Archive for the ‘மதுரை’ Category

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)

பிப்ரவரி 2023ல் வழக்கு விசாரணைக்கு வருவது: மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ராதிகா, 45. இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் ‘வீடியோ’ வெளியானது[1]. இது அவருடன் தகாத நட்பை தொடர்ந்த வீரமணி, 39, என்பவரால் எடுக்கப்பட்டது[2]. அந்த படங்கள், ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்தனர். வீரமணி, ராதிகா 2022 ஏப்., 1ல் [01-04-2922] கைது செய்யப்பட்டனர். ராதிகாவிடம் இருந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், ‘குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “வீரமணியை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும்; குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். கைது உத்தரவில் எவ்வித தவறையும் நாங்கள் காணவில்லை. ராதிகா மனு தகுதி அடிப்படையில் ஏற்புடையதல்ல. இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” இவ்வாறு உத்தரவிட்டனர். ஆக, நீதிபதி உறுதியாகத்தான் தீர்ப்பு அளித்துள்ளார். இருப்பினும், நிர்மலா, காசி, பொள்ளாச்சி முதலிய வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கம் கிருத்துவப் பள்ளி வழக்கும் அமுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, இத்தகைய சீரியசான விசயங்களில் கூட, சட்டம், நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் அதிகாரிகள், சம்பந்தப் பட்டவர்கள், ஏதோ காரணங்களுக்காக பாரபட்சமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. இதனால், சமூகம் மேன்மேலும் சீர்கெட்டுத்தான் போகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவ்வாறு இருப்பதே திகைப்பாக, அதிர்ச்சியாக, கவலையாக இருக்கிறது.

செல்போன் கலாச்சாரத்தில் கற்பு பறிபோகும் நிலையும், வியாபாரமும்: இப்பொழுதெல்லாம் செல்போன் எல்லோரிடத்திலும் உள்ளது எனலாம். சினிமாவை அடுத்து, செல்போன் அனைவரது வாழ்க்கையிலும்  புகுந்து விட்டது. எனெனில், அதில் சினிமாவே வந்து விட்டது. டிவிசெனல்கள், டெலிசீரியல்களும் சேர்ந்து விட்டது. ஆக, இனி ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட டிவி என்ற நிலை தாண்டி, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் செல்போனை வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள். இதனால், செல்போன், இன்டர்நெட் வியாபாரிகளுக்குத் தான் வியாபாரம் பெருகி வருகிறதே தவிர, உபயோகிப்பவர்களுக்கு தீமை தான் வந்து சேர்கிறது. புதிய மீடியா தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் காதல், செக்ஸ் மற்றும் காதல் ஆகியவை எப்போதும் முக்கியமானவை என்று அவை வியாபாரமயமாக்கப் படுகின்றன..

ஆபாசம், சமூக வலைப்பின்னல் மற்றும் டேட்டிங் தளங்கள் உலகம் முழுவதும் பிரபலமான இணைய தளங்கள் ஆகி, சமூக ஊடகங்கள் மூலம் பெருகி வருகின்றன. காதல், காமம், கொக்கோகம் என்று மேற்கு நாடுகளில் புதிய பொருளாதாரங்களை உருவாக்குகிறது – நாம் டிண்டர், கிரைண்டர், கீல், ஹிட்ச் மற்றும் ஓக்குப்பிட் யுகத்தில் இருந்து, மேற்கத்தைய கலாச்சாரம் இளைஞர்களைக் கெடுத்து வருகின்றது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் ஃபேஸ்புக்கின் இலவச அடிப்படை முயற்சியுடன், அது ஒருங்கிணைக்கப்பட்டது. காதல் உட்பட சமூக நடவடிக்கைகளுக்கான ஒரே இடத்தில் அதன் நிலை. உதாரணமாக, மியான்மரில், குடிமக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் எதிர்மறையாகப் புகாரளித்தனர், ஆனால் அவர்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டபோது, பதில் மிகப்பெரியதாக இருந்தது. அதாவது, ராணுவ ஆட்சி நடந்தாலும், பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், இத்தகைய தொழில்கள் நடந்து வருகின்றன. செக்ஸ், போதை மருந்து, ஆயுதங்கள், கள்ளக் கடத்தல், தீவிரவாதம் என்பவை சேர்ந்து தான் செயல்பட்டு வருகின்றன.

