ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்!
பெங்களூரு எப்பொழுதோ அதிநவீன நகரமாகி, மேனாட்டவர்களுக்கு ஏற்றமுறையில் மாறிவிட்டது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது அங்குக் கிடைக்கிறது. மது, மாது என்று எது கேட்டாலும் ஓகே என்று அரசு விரித்து விட்டது. அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். கேட்டால், நமக்குத்தானே, இத்தனை ஐடி கம்பெனிகள் நடத்துகிறார்கள், பதிலுக்கு, அவர்களது தேவைகளையும் பூத்தி செய்ய வேண்டிய நிலையாகி விட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். முன்பு, பப்பில் பள்ளி-கல்லூரி மாணவிகள் சென்று குடித்து-ஆட்டம் போட்டு கலாட்டா செய்தபோது, ஶ்ரீராம்சேனா எதிர்த்தார்கள், ஆனால், அவர்கள் தாம், “இந்திய தலிபான்கள்” என்ற பெயரைப் பெற்றார்கள். இப்பொழுது, ஒரு பெண் இப்படி பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறாள். இதனை என்னவென்று சொல்வார்கள்? இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா? இல்லை, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், “செக்யூலரிஸ” பாணியில் ஒதுங்கி விடுவார்களா, அமைதியாக இத்துடன், மூடி மறைத்து விடுவார்களா?
யாஸ்மின் பானுவுடன், இம்ரானின் அனுபவம்: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவர் கே.ஜி.ஹள்ளி போலீசில் 19-09-2016 அன்று ஒரு புகார் கொடுத்தார்[1]. அதில், கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானு (வயது 30) என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த 2 நாட்கள் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதன்பிறகு யாஸ்மின் பானு திடீரென்று மாயமாகிவிட்டார். அதே சமயத்தில் எங்கள் வீட்டில் இருந்து நகை-பணத்தை யாஸ்மின் பானு திருடி சென்றுவிட்டார். என்னை திருமணம் செய்வதுபோல நடித்து எங்கள் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவர் திருடி சென்றுவிட்டார்[2]. தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாகவும், ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளதாகவும், இதுவரை ஏழு பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார்[3]. பணத்தைப் பற்றிக் கவலையில்லை, ஆனால், இப்படி பலபேரை மணந்திருப்பது தான் ஒருமாதிரியாக இருக்கிறது என்கிறார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஷோயப் மற்றும் அஃப்சல் எனும் இரண்டு பேர் தாமாக முன்வந்து தங்களும் யாஸ்மின் பானுவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று புகார் அளித்துள்ளனர்[4].
ரியல் எஸ்டேட் அதிபர் அப்சலின் அனுபவம்: இந்த நிலையில் இம்ரானை பிரிந்து சென்ற யாஸ்மின் பல தொழிலதிபர்களை தனது வலையில் விழ வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது[5]. இது தவிர எனக்கு அடுத்ததாக அப்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து 3வதாக சையத் சோயப் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசிப், 6வதாக சோயப் என அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவ்வாறு கல்யாண ராணியாக பலபேரை ஏமாற்றி வரும் எனது மனைவியை கைது செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்[6]. அபசலின் கதை இவ்வாறுள்ளது[7]. அப்சல் ரியல் எஸ்டேட் தொழுல் செய்து வருகிறார், ஒரு முறை யாஸ்மின் தன்னிடம் வேலை கேட்டு வந்தபோது, ரிசப்சனிஸ்ட் வேலை போட்டுக் கொடுத்தார். நாளடைவில், தானே, அவளிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார். பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள், அதிலும் ஏமாற்றுகாரி போன்ற விசயங்கள் தெரிய வந்தன[8].
2007லிருந்து 2016 வரை ஒன்பது ஆண்டுகளில் ஏழு திருமணம்[9]: வருடத்திற்கு ஒரு ஆண் என்ற வீதத்தில் திட்டமிட்டு, ஒவ்வொரு ஆணாக திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளது தெரிகிறது[10].
- இம்ரான்.
- அப்சல் பாஷா
- சையத் சோயப்
- ஈராஜ்.
- ஆசிப்.
- சோயப்.
- ……… [அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது]
அவ்விதத்தில் – உடல்-மனம் ரீதியில் இருப்பதற்கு அப்பெண் தயாராக இருந்தது தெரிகிறது. இல்லையென்றால், அப்படி ஈடு கொடுத்து வாழ்ந்திருக்க மாட்டாள். மேலும், “தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாக” இம்ரான் கூறியுள்ளதால், அந்த அளவுக்கு பலசாலியாக, தைரியசாலியாக, ஆண்களுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் உள்ளாள் என்றும் தெரிகிறது. இருப்பினும், இங்கும், எப்படி, ஓவொரு ஆண் திருமணம் செய்யும் போது, முந்தைய விவரங்களை அறியாமல், அறிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. காஜியிடம் நீக்காஹ் நாமா பதிவு, தலாக் என்ற விவாகரத்து முதலியவை இல்லாமல். அவள் எப்படி திருமணம் செய்து கொண்டாள் என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. முஸ்லிம் ஆண்கள் அந்த அளவுக்கு ஏமாறும் ஆட்களா என்றும் திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது “லவ்-ஜிஹாத்” என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. பிறகு, இதனை எந்த வகையில் சேர்ப்பது? இது உள்ளுக்குள் நடக்கும் “லவ்-ஜிஹாத்” என்று கூறலாமா?
போலீஸ் விசாரணையில் பல ஆண்களை திருமணாம் செய்து கொண்டது தெரிய வந்தது: அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானுவுக்கும், சாராய் பாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மின் பானுவும், இம்ரானும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் பிரிந்து விட்டனர். அப்போது யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இருப்பினும், அவ்வப்போது, போன் செய்து, இருவரும் இருக்கும் ஆபாசப்படங்கள் இருப்பதாகவும், கேட்டப் படத்தைக் கொடுக்கவில்லை என்றால், வெளியிடுவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தாள். இதனால், பொறுமை இழந்த இம்ரான் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
© வேதபிரகாஷ்
24-09-2016
[1] தினத்தந்தி, பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகை–பணத்தை திருடி சென்றார் கல்யாண ராணிக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST
[2] http://www.dailythanthi.com/News/India/2016/09/21123333/In-Bangalore7-personsMarriedJewelrymoneyStealing-marriage.vpf
[3] சென்னை.ஆன்லைன், 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெங்களூர் பெண் : போலீஸில் சிக்கினார், September 20, 2016, Chennai
[4] http://chennaionline.com/article/8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
[5] லைவ்டே, 7ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கால்யாண ராணி..! 3 கணவர்கள் போலீசில் புகார்..!!, Sep 21, 2016 at 12:26 PM : By Liveday.
[6] http://liveday.in/general/7-marriage-woman-arrest/
[7] Deccan Herald, Woman held for marrying, cheating seven me, Sep 20, 2016, DHNS
[8] http://www.deccanherald.com/content/571387/woman-held-marrying-cheating-seven.html
[9] தினகரன், ‘எங்க பொண்டாட்டிக்கு 7 புருஷன்க சார்…’ போலீசில் 1, 2, 7 கணவர்கள் புகார், Date: 2016-09-21@ 01:05:26.
[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=247053