Archive for the ‘பரிமளா’ Category

சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா?

ஜூன்27, 2016

சின்னாராஜ் நான்கு பெண்களைக் கொன்றது தனிமனித ஒழுக்க சீர்கேடா, சமூக சீரழிவா அல்லது தார்மீக தோல்வியா?

chennai_murder_buildingகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவன் சின்னராஜ் (35); ஸ்வீட் மாஸ்டர். 2012ல், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஒரு பேக்கரியில் வேலை பார்த்துள்ளான். அப்போது, அருகே இருந்த தேநீர் கடையில் வேலை பார்த்த, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தாலுகா, கட்டயம்பட்டியைச் சேர்ந்த, சின்னதுரையுடன் நெருங்கி பழகி உள்ளான். பழநியில், வாடகை வீட்டில் குடியிருந்த சின்னதுரையின் வீட்டிற்கு, சின்னராஜ் அடிக்கடி சென்று வந்த போது, தன்னை விட, ஐந்து வயது மூத்தவரும், மூன்று பெண் குழந்தைகளின் தாயுமான, சின்னதுரையின் மனைவி பாண்டியம்மாளுக்கும் (40) [மீனா என்றும் சொல்லப்படுகிறது[1]], அவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது[2]. சின்னராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிறது விகடன்[3]. கூடா உறவு, குடும்ப சீரழிவு இங்கேயே ஆரம்பித்துள்ளது. பாண்டியம்மாளின் படிதாண்டிய விளைவுதான் அழிவிற்கு கூட்டிச் சென்றுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை, பாண்டியம்மாளின் கணவர் கண்டித்துள்ளார். அடங்காத கள்ளக்காதல் ஜோடி, ஒரு கட்டத்தில், பழநியை விட்டு வெளியேறி உள்ளது. போதாகுறைக்கு, மூன்று மகள்களையும் கூட்டிச் சென்றுள்ளனர். பாண்டியம்மாள் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களையும் விட்டுவிட்டு தனியாக சென்று விட்டார் என்று பாண்டியம்மாளின் தந்தை பால்சாமி (65) கூறுகிறார்[4].

House where four women murdered2012லேயே சென்னைராயப்பேட்டைக்கு குடியேறிய பாண்டியம்மாள் முதலியோர்: சின்னராஜுக்கு, ஏற்கனவே சென்னையில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. 2012ல், பாண்டியம்மாள், 35, அவரது மகள்கள் பவித்ரா, 19, பரிமளா, 18, ஸ்நேகா, 16, ஆகியோருடன், சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள முத்து தெருவில், ராஜாபகதுார் என்பவரின் வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், ஐந்து பேரும் வாடகைக்கு குடியேறினர். சின்னராஜ் வீட்டிலேயே இனிப்பு பலகாரங்கள் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளான். பட்டினப்பாக்கத்தில் உள்ள கடையில் வேலையும் பார்த்துள்ளான். பாண்டியம்மாள் மகள்களில் பவித்ராவை, சோழிங்கநல்லுாரில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கிலும், பரிமளாவை, ‘பாரா மெடிக்கல்’ கல்லூரியிலும் படிக்க வைத்துள்ளான். இளைய மகள் ஸ்நேகா, பிளஸ் 2 படித்து வந்தார். அம்மாவின் 2-வது கணவர் என்றாலும், அப்பா என்று தான் 3 மகள்களும் சின்னராஜை பாசமாக அழைத்து வந்துள்ளனர். சின்னராஜூம் 3 பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து அவர்களிடம் அன்பாக இருந்துள்ளார். நாள்தோறும் சின்னராஜூவிடம் செக்ஸ் உறவில் ஈடுபட்ட வந்த பாண்டியம்மாள் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சின்னராஜூவுடன் செக்ஸ் உறவுக்கு மறுத்து வந்தார். இந்தநிலையில் சின்னராஜ் மனதில் காமவெறி எழுந்துள்ளது. அவருடைய பார்வை வயதுக்கு வந்த 3 மகள்கள் மீது திரும்பியது. மகள்கள் குளிப்பதையும், வீட்டில் ஆடைகளை உடுத்தும் காட்சியையும் சின்னராஜ் மறைமுகமாக பார்த்து நீண்ட நாட்களாக ரசித்து வந்துள்ளார்[5]. நாளடைவில் 3 மகள்களையும் அடைய வேண்டும் என்ற காமத்தீ சின்னராஜ் மனதில் பற்றி எரிய தொடங்கியது. முதலில் மூத்த மகள் பவித்ராவை (19) அடைவதற்காக அவரிடம் இரட்டை அர்த்தங்களிலும், ஆபாசமாக பேசியும் வந்தார். செக்ஸ் தொந்தரவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்[6]. இதுபற்றி பவித்ரா தனது தாயார் பாண்டியம்மாளிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