இன்டர்நெட் மூலம் சீரழியும் பெண்கள்: மத பாரம்பரியங்களில் ஈடுபாடு கொண்டுள்ள நாடுகளான, ஜோர்டானில் இருந்து இந்தியா வரை உள்ள ஏழை சமூகங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே ஒரு பெண்ணிடம் பேசவே இல்லை, என்பதில்லை. ஏனெனில், இப்பொழுது செல்போன் எல்லோருடைய கைகளிலும் உள்ளது. எதிர் பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ஆன்லைன் அரட்டை தான். அதன் மூலம், இவர்கள் எளிதில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆணாதிக்க சமூகங்களில் உள்ள பெண்கள், அநாமதேயம், அணுவாக்கம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றைத் தேடுவதால், திறந்த சமூகங்களை ஆன்லைனில் எதிர்க்கிறார்கள், இல்லையெனில் இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சமூகங்களில் வருவது கடினம்.

பலதார உறவு முதலியன பெண்மை, குடும்பங்களைக் கெடுக்கின்றன: இப்பொழுது, இந்தியாவில் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் கூட, தாம்பத்தியத்தைத் தாண்டிய உடலுறவு, சேர்ந்து வாழும் முறை, விருப்பத்துடன் செக்ஸ் போன்றவற்றிற்கு சட்டப்படி அனுமதி கொடுத்துள்ள நிலைப்பாடுள்ளதால், பெண்கள் அத்தகைய உடலுறவுகளை வைத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள். அந்நிலையில், விபச்சாரம் என்பதற்கும் எந்த வரையறையும் கொடுக்க முடியாது. பெண்களையும் அவ்வாறு கணிக்க முடியாது. திருமணம், திருமண முறிவு என்று பலமுறை நடக்கும் பொழுதும், பெண்கள் கற்பு பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு ஆணுக்கு மேல் உடலுறவு கொண்ட பிறகு, அது மறக்கப் படுகிறது என்றாகிறது. ஏனெனில், பெண்களும் அவ்விசயத்தில் விருப்பத்துடன் ஈடுபடுகிறார்கள் என்றே ஆகிறது. “கல்யாண மன்னன்” என்பது போல, “கல்யாண ராணி” என்றெல்லாம் கூட ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பணம், சுகமான அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற காரணங்களுக்கு பெண்களே அவ்வாறு தயாராகி விடுகிறார்கள்.

கேட்பாரற்ற நிலையும், புலம்பல்களும்: அந்நியர்களுடன் நட்பு கொள்வது, போலி அன்பு, ஏமாற்றத்தைக் கண்டறிதல் என்பதெல்லாம் சாதாரணமாகி விட்டது. பணம் சம்பாதிக்க செக்ஸ், செக்ஸ் மூலம் வியாபாரம், வியாபாரத்திற்கு ஆள் சேர்ப்பு, அத்தகைய நிறுவனமாக்கப் பட்ட தொழில்கள், அத்தொழில்களில் ஈடுபடும் ரௌடிகள், குற்றவாளிகள், கிரிமினல்கள், அரசியல் சார்பு கொண்டவர்கள், வேலியை மேய்க்கும் பயிர்கள் முதலியவை அதிகமாகியுள்ள நிலையில், அவையெல்லாமே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊழல் என்பது, இதிலும் புரையோடி விட்டதால், கேட்பாரற்ற நிலையும் உருவாகி விட்டது. ஆக  ஒழுக்கம், நேர்மை, நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு புலம்புகிறவர்கள் புலம்பிக் கொண்டே இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] Thinamalar, ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated : பிப் 02, 2023  07:31 |  Added : பிப் 02, 2023  07:26.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3232195

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

பிப்ரவரி4, 2023

ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (1)

கொக்கோகத்தில் சீரழிந்த ஆசிரியை: மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வீரமணி, மதுரை மனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல், டைல்ஸ் கடையில் வேலைபார்ப்பவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த மதுரையைச் சேர்ந்த 45 வயது அரசு பள்ளி ஆசிரியை அறிமுகமாகியிருக்கிறார். ரயிலிலேயே செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், அதன் பிறகு தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆசிரியையின் வீட்டிற்கே போக ஆரம்பித்திருக்கிறார் வீரமணி. அதாவது, அப்பெண் அந்த அளவுக்கு துணிந்து விட்டாள் என்று தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் ஆசிரியை இந்தப் பழக்கத்தைக் கைவிடாததால் அவரது கணவர் பிரிந்துசென்றுவிட்டார். அந்த அளவுக்குப் பொருத்துப் பார்த்தார் போலும். அதன் பிறகு இவர்களது சந்திப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. இவ்வாறு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார்[1].

