கற்பழிப்பு ஒரு சாதாரணமான தவறா – தருண் தேஜ்பாலுக்கு வக்காலத்து வாங்கும் பெண்–நண்பர்கள்!
2014-15 நிகழ்வுகள் – தருண் தேஜ்பால் வழக்கு நிலவரம்: பாலியல் வழக்கில் கைதான ‘தெஹல்கா’ நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பாலை ஜாமீனில் விடுவித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை.1, 2014 அன்று உத்தரவிட்டது. கடந்த 2013 ஆண்டு நவம்பரில், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹோட்டல் லிப்ட்டில், தேஜ்பால் தன்னை பலாத்காரம் செய்ததாக அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் நிருபர் புகார் அளித்தார். தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவா போலீஸாரால் கடந்த நவம்பர் 30-ம் தேதி 2013 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி 2014ல் இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி 2014 மரணமடைந்ததால் அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்தும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வசதியாக ஜூன் 27-ம் தேதி 2014 வரை தருண் தேஜ்பால் இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.
தருண் தேஜ்பால் சார்பில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டது, 2015: அந்நிலையில், அவருக்கு 01-07-2014 அன்று சாதாரண ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு கடுமையான நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. நிபந்தனைகளை கடைபிடிக்க தவறினால் மீண்டும் கைது செய்யப்படுவார் எனவும் எச்சரித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தனக்கு அரசுத் தரப்பு வழங்காததால் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தேஜ்பால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 6-01-2015 வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது[1]. தருண் தேஜ்பால் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, தேஜ்பாலுக்கு எதிரான வழக்கை கோவா நீதிமன்றம் விசாரிப்பதற்கு மூன்று வார இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்[2].
2016 ஜூனில் திசைத்திரும்பிய விவகாரம்: தாராளமான எண்ணங்கள் கொண்ட மனத்தினரால், தருண் தேஜ்பால் பற்றிய விவகாரத்தை மறுசிந்தனையுடன், தீர்மானிக்க முடியுமா என்று, மாளவிகா சங்வி[3] [Malavika Sangghv] என்ற எழுத்தாளர் மிட்-டே என்ற இதழில் குறிப்பிட்டது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது[4].
Time for a RE-THINK? Has the time come to reassess our response to the Tarun Tejpal THINK brouhaha now that the need for strong liberal voices is called for? In retrospect, the relentless media campaign that shredded the once darling of the intelligentsia could be regarded as excessive. |
மறுசிந்தனைக்குரிய நேரம்? தருண் தேஜ்பால் பற்றிய விவகாரத்தை மறுபரிசீலினை செய்ய தாராளமான சிந்தனைகாரர்களுக்கு நேரம் வந்து விட்டதா? அறிவுஜீவிகளின் விருப்பம் மிகுந்த நாயகனாக இருந்தவனின் மீது ஊடகங்களின் தாக்குதல் அதிகமாகவே இருந்தது என்பதனை பார்க்கமுடிகிறது.
|
No doubt Tejpal had committed a grave error. One that pricked the bubble of his public image and gave his detractors ammunition to demolish him, but was there really need for such a vociferous dragging through the coals? This line of thinking has been finding more and more takers especially now when regressive thoughts and actions seem to rule. |
சந்தேகமில்லாமல் தருண் தேஜ்பால் மிகப்பெரிய தப்பை செய்துள்ளார். அது அவரது பொது மக்களிடம் இருந்த நல்ல மதிப்பைக் கெடுத்ததுடன், அவரின் எதிரிகள் அவரைத் தாக்கவும் ஏதுவாக இருந்தது. பிற்போக்கு சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆட்சி செய்யும் இந்நேரத்தில், இப்பொழுது இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் எனலாம்.