House where 4 women murderedமூத்த மகள் மீது வெறி[7]: மூன்று குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்த போதிலும், பாண்டியம்மாளிடம், மூத்த மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, சின்ராஜ் கூறியுள்ளான்[8]. இதனால், குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க துவங்கியது[9]. தன்னுடன் உறவு வைத்திருப்பதோடு, மகளுக்கும் வலை வீசுகிறானே என, பாண்டியம்மாள் வெகுண்டெழுந்து உள்ளார். விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று கருதிய பாண்டியம்மாள் யாரிடமும் சொல்லாமல், சின்னராஜை கண்டித்தார். இரவு நேரத்தில் சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார். இதனால், வீட்டிற்குள்ளேயே அவனை அனுமதிக்க மறுத்ததுடன், தான் வீட்டில் இருக்கும் போது மட்டுமே வர வேண்டும் என, நிபந்தனையும் விதித்துள்ளார். இதனால், பல இரவுகளை, மெரினா கடற்கரையிலேயே கழித்து வந்துள்ளான் சின்னராஜ். எனினும், அவனுக்கு பவித்ராவை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருந்துள்ளது. பாண்டியம்மாளும், அவனுடன் உறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளார். இதனால், சின்னராஜ், தன் உழைப்பில் மகள்களை படிக்க வைக்கும் பாண்டியம்மாள், தன்னை ஒரு கருவேப்பிலை போல் பயன்படுத்துகிறாரே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளான். மேலும், பாண்டியம்மாள் மற்றும் அவரது குழந்தைகளின் நடத்தை மீதும், அவனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இது சின்னராஜூக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 3 மகள்களையும் அடைந்தே தீர வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் சின்னராஜ் வீட்டுக்குள் வந்தார்.

four women murdered and the murder - 25_06_2016_003_003_004தீர்த்துக்கட்டினான்: சில நாட்களுக்கு முன், பாண்டியம்மாள் மற்றும் மகள்களுடன் சின்னராஜ், காரைக்குடிக்கு சென்றான். ஜூன் 20ம் தேதி, அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். அன்று இரவு, போதையில் அவன் தகராறு செய்துள்ளான். இதனால், அவனை ஹாலில் படுக்க வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பாண்டியம்மாள், படுக்கை அறையில் துாங்கி உள்ளார். ஆனால், கதவு திறந்தே இருந்துள்ளது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென எழுந்த சின்னராஜ், இரும்பு கம்பியால், ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்த, பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோரை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொன்றுள்ளான். அப்போது விழித்து எழுந்த ஸ்நேகாவை, ‘அயர்ன் பாக்ஸ்’ ஒயரில் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளான் என்று தினமலர் விவரித்துள்ளது. “தி இந்து”வும் இதே விவரங்களை கொடுத்துள்ளது[10].

பாண்டியம்மாளின் தந்தை பால்சாமிகொலைப்பற்றிய மாறுபட்ட விவரங்கள்: மூத்த மகள் பவித்ராவை கற்பழிக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க வந்த பாண்டியம்மாள் தலையில் உலக்கையால் தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, சின்னராஜூவை நகத்தால் கீறி உள்ளார். இதையடுத்து பவித்ராவையும் அவர் உலக்கையால் தாக்கினார்.  அலறல் சத்தம் கேட்டு எழுந்த பரிமளா, சினேகா ஆகிய 2 மகள்களையும் சின்னராஜ் உலக்கையால் தாக்கி உள்ளார். அவர்கள் தட்டு தடுமாறி எழுந்த போது மீண்டும் மீண்டும் தாக்கியதில் அடுத்தடுத்து 4 பேரும் உயிரிழந்தனர். காமவெறியில் இருந்த சின்னராஜ் உயிரிழந்த 3 மகள்களின் ஆடைகளையும் களைந்துவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி உள்ளார். பின்னர் அவர்களை 2 நாட்கள் சின்னராஜ் கற்பழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்கள் அழுகிய பின்னரே சின்னராஜ் வெளியே சென்றுள்ளார். மேற்கண்டவாறு புதிய தகவல் வெளியாகி உள்ளது, என்று தினத்தந்தி விவரிக்கிறது.

© வேதபிரகாஷ்

27-06-2016

[1] http://www.newindianexpress.com/cities/chennai/Chennai-shocker-Man-murders-wife-girls-lives-with-their-bodies/2016/06/24/article3497934.ece

[2] தினமலர், சென்னையில் ஐந்து பெண்கள் படுகொலை, பதிவு செய்த நாள் : ஜூன் 25,2016,01:00 IST

[3] http://www.vikatan.com/news/crime/65496-women-murdered-in-chennai-in-the-last-24-hours.art

[4] தினகரன், எனது மகளுக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டான்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி, Date: 2016-06-26@ 01:04:43

[5] தினத்தந்தி, சென்னையில் ஒரே வீட்டில் தாய், 3 மகள்கள் கொலை; 3 இளம்பெண்களும் கற்பழிக்கப்பட்டனரா? போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 26,2016, 2:31 AM IST

[6] http://www.dailythanthi.com/News/India/2016/06/26023143/Woman-and-3-teenage-daughters-found-murdered-in-Chennai.vpf

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1550326

[8] தினமணி, தாய், மூன்று மகள்கள் கொலை: படுபாதக செயலில் ஈடுபட்டது ஏன்? குற்றவாளி வாக்குமூலம், By dn, First Published : 25 June 2016 10:43 AM IST

[9] சின்னராஜ், தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்றதாகவும், பாண்டியம்மாள் அதனால், தன்னை ஏமாற்றாதே என்றதாகவும், அதற்கு, அப்படியென்றால், உன் முதல் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடு என்றதாகவும் விகடன் கூறுகிறது. http://www.vikatan.com/news/crime/65515-sweet-stall-employee-murders-wife-three-daughters.art

[10] தமிழ்.இந்து, வீட்டில் அழுகிய நிலையில் இருந்த 4 சடலங்கள் மீட்பு: சென்னை ராயப்பேட்டையில் மனைவி, 3 மகள்கள் படுகொலை, Published: June 25, 2016 09:13 ISTUpdated: June 25, 2016 09:22 IST.