குடும்பத்தைக் கெடுத்த பாதகம்: இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார்[2], என்று “நக்கீரன்” குறிப்பிட்டாலும். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்[3], என்று ஜீடிவி விவரிக்கிறது. அதாவது தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு அழகான குடும்பம் சீரழிந்து விட்டது. கணவன் பிரிந்து சென்று விட்டார், சரி அந்த மகனின் நிலை என்ன என்றும் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டாலும், சமுக பிரக்ஞை, பொறுப்பு மற்றும் அக்கரையுடன், அத்தகைய சீர்கேடுகளைக் களைந்து, ஒழுக்கம், நேர்மை, நியாயம் முதலியவை ஓங்க எதையும் செய்வதாகத் தெரியவில்லை. “பொறுப்புத் துறப்பு” என்று போட்டு, தப்பித்டுக் கொள்ள நிறையப் பேர் தயாராகவே இருக்கின்றனர். பொதுவாக ஊடகத்தினருக்கு, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும், செய்திகளை எளியிடவேண்டும் என்ற தீவிரம் உள்ளது தான் தெரிகிறது. இவ்விசயத்திலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது, வெளிப்பட்டுள்ளது.

மதுரையில் இவ்விவகாரம் நடந்தாலும், கற்பு பற்றி கவலைப் படாத ஊடக நிபுணர்கள்: தாம்பத்தியத்தைத் தாண்டிய உறவு முறைப் பற்றியோ, கற்பைப் பற்றியோ எவனும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதுரையில் நடந்த இந்த விவகாரத்திற்கு, முன்னர் கற்புக்கரசி கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதையும் மறந்து விட்டனர் போலும். போட்டிப் போட்டுக் கொண்டு “பி.டி.ஐ” பாணியில் “கட்-அன்ட்-பேஸ்ட்” பாணியில், தலைப்புகளை மாற்றி செய்திகளை வெளியிடுவதில் தான் ஊடகக்காரர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலியல் கொக்கோகத்தின் விபரீதம்: இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்[4]. அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார்[5]. முதலில் வாலிபப் பருவம் என்பதனால், மயக்கி, தூண்டி, அவ்வாறு செய்துள்ளார். அந்த ஆசிரியைக்கு ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது[6]. அதில் இருப்பது போல செய்து பார்க்கும் ஆவலில், தன்னிடம் டியூசன் படித்த பள்ளி மாணவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறார்[7]. அப்படியென்ன, இது பௌதிகவியல், ரசாயனவியல் சோதனைக்கூட பரிதோதனைகளா செய்து பார்க்க? இருப்பினும், ஆபாச வீடியோ பார்த்து, கொக்கோகம் உச்சிக்கு ஏரியதால், சோதன தொட்ர்ந்தது. ஒரு கட்டத்தில் 2 மாணவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்[8]. பிறகு, இன்னொரு கல்லூரி மாணவரும் இந்த குரூப்பில் இணைந்திருக்கிறார். இந்த 3 மாணவர்களுடனும் ஒரே நேரத்திலும் அவர் சேர்ந்து இருப்பதுண்டாம். அந்தக் காட்சியை, அவரது நண்பர் வீரமணி செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்.

வீரமணிராதிகா ஆபாச வீடியோ எடுப்பதில் ஈடுபட்டது: இப்படி மாணவர்களுடன் அவர் இருப்பதே பலமுறை வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது[9]. ஆதாவது, அந்த வீரமணி ஏன், எதற்கு, எப்படி அத்துணை வீடியோக்கள் எடுக்க வேண்டும், எடுக்க அப்பெண் ராதிகா ஒப்புக் கொண்டாள் என்று தெரியவில்லை. ஆனால் எடுக்கப் பட்டது உண்மையாக இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்[10]. அது அவனையும் இந்த வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[11].  இத்தகைய வியாபாரங்களில் நியாயம், தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதும் தெரிக்றது. இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்[12]. அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[13]. அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்[14]. மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்[15]. அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்[16].