|
A discredited Tejpal, though out on bail, after all is not in any condition to fight the good fight. However, as predicted by this column, the rehabilitation of the once celebrated writer is underway: word comes in that his high-profile festival for the country’s intelligentsia will resume as early as next year. If this is true we won’t be surprised. After all, everyone makes a comeback in India. Ask the politicians. | பிணையில் வெளியில் வந்திருந்தாலும், தருண் தேஜ்பாலால் தகுந்த முறையில் வழக்கை எதிர்கொள்ளமுடியாது எனத்தெரிகிறது. ஆனால், அடுத்த வருடத்திற்குள், அந்த எழுத்தாளரை மறுபடியும், பழைய நிலைக்குத் தூக்கிவிடும் முயற்சி அறிவுவீவிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற இப்பத்திரிக்கையில் முன்னமே தீர்க்கதரிசனமாக எடுத்துக் காட்டப்பட்டது. இது உண்மையானால், நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம். இந்தியாவில் ஒவ்வொருவரும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளைக் கேட்டுப்பாருங்கள். |
தருண் தேஜ்பாலால் கற்பழிக்கப் பட்ட பெண், இதனை கடுமையாக சாடியுள்ளார்[5]: ஆனால், தருண் தேஜ்பாலால் கற்பழிக்கப் பட்ட பெண், இதனை கடுமையாக சாடியுள்ளார்[6]. “முற்போக்கு அரசியலின் சிறப்பு ஆணாதிக்கம், செக்ஸ்–வன்முறை மற்றும் செக்ஸ்–கொடுமை முதலியவற்றை எதித்து போராடுவதில் வெளிப்படுகிறது. ஆனால், எல்லாமே மன்னிக்கப்படவேண்டும் என்று தாராளமான எண்ணங்கள் கொண்டவர்கள் கூறுவது உழுவதுமாக அபத்தமானது ஆகும். தெஹல்காவைப் பொறுத்த வரையில் தாராளமானது என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. தெஹல்காவின் ஆரம்பம், அதற்குக் கிடைக்கும் நிதி அதன் ஆசிரியரின் நண்பவர்களுக்கு எதிராக, ஏதாவது செய்திகள் இருந்தால், அவற்றிற்கு எப்படி அவரது செய்தி அறையிலேயே சமாதி கட்டப் படும் என்பதெல்லாம் அந்த தாராளமான எண்ணங்களில் வெளியானது தெரிந்ததே. தெஹல்கா உண்மையிலேயே யோக்கியமானதாகவும், நியாயமானதுமாக இருந்திருந்தால், அதற்கு எப்படி தில்லி, மும்பை, கோவா, நைனிடால் போன்ற இடங்களில் எல்லாம் பெரிய அள்விற்கு சொத்துகள் சேர்ந்திருக்கும்? ஊடக வழக்காடு மன்றத்திலேயே தருண் தேஜ்பால் பாதிக்கப்பட்டிருந்தால், எப்படி அவர் வழக்கறிஞர்களுக்கு வாரி பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்? முடிவாக இந்த வேகமாக செயல்படும் நீதிமன்றம் யாருக்கு பலன் அளிக்கப் போகிறது? பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குற்றவாளிகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் முதலியோருடன் சேர்ந்து கொண்டு “தாராள மனம் கொண்டத் தன்மை” என்ற போர்வையில் அனைத்துலக மாநாட்டை நடத்தினால், எவ்விதமான நீதி கிடைக்கப் போகிறது?” என்று விளாசியுள்ளார்[7]. தருண் தேஜ்பாலாலுக்கு வாதாடும் வழக்கறிஞர் கபில் சிபல், அதாவது, காங்கிரஸ் கட்சி தலைவர், முன்னால் சட்ட அமைச்சர்……..அப்படியென்றால், அவர் எவ்வளவு பீஸ் வாங்குவார் என்று தீர்மானித்துக் கொள்ளலாம். ஆக, நீதிமன்றத்தில், இவ்வழக்கு விசாரணை வரவில்லை என்றும் சீரியஸாக-தமாஷாகக் கூறுகிறார்கள்[8]. இருப்பினும் அவருக்கு வக்காலத்து வாங்க ஊடகத்தினர் கிளம்பியிருப்பது விசித்திரமாக இருக்கிறது[9]. இதனால், சமூக வலைதளத்திலும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன[10]. கற்பழிப்புக்கு உட்பட்ட பெண்ணின் நிலைமை மறந்து, இவ்வாறெல்லாம் பேசுகிறார்களே என்று எடுத்துக் காட்டப்படுகிறது[11].
© வேதபிரகாஷ்
10-06-2016
[1] தினமணி, தருண் தேஜ்பால் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை, By dn, புது தில்லி, First Published : 17 January 2015 01:06 AM IST
[2]http://www.dinamani.com/india/2015/01/17/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/article2622381.ece
[3] http://www.mid-day.com/articles/guess-who-came-to-dinner/17318159
[4] http://www.scoopwhoop.com/MidDay-Defends-Rape-Accused-ExTehelka-Editor-Tarun-Tejpal-Deserves-To-Be-Slammed/
[5] http://www.scoopwhoop.com/, Mid-Day Defends Rape Accused Ex-Tehelka Editor Tarun Tejpal & Deserves To Be Slammed, By Arun George, Jun 09, 2016 at 16:40
[6] http://www.thequint.com, Tarun Tejpal Row: Survivor Lashes out at His ‘Liberal’ Supporters, Shorbori Purkayastha, June.10, 2016.
[7] http://www.thequint.com/india/2016/06/09/tarun-tejpal-row-survivor-lashes-out-at-his-liberal-supporters
[8] huffingtonpost.in, Tejpal’s Trial Hasn’t Even Begun: Has He Gamed The System?, Posted: 09/06/2016 17:26 IST Updated: 09/06/2016 22:41 IST
[9] http://www.huffingtonpost.in/2016/06/09/tejpals-trial-hasnt-even-_n_10372622.html
[10] scroll.in., Yes, it’s time for a re-think – by people trying to deflect charges of sex crimes by their friends, by Kalpana Sharma, Published Yesterday, 09-06-2016· 03:17 pm.
[11] http://scroll.in/article/809637/yes-its-time-for-a-re-think-by-people-trying-to-deflect-charges-of-sex-crimes-by-their-friends