கம், குழு, என்று எப்படி சொன்னாலும், மனிதர்கள் நாய், பன்றிகள் போன்று தமது நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ளமுடியாது. விதண்டாவாதங்கள் அல்லது தெரிந்தே தெரியாத மாதிரி செய்யும் வாதங்களினால் எந்த பலனும் இல்லை. ஆகவே இன்றைய சூழ்நிலைகளில் பெண்களே அறிந்து செயல்படவேண்டியுள்ளது,

வேதபிரகாஷ்

18-12-2009 ©


[1] மற்ற விஷயங்களில் – அரசு விழாக்களில் பெண்கள் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும்………..இத்யாதி………….இவ்வாறு ஆணைகள் பிறப்பிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

[2] அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு பெண்களின் ஐங்குணங்கள் என்பர். இவையெல்லாம் பெண்களுக்கு இப்பொழுது வேண்டுமா, வேண்க்டாமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டுமானால் குஷ்பு, நமிதா, ஸ்ரேயா, மல்லிகா, ஸ்னேஹா முதலிய தமிழச்சிகளிடம் சென்று தான் விவரங்களை சேகரித்து வரவேண்டும்.