வீடியோக்களை போலீஸார் ஆராய்ந்தது: மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர்[17]. அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது[18]. ஆவை தடவியல் ரீதியில் ஆராயப் பட்டதால் அல்லது போலீசார் மட்டும் பார்த்து தீர்மானம் செய்தனரா என்றும் தெரியவில்லை. அவற்றின் நகல் / காப்பி மற்றவர்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பதும் தெரியவில்லை. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்பது தெரிந்த விசயம் தான்[19]. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்[20].  அந்நிலையில் தான், ஜாமீனுக்கு பெட்டிஷன் போட்டதாகத் தெரிகிறது[21]. அதன் விசாரணை, இப்பொழுது நீதிமன்றத்தில் வந்திருக்கிறது[22]. இவர்களுக்கும் வக்கீல்கள் இருக்கின்றனர். பிறகு, அவர்களும், தமது தொழில் தர்மத்திற்கு ஏற்றப்படி, இந்த சமூக சீரப்பாளர்களுக்கு ஆதரவாக, மனுக்கள், வக்காலத்துகள், எல்லாம் முறையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வாங்கிய காசுக்கு சரியாக வாத-விவாதங்களும் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு, விபச்சாரிகளுக்கு சமூக விரோதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு எல்லாம் வக்கீல்கள் இருக்கும் பொழுது,இவர்களுக்கு இருக்க மாட்டார்களா என்ன.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] நக்கீரன், மாணவர்களை மிரட்டி ஆபாச வீடியோ; ஆசிரியை ஃபோனால் அதிர்ந்த காவல்துறை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 02/04/2022 (16:57) | Edited on 02/04/2022 (17:10).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/female-teacher-arrested-madurai

[3] ஜீடிவி.செய்தி, மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்கசிந்த வீடியோ..!, Written by – Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-seduce-students-and-make-fun-of-them-leaked-video-387734

[5] காமதேனு, பள்ளி மாணவர்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது,  Updated on : 2 Apr, 2022, 8:08 pm, 2 min read

[6] https://kamadenu.hindutamil.in/crime-corner/lady-teacher-arrested-pocso-act-in-madurai

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!, vinoth kumar, Madurai, First Published Apr 2, 2022, 3:22 PM IST, Last Updated Apr 2, 2022, 3:28 PM IST

[8] https://tamil.asianetnews.com/crime/sexual-harassment-school-teacher-in-madurai-r9pi3f

[9] மாலை மலர், மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த ஆசிரியைவீடியோவை பரவவிட்ட கள்ளக்காதலன் கைது, By மாலை மலர், 2 ஏப்ரல் 2022 11:49 AM (Updated: 2 ஏப்ரல் 2022 11:49 AM).

[10] https://www.maalaimalar.com/news/state/2022/04/02114939/3638297/Tamil-News-School-teacher-arrested-near-Madurai.vpf

[11] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

[12] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[15] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[16] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[17] தினத்தந்தி, டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு ஆசிரியை; கள்ளக்காதலன் கைது, ஏப்ரல் 3, 3:18 am (Updated: ஏப்ரல் 3, 3:18 am).

https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

[18] https://www.dailythanthi.com/News/State/2022/04/03031841/The-government-teacher-who-took-the-video-and-had.vpf

[19] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைஸ், மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல்ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!, Divya Sekar, 03 April 2022, 11:54 IST

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/police-have-arrested-a-teacher-who-sexually-harassed-students-131648966620640.html

[21] விகடன், பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! – அதிர்ச்சி சம்பவம், செ.சல்மான் பாரிஸ், Published:03 Apr 2022 4 PMUpdated:03 Apr 2022 4 PM

[22] https://www.vikatan.com/news/crime/madurai-police-arrested-a-female-teacher-in-pocso-case

மதுரைப் பள்ளியில்  நடந்த பாலியல் தொல்லை வழக்கு ஏன் கிடப்பில் கிடக்கிறது? மார்ச் முதல் மே வரை அமைதி காக்கும் மர்மம் என்ன?

மே30, 2021

மதுரைப் பள்ளியில்  நடந்த பாலியல் தொல்லை வழக்கு ஏன் கிடப்பில் கிடக்கிறது? மார்ச் முதல் மே வரை அமைதி காக்கும் மர்மம் என்ன?

யார் அந்த மதுரை பள்ளி ஆசிரியர்? என்ன நடந்தது?[1] (மார்ச் 2021): நக்கீரன் இதழில் மார்ச் மாதம் வந்த விவரங்கள், “சில குற்றங்கள், சட்டத்தின் பார்வையில் அது பெரிய குற்றமாகவே இருந்தாலும், சமூகச் சூழல்களால் வெளிப்படாமல் மறைக்கப்படுகிறது. அப்படி ஒரு குற்றச்செயலில் மதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் சிக்காமல், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு மட்டும் ஆளாகியிருக்கிறார். மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை நடத்துபவரின் மகனான விஜய், ஆரப்பாளையத்தில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்[2]. கரோனா லாக்டவுன் நேரத்தில் இவர், அந்தப் பள்ளியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவியைப் பள்ளிக்கு வரவழைத்து, காரில் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் மீது புகார் அளித்தது: நக்கீரன் தொடர்கிறது, “அந்த மாணவிக்கு ஆபாசப் படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வந்ததை, அவருடைய அக்கா தனது கணினியில் உள்ள செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றோரிடம் தெரிவிக்க, மாணவி சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை ஆதாரமாக இணைத்து, கடந்த 28-7-2020 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யரிடம் புகார் அளித்தனர்பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினருக்கு ஆசிரியர் விஜய்யிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக பேசி முடிக்கப்பட்ட நிலையில், 29-7-2020 அன்று மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து போல நடத்தப்பட்ட அந்த விசாரணையின்போது, மாணவி தரப்பிடம் உள்ள ஆதாரங்கள் பறிக்கப்பட்டு, பெயரளவுக்கு ஆசிரியர் மீதான நடவடிக்கையாக, 30-7-2020 அன்று விஜய்யிடம், செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளிக்குப் பணியிடமாறுதல் உத்தரவு (..எண் 4/015663/18) வழங்கினர்”.

 புகாரை மறைக்கமாற்ற முயன்ற நிலை: நக்கீரன் தொடர்கிறது, “ஆசிரியர் விஜய்யை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், கண்துடைப்பாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்… 4-8-2020 அன்று விஜய் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை (தர்ஸ்ரீ.சர்.4/009179/2020) தயாரித்தபோது, முதலில்மாணவியை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்என்று உறுதிபடக் கூறிவிட்டு, பிறகு அதை அழித்துவிட்டுபாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்,’ எனத் திருத்தியுள்ளனர். மாணவி தரப்பிடம் வெற்றுத்தாள்களில் கையொப்பம் பெற்றும், கல்வி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேரம் நடத்தியும், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் வாங்கிக் கொடுத்தும், மீடியேட்டராக இருந்து விவகாரத்தைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தாராம், ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர். மூன்று வாட்ஸ்ஆப் குழுக்களை ஆரம்பித்து, அதில் பள்ளி மாணவிகளை இணைத்து, ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், ஆபாசப் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பாலியல் வீடியோக்களை அனுப்பி வந்திருக்கிறார் விஜய். அவருடைய 10 வருட ஆசிரியர் பணியில், எத்தனை மாணவிகள் சீரழிக்கப்பட்டனரோ?

விஜய் சஸ்பென்ட் செய்யப் பட்டது: நக்கீரன் தொடர்கிறது, “தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நம்மிடம் மறுத்துப் பேசினார் ஆசிரியர் விஜய், “மூன்று தடவை விசாரணை நடத்தியிருக்காங்க. அஃபிசியலா எல்லாம் முடிஞ்சிருச்சு. ஏதாவது ரிப்போர்ட் வேணும்னா.. சி... ஆஃபீஸில் கேட்டுக்கங்க. நான் அந்த மாதிரி எதுவும் பண்ணல. உள்ளூர் ஸ்கூல்ல கரோனா நிவாரணத்துக்கு நான் அதிக நிதி கலெக்ட் பண்ணுனதுனால, பொறாமைல இருக்கவங்க பண்ணுன கம்ப்ளைண்ட்என்றார் படபடப்புடன். மதுரை, பொன்னகரத்தில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யரை சந்தித்தோம். “போன மார்ச்ல எக்ஸாம் முடிஞ்ச பிறகுதான் கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க. பேரண்ட் கம்ப்ளைண்ட் கைக்கு வந்ததும், விஜய்க்கு ஃபோன் பண்ணுனோம். அவர் அட்டெண்ட் பண்ணல. மறுநாளே அந்தப் புகாரை சி...க்கு அனுப்பிட்டேன். பெற்றோர் தரப்பில், நடந்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கொடுத்து, விஜய்யை டிரான்ஸ்பர் பண்ணனும்னு சொன்னாங்க. மொதல்ல டிரான்ஸ்பர் ஆகி.. இப்ப சஸ்பெண்ட்ல இருக்காரு. ஸ்கூலுக்கு உள்ளே தப்பு எதுவும் நடக்கல. எல்லாமே ஆன்லைன்ல நடந்திருக்குஎன்றார்”.

மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா:நக்கீரன் தொடர்கிறது, “மதுரை, செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். “எங்க ஸ்கூல்ல விஜய் சேர்ந்து ரெண்டு நாள்கூட இருக்காது. ஏதோ பிளான் பண்ணி சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துட்டாங்க. அந்த ஆர்டர்ல விபரம் எதுவும் குறிப்பிடலஎன்றார். மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயாவை தொடர்புகொண்டோம். “எந்த விஷயத்தையும் மூடி மறைக்கல. ஒரு கமிட்டி போட்டு விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. கோவிட் பீரியட்ங்கிறதால உடனே ஆக்ஷன் எடுக்க முடியல. அதனால, மொதல்ல டிரான்ஸ்பர் கொடுத்திட்டு, அப்புறம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். இன்னும் முழுமையா விசாரணை நடந்து முடியல. அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததா சொல்லுறது பொய். பணம் வாங்கியிருந்தால் சஸ்பெண்ட் பண்ணியிருப்போமா?” என்று கேட்டார்”.

மார்ச் 2021ல் இந்தியன் எக்ஸ்பிரசும் விவரமாக செய்தி வெளியிட்டிருந்தது[3]: குற்றஞ்சாட்டப் பட்ட நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படவில்லை, அச்சட்டப் பிரிவுகளின் படி கைதும் செய்யப் படவில்லை. விசாரனைக் குழு கூட்டத்திற்கு அந்த பெண்ணோ, பெற்றோரோ ஆஜராகவில்லை என்றுதான், அரசு அதிகாரிகளின் தரப்பில் சொன்னதாக செய்தியில் உள்ளது. எஸ்.கே. பொன்னுத்தாய், விசாரணை மட்டும் போதாது, போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[4]. வழக்கறிஞர் ஷாஜி செல்லன் என்பவரும், இது போன்ற புகார் வரும் பொழுது, பள்ளி நேரிடையாக போலீஸிடம் புகார் கொடுக்க வேண்டும். விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். எது எப்படியாகிலும், இப்பொழுது, மறுபடியும் இப்பிரச்சினை எழுந்துள்ளது.

 விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது (மே 2021): மார்ச் மாதத்தில் நக்கீரன் செய்தியை வெளியிட்டப் பிறகு, மற்ற ஊடகங்கள் வெளியிட்டனவா என்று தெரியவில்லை. ஆனால், மே 2021ல் திடீரென்று அதைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை, “பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்” என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள். மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் விஜயபிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்[5]. ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன் 2020 ஜூலையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தந்தை மாநகராட்சி, மாவட்டகல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. மேலகோபுரத்தெரு கோதண்டம் ‘போக்சோ’ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்[6].

சஸ்பென்ட் செய்யப் பட்ட விஜயபிரபாகரன்: நீதிமன்ற உத்தரவின்படி விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,க்கள்) சேர்க்கப்பட்டு நகர் தெற்கு அனைத்துமகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விஜயபிரபாகரனை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா ‘சஸ்பெண்ட்’ செய்தார். அவர் கூறுகையில் “புகார் அளித்தவுடன் பெண்கள் பள்ளியில் இருந்து ஆண்கள் பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில் கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,” என்றார். மே 25 2021லிருந்து, சிறியதாக, இச்செய்தி வெளியிடப் பட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

30-05-2021


[1] நக்கீரன், ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் அத்துமீறல்மதுரை பள்ளி பயங்கரம்!, அதிதேஜா, Published on 02/03/2021 (10:51) | Edited on 02/03/2021 (11:09)

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/online-classes-incident-madurai-school-terror

[3] Indian Exppress, ‘Eight Months On, Minor Awaits Justice For Abuse, Published: 04th March 2021 03:49 AM  |   Last Updated: 04th March 2021 03:49 AM.

[4] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/mar/04/eight-months-on-sexually-abused-minor-girl-awaiting-justice-2271910.html

[5] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மீதுபோக்சோவழக்கு; 2 டி...,க்கள் மீதும் நடவடிக்கை, Added : மே 25, 2021  05:58.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2773488

காலில்விழுந்து “இதுவும் ஒருவ கைசிகிச்சை தான்’ என்று சொன்ன கயவன்

ஓகஸ்ட்1, 2012

காலில்விழுந்து இதுவும்ஒருவகைசிகிச்சைதான்என்று சொன்ன கயவன்

ஊடகங்களின் செய்திகள்: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார். தினமலர் இப்படி செய்தி வெளியிட்ட நிலையில், மற்ற செய்தி இணைதளங்கள், “தனியார் மருத்துவ மனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்” என்று வெளியிட்டுள்ளன[1]. அதாவது, அவர் முயன்றார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, “……..தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது.” என்று தொடர்ந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் அல்லது சும்மாயிருக்க வேண்டும் அதாவது, அரைகுறைகயாக வெளியிடக் கூடாது. இல்லையென்றால், ஊடகங்கள் சிலருக்கு ஜால்ரா போடுகின்றன அல்லது கைக்கூலிகளாக வேலை செய்கின்றன என்றுதான் தோன்றும், தெரியவரும். ஆங்கில ஊடகங்களில், “Doctor arrested for raping 16-year-old girl[2]”,  “Doctor held for raping 16-year-old girl in Madurai[3]”, “Madurai doctor held for molesting girl[4]” என்று வந்துளன.

சில்மிஷத்தில்ஈடுபட்ட பொறுப்புள்ள டாக்டர்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் “டைபாய்டு’ இருப்பது தெரிந்தது. தொடர்ந்து “குளுகோஸ்’ ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். “வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்’ என “சில்மிஷத்தில்’ ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். “இதை வெளியே சொல்ல வேண்டாம்’ எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

காலில் விழுந்து இதுவும் ஒருவகை சிகிச்சை தான்என்று சொன்ன கயவன்: இதையறிந்த டாக்டர், மாணவியிடம் “இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்’ என சமாதானப்படுத்தி, “வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என காலில் விழுந்தார்[5]. இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக “உடைத்து’ வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். “சபலத்தில் செய்துவிட்டேன்’ என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.

கற்ப்பைக் காத்துக் கொள்ள கடுமையாகப் போராடிய மாணவி: போலீசார் கூறுகையில், “”மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் “சில்மிஷத்தில்’ ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,” என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.

வகுப்புகேட்டடாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை “ரிமாண்ட்’ செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் “ஏ’ வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இவ்வாறு விவஸ்தையில்லாமல், சொகுசைக் கேட்டுப் பெறத்துடிக்கும் சட்டமீறல் பேர்வழிகளை கரடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

மின்திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதாவது பணத்தால் எதையும் சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்னம் உள்ளது. மேலும் அவ்வாறே, வருமானவரிக்கு தப்பிக்கும் வழியில் நிறைய சம்பாதித்துள்ளார் என்றும் தெரிகிறது.

“சபலத்தில் செய்துவிட்டேன்’ என போலீசிடம் தெரிவித்தார்: அப்படியென்றால், தாய், சகோதரி, மகள் என்று யாரை வேண்டுமானாலும், இத்தகைய வக்கிரக் காமக் கொடூர வன்புத்தியாளர்கள் செய்யக்கூடும், ஆகவே அத்தகைய மனப்பாங்கையே அனுமதிக்கலாகாது. மறுபடியும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தான் சொல்லவேண்டியுள்ளது. டாக்டர்கள் இக்காலத்தில், தம் மீது எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பலவழிகளில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். மருந்து-மாத்திரைகளைக்  கொடுத்து தங்களது நோயாளிகளை பரிசோதித்து வருகிறார்கள் என்பதும் உண்மை. பின்விளைவுகளை அறிந்து கொண்டு, அவற்றை மருந்து உற்பத்தியாளர்களுக்குத் திரிவிக்க, பல லட்சங்களைப் பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, குறிப்பாக பெண்கள் இத்தகைய கயவர்களிடம் சிக்கிக் கொள்ளமல் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். பெண் எனும் போது, கூட ஒருவரை அனுமதித்தாக வேண்டும். மருத்துவம் என்ற போர்வையில் இத்தகைய கற்பழிப்புகளை நியாயப்படுத்தவோ, சபலம் என்று தப்பித்துக் கொள்ளவோ விடக்கூடாது.

வேதபிரகாஷ்

01-08-2012